Wednesday, July 20, 2011

வைகோ உண்மையில் ஒரு கோ தான்.

தமிழ் மக்களின் நலனில் அக்கறை செலுத்தும் உண்மையான ஒரு தலைவனை அடையாளம் காட்டுங்கள் என்று சொன்னால் நிச்சயமாக எல்லோருடைய ஆட்காட்டி விரலும் வைகோவுக்கு நேரகதான் இருக்கும். அரசியல் என்றால் தேர்தல், ஆட்சி, அதிகாரம் என்றில்லாமல் சர்வதேச சமுதாயத்தில் தமிழரின் நிலையை எடுத்து சொல்லும் வைகோவின் அரும்பணிக்கு மீண்டும் ஒரு தலை வணக்கம்.

ஈழத்தமிழருக்கு எதிரான கொடுமைகளை ஒரு சி.டியாக தயாரிந்துள்ளார் வைகோ. அதை ஒவ்வொரு கல்லூரி வாயிலிலும் நின்று தன் கைபட மாணவ-மாணவிகளுக்கு கொடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். இளம் சமுதாயம் ஈழத்தின் ஈரத்தை மறந்தவிடக்கூடாது. ஈழத்தாகம் என்பது தேசிய தலைவர் பிரபாகரனோடு முடிந்துபோவது அல்ல. ஈழம் அமைந்தே தீரும் என்ற உரத்த குரலை வைகோ தொடர்ந்து பதிவுசெய்வது நிச்சயம் வீனாகாது.

கோ என்றால் தலைவன் என்று பொருள். நிச்சயம் தமிழர்களின் தலைமகனுக்கான அத்தனை தகுதிகளும் வைகோவுக்கு உள்ளது. வைகோ உண்மையிலுமே ஒரு கோ தான்.

தெற்கு சூடான் அமைந்தது போல நிச்சயம் ஒருநாள் தமிழ்ஈழமும் அமையும். அதற்காக பல்வேறு ரீதிகளில் முயற்சிகள் மேற்கொள்ளும் அத்தனை உள்ளங்களுக்கும் பாராட்டுக்கள்.

கோவையின் தென்கோடி முதல் கனடா, அமெரிக்கா, இங்கிலாந்து இலங்கை என தற்போது உதித்த தென் சூடான் வரை ஒவ்வொரு நாட்டிலும் உள்ள தமிழர்கள் ஈழத்துக்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த அரும் பணியில் லட்சக்கணக்கான தமிழ் இளைஞர்கள் ஈடுபட்டுள்ளார்கள். இவர்கள் உழைப்பு நிச்சயம் வீண்போகாது. அவர்களை ஊக்குவிக்காவிட்டாலும் பரவாயில்லை தயவு செய்து தூற்றாதீர்கள்...

நன்றி தமிழ் மலர்.

1 comment:

Kotticode said...

தமிழர்களின் தாகம் தமிழ் ஈழ தாகம் . வைகோவின் முயற்சி ஒரு நாள் வெற்றி பெறும். மாவீரர்களின் கனவுகள் வீணாகாது