Tuesday, July 27, 2010

தமிழ் நாட்டின் தமிழ்ச் சொந்தங்களே! எங்கள் கையை கொஞ்சம் பற்றிக்கொள்ளுவீர்களா?

[ பிரசுரித்த திகதி : 2010-05-13 01:42:37 PM GMT ]

தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்களின் அன்னையார் பார்வதி அம்மா அவர்கள் 10,05,2010, திங்கள் மலேசியாவிலிருந்து திரும்பி இலங்கை சென்று சேர்ந்திருக்கிறார்கள்.

16,04,2010, மலேசியாவிலிருந்து இந்திய தமிழ் நாட்டின் தலைநகர் சென்னைக்கு, வைத்தியத்தின் நிமித்தமும் எங்கள் சொந்தங்கள் நீங்கள் இருக்கின்றீர்கள் என்ற நம்பிக்கையுடனும் வந்து விமானத்திலிருந்து இறங்க முயன்றபோது, சட்டவிரோதமாக உங்கள் நாட்டின் காவல்த்துறையினர் அம்மாவை கீழே இறங்க அனுமதிக்காமல் அதே விமானத்தில் திருப்பி அனுப்பியிருந்தனர்.

அது பற்றி அரசியல் மட்டங்களிலிருந்தும், ஊடகங்களின் பார்வையிலும், மக்கள் கருத்துக்களாகவும் பல கண்டனங்களும் வெளிவந்துள்ளன. அவைகளில் "தமிழகத்து உறவுகளான" உங்களின் அப்பழுக்கற்ற காட்டமான பல குமுறல்கள் இணையத்தளங்களிலும் பத்திரிகைகளிலும் வெளியாகி எங்களை ஆற்றி, மனம் நெகிழவைத்ததுடன் முடிவுக்கு வந்திருந்தது.

ஊடகங்களில் எழுதுவதற்கு எமது சமூகம் சார்ந்த ஆக்கபூர்வமான பல்வேறு தேவைகள் நிறையவே எனக்கு இருந்தும் நடந்து முடிந்த அந்த கசப்பான விடயத்தை திரும்பத் திரும்ப தூசி தட்டிக்கொண்டிருப்பது தேவையில்லை என்றும் எரிச்சலடைய வைக்கிறது.

இருந்தும் தமிழகத்து சுதேசிகளான உங்களின் ஒருவருடைய கருத்திற்கும் குரலுக்கும் கொஞ்சமேனும் மதிப்பளிக்காமல், திரும்பத் திரும்ப திமுக தமிழ்நாட்டுக்கு செய்யும் துரோக நாடகங்கள் கணக்கு வழக்கில்லாமல் போய்க்கொண்டிருப்பதை பார்க்கும்போது ஏற்பட்ட‌ அதிர்ச்சியும் அருவருப்பும் ஆதங்கத்தின் வெளிப்பாடுமாகவே இதை எழுத நேர்ந்தது.

இதற்காக தயவுசெய்து என் மேலான உறவுகள் என்னை மன்னிக்கவும்.

மண்ணின் மைந்தர்களான நீங்கள் எங்களுக்காக நெருப்புக்குளித்து எரிந்து செத்தபோதும் உண்ணாநோன்புகள் இருந்தபோதும் கணக்கிலெடுக்காத ஆட்சியாளர்கள்(துரோகக்கும்பல்) உங்கள் குரலுக்கும் எழுத்திற்கும் என்ன மதிப்புக்கொடுப்பார்கள் என்பதை ஊகிக்க முடியாமல் இல்லை.

இத‌ற்கு சரியான பாடமாக இனி வரும் தேர்தல் காலங்களில் மறக்காமல் சமர்த்தியான செருப்படி கொடுப்பீர்களென நம்புகின்றேன்.

தயவுசெய்து கொஞ்சம் நினைத்துப்பாருங்கள் ஒரு நோயாளியான அந்தத்தாய் பெற்ற பிள்ளைகள் உறவினர்கள் எவரும் பக்கத்திலிருந்து ஒரு ஆறுதல் வார்த்தை கூட கேட்க வழியில்லாமல் அனாதையாக படுக்கையில் இருக்கும்போது மனதில் சொற்ப ஈரங்கூட இல்லாமல் தன் குடும்ப நலனுக்காக முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி அதை அரசியலாக்கி அசிங்கப்படுத்திக்கொண்டு, நாகரீக தமிழ்ச் சமுதாயத்தின் தலைவன் தான் என்று சொல்லிக்கொண்டிருப்பவர் செய்யக்கூடிய செயலா?, அவருடைய வயதுக்கு இது நாகரீகமா? அல்ல‌து நல்லதா??

அந்த தாயின் பெற்ற மகள் சென்னையிலும் வைத்தியம் பார்த்த மருத்துவர் திருச்சியில் இருப்பதால், மகள் மூலமாக அந்தத்தாய்க்கு கடைசி காலத்தில் கிடைக்கக்கூடிய உளரீதியான பரிவுக்குக்கூட வெடி வைத்திருக்கிறார் கலைஞர்.

