Thursday, September 30, 2010

கருணாநிதி குடும்பத்தின் எந்திரன் கேளிக்கை திரைப்படம், அதை நாங்கள் திருபியும் பாற்கப்போவதில்லை,

அன்பார்ந்த புலம்பெயர் உறவுச்சொந்தங்களே! இளையதலைமுறைகளே! தயவுசெய்து இந்த வேண்டுகோளை கருத்தில் கொள்ளுவீர்கள் என நம்புகிறோம்!,


ஈழத்தமிழினத்தின் தோல்விக்கும் குரூர இன அழிப்புக்கும் அதிக காரணமாக இருந்துவருகின்றது கருணாநிதியின் குடும்பம் என்பதை அறிவீர்கள்,, அவர்களால் தயாரித்து வெளியிட இருக்கும் எந்திரன் என்கின்ற கோமாளி திரைப்படத்தின் கணிசமான வியாபாரத்தை புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களிடம் எதிர்நோக்கி பலதரப்பட்ட விளம்பரங்களில் கருணாநிதி குடும்பம் முனைப்பாக ஈடுபட்டுள்ளனர்.

எமது உயிரையும், வாழ்வையிம், பூச்சி புழுக்களைவிடவும், கேவலமாக உதாசீனப்படுத்திய அனீதியின் பட்டறிவை, முள்ளிவாய்க்கால் படுகளத்திலும், அதன்பின் வந்தகாலங்களிலும், நன்கு அறிவோம், கருணாநிதி அரசும் சரி தமிழக திரைப்படத்துறையினரும் சரி இன்றுவரை எம்மை எவ்வளவு கேவலப்படுத்தி வருகின்றனர் என்பதை நாம் எல்லோரும் மறந்திருக்க முடியாது.

ஈழத்தை எரித்த யமகாதகன் கருணாநிதியின் குடும்பம் தயாரித்த கேளிக்கை திரைப்படம் "எந்திரன்" இதை எமது இன அழிப்பை மறந்து ரசிக்கப்போகிறீர்களா, வரவேற்புக்கொடுக்கப்போகிறீர்களா, தயவுசெய்து சிந்தியுங்கள்.

ஈழத்தை அழிப்பதற்காக உண்ணாவிரதமென்று உச்ச நாடகமாடிய வலியை மறந்து. கருணாநிதியின் குடும்பத்தின் கல்லா நிறைவதற்காகwe எந்திரன் என்ற சதிகார குடும்பத்தின் படத்தைப்பார்த்து எம்மை நாமே அசிங்கப்படுத்துவதா?

தீக்குளித்த முத்துக்குமாரை சித்த சுவாதீனமற்றவன் என்றுகூறி. ராமகிருஸ்ணா மருத்துவமனையில் ஒளித்து விளையாடிய வஞ்சகன் கருணாநிதி குடும்பம் மேலும் தளைக்க எந்திரன் திரைப்படம் பார்த்து உதவப்போகிறீர்களா?

ஈழத்தமிழனுக்காக குரல்கொடுத்த குற்றத்திற்காக தேசியப்பாதுகாப்புச்சட்டத்தில் சீமானை சிறையிலடைத்த கருணா குடும்பம் தயாரித்த எந்திரன் படத்தை ரசிக்கப்போகிறீர்களா?

தேசியத்தலைவன் அனுப்பிவைத்த தமிழர் தேசியக்கூட்டமைப்பை 2008 பெ டில்லிக்கு போகவிடாமல் தடுத்து உதாசீனப்படுத்திய கருங்காலி கருணாநிதியின் குடும்ப கேளிக்கை விளையாட்டுப்படமான எந்திரன் நிச்சியம் பார்க்கத்தான் வேண்டுமா?

தாய்மார்களையும் குழந்தைக்ளையும் நச்சுப்பொசுபரசால் எரித்த காதகி சோனியாவை தியாகத்திருவிளக்கு என்றுகூறி ஈழம் எரிந்து சாம்பலானபின்னும் நியாயப்படுத்திக்கொண்டிருக்கும் கருணாநிதியின் குடும்ப விருத்திக்கு எந்திரன் என்கின்ற தந்திரனின் திரைப்படத்தை பார்க்கப்போகிறிர்களா?

கீழுள்ளவற்ரையும் திரும்ப ஞாபகப்படுத்திக்கொள்ளுங்கள்,


1 ஓட்டு மொத்த எம்.பிக்கள் இராஜினாமா!

2 இந்த ஆட்சி இனியும் தேவை தானா!

3 இந்த உயிர் தேவையா!

4 அனைத்துக்கட்சிகளின் கூட்டு தீர்மானம்!

5 மனிதச் சங்கிலி;!

6 அனைத்துக் கட்சித் தலைவர்கள் டில்லி பயணம், பிரதமர் சோனியா சந்திப்பு!

7 உண்ணாவிரதமிருப்பேன்!

8 யுத்தநிறுத்தம் செய்யப்படும்!

9 சோனியாவும் மன்மோகனும் ஒப்புக்கொண்டனர்!

10 பிரணாப் முகர்ஜி இலங்கை பயணம்!

11 புலிகள் சகோதர யுத்தம் நடத்துகிறார்கள்!

12 இறையாண்மை தடைபோடுகிறது!

13 அது வேறு நாட்டு உள்விவகாரம்

இன்னும் ஆயிரம் நயவஞ்சக துரோகங்கள்,

கடைசியாக 3 மணி நேரம் உண்ணாவிரதமென்று ஏமாற்றிய வடுவை வலியை மறந்து. எந்திரன் என்ற விஷவிருட்ஷத்தை பார்க்க வேண்டுமா?

புலம்பெயர் சொந்தங்களே,, இரத்த உறவுகளே ,,நாங்கள் பல இடங்களில் கருணாநிதிக்கு எதிராகவும். சிங்கள பாசிசத்தோடு சேர்ந்து சல்லாபிக்கும் சினிமாத்துறைக்கும் எதிராக குரல் மட்டுமே கொடுத்து எச்சரித்து வந்திருக்கிறோம், சந்தற்பம் கிடைத்திருக்கும் இந்த ஒரு இடத்திலாவது எமது பலத்தையும் ஒற்றுமையையும் காட்டவேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம், என்பதை தயவுசெய்து உணர்ந்து கொள்ளுவோம்.


"பரிதாபத்தை காட்டி எதிரியிடம் எதையும் பெற்றுவிட முடியாது, எமது பலம் எதிர்த்தாக்கத்தை எதிரிக்கு ஏற்படுத்தும்போதுதான் எதிரி எம்மை உணர்ந்து
பணிந்துகொள்வான்"
இதுதான் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் தாரக மந்திரம், ஒன்றிணைந்து எந்திரன் திரைப்படத்தை புறக்கணிப்போம்

எமது பலத்தையும் ஒற்றுமையையும் துரோகிகளுக்கு படிப்பினையாக்கிக்காட்டுவோம்,

புலம்பெயர் எழுத்தாளர் குழுமம்,


http://www.youtube.com/watch?v=vTYqFLWi1lA&feature=player_embedded

No comments: