Tuesday, November 30, 2010




குருபெயர்ச்சி பலன்கள், 21,11,2010/ 07,05,2011,,


Monday, November 29, 2010

மஹிந்தவின் வருகையை எதிர்த்து லண்டன் விமானநிலையத்தில் தமிழர்கள் நடாத்திய போராட்டம்: "போர்க்குற்றவாளி மஹிந்தவே திரும்பிப் போ" என கோசம்








மஹிந்தவின் வருகையை எதிர்த்து லண்டன் விமானநிலையத்தில் தமிழர்கள் நடாத்திய போராட்டம்: "போர்க்குற்றவாளி மஹிந்தவே திரும்பிப் போ" என கோசம்
[ செவ்வாய்க்கிழமை, 30 நவம்பர் 2010, 01:40.51 AM GMT +05:30 ]
போர்க்குற்றவாளியும், தமிழின அழிப்பின் சூத்திரதாரியுமான மஹிந்த ராஜபக்ஷவின் பிரித்தானிய வருகையை எதிர்த்து லண்டன் கீத்றூ விமானநிலையத்தில் நேற்று இரவு ஆயிரத்துக்கும் அதிகமான தமிழர்கள் கூடி எதிர்ப்பை தெரிவிக்கும் முகமாக ஆர்ப்பாட்டம் நடாத்தியுள்ளனர்.

நேற்று (29-11-2010) இரவு 8:00 மணிமுதல் லண்டன் கீத்றூ விமானநிலையத்துக்குள் வர ஆரம்பித்த தமிழ் மக்கள் 10:00 மணியளவில் உரத்த குரலில் தமது எதிர்ப்பை தெரிவித்து போராட்டம் நடாத்தினர். ஆயிரத்துக்கும் அதிகமாக அங்கு கூடிய தமிழ்மக்களில் பலர் "ஸ்ரொப் ஜெனசைட்" என குறிக்கப்பட்ட மேலங்கிகளை அணிந்தவாறும் படுகொலை செய்யப்பட்ட மக்களின் படங்களை கைகளில் ஏந்தியவாறும் உரத்த குரலில் தமது எதிர்ப்பை தெரிவித்தனர்.

தமிழர்களின் இந்த திடீர்போராட்டத்தால் அங்கு கூடிய அதிகளவான காவல்துறையினருக்கு மத்தியிலும் அதிகளவானோர் தமது கரங்களில் தமிழீழ தேசியக் கொடியினை ஏந்தியவாறு

"போர்க்குற்றவாளி மஹிந்தவே திரும்பிப் போ"

"சிறீலங்கா ஜனாதிபதி பயங்கரவாதி"

"இனப்படுகொலை செய்த அரக்கனே திரும்பிப் போ"

"சிறீலங்கா ஜனாதிபதி போர்க்குற்றவாளி"

போன்ற கோசங்களை உரத்த குரலில் எழுப்பி விமானநிலையமே அதிரும் வண்ணம் தமது எதிர்ப்பை தெரிவித்தனர்.

அனுமதியற்ற போராட்டமாக இருந்த போதும், அங்கு தேசியக்கொடிகள் பிடிக்கப்பட்டு உரத்தகுரலில் எதிர்ப்புப் போராட்டம் நடைபெற்றபோதும் அங்கு கூடிய பிரித்தானிய காவல்துறையினர் எந்தவித இடையூறும் கொடுக்காததும், அதேபோல் போராட்டம் முடிவடையும் போது தமிழர்கள் பலர் காவல்துறையினருக்கு நன்றி தெரிவித்துச் சென்றதோடு அங்கு எதுவித அசம்பாவிதங்களோ, அன்றி கைதுகளோ நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்பாடு செய்யப்படாத இந்த திடீர் போராட்டத்தில் தமிழ் இளையோர் அமைப்பு, பிரித்தானிய தமிழர் பேரவை உறுப்பினர்கள், நாடுகடந்த தமிழீழ அரசாங்க பிரதிநிதிகள், மற்றும் பொதுமக்கள் என அனைவரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழர்கள் அங்குகூடி போராட்டம் நடாத்தியதால் மகிந்த ராஜபக்ஷ மட்டுமன்றி அந்த விமானத்தில் வந்த அதிகளவான சிங்களவர்களையும் காவல்துறையினர் வேறு வழிகளினூடாக வெளியேற்றியிருந்தனர்.

அச்சமடைந்த மகிந்தவை விமானம் தரை இறங்கியதும் விமானத்திற்கு அருகில் சென்ற நான்கு காவல்துறையினரின் வாகனங்கள் பாதுகாப்பு கொடுக்க ஒரு வாகனம் அவரை ஏற்றிக்கொண்டு வேறுவழியால் சென்று ஹட்ரன் குறஸ் நிலக்கீழ் தொடரூந்து நிலைய வழியாக ஏ312 வீதியூடாக சென்றல் லண்டனை நோக்கி விரந்து சென்றுள்ளது. வேறுவழிகளால் செல்லும் வாய்ப்பே அதிகமாக இருக்கும் என எதிர்பார்த்து கண்காணிப்பில் பல இடங்களிலும் நின்ற தமிழர்களால் இச்செய்தி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இது மட்டுமன்றி எதிர்வரும் 2-ஆம் திகதி ஒக்ஸ்பேட் பல்கலைக் கழகத்திலும் மகிந்த உரையாற்றவுள்ளதால் இதை விட அதிகளவான தமிழர்கள் அங்கு கூடி தமது எதிர்ப்பை தெரிவிப்பார்கள் என எதிர்வுகூறப்பட்டுள்ளதும் இங்கு சுட்டிக்காட்டதக்கது.

உடனடியாக செய்யவேண்டிய வேலையாக கீழுள்ள லிங்கை அழுத்தி அதனூடாக உங்கள் முறைப்பாட்டை 300 சொற்களுக்கு அதிகமாக இல்லாமல் இலகுவாக பிரித்தானிய வெளிவிவகார அமைச்சிற்கு அனுப்புங்கள்.

http://www.fco.gov.uk/en/feedback

நன்றி தமிழ்வின்,





















Thursday, November 25, 2010

> அகவை 56 காணும் ஆதவனே சூரியனே , நீவிர் பல்லாண்டு வாழியவே

--> அகவை 56 காணும் ஆதவனே சூரியனே , நீவிர் பல்லாண்டு வாழியவே

வல்வையில் உதித்த வனப்புமிகு ஆதவனுக்கு அகவை 56,
ஈழத்தமிழினத்தை உலகுக்கு காட்டிய சூரியனுக்கு அகவை 56,
தமிழ் மொழியை சர்வதேசத்திற்கு இனங்காட்டிய சூரியத்தேவனுக்கு வயது 56,
ஒடுக்கப்பட்ட தமிழர் இதயத்தில் வீரத்தை பாய்ச்சி வீறு கொள்ளவைத்த வீரத்தலைவனுக்கு அகவை 56,
நீளுலகில் நிமிர்ந்த தமிழினத்தின் தலைவனுக்கு அகவை 56,
பாயும் புலிகளின் தலைவன் பிரபாகரனுக்கு அகவை 56,
தமிழினத்தின் தேசியத்தலைவன் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு வயது 56,
மானத்தமிழ்தலைவன் பல்லாண்டு வாழ்கவென வாழ்த்துவோம்,
வாழிய பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரமாண்டு,

வீரகாவியங்கள், உருவகக்கதைகள், நன்னெறிக்கருத்துக்கள், எனப்பலவற்றை உலகம் கண்டிருக்கிறது. அவை வாழ்க்கையை வளப்படுத்தும் கற்பனையான சிருஸ்டிப்புக்களென்றும் உண்மையான வரலாற்று சரித்திர காவியங்களென்றும் இரு வேறுபட்ட கருத்துக்கள் உண்டு. இருந்தாலும் அக்கருத்துக்களில் இடம்பெறும் நாயகர்கள் அநீதியை அழிக்க பூமியில் அவதரித்த ஆண்டவனின் அவதார புருஷர்களாகவே அறியப்பட்டிருக்கிறார்கள், அவர்களுக்கு என்றென்றும் அழிவில்லை, அந்த அவதார புருஷர்களின் வரிசையில், ஈழத்தின் வல்லையில் உருவான "உலக அதிசயம்", திரு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள். இன்று பிரபாகரன் அவர்களின் அகவை 56, எமக்காக வாழ்கவென வேண்டி தலைவனை வாழ்த்துவோம்.

தலைவன் தனது 16 வயதில் தனியொரு இளைஞனாக விடுதலை வேள்வியை நோக்கிப்புறப்பட்டு கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் பூர்த்தியாகின்றன, இன்றுவரை தலைவன் தனது எதிரியை, அல்லது துரோகக்கூட்டங்களை, ஒரு வரியில்க்கூட விமர்சித்ததில்லை, தன் நம்பிக்கையும் வீரத்தையும் மட்டுமே நம்பியவர், செயற்பாடே அவரது தாயக மந்திரம், அவரது கொள்கையில் பின்பற்றுபவர் எவராக இருப்பினும் வாழ்த்துக்குரியவர்கள், தலைவனை துரோகங்களும் சதிகளும் உலுப்பியது உண்மை ஆனாலும் வீரத்தோடு விமர்சனங்களை தவிர்த்து தலைவனின் புகழ் ஈரெட்டு பதினாறு திக்கும் பரவி நிற்கிறது, இன்று 56 வது அகவை காணும் தேசியத்தலைவன் பிரபாகரன் அவர்களை நீடூழி வாழ்கவென வாழ்த்தி, நாளைய தினம் அனுஷ்டிக்கப்படும் மானத்துடன் ஈழமண் காத்த மாவீர மறவர்களையும் போற்றி வணங்கி தலைவன் வழி தாயகம் காக்க நிற்போம் என உறுதியெடுத்துக்கொள்ளுவோம்,

ஈழதேசம் இணையமும், எழுதுவோரும்,

Tuesday, November 16, 2010

ஸ்ரீலங்கா அரசின் தமிழர்மீதான அடக்குமுறை இந்தியாவையும் ஆட்டங்காண வைக்கக்கூடும்-ஈழதேசம் இணையத்திற்காக, கனகதரன்


போராட்டம் முடிவுக்கு வந்ததாக சிங்கள அரசாங்கம் கூறிக்கொண்ட கையுடன் இந்தியாவுடன் சேர்ந்து ஸ்ரீலங்கா அரசாங்கம் உலகநாடுகளுக்கு கொடுத்த ஒப்புதல் வாக்குமூலம். தீவிரவாதத்திலிருந்து நாட்டை மீட்டெடுத்துள்ளோம் இனி தாமதமில்லாமல் அப்பாவித்தமிழருக்கான சரியான அரசியல்த்தீர்வு உடனடியாக நடைமுறைப்படுத்தப்படும் என்பதாகும்,



அடுத்து வந்தநாட்களில் 1987ல் இந்தியாவால் அறிமுகப்படுத்தப்பட்டு தமிழர்தரப்பால் நிராகரிக்கப்பட்டிருந்த 13 திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்த உடனடியாக தயாராகிவிட்டோம் தமிழரின் நலனை கருத்தில் கொண்டு அதற்கு மேலேயும் சென்று அதிகாரங்கள் தமிழர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் என்றும் ஸ்ரீலங்கா இந்தியாவால் கூட்டாக விளம்பரப்படுத்தப்பட்டது.

பாமரத்தமிழர்கள் சிலர் இதை முற்று முழுதாக நம்பியதுமுண்டு. அதற்கான ஆரம்ப ஆயத்த ஆலோசனைகளை இந்திய அரசுடன் ஆலோசித்து நடைமுறைப்படுத்த ஆராய்ந்துகொண்டிருக்கிறோம் என்ற பரப்புரையுடன் இந்தியாவும் இலங்கையும் மாறி மாறி பயணங்களும் அறிக்கைகளும் தொடர்ந்தன. போதாக்குறைக்கு தமிழர்களால் படுகொலைக்குற்றவாளி என இனங்காணப்பட்டு உதாசீனப்படுத்தப்பட்டு புறந்தள்ளப்படிருந்த தமிழகத்தின் முதல் மந்திரி கருணாநிதியின் கடித நாடகங்கள் ஒருபுறம் ஈடேற்றப்பட்டு ஓய்ந்துபோய் விட்டன, எதுவும் நடக்கவில்லை.

ஈழத்தில் தமிழரின் நிலமை நாளுக்கு நாள் படுமோசமாகிக்கொண்டு போவதை ஏன் என்று கேட்பதற்கும் இன்று ஒருவருமில்லை. சிங்கள அரசாங்கம் நினைத்ததை இராணுவத்தின்மூலம் வடக்கு கிழக்கில் ஈடேற்றப்படுகிறது. அதற்கு பக்கபலமாக தமிழினத்தின் அழிவுச்சக்திகளான தமிழக முதல்வர் மு கருணாநிதி, டக்ளஸ் தேவானந்தா, கருணா, பிள்ளையான், கேபி, என்று பலருடன் யாழ் அரசாங்க அதிபர் அவர்களும் சேர்ந்து சிங்கள அரசுக்கு முண்டுகொடுத்துக்கொண்டிருக்கின்றனர்.

ஆனாலும் ஈழத்து பூர்வீக தேசிய இனமான தமிழர்களின் 60 ஆண்டுகால போராட்டம் தமிழர்களுக்கான சரியான தீர்வு எட்டப்படாதவரை பிரிவினைக்கான காரணங்களோடு விடுதலைக்கான தேவையும் இலங்கை மண்ணில் நீறுபூத்த நெருப்பாக இருந்துகொண்டிருக்குமே தவிர, அணைந்துபோவதர்க்கான சாத்தியங்கள் எந்தச்சந்தற்பத்திலும் காணப்படவில்லை. அல்லது எவராலும் தோற்றுவிக்கப்படவில்லை. இலங்கையில் அமைதியை ஏற்படுத்துவதற்கான சூழ்நிலை பலகாலங்களில் இயல்பாகவும், இறுக்கமான நடவடிக்கைகளினாலும் ஏற்பட்டிருந்தது. ஆனால் துரதிஸ்டவசமாக எவரும் சூழலை சரியாகப்பயன்படுத்தவில்லை என்பது கடந்தகாலப்படிப்பினை.

நேற்றுவரை இதற்கான காரணங்கள் ஒவ்வொரு கட்டங்களிலும் பற்றி எரியும் நிலையிலேயே கனன்றுகொண்டிருக்கிறது. பலர் இன்று மறந்துவிட்ட புத்தர் சிலை நிர்மாணிப்புடன் வீதிகளுக்கான சிங்கள பெயர் சூட்டலும் முடிவற்ற தொடர்கதையக கடந்த வெள்ளி, சனி இரவுகளில் ஒரு தொகை சிங்கள குடும்பங்கள் இராணுவ பாதுகாப்புடன் யாழ். நாவற்குழி வீடமைப்புத் திட்டத்தில் சிங்கள அரசால் திட்டமிட்டு குடியேற்றப்பட்டுள்ளன. இதற்கு முன் சுமார் 30 குடும்பங்கள் வரை குடியேற்றப்பட்டு இருந்தன. தற்போது மொத்தமாக 55 குடும்பங்கள் வரை இங்கு குடியமர்த்தப்பட்டிருக்கின்றன. இங்கு இக்குடும்பங்களுக்கு தேவையான கொட்டில்களை இராணுவ சிப்பாய்கள் அமைத்து கொடுத்துள்ளனர். வீடமைப்புத் திட்டத்தின் மூன்றில் இரண்டு பகுதி இச்சிங்கள குடும்பங்கள் வசம் தற்போது உள்ளது.urrurrnewsnews

இந்தச்சூழல் பல பின் விளைவுகளை ஏற்படுத்தும் என்கிற யதார்த்தத்தை கிஞ்சித்தும் சிந்திக்காது புறக்கணித்து அரசு எல்லாவற்றையும் இராணுவ அடக்குமுறைக்குள் கொண்டுவர ராஜபக்க்ஷவும் ஒட்டுக்குழுக்களும் முனைப்புடன் செயற்படுகின்றன. 1980 களில் சுமூகமாக யாழ்மாவட்டத்திற்குள் வாழ்ந்த பல ஆயிரம் குடும்பங்கள் தமது இருப்பிடங்களை இராணுவத்திடமிழந்து தமது காணிகள் வீடுகள் எப்படியிருக்கின்றன எங்கேயிருக்கின்றன என்று தெரியாமல் தொலைத்துவிட்டு அலைந்துகொண்டிருக்கும்போது தெற்கேயிருந்து அரசாங்கத்தால் அனுப்பிவைக்கப்பட்ட சிங்களவர்களுக்கு இராணுவ மரியாதையுடன் தமிழரின் பூர்வீக நிலம் பகிரப்படுகிறது.

தந்தை செல்வநாயகம் அவர்களின் காலத்திலும் அதற்குப்பிந்திய அமிர்தலிங்கம் காலத்திலும் தொடர்ச்சியாக நிலவிய தீர்வுக்கான சூழ்நிலைகளை உதாசீனப்படுத்திய சிங்கள ஆட்சியாளர்கள் தமிழினத்தை வழிநடத்திய விதம் விடுதலைப்புலிகள் இயக்கத்தையும் இன்னும் பிற போராட்டக்குழுக்களையும் இலங்கைக்கு அறிமுகப்படுத்திய துரதிஸ்டம் நிகழ்ந்திருந்தது. போராட்டக்குழுக்கள் உருவானதற்கான முழுப்பொறுப்பும் சிங்கள ஆட்சியாளர்களையே சாரும். நாட்டின் பதட்டநிலைக்கும் சிங்கள ஆட்சியாளர்களே என்றைக்கும் பொறுப்பாக இருந்துகொண்டிருக்கின்றனர்.

news30 வருடங்களுக்கும் மேலாக வடக்கு கிழக்கையும் இலங்கைத்தீவையும் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த தமிழரின் திடமான விடுதலைப்போராட்டம் முடிக்கப்பட்டதாக கூறப்பட்டு சண்டை இல்லையென்று உலகுக்கு சிங்கள அரசுபறைசாற்றினாலும் நாடு இராணுவமயப்படுத்தப்பட்டு தமிழர்களின் உணர்வுபூர்வமான மனிதசுதந்திரம் பறிக்கப்பட்ட நிலையில். சுமூக நிலைக்கு மாறாக பாலியல் பலாத்காரங்களும் படுகொலைகளும் கப்பம் கோரலும் திட்டமிட்ட சிங்களக்குடியேற்றங்களும் தமிழர்களை சிறுமைப்படுத்துவதிலேயே சிங்கள அரசு முனைப்புக்காட்டி இம்சைப்படுத்தி வருகிறது. இதன் வெளிப்பாடு ஒவ்வொரு தமிழனின் மனதில் ரணமாக கொதித்துக்கொண்டிருந்தாலும் வெளிக்காட்டமுடியாத அச்சுறுத்தல் தமிழினத்தை சூழ்ந்துகொண்டிருப்பதைக்காணலாம் .

இருந்தும் திரும்பவும் எங்கோ எப்போவோ வெளிப்படவேண்டிய தமிழரின் உணர்வின் சமிக்ஞையை சமீபத்தில் யாழ் செயலகத்தில் நல்லிணக்க ஆணைக்குழு முன்னதாக வாக்குமூலம் அளித்த நிகழ்வின்போது யாழ் மாவட்ட அரசியல் பிரமுகரும் அரச சார்பற்ற அமைப்புப் பிரதிநிதியுமான சிவிகே சிவஞானம் அவர்கள் இயல்பாக தனது கருத்தில் இந்த ஆதங்கத்தை வெளியிட்டிருக்கிறார். யுத்தம் என்பது முடிவல்ல எங்களது அபிலாசைகள் என்றுமே முடிவற்றதாகும், யுத்தம் முடிவுக்கு வந்து விட்டதன் மூலம் எமது அபிலாசைகளும் முடிவிற்கு வந்து விட்டதாக அர்த்தப்பட மாட்டாது என சிவிகே சிவஞானம். யாழ் செயலகத்தில் நல்லிணக்க ஆணைக்குழு முன்னதாக வாக்குமூலம் அளித்த நிகழ்வில் தெரிவித்தார். உலகளாவிய ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஜனநாயக வழியில் நாங்கள் தொடர்ந்து போராடுவோம். அந்தப் போராட்டம் வெற்றியளிக்காவிட்டால் மீண்டுமொரு "ஆயுதப் போராட்டம் ஏற்படுவது தவிர்க்க முடியாதது" எனவும் தெரிவித்தார்.(


இக்கருத்து யதார்த்தமாக ஒவ்வொரு மனிதனிடமிருந்து வெளிவரத்துடிக்கும் உள்ளக்கிடக்கையாகவே காணலாம். இராணுவமயப்படுத்தி தமிழனைக்கட்டுக்குள் வைத்துக்கொள்ளலாம் என்பது சிங்கள அரசின் திட்டமாகவிருந்தாலும். நீண்டகாலத்துக்கு இராணுவமூலம் அமைதியை தக்கவைத்துக்கொள்ள முடியுமா என்பதும் ஆய்விற்குரிய விடயமாகும், அத்துடன் திரு சிவஞானம் அவர்கள் தெரிவித்ததுபோல அடுத்து உடனடியாக ஒரு ஆயுதப்போராட்டம் தோற்றுவிக்கப்படலாம் என்பதெல்லாம் உணர்வின் வெளிப்பாடான வாதம் என்றே கருதினாலும். அரசாங்கம் வஞ்சக நோக்கத்தோடு தமிழர்களை பழிவாங்கும் நடவடிக்கையாக தொடங்கப்பட்டிருக்கும் தொலைநோக்கற்ற சிங்களக்குடியேற்றத்திட்டங்கள் மற்றும் மனித உரிமை நெருக்கடிகள் பெருத்த சிக்கலை இரு சமூகத்தினூடேயும் தோற்றுவிக்கும் என்பது எவரும் தவிர்க்க முடியாது.

இதுவே நாளடைவில் மீண்டும் ஒரு போராட்டத்திற்கு வழிகோலும் ஊற்றுவாயாகும். இன்று உரிமைகள் மறுக்கப்பட்டு நடைப்பிணமாக தமது இடங்களிலேயே குடியமர முடியாமல் அல்லலுறும் தமிழ்ச்சமூகத்தின் வேதனையை சிங்களக்குடியேற்றங்கள் சீண்டி வெறுப்பேற்றுமே தவிர அமைதியை ஒருபோதும் ஏற்படுத்தப்போவதில்லை.

வெளிநாடுகளும் வெளியுறவுக்கொள்கைகளும் எல்லாக்காலங்களிலும் அடக்குமுறைக்கும் துணைபோய்க்கொண்டிருக்குமென எதிர்பார்க்கமுடியாது, இந்திய வெளியுறவுக்கொள்கை அங்கு ஆட்சியிலிருக்கும் அரசாங்கங்கள் மாறுபடும்போது கேள்விக்குறியாகிவிடும். தொடர்ச்சியாக காங்கிரஸ் கட்சியும் திமுகவும்தான் இந்தியா என்று அரசியலில் தீர்மானித்துவிட முடியாது. இருதுருவங்களான சீன, இந்திய, நாடுகளுக்கான இலங்கையின் உறுதியற்ற வெளியுறவுக்கொள்கை இன்றய சூழ்நிலைக்கு தாக்குப்பிடித்தாலும் தொடர்ந்து அந்த நாடுகளில் ஏற்படும் அரசியல் மாற்றங்களின்போது ஸ்ரீலங்கா அரசின் தந்திரம் வெளுத்துப்போவதற்கு நிறையவே சந்தற்பங்கள் இருக்கின்றன.

சிங்கள அரசாங்கத்தின் இப்பேற்பட்ட சமூக அநீதி, அதற்குத்துணைபோய்க்கொண்டிருக்கும் இந்திய ஆட்சியாளர்களின் செயற்பாடும் இந்தியாவின் உள்நாட்டு அரசியலிலும் அமைதிக்குலைவை உண்டுபண்ணும். இவற்றை இந்தியா உணரவேண்டிய வாய்ப்புக்களையும் புறந்தள்ள முடியாது. ஈழத்தமிழருக்கான ஆதரவுக்குரல் இன்று தமிழ்நாட்டில் அதிகமாக உணரப்பட்டிருக்கிறது. சீமான் தலைமையிலான "நாம் தமிழர்" இயக்கம். வழக்குரைஞர் புகழேந்தி தலைமையிலான "தமிழக மக்கள் உரிமைக்கழகம்", தமிழக அரசியல்வாதிகளான வைகோ, நெடுமாறன் போன்றோரின் இடைவிடாத ஈழ ஆதரவுக்குரல் இவற்றை இந்திய அரசு தொடர்ந்து உதாசீனப்படுத்துமாகவிருந்தால் தமிழ்நாட்டிலும் பிரிவினைவாதத்தை தோற்றுவிக்கும் காரணியாக ஈழ அடக்குமுறை மாற்றம்காணலாம்.

newsஇந்திய அரசியல்வாதிகளை தவிர்த்து தமிழகமக்கள் என்ற இடத்திற்கு வந்துபார்த்தால் ஒரு அதிசயமான உண்மை எவராலும் உணரலாம், 2009 ம் ஆண்டும் அதற்கு முன்னும் ஈழ அழிப்பின் வேதனை தாங்காது தம்மையும் தமது குடும்பத்தையும் மறந்து இந்திய அரசாங்கத்தின் அராஜகத்திற்கு எதிராக தனித்தனி மனிதராக இந்திய மத்திய மானில அரசுகளை வழிக்கு கொண்டுவரவேண்டுமென்கின்ற நோக்கத்தோடு தமிழகத்தில் தீக்குளித்து தம்மை கருக்கி உயிர் துறந்தவர்கள் 18க்கும் மேல் இது ஒரு சாதாரண சம்பவமல்ல உலகத்தில் மிகவும் அரிதாக நடக்கும் அதிசயமாகும். தமிழகத்து பாமரமக்களின் இன உணர்வை சாதாரணமாக எவரும் எடைபோடமுடியாது. உயிரை துச்சமென மதிக்கும் இன உணர்வாளர்கள் தமிழ்நாட்டில் நிறையவேயுண்டு.

உலகத்தை வியப்பிலாழ்த்திய விஞ்ஞானிகளையும் அதிக இராணுவ பலத்தையும் கொண்ட, உலகத்தில் மிகப்பெரிய நிலப்பரப்பைக்கொண்ட இரும்புத்திரை நாடென்று அழைக்கப்பட்ட சோவியத்யூனியன் உடைந்துபோன வரலாறுகளுமுண்டு, அந்த உடைவுக்கான காரணங்கள் வேறாக இருந்தாலும் ஒருநாட்டின் ஒற்றுமையும் உடைவும் மக்களின் கைகளில் தங்கியிருக்கிறது. இன்றுவரை இந்தியா ஒருநாடு என்று கூறப்பட்டாலும் இந்தியா ஒரு துணைக்கண்டம் என்பதே உண்மை. இந்தியா ஒரு தேசிய இனத்தைக்கொண்ட ஒரு மொழி வரலாறு கொண்ட நாடுமல்ல. பலமொழிப்பாரம்பரியத்தைக்கொண்ட 24 க்கு மேற்பட்ட வெவ்வேறு மொழிகலாச்சார பின்னணிகொண்ட மானிலங்களையும் இரண்டு யூனியன் பிரதேசங்களையும் தன்னகத்தேகொண்டு தொங்கிக்கொண்டிருக்கிறது, ஆரம்பத்தில் ஆப்கானிஸ்தான் பாக்கிஸ்தானும் தொங்கலிலிருந்து துண்டித்துக்கொண்டன.

இந்தியாவில் வடக்கு தெற்கு என்ற வேறுபாடும் பாகுபாடும் சாதிய சீரழிவுகளும் மகாத்மாகாந்தி காலத்திலிருந்து இன்றுவரை தொடர்கிறது.இந்தியக்கிராமங்கள் பல 1700, 1800 களிலிருந்த நிலையிலேயே இப்போதுமிருக்கின்றன உத்ரபிரதேசம் மத்தியபிரதேசம் பீகார் ஒரிசா போன்ற இடங்கள் வறுமையின் பிடியில் படிப்பு மற்றும் அரசியலறிவற்ற பாம்பாட்டிகளும் பழங்குடிகளும் இருப்பதால் ஆட்சியாளர்கள், ஏமாற்றி ஆட்சிசெய்கின்றனர் தமிழ்நாட்டிலும் வறுமை இருந்தாலும் இன்று பல இளைஞர்கள் போராட துணிந்துவிட்டனர். 90 வயதாகும் எழுந்திருக்க முடியாத முதியவரான கருணாநிதியுடன் அவரது திராவிடக்கட்சியின் கதையும் முடிவுக்கு வந்துவிடும், 2011 ஆண்டுக்கான சட்டசபை தேர்தலில் கருணாநிதி வெற்றிபெறுவதென்பது கேள்விக்குறியாகியிருக்கிறது. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு ஊழல் தலைவிரித்தாடுகிறது. இப்படிப்பட்ட நெருக்கடி நேரங்களிலெல்லாம் கருணாநிதி ஈழப்பிரச்சினையை கையிலெடுப்பதையே வாடிக்கையாகக்கொள்ளுவதுண்டு, இனி வருங்காலங்களில் அவரது தந்திரம் பலிப்பது சுலபமானதுமல்ல.

ஈழப்பிரச்சினையிலிருந்து இந்திய அரசியல்த்தலையீடு விலகிவிடவேண்டும் அல்லது சுமூகமாகத்தீர்க்கப்படவேண்டும். என்பது தமிழகத்து நியாயமான அரசியல்வாதிகளினதும் பொதுவான உலக அபிப்பிராயமும். தமிழகத்து அரசியல்க்கட்சிகள் அனைத்தும் தமது அரசியலை கொண்டுசெல்ல ஆதாரமாக பற்றிப்பிடித்திருப்பதும் ஈழத்தமிழர் பிரச்சினையே, எனவே இனி ஈழத்தமிழர்கள் மவுனம் சாதித்தாலும் தமிழ்நாட்டு அரசியலில் ஈழப்பிரச்சினை மறக்கப்படாத ஒன்றாகவே இருக்கும். அங்குள்ள போலி அரசியல்வாதிகள் போர் முடிவுக்கு வந்த குறுகிய காலங்களில் மக்களால் இனங்காணப்பட்டிருக்கின்றனர் இவர்களில் குறிப்பிடக்கூடியவர்கள் திருமாவளவன் தலைமையிலான விடுதலைச்சிறுத்தைகள், மற்றும் ராமதாஸ் தலைமையிலான பாட்டாளிமக்கள்கட்சி.

ஆனல் என்றும் மாறாக்கொள்கையுடன் உறுதியுடனிருக்கும் நாம் தமிழர் இயக்கம் சீமான், வைகோ, நெடுமாறன் போன்றோர்களுடன் வழக்குரைஞர் புகழேந்தி தலைமையிலான தமிழக மக்கள் உரிமைக்கழகம், ஆகிய அமைப்புக்களின் உறுதியான செயற்பாடுகளுடன் புலம்பெயர் ஈழத்துச்சமூகமும் ஒற்றுமையுடன் செயலாற்றினால் காலதாமதமானாலும் ஈழத்தின் ஐந்தாங்கட்ட போர் அல்லது அரசியல் தீர்வோடு ஈழத்தின் துயரம் முடிவுக்கு கொண்டுவரப்படலாம். எல்லாவற்றிற்கும் புலம்பெயர் தமிழினத்தின் ஒற்றுமை ஒன்றே மிகப்பெரும் சக்தியாகும்,

ஈழதேசம் இணையத்திற்காக,
கனகதரன்

நன்றி ஈழதேசம்

Sunday, November 14, 2010

அக்கினிக்குஞ்சுகள்

கார்த்திகை இருபத்தியேழு,
நெஞ்சில்
கனல் கக்கும் இறுக்கமான பொழுது.
நாற்பதாயிரம்
அக்கினிக்குஞ்சுகளின்-விதை
வீரங்கொண்ட சரித்திர தினம்.

ஆற்று வெள்ளம் போலவும் -கடல்
ஆற்பரிக்கும் அலையெனவும்
காற்றுப்போலவும் -கனலென
களங்கண்ட வேங்கைகளின்
காலடியை தரிசிக்கும் கடும் பொழுது.

நேற்றைய உங்கள் இருப்பு
நெஞ்சுத்துணிவோடு
நாங்கள் உறங்கிய பொழுதுகள்
ஆற்பரிக்கும் அந்த நினைவுகளை
போற்றும் புண்ணிய நாள்.

வெற்றிடமில்லாத வீரத்தோடு
கனல் கக்கிய -உங்களின்
கலன்களின் சத்தம்
உறக்கமில்லா பொழுதுகளாக
இடியென காதில் இறங்கினாலும்.
உங்கள் இருப்புக்கான
அறிகுறியென்ற மமதை
என்னுள் துள்ளி விளையாடி
செருக்கெடுத்த நேரம்.

இன்றய அமைதி
சாவுக்கும் சரி நிகராக
ஆனாலும்
ஆதார சுருதியாக -நீங்கள்
இட்டுச்சென்ற இலக்கும்
தலைவன் கொண்ட நோக்கும்
பட்டுப்போகவில்லை
பசுமரத்தாணியாக -என்
நெற்றிப்பொட்டில்
நிமிர்ந்திருக்கிறது,

இன்று எங்கள் சொந்த மண்
பாலை வனமாக,, தரிசாக
நரிகளும் கோட்டான்களும்
நர்த்தனமாடினாலும்
நீங்கள் விதைக்கப்பட்ட மண்
உங்கள் நோக்கம் போல -அங்கே
புதைக்கப்பட்டிருக்கிறது.

ஈரேழு யுகங்கள் சென்றாலும்
விதைக்கப்பட்ட அக்கினி விதைகள்
விருட்சமாகும்
தலைவைனின் சத்தியம் ஜெயிக்கும்
சந்ததி அழியும் வரை-வீர
சரித்திரம் தொடரும்.

இன்றய பொழுதில்
இதயத்தாமரைகளான உங்களை
இறைஞ்சி எழுச்சியுடன்
வணங்குகிறோம்,
மாண்புடன் மாவீரர்களை தொழுது
தலைவனுடன் சபதமெடுத்துக்கொள்வோம்.
சாவிலும் வாழ்வோம் சரித்திரம் படைப்போம்.
-------------------------------------------------------------------------------
புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்.

அக்கினிக்குஞ்சொன்று கண்டேன் -அதை
அங்குள்ளோர் காட்டினில் பொந்தினிலிட்டேன்
வெந்து தணிந்தது காடு -கனல்
வீரத்தில் பிஞ்சென்றும் மூப்பென்றுமுண்டோ,
"பாரதி"

கனகதரன்,

நன்றி ஈழதேசம் இணையம்.

Friday, November 12, 2010

பாசத் தலைவனுக்கு பாராட்டு விழா.



ஏறக்குறைய அனைத்து தலைப்புகளிலும் கருணாநிதிக்கு பாராட்டு விழா நடத்தி முடித்து விட்டதால் இப்பொழுது கருணாநிதியை எதற்காக பாராட்டுவது என்று “கருணாநிதியை பாராட்டும் துறையின்“ அமைச்சர் ஜெகதரட்சகனும், துணை அமைச்சர் துரை முருகனும் உட்கார்ந்து யோசிக்கின்றனர்.




திடீரென்று அவர்களுக்கு தோன்றிய யோசனை, ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இரட்டை சதம் அடித்த டெண்டுல்கரை பாராட்டிய கருணாநிதிக்கு பாராட்டு விழா நடத்தினால் என்ன என்று யோசனை செய்ததும், அருமையான ஒரு யோசனையாக தோன்ற, உடனடியாக விழா ஏற்பாட்டில் இறங்கினர்.

விழாவுக்கு டெண்டுல்கரை அழைப்பது என்று முடிவெடுக்கப் பட்டது. டெண்டுல்கரை அழைக்கும் பொறுப்பு வி.சி.குகநாதனிடம் ஒப்படைக்கப் பட்டது. ஆஸ்திரேலியாவில் ஒரு நாள் தொடரில் இருந்த டெண்டுல்கர் வர இயலாது என்று தெரிவித்ததும், சிவசேனா கட்சித் தலைவர் பால் தாக்கரேயைத் தொடர்பு கொண்டு, டெண்டுல்கரை விழாவுக்கு அழைத்ததும், டெண்டுல்கர் உடனடியாக ஒப்புக் கொண்டார். இனி விழா காட்சிகள்.

விழாவுக்கு, வழக்கமான ஜால்ரா கம்பேனிகளான ரஜினிகாந்த், கமலஹாசன், ஜெகதரட்சகன், துரைமுருகன், வாலி, வைரமுத்து, ஆகியோர் வருகை தந்திருந்தனர். டெண்டுல்கர் ஒன்றுமே புரியாமல் பேந்த பேந்த விழித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார்.




முதலில் விழாவுக்கு தலைமையேற்று, ஜெகதரட்சகன் பேசினார்.



“திருப்புகழை பாடப்பாட வாய் மணக்கும் என்பார்கள். அது பொய் வாக்கு. என் தலைவனை பாடப் பாட வாய் மட்டுமல்ல, என் உடலே மணக்கிறது.

எங்கோ தெருவில் ஏழையாய் ஒரு இன்ஜினியரிங் காலேஜும், மெடிக்கல் காலேஜும் நடத்திக் கொண்டிருந்த என்னை இன்று மந்திரியாக்கி அழகு பார்தது என் தலைவன் தான்.
இந்தியாவிலே எங்கேயாவது ஒரு இடத்திலாவது முதலமைச்சரின் தொகுதியிலே கிரிக்கெட் ஸ்டேடியம் இருக்கிறதா ?

ஆனால் என் தலைவனின் தொகுதியிலே கிரிக்கெட் ஸ்டேடியம் இருக்கிறது. இருபதுக்கு இருபது கிரிக்கேட் போட்டி நடைபெறும் நாட்களில் என் தலைவன், சட்டமன்றத்துக்கு செல்வதைக் கூட தவிர்த்து விட்டு டிவி முன்னால் உட்கார்ந்திருப்பார் என்பதை எத்தனை பேர் அறிவீர்கள் ?


செம்மொழி மாநாடு நடைபெறும் கொடீசியா அரங்கிலே மாநாட்டு தொடங்கும் முன், அங்கே ஒரு கிரிக்கெட் போட்டியை நடத்தி விட்டுத்தான் மாநாட்டை தொடங்க வேண்டும் என்பதை இன்றைய தினத்திலே என் தலைவனிடம் கோரிக்கையாக வைக்கிறேன். அந்த விழாவிலே மானாட மயிலாட நிகழ்ச்சியில் ஆடும் நாட்டிய நங்கைகளை அரங்கத்திலே கிரிக்கெட் போட்டி நடைபெறும் வேளையில் ஆட அனுமதிக்க வேண்டும் என்பதையும் கேட்டுக் கொள்கிறேன். “


அடுத்து துரை முருகன். “ அப்போல்லாம், இந்தி எதிர்ப்பு போராட்ட காலம். நானு, தலைவரு எல்லாம் இந்தி எதிர்ப்பு போராட்டத்துலே கலந்து கிட்டு சிறையிலே இருந்தப்போவே, சிறைக்குள்ளேயே கிரிக்கெட் விளையாடியிருக்கோம் என்பதை இங்கே சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.



கழகத்தில், இளைஞர் அணி, மகளிர் அணி, இலக்கிய அணி, வழக்கறிஞர் அணி போல, கிரிக்கெட் அணியும் ஒன்று உருவாக்க வேண்டும் என்பதை இந்த நேரத்திலே வேண்டுகோளாய் வைக்கிறேன். அந்த கிரிக்கெட் அணிக்கு துணை முதல்வரே தலைமை தாங்க வேண்டும் என்பதையும் வேண்டுகோளாய் வைக்கிறேன்.

தலைவருக்கு கிரிக்கெட் விளையாட்டில் இருந்த ஆர்வத்தின் காரணமாகவே, சட்டசபை கலவரத்தில், பட்ஜெட் புத்தகங்கள் அவர் மீது தூக்கி வீசப்பட்ட போதெல்லாம் அருமையாக கேட்ச் பிடித்து தன் விளையாட்டுத் திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார். கிராமத்துப் பள்ளிக்கூடத்தில் படித்தாலும் தலைவர் கிரிக்கெட் விளையாட்டில் சூரர்.

ஆனால் கான்வென்ட்டில் படித்த சில திமிர் பிடித்தவர்களுக்கு, கிரிக்கெட் என்றால் என்னவென்று தெரியுமா ? டெண்டுல்கர் இரட்டைச் சதம் அடித்தாலும் என் தலைவரைப் போல இரண்டு மனைவிகள் உண்டா அவருக்கு. என் தலைவரின் சாதனைகளுக்கு முன்னால் டெண்டுல்கரின் இரட்டைச் சதம் ஜுஜுபி என்று சொல்லிக் கொள்கிறேன்.“ (இதைக் கேட்டதும் கருணாநிதி விழுந்து விழுந்து சிரிக்கிறார்.)

அடுத்து வாலிபக் கவிஞர் வாலி.




“ கிரிக்கெட்டு கிரிக்கெட்டு
உன் குடும்ப பிரச்சினைய நீ சரிக்கட்டு !

நீ நடந்தாலே ஜல்லிக்கட்டு
தேர்தல்ல நீ நடத்துவ மல்லுக்கட்டு

உன் விழாவுக்கு நான் வந்திருக்கேன் மெனக்கெட்டு..
உன்னைப் பார்த்ததும் என் மனசு ஓடுது தறிக்கெட்டு

அரசியல் உனக்கு ஒரு விளையாட்டு
உனக்காக நான் பாடுறேன் தமிழ்ப்பாட்டு

புடவைக்கு மேச்சிங் ஜாக்கெட்டு
உன்னால நிரம்புது என் பாக்கெட்டு

தேர்தல்ல நீ எடுத்த பல விக்கெட்டு
உன்னை எதுத்தவங்க உடைஞ்ச பக்கெட்டு

கிரிக்கெட்டு கிரிக்கெட்டு
உன் குடும்ப பிரச்சினைய நீ சரிக்கட்டு ! “


அடுத்து வைரக் கவிஞர் வைரமுத்து.




“ டெண்டுல்கருக்கு வாழ்த்து தெரிவித்த சிவப்புச் சூரியனே
உன்னைக் கண்டு ஓடுவான் கைபர் கணவாய் ஆரியனே

நீ டெண்டுல்கருக்கு தெரிவித்தது வாழ்த்து அல்ல… …
நீ தெரிவிக்காதது எதுவுமே வாழ்த்தும் அல்ல

உன் பெயரைச் சொன்னாலே பிட்ச் அதிரும்
ஸ்டெம்பு எகிரும் மைதானம் நடுநடுங்கும்

எல்லோரும் மேட்ச் ஃபிக்சிங்தான் செய்வார்கள்
நீ மைதானத்தில் உள்ளவர்களுக்கு கவர் கொடுத்து
மைதானத்தையே ஃபிக்ஸ் செய்தாய்.

மொத்தத்தில் நீ ஒரு புலிக்குட்டி
உனக்கு முன்னால் டெண்டுல்கள் ஒரு எலிக்குட்டி

அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.




கலைஞர்ஜி இன்னக்கி நீங்க டெண்டுல்கருக்கு வாழ்த்து சொல்லிருக்கீங்க. அதை நான் வரவேற்கிறேன். ஏன்னா நான் உங்களுக்கு வாழ்த்து சொல்றேன். நான் எப்போ வாழ்த்து சொல்வேன், எதுக்கு வாழ்த்து சொல்வேன்னு எனக்கே தெரியாது. ஆனா உங்களுக்கு டெய்லி நூறு வாழ்த்தாவது வரும்.

பாபாஜி கூட இமயமலேல்ல கிரிக்கெட் விளையாடுவார். நான் அடிக்கடி இமயமலேக்கு ஏன் போறேன்னு நெறய பேருக்கு தெரியாது. அங்கே கிரிக்கெட் விளையாடத்தான் நான் போறேன். நான் இமயமலைலே கிரிக்கெட் விளையாடும்போது கூட கலைஞர்ஜி எனக்கு போன் போட்டு கேம் எப்படிப் போகுதுன்னு கேட்பார்.

கலைஞர்ஜிக்கு கிரிக்கெட் மேலே இருக்க ஆர்வத்த பாத்து நான் கூட எந்திரன் படத்துல ரோபோ கிரிக்கெட் விளையாடுற மாதிரி ஒரு சீன் வெக்கலாம்னு யோசிச்சுருக்கேன். கிரிக்கெட் கேமே இந்தியாலேர்ந்து போனதுதான். நம்ம வேதத்துலேயும், உபநிஷத்துக்கள்ளேயும், கிரிக்கெட் பத்தி நெறய செய்தி இருக்கு.

கலைஞர்ஜிக்கு ஆண்டவனோட அருள் இருக்கறதாலத்தான் இன்னைக்கு டெண்டுல்கர பாராட்டிருக்கார்.

அடுத்து கமலஹாசன்.




மதிப்பிற்குரிய கலைஞர் அவர்கள், டெண்டுல்கருக்கு பாராட்டு தெரிவித்ததை பாராட்டுவதற்காக இன்று ஒரு விழா நடந்து கொண்டிருக்கிறது. இந்த விழா ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த விழா. இந்த விழாவை நாங்கள் எங்கள் பேரப்பிள்ளைகளிடம் ஒரு தமிழன் எப்படி இன்னொரு கிரிக்கெட் வீரனை பாராட்டினான் என்று கூறி பெருமை படத் தக்கதொரு நிகழ்வு.


மராட்டிய மண்ணில் பிறந்த ஒரு வீரனை பாராட்டும் பண்பு கலைஞருக்கு இருக்கிறது. அதற்காக நானும் தமிழன் என்ற முறையில் கர்வம் கொள்கிறேன்.

நான் பராசக்தி படம் பார்த்து தமிழ் கற்றுக் கொண்டேன். அந்தப் படத்தில் ஒரு வசனம் வரும். நான் தென்றலைத் தீண்டியதில்லை. தீயைத் தாண்டியிருக்கிறேன் என்று. தாண்டியிருக்கிறேன் என்ற சொல்லாடலை கலைஞர் பயன்படுத்தியதே விரைவாக ரன் எடுக்கையில் க்ரீசை தாண்டுவதைத்தான் என்பது எத்தனை பேருக்கு தெரியும் ?


இந்தத் தமிழனின் பண்பை கண்டு நான் வணங்குகிறேன். கலைஞர் மட்டும் அரசியலுக்கு வராமல் கிரிக்கெட் விளையாடப் போயிருந்தால், 50 ஓவர்கள் மட்டுமல்லாமல், 100 ஓவர்களையும் இவரே விளையாடி 4 சதங்கள் அடித்திருப்பார் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை.

கருணாநிதி ஏற்புரை

என் அருமைத் தம்பி துரை முருகன் அவர்களே, அன்பு இளவல் ஜெகதரட்சகன் அவர்களே, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களே, கலைஞானி கமலஹாசன் அவர்களே, “கிரிக்கெட்டின் கில்லி” டெண்டுல்கர் அவர்களே, என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புக்களே.

இந்த விழா, இவ்வளவு சிறப்பாக நடைபெறும் என்று நான் எதிர்ப்பார்க்கவேயில்லை. நேற்று கூட, அமைச்சரவைக் கூட்டத்தை பாதியிலேயே முடித்து விட்டு, தலைமைச் செயலக கட்டுமானப் பணிகளை பார்த்து விட்டு இந்த விழா நடக்கும் அரங்கை பார்வையிட வந்தேன். அப்பொழுது, நாளை மாலைக்குள் இந்த வேலைகள் முடிவு பெறுமா என்ற அய்யம் எனக்கு இருந்தது.


ஆனால் தம்பி உடையான், படைக்கு அஞ்சான் என்ற வாக்கிற்கேற்ப என் தம்பிகள் இவ்விழாவை சிறப்பாக நடத்தியிருக்கிறார்கள். எனக்கு பாராட்டு விழா என்பதே பிடிக்காது. அந்த நேரத்திலே, வீட்டில் உட்கார்ந்து ”ராணி 6, ராஜா யாரு ? ” அல்லது எனக்கு மிகவும் பிடித்த ”மானாட மயிலாட” பார்க்கலாம் என்று நினைத்திருந்தேன்.

ஆனால், அந்த நிகழ்ச்சிகளில் இருக்கும் அனைத்து நடனங்களும் இந்த நிகழ்ச்சியிலும் நடைபெறும் என்று என் அன்புத் தம்பிகள் அளித்த வாக்கிற்கிணங்கவே இவ்விழாவில் கலந்து கொள்ளச் சம்மதித்தேன்.


எனக்கா இப்படி பாராட்டு ? ஒரு கிரிக்கெட் வீரருக்கு வாழ்த்து தெரிவித்ததற்காக ஒரு பாராட்டு விழாவா என்று சில அறிக்கை வீராங்கனைகள் அறிக்கை வெளியிடக் கூடும். அவ்வாறு அவர்கள் அறிக்கை வெளியிடுவார்களேயானால் அது, நான் தமிழனாக, பிற்பட்ட சமுதாயத்தில் பிறந்தேன் என்பதை சுட்டிக் காட்டுவதற்காகவன்றி வேறு எதற்காக ? ஆனால் அதையெல்லாம் கண்டு துவள மாட்டான் இந்தக் கருணாநிதி.

அறிஞர் அண்ணா எதையும் தாங்கும் இதயம் வேண்டும் (மானங்கெட்டவன், சூடு சுரணை இல்லாதவன் என்பதற்கு வேறு வார்த்தைகள்) என்பதை கற்றுக் கொடுத்திருக்கிறார்.

டெண்டுல்கர் இரட்டைச் சதம் அடித்தவுடன் அவருக்கு நான் வாழ்த்து தெரிவித்தேன். அதைக் கண்ட என் அன்புத் தம்பிகள் துரை முருகனும் ஜெகதரட்சகனும் இதற்கு ஒரு விழா எடுக்க வேண்டும் என்றார்கள். நான் வேண்டாம், மக்கள் பணி இருக்கிறது என்று சொன்ன போதும் மிகவும் வற்புறுத்தினார்கள்.

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் என்ற அய்யன் வள்ளுவனின் வாக்கை ஏற்று இவ்விழாவிலே கலந்து கொள்ள சம்மதித்தேன்.

என் தம்பிகள், இவ்விழாவிற்கு, இந்திய கிரிக்கெட் அணியில் உள்ள அனைத்து வீரர்களையும், அம்பயர்களையும் அழைக்க வேண்டும் என்ற அவாவினை தெரிவித்தனர். அனைவரும் பொறாமைத் தீயில் கனன்று போவார்கள். இந்தத் தமிழனுக்கா இவ்வளவு அங்கீகாரம் என்று சினந்து போவார்கள் என்பதாலேயே தம்பி டெண்டுல்கரை மட்டும் அழைத்தால் போதும் என்று தன்னடக்கத்துடன் தெரிவித்தேன்.

தம்பி விஜய் கில்லி படத்தில் எதிரிகளை துவம்சம் செய்தது போல, தம்பி டெண்டுல்கர், எதிராளிகளின் பந்து வீச்சை துவம்சம் செய்ததாலேயே, அவரை ”கிரிக்கெட் கில்லி” என்று அழைத்தேன்.

அடுத்து, ஹாக்கி விளையாட்டு வீரர்களை பாராட்டலாம் என்று உத்தேசிக்கும் போதே, என் தம்பிகள் அடுத்த விழாவுக்கு தயாராவது எனக்குப் புரிகிறது. என் தம்பிகளின் அன்புக்கு தடை விதிக்க நான் யார் ?

இவ்வாறு கருணாநிதி பேசினார்.

விழா ஹைலைட்.

விழா நாயகன் கருணாநிதிக்கு தங்கத்தாலான பேட்டும், தங்கத்தாலான மூன்று ஸ்டெம்ப்புகளும் வழங்கப் பட்டன.

டெண்டுல்கருக்கு,


சமத்துவபுரத்தில் ஒரு வீட்டு மனையும்,

25 கிலோ 'ஒரு' ரூபாய் அரிசியும்,

இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டியும்,

கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தில் உறுப்பினர் அட்டையும்

வழங்கப் பட்டது.



பின் குறிப்பு.

கலைஞர் நூறு கோப்புகளில் கையொப்பம் இட்டதை பாராட்டும் விதமாகவும், 100 நாட்கள் தலைமைச் செயலகம் சென்றதை பாராட்டும் விதமாகவும், பிரதமருக்கு ஒரு லட்சம் கடிதம் எழுதியதை பாராட்டும் விதமாகவும், அடுத்தடுத்து விழாக்கள் நடைபெற உள்ளதால், விழா மேடையை பிரிக்க வேண்டாம் என்று உத்தரவிடப் பட்டது.

நன்றி சவுக்கு,

Sunday, November 7, 2010

விக்கிலீக்கும் விடுதலைப் புலிகளும்.

விக்கிலீக்குக்கும், விடுதலைப் புலிகளுக்கும் என்ன தொடர்பு என்பதை பின்னால் பார்ப்போம்.

முதலில், விடுதலைப் புலிகள் மீதான தடை, கருணாநிதி அரசின் நிலைபாடு ஆகியவற்றை பார்த்து விடுவோம்.

317_0052

சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு தீர்ப்பாயம் புலிகள் இயக்கத்தின் மீதான தடைக்கு போதுமான காரணங்கள் உள்ளனவா என்று ஆராயத் தொடங்கியபோதே, இது ஒரு சடங்கு என்பது புரிந்து விட்டது. ஏனெனில், புலிகள் இயக்கத்தை தடை செய்து வெளியிடப்பட்ட அறிவிக்கையிலேயே, புலிகள் இயக்கம் பெரும்பாலும் அழிந்து விட்டது என்று குறிப்பிடப் பட்டுள்ளது.

இந்தச் சூழலில் தடை எதற்கு என்ற கேள்வி எழுகிறது. ஆனாலும், விடாப் பிடியாக இந்தத் தடையை நியாயம் என்று நிலை நிறுத்த, கருணாநிதி அரசு முயற்சி செய்ததை இந்தத் தீர்ப்பாய விசாரணையில் காண முடிந்தது.

மத்திய அரசு வெளியிட்ட அறிவிக்கை முழுவதும், மாநில அரசு வழங்கிய ஆதாரங்கள் மற்றும் வாக்குமூலங்கள் அடிப்படையிலேயே வெளியிடப் பட்டது என்பது தீர்ப்பாய விசாரணையில் தெளிவாகத் தெரிந்தது.

Prabakaran1987

இயக்கம் ஏறக்குறைய அழிந்து விட்டது என்ற நிலையில், இந்த இயக்கத்தை தடை செய்ய வேண்டுமா இல்லையா என்று ஆராய்ந்து தீர்ப்பளிக்க வேண்டிய ஒரு தீர்ப்பாயம், நியாயமாக செய்ய வேண்டியது, அந்த இயக்கத்தின் ஆதரவாளர்களை அனுமதிப்பது தானே ?

புலிகள் இயக்கத்தை ஆதரித்த ஒரே காரணத்திற்காக சிறையில் அடைக்கப் பட்ட வைகோ தன்னை இந்த விசாரணையில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்று அளித்த மனுவை தீர்ப்பாயம் தள்ளுபடி செய்தது எந்த அடிப்படையில் ?

அடுத்து விசாரணைக்கு வந்த, பழ.நெடுமாறனையும், தமிழக மக்கள் உரிமைக் கழகத்தையும் சட்டத்தில் தடை செய்யப் பட்ட இயக்கத்தின் உறுப்பினர்கள் மட்டுமே விசாரணையில் பங்கு கொள்ள இயலும் என்ற காரணத்தை சொல்லி நிராகரித்தது தீர்ப்பாயம். தமிழக மக்கள் உரிமைக் கழகத்தின் மனுவை நிராகரித்தது, அது ஒரு பதிவு செய்யப் படாத அமைப்பு என்பதனால்.

அடுத்து சிறைக் கைதிகள் உரிமை மையம் என்ற பதிவு செய்யப் பட்ட ஒரு அமைப்புன் சார்பாக, ஈழத் தமிழர்களுக்காக அந்த அமைப்பு தொடர்ந்த வழக்குகள், பொது நல வழக்குகள், முகாமில் உள்ள தமிழருக்காக இந்த அமைப்பு எடுத்த நடவடிக்கைகள் ஆகிய அனைத்தையும் பட்டியலிட்டு, தீர்ப்பாயத்தின் முன்பு மனுவாக சமர்ப்பித்த போது, வேறு வழியின்றி அதை ஏற்றுக் கொண்டார், தீர்ப்பாயத்தின் தலைவரும், புது தில்லி உயர்நீதிமன்ற நீதிபதியும் ஆன விக்ரம்ஜித் சென்.

இந்த விவகாரத்தில் கருணாநிதி அரசு எடுத்த நிலைப்பாட்டைத் தான் கவனித்துப் பார்க்க வேண்டும்.

lrg-1459-dsc_3474

புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவு தலைவர் சுப.தமிழ்ச் செல்வன் இறந்த போது, தமிழக அரசின் செய்திப் பிரிவு வழியாக, முதலமைச்சர் என்ற வகையில் கருணாநிதி எழுதி வெளியிட்ட இரங்கல் கவிதை.

எப்போதும் சிரித்திடும் முகம் எதிர்ப்புகளை எரித்திடும் நெஞ்சம்!

இளமை, இளமை, இதயமோ; இமயத்தின் வலிமை, வலிமை!

கிழச் சிங்கம் பால சிங்கம் வழியில் பழமாய்ப் பக்குவம் பெற்ற படைத் தளபதி!

உரமாய்த் தன்னையும் உரிமைப் போருக்கென உதவிய உத்தம வாலிபன் – உயிரனையான் – உடன்பிறப்பனையான்;

தமிழர் வாழும் நிலமெலாம் அவர்தம் உளமெலாம் தன்புகழ் செதுக்கிய செல்வா; எங்கு சென்றாய்?”

20 ஏப்ரல் 2009 அன்று என்டிடிவி தொலைக்காட்சி ஊடகத்திற்கு கருணாநிதி அளித்த பேட்டி.

பிரபாகரன் எனது நண்பர். நான் தீவிரவாதி அல்ல. பிரபாகரனை நான் தீவிரவாதியாக பார்க்கவில்லை. ஆனால், அவர் இயக்கத்தில் தீவிரவாதம் நுழைந்து விட்டது. தனி ஈழம் காண வேண்டும் என்ற பிரபாகரனின் கோரிக்கை நியாயமானது. ஆனால் அதற்காக அவர் கையாண்ட வழி முறைகள் சரியானவையாக இருக்க வாய்ப்பில்லை, ஏனென்றால், பிரபாகரனுக்கு தெரியாமலேயே அவர் இயக்கத்திற்குள் தீவிரவாதம் நுழைந்து விட்டது.

karuna_one_eyed_jack

இது எப்படி இருக்கிறது என்றால், இரண்டு மனைவிகள் இருப்பவர்கள் முதலமைச்சராக இருக்க முடியாது என்று ஒரு சட்டம் வந்து, அது தொடர்பாக ஒரு விசாரணை நடைபெறுகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்த விசாரணையில் கனிமொழி யார் என்று கேட்டால் கருணாநிதி என்ன கூறுவார் தெரியுமா ?

2241493328_ebcf2d56eb_o

அவர் ராசாத்தி அம்மாளின் அருந்தவப் புதல்வி. ராசாத்தி அம்மாள் காகிதப் பூ நாடகத்திலே கதாநாயகியாக நடித்தவர். அந்த நாடகத்திற்கு நான் தான் வசனம் எழுதினேன். நான் வசனம் எழுதியதாலேயே, ராசாத்தி அம்மாள் எனக்கு ரசிகை ஆகக் கூடாதா ? அவர் ரசிகை ஆனதால் காகிதப் பூ நாடகத்தில் அவர் கதாநாயகி இல்லை என்று ஆகி விடுமா ? அல்லது கனிமொழி தான் அவர் மகள் இல்லை என்று ஆகி விடுமா ? அவருக்கே கனிமொழி மகளாக இருக்கும் போது, எனக்கு மகளாகக் கூடாதா ? அவர் மகளாகும் போது, நான் மட்டும் அவருக்கு தந்தையாக ஆக முடியாதா ? வையகம் குறை கூறுமா ?

ஏதாவது புரிகிறதா ? இதுதான் கருணாநிதி. இப்போது இந்தக் கருணாநிதி அரசு, தீர்ப்பாயத்தில் எடுத்த நிலைப்பாடுகளை பார்ப்போம்.

தமிழக அரசின் க்யூ பிரிவின் சார்பாக, அசோக் குமார் என்ற எஸ்.பி. முதல் சாட்சி. விசாரணையின் போதே, புலிகள் இயக்கத்தின் மீது தடை விதிக்க வேண்டும் என்று எதன் அடிப்படையில் முடிவெடுத்தீர்கள் என்ற கேள்விக்கே உளறு உளறு என்று உளறினார். அவரை குறுக்கு விசாரணை செய்ய அனுமதித்தால், ஒரு வழி பண்ணி விடுவார்கள் என்று, நீதிபதி அவரை குறுக்கு விசாரணை செய்ய அனுமதிக்க வில்லை.

29_31_02_09_04

அடுத்த சாட்சி, மத்திய அரசின் உள்துறை இயக்குநர் பி.கே.மிஷ்ரா. அவர் தனது சாட்சியத்தின் போது, தங்களுக்கு அனைத்து ஆதாரங்களையும் வழங்கியது, தமிழக காவல் துறைதான் என்றும், புலம் பெயர்ந்த ஈழ அரசாங்கம் அமைக்கப் பட்டிருக்கிறது என்றும், அதனால் இந்தியாவுக்கு ஆபத்து என்றும் கூறினார்.

அடுத்து க்யூ பிரிவைச் சேர்ந்த ஐந்து புலனாய்வு அதிகாரிகள் விசாரிக்கப் பட்டார்கள். இவர்கள் ஐந்து பேரும், 2008 மற்றும் 2009 ஆண்டுகளில் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்று சந்தேகிக்கப் பட்டவர்கள் மீது பதியப் பட்ட வழக்குகளைப் பற்றி கூறினார்கள்.

1

சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் என்ற கூறுகிறது தெரியுமா ?

இந்தியாவின் இறையாண்மைக்கும், பிரதேச ஒருமைப்பாட்டிற்கும், குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபடும் இயக்கம், சட்ட விரோத இயக்கமாக கருதப் படும் என்று கூறுகிறது.

புலிகள் இயக்கத்தின் நோக்கம், சுதந்திர ஈழம் அமைப்பதுதான் என்று அனைவருக்கும் தெரியும். தேசியத் தலைவரின் பல்வேறு மாவீரர் நாள் உரைகளில், இந்தியாவை நேச நாடாகத் தான் பார்க்கிறோம் என்று கூறியிருக்கிறார். மேலும், புலிகள் இயக்கத்தின் நோக்கம், இந்தியாவின் ஒரு பகுதியை கவர்வது என்றால், இந்தியா எண்பதுகளில், புலிகள் இயக்கத்திற்கு ஆயுதமும் பயிற்சியும் அளித்து உதவியிருக்குமா ? திம்பு பேச்சுவார்த்தை முதல், இந்திய அமைதிப் படை நடத்திய பேச்சுவார்த்தைகள் வரை, புலிகள் இயக்கத்தை சரிசமமாக நடத்தி இந்தியா பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருக்குமா ?

ltte_delegation

இந்தியாவின் ஆக்ரமிப்பிலிருந்து அஸ்ஸாமிற்கு விடுதலை என்ற நோக்கத்தோடு தொடங்கப் பட்ட, போடோலாந்து தேசிய ஜனநாயக முன்னணியோடு, 24 மே 2005ல், இந்திய அரசாங்கம் ஒப்பந்தம் செய்து கொள்ள வில்லையா ?

இதே நோக்கத்திற்காக பாடுபடும் மற்றொரு இயக்கமான போடோ விடுதலைப் புலிகள் படையோடு, இந்திய அரசாங்கம் 2003ல் ஒப்பந்தம் செய்து கொள்ள வில்லையா ?

இந்தியாவிலிருந்து விடுதலை என்று துவங்கப் பட்ட நாகாலாந்து பொதுவுடமைக் கவுன்சிலோடு, 1975ல் ஷில்லாங் ஒப்பந்தம் போடவில்லையா இந்தியா ?

இந்தியாவிலிருந்து ஒரு பகுதியை பிரிப்பதே எங்கள் நோக்கம் என்று அறிவிக்கும் அமைப்புகளோடெல்லாம் பேச்சு வார்த்தை நடத்துவார்களாம்…. இந்தியாவின் எந்த பகுதியையும் இணைக்கும் திட்டம் சிறிதும் இல்லாத, தனி ஈழம் அமைப்பதே எங்கள் லட்சியம் என்று அறிவிக்கும், ஒரு அமைப்பை தடை செய்வார்களாம். எப்படி இருக்கிறது இவர்கள் நியாயம் ?

lrg-1488-t_s_norwaz_027

ஆக அடிப்படை எதுவுமே இல்லாமல் ஒரு தடையை விதித்து, அந்த தடையையும் நியாயப் படுத்தும் மத்திய மாநில அரசுகளின் விநோதப் போக்கை பார்த்தீர்களா ?

இந்நிலையில், புலிகள் இயக்கத்தின் ஆதரவாளர்களை அனுமதிக்க முடியாது என்ற முடிவெடுத்ததால், புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர் ஒருவர், தீர்ப்பாயத்தின் முன்பு ஆஜராக ஒரு மனுவை தனது வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் மூலமாக தாக்கல் செய்தார். அந்த மனுவோடு, இந்த தீர்ப்பாயத்தில் அரசு சார்பாக தாக்கல் செய்யப் பட்ட ஆவணங்கள் அனைத்தின் நகலும் வேண்டும் என்றும் ஒரு மனு தாக்கல் செய்யப் பட்டது.

நீதிபதி விக்ரம்ஜித் சென், இந்த இரண்டு மனுக்களையும் நிராகரித்து, புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்களை மட்டும் தான் அனுமதிக்க முடியும், முன்னாள் உறுப்பினர்களை அனுமதிக்க முடியாது என்று உத்தரவிட்டார்.

Justice_Sen.Anne-Marie

ஒரு இயக்கம் அழிந்து விட்டது என்று அறிவிப்பார்களாம். அந்த இயக்கத்தை தடை செய்வார்களாம். அதற்கு சம்பிரதாயமாக ஒரு தீர்ப்பாயம் நடத்துவார்களாம். அந்தத் தீர்ப்பாயத்தில், ஆதரவாளர்களை அனுமதிக்க மாட்டார்களாம், முன்னாள் உறுப்பினர்களையும் அனுமதிக்க மாட்டார்களாம். இதற்கு, ஒரு பூட்டிய அறையில், அரசுத் தரப்பும், தீர்ப்பாயத்தின் தலைவர்களும் கொலை கொலையா முந்திரிக்கா விளையாடி விட்டு, வெளியே வந்து விசாரணை முடிந்து விட்டது என்று அறிவித்திருக்கலாமே ?

எதற்காக அனைத்துத் தரப்புக்கும் வாய்ப்பு வழங்குவது போல, இந்த நாடகம் ?

125092-pra2

புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினரை அனுமதிக்க மறுத்து, தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப் பட்டுள்ளது. இந்த வழக்கு திங்களன்று, விசாரணைக்கு வருகிறது. (நாங்களும் விடமாட்டோமுல்ல… …. …)

இந்த விசாரணைகளை அடுத்து புது தில்லியில் இறுதிக் கட்ட வாதங்கள் நடந்தன. மத்திய அரசின் வழக்கறிஞர் சாந்திஹோக், தனது வாதத்தில் முக்கியமாக கூறியது, கொளத்தூர் மணி பேசிய பேச்சுக்களும், சீமானின் பேச்சுக்களும். பேச்சுக்கள் தொடர்பாக, உச்ச நீதிமன்றமும், உயர்நீதிமன்றங்களும், பல்வேறு தீர்ப்புகளை வழங்கியுள்ளன. அந்தத் தீர்ப்புகளில் பேச்சு என்பது, இந்திய அரசியல் அமைப்பு வழங்கியுள்ள அடிப்படை உரிமை. அதே நேரத்தில் நியாயமான கட்டுப் பாடுகளை விதிக்கலாம். ஆனால், ஒரு தடை செய்யப் பட்ட இயக்கத்திற்கு ஆதரவாகப் பேசுவது, இந்தக் கட்டுப்பாடுகளுக்குள் அடங்காது. இது போல தடை செய்யப் பட்ட இயக்கங்களுக்கு ஆதரவாகப் பேசுவதைக் கூட தடை செய்வதென்பது, அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடைப்படை உரிமைகளை மீறுவதாகும் என்று தீர்ப்பளித்துள்ளது.

pottuvaiko-prabha

சரி. புலிகள் இயக்கம் கடந்த 19 ஆண்டுகளாக இந்தியாவில் ஈடுபட்டுள்ள வன்முறைச் சம்பவங்களை கூறச் சொல்லுங்கள்…. ஆயுதங்களோடு சர்வதேச எல்லையில் சென்ற புலிகளின் படகுகளை இந்தியக் கடலோரப் பாதுகாப்புப் படை மடக்கி அழைத்து வந்த போது கூட, இந்தியப் படைகளின் மீது தாக்குதல் நடத்தப் படவில்லை தெரியுமா ? படகு முழுக்க ஆர்டிஎக்ஸ் வெடி மருந்துகள் இருந்த போதும், ஆயுதங்கள் இருந்த போதும், தாக்குதல் நடத்தப் படவில்லை.

இந்தியாவில் எந்த வன்முறைச் சம்பவங்களிலும் ஈடுபடாத ஒரு இயக்கத்தை தடை செய்வது எந்த வகையில் நியாயமாகும். ஆனால் இந்த நியாயமற்ற தடையை நியாயப் படுத்தி மத்திய அரசு வழக்கறிஞர் பேசினார்.

மாநில அரசின் வழக்கறிஞர் தனஞ்செயன் பேசிய போது, புலிகள் இயக்கம் தடை செய்யப் பட்டாலும், புலிகளின் நடவடிக்கைகள் நிற்கவே இல்லை என்று குறிப்பிட்டார். அப்போது, நகைச்சுவையாக குறிப்பிட்ட நீதிபதி பேசாமல் தடையை நீக்கி விடுங்கள் அப்போது நடவடிக்கைகள் நிற்கிறதா என்று குறிப்பிட்டார்.

மாநில அரசு வழக்கறிஞரும், கொளத்தூர் மணி மற்றும் சீமானின் புலி ஆதரவு பேச்சுக்களை புலிகள் இயக்கத்தை தடை செய்வதற்கான காரணங்களாக குறிப்பிட்டார்.

newsconfrence2

புலிகளுக்கு ஆதரவு தெரிவித்துப் பேசியது குற்றமென்றால், கவிதை எழுதுவது அதை விட பெரிய குற்றமல்லவா ? புலிகள் இயக்கத்தின் தலைவர் தீவிரவாதி அல்ல என்பது அதை விட பெரிய குற்றம் அல்லவா ? கொளத்தூர் மணியும், சீமானும் கைது செய்யப் படவேண்டியவர்கள் என்றால், கருணாநிதி மீது அல்லவா பத்து தேசியப் பாதுகாப்புச் சட்டம் பாய வேண்டும்.. … ?

ஆனால் கருணாநிதி சீமானையும், கொளத்தூர் மணியையும் கைது செய்ய உத்தரவிடும் நிலையில் உள்ளது காலத்தின் கோலமே… ….

ஈழத் தமிழர்களின் படுகொலையை மவுனச் சாமியாராக இருந்து வேடிக்கை பார்த்த குற்றத்திற்காகவே, கருணாநிதி தமிழினத் துரோகியாக வரலாற்றில் குறிப்பிடப் படுவார். ஈழத் தமிழர்களும், தன்னை தமிழன் என்று கருதும் ஒவ்வொருவனும், கருணாநிதியை மன்னிக்கவே மாட்டான்.

1karuna_croc

இப்போது தலைப்புக்கு வருவோம். இந்த தீர்ப்பாயத்தின் விசாரணை டெல்லியில் நடைபெற்ற போது, மத்திய அரசின் சார்பாக ஒரு ரகசிய ஆவணம், நீதிபதியின் பார்வைக்கு மட்டும் சமர்ப்பிக்கப் பட்டது. அந்த ஆவணத்தை பார்வையிட்ட நீதிபதி, இந்த ஆவணத்தில் என்ன ரகசியம் இருக்கிறது…. ? எதற்காக இந்த ஆவணத்தை ரகசியம் என்று கூறுகிறீர்கள்… ? இதில் ஒரு ரகசியமும் இல்லையே… என்று சராமாரிக் கேள்விகள் எழுப்பினார். மத்திய அரசு வழக்கறிஞர் இல்லை இது ரகசிய ஆவணம் தான்…. என்று பதில் கூறினார். அது என்ன ஆவணம் தெரியுமா …. ? சர்வதேச தமிழ் ஈழம் அமைத்தது தொடர்பாக இணையத்தில் வெளி வந்த தகவல்களையெல்லாம் தொகுத்து வழங்கியுள்ளார்கள். (இது மாதிரி ஆயிரம் ஆவணத்தை சவுக்கு ரெடி பண்ணும். சவுக்குக்கு தெரிந்த அளவு கூட, மத்திய உள்துறைக்கு ரகசியங்கள் ஏதும் தெரியவில்லை) நீதிபதி விக்ரம்ஜித் சென், மேலும், மத்திய உள்துறை அதிகாரியைப் பார்த்து, நீங்கள் இந்த ஆவணத்தை பார்த்தீர்களா … இதில் என்ன இருக்கிறது…. ஒருவர் பெயரும் குறிப்பிடப் படவில்லை. இதை வெளியிடுவதால் யாருக்கு என்ன ஆபத்து ஏற்படப் போகிறது… ஒரு ஜனநாயக நாட்டில் விதிவிலக்கான விஷயங்கள் மட்டுமே ரகசியமாகக் கருத வேண்டும். சகட்டு மேனிக்கு நீங்கள் அனைத்தையும் ரகசியம் என்று சீலிட முடியாது… விக்கி லீக் என்று ஏதே ரகசியங்களை வெளியிடும் வெப்சைட் இருக்கிறதாமே…. அது போல, இந்த தீர்ப்பாயத்தின் ரகசியங்கள் வெளியிடப் படுவதை நான் விரும்பவில்லை. இந்தாருங்கள் இந்த ஆவணத்தை வைத்துக் கொள்ளுங்கள். இது ரகசியமா என்பதை மறுபரிசீலனை செய்யுங்கள் என்று கூறினார். (தலைப்பு பொருத்தமா வந்துடுச்சா…. ?)


நன்றி சவுக்கு இணையம்,