2003 ம் ஆண்டு ஜெயலலிதா செய்த சதி காரணமாக அந்த தாய் 16,04,2010, திரும்ப நேர்ந்ததாக பரிந்துரைத்த கலைஞர் இன்று யாருக்கு குடுமிகட்டுகிறார் ?????

மலேசியாவில், இலங்கையில், மருத்துவம் இல்லாமலா தமிழ்நாட்டை தேர்வு செய்திருந்தார்கள், அவர்களது மனதுக்கு நிம்மதியும் சரியான பராமரிப்புந்தானே அவர்களுடைய அந்திம காலத்தில் சரியான மருந்தாக இருக்க முடியும்.

அம்மா குண்டை கட்டிக்கொண்டு வந்து கோபாலபுரம்,அண்ணாநகர், சீஐடி கொலனி வீடு ஏதாவது ஒன்றை தகர்த்து விடுவார்கள் என்றா பெருத்த சிறைக்கைதியை போல மனித சுதந்திரத்தை முற்றாக மறுத்து குறிப்பிட்ட அரசு மருத்துவமனையில்த்தான் மருத்துவம் பார்க்க வேண்டும் அரசு சிபார்சு செய்யும் ஒரு சிலரைத் தவிர வேறு ஒருவரும் பார்வையிடக்கூட முடியாதென்ற தடை , சிறைக்கும் இதற்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது.

தயவுசெய்து என் தமிழ் உறவுகளே சிந்தித்துப்பாருங்கள், இப்படி ஒரு அவமானமான அநீதி நியாயமானதுதானா?,

கலைஞர் 87 வயதிலும் ந‌ல்ல ஞாபகசக்தியுடனும் புஷ்டியுடனும் இருக்கிறார் என்பதால், அவரது வயதையொத்தவர்கள் எல்லோரும் அப்படியே தன்னைப்போல செயல்ப்பட்டு விடுவார்களோ என அவர் பயப்படலாமா?

மானுட உடல் கூறு பற்றிய யதார்த்தத்தை ஏன் அவரால் சிந்திக்க முடிவதில்லை,

அரசியல் அநாகரீகத்தைக்கடந்து அவர் ஏன் ஒரு நாளாவது சராசரி மனிதனாக நடந்து கொள்ள முயற்சிப்பதில்லை, இசகு பிசகான சொல்லாடல்கள் தவிர தீர்க்கமான ஒரு வசனத்தையாவது ஈழ மக்கள் சம்பந்தமாக அவர் பேசியதுண்டா?

வரவேண்டாம் என்று ஒரு வரியில் சொல்லவேண்டிய அவரது அழுக்கான உள்ளக்கிடக்கையை லாவகமாக பூசி மெழுக எவ்வளவு நாடகமாடுகிறார்.

தடைசெய்யப்பட்ட அமைப்புக்களை சேர்ந்தவர்கள் சந்திக்கக்கூடாது என்பது சம்பந்தமாக எவருக்கும் மாறுபட்ட கருத்து கிடையாது, மீறி ஏதாவது நடந்தால் தமிழ்நாடோ இந்திய மத்திய அரசோ ஆகவேண்டிய எதிரான நடவடிக்கையை நிச்ச‌யம் தொடரலாம் தவறில்லை.

அதை விடுத்து முற்று முழுதான தனி மனித சுதந்திரத்தில் தலையிட்டு மிக மோசமாக பல வழிகளிலும் பாதிக்கப்பட்ட ஒரு வயோதிப தாயை அங்கு இங்கு எங்கும் திரும்பிக்கூட பார்க்கக்கூடாது என்று சர்வ அதிகாரத்தனமாக கட்டளை என்பதெல்லாம் என்ன ஒரு நடைமுறை, சிந்தியுங்கள் என் சகோதரர்களே,

என் இனம் அழிந்தபோது எரிந்து கருகி துடித்த எங்கள் மேலான தமிழ் உறவுகளே! தயவுசெய்து சிந்தியுங்கள்.

இந்த அரக்கர்களை அழிக்க தேர்தல் காலங்களில் வாக்கு என்ற ஆயுதம் தான் சரியாக இருக்கும்,அப்போதாவது இந்த ஓநாய்களுக்கு பச்சோந்திகளுக்கு சரியான பாடம் புகட்டுவீர்களென நம்பிக்கையுடன் விடைபெற்றாலும் தேர்தல் காலங்களிலும் ஞாபகப்படுத்த நான் நிச்சியம் வருவேன்.

தர்மத்தின் வழ்வுதனை சூது கெளவும்
மீண்டும் தர்மம் வெல்லும்


என்றென்றும் உறவுடன்,

அறுகு அம்பு

நன்றி தமிழ் உலகம்,

No comments: