Wednesday, May 25, 2011

21ம் நூற்றாண்டின் இணையற்ற வசனகர்த்தாக்கள். கருணாநிதியும், கேபியும்,

உலகத்தில் காலத்திற்கு காலம் சில மனிதர்களின் வாக்கியங்கள் முக்கியத்துவம் பெறும்..... அந்த வாக்கியங்களை உதிர்ப்பவர்கள் அரசியல்வாதியாகவும், ஆன்மீகவாதியாகவும், இலக்கியவாதிகளாகவும் இருக்கலாம்.

தவிர விஞ்ஞான, விடுகதை பழமொழிகளாகக்கூட இருக்கலாம்..... இருந்தும் அவைகளில் தீர்க்கதரிசனமான சில வாக்கியக்கூறுகள் சமூகத்தில் திருப்பத்தை தோற்றுவித்தவையாக நின்று நிலைத்து, சமூகத்திற்கு வழிகாட்டியாகவும், வேறு சில எதிர்மறையான வாக்கியங்கள் நடந்து முடிந்த துன்பத்தை நினைவுப்படுத்துபவையாகவும், இலக்கியவாதிகளின் பெரும்பாலான வாக்கியங்கள் பாடங்களாகவும், மனதில் படிந்து புகழ் பெற்றிருக்கின்றன.

அந்த வகையில் இருபத்து ஓராம் நூற்றாண்டில் ஈழ மக்களின் மனதில் மறக்கமுடியாத பல வாக்கியங்கள் இருந்தாலும். கீழே தரப்படும் இரண்டு வாக்கியங்களையும் அவை உதித்த சந்தற்பங்களையும், அதன் உள்ளே மறைந்திருக்கும் நஞ்சு கலந்த சுயநலமும், அபாயமும்..... இந்தப்பதிவை எழுதத்தூண்டியது.

2009 ஆண்டின் இணையற்ற வசனமாக, மு கருணாநிதியால் எழுதி ஒத்திகை பார்க்கப்பட்டு, குறுகிய நேரம் மேடையில் நடிக்கப்பெற்று கலைந்து போயிருந்தாலும். காலத்தால் அழியாத இந்த கபடம் நிறைந்த வாக்கியமும். அது இடம்பெற்ற நேரமும் என்றும் மறக்கமுடியாதவை. வக்கிரமான மனஉணர்வோடு கருணாநிதி கக்கிய வார்த்தைகள்,
1வதாக இடம்பெறுகிறது.......

# விடுதலைப்புலிகள் யுத்தநிறுத்தம் என்று அறிவித்தபின் இலங்கையில் சிங்கள அரசு போர் நிறுத்தம் செய்யும் என்று நான் இரவு முழுவதும் ஏங்கி.... நித்திரை முழித்து.... உண்ணாமல்.... காத்திருந்தேன்??.. இருந்தும் சிங்கள அரசு போர் நிறுத்தம் செய்ய முன்வராத காரணத்தால் வேதனையுடன்....என்னுடைய தமிழ் உணர்வுக்கமைய?.... என்னையே நான் அர்ப்பணித்துக்கொள்ள??... இந்த உண்ணாவிரதத்தை ஏற்று இருந்துகொண்டிருக்கின்றேன்.கழக உடன்பிறப்புக்கள் யாரும் அவர்கள் எந்தப்பொறுப்பில் இருந்தாலும் ,அமைச்சர்களாக இருந்தாலும்,, எம் எல் ஏக்களாக இருந்தாலும்,, அவர்கள் யாரும் என்னைத் தொடர்ந்து இந்த உயிர் அற்பணிப்பு?.. உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவேண்டாமென்று கேட்டுக்கொள்ளுகிறேன்!..... நான் ஒருவன் அதற்காக என்னையே "பலி?. கொடுக்க தீர்மானித்திருக்கிறேன்"?............ என்பதை தெரிவித்துக்கொள்ளுகின்றேன்.இதை நான் மறுபடியும் மன்றாடி கெஞ்சி கேட்டுக்கொள்ளுகின்றேன்............

இந்த உலகப்பிரசித்தி பெற்ற மகா மோசமான வஞ்சகப் பொய் வார்த்தைகள் 2009 ஏப் 24 ம் திகதி மெரினா கடற்கரையில் முன்னாள் தமிழக முதல்வர் மு கருணாநிதி, ஈழத்தமிழர்களுக்காக உயிர்த்தியாகம் செய்யப்போவதாக நடித்த உண்ணாவிரத நாடகத்தின்போது உதிர்த்த மிகவும் பிரபலமான வசனம்.... .

அன்று கருணாநிதி தனது குடும்பம் புடைசூழ நாடகம் நடத்துகிறார் என்று, சிறு குழந்தைவரை புரிந்திருந்தாலும் ஈழத்தின் அவலத்தில் சிறிதாகவாவது ஒரு மாற்றம் நிகழாதா என்ற எதிர்பார்ப்பும் நப்பாசையும் பலரிடம் குடிகொண்டிருந்தது, இன்னும் ஒரு சாராரின் எண்ணம் அதிகாரத்திலிருக்கும் ஒரு அதரப் பழசான அசுரன், மேடை போட்டு நடத்தும் இந்த நாடகத்தை எதிர்க்க திராணியற்று மௌனம் காத்து பொறுத்துக் கொண்டதும் உண்டு. ஆனால் அன்று கருணாநிதியால் உதிர்க்கப்பட்ட அந்த கருமை நிறைந்த வஞ்சக வாக்கியம் மிகுந்த வலியோடு காலத்தால் அழியாத இடத்தை பெற்றிருக்கிறது.

இரண்டு வருடம் கழிந்து 2011 சட்டசபைத் தேர்தலில் மரண அடிவாங்கி பதவி பறிக்கப்பட்டு செல்லாக்காசாக ஆக்கப்பட்டு துரத்தப்பட்ட கருணாநிதி. தனது படுதோல்வி குறித்து ஊடகங்கள் கேட்ட கேள்விகளுக்கு தனது தோல்வியை ஒத்துக்கொள்ள முடியாமல் பழைய வார்த்தை ஜாலத்தை பயன்படுத்தி எனக்கு மக்கள் ஓய்வு அளித்திருக்கின்றனர் என்று அப்பாவித்தனமாக கூறும்போது இப்படியும் ஒரு மனிதனா !! என்பது தவிர வேறு எதுவும் முடியவில்லை.

கருணாநிதி தனது பதவி இருப்புக்காகவும் விடுதலைப்புலிகள் மீதும், ஈழம் மீதுமுள்ள காழ்ப்புணர்ச்சி காரணமாகவும் தொடர் நாடகங்களும் வஞ்சகங்களையும் விதைத்திருந்ததால் காலம் தாழ்ந்தாவது அவருக்கான அறுவடையும் சரியாகவே கிடைத்திருக்கிறது. தனது வாய் சாதுரியத்தால் தொடர்ந்து மக்களை ஏமாற்றி பிழைத்து வந்த கருணாநிதிக்கு மக்கள் சங்கு ஊதி பிரியாவிடை கொடுத்து அனுப்பியிருக்கின்றனர்.

சுயநலனோடு அவர் வளர்த்துவிட்ட அவரது பேரன் தயாநிதி சில வருடங்களுக்கு முன் அவருக்கே வினையாகி பிரிந்துபோன போதும் தனது பலவீனங்கள் வெளியே தெரிந்துவிடக்கூடாது என்ற உள் நோக்கத்தோடு. கட்சி உடைந்து குடும்பத்தை விட்டுப்போய் தனது இருப்பு ஆட்டம் கண்டுவிடக்கூடாது என்ற சூழ்ச்சி காரணமாக தன் குடும்பத்திலுள்ள தூதுவர்களின் உதவியுடன் தயாநிதியை ஒருங்கிணைத்து குடும்பத்தை ஒன்று சேர்த்து இதயம் இனிக்கிறது கண்கள் பனிக்கிறது என்று குதூகலித்தார்.

இருந்தும் சத்தியம் சாக்கடையில் தங்கிவிடாமல் வெளியேறிவிட்டது,.... அடிப்படையில் கருணாநிதியின் அதே குணங்கொண்ட தயாநிதியின் மனதிலிருந்த உட்பகை, பழிவாங்கும் நிலையெடுத்து, பின் விளைவை சிந்திக்காமல் தயாநிதி தன் வாய் மூலமாகவே கருணாநிதியின் கபடத் தந்திரத்தை வெளிநாட்டு ஆய்வாளர் ஒருவர் முன் பகிரங்கப்படுத்தி உடைத்திருந்தார். இதை உலகப்பிரசித்திபெற்ற விக்கிலீக்ஸ் இணையத்தளம் உலகம் முழுவதும் தரிசிக்கும் வண்ணம் கருணாநிதியின் கயமை பரிவர்த்தனை செய்யப்பட்டு நிற்கிறது.

கருணாநிதி தனது வார்த்தை ஜாலத்தில் அபார நம்பிக்கை வைத்து மக்களை ஏமாற்றிவந்த எல்லா யுக்திகளையும் அவரது வாரிசுகளின் நடத்தையால் இழந்து, இன்று முழு நிர்வாணமாக்கப்பட்டு நடைவண்டியில் தள்ளுவதற்கும் ஆளில்லாமல், பிணத்துக்கு சமமாக முடங்கவேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுவிட்டார். வரிக்கு வரி சுயமரியாதை என்று மக்களை ஏமாற்றும் கருணாநிதி சுய மரியாதை துட்டுக்கு எவ்வளவு என்று பாமரன் கேட்கும் அளவுக்கு பரிதாபமாக நிற்கிறார்.

2ஜி ஸ்பெக்ரம் முறைகேட்டால் மகள் கனிமொழியின் சிறைவாசம், மனைவி தயாளுவை சிறைநோக்கி தள்ள நீளும் சிபிஐ யின் கரங்கள் துணைவி ராசாத்தியை சுற்றி படர்ந்துள்ள குற்றச்சாட்டுக்கள், ஈழப்பழி ராசாத்தியையும் சிறைக்கதவை நோக்கி செலுத்திவிடுமோ என்ற பயம். போதாதற்கு விக்கிலீக்ஸ் மூலம் வெளிவந்திருக்கும் தயாநிதியின் வாக்குமூலம் அனைத்தும் சுற்றி நின்று தாக்குதல் நடத்துகிறது.

இலங்கையில், இறுதி யுத்தம் மும்முரமாக இடம்பெற்ற காலப்பகுதியில், உடனடியாக அதை நிறுத்துதற்கு அழுத்தம் கொடுக்க கோரி, மத்திய அமைச்சர்கள் ராஜினாமா செய்ய போவதாக அறிவித்ததும், மெரீனா கடற்கரையில் திமுக தலைவர் மு.கருணாநிதி உண்ணாவிரதமிருந்ததும், மக்களை திசை திருப்புவதற்காக போடப்பட்ட நாடகம், என அமைச்சர் தயாநிதி மாறன் கூறியுள்ளதாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.

இதையடுத்து இலங்கையில் போர் நடைபெற்ற காலப்பகுதியில், கருணாநிதி இருந்த உண்ணாவிரதம் தொடர்பில், 'த ஹிந்து' செய்தி ஊடகம், விக்கிலீக்ஸின் தகவல்களை மேற்கோள் காட்டி செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.

திமுக ஆட்சியின் போது மின்வெட்டு பிரச்சினை, அதனால் மக்களுக்கு ஏற்பட்டிருந்த கடும் கோபம் என்பவற்றை திசை திருப்புவதற்காகவும், இலங்கை தமிழர் விடயத்தில் காங்கிரஸ் கட்சியின் செயலுக்கும், தமக்கும் தொடர்பு இல்லை என்பதை சுட்டிக்காட்டுவதற்காகவுமே, மத்திய அமைச்சர்கள் ராஜினாமா செய்ய போவதாக கருணாநிதி நாடகம் நடத்தினார் என்றும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசிலிருந்து தனது எம்.பிக்களை ஒருபோதும் கருணாநிதி வாபஸ் பெறமாட்டார் என உறுதியாக தான் அறிந்ததாக தயாநிதி தெரிவித்திருந்தார். எம்.பிக்கள் ராஜினாமா செய்வதாக அறிவித்தது, அனைத்து கட்சி கூட்டம், தீர்மானம் எல்லாமே நாடகம் தான் என்று தயாநிதி தெரிவித்ததாக அந்தச்செய்தி குறிப்பிடுகிறது.

கருணாநிதி செய்த வல்வினை அனைத்தும் இப்போ அவரது வயோதிப காலத்தில் மிகவும் மோசமாக தாக்கி உளரீதியாக அவருக்கு மிகுந்த உளைச்சலையும் அவமானத்தையும் தந்திருக்கிறது. குடும்பத்திலும் கருணாநிதிக்கு ஆறுதலளிக்ககூடிய ஆதாரமும் இல்லாமல், பெருத்த இடைவெளியும் உண்டாகியிருக்கிறது.

பேராசை பித்தரான கருணாநிதி வாழும் காலத்திலும், பின் தனது மறைவுக்குப்பின்னும் தனது பெயர் சரித்திரத்தில் பேசப்படவேண்டும் என்பதில் மிகுந்த ஈடுபாடு கொண்டு தனது அரசியல் வாழ்வில் ஆற அமர சிந்தித்து பிடிகொடுக்காவண்ணம் அனைத்தையும் நகர்த்தி வந்திருக்கிறார். தெருத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு அடிப்பதுபோல மக்கள் வரிப்பணத்தை தனது குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் ஆடும் அசையா சொத்துக்களாக்கி. கட்சி உடன்பிறப்புக்கள் வாய்திறக்கக்கூடாது என்பதற்காக சிறுதொகையை அவர்களுக்கு இனாங்களாகவும் இலவசங்களாகவும் கொடுக்கும்போது அவர் தன்னை தொடர்ந்து நிலை நிறுத்துவதற்காக தனக்கான பாராட்டு விழாக்களையும் நடத்த மறந்து விடுவதில்லை.

இன்று கருணாநிதி சந்தித்துள்ள சிக்கல் சட்டத்துடன் சம்பந்தப்பட்டது மட்டுமல்ல, சரித்திரத்திலும் அவருக்கு தீராத மறுவை தீட்டிவிட்டது. செய்வதறியாத கருணாநிதி, தனது எதிர்கால அபாயத்தை உணர்ந்து கட்சி உடன்பிறப்புக்கள் கைவிட்டு போய்விடாமல் தன்வசப்படுத்தும் முகமாக முரசொலியில் புதிதாக கடிதம் எழுதி அனுதாபம் தேடும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்.

விடுபடவிருக்கும் சரித்திர பதிவிலிருந்து தப்பித்து விடமாட்டோமா என்ற காலங்கடந்த ஞானம் அவரது சுயசரிதத்தை திரும்ப எழுத வைக்குமளவுக்கு அவரை இறக்கிவிட்டிருக்கிறது.உடன்பிறப்பே என்னை எல்லோரும் திட்டுகின்றனர். என் சுயசரிதத்தின் முன்னோட்டமாக இதை எடுத்து நான் வந்த பாதையை அறிந்துகொள். என்று கருணாநிதி அழுத வரிகள் சென்றவார முரசொலியில் சிரிக்கிறது. கருணாநிதியின் பழைய புளுகான "நெஞ்சுக்கு நீதி" பதிப்பும் புறந்தள்ளப்பட்டுவிடுமோ என்கிற பயம் இன்றய சுயசரிதத்தின் முன்னோட்டம்.

வரலாற்றில் நளன் தமயந்தி சரித்திரம், நரகாசுரன் சரித்திரம், ஓலைச்சுவடி கல்வெட்டாகவும். சமீபத்திய ஹிட்லர் முசோலினி வரலாறு. கறுப்பு வெள்ளை ஊமைப்படங்களாகவும் சரித்திரத்தில் பதிவிடப்பட்டுள்ளபோது ஈழப்படுகொலைகளும் நிச்சியம் சரித்திரத்தில் இடம்பெறும். அந்தக்காட்சிகளில் கருணாநிதியின் நாடகக் காட்சிகளும் தவிர்க்கமுடியாமல் இணைந்தேயிருக்கும்.

#
இரண்டாவது உலகப்பிரசித்தி பெற்ற இருபத்தோராம் நூற்றாண்டு வாக்கியமாக.
கேபி, எனப்படும் செல்வராசா பத்மநாதன், கூறிய சில சொற்றொடர்கள் சரித்திரத்தில் முக்கியத்துவம் பெறாவிட்டாலும் இந்த வார்த்தையை பிரயோகித்தவர் ஈழச்சரித்திரத்தில் ஒருசில பத்திகளில் நிச்சியம் இடம் பெறுவார்.

சமீபத்தில் வட இந்திய தொலைக்காட்சி ஒன்றுக்கு றோவிடம் கூலி வாங்கிக்கொண்டு ராஜபக்க்ஷவையும் இந்திய மத்திய காங்கிரஸ் அரசை திருப்த்திப்படுத்தும் நோக்கத்தோடு கேபி எனப்படுக் செல்வராசா பத்மநாதன் வழங்கிய செவ்வியில்.

"தந்தையை இழந்த ராஜீவின் குழந்தைகளின் வலி எங்களுக்குப் புரிகிறது. தயவுசெய்து எங்களை மன்னித்து விடுங்கள். ராஜிவ் காந்தி குடும்பத்தினரிடம் பிரபாகரனின் தவறுக்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்"?? என்று தமிழர்களோடு எந்த தொடர்புமற்று தமிழினத்துக்கு வில்லங்கமாக இருக்கும் கேபி என்ற பத்மநாதன் தமிழினத்தின் தலைவனாக தன்னை தானே சிங்காரித்து மகிழ்ந்திருக்கிறார்.

சிங்கள ராஜபக்க்ஷ குடும்பத்தின் காலடியில் கிடந்து நாய்க்குட்டிக்கு நாகபாம்பு பால் கொடுத்தது தப்புத்தான். என்று சூனியப்பிரதேசத்தில் துப்பறிந்து செவ்வி வழங்கி,தேவையற்ற விசமங்களை சிங்களவனுக்காக பாடி இந்திக்காரனின் தொலைக்காட்சிக்கு அனுப்பியிருக்கிறர்.

கிளிநொச்சி ஜெயபுரத்தில் தமிழன் கால் பதித்த தெருவுக்கு சிங்கள ராஜபக்க்ஷவின் பெயர் வைத்து பந்தோபஸ்து போட்டிருப்பதை இவருக்கு தெரியவில்லை. ஈழத்தில் அழிக்கப்பட்ட ஐம்பதினாயிரத்துக்கும் அதிகமான குழந்தைகள் இவரது கண்ணுக்கு புலப்படாமல் சோனியாவின் குழந்தைகளுக்காக மன்னிப்பு கேக்கிறாராம். இவரை யார் விடுதலைப்புலிகளுடன் இணைத்து வைத்திருக்கிறர்கள் அல்லது தமிழருடன்தான் இவரது தொண்டும் தொடர்பாடலும் என்ன????

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியை விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனும், அதன் உளவுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மானும்தான் திட்டமிட்டு கொன்றனர். அது பிரபாகரனால் நன்கு திட்டமிட்டு செய்யப்பட்டது. இது அனைவருக்கும் தெரிந்த உண்மை. இந்திய மக்களுக்கும், குறிப்பாக ராஜிவ் காந்தி குடும்பத்தினருக்கும் நான் கூற விரும்புவது என்னவென்றால் பிரபாகரனின் தவறுக்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இந்த நகைச்சுவை காட்சியை இந்திய அரசின் அனுசரணையுடன் வடக்கத்திய ரிவி சனல் ஒன்று ஒளிபரப்பியது.

அத்துடன் நின்றுவிடாது கேபி தனது கற்பனையில் உதித்த இன்னும் பல நகைச்சுவைகளை இந்தச்சந்தற்பத்தில் தெரிவித்தார்.வாய்ப்பு கிடைத்திருந்தால் முதல்வர் ஜெயலலிதாவை விடுதலைப் புலிகள் கொன்றிருப்பர். அதற்காக அவர்கள் பெரிதும் முயன்றனர். ஆனால் அவர்களால் அந்தச் சதியில் வெற்றி பெற முடியவில்லை என்றும் கேபி கூறியுள்ளார்.

மலேசியாவில் வைத்து கைது செய்யப்பட்டதாக கூறப்படும் "ஆறாடியான" கே.பி. இப்போது இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு சேவை செய்யும் நெருக்கமானவராகிவிட்ட வாரக்குடியாவார். இந் நிலையில் இந்தியத் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில்,முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியை விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனும், அதன் உளவுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மானும்தான் திட்டமிட்டு கொன்றனர். அது பிரபாகரனால் நன்கு திட்டமிட்டு செய்யப்பட்டது. இது அனைவருக்கும் தெரிந்த உண்மை. இந்திய மக்களுக்கும், குறிப்பாக ராஜிவ் காந்தி குடும்பத்தினருக்கும் நான் கூற விரும்புவது என்னவென்றால் பிரபாகரனின் தவறுக்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

தந்தையை இழந்த ராஜீவின் குழந்தைகளின் வலி எங்களுக்குப் புரிகிறது. தயவுசெய்து எங்களை மன்னித்து விடுங்கள். எங்கள் மக்கள் இப்போது சிக்கலில் உள்ளனர். மனிதர்களாக வாழ எங்களுக்கு உதவி செய்யுங்கள். போரில் நிறைய இழந்துவிட்டோம், (போரை இவர்தான் முன்நின்று நடத்தியதுபோல) இனி நாங்கள் இழப்பதற்கு எதுமில்லை.???(இவர் தனது இரண்டு பிள்ளைகளும் தாய் தந்தையும் போரில் பலி குடுத்திட்டவர் போல)

எப்போதுமே விடுதலைப் புலிகளுக்கு எதிரான நிலை கொண்டவர் ஜெயலலிதா. இதனால் வாய்ப்பு கிடைத்தால் அவரையும் புலிகள் கொலை செய்திருப்பர். அதற்காக அவர்கள் எவ்வளவோ முயன்றனர். ஆனால் சில சமயம் அவர்களால் வெற்றி பெற முடிந்ததில்லை என்று கூறியுள்ளார்.

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவையும் ஈழத்தமிழினத்தையும், கேபி ஒரு இக்கட்டான நிலைக்குள் தள்ளுவது மட்டுமல்லாமல் புறந்தள்ளப்பட்டுள்ள ராஜீவ் காந்தி கொலையை நியாயப்படுத்துவதற்கு கேபி துணையோடு றோவும் காங்கிரஸ் அரசும் முனைப்பு கொண்டு திரைமறைவில் நிற்பது தெரிகிறது. இதில் கேபி குறிப்பிட்டவை எவரும் கணக்கிலெடுக்கப்போவதில்லை. ஆனால் தமிழ்நாட்டில் மக்கள் மத்தியில் ஒரு அசமந்தத்தையும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு தேவையற்ற விமர்சனத்தையும் உண்டுபண்ணுவதே இவர்களின் நோக்கமாகும்.

ராஜபக்க்ஷவிற்கு எதிரான நிலையை ஜெயலலிதா அவர்கள் சமீபத்தில் எடுத்து ராஜபக்சேவை சர்வதேச நீதிமன்றத்தின் முன் நிறுத்த இந்திய அரசு முயல வேண்டும். தமிழர்கள் கவுரவமான வாழ்வை அமைத்துக் கொள்ள இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும். இலங்கை அரசு ஒத்துழைக்க மறுத்தால் இலங்கை மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க வேண்டும். ராஜபக்க்ஷவை போர்க்குற்ற விசாரணைக்கு உட்படுத்தவேண்டும் என்று கறாராக தெரிவித்திருந்தார்.

இந்த மனநிலையில் முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்து இருந்து வருவாராக இருந்தால் தமிழக மக்களின் ஆதரவு முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு அதிகரித்துவிடும். என்பதை கருதி றோ ஏற்படுத்த இருக்கும் சதியே கேபியின் திடீர் நாய்க்குட்டி பாம்புக்கதை. என்பதை அறிந்துகொள்ளுவது பெரிய சிரமமான காரியமல்ல.

முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் ஈழத்தமிழர் ஆதரவு நிலைப்பாடு வலுப்பெற்றால், தமிழகத்திலுள்ள அதிகமான ஈழத்தமிழர் ஆதரவு அமைப்புக்கள், கட்சிகள் துணிச்சலுடன் வீதிக்கு வந்து மத்திய அரசுக்கு எதிரான போராட்டங்களை நடத்த முன் நிற்கும். சீமான், வைகோ, போன்றோரது கட்சிகள் சீக்கிரம் தலையெடுத்துவிடும் நிலை உருவாகும். அதனால் காங்கிரஸ் காணாமல் போய்விடும் அபாயமும் உண்டாகும். ஆட்சியிலிருக்கும் காங்கிரஸின் மத்திய அரசுக்கு நெருக்கடிகள் அதிகரித்து ராஜபக்க்ஷவுக்கு எதிரான நிலையை எடுக்க வேண்டிய சூழ்நிலைக்கு சூழல் உருவாகிவிடும். இந்தியாதான் போர் குற்றத்தின் சூத்திரதாரி என்பதை இலங்கை அரசு சர்வதேச சமூகத்திற்கு காட்டிக்கொடுத்துவிடும் அபாயமும் இருப்பதால். ஆரம்பத்திலேயே குள்ளநரி வேலைபார்க்கவேண்டிய தேவை றோவுக்கு உண்டு அதற்காக கண்டுபிடிக்கப்பட்ட ஆறாடிக் காயாக கேபி தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்.

எனவே இப்போதே ஜெயலலிதாவுக்கும் ஈழத்தமிழினத்துக்குமிடையில் இப்படி ஒரு வெடிப்பை உண்டாக்கி முடிச்சைப் போட்டு நகர்வுகளை தமக்கு சாதகமாக நகர்த்துவதற்கான தந்தரமாகவும் கேபி, றோ, இந்திய மத்திய அரசு, சிங்கள ராஜபக்க்ஷ அரசு. ஆகியவைகளின் முன்னெச்சரிக்கை திட்டமாக கேபியின் செவ்வியை எடுத்துக்கொள்ளலாம்.

ஆனாலும் வெற்றி கொள்ளப்போவது என்னவோ மறைந்த தியாக மாவீரர்களின் ஈடில்லா எண்ணக் கனவும் ,, படுகொலை செய்யப்பட்டு அனாதரவாக அலையும் எண்ணிலடங்கா என் உற்றார் பெற்றோரின் சாக்காட்டு சாபத்தின் விமோசனமும்தான்.

ஈழதேசம் இணையத்திற்காக.
கனகதரன்.

Sunday, May 22, 2011

சமன்பாடு




வானம் சூல்கொண்டு
குடையை ஞாபகப்படுத்துகிறது.
மழைக்கால அறிகுறிகள்.
முகில் கூட்டங்கள் அங்கும் இங்கும்
இடம்மாறி,
பூதம் யானை பூனை போல குதூகலமாக.
சிரித்து சம்பாசிக்கின்றன.

வர்ண மலர்கள் மகிழ்வுடன்
நெட்டவிழ்த்து
வண்ணக்கோலமாகி மண் மணக்கிறது.
தூரத்தே கருகிய வாடையும்
கூடவே கலந்து உறுத்துகிறது.

காற்று சற்று வேகம் கூடி
அதன் பாட்டுக்கு சுற்றித்திரிகிறது.
ஊளை சத்தம் ஒன்று மட்டும்
மிக மிக வித்தியாசமாக
உடைந்த கரகரப்புடன்
முகாரி ராகத்தில்
மந்தாரமாக மேட்டு தெருவில்
தொடர்ந்து கேட்டுக்கொண்டேயிருக்கிறது.

உத்திரத்து பரணில்
நீண்டநாள் பாவனை முடிந்து கிடந்த
உருட்டுக்கட்டைகளும்
வெட்டரிவாள்களும்
கிரந்தம் எழுதிய தாள் கட்டுகளும்
சிலந்தி வலையின் சிக்கிடுக்கில்
மறு பாவனைக்கு தயாராக.

கீழே அசை போட்டுக்கொண்டு,
திமிங்கிலத்தின் திரட்சியோடு
பெண் நாய்களுடன் புணர்ச்சியில்
ஏகபோகியாகிக்கிடந்த கிழட்டு நாய்
முட்பொறியில் சிக்கி அடிபட்டு
காலில் முள் தைத்த வெப்பத்தில்
ஊர் அமைதி கெட்டுவிட்டதாக
ஊளையிடுகிறது,, உரக்க குரைக்கிறது.

ஆனால்
எவரும் சட்டை செய்ததாக தெரியவில்லை..
மக்கள் தம்பாட்டில் ஆரவாரப்பட்டு
களிப்புடன்
வாய்வழி செய்தியாக ஏதோ
பரிமாறிக்கொண்டிருக்கின்றனர்.
கலைஞர் ரிவி செய்தியை நிறுத்திவிட்டு
மானாட மயிலாட
மறு ஒளிபரப்பு செய்துகொண்டிருக்கிறது.

ஆடும் மாடும் தமது மொழிகளில்
குரலெடுத்து கும்மாளமிடுகின்றன.
கன்றுகளும், குட்டிகளும்,
காலை'யை விட்டு வெளியேறி
ஆற்றங்கரையிலும் புல்வெளியிலும்
மேய்ச்சல் மறந்த நிலையில்.

கோ(வா)லபுரமும் சிஐடி நகரும்
பெரும்பான்மையை இழந்து,,
ஏகாந்தத்தின் உச்ச பிடிக்குள்.
சாவீட்டின் நெடியுடன்,,.

பால்க்காரன் பாலை வீசிவிட்டு
சிந்தனையுடன்
திருப்தியில்லாமல் திரும்பிக்கொண்டிருக்கிறான்.
தனியே ஓரத்தில்
சக்கர நாற்காலி ஒன்று
தள்ள ஆளில்லாமல் தனித்துக்கிடக்கிறது.

=========================== ஊர்க்குருவி ========================

Wednesday, May 18, 2011

மே 18

இன்று ஈழத்தமிழினத்தின் "கரிநாள்"
காலத்தால் மறக்க முடியாத
கறுப்புத்தினம்!!
முள்ளிவாய்க்கால் மூர்க்கமான
குண்டு மழைக்குள்
வஞ்சகமாக முக்குளித்த
இரண்டாவது குருதி வருடம்!!!.

சொல்லில் வடிக்க முடியாத
சிறுமை கொண்டு
இந்தியாவும் இலங்கையும்
ஈழத்தமிழினத்துக்கு
ஈமைக்கிரியை செய்ய முனைந்த
வெட்கக் கேட்டின்
இரண்டாம் ஆண்டு நினைவு நாள்.

ஈழத்தமிழினத்தின் எதிரில் தோன்றிய
இன்னல் மிகுந்த பெருத்த
கரிய சுவடு.
செறிவான குண்டு மழையால்
நீலவானமும் நிலமும்
நிறம் மாறிய நிமிடங்கள்.

ஈயும் மண்புழுவும் எறும்பும்
இயற்கை தாவரங்களும்
எரிந்துபோன பொட்டல் வெளியில்.
இரசாயன கலவையால்
மானுடம் வதை கொள்ளப்பட்ட
வரலாறு தினம்.

நேற்றுப்போல நினைவில் ,
நெஞ்சு வெந்து
நினைவில் இருந்து விடுபட மறுக்கும்
நிரந்தரமான வலி.

மானுடம் மரணப்படுக்கையில்
வீழ்த்தப்பட்டு
ஈழத்து வீரத்தை உலகம்
ஏலம் கூவிய பொழுதுகள்.

முள்ளிவாய்க்கால்
செயற்கை எரிமலையாய் மாற்றப்பட்டு .
கால கொடு கயமையினால்
கலி கொண்டு
மானுடம் காவு கொள்ளப்பட்ட "கரிநாள்".

சூழ்ச்சியில் சூனியத்தால்
சுற்றி கட்டப்பட்டு
சுவாசிக்க
காற்றும் நுழைய முடியாத
கனத்த பொழுதுகள்.

இன்றும்
நெஞ்சு கனலாக தகிக்கிறது.
பாலுக்கு அழுத பிஞ்சுகளும்.
பதை பதைத்த தாய்மாரும்.
வேல் கொண்டு ஆடிய பெண்புலியும்.
விடுதலை வேட்கை கொண்ட வீரனும்.
வஞ்சகத்தின் வலையில்
காவுகொள்ளப்பட்ட "கரிநாள்"

எரிந்த சுவாலை ஓய்ந்து போனாலும்.
தனலும்
தகதகக்கும்
வெப்பமும்
காலத்தால் அழியாத கயமையும்.
நினைவில் ஆழமாக.
நித்திய வேதனையாக.

இருந்தும்
இன்று நாங்கள்
எரிந்த சாம்பலிலிருந்து
எழுந்து வந்துகொண்டிருக்கிறோம்.
சாவிலும் வாழ்வோம்.
சரித்திரம் மட்டும்தான்
எங்களை தீண்ட முடியும்.

தீனிக்கும்
திரை மூடிய புணர்ச்சிக்கும்
வீணான வெளிச்ச விளம்பரத்துக்கும்
நாங்கள் காலத்திலும்
அடிபணியப்போவதில்லை.

நாம்
வீழுவோம் என்றா நினைத்திருந்தாய்
வினை தந்த விழலை விட்டு
மாழுவோம் என்று நினைத்தாயா.

எம்
மண் தமிழீழம் காணும்வரை
சோருவோம் என்று நினைத்தாயா.

ஈழத்தின் கொடி வான் உயர்ந்து
தேசம் விடியும் வரை
நெருப்பாகி மாழுவேன் என்று
வேண்டுமானால்
நீரில் எழுதிக்கொள்.

மூலம்அறியாமல்..
என் தலைவனின் விவேகம் அறியாமல்.
விடுதலைப்புலிகளின் வேகம் அறியாமல்.
காலப்பதிவில்
காலியாகி விட்டாயே....

நான்கு சுவர்களுக்குள் போடும்
சுலோகமென்றா நினைத்தாய்..
ஈழம்
பாழாகும் என்று நினைத்தாயோ.
கனவென்று
மாற்றிக்கொள்.
தேசம் விடியும்வரை.
திண்ணமது.
மண் மேட்டிலிருந்தும்
சாம்பலிலிருந்தும்
மறுபடியும் எழுவோம்..

வானிடை விரைந்து வந்து வழிநீளம்
ஷெல்லும் வீழ.
மானிடக்குடிகள்மீது மழையென
குண்டும் பாய-மேனிகள்
சிதறி ரத்த வெள்ளமாய் சகதியாயினும்
நாம் என்றும் புலியாய் நின்று-கொடியை
நாட்டுவோம் ஈழ மண்ணில்.

ஊர்க்குருவி

நன்றி சவுக்கு

Monday, May 16, 2011

தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் கபட செயற்பாட்டை புதிய முதல்வர் ஜெயலலிதா பரிசீலிப்பாரா?

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த 2011 க்கான சட்டசபைத்தேர்தல் தமிழகத்து நவீன எட்டப்பர் கருணாநிதிக்கும், துரோகி திருமாவளவனுக்கும், கொள்கையற்ற ராமதாஸ் அவர்களுக்கும், கூட்டாளிகாங்கிரஸ்க்கும் காலத்திற்கும் மறக்க முடியாத மரண அடியுடன்,, ஒரு நல்ல படிப்பினையையும் கொடுத்திருக்கிறது. ஒட்டுமொத்த தமிழினம் எதிர்பார்த்தபடி தமிழகமண் ஒரு ஆட்சி மாற்றத்தையும் கண்டிருக்கிறது. அராஜகத்துக்கும் மக்கள் விரோதப்போக்கிற்கும் கிடைத்த தண்டனையாகவும் ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றியாகவும் இதை எடுத்துக்கொள்ளலாம்.

கருணாநிதியின் தலைமையில் உருவான இந்தக்கூட்டணியின் தோல்விக்கான காரணம் என்ன??. ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணத்தை தத்தம் வசதிக்கு எடுத்து வைத்தாலும் வரலாறு காணாத இந்தப்படுதோல்வி கருணாநிதியின் அரசியல் வாழ்வின் முடிந்த முடிவாக காலத்தால் அடையாளப்படுத்தப்பட்டிருப்பது, மற்றவர்களை விடவும் கருணாநிதியை மிகவும் சிந்திக்க வைத்திருக்கும்.

கருணாநிதியின் குடும்ப ஆதிக்கமும் ஊழலும் நிர்வாக சீர்கேடுகளும் மக்களை வெறுப்பிற்கு கொண்டு சென்றிருந்தாலும், ஈழத்தமிழினத்தின் அழிவுக்கு கருணாநிதி துணைபோனதும் ஆடிய நாடகங்களும் கருணாநிதியை மக்கள் வெறுத்ததற்கு மிக முக்கியமான ஒரு காரணியாக கொள்ளலாம்.

எது எப்படியிருப்பினும் மிகமோசமான சர்வாதிகார "சுயநல குடும்ப" ஆக்கிரமிப்பிலிருந்து தமிழக மக்களுக்கு விடுதலை கிடைத்திருக்கிறது. தொடர்ந்து பதவி ஏற்று ஆட்சி செய்ய இருக்கும் அ இ அ தி மு க, ஜெயலலிதா தலைமையிலான அரசு, தமிழக மக்களின் ஈழ ஆதரவை, இதுவரை அவர்கள் வெளிப்படுத்திய எண்ண ஓட்டத்தை எப்படி கையாளப்போகிறது எப்பேற்ப்பட்ட மாறுதலை உண்டுபண்ணப்போகிறதென்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

60 வருட தமிழக அரசியல் வரலாற்றில் திராவிடக்கட்சிகள் "ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்" என்று ஒரு பழைய பழங்கதையும் உண்டு. இருந்தாலும் உலக மாறுதலும், மக்களின் கல்வியறிவு, அரசியலறிவு வளர்ச்சியும், பட்டுணர்ந்த பாடங்களும் பெருத்த அனுபவசாலியான அரசியல் சாணக்கியர் கருணாநிதி தனது எதேச்சதிகாரப்போக்கால் ஏற்படுத்திக்கொண்ட பெருவீழ்ச்சியும், புதிதாக அரசமைக்க இருக்கும் ஜெயலலிதாவுக்கு ஒரு நல்ல அனுபவ பாடத்தையும் எச்சரிக்கையையும் விட்டுச்சென்றிருக்கிறது.

மக்கள் விரும்பிய ஜனநாயகத்துக்கு கிடைத்த ஒரு வெற்றியாக இதை எடுத்துக்கொண்டாலும், புதிதாக அமையவிருக்கும் அரசு, அடிப்படையில் மாற்றத்தை உண்டுபண்ணி புதிய சிந்தனைகளை உட்புகுத்தி பழய தமிழ்நாட்டின் அரசியல் கலாச்சாரத்தை தவிர்த்து வித்தியாசப்பட்டு ஏதாவது செய்ய முணையாவிட்டால் மீண்டும் ஐந்துவருடங்களில் (ஐயா இறந்துபோனாலும்?), அவரது வாய்ப்பாட்டை பாடமாக்கி அதே வாய்ப்பாட்டை வேதவாக்காக நினைத்துக்கொண்டிருக்கும் அவரது வாரிசுகள் திரும்பவும் தமிழ்நாட்டு சட்டமன்றத்தில் புதிய கணக்குப்போட வருவது தவிர்க்கமுடியாமல்ப்போகலாம்.

இன்று ஜெயலலிதா அம்மையாரை தமிழகமக்கள் வேண்டி வரவேற்று வெற்றிபெற வைத்திருக்கிறார்கள் என்று 100% சொல்லமுடியாது. தீயசக்தியான கருணாநிதியை அப்புறப்படுத்தவேண்டிய காலத்தின் கட்டாயம்.. மக்களை மாற்றி வாக்களிக்க வைத்து அம்மையாரை பெருவெற்றி கொள்ள வைத்திருக்கிறது. இந்த யதார்த்தம் சாதாரண பாமரனுக்கும் புரியும். ஜெயலலிதா அவர்களின் கட்சி மிகப்பெரிய வெற்றி பெற்றிருந்தாலும் பதவி ஏற்பதற்கு முன்பே ஜெயலலிதா இந்த யதார்த்தத்தை உணராமலோ அல்லது வேண்டுமென்றோ மறுத்திருக்கிறார்.

ஜெயலலிதா அவர்கள் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்தபோது இன்று அதிமுக பெற்றிருக்கும் இந்த வெற்றி கருணாநிதிக்கு எதிராக எழுந்த அலையால் கிடைத்த வெற்றியல்ல ஏற்கெனவே 2006 க்கு முன்பும் அதற்கு முன்னய ஆட்சியிலும் அதிமுக செய்த சேவைகளை மனதில்க்கொண்டு மக்கள் வாக்களித்திருக்கின்றனர். என்று தனது வெற்றி பற்றி குறிப்பிட்டிருக்கிறார். அம்மாவின் அன்றய ஆட்சி அருமையானதாக இருந்திருந்தால் 2006 ஏன் ஆட்சியை இழக்கவேண்டி வந்தது என்பதை அவர் உணரவில்லை. அதுபற்றி அவர் எதுவும் கூறவுமில்லை. (தமிழ்நாட்டில் இரண்டு ஐந்தாண்டுகள் எம்ஜீஆர் தவிர எவரும் முதலமைச்சராக பதவி வகித்ததில்லை.) ஜெயலலிதா அவர்களின் இந்தப்போக்கு நிச்சயம் மாறவேண்டும். நிதானமாக மக்களின் மனநிலையை அவர் புரிந்து கொண்டு பொதுநலனுடன் நல்லது செய்வார்கள் என்பதே கருணாநிதியின் கயமை ஆட்சியிலிருந்து தப்பித்து அம்மாவை ஆதரித்த மக்களின் பேரவாவாக இருக்கும்.

ஜெயலலிதா அடிப்படையில் ஆணவப்போக்குடையவர் என்றும் அனுசரித்து போகத்தெரியாதவர் என்றும் ஏற்கெனவே அறியப்பட்டவர். ஆனால் தமிழ்நாட்டின் அதிகார வர்க்கமான (எம் எல் ஏ. மந்திரிகள் அதிகாரிகள்) ஆகியோர்களை கட்டுக்குள் வைத்திருப்பதற்கு ஜெயலலிதா அவர்களின் கடும்போக்கு சரியானது என்று எடுத்துக்கொண்டாலும், நாட்டு நலனை முன்னிலைப்படுத்தி சரி பிழைகளை பகுத்துணர்ந்து வகுத்துக்கொள்ளாமல் தாந்தோன்றித்தனமாக ஜெயலலிதா அவர்கள் எடுத்த முடிவுகள் முன்னைய ஆட்சிக்காலத்தில் பல இடங்களில் அவருக்கும் அவர்சார்ந்த அரசுக்கும் அவப்பெயரும் அதனால் நிர்வாகத்தில் பெருத்த சீர்கேடுகளும் உண்டாகி சிக்கல்களை பல தருணங்களில் உருவாகி மக்கள் பெரு அவஸ்த்தைக்குள்ளானதுண்டு.

சான்றாக அதிகாரிகள் அரசியல்வாதிகளின் அசமந்தப்போக்கால் கும்பகோணம் மஹாமகத்தின்போது நீரில் மாண்ட உயிர்ப்பலிகள், தன்னிச்சையாக முளைத்து பணமே குறியாக இயங்கிய பாதுகாப்பற்ற உள ஊனமுற்றோர் காப்பக விடுதியில் தீவிபத்து ஏற்பட்டு பலர் எரிந்த சம்பவங்கள், 2004 கும்பகோணத்தில் சீர்கேடான தனியார் பெண்குழந்தைகள் பள்ளியில் தீ விபத்து ஏற்பட்டு குழந்தைகள் கருகி மாண்ட நிகழ்வுகள் மறந்துபோக முடியாது.

பொது வாழ்வுக்கு தம்மை அற்பணிப்பவர்கள் மக்களை அவதிக்குள்ளாகாத வகையில் எளிமையாக நடந்து கொள்ள வேண்டிய கடப்பாடும் உண்டு. தாம் எடுக்கும் தப்பான முடிவுகளால் உருவாகி வரும் இடர்கள் அனைத்தையும் தாமே பொறுப்பெடுத்து சீர்செய்யவேண்டிய கட்டாயமும் உண்டு. நடைமுறையில் கண்ட நன்மை தீமைகளை சீர்தூக்கிப்பார்த்து திட்டங்களை வகுக்கவேண்டிய தார்மீகப்பொறுப்பும் பொதுவாழ்வில் கால் எடுத்துவைக்கும் அரசியல்வாதிகளுக்குண்டு. தவறுகள் அனைத்தையும் மறுத்து அல்லது மூடி மறைத்து சிறு குழந்தைகள் போல் நியாயப்படுத்தும் மனநிலையை இவர்கள் நிறுத்தவேண்டும், தவறை தவறாகவும் சரியானதை சரியானதாகவும் ஏற்றுக்கொள்ள பழகிக்கொள்ளவேண்டும்.

ஜெயலலிதா அவர்களையும் கருணாநிதியையும் எடுத்துக்கொண்டால். இருவரும் பிடிவாதத்திலும்சரி மற்றய விடயங்களிலும் சரி கொஞ்சமும் கூடிக்குறைந்தவர்கள் அல்ல. ஜெயலலிதா தனக்கு சாதகமாக பட்டதை எவரையும் கலந்து ஆலோசிக்காமல் எந்தக்குற்ற உணர்வுமில்லாமல் அப்படியே சட்டமூலம்போல் "உள்நோக்கமில்லாமல்" நிறைவேற்ற முனைப்புக்காட்டுபவர். ஆனால் கருணாநிதி அப்படிப்பட்டவரல்ல. கருணாநிதியின் திட்டத்தில் நிச்சியம் உள்நோக்கமும் சுயநலமும் நிறைந்திருக்கும். போடப்போகும் திட்டத்தால் ஏற்படப்போகும் எதிர்விளைவு எப்படியிருக்கும் என்பதை நன்கு புரிந்துகொண்டு சமயோசிதமாக தப்பிப்பதற்கான முன்னேற்பாடுகளுடன். மிக அமைதியாக காய் நகர்த்துவதில் வல்லவர். தனக்கு சாதகமானவர்களையும் தன் கருத்தில் முரண்பட்டவர்களையும் தந்திரமாக தன்முன் இருத்தி வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போன்று
எதிரணியையும் வீழ்த்தி ஒப்புதல் பெறுவதுபோன்ற தோற்றத்தை மிக தந்தரமாக அப்பாவித்தனமாக செய்து காரியத்தை நிறைவேற்றி சாதித்து முடிப்பார். ஆராய்ந்து பார்த்தால் ஜெயலலிதாவிடம் நான் என்ற ஆணவமும் கருணாநிதியிடம் நரியைவிட மோசமான தந்திரமும் இருப்பதைக்காணலாம்.

இருவரும் தம்மை முன்னிலைப்படுத்துவதையே குறியாக கொண்டிருக்கின்றனர். இவை மனித இயல்பானதாக இருந்தாலும். ஜெயலலிதா படாடோபமாக வாழ்க்கை நடத்துவதாக மக்கள் உணரவேண்டும் என்பதில் கருணாநிதி மிகுந்த கவனம் செலுத்தி தன்னை சாமானியனாக காட்டுவதற்கு முயலுவதை காணலாம். ஆனால் ஜெயலலிதாவையும் விட தன்னை முன்னிலைப்படுத்துவதில் காலத்தையும் பொதுப்பொருளையும் செலவளிப்பவர் கருணாநிதிதான் என்ற உண்மையை பாமரன் அறிந்திருக்கவில்லை. ஒரு கோடு போட்டுவிட்டு பக்கத்தில் இன்னும் ஒரு சிறிய ஒரு கோடு போட்டுவிட்டால் ஏற்கெனவே இருந்த சாதாரண கோடு பெரிய கோடுபோல் காட்டி உணர்த்துவதுபோல் ஜெயலலிதாவை சிறுமைப்படுத்தும் விடயத்தில் கருணாநிதியின் செயற்பாடு மிகவும் நுணுக்கமாகவிருக்கும். ஊடுருவி நுண்ணறிவு கொண்டு பார்த்தாலன்றி கருணாநிதியின் தந்திரம் எவராலும் இலகுவில் அறிந்துகொள்ள முடியாதது .

பாராட்டு விழாக்களையும் சினிமா விழா அரங்குகளையும் கருணாநிதி சரியாக விரும்பி பயன்படுத்துவதுபோல் இந்திய அரசியல்வாதிகள் எவரும் பயன்படுத்துவதில்லை. ஜெயலலிதா அப்படியான நிகழ்ச்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை. மற்றவர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதால் தனது முக்கியத்துவம் குறைந்து போகும் என்ற அச்ச எண்ணம் அவரிடம் முன் நிற்பதே காரணமாகவும் இருக்கக்கூடும்.

தமிழ்நாட்டு பாமரன் அடிப்படையில் உணர்வுள்ளவன், உணர்ச்சி வசப்படக்கூடியவனும் கூட, இந்த பலவீனத்தை சரியாகப்பயன்படுத்தும் தமிழகத்து சினிமா கூத்தாடிகள் தம்மை வானத்து மனிதர்கள்போல் பாவனைகாட்டி பாமரனை ஏமாற்றி பிழைப்பதுண்டு. இப்படி மக்கள் ஏமாறிப்போவதற்கு ஒரு காரணமும் உண்டு. மறைந்த முதலமைச்சர் எம் ஜீ ஆர் அவர்கள் ஒரு மனிதாபிமானியாகவும் சினிமா நடிகராகவும் அரசியல்வாதியாகவும் சமூக நலன்விரும்பியாகவும் பிறந்து வாழ்ந்ததுண்டு. எம்ஜீஆர் அவர்கள் தனக்கென்று வாழாமல் மக்களுக்காக வாழ்ந்து தன்னை அர்ப்பணித்ததால் நடிகரான எம்ஜீஆர் அவர்களால் ஈர்க்கப்பட்ட பாமர மக்கள், சினிமாவில் வீரனாகவும் மக்கள் தொண்டனாகவும் கொடைவள்ளலாகவும் நடிக்கும் அத்தனை நடிகர்களும் எம்ஜீஆர் போல் இருப்பார்கள் என்று ஏமாந்து போவதை காணலாம்.

ஆனால் சுயநலமான இன்றய சினிமா கூத்தாடிகள் மக்களை ஏய்த்து ஏமாற்றி வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் என்பதே நிதர்சனமாகும். மக்களின் இந்தப்பலவீனத்தை கருணாநிதி நன்கு அறிவார் ஆரம்பகாலத்தில் எம்ஜீஆர் அவர்களை வைத்து காரியம் சாதித்து பின் எம்ஜீஆர் அவர்களுக்கே கடுக்காய் கொடுத்தவர் கருணாநிதி.
தமிழ்நாட்டு பாமரன் தான் விரும்பும் சினிமா ஹீரோ ஹீரோயினுக்காக உயிரையும் அர்ப்பணிக்கத்துணிந்தவன் என்பதும். அடுத்து தனது அரசியல் தலைவனை கடவுளாக மதிப்பவன் என்பதும். ஒன்றுமில்லாத இந்த மாயைகளுக்காக என்னவும் செய்யக்கூடிய ஏமாளி என்பதும். தனது தாய் தந்தை குடும்பம் என்பதெல்லாம் அவன் பொருட்படுத்தமாட்டான் என்பது இந்த சினிமா கூத்தாடிகள். அரசியல் அரக்கர்கள் தவிர உலகம் அறிந்த பிரசித்திபெற்ற உண்மையாகவும் காணப்படுகிறது.

இந்நிலையை நீறூற்றி வளர்த்த பெருமை திராவிடக்கட்சிகளையும் கருணாநிதியை சாரும். கருணாநிதி தனது இருப்பை சினிமா சார்ந்தே நகர்த்திவருவதையும் காணலாம். 87 வயதில் எழுந்து நிற்க முடியாத நிலையிலும் பெண்சிங்கம், இளைஞன், பொன்னார் சங்கர், என சினிமாவை விட்டுவிலகாமல் கருணாநிதி தனது வாழ்க்கையை தொடருவதை காணலாம்.

தேர்தலுக்கு சிலகாலங்களுக்கு முன்புவரை கருணாநிதி பாராட்டு விழாக்களிலும் சினிமா நிகழ்ச்சிகளிலும் இடைவிடாது இரண்டறக்கலந்திருந்தார். இந்த நிகழ்வுகள் அனைத்திலும் இன்று தமிழகமக்கள் மனங்களில் முன்னணியில் நிற்கும் ரஜினிகாந்த், கமலஹாசன். வைரமுத்து, வாலி, தொடங்கி விஜய் விவேக் வடிவேலுவரை,,. (சமீபத்தில் கருணாநிதி குடும்பத்துடன் ஏற்பட்ட சினிமா வியாபார பிணக்கால் இப்போ எதிரணியில் நிற்கும் விஜய் சென்ற ஆண்டுவரை கருணாநிதியின் கண்ணசைவில் நின்றவர்தான்), விக்ரம் பாரதிராஜா இசைப்புயல் ரஹ்மான், நடிகைகள் குஷ்பு அசின் தம்மன்னா நயந்தாரா த்ரிஷா ஸ்ரேயா பிரியாமணி நமீதா என்று எவரையும் அவர் புறந்தள்ளாமல் அருகில் இருத்தி கருணாநிதி அழகு பார்த்ததுண்டு. உள்நோக்கமில்லாமல் இலாபமில்லாமல் எவரையும் கருணாநிதி கட்டியணைத்தது கிடையாது.

எந்த நடிகர் அதிக மக்களை தம்வசம் ஈர்த்து வைத்திருக்கின்றனரோ அந்த நடிகர் சிறப்பாக நடித்தாரோ நடிக்கவில்லையோ...கவலைப்படாமல் தமிழ்நாடு அரசின் சிறந்த நடிகர், நடிகைகளுக்கான விருதுகளை அள்ளிக் கொடுத்தார் கருணாநிதி .. டாடி மம்மி வீட்டிலில்லை தடைபோட யாருமில்லை விளையாடுவோமா தில்லனா போன்ற பாடல்களுக்கு இலக்கிய விருது கொடுத்த பெருமையும் ஐயா கலைஞர் அவர்களையே சாரும். நடிகைகள் அசினுக்கும், தமன்னாவுக்கும், அனுஸ்காவுக்கும், கலைமாமணி விருது வழங்கினார். இவைகளை ஏன் செய்தார் என்றால், காரணமில்லாமல் கண்ணாயிரம் ஆற்றைக்கட்டி இறைப்பாரா,?

தமிழ்நாட்டின் சினிமா பைத்தியமான பாமரன் தனது அபிமான நடிகைக்கு விருது வழங்கிய ஐயாவை மறப்பானா? அவன் ஐயாவின் அன்பில் பனியாக உருகிப்போகவேண்டும் கூட்டிக்கழித்து கணக்குப் போட்டுப்பார்த்தால் தனது வாக்கு வங்கிக்கு அச்சாரமாக அவர் போட்ட அத்திவாரம்தான் அனைத்து விருதுகளும் என்பது விஞ்ஞானரீதியாக சிந்தித்தால் பதில் சிலருக்கு மட்டும் சிக்கக்கூடும்.

சினிமா தவிர்த்து நேரடி அரசியல் தவிர்த்தும் கருணாநிதியின் ஜால்ராக்கள் என்று சொல்லப்படுவோர் இருவர் 1, குஞ்சாமணி என்று தமிழ்நாட்டில் செல்லமாக அழைக்கப்படும் ஆளில்லா திராவிடர் கழக தலைவர் வீரமணி. 2, வெற்று சாக்குப்பை என்று சொல்லப்படும் சுப வீர பாண்டியன் ஆகிய இருவரும் இருக்கின்றனர். கருணாநிதி தனது இக்கட்டான நேரங்களில் தன்னை நியாயப்படுத்தி தப்பித்துக்கொள்ளுவதற்காக இந்த இருவரையும் இலகுவாக பாவித்து அறிக்கை விட்டு தான் தப்பித்து விட்டதுபோல் சமூகத்தில் காட்டிக்கொள்ள வேண்டிய தேவைகள் உண்டு. தேர்தல் காலங்களிலும் ஈழப்பிரச்சினை விகாரமாக கருணாநிதியை மோதியபோதும் இந்த இரண்டு கூலிக்காரர்களும் கருணாநிதி எழுதிக்கொடுப்பதை தமது பதிவாக அறிக்கையிட்டு கூலி வாங்கிக்கொள்வதும் உண்டு.

இதில் நெஞ்சில் குத்திய வஞ்சக நஞ்சாக இருக்கும் சுப வீரபாண்டியன் என்பவரை ஈழத்தமிழர்களால் என்றும் மறக்கமுடியாதவர். என் தேசத்தின் தாய், அன்னை பார்வதி அம்மா அவர்கள் சென்ற ஆண்டு உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவ உதவிக்கு தமிழ்நாட்டுக்கு செல்ல முயன்றபோது குறுக்கே நின்று குளப்பி கலகம் விளைவித்த கருணாநிதிக்கு பல்லவிபாடி கருணாநிதியின் கயமையை நியாயப்படுத்திய வஞ்சகன். இந்த சுப வீர பாண்டியன் என்பவர். சிலவிடயங்கள் இன்று சிலரால் மறைக்கப்பட்டாலும் தமிழ்நாட்டின் மானமுள்ள தமிழர்களாலும் ஈழத்து மொத்த தமிழினமும் காலாதி காலமும் வரலாற்று பதிவுகளில் இந்த கயவர்களின் கபடம் பதிவாகத்தொடரும், நான் உயிருடன் இருக்கும்வரை தினமும் சரி சிலநாட்களுக்கு ஒருமுறையேனும் சரி இந்த நாசகாரர்களை ஞாபகப்படுத்திக்கொண்டேயிருப்பேன்.

கயவன் கருணாநிதி தேர்தலுக்கு சிலதினங்களுக்கு முன்புகூட திருவாரூரில் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது ஒரு பத்திரிகையாளர்,, ஈழத்தமிழர் பிரச்சினை தேர்தல் வெற்றியை பாதிக்குமா என்று கேள்வி கேட்டபோது. கருணாநிதி மிகவும் கோபமாக "தேர்தலை பாதிக்காது" என்று ஒற்றை வரியில் பதிலளித்து, பின் ஒரு கேள்விக்கு அங்கு ஒரு பிரச்சினையுமில்லை இப்போ அவர்களுக்கான வாழ்வாதார உதவித்திட்டங்களெல்லாம் மத்திய அரசு செய்துகொண்டிருக்கிறது. என்று பதிலளித்தார், (அங்கு நிலமை சீராக இருந்தால் ஏன் ஐயா இங்கு நீங்கள் படு தோல்வி கண்டிருக்கிறீர்கள்)

நடந்து முடிந்த இத்தேர்தலின்போது செந்தமிழன் சீமான் தவிர வேறு எவராலும் ஈழப்பிரச்சினை தமிழ்நாட்டில் பெரிதாகப்பேசப்படவில்லை. ஆனாலும் சீமான் அவர்களின் எழுச்சி முழக்கங்களும் தமிழகத்து மக்களின் மனதில் படிந்து கிடந்த ஈழத்து படுகொலைக்காட்சிகளும். இன்னும் சொல்லில் வடிக்கமுடியாத பிறகாரணிகளும் தேர்தலில் கருணாநிதியை குடும்பத்துடன் பழிதீர்த்திருக்கிறது என்ற மகிழ்ச்சியை மட்டும் சொல்லிக்காட்ட முடியும். இந்த செயற்கரிய செயலுக்கு ஈழத்தமிழினம் செந்தமிழன் சீமான் அவர்களுக்கும் தமிழகத்தமிழர்களுக்கு என்றும் நன்றி கொண்ட உறவாக இருக்கும்.

தேர்தலில் தோல்வியுற்று முடங்கிப்போயிருக்கும் கருணாநிதியை பற்றிய பதிவு இன்று தேவைதானா என்றும் சிலர் நினைக்கலாம். ஆனால் தேர்தலில் தோல்வியுற்றது மட்டுமல்ல "கருணாநிதி இத்துடன் தமிழ்நாட்டிலும் தமிழர் மனங்களிலும் காலாவதியாகிப்போனார்" என்பதை தெரியப்படுத்துவதே இந்தப்பதிவின் நோக்கம்.

2011ல் அம்மாவின் ஆட்சி தொடங்குகிறது 2016 மே வரை அம்மாவின் ஆட்சி தொடரும் 87 வயது முடிந்து 88 வது வயதில் கருணாநிதி ஓய்வெடுக்கிறார். தனக்கு மக்கள் ஓய்வு தந்திருக்கின்றனர் என நேற்றைய முந்தினம் இயலாமையின் வெளிப்பாடாக தனது வெப்பத்தை கக்கி பத்திரிகை ஒன்றிற்கு அனுப்பியிருந்தார், 2016 வரும்பொளுது தாத்தாவுக்கு வயது 93 அந்த வயதிலும் அவர் ஆரோக்கியமாக இருந்தாலும் வாரிசுகள் அவரை முக்கிய இடத்தில் இருக்க இனி விடப்போவதுமில்லை. கால மாற்றம் அவருக்கு கடைசி நேரத்தில் நிறைய பாடங்களை புரிய வைத்திருக்கும். ஆனால் கருணாநிதி திருந்துவார் என்று எவரும் எதிர்பார்க்கவும் மாட்டார்கள். கருணாநிதி திருந்தப்போவதுமில்லை. ஆனால் நிறைய விடயங்களை உள்ளூர அவர் உணர்ந்து புரிந்து கொண்டிருப்பார் என்பது திண்ணம்.

போன புத்தியை யானையால் கட்டி இழுத்து எந்தப்பயனுமில்லை. நடக்கப்போவது நன்றே நடக்கவேண்டும். நாம் எமக்கான முயற்சியை முழு மூச்சாக செய்ய வேண்டியதே எங்கள் கடமையாகும். இந்தத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று கருணாநிதி கூட்டம் படு தோல்வியடைந்தது தமிழக மக்களைவிடவும் ஈழத்தமிழினத்திற்கே அதிக மனமகிழ்ச்சி என்பதையும் அம்மையார் அவர்களுக்கு தெரியப்படுத்த விரும்புகின்றோம்!. கருணாநிதியின் தோல்வியை விட வேறு மகிழ்ச்சி எங்களுக்கு இந்த நூற்றாண்டில் இல்லை! இல்லை!,

அந்த வகையில் புதிதாக 16, 05, 2011, திங்கள் நண்பகல் 12.15க்கு பதவி ஏற்க இருக்கும் செல்வி ஜெயலலிதா அம்மையார் அவர்கள் ஈழ போர்க்குற்றவாளியான ராஜபக்க்ஷவை போர்க்குற்றவாளியாக பிரகடனப்படுத்தி விசாரணைக்குட்படுத்த வேண்டும் என்று கடைசியாக முழங்கியிருக்கிறார்.. 2009 யுத்தம் முடிந்தபின்பும் இந்திய இராணுவத்தை அனுப்பி தமிழீழம் பெற்று தருவேன் என்றும் கூறியிருக்கிறார். இவையெல்லாவற்றையும் ஒரு இரவில் நிறைவேற்ற முடியாது என்பதும் யாவரும் அறிந்ததே.. மனமிருந்தால் மட்டுமே சிலவிடயங்களில் வெற்றி கொள்ள முடியும் என்பதும் உண்மை.கருணாநிதி கடைசி ஈழத்தமிழன் அழிந்தாலும் தனது நாடகத்தை நிறுத்தமாட்டார் என்பது கருணாநிதிக்கும் தெரியும் தமிழினத்துக்கும் தெரியும்.. அம்மா அப்படி நாடகம் ஆடமாட்டார் என்று ஈழமக்கள் நம்புகின்றனர்.. ஜெயலலிதா அம்மையார் அவர்கள் தான் கூறிய வாக்குறுதிகளை ஒன்றரை வருடங்களில் செய்து முடிப்பதாக கூறியிருக்கிறார். ஈழ விடுதலையும் இதற்குள் அடங்கியிருக்கிறதா என்பதே அம்மையாரின் முன் வைக்கப்படும் கேள்வி. அமையப்போகும் புதிய தமிழக அரசுக்கு ஈழத்தமிழர்களான எமது இதயபூர்வமான வாழ்த்துக்கள்...

ஈழதேசம் இணையத்திற்காக
கனகதரன்,

Monday, May 9, 2011

ஈழம் கொன்றானுக்கு இறுதி அஞ்சலி

மே13' நிகழ இருப்பது
ஆண்டவன் கட்டளை..
ஈழத்து வேதனையின்
ஏக்க விளைச்சல்.
கோபப்படாமல் ஐயா
குறித்து வைத்துக்கொள்ளுங்கள்

வெளியில் நீங்கள் வேசமிட்டு
நாடகம் ஆடினாலும்
உங்கள் கள்ளமான
உள்ளுணர்வில்
இப்படித்தான் நடக்கும் என்று
கருக்கட்டி
ஊற்றெடுத்த உண்மை
உத்தியோக பூர்வமாக
பிரசவமாகப்போகும் பொழுது.

காலதேவன் உங்களுக்கு
கட்டை இறுக்கப்போகும்
கனிவான கடைசி நாள்.

சங்கடங்கள் நிறைந்த சகதிக்குள்
இப்போதே நீங்கள் தத்தளிப்பது
தெரிகிறது
இருந்தும்
இது சிறிய ஆரம்பம் மட்டுமே.
தொடர இருப்பது பெருங்கதை
.
நவீன நரசிம்மர் உங்களுக்கு
இனி நிரந்தர ஆட்சி விடுமுறை
ஆனாலும் நீங்கள்
தொடர்ந்து அரச விருந்தினர்
அதற்கான மூலங்கள்
உங்களை சுற்றி படர்ந்து விட்டன.



இதன் பின்னும்
நச்சு பாஷாணமான
உங்கள் நாக்கு
நிச்சியம் உறங்க மறுக்கலாம்
என்ன செய்ய
உங்கள் குடும்பத்தலைவிகள்
குஞ்சம்மா பொன்னம்மா தவிர
கேட்பதற்கு இனி எவரும் வரப்போவதில்லை.

எச்சில் சிதற நீங்கள் எடுத்துவிட்ட
பத்தடுக்கு பொய் எல்லாம்
திரும்பி நின்று கும்மியடிக்கப்போகும்
கோரப் பொழுது.
இப்பொழுதே பத்திரிகைகள்மேல்
நீங்கள் எரிந்து விழுவது
சிரிப்பூட்டுகிறது.

அரை நாள் உண்ணாவிரதம்
அபத்தம் என்று
நீங்களே உணர்ந்துகொண்டதால்
இனி காற்றாடக்கூட
கடற்கரைக்கு போகமுடியாது.
சில நேரம்
கம்பி எண்ணவேண்டிய காலம்.

வெட்கமாக இருக்கிறதா
உதவிக்கு ஒத்தூதிய குஞ்சாமணியும்
குதிப்பேன் நிமிர்வேன் என்று
கோசமிட்ட தருமர்களும்
செத்த மாட்டின் உண்ணிபோல
மெல்ல விட்டகலப்போகும்
விகாரப்பொழுது.

இதே மே மாதம்
இரண்டாயிரத்து ஒன்பது
பதின் மூன்றளவில்.
ஒரு அதிகாலைப் பொழுது
ஆறு நாட்கள் அன்ன ஆகாரம்
இல்லாமல் கிடந்த
என் அன்னையையும்
இரண்டு தங்கைகளையும்
உன் அன்னை சூனியாவின்
எரி குண்டுக்கு இரையாக்கிய தினம்.

திகதி என்னவென்று தெரியாத
திகிலடைந்த பொழுதுகள்.

குடிநீர் இல்லாத கோடை வெய்யில்.
நடுநிசியிலும் குண்டுமழை.
உப்புக்கடற்கரையில்
பதுங்கு குழிக்குள் பனித்த
உவர்ப்பு நீர்கூட
இரத்தமும் மலமும் கலந்த கலவையாக.

ஆறு பொழுதுகள்
அந்த உப்பு நீரே உணவாகி
கோரக்குண்டில் சிதறி
என் தாயும் சகோதரிகளும்
செத்து மடிந்ததை அறிவீரோ?

காலை ஒரு கண்மணியிடம்
கோப்பியும் இட்லியும்
மாலை ஒரு மங்கையிடம்
மணக்கும் புறியாணி
செமியாக்குணம் போக்க
சுற்றி கதை அளந்து சிரிப்பூட்டும்
ஒரு செலுக் கூட்டம்.

நல்லெண்ணெய் தோசை
நாட்டுக்கோழி சூப்பு
பல்லிடுக்கில் தங்கிவிடா
மெல்லிய மீன் பொரியல்
சில்லென்று பருகிவிட
சிறப்பான மினரல் நீர்
பாலும் பழமும்
படுத்தவுடன் பெருத்த குசு.

இப்படியா ஐயா எங்கள் வாழ்வு
எரிகுண்டை எதிர்கொண்டு
இழவுகளை மடிதாங்கி
பட்டினியில் பாய்விரித்து
செத்து மடிந்த கதை
சத்தியமாய் அறியீரோ

நல்லதோர் வீணை செய்து-அதன்
நலன் கெடுத்து புழுதியில்
எறிந்தீர் கண்டோம்-நிச்சியம்
பதில் சொல்லுவாள் சிவசக்தி
சூத்திரம் என்னென்று
காண்பீர் என்பேன்,

பொல்லா எம் வாழ்வு-ஒரு
பொறியளவு புரிந்தீரோ-அதன்
வல்லமை காண்பீர் காண்
வரும் பொழுதுகளில்.

நல்லவை எல்லாம் போக
நடைப்பிணமாக நீர்-வண்டியில்
தள்ளிட ஆளில்லாமல்
தவித்திட நேரும் சொல்வேன்
சத்தியம் இதுவே யென்பேன்
சாவிலும் சபித்தே நிற்போம்.

உன் வாழ்வினில் குறுக்கே நாங்கள்
வந் திடர் செய்ததுண்டோ
ஏனென்று கேட்டு யாரும்
இன்னலை தந்ததுண்டோ
மூவிரு மணம் புரிந்தீர்
முலைப்பாலை மருந்தாய் கொண்டீர்
கோடியில் ஊழல் கண்டீர்
குடும்பமே கழகம் என்றீர்
மானுடம் காணா பொய்யும்
மலைபோல நஞ்சும் தாங்கி
போராடி களத்தில் நின்ற-என்
பிறப்பையே அழித்தாய் நேற்று.

எங்களை கொன்றொழித்தீர்
இனமானம் காக்க வெந்த-முத்து
குமரனையும் லூசன் என்றீர்
தீ சுட்ட வேதனையால்
சினங்கொண்ட சீமான் தன்னை
வல் வினை சாட்டி பொல்லா
செல்லினில் அடைத்தீர் கண்டோம்.

பதவியை விட்டுச்சென்று-நீ
பாடையில் போனாலும் காண்-என்
தாயவள் வயிற்றெரிவும்
தங்கையர் ஏம்பலிப்பும்
கூடவே எரிந்து மாண்ட
குழந்தைகள் விடலை பெண்கள்
காவலாய் நின்று காத்து
காவியமாகிப்போன
வீரரின் அழிவில் எல்லாம்
வினையாகிப் போனீர் ஐயா.

நாசமாய் போவீர் என்று
நான் மட்டும் சொல்லவில்லை.
ஊரெல்லாம் சொல்லக்கண்டேன்
உலகமே திட்ட கண்டேன்.

இனி எம்மிலும் கீழாய் உம்மை-நீர்
உணர்ந்திடும் நாளை காண்பீர்.
நல்லவை எல்லாம் உன்னை
நாடிடா தென்பேன் கொள்வீர்.
புத்திர சோகம் கொண்டு
புண்பட்ட எம்மைப் போலே
சத்தியமாக நீரும்
தண்டனை கொள்ள வேண்டும்
நிச்சியம் நடக்கும் நாளை
நிமிர்ந்து நாம் ஈழம் காண்போம்


ஊர்க்குருவி

நன்றி சவுக்கு இணையம்.

Monday, May 2, 2011

தமிழகத்து தாத்தா கருணாநிதியாருக்கு ஈழத்து தமிழச்சியின் கவலை மடல்,,, ஈழதேசம் இணையத்திற்காக ஆரணி..

..

என் தாத்தாவின் தாத்தாவுக்கு நிகரான தமிழகத்தின் தாத்தா, முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி அவர்களுக்கு!... ஐயா... ஈழத்து தமிழச்சியான நான் மனம் வருந்தி உங்கள் கடைசிகாலத்தில் எழுதிக்கொள்ளும் வேதனை மடல்!.

ஈழத்து பெண்ணான எனது நலம் உங்கள் புண்ணியத்தில் நீங்கள் அறியாததல்ல. "நாங்கள் சிலர் இருக்கிறோம்"! என்பது மட்டும் நான் உங்களுக்கு இப்போதைக்கு சொல்லமுடியும். உங்கள் நலனுக்கு நான் வணங்கும் ஆண்டவன் தன் சக்திக்கேற்ப பகுத்துணர்ந்து அருள் புரியட்டும்!

உங்களுக்கு மடல் எழுதியோ கோரிக்கை வைத்தோ எதுவும் நடக்கப்போவதில்லை என்பது என் சிற்றறிவுக்கு எட்டிய பேருண்மை. இருந்தும் நீங்கள் மிகவும் பலவீனமாகிப்போயிருக்கும் இந்த தருணத்தில் நீங்கள் உங்கள் குடும்ப நலனுக்காக எங்களுக்கு செய்த, தொடர்ந்து செய்துகொண்டிருக்கும் மனிதம் காணாத வஞ்சகத்தை நிறுத்துவீர்கள்,,, அல்லது அதுபற்றி சற்றேனும் சிந்திப்பீர்கள் என்று நம்பி இம் மடலை எழுதுகிறேன். இம் மடல் உங்கள் மனதை மாற்றாவிட்டாலும் கொஞ்சமாவது சிந்திக்க வைத்தாலே அது என்னைப்படைத்த ஆண்டவனுக்கு கிடைத்த வெற்றியாக கருதுவேன்.

இந்து சாஸ்திர சித்தாந்தங்களின்படி இன்றைய காலகட்டம் உங்களுக்கு படுபட்சி காலம், என்பதுபோல் எனக்கு படுகிறது. உங்கள் இருப்பும் சூழ்நிலையும் சற்று கடினமாக இருப்பதையும் நாங்கள் அறிவோம். நீங்கள் எதையும் வெளிப்படையாக காட்டிக்கொள்ள விரும்பாவிட்டாலும் உங்களது இயலாமை, உங்களையும் மீறி நீங்கள் உடைந்து புலம்பும் புலம்பலை பத்திரிகைகள் ஊடகங்கள் போட்டி போட்டு பிரசங்கப்படுத்திக்கொண்டிருக்கின்றன. இதுவரை உங்கள் மிரட்டலுக்கு அடங்கி ஒத்தூதிய பத்திரிகைகள் அனேகமானவை இன்று உங்கள் பலவீனம் கண்டு திருப்பித்தாக்குகின்றன. நீங்களும் உங்களால் முடிந்தவரை கட்டுக்கடங்காத உதாரணங்களை மேற்கோள் காட்டி உங்களை நியாயப்படுத்தி பதிலடி கொடுத்துக் கொண்டேயிருக்கிறீர்கள். அவை அனைத்தும் எருமை மாட்டின்மீது பெய்த மழைநீர்போல எந்த எதிர் விளைவுமில்லாமல் திரும்பவும் உங்கள் முன்னே வந்து நிற்கிறது. இது உங்கள்மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையீனத்தின் வெளிப்பாடென்ற பொதுவான உண்மைக் கருத்தை உங்களுக்கு ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.

வீட்டுக்கூரை ஓட்டையில்லையென்றால் திரும்பத்திரும்ப செப்பனிடவேண்டிய தேவை இருக்காது. நீங்கள் எதை போட்டு மூடிமறைக்க முயன்றாலும், மழை பெய்ததும் கூரை ஒழுகத்தானே செய்கிறது. கூரை பிரித்து வேயவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது. உங்கள் அரசியல் தொழில் நுட்பத்திலும் அடிப்படைக்கோளாறு இருப்பதால் இனி உங்களால் கூரையை ஒருபோதும் சரிப்படுத்த முடியப்போவதிவில்லை. நீங்கள் எதைப்போட்டு மூடி மறைக்க முயன்றாலும் இனி முடியாது என்றே நடைமுறை காட்டி நிற்கிறது. இப்படியே விட்டால் ஒழுக்கினால் சுவர்களுக்கும் ஈரம் கசிந்து சுவர்களும் விழுந்து உள்ளேயிருக்கும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் ஆபத்தாக முடியும் என்பதுபோலவே நிலமை தெரிகிறது.

நீங்கள் என்றைக்கும் எதையும் நேரடியாக நேர்மையாக ஒரு பொருள்பட ஒரே கருத்தில் பேசியவர் கிடையாது. எதுகை மோனையுடன் வஞ்சகங்களை கவர்ச்சிகரமாக தங்கத்தட்டில் எடுத்துவிட்டு ஏமாற்றுவதில் வல்லவர் என்பதை காலப்போக்கில் நான் நன்கு அறிந்துகொண்டேன், நீங்கள் நேரடியாக எதையும் இல்லையென்று மறுத்ததும் கிடையாது. சுயநலம் இல்லாமல் எதையும் கொடுத்ததும் கிடையாது. ஒரு கேள்விக்கு பத்துப்பொருள்பட பதிலளித்து ஏமாற்றி தப்புவதற்கு உங்களை விட்டால் உலகத்தில் இன்றுவரை எவரும் பிறக்கவில்லை என்பதும் அறிவேன். அந்தச் சாதனை நிச்சியம் வரலாற்றுப்பக்கங்களில் கறுப்பு எழுத்துக்களாலோ சிகப்பு எழுத்துக்களாலோ பதியப்படும் என்பது திண்ணம்.

இம்முறை தேர்தலில் நீங்கள் வெற்றி பெறுவீர்களோ?? நாட்டில் பலரும் (நானும்கூட) நம்புவதுபோல தோல்வியை தழுவுவீர்களோ, மே 13ம் திகதி தெரிந்துவிடும். இருந்தும் நீங்கள் தோற்றுவிடவேண்டுமென்றே தமிழ்நாட்டிலுள்ள பெருவாரியான தமிழர்களும், ஈழத்தை பூர்வீகமாகக்கொண்ட ஒட்டு மொத்த தமிழர்களும் உலகத்தமிழர்களும் விரும்புகின்றனர் என்பதே உண்மை. தேர்தலில் வாக்கு பெறுவதற்காக வீடு வீடாக பணம் கொடுத்து கற்பூரம் கொழுத்தி சத்தியம் வாங்கித்தான் நீங்கள் தேர்தலை சந்தித்ததாக பலரும் குற்றஞ்சாட்டுகின்றனர். அப்படி பணங்கொடுத்து, வேறு கயமையான உள்ளடி வேலைகள் செய்தும்,, தமிழ்நாட்டில் வசிக்கும் அயல் மானிலங்களின் தமிழர்களல்லாத தெலுங்கர், கன்னடர், மலயாளி, களின் வாக்குகளையும் பெற்று வெற்றி பெற்றாலும் பெறக்கூடும். ஆனாலும் அறுதிப்பெரும்பான்மையை நீங்கள் நெருங்க முடியாது. கூட்டணிக்கட்சிகளான பாமக. விடுதலைச்சிறுத்தைகள். காங்கிரஸ் இவைகளின் உதவியுடன்தான் ஒருவேளை??? ஆட்சியை அமைக்கமுடியும்.

காங்கிரஸ்கட்சி உங்களை காய் வெட்டுவதற்கென்று காத்திருப்பது பல சந்தற்பங்களில் புலப்படுகிறது. தேர்தல் தொகுதி பங்கீட்டிலும் வேறு வழிகளிலும் உங்களை படுத்திய பாடும், நீங்களும் உங்கள் பாட்டுக்கு பொதுக்குழு கூட்டி ஆடிய நாடகங்களும் எங்களை விட நீங்கள் நன்கு அறிந்துகொண்டிருக்கிறீர்கள். எனவே வஞ்சகத்தை வஞ்சகத்தால் வெல்லுவதற்கு உங்களுக்கு பாலபாடம் நான் சொல்லித்தரத்தேவையில்லை.

கடப்படியில் வைத்து காங்கிரசுக்கு தகுந்த தந்திரமான காயை சரியான சந்தற்பத்தில் நீங்கள் வெட்டுவீர்கள் என்பது எல்லோரும் அறிவர். காங்கிரஸ் கட்சியை உடைத்து சங்காரம் செய்யவும் நீங்கள் பின்நிற்கப்போவதில்லை. ஆனால் அந்தப் பயறு கூட்டணியின் இன்னொரு அங்கத்துவரான ராமதாஸ் மாமாவிடத்தில் அவிப்பதுதான் சற்று சிரமமாக இருக்கும். ராமதாஸ்மாமா வில்லங்கம் செய்ய நினைத்தார் என்றால் நீங்கள் தாங்கமாட்டீர்கள் என்பதை சிறியவளான நான் சொல்லுவதை வருங்காலங்களில் உணருவீர்கள். ஆக மொத்தத்தில் வருங்காலம் நீங்கள் சிலநாட்களுக்கு முன் கூறியதுபோல உங்களுக்கு சங்கடங்கள் நிறைந்த காலமாகவே அமைய இருக்கின்றன. எனவே இந்தத்தேர்தலில் வெற்றி பெற்றாலும் தோல்வி கண்டதுபோலவே சங்கடங்கள் உங்களை துரத்த இருக்கின்றன. அவற்றை விடவும் நீங்கள் தோற்றுப்போனால் சற்று நிம்மதி அடைவதோடு மக்களிடமிருந்து கொஞ்சம் அனுதாபமாவது உங்களுக்கு கிடைத்து பக்கபலமாக இருக்கும் என்பது எனது நம்பிக்கை.

ஒரு பெருத்த அரசியல் சாணக்கியருக்கு இவையெல்லாம் நான் சொல்லி தெரியவேண்டுமென்பதுமில்லை. எனது மனதுக்குள் இருக்கும் முற்றுப்பெறாத சந்தேகத்தை வினவுவதே எனது மடலின் நோக்கம். இலங்கையில் தமிழராக நாங்கள் பிறந்துவிட்டதால் எங்களை வைத்து அரசியல் செய்யும் நீங்களும், தமிழ்நாட்டின் இன்னும் பல அரசியல்க்கட்சிகளும் இலங்கையில் வாழும் மக்கள் அனைவரும் சிங்களவராக இருந்திருந்தால் எதை வைத்து உங்கள் வெற்றி தோல்விக்கு அரசியல் செய்திருப்பீர்கள் என்ற கேள்வியும் என்னுள் எழுவதுண்டு.

குறிப்பாக நீங்கள் எங்களை வைத்து அரசியல் செய்து பிழைக்கிறீர்கள். அதனால் எங்களுக்கு உங்களால் பெருத்த தீமை தவிர கடுகளவு நன்மையுமில்லை, முழு நற்பலனும் உங்களுக்கு கிடைத்து நீங்கள் பட்டம் பதவியுடன் தமிழ் வளர்த்த தாத்தா என்ற பெயரையும் தட்டிச்சென்று விடுகிறீர்கள். உங்கள் தொடர் இருப்புக்காக எங்களை பாழுங்கிணற்றில் தள்ளி பாறாங்கல்லையும் தூக்கி போட்டுவிடுகிறீர்களே, இது நியாயம்தானா என்பதை இந்த படு முதுமைப்பருவத்திலென்றாலும் யோசித்திருக்கிறீர்களா? நன்மை செய்யாவிட்டாலும் பரவாயில்லை ஏன் வஞ்சக அநீதி செய்கிறீர்கள். உங்களுக்கு நாங்கள் செய்த பாவம் என்ன? இதுவரை உங்களால் நாங்கள் பட்ட துன்பம் கொஞ்ச நஞ்சமல்ல. உயிரிழந்து, பொருள் பண்டங்களை இழந்து, நாடற்று, இருக்க இடமின்றி,பாதுகாப்பின்றி, இன்று கடைநிலையில் அலைந்து திரியும்வரை துரத்தி துரத்தி தாக்கி துன்பமிழைக்கிறீர்களே. உங்கள் பதவிகளை இருப்பை எங்கள் உயிரிலும் வாழ்விலும் நீங்கள் நிர்ணயிப்பது நிலைக்கும் என்று நினைக்கிறீர்களா??.

உங்கள் மகள் கனிமொழி, ஸ்பெக்ரம் திருட்டுக்கேசில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுவிட்டார் என்றதும் பதைபதைத்து நேற்றய முந்தினம் அண்ணா அறிவாலயத்தில் உயர்நிலை திட்டக்குழுவை கூட்டிய நீங்கள் உங்கள் மகளை திருட்டுக்கேசிலிருந்து காப்பதற்காக எவ்வளவு துடித்தீர்கள். இல்லாத பொல்லாத உதாரணங்கள் எவ்வளவை எடுத்து வைத்து நாடகமாடினீர்கள். உங்கள் மகள் என்பதற்காக உண்மையான ஒரு திருட்டு மோசடிப் பேர்வழியை காக்கத்துடித்தீர்கள்.

உங்கள் மகள் கனிமொழியை ஒத்த வயதுடைய எங்கள் சகோதரி நளினி அவர்கள், ராஜீவ் காந்தி கொலைக்குற்றச்சாட்டில் பொய்க்குற்றம் சுமத்தப்பட்டு 20 வருடங்களாக சிறையில் வாடுகிறாரே அவரது துன்பத்தில் ஒரு துளியாவது உங்கள் வாரிசுகள் பட்டிருக்குமா?? எவ்வளவு நியாயங்களை எடுத்துக்காட்டி நளினியை சட்டப்படி விடுதலை செய்யும்படி வழக்குரைஞர்கள் எத்தனை வருடங்களாக வாதாடி களைத்துப்போயிருக்கின்றனர். சொற்ப கருணையாவது நீங்கள் காட்டியிருக்கிறீர்களா? சோனியாவை திருப்திப்படுத்துவதற்காக எங்கள் உடன்பிறப்பு நளினியை உயிருடன் நரபலியாக்கியிருக்கிறீர்களே.

உங்கள் மகன் ஸ்ராலின் சன் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்த ஒரு பெண்ணை புணர்ச்சி செய்ய கேட்டபோது அப்பெண் மறுத்துவிட்டதால் அப்பெண்ணை ஸ்ராலின் ஈவு இரக்கமில்லாமல் கற்பழித்தார் என்று ஆதாரத்துடன் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது, நீங்கள் முதலமைச்சர் ஒரு கட்சியை வைத்திருப்பவர் என்ற தகுதியை வைத்து கேசை இல்லாமலே செய்துவிட்டீர்கள். அடுத்து உங்கள் இன்னொரு மகனான அழகிரி கட்சிக்கும் சமூகத்துக்கும் விரோதமாக நடக்கிறார் என தமிழ் நாடே குற்றஞ்சாட்டியபோது அழகிரியை மதுரைக்கு நாடுகடத்தி கட்சியை விட்டு தள்ளிவைக்கிறேன் என்று புலுடா காட்டி மறைமுகமாக அவரை வளர்த்தீர்கள்.

மதுரையில் உங்கள் கட்சிக்காக நாயாய் உழைத்துக்கொண்டிருந்த மாவட்டச்செயலாளரான த கிருஷ்ணனை தெருவில் கூலிப்படைகளை வைத்து அழகிரி வெட்டிக்கொன்றதாக த கிருஷ்ணனின் குடும்பத்தாரால் குற்றஞ்சாட்டப்பட்டு அழகிரி பொலிசாரால் கைதும் செய்யப்பட்டார். உங்கள் அதிகாரத்தை பிரயோகித்து எல்லாவற்றையும் இழுத்து மூடிவிட்டீர்கள். அத்துடன் அழகிரி தனது அராஜகத்தை நிறுத்தியிருந்தாரா?. உங்கள் குடும்ப நிறுவனமான சன் தயாநிதியின் தினகரன் பத்திரிகை, கருத்துக்கணிப்பு என்ற பெயரில் அழகிரியின் கூடப்பிறந்த தம்பியான ஸ்ராலினை முன்னிறுத்திவிட்டது என்பதற்காக தினகரன் அலுவலகத்தை உடைத்து எரித்தார் அழகிரி, தினகரன் பத்திரிகை அலுவலகம் உங்கள் குடும்ப அலுவலகம் என்பதால் சட்டப்படி குற்றம் என்றாலும்,, நீங்கள் சமரசத்துக்கு போயிருக்கலாம். ஆனால் அங்கு பணிபுரிந்த ஊழியர்கள் மூவர் அநியாயமாக தீயில் வெந்து கொல்லப்பட்டனரே அழகிரிமீது சுமத்தப்பட்ட அந்தக் குற்றச்சாட்டு என்னவானது??.

கட்சியின் மூத்த உறுப்பினர் த கிருஷ்ணன் கொல்லப்பட்டதற்காக பாகுபாடு கடந்து உங்கள் கட்சியின் மத்திய உயர்நிலை தீர்ப்பாயத்தை கூட்டி நியாயமான முடிவு ஏதாவது எடுத்தீர்களா??. பதிலுக்கு கொலைக்குற்றவாளி அழகிரியை மத்திய மந்திரியாக்கியிருக்கிறீர்கள். எங்கள் சகோதரி நளினிக்கு ஒரு நியாயமும் உங்கள் கொலை கற்பளிப்பு ஊழல்க் கொள்ளை வாரிசுகளுக்கு ஒரு நியாயமும் இவையெல்லாம் உங்கள் இதயத்துக்கு நீதியாகப் படுகிறதா?

ஒரு வாதத்திற்கு நளினி விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு ஆதரவானவர் என்று எடுத்துக்கொண்டாலும். விடுதலைப்புலிகள் இயக்கம் முற்று முழுதாக ஒடுக்கப்பட்டுவிட்டதாக நீங்களும் சோனியாவும் ராஜபக்க்ஷவும் கூட்டாக ஒப்புதல் அறிக்கைகள் விடுத்துமிருக்கிறீர்கள். அப்படியிருக்கும்போது நளினியால் உங்களுக்கும் இந்தியாவுக்கும் என்ன அச்சுறுத்தல் நிகழ்ந்துவிடப்போகிறது. ஒரு குடும்பப்பெண்ணான நளினி நீதிமன்றம் வழங்கிய தண்டனைக்காலத்தில் ஒழுக்கமாகவும் சட்டத்துக்குட்பட்டும் நடந்திருக்கிறார். ஆயுட்கால தண்டனை என்பது 14/16 ஆண்டுகள் சிறைத்தண்டனை என்று இந்திய குற்றவியல் சட்டம் சொல்லுவதாக சட்டத்தரணிகள் வாதிடுகின்றனர். ஆனால் உங்கள் தலையீடு காரணமாகத்தான் நளினி விடுதலை பெறமுடியவில்லை என்று நேரடியாக சட்ட வல்லுனர்களின் கருத்தில் கூறப்படுகிறது, நளினியை அவரது குடும்பத்திலிருந்து பல பத்தாண்டுகள் பிரித்துவைத்து வதைக்கிறீர்களே, இதுதான் தர்மமா?

நீங்கள் உங்கள் பல தார குடும்பங்களுடன் காலை ஒருவீட்டிலும் மாலை ஒருவீட்டிலும் இரவு ஒருவீட்டிலும் இன்பச்சுற்றுலா போல் வாழ்கிறீர்களே நீங்களும் உங்கள் குடும்பமும் செய்யும் அநீதிகளை விட நளினி என்ன செய்துவிட்டார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சந்தற்ப வசமாக சிக்கிக்கொண்ட ஒரு சந்தேக நபர்.. இது தவிர ஈழத்தமிழர்கள் அனைவரைப்போலவும் நளினியும் தேசியத்தலைவரையும் மண்ணையும் நேசிக்கும் சராசரியான ஈழத்துப்பெண் அவ்வளவுதான். நளினியை மிரட்டி பொலிஸ் குற்றவாளியாக்கியிருக்கிறது என்பதை இத்தனை வருடங்கள் கழிந்த பின்னாவது ஏன் உணரமாட்டேன் என்று முரண்டுபிடிக்கிறீர்கள்?

தலைவர் பிரபாகரன் உங்களது போலி அரசியல் பம்மாத்துக்கு பணிந்து மண்டியிடவில்லை என்பதால் ஒட்டு மொத்த ஈழமக்களையும் நீங்கள் காவுகொள்ள வைத்து பழி தீர்ப்பது நான் அறியாததல்ல. எனது தலைவருக்கும் உங்களுக்கும் இருக்கும் இடை வெளி உயரம் உங்களால் எந்தக்காலத்திலும் எட்டமுடியாதது என்பது தெரிந்தும்,நீங்கள் வஞ்சகத்தாலாவது தொட்டுவிடலாம் என்று விழாக்களும் மாநாடுகளும் நடாத்தி பார்க்கிறீர்கள் உங்கள் ஏமாற்றுக்கு மக்கள் எவரும் மயங்காததற்கு யார் என்ன செய்ய முடியும், நீங்கள் அடிப்படையில் ஒரு நடிகன், தலைவர் பிரபாகரன் அவர்கள் நடிக்கத்தெரியாதவர். நீங்கள் வஞ்சகப்புகழ்ச்சிக்காரன். தலைவர் பிரபாகரனுக்கு அது வராத ஒன்று.

நான் உங்களுக்கு ஒரு சில எடுத்துக்காட்டை மட்டும் மேற்கோள் காட்டமுடியும் சொல்லக்கூடாத விடயமாக இருந்தாலும் உங்களுக்கு சொல்லிக்காட்ட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறபடியால் சொல்லுகின்றேன். உங்கள் வயதுக்கு எவ்வளவோ விடயங்களை நீங்கள் கண்டிருப்பீர்கள். உங்கள் சுக வாழ்வுக்காக அரசியலில் எத்தனையோ பேரை காவு கொடுத்திருப்பீர்கள். எத்தனையோ குடும்பங்களை அழித்திருப்பீர்கள், அலைய விட்டிருப்பீர்கள், ஆனால் தலைவர் பிரபாகரன் அவர்கள் தனது குழந்தைகளைக்கூட போராட்டத்திலிருந்தும் மக்களிடமிருந்தும் பிரித்து பார்த்தது கிடையாது. தலைவர் தன் மகன் சார்ள்ஸ் அன்ரனி மற்றும் பெண் குழந்தை துவாரகா அவர்களைக்கூட ஈழ மண்மீட்பு போராட்டத்திற்கு தாரைவார்த்து கொடுத்திருந்தார் என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

தமிழ் நாட்டில் நீங்கள் அரசியலை குத்தகை எடுத்தபின் உங்கள் இருப்பை தொடர்வதற்கான நகர்வுகளையே நீங்கள் தொடர்ந்து நடத்தி வருகிறீர்கள் இந்தக்காலகட்டங்களில் எத்தனையோ போராட்டங்கள் வெடித்திருக்கின்றன ஆனால் 2009 ம் ஆண்டு ஒரு குறிப்பிட்டு காலத்துக்குள் தமிழ்நாட்டில் ஈழ ஆதரவு நிலையெடுத்து மக்கள் வீதிக்கு வந்து போராடிய அளவு மக்கள் போராட்டம் தமிழ்நாட்டில் என்றைக்கும் நடைபெறவில்லை அந்தப்போராட்டங்களுக்கு தமிழகத்து மக்களின் மனநிலை உணர்ந்து ஆதரவு தரவேண்டிய நீங்கள் செய்த துரோகங்களும் பாதகங்களும் கொஞ்சமல்ல என்பது பதிவாகியிருக்கிறது. உங்கள் அடக்குமுறை நடவடிக்கையை தமிழ்நாடு தூக்கியெறிந்து உதாசீனப்படுத்தியது.

காழ்ப்புணர்வு கொண்ட நீங்கள் நீதிமன்ற வளாகத்தினுள்ளும் கல்வி வளாகங்களினுள்ளும் பொலிஸை ஏவி பால் வேறுபாடின்றி தடியடி நடத்தினீர்கள். அரசியல் தலைவர்களை சிறையில் அடைத்தீர்கள். அடக்குமுறை செய்வதைத்தவிர சிந்தித்து உங்களால் எதுவும் செய்ய முடியவில்லை.

அடுத்து வந்த தேர்தலில் வெற்றி பெற்றோம் மக்கள் எங்கள் பக்கம் நின்றதால்தானே சாத்தியமாச்சு என்று நீங்கள் கூறக்கூடும். தேர்தலில் தில்லுமுல்லு செய்து பணம் கொடுத்து சத்தியம் வாங்கி வெற்றிபெறும் கலாச்சாரத்தையும் ஐயா நீங்கள்தானே அழகிரி மூலம் அறிமுகப்படுத்தி அசிங்கப்படுத்தினீர்கள். பணம் கொடுத்து பதவியையும் தக்க வைத்து, பதவியை வைத்து அடக்குமுறை செய்வதையும், உங்களைத்தவிர எவரால் செய்ய முடிந்திருக்கிறது.

அப்படி இருந்தும் கொதிநிலையில் இருந்த தமிழகத்தில் உங்கள் அராஜகத்திற்கு எதிராக இரண்டாவது தற்கொடை போராளியாக ஆளுனர் மாளிகை முன் கரிக்கட்டையானாரே மாவீரன் முத்துக்குமார். தொடர்ந்து சென்ற வாரம் நெல்லை மாவட்டம் சங்கரன் கோயில் சீகம்பட்டி கிருஷ்ணமூர்த்தி வரை 22 பேர் ஈழக்கொடுமையை எதிர்த்து தீக்குளித்து உயிர் விட்டிருக்கின்றனர். இதற்கு உங்கள் பதில் என்ன?? குரல் கொடுப்போம், கடிதம் எழுதுவோம் தந்தி அடிப்போம் , தீர்மானம் நிறைவேற்றுவோம், வலியுறுத்துவோம், என்று நீங்கள் மாறி மாறி ஏமாற்றி பாட்டு பாடிக்கொண்டிருக்க உங்கள் பல்லவியை முறியடித்து தமிழீழ தேசியத்தலைவரின் உண்மையான உறுதியை நம்பி ஏற்று தலைவர் பிரபாகரன் அவர்களின் முகம் தெரியாத தமிழ்நாட்டு தமிழ் உறவுகள் 22 க்கும் அதிகமானவர்கள் தங்கள் உயிரைத்துறந்து வரலாறானார்களே, உலகத்தில் எங்காவது இப்படி நடந்திருக்கிறதா என்று நீங்கள் ஒரு கணமேனும் சிந்தித்ததுண்டா??

உங்கள் அராஜகம் பொறுக்கமுடியாத தேர்தல் ஆணையம் 2011 ஏப் நடைபெற்ற தேர்தலில் விழித்துக்கொண்டு தேர்தல் விதி மீறல்களை ஓரளவுக்கேனும் கட்டுக்குள் கொண்டுவந்ததற்கு தேர்தல் ஆணையத்திற்கு நன்றி சொல்லவேண்டும் தேர்தல் ஆணையம் போட்ட உத்தரவுகளை ஜீரணித்துக்கொள்ள முடியாத நீங்கள் வைத்த ஒப்பாரிகள் ஓலங்கள் கொஞ்ச நஞ்சமா. நெருக்கடி நிலை என்றீர்கள் நான் முதலமைச்சரா என்றீர்கள். அழகிரிக்கு ஆபத்து பாதுகாப்பில்லை என்றீர்கள்.

ஸ்பெக்ரம் அலைக்கற்றை மோசடியில் நீங்களும் உங்கள் குடும்பமும் சம்பந்தப்பட்டிருப்பது உலகம் முழுவதும் வேளிச்சமாகி நாறியபின்னும் நல்லபிள்ளைக்கு நடிக்க நாண்டுகொண்டு நின்று ஈழம் காப்பேன் என்று தொடர்ந்து வஞ்சகமாக செய்த தவறை மீண்டும் செய்வதற்கு தமிழீழம்தான் எங்கள் குறிக்கோள் இன்று நேற்றல்ல தந்தை செல்வாவின் காலத்திலிருந்து ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக தனி ஈழம்தான் எங்களது குறிக்கோள். அதனை அடைவதற்கு முன்பு இலங்கையில் தமிழர்கள் சிங்களவர்கள் இருசாராருக்குமிடையே சமத்துவநிலை உருவாக வரைமுறைகள் வகுக்கவேண்டும் என்று நடக்க முடியாத கிரந்தம் பேசுகிறீர்களே.

உங்களிடம் யார் தமிழீழம் பெற்றுத்தரும்படி கோரிக்கை வைத்திருக்கிறார்கள். தமிழீழத்தின் தாற்பரீகம் உங்களுக்கு புரியுமா? சிங்களவனுக்கும் தமிழனுக்கும் சமத்துவ நிலை உருவாக வரைமுறைகள் வகுக்க வேண்டும் என்கிறீர்களே, அது இரண்டு முட்டையும் வீட்டுக்கு ஒரு 2000 ரூ கலர் ரிவியும் கொடுப்பது போன்ற விடயமென்று சாதாரணமாக நினைக்கிறீர்களா? 40.000 போராளிகளின் தியாகம், 30 வருட உறக்கமில்லா உழைப்பு 3.00.000 பொதுமக்களின் மரணம். கணக்கிலடங்கா சொத்துக்களின் அழிவு. . தவிர எண்ணிலடங்கா பெண்களின் வாழ்க்கை கற்பு நிம்மதி இதுபற்றி உங்களுக்கு புரிதல் ஏதும் உண்டா அத்துடன் தன்னிகரில்லாத் தலைவனின் உறுதி குலையாத ஆளுமை,தமிழீழத்திற்கான எல்லாவற்றையும் பார்க்கவேண்டியவர்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றனர். நீங்கள் இடைச்செருவலாக நிற்காமல் வெளியேறுவதே பேருதவியாக இருக்கும். முடிந்தால் வஞ்சகமாக பேசுவதை விடுத்து நடைமுறையில் ஏதேனும் ஒன்றை செய்யுங்கள் அல்லது மனிதக்சங்கிலி., சர்வகட்சிக்குழு, ராஜினாமா, 1/2 நாள் உண்ணாவிரதம் என்பதுபோல ஒன்றை திரும்ப தொடங்கி பாம்பும் ஏணியும் விளையாட்டில் கொண்டுபோய்
முடிக்க நினைக்காமல் விலகி உங்கள் அரசியல் வேலைகளை பாருங்கள்.அதுதான் எல்லோருக்கும் நல்லது. நாங்கள் பட்ட துன்பங்களும் மோசமான கணங்களும் அதிகாரத்தில் இருந்து, சோனியாவின் தூதுவனான நீங்கள் உணர்ந்து கொள்ளுவதற்கு நியாயமில்லை. ஒரு வெள்ளை இனத்தவரிடமுள்ள ஈடுபாடும் புரிந்துணர்வும் உங்களிடமில்லையே என்று மனம் வருந்துகிறேன்.

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பர். ஈழத்தமிழர்களுக்கு செய்த வஞ்சகத்திற்கும் தமிழ்நாட்டில் தீக்குளித்து உயிர் விட்ட தமிழர்களுக்குமான கணக்கு முடிக்கப்படுவதற்கான பரீட்சையாக ஸ்பெக்ரமும், 2011 சட்டசபை தேர்தலும் உங்கள் முன் வைக்கப்பட்டிருக்கிறது என்பதே உண்மை.

செங்கல்பட்டு முகாமில் 23 தமிழர்களும் பூந்தமல்லியில் 4 தமிழர்களும் உங்கள் அரசால் அடைத்து வைக்கப் பட்டுள்ளனர். மேற்கண்ட முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டு இருப்பவர்கள் குற்ற வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டும், உரிய முறையில் பிணை பெற்றும் இருக்கின்றனர். ஆனால் நீங்கள் அவர்களை சட்டத்திற்குப் புறம்பாக சிறப்பு முகாம் என்ற பெயரில் அங்கு அடைத்து வைத்துள்ளது கொடுமை இளைக்கிறீர்கள்.
கங்காதரன், சந்திரகுமார், அமலன், ஜெயமோகன் ஆகிய 4 பேரும் தங்களை விடுவிக்கக் கோரி பூந்தமல்லி முகாமில் கடந்த 12 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.ஆனால் இவர்களின் கூக்குரல் இதுவரை உங்களுக்கு எட்டவில்லை. உங்கள் குடும்பத்தவர்களின் ஸ்பெக்றம் போன்ற திருட்டு வழக்கிலிருந்து எப்படி மீளலாம் என்பதை கட்சியின் உயர்மட்ட திட்டக்குழுவுக்கு கொண்டுவந்து கண்ணீர் விட்டு விவாதிக்கிறீர்கள்.

ஐயா கண்ணீரும் துன்பமும் துயரமும் எல்லோருக்கும் பொதுவானது. திருட்டுக்குற்றத்திற்காக கனிமொழி சிறைக்குப்போனால் அது தண்டனை. பொய் வழக்கில் அல்லது சந்தேகத்தின் பேரில் செங்கல்ப்பட்டிலும் பூந்தமல்லியிலும் ஈழத்தமிழர்கள் அடைக்கப்பட்டு தண்டிக்கப்பட்டால் அது நிந்தனை.

இதற்கு பிறகாவது உங்களைப்போல வஞ்சக நடிப்பிற்காக 1/2 நாள் உண்ணாவிரதமிருக்காமல் 12 நாட்களாக உண்ணாவிரதமிருக்கும் ஈழத்தமிழர்களை மனிதாபிமானத்துடன் நடத்தினீர்களென்றால் நீங்கள் நாத்தீகர் என்று கூறிக்கொண்டு மறைவாக வணங்கும் கடவுள் உங்களுக்காக கொஞ்சமேனும் இரங்கக்கூடும்.

ஈழதேசம் இணையத்திற்காக ஆரணி..