Tuesday, November 29, 2011

தமிழ் மொழி "தரப்படுத்தலுக்கு" அப்துல் கலாம் அவர்களை துணைக்களைக்கும் சிங்கள ராஜபக்க்ஷ,

http://eeladhesam.com/images/stories/cartoon/kaddurai/apdul%20kalaam.gif

திர்வரும் 2012 ஆண்டை, மும்மொழி ஆண்டாக பிரகடனப்படுத்தி, சிங்கள கட்டாய திணிப்பை சட்டமூலமாக்குவதற்கு ஸ்ரீலங்கா அரசுத்தலைவர் மஹிந்த ராஜபக்க்ஷ அறிவிப்பு வெளியிட்டிருப்பதாக தெரிகிறது.

அதன் தொடக்க விழாவுக்கு இந்தியாவின் முன்னைநாள் குட்டியரசுத்தலைவர் அப்துல் கலாம் அவர்கள் பிரதம விருந்தினராக பங்குபற்றி செயல்த்திட்டத்தை தொடக்கி வைக்கப்போவதாகவும், ஸ்ரீலங்காவின் வெளிநாட்டு தொடர்புகள் மந்திரி ஜி எல் பீரிஸ் தெரிவித்திருக்கிறார்.

இத்திட்டத்தால் இலங்கையில் இருந்துவரும் இன பிரிவினைக்கு முடிவுரை எழுதி, நல்லிணக்கத்தை விஞ்ஞான தமிழரான அப்துல் கலாம் அவர்களால், கொண்டுவரமுடியுமாக இருந்தால் வருங்கால வரலாற்றில் அப்துல் கலாம் அவர்களின் பெயர் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்டு, அனைத்து ஈழத்தமிழர் வீடுகளின் முகப்பில் மகாத்மா காந்திக்கு சமமாக, அப்துல் கலாம் அவர்களின் படம் அலங்கரித்து காலா காலத்துக்கும் கலாம் அவர்களின் புகழ் ஈழத்தில் நின்று நிலைக்கும்.

மாறாக, ராஜபக்க்ஷ உள் நோக்கம் நிறைவேற்றப்பட்டு, தமிழினத்திற்கு குழி வெட்டும் தந்தரத்தை நிறுவ முயற்சித்து, இத் திட்டத்தால் ஈழத்தமிழினத்திற்கு மேலும் தேவையற்ற வகையில் சிறுமை விளையுமாயின். கலாம் அவர்களின், பங்களிப்பும் களங்கத்தில் முடிந்து கசப்பான உணர்வை ஈழத்தமிழர்களிடம் தோற்றுவித்துவிடும்.

கடந்தகால வரலாற்று அனுபவத்தில், சிங்களவனிடமிருந்து பல பாடங்களை தமிழினம் பட்டுணர்ந்திருக்கிறது. அந்த அடிப்படையில் இந்த நிகழ்வும் தமிழர்கள் மத்தியில் ஐயத்தையே தோற்றுவித்திருக்கிறது. காரணம் தமிழர்களுக்கான அடிப்படை வாழ்வியல்பற்றி கருத்திலெடுப்பதற்கே  வெறுப்பைக்காட்டி  தட்டிக்கழிக்கும் சிங்கள மேலாதிக்கவாதிகள் தமிழ் மொழியின் ஆளுமையை அடிபடச்செய்யும் "தரப்படுத்தலின்" ஒரு அங்கமாகவே ராஜபக்க்ஷவின், மும்மொழி ஆண்டு திட்டம், கபட நோக்கத்தை கொண்டிருக்கலாம் என்றே பரவலாக அஞ்சப்படுகிறது. 

இந்திய அரசும், ஸ்ரீலங்கா அரசும், இணைந்து இலங்கையில் இருந்துவரும் தமிழ் சிங்கள இனங்களுக்கான முறுகல் நிலையை சுமூகமாக்க மேற்கொள்ளும் ஒரு முயற்சியென்று உலக அரங்கில் வெளிக்காட்டி நியாயப்படுத்திக்கொள்ள, இலங்கை கடும்போக்காளர்களுக்கு இத்திட்டம் தற்காலிகமாக உதவுமே தவிர. அடிப்படையில் அங்கு வாழும் இனங்களுக்கிடையில் மண்டியிட்டுக்கிடக்கும் சிக்கல்களுக்கு முடிவுகாண விளையப்போவதில்லை. 

"இலங்கை மக்கள் தமிழ், சிங்களம், ஆங்கிலம், என மூன்று மொழிகளிலும் தேர்ச்சி பெற்றிருத்தல் அவசியமாகும். அது தொடர்பான வேலைத்திட்டம் ஒன்றை எதிர்வரும் 2012 ஆம் ஆண்டில் அரசு அமுலாக்கவுள்ளது. என ஸ்ரீலங்கா அரசுதரப்பில் சொல்லப்பட்டிருக்கிறது":.

அதன் உள்ளார்ந்த அர்த்தம் அனைத்து தமிழர்களும் கட்டாயம் சிங்களம் படிக்கவேண்டும், சிங்களம் படித்து தேர்ச்சி பெற்றிருந்தால் மட்டுமே, வேலை வாய்ப்பை பெறமுடியும் என, சட்டப்படி நிறுவ இத்திட்டம் பரிந்துரைக்கப்போகிறது. பாடசாலைகளிலும் சிங்களம் முதல்த்தரமான கல்வி மொழியாக அறிமுகப்படுத்தும் திட்டத்தின் சூழ்ச்சியாகவும் அரசுக்கு இத்திட்டம் உதவும்.

தமிழர்கள் வலுவிழந்திருக்கும் இந்த காலத்தை பயன்படுத்தி 70களில் இருந்த கடும்போக்கு மனநிலையை திரும்பக்கொண்டுவந்து கட்டாய சிங்களம் சட்டமாக்க முழு முயற்சி நடைபெறுகிறது,70 களுக்கு முன்னய மொழித் தரப்படுத்தல். நாட்டில் இன முறுகல் நிலையை தோற்றுவித்து தமிழினம் யுத்தத்தம் புரிய காரணமாக இருந்தது. இன்று தமிழினத்தின் அனைத்து சக்திகளும்  முடங்கிய பலவீன நிலையை சாதகமாக்கி, சிங்களத்திற்கு அனுகூலமான ஒரு காலத்தில் கட்டாய சிங்களச்சட்டம் திணிப்பு தெரிவு செய்யப்பட்டிருக்கிறது.

தொடர்ந்து இழுபறி நிலையில் இருந்துவரும் பேச்சுவார்த்தையை அடிபட்டு போகச்செய்யக்கூடிய மூலக்கூறுகள் இத்திட்டத்தில் மறைந்தும் மறையாமலும் இருக்கின்றன. சிங்களவருக்கு மட்டும் இத்திட்டம் பக்க பலமாக அமையும் என்பதிலும் சந்தேகமில்லை.

கலாமின் மூலம் மறைமுகமாக இந்தியாவின் அங்கீகாரத்தையும் பெற்றதாக இந்த மும்மொழி ஆண்டு மாநாடு பரிந்துரைக்கப்போகிறது. இதனால் இனங்களுக்கிடையே தொடர்ச்சியாக இருந்துவரும் எரிச்சலும், பகமை உணர்வும், அதிகரிக்குமே தவிர ஒருபோதும் இன அமைதிக்கு வழி வகுத்துவிடப்போவதில்லை.
அத்துடன் தமிழர்களின் அரச வேலைவாய்ப்பையும் கபளீகரம் செய்து இல்லாமல்ச்செய்யும் ஒரு கபடத்தனமான உத்தியென்றே இந்த மொழித்திட்டத்தை வருங்காலங்களில் தமிழர்கள் உணரமுடியும்.

இலங்கை மக்கள் தமிழ், சிங்களம், ஆங்கிலம் என மூன்று மொழிகளிலும் தேர்ச்சி பெற்றிருத்தல் அவசியமாகும். என பொருமலாக சொல்லப்பட்டாலும், சிங்களவர் மத்தியில் இந்த கபடத்திட்டம் ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தப்போவதில்லை. சிங்களவர்கள் எவரும் தமிழை படிக்கப்போவதுமில்லை. அதற்கு சிங்கள கடும்போக்கு கட்சியான ஜேவீபி, மற்றும் ஜாதிக எல உறுமய, அடுத்த சிங்கள பேரினவாதக்கட்சியான யூஎன்பி, போன்றவை ஒருகாலமும் ஒத்துக்கொள்ளப்போவதுமில்லை.

கேட்பதற்கு ஆளில்லாத தமிழர்களின் ஒரே கட்சியான,  தமிழர் தேசியக்கூட்டமைப்பு இந்த விடயத்தில் எந்த எதிர்ப்பை காட்டினாலும் எடுபடாமல் போவதற்கு கலாம் அவர்களின் பிரசன்மம் உதவி புரியலாம்.

இலங்கையில் வாழும் மக்கள் அனைவரும் சகோதரத்துவத்துடன் புரிதலுடன் வாழ்வதற்காக, இதய சுத்தியுடன் இத்திட்டம் அறிமுகப்படுத்துவதாக ஒரு பேச்சுக்கு எடுத்துக்கொண்டாலும் அதற்கு இது சரியான தருணமுமில்லை. அத்துடன் இத்திட்டம்பற்றி இலங்கையின் பூர்வீக தமிழர் தரப்பினருடன் கலந்து நல்ல புரிதலுடன் கலந்துரையாடலை நடத்திய பின் இறுதி கண்டிருக்கவேண்டும்.

அப்துல் கலாம் அவர்கள், தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டவராக இருந்தாலும், 2002ல் இருந்து 2007 வரை அவர் இந்திய ஜனாதிபதியாக கடமையாற்றிய காலத்தில், ஈழத்தமிழர்களின் நெருக்கடிகளை அவர் முகங்கொடுத்து தரிசித்திருக்கிறார். ஆனாலும் அப்போ கலாம் அவர்கள் எதையும் அறிந்துகொண்டதுபோல் அசைவையாவது காட்டிய தருணங்கள் எதுவும் வரலாற்றில் காணப்படவில்லை.

பதவியிலிருந்து விடுபட்ட, 2008, 2009 களில் மிக மூர்க்கமான ஈழ படுகொலை தருணங்களிலும் தனிமனிதனாக மனிதாபிமான நோக்கத்துடனும் அவர் எந்தவிதமான அதிர்வையோ அசைவையோ காட்டவில்லை.

ஈழத்தமிழர்களின் தரப்பினருடன் முன் ஆலோசனை எதுவுமின்றி, ஒருமுக நோக்கோடு தன்னிச்சையாக ஜனாதிபதி இப்படி ஒரு திட்டத்தை வரையறுத்திருப்பது கட்டாய சிங்களச்சட்டம் அமூலுக்கு வருகிறது அனைத்து தமிழரும் ஏற்றுக்கள்ளுங்கள் என்ற சவாதிகாரமாகவே பார்க்கப்படும். இந்த அடிப்படையை  கலாம் அவர்கள் அறிந்திருக்காமல் இருக்க முடியும். இனியாவது புரிந்துகொள்வார் என நம்பலாம்.

1970 களில் ஆரம்பித்த சிங்களவரின் இந்த வக்கிர தரப்படுத்தல் மனநிலதான் விடுதலைப்புலிகள், மற்றும் பலவிடுதலை இயக்கங்களை, இலங்கையில் பிரசவித்திருந்தது.

ஜனாதிபதி ராஜபக்க்ஷவின் இந்தத்திட்டத்தை தமிழினம் கருத்தில் எடுத்துக்கொள்ளுமா என்பதையும் சம்பந்தப்படுபவர்கள் சிந்திக்க கடமைப்பட்டுள்ளனர். நிலமை இப்படியே தொடருமானால் இன்னுமொரு பத்து வருடங்களில் மீண்டும் ஒரு ஆயுதப்போராட்டம் தவிர்க்க முடியாத ஒன்றாக ஆகும் அபாயத்தை இலங்கை சந்திக்கும்.

ஏற்கெனவே இலங்கையில் மும்மொழியும் படித்திருக்கவேண்டுமென அரச சார்பில் கட்டாயப்படுத்தப்படிருந்தது. ஆனால் அது நடைமுறை சாத்தியமாகவில்லை. பொதுமொழியான ஆங்கிலம் இணைப்புமொழியாக இருந்து வருவதுதான் காலகாலமாக வழக்கத்தில் இருந்து வருகிறது. தேவை கருதி சில தமிழர்கள், பிரதேசசூழல் சார்ந்து சிங்களம் படித்தறிந்திருக்கின்றனர் என்பதையும் மறுப்பதற்கில்லை. அதேபோல மிகக்குறைவான ஒருசில சிங்களவர்களும் தமது நலன்சார்ந்து தமிழ் கற்றறிந்திருக்கலாம்.

இன்று இனங்கள் உடைந்து காணப்படும் ஒரு நெருக்கடியான காலகட்டத்தில் தமிழருக்கான ஒரு தீர்வுத்திட்டத்தை அமூல்ப்படுத்திய பின், ஆற அமர சிந்தித்து பல புரிதல்களின் பின் கைவைக்கவேண்டிய செயல்த்திட்டமான ஒரு செயல்த்திட்டத்தை அவசரப்பட்டு சிங்கள அரசு செயல்ப்படுத்த முனைவதன் பின்னணியும் பலரையும் சிந்திக்க தூண்டும் ஒன்றாகவே இருக்கிறது.

வீடுவாசல் குடியிருப்பு, மீள் குடியமர்வு, கல்விநிலையங்கள் சரிவர இயங்காத சூழல் வாழ்வாதாரம் ஆகிய முன்னணி பிரச்சினைகள் சீர்செய்யப்படவில்லை. மாறாக தமிழர்கள் மத்தியில்  சிங்கள குடியேற்றங்களையும் மொழி விதைப்பையும், முதல்த்தரமாக்கி நடைமுறைப்படுத்த இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது என்பதே உண்மை. இந்த மொழி விதைப்பின் மூலம் சிங்கள ஆசிரியர்கள் தமிழ்க்கிராமங்கள் அனைத்திலும் விதைக்கப்படவுள்ளனர்.

சான்றாக 26.11,2011 அன்று பாராளுமன்றத்தில் கிளி/ பாஉ சிறிதரன் அவர்கள், தீர்வுத்திட்டத்தின் பின்னணி பற்றி அரசாங்கத்தின் சதிகள் பற்றியவிரிவான ஒரு உரையை நிகழ்த்தினார், 2009 மே,க்கு பின்னரான நடப்பு அரசியல் எத்திசையை நோக்கி நகர்கிறது என்பதை அந்த உரையின் மூலம் அம்பலப்படுத்தியிருந்தார், தமிழ் புரியாத சிங்கள எம்பிக்கள் பாராளுமன்றச்சபையில் இருந்தபோதும் தொடர் குறுக்கீடுகளிற்கிடையில் அந்த உயிரோட்டமான உரை நிதானமாக நிகழ்த்தப்பட்டிருந்தது.

சிங்கள எம்பிக்களுக்கு தமிழ் தெரியாவிட்டாலும் சில தமிழ்பேசும் கறுப்பு ஆடுகள் சிறிதரன் அவர்களின் உரையின்போது இடைமறித்து ஆட்சேபணை தெரிவித்து சிங்களவனுக்கு வக்காளத்து வாங்கி, உரையை மொழிபெயர்த்து சிங்களவனுக்கு காட்டியதையும் காண முடிந்தது.

இலங்கையின் நடப்பு அரசியல் நிலைவரம் இவ்வாறு இருக்கும்போது மும்மொழி ஆண்டு,, சிங்கள பிரகடன வைபவத்தில் கலாம் அவர்கள் கலந்துகொள்ளுவதன் மூலம் அடிபட்டுக்கிடக்கும் தமிழினத்தின் மனதையும் வாழ்வியலையும் இளக்காரம் செய்து புண்படுத்துவது தவிர வேறு எதையும் செய்துவிட முடியாது.

கலாம் அவர்கள் 2002 ஆண்டு முதல் ஐந்து வருடங்கள் இந்தியாவின் ஜனாதிபதியாக உச்ச நிலையில் இருந்திருக்கிறார். அடிப்படையில் கலாம், தமிழை தாய் மொழியாகக்கொண்டவர் என்ற வகையிலும் இலங்கையில் வாழும் சிறுபான்மை தமிழர்கள் சிங்களவர்களின் கொடுமைகளில் எவ்வளவு துயரத்தை அனுபவித்திருக்கிறார்கள் என்பது பற்றியும், தமிழர்களுக்கான அரசியல் பொருளாதார மொழி சம்பந்தப்பட்ட நிலை எப்படிக் கையாளப்பட்டது, என்ற அனைத்து நிலைவரங்களும் அவர் அறிந்தவராகவே இருப்பார்.

2009ல் தமிழர்களை கொன்றுகுவிக்க காங்கிரஸுக்கு உதவிய கையுடன் தன்னை விளம்பரப்படுத்தி கொலைப்பழியை மூடி மறைக்க கோவையில் பல நூறு கோடிகளை கொட்டி 2010 ஜூன் செம்மொழி மாநாடு நடத்தி வக்கிரத்தை வெளிப்படுத்தினார். கருணாநிதி, அதே பாணியை பின்பற்றி சிங்களவர் மத்தியில் மும்மொழி மாநாடு என்ற பெயரில் தரப்படுத்தல் மாநாடு ஒன்றை நிறுவ ராஜபக்க்ஷ முனைப்புடன் நிற்கிறார்.

ஏமாற்று நோக்கமில்லாமல் நேர்மையோடு திட்டமிடப்பட்ட அரசியல் ரீதியான தீர்மான முன்மொழிவுடன், தலையீடு ஒன்றை இந்தியா தனது ஆளுமையை பிரயோகித்து இலங்கைக்குள் மாற்றம் காண செய்யமுடியுமே தவிர, ராஜபக்க்ஷவுடன் பேசுகிறோம் வலியுறுத்துகிறோம் என்பதெல்லாம் கண்துடைப்பு என்பது வெட்ட வெளிச்சமாக தமிழர்கள் மட்டுமல்லாது உலக அரங்கிலும் அறியப்பட்டுவிட்டது,

இறுதிப்போரை முன்னின்று நடத்த இலங்கைக்கு உதவிய இந்தியா, தமிழர்களுக்கு சார்பாக எதையும் செய்ய இயலாத சிக்கலில் இருப்பதும் சர்வ லோகமும் அறிந்த உலகப்பரகசியம்.

போராட்டத்தின்போதும் சரி, போராட்டம் முடிவுக்கு வந்தபின்னும் சரி, இனப்பிரச்சினை சம்பந்தமாக இந்தியாவிலிருந்து இலங்கைக்கு எவராவது தூது சென்று எந்தவித இடையூறுமில்லாமல்  திரும்பியிருந்தால் அது ஈழத்தமிழினத்திற்கு அள்ளிவைத்த பயணமாகவே இருந்திருக்கிறது.

பிரணாப் முகர்ஜி, நிருபாமா ராவ், சிவ் சங்கர்மேனன், எஸ் எம் கிருஷ்ணா, திமுக காங்கிரஸ் எம்பிக்கள் குழுவினரான கனிமொழி, டி ஆர் பாலு, திருமாவளவன். நடிகை அசின், ரஞ்சன் மத்தாய்,  இறுதியாக காங்கிரஸ் எம்பி சுதர்சன நாச்சியப்பன், இவர்கள் இலங்கைக்கு சமாதான தூதுவர்களாகச்சென்று  திரும்பியவர்கள்,இவர்கள் உலகத்தை ஏமாற்ற இராசதந்திரிகளாக போய்வந்தனரே தவிர, தமிழர்களுக்கிடையில் கிடந்த ஒரு துரும்பையும் தூக்கி அகற்றிவிடவில்லை, மாறாக ராஜபக்க்ஷவின் கருத்தை முன்மொழிந்து தமிழினத்தை காட்டிக்கொடுத்து, ராஜபக்க்ஷவிடம் விருந்துண்டு பரிசும் வாங்கி மகிழ்ந்திருக்கின்றனர்.

இந்த உருப்படிகள் இலங்கைக்கு சென்றுவந்ததால் தமிழினம் செத்து சிறுமைப்பட்டதே தவிர மகிழ்ச்சியை அடையவில்லை. இன்றைக்கும் இந்தியாவிலிருந்து அரச அனுசரணையுடன் தமிழருக்காக தூது செல்வதாக எவர் புறப்பட்டாலும் தமிழினம் பதகளித்து அஞ்சுகிறது.

போரின்போது இந்தியாவிலிருந்து பல அரசியல் தூதுவர்கள் ஸ்ரீலங்காவுக்கு சென்று திரும்பியதும், பல ஆயிரக்கணக்கானவர்கள் ஸ்ரீலங்கா படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். சர்வதேச தலையீடுகூட இந்த இந்திய தூதுவர்களின் நயவஞ்சகத்தால் தடுக்கப்பட்டது.

அவை ஒருபுறமிருக்க சாதாரண சினிமா நடிகையான அசின், பொழுது போக்கி விடுமுறையை க(ளி)க்க இலங்கைக்கு சென்றிருந்தார், சென்றவர் அங்கு அமைதி தூதுவராக அவதாரம் எடுத்து தன்னிச்சையாக இந்தியாவிலிருந்து சில டொக்டர்களை அழைத்து, பாவப்பட்ட தமிழர்களுக்கு கண் சிகிச்சை செய்து திரும்பியதாக விளப்பரப்படுத்தினார். ஆனால் பல ஏழை தாய்மார்களின் கண்பார்வை பறிபோனதாக பின்னர் உறுதியானது. ஆனால் எவராலும் எந்த நடவடிக்கையும் எடுத்து நடிகை அசினை தண்டிக்க முடியவில்லை.

ஆனால் ஸ்ரீலங்கா இந்திய அரச விருந்தினர் அல்லாமல், நிலவரத்தை பார்த்து அறிந்துவரச்சென்ற உணர்வாளரான தமிழகத்தின் வழக்கறிஞர் கயல் என்கிற அங்கயற்கண்ணி, ஸ்ரீலங்கா பொலிஸாரால் கைது செய்யப்பட்டு 4ம் மாடிக்கு கொண்டு செல்லப்பட்டு மிகவும் தொல்லைக்கப்பட்டார். நேர்மையானவர்கள் எனக்கருதப்படும் தமிழின ஆர்வலர்கள் எவரும் இலங்கைக்குள் செல்ல முடியவில்லை.

தமிழ் உணர்வு காரணமாக ஆரம்பகாலங்களில் சுயமாக கடல்வழி பயணம் செய்து தேசியத்தலைவரை சந்தித்த வைகோ அவர்களை திமுக தலைவர் கருணாநிதி, கொலை குற்றமும் சாட்டி கட்சியிலிருந்து வெளியேற்றினார். பின் ஒரு சந்தர்ப்பத்தில் தமிழீழம் சென்று தலைவர் பிரபாகரன் அவர்களை சந்தித்து திரும்பிவந்த சீமானை, முன்னாள் முதல்வன் கருணாநிதி,  5முறை கைது செய்து இறுதியாக தேசிய பாதுகாப்புச்சட்டத்தை பாவித்து சிறையில் அடைத்தார்.

இவைதான் நடைமுறை, எவர் இராச மரியாதையுடன் இலங்கை பயணம் மேற்கொண்டாலும் அதனால் ஸ்ரீலங்கா அரசுக்கு ஏதாவது இலாபமூட்டும் நோக்கமாகவே இருக்கும். தூது செல்பவர்களின் பயணம் தமிழர்களுக்கு ஒரு பின்னடைவையே பெற்றுத்தந்திருக்கிறது. நல்ல மனிதர் என பெயர் எடுத்த அனுபவ முதியவரான அப்துல் கலாம் அவர்கள் சற்று சிந்தித்து செயற்படுவார் என்றே நம்பலாம்.

இலங்கை இனப்பிரச்சினை தொடர்பாக இந்தியா தலையிட்டபோது தமிழகத்தை மனதில் நிறுத்தி, ஈழமக்கள் மனம் மகிழ்ந்ததுண்டு. ஆனால் அனைத்தும் ஏமாற்றமாகிவிட்டது. ஸ்ரீலங்கா அரசுக்கு ஆதரவான இந்தியாவின் தலையீடு,, தூதுவர்களின் பயணம்,, பல இலட்சம்பேர் அழியக்காரணமாக இருந்தது.

தற்போது யுத்தம் முடிவடைந்து சர்வதேச பார்வை பட்டிருக்கும் நேரத்தில் மீண்டும் இந்தியாவின் வலிந்த தலையீடு எஞ்சியிருக்கும் மக்களின் மொழி மற்றும் வாழ்வாதாரத்தையும் தகர்த்துவிடுமோ என நிகழ்வுகள் அச்சப்படுத்துகின்றன. இது பட்டுணர்ந்த பயமாகவும் இருக்கக்கூடும். இந்தத்தொடரில் அப்துல் கலாம் அவர்களின் பயணமும் தமிழர்களின் மொழி மூலத்தையே அழித்துவிடுமோ என்ற அபாய சமிக்ஞை உள்ளூர அனைத்து தமிழர் இதயத்திலும் ஒலிக்கிறது.


ஈழதேசம் இணையத்திற்காக.
கனகதரன்.
நன்றி ஈழதேசம் இணையம்.

Sunday, November 27, 2011

ஈழத்தின் தீர்மானங்கள்,


 அகன்று திரண்டு அன்பு கனிந்தொரு
அன்னை வளர்த்தாலும்-பிள்ளை
தெருவில் நடந்தொரு பள்ளி பயின்றிட
எதிரி தடையாக.

நிமிர்ந்து எழுந்தனர் கருவி சுமந்தனர்-புலி
தமிழர் படையாகி
களங்கள் திறந்தனர் சமரில் உயர்ந்தனர்
உலகம் வியந்தாக.

படையில் விழுவதும் எழுந்து நிமிர்வதும்
புதிய விதியல்ல
விழுந்த மாவீரர் விதையா யாயினர்
எழுவார் என்றென்றும்.

படலை திறந்தொரு தெருவில் இறங்கிட
பயந்து சிலரோட
நடுத்தெருவில் பலர் கதை முடிந்து
சாவொரு மலிந்த நிலையாக,

களங்கள் திறந்து சுழன்று சமரிடை
புலி நிமிர்ந்த மாவீரன் 
குருதி படிந்து புதைந்து கிடந்தமண்
கோவில் லாகாதோ.

சதிகள் குவிந் தொரு நிலையில்
மனமது தளந்து போகாமல்
விமானத் தளங்கள் அழிந்தன
களங்கள் எரிந்தன தமிழர் படையாலே.

திருவில் பிறந்தவள் சிறந்து பயின்றவள்
சிங் களச் சதியை பொறுக்காமல்
குமுறல் விரிந்தொரு சினந்து புலியென
விதந்து களமாட,

குருவி பறந்தது போல ஒரு ரவை
கூவித் துளைத்தோட
கருவி சுமந்தவள் காவலரணிலே
காவிய மானாளே.

உருவை மறைத்தொரு விமானம்
பறந்திடை குண்டு மழை வீச
கொடுமை தகர்த்திட பிறந்த புலியது
இன்று விதையாகி.

மறந்து கிடப்பது (உடை) துறந்த நிலையென
என்று ஆகாதோ
மண் மறைந்து கடலென ஆகிப்போகினும்
மறந்து போவோமோ.

மனித உருவிலே பிறந்த வினையது
"மஹிந்த" நரமாகி
பெரும் படையை நகர்த்தினான்
மரபு மீறியோர் மலிந்த திணையோடு.

எரிந்து தனலொடு மரங்கள் அடியினில்
மறைந்த மாவீரர்.
எழுந்து ஆடுவர் திரும்ப கூடுவர்
மறந்து போகாதே.

ஊர்க்குருவி.
நன்றி ஈழதேசம் இணையம்.

Saturday, November 26, 2011


தேசியத்தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களுக்கு. உலக தமிழர் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.


ஈழத்தமிழர் இதயத்தின்
முழு முதலான
வீரமகன் வாழியவே!
தமிழன் வீரத்தில் வரலாறு
எழுதிய
வெற்றியின் நாயகன் வாழியவே!

கண் தூங்கா விண்ணுயர்
காவலனாம்
கலங்கரை விளக்கம் வாழியவே!

போராட்ட பரிமாணத்தின்
கூர் தீட்டி
புதுமைகண்ட விஞ்ஞானி வாழியவே!

நவீன சிந்தனையில்
வரி தொகுத்த
நாலடி விருத்தம் வாழியவே!

தீமையின் கண்களுக்கு
தீயான
சிம்ம சொப்பனம் வாழியவே!

அரசியல் செய்யாமல்
அகிலம் வென்ற
ஆளுமையின் சிகரம் வாழியவே!

தன்நலன் கொள்ளா
புதுமை கொண்ட
தனித்தலைவன் வாழியவே!

அளவில்லா ஆற்றல் கொண்ட
நடமாடும்
ஆதவன் நீ வாழியவே!

சோவென்று மழைபோன்ற
செருக்களத்தின்
செயல் வீரன் வாழியவே!

தந்தவனின் கடன் தீர
என்றைக்கும் மறவாத
சங்கரன் நீ வாழியவே!

எல்லாளன் நிழல் பிறந்த
வல்லாளன்
எரிமலை நீ வாழியவே!

பார்வதி பெற்றெடுத்த
பைந்தமிழ்
பரம்பொருள் நீ வாழியவே!

சீருடையில் சிறப்பென்று
பார்போற்றும்
நேரான சூரியன் நீ வாழியவே!

சாவினை வென்று வந்த
சரித்திரமே
சத்தியமே வாழியவே!

மூலம் அறியாத முழுமுதலே
காலம் ஈர்ந்தளித்த
கற்பகம் நீ வாழியவே!

ஊர்க்குருவி.
நன்றி ஈழதேசம் இணையம்.

Friday, November 25, 2011

உலகம் வியந்த உன்னதத் தலைவன் உதித்தநாள்,, ஈழத்தின் மண் உயிர் நிலை பெற்றநாள்.26.11.2011.

உன்னதமான எம் தலைவன் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின், ஐம்பத்து ஏழாம் அகவைநாள் . அவரை வாழ்த்த வரியில்லை!


தமிழ் இலக்கியத்தின் வழக்கிலுள்ள அத்தனை உவமைகளும் தலைவனின் பெருமை பகர்ந்து ஏற்கெனவே எழுத்தில் வடிக்கப்பட்டுவிட்டன,  வாஞ்சையுடன் தலைவனை பாராட்ட ஒப்பற்ற சொல் இனி இல்லை. இருந்தும் என்றென்றும் எம் ஒரே தலைவன் வாழ்வாங்கு வாழ்வாங்கு பல்லாண்டு வாழியவே என மனதார வாழ்த்துவோம்!.

உளப்பூர்வமாக உரிமையில் நான், என் தலைவன் என்பேன். என் அண்ணனும் தம்பியும் அக்காளும் தங்கையும் தன் தலைவன் என்பர். அம்மாவும் அப்பாவும் தமது தலைவன் என்கின்றனர். நாடு தன் தலைவன் எனும். மொத்தத்தில் அவர் பிரிக்க முடியாத எம் தலைவர் என்போம். இரத்த நாளத்தில் உணர்வையூட்டி உலகத்தில் எங்களை இனங்காட்டிய ஒப்பற்ற கற்பகமாம் எம் தலைவனை எங்கிருந்தாலும் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் வாழிய! வாழிய!! வாழியவே!!! என்று ஒருவினையாக வாழ்த்துவோம்!.

மேதகு தலைவனின் பிறந்தநாள் போற்றுவோம்
வீரியம் புகழ்பட ஆண்டுகள் நீண்டிடும்
ஈன்றவள் பார்வதி பாதம் பணிகிறோம்- திரை
மீண்டிடும் நாள்வரும் மாயைகள் விலகிடும்.
தோன்றிய இடரெலாம் தூசாய் மறைந்திடும்
ஐம்பத்து ஏழொடு ஆண்டுகள் தொடர்ந்திடும்.

தலைவனின் பிறப்பது உலகத்தின் அதிசயம்
சத்தியம் உண்மையில் அவர் ஒரு மெல்லினம்
நிறமதில் கறந்தபால் போன்றதோர் மனதிடை
நிமிர்ந்தவர் சினங்கொள்ள வைத்தது சிங்களம்.
தமிழனின் சிறுமையை கண்டவர் பொங்கினார்
தம்பியாய் சிரிப்பினில் நெஞ்சினில் தங்கினார்.

தமிழனின் உதிரத்தில் உணர்வின விதைத்தவர்.
தனியொரு ஒழுக்கத்தில் உலகத்தை வென்றவர்
ஒப்புக்கும் மழுப்பலாய் செப்பிட  மறந்தவர்
ஒருகணம் பயத்தினை உணர்ந்திட ஒறுத்தவர்.
உறுதியில் அவர் ஒரு பெருமலை யென்பதும்
உண்மையில் எதிரியின் எரிமலை யல்லவோ

சீருடை அவர்க்கென பிறந்தது என்றனர்- வெள்ளையர்
தேசமும் அதனையே பகர்ந்தது திண்ணமாய்
வெள்ளையர் மற்றவர் விதந்தனர் புகழ்ந்தனர்
வீரனாய் உலகத்தில் ஒருவனே என்றனர்.
சிரம் தாழ ஒருபோதும் நடந்ததுமில்லை- அவர்
சிங்களன் மண்ணுக்காய் விதந்தாட வில்லை.

சாவொரு காலமும் நெருங்கிடா துண்மையே
தலைவனின் வழியொரு பிழைவரா திண்ணமே
காலமும் சதிகளும் குறு தடை போடலாம்
கடைநிலை சத்தியம் வெல்லுமே காணலாம்.
ஆயிரம் வரிப்புலி விதைநிலை உள்ளனர்
வானமே சிதறினும் வரிப்புலி வெல்லுவர்.

நிமிர்ந்தொரு நடையது பெரு முதலாக- தலைவனின்
நேர்கொண்ட கொள்கையே மந்திரமாக
வரமது போற்றிடும் தலைவனே வாழ்க- நீ
பிறந்தது தமிழனின் பெரும் பேறது வாக.
அலைகடல் தாண்டியும் நின்புகழ் மேவின
ஐம்பத்து ஏழொ டாண் டாயிரம் வாழ்க!

கனகதரன்
நன்றி ஈழதேசம் இணையம்.

Saturday, November 19, 2011

பொன்சேகாவுக்கு 3 வருஷ நீடிப்பு, கூத்தாடி குசும்பன்.18,


  விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப்பொறுப்பாளர் நடேசன் மற்றும் சமாதானச் செயலகப் பொறுப்பாளர் புலித்தேவன் ஆகியோர் உட்பட வெள்ளைக்கொடியுடன் சரணடைந்த புலி உறுப்பினர்கள், கோத்தபாயவின் கட்டளைக்கு அமைய சுட்டுக்கொல்லப்பட்டாகள் என்று முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா கூறியதற்கு எதிராக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கில் பொன்சேகா பொய் கூறினார் என தீர்ப்பளித்த ஸ்ரீலங்காவின் மேல் நீதிமன்றம் அவருக்கு மூன்று வருட சிறைத்தண்டனை விதித்திருக்கிறது.

ஏற்கெனவே சிறையில் அடைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டுவரும் நச்சுப்பாம்புகளில் ஒன்றான முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா வெளியில் வந்தால் ராஜபக்க்ஷகளை காட்டிக்கொடுத்து திருப்பி தாக்கக்கூடும்.  அடிபட்ட பாம்பான பொன்சேகா சர்வதேசத்தில் அறியப்பட்டுவிட்டார் என்பதையெல்லாம் கருதி தமக்கான காலம் கனியும்வரை பொன்சேகாவை ராஜபக்க்ஷ தரப்பு சிறையில் வைத்திருக்க விரும்பியிருக்கக்கூடும்.

புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழர்கள் மூலம் ராஜபக்க்ஷவுக்கு  இருக்கும் பூதாகரமாக சிக்கல்கள் போதாதென்று, இன்னும் சிக்கலை பெரிதாக்கி சர்வதேசத்திடம் பொன்சேகா போட்டுக்கொடுக்கவும்கூடும் அது ராஜபக்க்ஷவுக்களுக்கு பெருத்த அனுட்டக்குற்றமாக அமையும் என்பது அனைவரும் அறிந்ததே. 

புதிதாக இன்னும் ஒரு சிக்கலை தோற்றுவிக்காமல் காதும் காதும் வைத்தாற்போல சிறையில் இருக்கும் பொன்சேகாவுக்கு தொடர்ந்து பாணும் சம்பலும், கிரிபத்தும், சாப்பிட மூன்றுவருடம் நீட்டி ராஜபக்க்ஷக்களின் விருப்பத்திற்கமைய நீதிமன்றம் தீர்ப்பு கூறியிருக்கிறது.

இதொன்றும் ஸ்ரீலங்காவுக்கு புதினமான சமாச்சாரமும் கிடையாது. ராஜபக்க்ஷவை எவர் எதிர்த்தாலும் இதுதான் கதி என்பதை மீண்டும் ஒருமுறை நீதிமன்றத்தின் மூலம் அராஜகம் நியாயப்படுத்தப்பட்டிருக்கிறது. ஒருவிதத்தில் அதுதான் காலத்தின் கட்டளையும். ஏனென்றால் காரணம் எதுவாகவும் இருக்கலாம் ஆனால் சரத் பொன்சேகாவும் சாகும் வரை சிறையில் இருக்கவேண்டிய படுகொலைக்குற்றவாளியே.

வெற்றிவிழா நிகழ்ச்சி நடத்திய ஒரு சந்தற்பத்தில் இராணுவ வீரர்கள் மத்தியில் ராஜபக்க்ஷ பேசும்போது இராணுவ வீரர்கள் நாட்டின் கண்கள் என்றும், மண்ணின் மைந்தர்கள் என்றும், வாணளாவ புகழ்ந்து தள்ளிய மஹிந்தர், தான் நாட்டுக்காக உயிரை விட்டாலும் விடுவேனே தவிர போர் வீரர்கள் எவரையும் எந்தச்சந்தற்பத்திலும் காட்டிக்கொடுக்கமாட்டேன் என சபதமிட்டு சத்தியம் செய்திருந்ததை எவரும் மறந்திருக்க முடியாது.

சமீபத்தில் சர்வதேசம் ராஜபக்க்ஷவை கை கழுவி கைவிட்ட நிலையில். நண்பன் இந்தியாவும் திகைப்பூண்டில் கால் வைத்து திகைத்த நிலையில் தடுமாறிக்கொண்டிருக்கிறது. இருந்தும் சட்டத்தின் ஓட்டைகளையே பாவித்து மக்களை ஏமாற்றிக்கொண்டிருக்கும் இந்தியா, ராஜபக்க்ஷவுக்கு தனது ஆலோசலையை அவிழ்த்துவிட்டு சட்டத்தின் ஓட்டையை பாவிக்க சொல்லிகொடுத்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இந்தியாவின் ஆலோசனைக்கேற்ப, கேணல் ரமேஷ் மற்றும் விடுதலைப்புலிகளின் போராளிகளை கொலைசெய்ததன் மூலம் மனித உரிமையை மிறி நடந்தார்கள் என சில ராணுவச்சிப்பாய்களை குற்றவாளியாக்கி தான் தப்பிக்க ராஜபக்க்ஷ தந்திரம் தேடி சில நோய் ஆடுகளை  (இராணுவத்தினரை) பலிகொடுக்க தாயாராகி விட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தியா இலங்கை இரு பிரிவும் மலைதீவில் அலசி ஆராய்ந்து தேடிய வகையில் கையில் கிட்டிய மருந்து. சில இராணுவ வீரர்களை பிடித்து. போர்க்குற்றவாளியாக்கி ஒப்புக்கு சிறையில் சிலகாலம் அடைத்துவிட்டால் சர்வதேசத்தின் கண்களுக்கு சர்வமும் சரியாகிவிடும் என்பது இவர்களின் கணக்கு.
இந்த விளையாட்டை கச்சிதமாக செய்தால் சர்வதேசம் அடங்கிவிடும் பிறகு மீதியை பார்த்துக்கொள்ளலாம் என திருடர் கூட்டம் திட்டம் தீட்டப்பட்ட்டிருப்பதாக செய்திகள் வலம்வருகின்றன, இந்த விளையாட்டு எங்கு சென்றுமுடியும் என்பது போகப்போக தெரியவரும்.
கேணல் ரமேஷ் அவர்களை சித்திரவதை செய்து படுகொலை செய்த புகைப்பட விடியோ ஆதாரமும் வெள்ளைக்கொடியுடன் சரணடைந்த அரசியல்ப்பொறுப்பாளர் நடேசன் மற்றும் புலித்தேவன் அவர்களின் படுகொலைச்சம்பவங்களும் முதல்த்தரமான போர்க்குற்றமாக சர்வதேசத்தால் நோக்கப்படுவதாக தெரிகிறது.
"பாட்டும் நானே பாவமும் நானே" என்றுதான் ராஜபக்க்ஷ இலங்கையை வழிநடத்தி வந்தார். இப்போ பாட்டை மாற்றி "பாடும் உனை நானா பாடவைத்தேன்" என்று இராணுவத்தினர் மீது குற்றம் சுமத்த தயாராகிறார். குற்றவாளிகள் அனைவரும் இனங்காணப்படும்வரை மாறி மாறி ஒருவரை ஒருவர் குற்றம் சுமத்தி முடிவில் "எளியாரை வலியார் வருத்தினால் வலியாரை தெய்வம் வருத்தும்" என்ற கதையுடன் எல்லாம் முடிவுக்குவரும்.

ஸ்ரீலங்காவின் ஜனாதிபதியான மஹிந்த ராஜபக்க்ஷ ஸ்ரீலங்கா இராணுவத்தின் பிரதம தளபதியாக மட்டுமல்ல முப்படைகளின் தளபதியுமாவார், அத்துடன் ஸ்ரீலங்காவின் பாதுகாப்பு மந்திரியாகவும் மஹிந்த ராஜபக்க்ஷவே இருந்து வருகிறார். அவருக்கு அடுத்த நிலையில் பாதுகாப்பு அமைச்சின் அனைத்து அதிகாரமும் கொண்டு. அசைக்கமுடியாத கட்டளையிடும் சர்வ அதிகாரம் கொண்டவராக இருப்பவர் ஜனாதிபதியின் உடன்பிறப்பான கோத்தபாய ராஜபக்க்ஷ.

இவர்களுக்குப்பின் பசில் ராஜபக்க்ஷ, நாமல் ராஜபக்க்ஷ, சமல் ராஜபக்க்ஷ. இன்னும் பல பக்க்ஷக்கள் இருந்தும். இவர்களது கட்டளையில்லாமல் 100 இராணுவ சிப்பாய்கள் மனுநீதியை மீறி நடந்துவிட்டனராம்.

ஏதோ வகையில் குற்றம் சாட்டப்பட்ட சரத்பொன்சேகா போர் முடிவடையும்வரை முன்னணியில் நின்றவர். மஹிந்த மற்றும் கோத்தபாயவின் கட்டளைகளை நிறைவேற்றியவர் பொன்சேகா. பொன்சேகா கூறியபடி அரசியல் பொறுப்பாளர் நடேசன் புலித்தேவன் உட்பட்ட முந்நூறுபேர் கொல்லப்பட்டதாக குற்றச்சாட்டு உண்டு. அந்தச்சந்தற்பத்தில் சகல அதிகாரிகளிடமும் தொடர்பிலும் இருந்தவர் கோத்தபாய, மற்றும் பசில் ஆகியோர். ஆனால் இன்று பலியாடாக இருப்பவர்கள் மூன்றாம் நிலையில் உள்ள இராணுவ சிப்பாய்கள்.

ஆனால் காலம் குறிப்பிட்ட வேஷதாரிகள் ஒருவரையும் தப்பாமல் சரியாக வெவ்வேறு விதங்களில் இனங்காட்டிக்கொண்டிருக்கிறது.

இனப்படுகொலைக்கு அஸ்த்திவாரமிட்டு மூர்க்கமான துவேஷத்துடன் நின்று சதிராடியவர். மஹிந்த ராஜபக்க்ஷ.

அனத்துக்கும் கை கொடுத்து சதிசெய்து சர்வதேசத்தை தலையிட விடாமல் வஞ்சகமாக போரை நடத்தி இனப்படுகொலைக்கு உதவிய நாடுகளில் முன்னணியில் நின்றது இந்தியா. 

இந்தியாவின் ஈனமான படுகொலைக்கு வேஷம் கட்டி நாடகங்கள் மூலம் நீலிக்கண்ணீர் வடித்து மக்களை ஏமாற்றி உதவி புரிந்தவர் கருணாநிதி.

மஹிந்தருக்கு வலது கரமாக செயற்பட்ட சரத் பொன்சேகா காலத்தின் கட்டளைப்படி சிறையில் வாடுகிறார். மஹிந்தர் சுற்றி சுருக்கு கயிறு தொங்க கான்ஸர் நோயினால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வந்திருக்கின்றன. அவை ஒருபுறம் இருந்தாலும் மஹிந்தரை உலகம் நிம்மதி இழக்க வைத்திருக்கிறது, அவர் போகுமிடமெல்லாம் அவதிப்படுவது உலகறிந்த உண்மையாக தெரிகிறது.

அடுத்து முண்டுகொடுத்து உதவிய நாடு இந்தியா. இந்தியாவை ஆட்சி செய்யும் காங்கிரஸ் இன்று அரசியலில் ஸ்திரத்தன்மை இல்லாமல் ஊழல் குற்றச்சாட்டுக்களிலும். இலங்கைக்குள் ஊடுருவிவிட்ட சீனாவை எதிர்கொள்ளுவது எப்படி என்ற தள்ளாட்டத்தில் திகைப்பூண்டில் மிதித்துவிட்ட திருடன்போல் தடுமாறுகிறது. தள்ளாட்டம் பெரிய அளவில் தெரிவதற்கு சிலகாலம் எடுக்கலாம் ஆனால் இந்தியாவை ஆட்சிசெய்யும் காங்கிரஸை சனியன் பிடித்துவிட்டது தெளிவாக தெரிகிறது. அத்துடன் அத்தனைக்கும் சகுனியாக நின்ற சோனியாவுக்கு புற்றுநோய் தாக்கி அமெரிக்க மருத்துவமனையில் அழுகிய பாகம் வெட்டி எறிந்ததாகவும் புற்று முற்றுமுழுதாக அப்புறப்படுத்த முடியவில்லை என்றும் காற்றில் அலையென கசிந்த செய்திகள் சொல்லுகின்றன. 

வஞ்சகமாக இனத்துரோகத்துக்கு துணை நின்ற. பசி எனப்படும் சிதம்பரம் ஸ்பெக்ரம் ஊழல் குற்றவாளி என்று, சு சுவாமி சிதம்பரத்தை பெரிய சிக்கலில் மாட்டி விட்டிருக்கிறார். சிதம்பரம் நிம்மதி துறந்து பல நாட்களாகிவிட்டன.

நடக்க திராணியற்றும் தள்ளு வண்டியில் சப்பாணியாக வலம்வந்து சோனியாவுக்கு உடுக்கு அடித்து ஊளையிட்டு நாடகமாடிய நாடகமணி கருணாநிதி,, சகலத்திலும் ஒதுக்கப்பட்டு சாவீட்டில் பெண்களின் ஒப்பாரியை விஞ்சும் விதத்தில் ஓலமிடுவது பார்க்க பரிதாபமாக இருந்தாலும் காலம் கண்ணை கட்டிக்கொண்டு தர்மத்தின் கட்டளையை நிறைவேற்ற முற்படுவதாகவே புலப்படுகிறது.

தர்மத்தின் வாழ்வுதனை சூது கௌவலாம் ஆனால் தர்மம் வெல்லும் அதுதானே கீதையின் விதியும். 

மீண்டும் சந்திப்போம் 

Friday, November 18, 2011

பொன்சேகாவுக்கு 3 வருடச் சிறை.



வெள்ளைக்கொடி விவகார வழக்கு அறியப்பட்ட, விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப்பொறுப்பாளர் நடேசன் மற்றும் சமாதானச் செயலகப் பொறுப்பாளர் புலித்தேவன் ஆகியோர் உள்ளிட்ட சரணடைந்த புலி உறுப்பினர்களைச் சுட்டுக்கொன்றார்கள் என்று முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா கூறியதற்கு எதிராக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கில் பொன்சேகா பொய் கூறினார் என தீர்ப்பளித்த மேல் நீதிமன்றம் அவருக்கு மூன்று வருட சிறைத்தண்டனை விதித்தது.

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இந்த வழக்கின் தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது. நீதிபதி தீபாலி விஜயசுந்தர, பொன்சேகா குற்றவாளி என்ற தீர்ப்பை வாசித்தார். "ட்ரயல் அட்பார்" முறையில் மூன்று நீதிபதிகள் முன்னிலையில் சுமார் ஒன்றரை வருட காலமாக இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வந்தது.

இந்த வழக்கில் பொன்சேகா மீது 3 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தன. நீதிபதிகள் குழுவில் ஒருவரான வராவௌ அனைத்துக் குற்றச்சாட்டுகளில் இருந்தும் பொன்சேகாவை விடுதலை செய்தார். எனினும் ஏனைய இரு நீதிபதிகளும் பொன்சேகாவை இரு குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுதலை செய்த போதும் ஒரு குற்றச்சாட்டில் அவர் குற்றவாளி எனத் தீர்ப்பளித்தனர்.

இறுதிக்கட்ட போரின்போது சரணடையவரும் விடுதலைப்புலி உறுப்பினர்களைச் சுட்டுக் கொல்லுமாறு பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டார் என "சண்டே லீடர்" பத்திரிகையில் வழங்கிய செவ்வியின்போது சரத் பொன்சேகா தெரிவித்திருந்தார். இது பொய்யானது எனக் கூறி சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஊடாக அவருக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டது.

2010ஆம் ஆண்டில் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கில், பாதுகாப்புச் செயலாளரால் மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகப் பொய் கூறியிருந்தமை, அரசுக்கு எதிராக சூழ்ச்சி செய்தமை மற்றும் பொதுமக்களிடையே கருத்து முரண்பாடு, கலகம் என்பவற்றை ஏற்படுத்தியமை ஆகிய மூன்று குற்றச்சாட்டுகள் பொன்சேகா மீது சுமத்தப்பட்டிருந்தன.

நீதிபதிகளான தீபாலி விஜேசுந்தர, வராவௌ மற்றும் சர்பிக் ரஷிக் ஆகியோர் முன்னிலையில் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டுவந்த நிலையில் நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.

தீர்ப்பு அளிக்கப்படுவதற்கு முன்னர் நீதியரசர்களான தீபாலி விஜேசுந்தரவும், சர்பிக் ரஷீக்கும் சரத் பொன்சேகாவுக்கு எதிராகச் சுமத்தப்பட்டுள்ள முதலாவது குற்றச்சாட்டைத் தவிர, மற்றைய இரண்டு குற்றச்சாட்டுகளை நிராகரிப்பதாக அறிவித்தனர். இருந்தபோதிலும், நீதிபதி வராவௌ, சரத் பொன்சேகா மீது சுமத்தப்பட்டுள்ள அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் நிராகரித்து அவரை விடுதலை செய்வதாக அறிவித்தார்.
தொடர்ந்து நீதிபதிகள் குழுவின் தலைவர் தீபாலி விஜேசுந்தர மேற்படி தீர்ப்பை அறிவித்தார்.

தீர்ப்பு அறிவிக்கப்பட்ட செய்தி நீதிமன்றத்துக்கு வெளியில் கூடியிருந்த பொன்சேகாவின் ஆதரவாளர்களுக்கு தெரிய வந்ததும் அவர்கள் பெரும் அமளிதுமளியில் ஈடுபட்டனர். அரசுக்குச் சொந்தமான இரண்டு வாகனங்கள் அடித்துநொருக்கப்பட்டன. பொலிஸார் அங்கு கூடியிருந்தவர்களை விரட்டி கலைத்தனர்.

இந்நிலையில், சரத் பொன்சேகா நீதிமன்ற பின்வாசல் வழியாக வெலிக்கடை சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
நன்றி உதயன் இணையம்.

Tuesday, November 15, 2011

இந்தியாவின் சதியை இனியாவது புரிந்துகொள்வோம்.

இலங்கையின் சமாதான முயற்சிகளில் நோர்வேயின் பங்களிப்பு தோல்வியடைந்தமைக்கான காரணங்களைக் குறிப்பிட்டு நோர்வே அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

நோர்வே வெளிநாட்டு அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த மதிப்பீட்டை நோர்வேயிலிருந்து இயங்கும் நிறுவனம் ஒன்றும், லண்டனில் செயற்படும் அமைப்பு ஒன்றும் இணைந்து மேற்கொண்டுள்ளன.

கத்தரிக்காய் முற்றிவிட்டால் அதிகநாள் மரத்தில் தங்காது, சந்தைக்கு வந்தாகவேண்டும் என்பது விதி.

நோர்வே நாட்டின் (Pஅந்ன்ச் ஒf Pஎஅcஎ) சமாதானத்திற்கான அடமானங்கள், என பெயரிடப்பட்ட அறிக்கை மூலம் ஏற்கெனவே கிழிந்து தொங்கிக்கொண்டிருந்த இந்தியாவின் முகத்திரை அப்பட்டமாக கிழித்தெறியப்பட்டு உண்மை முகம் உலக அரங்கில் அம்பலமாகியிருக்கிறது.

சுதந்திர ஈழத்துக்காக போராடிய விடுதலைப் புலிகளை எப்படியாவது ஒழித்துவிட வேண்டும் என்றே இந்தியா விரும்பியது. சமாதான முயற்சிகள் சீர்குலைய, இந்தியாதான் பிரதான காரணம் என நோர்வே குற்றம்சாட்டியிருக்கிறது.

சிதைக்கப்பட்டு சிறுமைப்படுத்தப்பட்ட ஈழத்தமிழ்ச்சமூகம் இது சம்பந்தமாக இந்தியாவை ஒன்றும் செய்யமுடியாவிட்டாலும், நாகரீகம் தெரிந்த ஐரோப்பிய நாடான நோர்வேயின் அந்த அறிக்கை மூலம் மீண்டும் ஒருமுறை இந்தியாவின் துரோகச் சதி அம்பலமாகி சரித்திரத்தில் இடம்பெற்றிருக்கிறது. நோர்வே மட்டுமல்லாது அறிக்கையின் வெளியீட்டின்போது ஐரோப்பிய யூனியன் பிரதிநிதிகளும், அமெரிக்க பிரதிநிதிகளும் ஒன்றுகூடி அறிக்கை வெளியிட்டமை கவனிக்கப்படவேண்டியவை.

"எதிரியை விடவும் துரோகி மோசமானவன்" இது தமிழினத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள், கூறிய தீர்க்கதரிசனமான சத்திய வாக்கு.

தேசியத்தலைவர் அவர்கள் கூறிய தீர்க்கதரிசனமான வார்த்தைகளை கருத்தில் எடுக்கமறந்து இந்தியாவை நம்பியவர்கள், இன்று அதுபற்றிய நிதர்சனத்தை சிந்திப்பதற்கு நோர்வேயின் Pஅந்ன்ச் ஒf Pஎஅcஎ அறிக்கை சாட்சியாகி நிற்கிறது. தமிழனினத்தின் போராட்டம் இந்தியாவின் வஞ்சகத்தால் அழிக்கப்பட்டதை மத்தியஸ்தம் வகித்த நோர்வே தனது சாட்சியமாக சர்வதேசத்திற்கும், பார்வையாளரான இந்திய மக்களுக்கும் சொல்லியிருக்கிறது.

இந்திய துரோகத்தால் உரிமைப்போரில் தோல்வியடைந்த ஈழத்தமிழினம் நம்பிக்கை ஒன்றுதவிர, மற்ற அனைத்து ஆதாரத்தையும் இழந்து நிற்கிறது. மேற்குலகத்தை மையமாகக்கொண்ட அனைத்து நியாயவாத அமைப்புகளும் அந்த உண்மையை வெவ்வேறு காலகட்டங்களில் ஆவணங்களாக அறிக்கைப்படுத்தியிருக்கின்றன.

இந்தியாவின் சதித்திட்டம் நிறைவுக்கு வந்த இந்த இரண்டு வருடங்களில் நல் மாற்றம் எதுவும் அந்த மண்ணில் அரும்பவில்லை. மாறாக வரலாற்றில் ஈழத்தமிழினம் கண்டறியாத சமூக கலாச்சாரச் சிதைவுகளையும், கட்டாய விபச்சார விடுதிகளின் பிரசன்மங்களையும். கேட்பாரற்ற பதின்ம வயதுப்பெண்கள் காடையர்களால் கட்டாய கர்ப்பம் தரித்த கொடுசெயலையும் தவிர்க்க முடியாமல் சந்தித்திருக்கிறது, இக்கொடுமைகள் தவிர மற்றவைகள் எல்லாம் ஏற்கெனவே அறியப்பட்டுவிட்ட விடயங்கள்.

தமிழினத்தின் சிறுமைக்கு மூல கரும்புள்ளியாக, தேவையில்லாத தலையீட்டை காட்டுமிராண்டிகளின் கூட்டு அரசான இந்தியா செய்து முடித்துவிட்டு இரட்டை வேசமிட்டு நாடகம் நடத்திவந்தது, ஆனால் காலம் இதற்கான மாற்றீட்டை எதோ ஒரு கொடுப்பனவு மூலம் நிவர்த்தி செய்யும் என்பது பின்னர் அறியப்படும்போது. இந்தியா சிந்திக்கக்கூடும்.

தென்கிழக்கு ஆசிய ஆளுமைக்குட்பட்ட பிராந்தியத்தின் அரசியல் அசைவுகளில் இந்தியா தலையிடுவதை சற்று விட்டுக்கொடுத்து தலை சாய்க்கவேண்டிய சங்கடம் ஐநா அமைப்புக்குட்பட்ட சர்வதேசத்திற்கு இருக்கிறது, ஏனைய வளர்ந்த நாடுகளின் கொள்கைகளும் சூழல்களும் அதை அனுமதிக்கின்றன. இந்தவகையில் இலங்கை போராட்டத்தில் இந்தியாவின் தலையீட்டை உலகம் புறந்தள்ளவில்லை.

இந்தியாவிடம் அணுவாயுதம் இருக்கிறது. பாகிஸ்தானிடமும் அணுவாயுதம் உண்டு. (மோடன் மலத்தில் மிதித்துவிட்டால் முழு இடத்தையும் அசிங்கப்படுத்தி விடுவான்) அவற்றை துஷ்பிரையோகம் செய்துவிடாமல் கண்காணிப்பதற்கு இந்நாடுகளை உலக வல்லரசுகள் தம்முடன் இணைத்து வைத்திருக்கின்றன.

ஒன்றாக இருந்து பிரிந்த இந்தியா, பாகிஸ்தான், ஆட்சியாளர்கள் குணாம்ஷத்தில் துளியளவு வித்தியாசம் இல்லாத ஒரே தன்மை கொண்டவர்கள். பொருளாதார வளர்ச்சி இல்லாவிட்டாலும் அணுவாயுதம் இருக்கின்றது என்னும் மாயை இந்தியாவை வல்லரசு என்னும் நகைச்சுவையான கனவை நோக்கி நகர்த்தியிருக்கிறது.

ஆரோக்கியமான இராஜதந்திரம், நிர்வாகத்திறமை, மற்றும் பொருளாதார வளர்ச்சித்திட்டங்கள் எவற்றையும் ஈடுபாட்டுடன் முன்னிலைப்படுத்த ஊக்கம் காட்டாமல், ஊரை அடித்து உலையில்போடும் ஊழல், பொதுச்சொத்துக்களை சூறையாடுதல் போன்றவற்றை வைத்துக்கொண்டு. வல்லரசாகப்போவதாக தனது நாட்டு மக்களை இந்தியா ஏமாற்றுகிறது. இத்திட்டத்தை இல்லாமல்ச்செய்ய பாகிஸ்தான் கண்கொத்திப் பாம்பாக காத்திருக்கிறது. இந்த இரு நாடுகளுக்கும் வேறு வினையும் தேவையில்லை.

இந்திய அரச மேல் மட்டத்தில் காலாகாலமாக இருப்பவர்கள் வர்க்க உணர்வும் காட்டுமிராண்டித்தனமான மனநிலை மேலோங்கி நிற்பதையே கவுரவமாக நினைக்கின்றனர், மந்திரிகள் மற்றும் உயர் மட்டத்துக்கு ஆலோசனை வழங்கும் அரசின் கொள்கை வகுப்பாளர்கள் தமது தனிப்பட்ட விருப்பு வெறுப்பின்படி தவறான தகவல்களை மேல்மட்டத்திற்கு வழங்கக்கூடிய தொய்வான இடைவெளியும் நிறைய பாவனையிலிருந்து வருகிறது. இந்திய வெளியுறவு செயலர் நாராயணனின் விடுதலைப்புலிகள் பற்றிய அணுகுமுறையை விக்கிலீக்ஸ் இணையத்தளம் முன்பு தெரியப்படுத்தியிருந்ததை அறிந்திருக்கலாம்.

நாடுகளுக்கிடையே சிறிய சிக்கல் வரும்போது விரிவாக சிந்திக்கத்தெரியாத இவர்கள் அணுவாயுதத்தையும் அவசரப்பட்டு பாவிக்கக்கூடிய ஆபத்தையும் புரியக்கூடும், என்பதே வளர்ந்த நாடுகளின் அச்சம். சாதாரணமாக பேசித்தீர்க்கக்கூடிய விடயத்தை இவர்கள் சண்டையாக்கி விடக்கூடியவர்கள் என்பதை உலகம் அறிந்திருக்கிறது. இதில் அமெரிக்கா மிகவும் கவனமாக இருப்பதை காணலாம்.

உதாரணத்துக்கு உரிமைக்காக போராடிய விடுதலைப்புலிகளுடன் போரிட்ட ஸ்ரீலங்கா இராணுவத்திற்கு தடைசெய்யப்பட்ட கொடூர ஆயுதங்களையும் இராசயன குண்டுகளையும் இந்தியாவும் பாகிஸ்தானும், மிக குறுகிய நோக்கத்துடன் எந்த குற்ற உணர்வும் இல்லாமல் போட்டிபோட்டு வழங்கியதை பத்திரிகைகள் தொண்டு நிறுவனங்கள் உறுதிப்படுத்தின, இறந்த மக்களின் உடல் எச்சங்களும் அவற்றை அப்பட்டமாக வெளிப்படுத்தின.

இவற்றை புரிந்துகொண்ட மேற்குலகம் இப்பேற்பட்ட குறுமுட்டானவர்களிடம் நேரிடையாக சம்பிரதாய புன்னகையையும், மறுபுறத்தே எதிர்ப்பை காட்டாமல் கண்காணிக்கும் கொள்கைகளையும் தந்தரமாக பேணி சமாளித்து வருகிறது. இத்தொடரின் ஒரு அம்சமாக 2008 ம் ஆண்டு அப்போதய அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் தந்தரமாக இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் ஒன்றை கொண்டுவந்தார்.

உலக ஓட்டத்திற்கு அமைய துட்டர்களுடனும் சம்பிரதாயமாக நட்பு பாராட்டவேண்டிய தேவை அமெரிக்கா, ஐரோப்பா, போன்ற தேசங்களுக்கு இருக்கிறது. மேற்குலகின் இந்த தற்காப்பு தந்திரத்தை இந்தியா பாகிஸ்தான் புரிந்துகொள்ளாமல் தமக்கு அமெரிக்கா ஐரோப்பா போன்ற நாடுகள் சமமான மதிப்பளிப்பதாக திருப்திப்பட்டுக் கொள்ளுகின்றன. உண்மையில் அமெரிக்கா இவர்களை ஆப்கானிஸ்தானின் நிலையில்த்தான் வைத்திருக்கிறதென்பது ஏதாவது ஒரு முறுகல் நிலையின்போது தெரியவரும்.

அமெரிக்கா ஒருபோதும் இந்தியா, பாகிஸ்தானை ஒரு பொருட்டாக கொண்டது கிடையாது. அதற்கு சான்றாக கடந்த செப் மாதம் 29ம் தேதி முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அமெரிக்கா சென்றிருந்தபோது நியூயார்க்கில் உள்ள ஜோன் எப் கென்னடி விமான நிலையத்தில் வைத்து அப்துல் கலாமை, யார் இவர் என கேட்டு அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் சோதனைக்கு உட்படுத்தியிருக்கின்றனர்.

இவர் இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம், இவரிடம் சோதனை நடத்த வேண்டிய அவசியமில்லை என உடன் இருந்த (இந்திய அதிகாரிகள்) தெரிவித்தபோதும். அது செவிடன் காதில் ஊதிய சங்காகவே இருந்திருக்கிறது. அமெரிக்க அதிகாரிகள் எதையும் கண்டுகொள்ளவில்லை. கலாமின், கோட் சூட் மற்றும் ஷூக்களை பிடுங்கி சென்று சோதித்திருக்கின்றனர். சில நிமிடங்கள் கழித்து சோதனை முடிந்தது செல்ல அனுமதித்திருக்கின்றனர். (வெடிபொருட்கள் ஏதாவது இருக்கிறதா என்று சோதனை நடத்தப்பட்டதாம்.) முன்பும் ஒருமுறை அப்துல் கலாம் அவர்களை அமெரிக்க அதிகாரிகள் சோதனைக்குட்படுத்தியதுண்டு.

பொதுவாக தனிமனித பண்பில் நேர்மையில் அப்துல் கலாம் அவர்கள் மிகவும் வித்தியாசமானவர். கலாம் அவர்கள் மென்போக்கான நல்ல மனிதர். என்றாலும், இந்தியா பாகிஸ்தான் விடயத்தில் அமெரிக்கா தனது மனநிலையை மாற்றிக்கொள்ளத்தயாராக இல்லை என்பது நன்கு உணரப்பட்டிருக்கிறது. அமெரிக்க பாதுகாப்பு பிரிவினர் தமது கடமையை சரியாக செய்திருக்கின்றனர்.

பின்னர் அமெரிக்கா வருத்தம் தெரிவித்ததாகவும் மன்னிப்பு கடிதம் அனுப்பியதாகவும், இந்திய அனைத்து ஊடகங்களும் செய்தி வெளியிட்டு சட்டை கொலரை தூக்கி விட்டு பெருமை பாராட்டி சுயமாக திருப்திப்பட்டுக்கொண்டன.

மெற்குலக நாடுகள் இடைஞ்சலுக்கு வருத்தம் தெரிவிப்பதில் ஒருபோதும் பின்நிற்பதில்லை. போலியான படாடோபம் எதையும் அந்நாடுகள் பிடித்து தொங்கிக்கொண்டிருப்பதாகவும் தெரியவில்லை. அந்நாடுகளின் நோக்கமெல்லாம் எவரை எந்த இடத்தில் வைத்திருக்க வேண்டும் என்பதில் மிக நிதானமாகவே இருக்கின்றனர்.

முன்பு ஒருமுறை இந்திய மக்களின் காவல்த்தெய்வங்களான (நடிகர்கள்) சாருக்கான், காதல் கிறுக்கர் கமலஹாசன், ஆகியோரும் அமெரிக்க விமான நிலைய அதிகாரிகளின் சோதனைக்குட்பட்டு நீண்ட நேரம் தடுத்து விசாரிக்கப்பட்டபின் விடுவிக்கப்பட்டிருந்தனர். அப்போதும் அமெரிக்க அதிகாரிகள் தடங்கலுக்கு பெருந்தன்மையுடன் வருத்தம் தெரிவித்தது பலர் அறிந்திருக்கலாம்.

அப்போதும் இந்திய ஊடகங்கள் மற்றும், கற்பூரதீபம் காட்டி பால் அபிஷேகம் செய்யும் ரசிகர்கள்கூட்டமும், அமெரிக்காவுக்கு தெய்வக்குத்தம் தாக்கும் பேரிய அபாயம் இருப்பதாக கருத்து வெளியிட்டு மிரட்டிய செய்திகள் பாகம் பாகமாக பத்திரிகைகள் வெளியிட்டன.

ஈழத்தமிழர் பிரச்சினையில் நீண்டகாலம் மத்தியஸ்தம் வகித்த நோர்வேயின் அணுகுமுறையிலும் ஐயுறவான விமர்சனங்கள் தமிழர்தரப்பிலிருந்து வந்திருக்கிறது. இருந்தும் நோர்வே நாட்டின் அறிக்கை பல உண்மைகளை வெளிக்கொண்டுவரும் உத்தியோகபூர்வ ஆவணமாக உலகம் எடுப்பதற்கு காரணங்கள் நிறைய இருக்கின்றன.

இந்தியாவின் அவதூறான பிரச்சார நெருக்கடிதான் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் உண்மையான நோக்கம் பரிமாணம், மேற்குலகத்தால் புரிந்து கொள்ளப்படவில்லை என்றும். உலக பயங்கரவாதத்தின் மூலம் விடுதலைப்புலிகள் இயக்கம் என தவறான புரிதல் உலகத்தில் பரப்பப்பட்டு இருந்தது என்றும் அறிக்கை சொல்லுகிறது.

நோர்வேயின் மதிப்பீட்டின் பிரகாரம் சமாதான பேச்சுவார்த்தையை அழிக்கவும் தமிழர் தரப்பு வாழ்வாதாரம் உரிமை போன்றவற்றை கிடக்காமல் செய்யவும் தேவையற்ற வகையில் இந்தியா தலையிட்டு நாடகமாடி மன்னிக்கமுடியாத வஞ்சகம் புரிந்திருக்கிறது.

சிங்களவனுடன்தான் உரிமைக்கான போரை தமிழன் நடத்தினான் என்று பொதுவான வரலாற்று பதிவு இருந்தாலும், நேரடியாகவும் மறைமுகமாகவும் இந்தியாவுடனும் தமிழினம் இரண்டுமுறை தேவையற்று சக்தியை விரையமாக்கவேண்டிய துன்பியல் திணிக்கப்பட்டிருக்கிறது. இன்னும் இந்தியாவுடன் போராடவேண்டியிருக்கும் என்ற கவலை வருங்கால சந்ததி உணர்ந்துகொள்ளும்.

இந்திய அரசின் தலையீடு இல்லாமல் சுயமாக தமிழன் தீர்வுகாணவேண்டும், அதுதான் இலகுவானதும் கூட. அந்த வல்லமையும் தமிழினத்திடம் நிறையவே இருந்தது, இருந்தும் தேவையற்ற இந்திய மத்திய அரசின் தலையீட்டை தடுக்கும் சக்தியும் இந்தியாவின் தமிழ்நாட்டின் கையில்த்தான் உள்ளது.

ஈழ விடுதலை விடயத்தில் தமிழகத்து அரசியல் கட்சிகளை தவிர்த்து, தமிழகத்து மக்களின் மனநிலை இந்திய மத்திய அரசின் கொள்கைக்கு முரண்பட்ட விதமாகவே காலாகாலமக இருந்து வருகிறது. ஆனால் அங்குள்ள அரசியல் கட்சிகளின் ஏமாற்றிலிருந்து தப்பி மக்களால் எதுவும் முடியவில்லை.

2009 இறுதிப்போரின்போது தமிழ்நாட்டில் முத்துக்குமார் உட்பட 18 தமிழ் உணர்வாளர்கள் தீக்குளித்து இறந்திருந்தனர். இறுதியாக 2011ல் மூன்று தூக்குத்தண்டனை கைதிகளை காப்பாற்ற போராடிய இளம் குருத்து செங்கொடி. தனது ஆசாபாசங்கள் அனைத்தையும் துச்சமென துறந்து தீக்குளித்து இறந்து போனார். இவ்வளவு ஒப்பற்ற உணர்வு ஒரு ஈழத்தமிழனின் உணர்வுகளுக்கு மீறிய ஒன்றாகவே காணலாம்.

ஈழத்தமிழன் தனது உரிமையை மீட்க மண் மீட்புக்காக போராடிச்சாகலாம் வேறு வழியுமில்லை, ஆனால் தமிழகத்து இளம் உறவுகள் ஏதற்காக தீக்குளித்து உயிரை போக்கவேண்டும். தமிழக ஆட்சியில் இருந்தவர்கள் குறிப்பாக பல வருட அனுபவசாலியான முதியவர் கருணாநிதி ஒரு ஊசி முனையளவும் இதுபற்றி சிந்தித்திருக்கவில்லை. அவர் சிந்தித்திருந்தால் மத்திய அரசால் இப்பேற்பட்ட சதிகளை அரங்கேற்ற முடிந்திருக்காது. அல்லது அவரது அரசியல் வாழ்க்கை இவ்வளவு கீழ்த்தரமாக அஸ்த்தமித்திருக்க முடியாது.

ஈழத்தமிழர்கள் போராடி இறந்திருக்கிறார்கள், தற்கொலை படையாகி உயிர்க்கொடை ஈந்திருக்கிறார்கள், அது அவர்களுக்கு சுயநலன் சார்ந்த விடையமாகும், ஆனால் அவைகளை விட அதிகமான இன உணர்வும் மொழிப்பற்றும் உயிரை துச்சமென மதிக்கும் ஓர்மமும் தமிழகத்து உறவுகளுக்கு இருந்திருக்கிறது. ஆனால் தமிழகத்தை ஆண்ட ஆண்டுகொண்டிருக்கிற ஆட்சியாளர்களுக்கும் ஒத்தூதும் பக்கவாத்திய கட்சிகளுக்கும் அந்த ஓர்மமும் உணர்வும் அவர்களின் தனித்தன்மயும் இன்னும் புரியப்படவில்லை.

ஈழப்போராட்டத்தை அழிக்க தமிழக அரசியல்வாதிகள் செய்த சூழ்ச்சிகள்தான் பல உயிர்களை தீக்குளிக்க வைத்ததோடு மத்திய அரசாங்கம் தலையிட்டு தலைவிரித்து ஆடவைத்தது. இதில் கருணாநிதி ஜெயலலிதா இருவரின் பங்கும் கூடிக்குறையாமல் உண்டு. ஒவ்வொரு சந்தற்பத்திலும் ஒருவருக்கொருவர் சளைக்காமல் மிக வஞ்சகமாக காரியம் சாதித்திருக்கின்றனர். இந்த இளக்காரத்தின் பிரதிபலிப்பு இறுதியில் சோனியா சிதம்பரம் மன்மோஹன் ஆகியோரின் ஆட்டத்திற்கு உதவியிருக்கிறது.

தமிழகத்து அரசியல் வியாதிகள் ஈழ பதத்தை வஞ்சகத்திற்காக உபயோகிக்காமல் இருந்திருந்தால், தமிழக மக்களின் எழுச்சி, போராட்டம், மத்திய அரசை கட்டுப்படுத்தியிருக்கும். ஈழம் அழிவில் வீழ்ந்திருக்காது. இதை இன்றும் உணர்வுடன் துடிக்கும் தமிழகத்து மக்கள் இனியாவது உணர்ந்து கொள்ளவேண்டும்.போராட்டத்திற்கு ஆதரவு என்று நடித்தவர்களை நம்பி ஆட்சியில் அமர்த்தி தமிழினம் எமாந்து போயிருப்பது உண்மையே.

தமிழ் நாட்டின் மக்களிடையே ஈழத்திற்கான ஆழமான ஆதரவு இருப்பதை எவராலும் மறுக்கமுடியாது. எவர் ஈழத்தமிழினத்திற்கு எதிராக செயற்படுகின்றனரோ அல்லது கருத்து சொல்லுகின்றனரோ அவர் எவ்வளவு பெரிய வேந்தராக இருந்தாலும் ஒதுக்கப்பட்டே இருக்கின்றனர். அதுதான் தமிழகத்தில் நடந்திருக்கிறது. எந்த ஒரு கட்சியோ பத்திரிகை ஊடகமோ சினிமாவோ இதில் விதிவிலக்காகிவிடவில்லை.

கருணாநிதியின் தோல்வி, ஜெயலலிதாவின் வெற்றி, பமாக, விசி திருமாவின் தோல்வி, விஜயகாந்தின் வெற்றி. காங்கிரசின் படுதோல்வி அனைத்தும் எவர் ஏற்றுக்கொண்டாலும் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் ஈழ விவகாரமே நிர்ணயித்திருந்தது.

பத்திரிகைகளும் அந்த நாடித்துடிப்பு அறிந்துதான் பயணிக்கின்றன. இந்திய சினிமா கூட ஈழத்தாக்கத்திலிருந்து தப்பிவிடவுமில்லை. உள்ளூர வஞ்சகம் இருந்தாலும் வெளியே ஈழ ஆதரவுடனே படம் எடுத்தால்த்தான் ஓடும் என்ற உபாயமும் அனைவரும் அறிந்தே இருக்கின்றனர்.

சமீபத்தில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ஏழாம் அறிவு, இப்படத்தில் பிரதம பாத்திரத்தில் நடித்திருப்பவர் சூர்யா, இவர் ஒரு காலகட்டத்தில் அசின் என்ற நடிகைக்காக வக்காளத்து வாங்கப்போய், மற்றும் ஸ்ரீலங்காவின் ஐபா திரைப்படவிழாவில் பங்குபற்றிய சல்மான் கானுடன் இணைந்து கொண்டாரென சர்ச்சைக்குள்ளாகி தள்ளி வைக்கப்பட்டிருந்தவர், இருந்தும் அவர் தனது மார்க்கெட்டை நிலை நிறுத்தும் நோக்கோடு தமிழினத்துரோகி கருணாநிதியின் பேரனின் தயாரிப்பில் தமிழை முதன்மைப்படுத்துவதுபோலவும் ஈழப்போராட்டத்தை நியாயப்படுத்துவது போலவும் இரண்டு வசனங்களை படத்தில் இணைத்து தந்தரமாக வெற்றி பெற்றிருக்கிறார்.

7ம் அறிவு படம், தமிழ் பேசும் உலகின் பெருத்த பொக்கிஷம் என்றும் ஈழப்போராட்டத்தை விஞ்சிய சாதனையென்றும் பலதரப்பட்ட விமர்சனங்கள் ஊடகங்களில் மாரி மழைபோல பொழிந்து படத்தை வெற்றிபெற வைத்தது. குறிப்பிட்டவர்களின் உள் நோக்கம் எதுவாக இருந்தாலும் என் தலைவனின் அப்பழுக்கற்ற பண்பை நேர்மையை சுத்த வீரத்தை அடியொற்றி தமிழினம் படையெடுக்கிறதென்றால் அந்தப் பெருமை தமிழினத்துக்கு என்றென்றும் பெருமையே.

கடைசி தகவலின்படி பாமக கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட வேல்முருகன் என்ற ஒருவர் புதிய கட்சியை தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்களின் பிறந்த நாள் அன்று தொடங்கப்போவதாக அறிவித்திருந்தார், இருந்தும் வேல்முருகன் என்பவர் தேசியத்தலைவர் வே பிரபாகரன். அவர்களின் பிறந்த 26ம் திகதியை சரியாக அறிந்துகொள்ளவில்லை என்று படுகிறது. இருந்தும் தேசியத்தலைவரின் பெயரின் நிழலில் பயணித்தால்த்தான் கரை சேரமுடியும் என அவர் நம்புகிறார்.

எது எப்படியிருப்பினும் கால ஓட்டத்தில் இந்திய பேராதிக்கம் இட்டுச்சென்ற கரும்புள்ளி தமிழினத்தின் இதயத்தில் வடுவாக வீழ்ந்திருக்கிறது. இனி வரும் காலங்களிலும் தமிழினத்தின் விடுதலைக்காக போராடவேண்டிய பொறுப்பு ஈழத்தமிழனுக்கே உண்டு தமிழகத்தின் உணர்வுள்ள ஆதரவு நிச்சியம் ஈழத்தமிழினம் கரைசேர உதவும் என்பது நிதர்சனமானது.

இந்திய பேராதிக்கம் தமிழினத்திற்கு வஞ்சகம் செய்து சிங்கள ராஜபக்க்ஷவை தூக்கிவிட்டது. ஆனால் ராஜபக்க்ஷ இந்தியாவை, சீன பேராதிக்கத்திடம் இலகுவாக பிடித்துக்கொடுத்திருக்கிறார். இனி வரும் காலங்கள் இந்தியா சீன சிக்கலை களைவதற்காக அதிக விலை கொடுக்கவேண்டியிருக்கும்.

ஈழதேசம் இணையத்திற்காக,
கனகதரன்.
நன்றி ஈழதேசம் இணையம்.

Sunday, November 13, 2011

இறுதிப் போரில் மனித உரிமை மீறல்கள் எவரும் குற்றமிழைத்திருந்தால் நடவடிக்கை; நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை வெளியானதும் எடுக்கப்படும் என்கிறார் மஹிந்த.

NDTV
இறுதிப் போரின்போது மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றன என்று நல்லிணக்கத்துக்கான படிப்பினைகள் ஆணைக்குழு தனது அறிக்கையில் தெரிவித்தால் அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. குற்றமிழைத்த யாரையும் தான் பாதுகாக்கமாட்டார் என்றும் அதற்கான தேவை தனக்கு இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

தெற்காசிய பிராந்திய நாடுகளின் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக மாலைதீவு சென்றிருக்கும் ஜனாதிபதி அங்கு இந்தியத் தொலைக்காட்சியான என்.டி.ரி.விக்கு அளித்த பேட்டியிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.
அவரது பேட்டியின் விவரம் வருமாறு:

என்.டி: தற்போதைய மீனவர் பிரச்சினை குறித்து...?
மஹி: மீனவர்கள் பிரச்சினை குறித்து உங்கள் பிரதமருக்கு எல்லாவற்றையும் விளக்கி இருக்கிறேன். கடந்த ஒரு வருடமாக, இலங்கைக் கடலுக்குள் வந்து மீன்பிடிக்கும் 40,000 படகுகளுக்கு எதிராக நாங்கள் சண்டையிட்டு வருகிறோம். இதனால் எங்களுக்குத்தான் பிரச்சினை. ஆனால், உங்கள் பிரதமரின் வேண்டுகோளின் பேரில் மீனவர்கள் எவரையும் நாங்கள் கைது செய்வதில்லை. இப்போது நாங்கள் அவர்களை அனுமதிக்கிறோம். முன்னர் இந்த விடயத்தை கடற்படையினரே கையாண்டனர். ஆனால் அதனைக்கூட நிறுத்துமாறு இப்போது உத்தரவிட்டுவிட்டோம்.

என்.டி: இந்தப் பிரச்சினை இந்தியாவில் பெரும் அரசியல் சிக்கலாக இருக்கிறதே?
மஹி: ஆமாம்! யாழ்ப்பாணத் தமிழர்கள் மீளக்குடியமர்த்தப்பட்டு விட்டார்களா? அவர்களுடைய வாழ்க்கை நிலைமை நன்றாக இருக்கிறதா அல்லது மோசமாக இருக்கிறா? நாங்கள் அவர்களுக்கு உதவலாமா என்றெல்லாம் அவர்கள் (தமிழ் நாட்டு அரசியல்வாதிகள்) என்னிடம் கேட்கிறார்கள். அவர்கள் ஏன் தமது மீனவர்களுக்கு உதவக்கூடாது? அவர்களே அவர்களுடைய உரிமைகளைப் பிடுங்கிக் கொண்டார்கள். இது ஏமாற்றம் தரும் விடயம்தான். இதனை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

என்.டி: ஆக...., இலங்கைத் தமிழ் மீனவர்கள்தான் அங்கு மீன்பிடிக்க வேண்டும் என்கிறீர்களா?
மஹி: இல்லை. கொடுத்து வாங்கும் கொள்கையை (give and take policy) கடைப்பிடியுங்கள் என்றுதான் சொல்கிறோம். அதைப் பற்றி நாங்கள் கலந்துரையாட வேண்டும். அத்தோடு இந்த விடயத்தில், எமது தமிழ் மீனவர்களோடு பேசுவதே சிறந்த விடயம் என்று நான் சொல்வேன். இலங்கையில் இருந்தும் இந்தியாவில் இருந்தும் மீனவர்களைத் தெரிவு செய்து அவர்களைப் பேச அனுமதித்தால் அவர்களே ஒரு தீர்வைக் காண முடியும். இந்தப் பிரச்சினையில் அரசுகள் நுழைவதை நான் விரும்பவில்லை.

என்.டி: நல்லிணக்க முயற்சிகள் எப்படி இருக்கின்றன. எல்லாமே மந்த கதியில் நகர்வதாகத் தெரிகிறதே?
மஹி: இல்லை, எல்லாமே மிக வேகமாக நகர்கின்றன. கடந்த இரண்டு வருடகாலங்களில் 95 சதவீதமான மக்களை நாங்கள் மீளக்குடியமர்த்தி இருக்கிறோம்.

என்.டி: நான் அரசியல் நல்லிணக்க முயற்சி பற்றிப் பேசுகிறேன்...
மஹி: அரசியல் ரீதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நாங்கள் ஏற்கனவே பேச்சுக்களை ஆரம்பித்துள்ளோம். கடந்த ஒன்றரை மாதங்களாக அவர்கள் சரியான "பிஸி'. அமெரிக்கா, பிரிட்டன் என்று சுற்றித் திரிந்து தங்களுக்காகப் பிரசாரம் செய்து வருகிறார்கள்.

இது ஓர் உள்ளக விவகாரம். அவர்கள் எதற்காக இப்படிப் பறந்து பறந்து பிரசாரம் செய்கிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. இறுதியில் இது அரசு சார்ந்த ஒரு விவகாரமா க மட்டுமே இருக்கும். எப்படியும் அவர்கள் எங்களுடன்தான் கலந்துரையாடியாக வேண்டும். ஏன் சொல்கிறேன் என்றால் பிரச்சினையைத் தீர்க்க குழு ஒன்றை நாங்கள் நியமித்திருந்த போதும் அவர்கள் இன்னும் அதற்கான தமது பிரதிநிதிகளை நியமிக்கவில்லை. ஆனால் ஊர் சுற்றுகிறார்கள்.

நாடாளுமன்றத்தில் 23 கட்சிகள் இருக்கின்றன. அதனால் நாடாளுமன்றத் தெரிவுக் குழு ஒன்றை நாம் நியமிக்க வேண்டியிருக்கிறது. அதுதான் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான மிகச் சிறந்த இடம். அரசும் எதிர்க்கட்சிகளும் ஒரேயிடத்தில் அமர்ந்து பேச விட்டால் அவர்கள் எனக்குத் தீர்வு ஒன்றைத் தருவார்கள். பின்னர் அதனை நிச்சயம் நடைமுறைப்படுத்தலாம்.

என்.டி: 2009இல் போர் முடிந்ததில் இருந்து மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் பலமாக எழுப்பப்படுகின்றனவே...
மஹி: அதற்கான எதிர்வினை என்ன என்று பார்த்திருக்கிறீர்களா?

என்.டி: ஆம்! பார்த்திருக்கிறேன். ஆனால், படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தனது அறிக்கையை எப்பொழுது வேண்டுமானாலும் உங்களிடம் கையளிக்கும் என்ற நிலை இருக்கிறது. அந்த அறிக்கையைப் பகிரங்கப்படுத்துவீர்களா?
மஹி: அடுத்த 19ஆம் திகதி அறிக்கை கையளிக்கப்படும். நான் அதனைப் பெற்று முதலில் படிக்க வேண்டும். அதன் பின்பே எல்லாம். அது ஒன்றும் பொதுமக்கள் ஆவணம் அல்ல. அதனைப் பகிரங்கப்படுத்த வேண்டுமானால் நான் அதனை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அதன் பின்னரே அது பகிரங்க ஆவணமாகும்.

என்.டி: அந்த அறிக்கையில் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் பற்றி ஏதாவது சொல்லப்படும் என்று பயப்படுகிறீர்களா?
மஹி: அப்படி அவர்கள் குறிப்பிட்டால் அதனடிப்படையில் நாங்கள் நடவடிக்கை எடுப்போம். யாரையும் நான் பாதுகாக்கப் போவதில்லை. அந்தத் தேவையும் எனக்கில்லை.

என்.டி: அப்ப அது ஒரு மிக நீண்ட செயற்பாடாகவே இருக்கும் என்கிறீர்கள்..?
மஹி: ஆமாம்! போரின் கடைசி 10 நாள்கள் பற்றியே எல்லோரும் பேசுகிறார்கள். ஆனால் கடந்த 30 வருடங்கள் பற்றி யாரும் பேசுவதில்லை. எத்தனை மக்கள் கொல்லப்பட்டார்கள்? எத்தனை தமிழ்த் தலைவர்கள் கொல்லப்பட்டார்கள்? உங்கள் பிரதமர்கூடக் கொல்லப்பட்டார். எனவே இந்த விடயங்கள் எல்லாம் வெறுமனே.... உங்களுக்குப் புரியும்தானே.
நன்றி, உதயன் இணையம்.

Wednesday, November 9, 2011

நாட்டை ஆட்டிப்படைக்கும் நவம்பர்

நவம்பர் மாதம் என்பது அனைத்து மக்களுக்கும் ஒரு வரபிரசாதமான மாதம். ஏனெனில் அந்த மாதம் வருணபகவான் மழையை வாரி வழங்கும் மாதம்.

அதனுடன்தான் விவசாயப் பெருமக்களின் அனைத்து விவசாய நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்படுகின்றது.

அந்த விவசாய மக்களின் வியர்வையில் நாம் எமது வயிற்றுப் பசியையும் போக்குகின்றோம்.

இது இவ்வாறிருக்க கார்த்திகை விளக்கீடும் இம் மாதத்தில் வருகை தந்து எமது நாட்டைப் பிரகாசிக்க வைக்கின்றது. எங்கும் ஒளிமயமான மாதமும் பயனுள்ள மாதமும்தான் இந்த நவம்பர் மாதம்.

நவம்பர் மாதத்தில் பிறந்தவர்கள் ஏதோ வகையில் வலிமை பெற்றவர்கள் என்று சோதிடர்கள் கூறுகின்றார்கள். சோதிடர்களின் கருத்தை ஒரு புறத்தில் வைத்துக்கொண்டு நாம் கண் முன்பாக காணும் சிலரை பாருங்கள்.

விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் 26. 11. 54 இல் பிறந்தவர். இலங்கை ஐனாதிபதி மகிந்த ராஐபக்ச அவர்கள் 18. 11. 45 இல் பிறந்தவர். எதிரும் புதிருமான இந்த இருவரும் நவம்பர் மாதத்தில் பிறந்திருக்கிறார்கள்.

இதே போல் முன்னாள் ஈ.பி.ஆர்.எல்.எவ் தளபதியும் ஈ.பி.டி.பி தலைவருமாகிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா 10. 11. 57 இல் பிறந்தவர். விடுதலைப்புலிகளின் முன்னாள் தளபதியும் அமைச்சருமான வினாயகமூர்த்தி முரளீதரன் என்னும் கருணா அம்மான் 07. 11. 66 இல் பிறந்தவர்.

வலிமை என்பதை நீதிக்காகவும் பயன் படுத்தலாம், அநீதிக்காகவும் பயன் படுத்தலாம்.

இலங்கையில் மட்டும் நவம்பரில் பிறந்தவர்கள்தான் வலிமை பெற்றவர்களாம்.
வே. பிரபாகரன், மகிந்தராஐபக்ச, டக்ளஸ் தேவானந்தா, கருணா...இந்த நால்வரில் யார் வலிமை பெற்றவர்கள்?

எனவே இவர்களில் யார் நல்வர்கள், யார் கெட்டவர்கள் என மக்கள் ஆகிய நீங்கள் தீர்மானித்துக் கொள்ளுங்கள். ஆனால் நவம்பர் மாதம் ஒரு நல்ல மாதம் என்பதை மறந்து விடாதீர்கள்.

நன்றி tamil cnn.

Tuesday, November 8, 2011

7ஆம் அறிவு எமக்காகவா.. ?



essay இன்னும் என்ன தோழா எத்தனையோ நாளாய் நம்மை இங்கு நாமே தொலைத்தோமே, நம்ப முடியாதா, நம்மால் முடியாதா, நாளை வெல்லும் நாளாய் செய்வோமே, யாருமில்லை தடைபோட உன்ன மெல்ல எடை போட நம்பிக் கையில் நடை போடச் சம்மதமே, என்ன இல்லை உன்னோடு, ஏக்கம் என்ன கண்ணோடு வெற்றி என்றும் வலியோடு பிறந்தி டுமே, வந்தால் மலையாய் வருவோம், வீழ்ந்தால் விதையாய் விழுவோம் மீண்டும் மீண்டும் எழுவோம்''

இன்னும் என்ன தோழா எத்தனையோ நாளாய் நம்மை இங்கு நாமே தொலைத்தோமே, நம்ப முடியாதா, நம்மால் முடியாதா, நாளை வெல்லும் நாளாய் செய்வோமே, யாருமில்லை தடைபோட உன்ன மெல்ல எடை போட நம்பிக் கையில் நடை போடச் சம்மதமே, என்ன இல்லை உன்னோடு, ஏக்கம் என்ன கண்ணோடு வெற்றி என்றும் வலியோடு பிறந்தி டுமே, வந்தால் மலையாய் வருவோம், வீழ்ந்தால் விதையாய் விழுவோம் மீண்டும் மீண்டும் எழுவோம்''

இப்போது எங்களின் காதுகளுக்குள் புகும் பாடல் வரிகள் இவை. இதனை விட அதே பாடலில் "நம் தலைமுறைகள் நூறு கடந்தாலும் தந்த வீரங்கள் மறக்குமா? கழுத்தோடும் ஒரு ஆயுதத் தைத் தினம் களங்களில் சுமக்கின்றோம். பனிமூட்டம் வந்து படிந்தென்ன சுடும் பகலவன் மறையுமா? அந்தப் பகை மூட் டம் வந்து பணியாமல் எங்கள் இருவிழி உறங்குமா? '' இந்தப் பாடல் வரிகள் உறங்கிய எமது தமிழினத்தை மெல்லத் தட்டியெழுப்பியிருக்கிறது.

ஈழத் தமிழன் வன்னியில் பட்ட அவலத்தை, இலங்கை மண்ணில் ரத்தம் தோய்ந்த நிலையில் வாழ்ந்த தமிழினத் தின் வரலாற்றுக் குறிப்புக்களை எடுத்துச் சொல்லியிருக்கின்றது. உலகில் தமிழீழ விடுதலைப் புலிகள் மாத்திரம் உயர்வாகப் பயன்படுத்திய "சயனைட் '' குப்பியின் மகத்துவத்தை இரண்டே வரிகளில் பாடலாசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் தீபாவளிக்கு வெளி வந்து ஆறறிவு படைத்த உலகத் தமிழர் களை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் 7 ஆம் அறிவு திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் வரிகளே அவை. உணர்வுள்ள தமிழர் களின் உள்ளங்களைக் களவாடியிருக் கின்றது இந்தத் திரைப்படம். இந்தப் பாடல் வரிகளுக்கு நக்கீரன் இணையத் தளம், தமிழீழ விடுதலைப் புலிகளின் போரியல் காணொளிகளை இணைத்து வெளியிட்டுள்ளது. பாடல் வரிகளும் தமிழீழ மண்ணில் நடந்ததை சுட்டிக் காட்டுவதாவே அமைந்திருக்கின்றது.

உலகத் தமிழர்களின் உணர்ச்சிகள் மீண்டும் ஒரு முறை தூண்டப்பட்டிருக்கி ன்றது. இதனை விட படத்தின் கதை வசனங்களிலும் கூட இலங்கை தமிழர்கள் விடயத்தை விட்டு வைக்கவில்லை.

" நம் மள மலேசியாவில அடிச்சாங்க, இலங்கையில் அடிச்சாங்க இப்ப தமிழ் நாட்டுக்கே வந்து அடிக்கிறான். நம்மளால அவன்கிட்ட இருந்து ஓட மாத்திரம்தான் முடியுதில்லே ? , இப்ப ஒவ்வொரு நாட்டிலேம் அடி வாங்கிறம் பார்த்தியா ? திருப்ப அடிக்கணும் '' என்ற சூர்யாவின் பேச்சுக்கு " வீரம் வீரம் என்று சொல்லித்தானே பக்கத்து நாட்டில சண்டை போட்டாங்க. ஜெயிக்க முடிஞ்சுதா ? செத்துத்தானே போனோம்'' என்று ஸ்ருதி பதிலளிக்கின்றார்.

அதற்கு சூர்யா, "வீரத்துக்கும் துரோகத்துக்கும் வித்தியாசம் தெரிஞ்சுக்கோ. ஒரு தமிழனை ஒன்பது நாடு சேர்ந்து கொல்லுறதுக்கு பேரு வீரமில்ல... துரோகம் ''

இலங்கையின் இறுதிப் போரில் நடந்த கொடூரத்தை அச்சொட்டாய் சொல்லுகின்றது கதை வசனம். உலகெங்கிலும் உள்ள குறிப்பாக ஈழத்தமிழர்களிடையே உணர்ச்சிகளை மீண்டும் முறுக்கேற்றியிருக்கிறது 7 ஆம் அறிவு. அடுத்த தலைமுறைக்காய் எமது வரலாறுகளை எழுதாத எம்மை இந்த இறுதி யுத்த அழிவுகளையாவது எழுதிவைக்க முயன்றிருக்கின்றது ஏழாம் அறிவு.

அதையும் 7 ஆம் அறிவில் சொல்லி வைக்க தவறவில்லை இயக்குநர் முருகதாஸ். படத்தின் இறுதிக் கட்டத்தில் சூர்யா, "நம்ம வரலாற்றை நாம தெரிஞ்சு வைச்சுக்கிறது முக்கியம். நம்ம வீரமும் பெருமையும் நம்மளுக்கு தெரியக் கூடாதெண்டு நம்ம ஆண்ட ஒவ்வொருவனும் திட்டம் போட்டு மறைச்சிருக்கிறாங்க. மதமாற்றம், மொழி மாற்றம், என்று நமக்கான அடையாளத்தை மறைச்சிட்டாங்க. போகிப் பண்டிகையில பழசை எரிக்கணும் என்று சொல்லி ஓலைச் சுவடியை எரிக்க வைச்சாங்க. அதைவிடக் கொடுமை தமிழர்களின் வரலாறு, கண்டுபிடிப்புக்கள், ஆயிரக்கணக்கான அபூர்வமான புத்தகங்கள் இருந்த இலங்கை யாழ்ப்பாணம் நூலகத்தை முழுசா எரிச்சு சாம்பலாக்கிட்டாங்க. எல்லாத்தையும் இழந்திட்டு சின்ன சின்ன நாட்டையெல்லாம் அண்ணாந்து பார்த்து அவங்க பின்னாடி ஓடிக் கொண்டிருக்கின்றோம்''

வரலாறு என்பது எழுதப்படும்போது ஆளும் வர்கத்தார் தமக்கு ஏற்றதாய் எழுதுவதே வழமை. இங்கேயும் 7 ஆம் அறிவிலும் அவ்வாறே ஒரு வரலாறு எழுதப்பட்டிருக்கிறது. தமக்குச் சாதகமாய் தம்மை உத்தமர்களாய் காட்டிக் கொள்ள முயன்றிருக்கிறான் ஒரு வன். அவன் யார்? அதை விட எப்போதும் போல இந்திய தே\ம் ஈழத் தமிழர்களை இங்கேயும் கை கழுவி விட்டிருக்கின் றது. கை கழுவியது என்று சொல்வதை விடத் தமது துரோகத்தை மெல்ல மறைக்க முயன்றிருக்கின்றது.

"கைகட்டி வாய்பொத்தி கைக்கூலி யாய் நின்று கண்ணகிக்குச் சிலையெடுத்து கவிபாடும் கறுப்பாடு, தம்பி தம்பி என்று தமிழனை நம்ப வைத்து தக்க சமயத்தில் தலையறுக்கும் கருங்காலி, இத் தாலி எருமைக்கு தப்பாது தாளமிடும் சப்பாணி '' இது ஒரு கவிஞன் அவனை விமர்சித்த வரிகள். இந்த விமர் சனங்கள் போதும் அவன் யாரென உங்கள் மனக்கண்ணில் தோன்ற.
வேறு யாருமல்ல தமிழை வைத்தே தமிழர்களை அழித்த கருணாநிதிதான். தன்னை உத்தமனாய் உருவகிக்க அவன் எழுதும் புது வரலாறே இந்த 7 ஆம் அறிவு. 7 ஆம் அறிவுக்கும் கருணாநிதிக் கும் என்ன சம்பந்தம். நேரடியாய் களமிறங் கினால் தன்னை எட்டி உதைப்பார்கள் தமிழ் மக்கள் என்பதால் பேரனைக் கொண்டு காரியத்தைக் கனகச்சிதமாய் முடித்திருக்கின்றார்.

கருணாநிதியின் மகன் ஸ்டாலின். கடந்த ஆட்சிக் காலத்தில் துணை முதல் வராக இருந்தவர். அவரின் மகனான உதயநிதி ஸ்டாலின் ஊடகவே இந்தக் காரியத்தை தொடங்கியிருக்கிறார் கரு ணாநிதி. உதயநிதியின் ரெட்ஜெயன்ட் மூவிஸே 7 ஆம் அறிவு திரைப்படத்தைத் தயாரித்துள்ளது. ஆக மொத்தத்தில் கருணாநிதியின் எண்ணங்களை பேரன் செயல்படுத்தி படமாக்கியிருக்கின்றார்.

கருணாநிதி நேரடியாகக் களத்தில் இறங்காதது ஏன் ? தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் அவர்கள் ஈழத்தமிழர்களாக இருந்தாலும் சரி தமிழக தமிழ் மக்களாக இருந்தாலும் சரி தன்னை ஏற்றுக் கொள்ள மாட் டார்கள் என்பது வெளிச்சம். கருணா நிதியைத் தமிழினத் துரோகியாகவே தமிழ் மக்கள் பார்க்கின்றனர். எனவே நேரடியாக நுழைந்தால் இந்தத் திரைப்படம் வெற்றி பெறாது என்பதுடன் தமிழ் மக்களும் இந்த வரலாற்றை ஏற்கமாட்டார்கள்.

எனவே தனது பேரனின் ஊடாக அதனை நடைமுறைக்குக் கொண்டு வர முயன்றிருக்கின்றார் கருணாநிதி.

இந்தத் திரைப்படத்துக்காய் தனது முழு வளங்களையும் உயர்ந்தபட்சம் கருணாநிதி பயன்படுத்தியிருக்கின்றார். இதுவரையில் உதயநிதி ஸ்டாலினின் "ரெட்ஜெயன்ட் மூவிஸ்" தயாரிப்பில் பல படங்கள் வெளியாகியுள்ளன. அவற்றின் விளம்பரங்கள் தொடக்கம் பாடல் வெளியீடு உட்பட அனைத்தும் கலைஞர் தொலைக்காட்சியில் மட்டுமே ஒளிபரப்பாகும்.

இந்த முறை 7 ஆம் அறிவு திரைப்படத்தின் விளம்பரங்கள் சன் தொலைக்காட்சியின் ஏனைய அலை வரிசைகளிலும் ஒளிபரப்பாகின்றன. இதனைவிட படக் குழுவினருடனான சந்திப்புக் கூட படம் வெளியாகிய தினம் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இவ்வாறு உலகத் தமிழர்கள் மத்தியில் தன்னை நிலைநிறுத்துவதற்காக கருணா நிதி எடுத்த முயற்சி கலப்படமில்லாமல் வெற்றியை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கின்றது.

சோழியன் குடுமி சும்மா ஆடாது என்பது போல் கருணாநிதி ஏன் ஈழத்தமிழருக்காய் 7 ஆம் அறிவில் ஒரு சில நிமிடங்கள் ஒதுக்கியிருக்கின்றார். தற்போது தமிழகத்தைப் பொறுத்தவரையில் ஈழத் தமிழரின் விடயங்களே மிக மலிவாகப் பேசப்படுகின்றன.

மறுபுறம் அம்மா கூட ஈழத்தமிழர்களின் இழப்பை வைத்தே தனது ஆட்சிக் கதிரைக்கு வலு சேர்த்தார். வெற்றிக்காக மட்டும்தான் அவ்வாறு என்றால் அந்த அம்மாவின் செயற்பாடுகள் ஈழத்தமிழரை மையப்படுத்தி சென்றுகொண்டிருக்கின்றது. அது சென்று கொண்டிருக்கின்றது என்பதை விட தமிழகமக்களிடம் அது வென்று கொண்டிருக்கின்றது என்று சொல்லலாம்.

இந்த நிலை தொடருமானால் தள்ளாடும் வயதில் தன்னால் மீண்டும் ஆட்சிக் கதிரைக்கு வரமுடியாமல் போய்விடுமோ என்று அச்சப்பட்டு அவசர அவசரமாய் களத்தில் குதித்திருக்கிறார் கருணாநிதி.

அம்மாவின் ஆசீர்வாதத்தோடு களமிறங்கிய விஜயின் வேலாயுதம் பரிதாபமாக நிற்கின்றது. இங்கு தமிழனைக் குழி பறிக்க தமிழினிடமே புகுந்த 7 ஆம் அறிவு வெற்றிக் கொடி கட்டுகின்றது.

ஈழத்தமிழ் மக்களையும் உலகத்து தமிழ் மக்களையும் பொறுத்த வரையில் இலங்கையின் இறுதிக் கட்டங்களில் நடந்த போரின் கொடூரத்தை வைத்து உல கில் தமிழினத்துக்கு அங்கீகாரம் வாங்கி விடத் துடிக்கின்றனர். அதனை வைத்து தான் செய்த பித்தலாட்டங்களை மறைத்து மீண்டும் தனது இருப்பை நிலை நிறுத்த முயற்சிக்கின்றார் கருணாநிதி.

இறுதி யுத்தத்தின் கணங்களையும் இலங்கையில் நடந்த அநீதிகளையும் சுட்டிக்காட்டிய 7 ஆம் அறிவின் இயக்குநர் முருகதாஸால் ஏன் கருணாநிதி ஆடிய பத்தலாட்டங்களைத் தொட்டுவிட்டுக் கூடச் செல்ல முடியவில்லை.

இறுதி யுத்தம் நடைபெற்றுக் கொண் டிருந்தபோது மொத்த தமிழினமும் ஏங்கித் தவித்தபோது தமிழகத்தில் இடம்பெற்ற தேர்தலுக்காய் முதலமைச்சர் நாற்காலியில் இருந்து கொண்டு நான்கு மணி நேரம் நடத்திய உண்ணா விரத நாடகத்தை மறந்து விட்டார்களா? தமிழனுக்காய் நீதி கேட்பதாய் டெல்லி பறந்து தனது உறவுகளுக்காய் அதிகாரம் கேட்டதை மறந்து விட்டார்களா ? தமிழ்ச் செல்வனுக்காய் கவிபடித்து பாராட்டு பெற முயன்றதை மறந்து விட்டாயா ? தந்தியடித்து தந்தியடித்து ஏமாற்றிய காலங்கள் உங்களுக்கு ஞாபகத்துக்கு வரவில்லையா ? மனித சங்கிலி என்று மக்களை நடு வீதியில் நிற்க வைத்துவிட்டு காரில் உல்லாசமாய் சுற்றிப்பார்த்து ஏமாற்றியது இவர்களுக்கு தெரியவில்லையா ?

இவ்வாறு கருணாநிதி ஈழத் தமிழர்களுக்கு செய்தவையெல்லாம் முருகதாஸால் படத்தில் ஓர் இடத்தில் கூட முனங்க முடியவில்லையே ?

இதனை விட தெளிவாக " நாங்கள் முதலில் இந்தியர்கள். அதன் பின்னர் தான் தமிழர்கள்'' என்பதையும் படத்தில் சொல்லாமல் சொல்லியிருக்கிறார் முருகதாஸ்.

அதாவது 7 ஆம் அறிவின் திரைக்கதைபடி இந்திய தேசத்தை அழிக்க வரும் சீன நாட்டவனை சூர்யா எதிர்க்கின்றார். அப்போதுதான் "நம்மள மலேசியாவில அடிச்சாங்க, இலங்கையில் அடிச்சாங்க இப்ப தமிழ் நாட்டுக்கே வந்து அடிக்கிறான்'' என்று சொல்கின்றார்.

மொத்தத்தில் இலங்கையில் தமிழனை அழித்ததையும் சீனாவின் மீது பழி போட்டு, இந்தியா செய்த துரோகத்தையும் கருணாநிதி செய்த துரோகத்தையும் போக்க முயன்றிருக்கின்றார்.

இப்போது புரிகின்றதா ? 7 ஆம் அறிவை பின்னின்று இயக்குபவன் யாரென்று. தனக்காய் தான் எழுதிய வரலாற்றை எங்களுக்குள் எப்படித் திணிக்கின்றான் என்று. இதை அறியாமல் நாம் 7 ஆம் அறிவு ஈழத்தமிழரின் திரைப்படம் என்று கத்தித் திரிகின்றோம். இதனை விட சமூக வலைத்தளமான "பேஸ்புக்கில்" 7 ஆம் அறிவுக்காய் எத்தனை போராட்டங்கள்.

எங்களை அறியாமல் எங்களின் துரோகிக்கு நாங்கள் மீண்டும் இடம் கொடுக்கின்றோம். மீண்டும் கருணா நிதியை பலப்படுத்துகின்றோம். மீண்டும் இந்திய தேசத்தின் காலடிகளை கழுவுகின்றோம். எமது வரலாற்றை நாமே எழுதும் வரை இவ்வாறு கருணாநிதி போன்ற புல்லுருவிகள் தங்களுக்காய் எங்களின் வரலாற்றை மாற்றியமைத்து எங்களிடமே பிழைப்பு நடத்துவார்கள்.

நன்றி, உதயன் இணையம்.

Saturday, November 5, 2011

"ஊருக்குதானடி உபதேசம் உனக்கு பொருந்தாது".

>கூத்தாடி குசும்பன் 17,<

தசரதனின் சொல்லுக்கு கட்டுப்பட்டு, பதின்நான்கு ஆண்டுகாலம் இராமன் வன்வாசம் சென்றதாக புராணகாலத்து கதைகள் சொல்லுகின்றன. ஊழல்
குற்றச்சாட்டுக்கு உள்ளான ஜெயலலிதா நீதிமன்றத்துக்கு டிமிக்கி கொடுத்து பதின்நான்கு ஆண்டுகள் வாய்தா வாங்கியதாக நவீனகால சரித்திரம்
பகர்கிறது.

செய்தி:,
ஊழல் செய்து சொத்துகுவித்த வழக்கில் பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராக வந்த ஜெயலலிதாவின் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு ரூ. 30 லட்சம் செலவானதாக பெங்களூர் நகர பொலிஸ் கமிஷனர் தெரிவித்திருக்கிறார்.

ஊழல் சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா ஒக் 20, 21 ஆகிய தேதிகளில் பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரானார். கர்நாடக போலீசார் 1500 பேரும், சென்னையில் இருந்து சென்ற 500 போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த இரணடு நாட்களில் பாதுகாப்பு பணிகளுக்காக மட்டும் ரூ. 30 லட்சம் செலவானதாக பெங்களூர் நகர பொலிஸ் கமிஷனர் தெரிவித்துள்ளார்.

வருமானத்துக்கு அதிகமாக ஊழல்மூலம் கொள்ளையடித்து சொத்து குவித்த வழக்கு விசாரணைக்காக ஜெயலலிதா பெங்களூருக்கு கடந்த ஒக் 20, 21 ஆகிய 2 நாட்கள் வந்தார். பெங்களூர் ஹெச்.ஏ.எல். விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் அக்ரஹாராவில் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்திற்கு சென்ற ஜெயலலிதாவுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளதால் அவருக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டது.

பெங்களூர் போலீசார் 1000 பேரும், தமிழகத்தில் இருந்து வந்த 400 பேரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்!!.

பாதுகாப்பிற்காக வந்திருந்த போலீசாருக்கு சாப்பாடு, சிறப்பு சம்பளம், போக்குவரத்து என கர்நாடக போலீசாருக்கு மட்டும் ரூ. 30 லட்சம் செலவானது என கூறப்படுகிறது.

இது கர்நாடக காவல்துறையின் கணக்கு. முதல்வர் ஜெயலலிதா வாடகைக்கு எடுத்த விமானத்துக்கான செலவு என்ன என்பது தெரியவில்லை.

இந்த நிலையில் மீண்டும் பெங்களூரு நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கக்கோரி செவ்வாய்கிழமையன்று உச்சநீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை ஜெயலலிதா தாக்கல் செய்தார்.

அதில் ``நான் கோர்ட்டு உத்தரவுபடி 2 நாட்கள் ஆஜராகி (போனால் போகுதென்று) விளக்கம் அளித்து இருக்கிறேன். "மீண்டும் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று என்னை கட்டாயப்படுத்த கூடாது'' என்று கண்டிப்பாக குறிப்பிட்டு இருந்தார்.

தேவையென்றால் வீடியோ கொன்பரன்ஸ் மூலம் அல்லது நீதிமன்றத்தின் கேள்விகளுக்கு போயஸ் காடினில் உள்ள தனது வீட்டிலிருந்தவண்ணம் எழுத்துமூலம் பதிலளிக்க வசதி செய்யும்படி ஜெயலலிதா கேட்டிருக்கிறார். ( எப்படியிருக்கிறது நீதி நியாயம்? நாடு விளங்குமா)

அது அப்படி இருக்க சிக்கலில் மாட்டித்தவிக்கும் கனிமொழி ஒருபக்கம் புலம்பியிருக்கிறார். இரண்டு சம்பவங்களையும் எடுத்துப்பார்த்தால் நாட்டில் நீதி கொஞ்சம் இருப்பதுபோலவும் இல்லையென்பதுபோலவும் தெரிகிறது இடையில் ஏதோ ஒன்று ஆட்டிப்படைப்பதும் புலனாகிறது.

நான் ஒரு பெண்... எனக்கு சிறிய குழந்தை இருக்கிறான். எனவே (ஊழல் கொள்ளையை பெரிதுபடுத்தாமல் எனது தனிப்பட்ட நலனை மட்டும் கருத்தில்க்கொண்டு) எனக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்க வேண்டும், என்று கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மீண்டும் கனிமொழி எம்பி. மனு தாக்கல் செய்துள்ளார்

2 ஜி முறைகேடு வழக்கில் கடந்த மே மாதம் கைது செய்யப்பட்டு, 6 மாதங்களாக திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கனிமொழி. இதுவரை நான்கு முறை ஜாமீன் கேட்டு மறுக்கப்பட்டுவிட்டது. கடைசியாக இரு தினங்களுக்கு முன் சிபிஐ நீதிமன்றம் கனிமொழியை ஜாமீனில் விடுவிக்க மறுத்துவிட்டது.

பொதுமக்களின் சொத்துக்களை சூறையாடியவர்களுக்கு மன்னிப்பு கிடையாது என்றும், கனிமொழி செய்த தவறு சாதாரணமானதல்ல என்றும் நீதிபதி ஓபி ஷைனி குறிப்பிட்டிருந்தார். (அப்படியென்றால் ஜெயலலிதா சூறையாடியது யாருடைய சொத்து சசிகலாவின் சொத்துங்களா)

இந்த நிலையில் இன்று மீண்டும் 5 வது முறையாக தனது ஜாமீன் மனுவை கனிமொழி சமர்ப்பித்து. இந்த முறை டெல்லி உயர்நீதி மன்றத்தை நாடியுள்ளார் .(பணம் இருக்கிறது)


என்னை நம்பி 9 வயதேயான மகன் இருக்கிறான். கடந்த 6 மாதங்களாக என்னைப் பிரிந்து என் மகன் தவிக்கிறான். எனது அரவணைப்பு தேவைப்படும் காலகட்டத்தில் என்னை சிறையில் வைத்திருப்பது அவனை பாதித்துள்ளது. (இதற்காக 214 கோடி ஊழலை பெரிதுபடுத்தாமல் என்னை விடுவிக்க வேண்டும்)

இது கனிமொழியின் கோரிக்கை (எங்கே செல்லும் இந்தப்பாதை யாரோ யாரோ அறிவாரோ)

கருணாநிதியின் செல்ல மகள் கனிமொழி, இந்தியாவின் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினரானால் அவர் நாட்டை ஆளும் பிரதமர் ஆவதற்கான தகுதியையும் பெற்றுவிடுகிறார்,

ஜெயலலிதா இந்தியாவின் ஒரு மானிலத்தின் சட்டமன்ற உறுப்பினர். எந்த ஒரு சட்டமன்ற உறுப்பினரும் முதலமைச்சர் ஆவதற்கான தகுதியுடையவரே.

இவைகள் அடிப்படை ஜனநாயகத்தின் தன்மை. மக்களின் விருப்பில் தெரிவு செய்யப்படும் ஒருவர் அத்தனை தகுதிகளையும் பெற்று விடுகிறார் என அரசியல் சாசனமும் சுட்டுகிறது,

கட்சிகள் ஒத்துக்கொண்டால் எம்பி யான கனிமொழி பிரதமரும் ஆகலாம், அதுபோல எம்எல்ஏ, வான ஜெயலலிதா கட்சியின் செல்வாக்கை பயன்படுத்தி முதலமைச்சராகியிருக்கிறார், அவ்வளவே,,,

சிபிஐ கோர்ட் கனிமொழியை ஊழல் குற்றச்சாட்டுக்காக தடுத்து வைத்து விசாரணை செய்கிறது. தவிர இன்னும் கனிமொழி சந்தேக நபரே தவிர குற்றவாளி என்று அறுதியாக கோர்டில் தீர்ப்புக்கூறப்படவில்லை.(கனிமொழி உண்மையில் ஊழல்வாதி என்பது வேறு விடயம்)

ஜெயலலிதாவும் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு ஏதோ உறுதியான ஆதாரத்துடன் குற்றம் சாட்டப்பட்ட ஒரு நம்பகமான சந்தேக நபர், எனவே ஏன் கனிமொழி, ஜெயலலிதா, இருவருக்கும் நீதித்துறை பாகுபாடு காட்டவேண்டும். கர்நாடக மானில முதலமைச்சராக இருந்த எடியூரப்பா ஊழல் குற்றவாளி என சந்தேகிக்கப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். இப்படி பல உதாரணங்கள் இருக்கின்றன.

ஜெயலலிதா பதின்நான்கு வருடங்களுக்கு மேலாக நீதிமன்றத்திற்கு ஒத்துழைத்து சமூகமளிக்க மறுப்புத்தெரிவிப்பதால். ஸ்பெக்ரம் ஊழலில் கனிமொழியை கைது செய்து தடுத்து சிறை கஸ்டடியில் அடைத்து வைத்து விசாரணை நடத்துவதுபோல, பாகுபாடு காட்டாமல் ஜெயலலிதாவையும் கைதுசெய்து விசாரணையை முடிக்கவேண்டியது நீதித்துறையின் பொறுப்பு.

வருடக்கணக்கில் வாய்தா கொடுப்பதே நீதித்துறையின் இயலாமையை அல்லது அரசியல் தலையீட்டை காட்டுகிறது. அல்லது நீதி சேடமிழுத்து கோமா நிலையில் சாகக்கிடக்கிறது என்பதுதான் உண்மை.

ஜெயலலிதா இல்லையென்றால் தமிழ்நாடு இன்றுடன் காற்றில் கரைந்து காணாமல் போய்விடப்போவதில்லை.

நீதிமன்ற விசாரணையின் பின் ஜெயலலிதா அப்பழுக்கற்ற சுற்றவாளி என்று தீர்ப்பு வழங்கினால் அவர் தொடர்ந்து முதலமைச்சராக தொடரட்டும்.

ஜெயலலிதா குற்றவாளியானால் ஜெயிலுக்கு போகவேண்டும் என்பதுதான் நியாயம் தர்மம்.

அதன் பிற்பாடு கட்சி அடுத்த நிலையில் இருக்கும் ஒருவரை கட்சி முதலமைச்சராக்கும். அல்லது குடியரசு தலைவர் பொறுப்பேற்பார். நிறைய நடைமுறைகள் அரசியல் சாசனத்தில் இருக்கின்றன.

திருடர் கையில் நாடு இருக்கக்கூடாது என்ற முன்னுதாரணம் நீதித்துறையிடம் இருக்கவேண்டும், குற்றம் சாட்டப்பட்டிருக்கும் அரசியல்வியாதிகளான இவர்களிடமும் நேர்மை இருந்தால், நீதிக்கு தலைவணங்கி புனிதராக வெளிவரவேண்டும் அதுவே. மற்றவர்களுக்கும் ஒரு படிப்பினையாகவும் எதிர்காலத்தில் வரவிருக்கும் அரசியல் வியாதிகளுக்கு பய பக்தியாகவும் இருக்கும்.

பல கோடி ரூபா ஊழல் கொள்ளைகளை, இந்த அரசியல்வியாதிகள் திருட்டுக்குற்றம் என ஏற்க மறுக்கின்றனர். மக்களின் சொத்தான பொதுநிதி
என்பது ஆட்சியாளர்கள் எப்படியும் கையாளலாம் என்பதுபோல் காண்பிக்கவே முயற்சிக்கின்றனர். இவை மன்னர் ஆட்சியின் மாண்பை நினைவுப்படுத்தி நிற்கிறது.

ஜெயலலிதா தான் முதலமைச்சராக இருப்பதற்காக விசாரணைக்கு சமூகமளிக்காமல் சட்டத்திற்கு தண்ணி காட்ட முயற்சித்து, வீடியோ கொண்பரன்ஸ் / எழுத்து முலம் பதிலளிக்கிறேன் என்பது எவ்வளவு அபத்தமான சர்வாதிகாரம் என்பதை மக்கள் தெரிந்துகொள்ளவேண்டும்.

அரசியல் சாசன சம்பிரதாயங்களுக்கு கட்டுப்படுகிறேன் என்று சத்தியப்பிரமாணம் செய்து பதவி பெற்றுக்கொள்ளும் அரசியல் வியாதிகள். பதவி பெற்றபின் அனைத்தையும் புறந்தள்ளி மன்னர்கள் போல் நடந்துகொள்ளுவதுதான், வழமையில் உள்ள நடைமுறையா.

இவற்றை பின்பற்றித்தானே திமுக விலுள்ள அனைத்து மந்திரி, எம்எல்ஏ, க்கள் அனைவரும் நில மோசடி, அரசு நிதியை சூறையாடுதல் போன்றவற்றை தலைமையின்ஆசீர்வாதத்துடன் எந்த குற்ற உணர்வுமில்லாமல் துணிச்சலுடன் செய்திருந்தனர்.

ஜெயலலிதாவுக்கு அது பொருந்துமென்றால் கபாலிக்கும், வீரபாண்டி ஆறுமுகத்துக்கும், ராமஜெயத்துக்கும், கருணாநிதிக்கும், சுப்பன், வப்பன், அனைவருக்கும் நியாயம் பொருத்தமானதே.

கோடிக்கணக்காக கொள்ளையடித்துவிட்டு ஜெயலலிதா வாய்தா வாங்கிக்கொண்டு நாட்டை ஆளலாம் என்றால், வயிற்று பிழைப்புக்கு வழியில்லாமல் ஐம்பது ரூபா திருடிய ஒருவவனை ஒருபோதும் கட்டாயப்படுத்தி கோர்ட்டுக்கு வரும்படி வற்புறுத்த முடியாது, வாய்தா கொடுத்து அவனது
வாழ்க்கை வளம்பெற அவற்றை நடைமுறை சட்டமாக்கினாலும் சிறப்பானதே.

குற்றம் சாட்டப்பட்டு குற்றவாளியென சந்தேகிக்கப்படும் ஒருவர், குற்றச்சாட்டை முறைப்படி சந்தித்து நீதிமன்றத்தை மதிக்கும் மனநிலை இல்லாத ஒருவர், எப்படி ஒரு மானிலத்தின் முதல்த்தரமான பதவியை தன்னகத்தே கொள்ள என்ன நியாயம் இருக்கிறது.

ஸ்பெக்ரம் ஊழல்க்கொள்ளை இன்றைய திகதியில் உலக வரலாற்றில் மனிதவர்க்கம் கண்டிருக்காத மிகப்பெரிய மோசடி.

ராசா, கனிமொழி, கல்மாடி போன்ற ஒரு சிலர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இருந்தும் குறிப்பிட்ட ஊழலில், பிரதமர் மன்மோஹன் சிங், நிதி அமைச்சராக இருந்த பசி எனப்படும் சிதம்பரத்துக்கும், முன்னைய தொலைத்தொடர்பு மந்திரி தயாநிதி ஆகியோருக்கும் அளப்பரிய பங்கு இருப்பதாக எட்டுத்திசையில் இருந்தும் குற்றச்சாட்டுக்கள் குவிந்துகொண்டிருக்கின்றன.

ஆனால் பசி,யை. மற்றும் பிரதமரை, விசாரணைக்குட்படுத்தினால் இந்தியா தெய்வக்குற்றத்துக்கு ஆட்பட்டு, நிலத்துள் புதைந்து காணாமல் போய்விடும் என ஆளும் வர்க்கம் பிரதம குற்றவாளிகளை விசாரணைக்குட்படுத்த தடைவிதித்து வருகிறது.

இந்த மனநிலை உள்ள ஒரு நாட்டில், அதிகாரத்தில் உள்ள ஒருவர் எப்படி இன்னும் ஒரு குற்றவாளியை சிறைப்படுத்தி விசாரிக்க உத்தரவு போட முடியும். இப்படியானவர்களுக்கு நியாயம் பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது.

ஊருக்குதானடி உபதேசம் உனக்கு பொருந்தாது. என்பதே இந்தியாவின் அரசியல் வியாதிகளின் தாரக மந்திரம்.

மீண்டும் சந்திப்போம்.

Wednesday, November 2, 2011

தீதும் நன்றும் பிறர்தர வாரா" சம்பந்தன் ஐயாவின் கவனத்திற்கு.

அமெரிக்கா சென்று அதன் தொடர்ச்சியாக கனடா நாட்டுக்கு சென்றிருந்த தமிழர் தேசியக்கூட்டமைப்பினர் அங்கு ஒரு கலந்துரையாடலை நடாத்தியதாகவும் அப்போது கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் வடகிழக்கு எமக்கு சொந்தமானதல்ல,

என்று கருத்து தெரிவித்ததாக யூ ரியூப் இணையத்தளத்தில் காணொளியாக வெளிவந்து பலரையும் திகைக்க வத்திருக்கிறது.



1970 களில் தொடங்கிய ஈழத்தின் வட கிழக்கு தாயக மண்மீட்பு உரிமைப்போராட்டம், மே 2009வரையான காலப்பகுதிவரை தொடர்ந்து, நாற்பது ஆயிரம் வரையிலான இளம் போராளிகளின் உயிர் கொடையுடன். பல இலட்சம் பொதுமக்களின் படுகொலை, பொருள் பண்டம் அனைத்தும் அழிக்கப்பட்டு வஞ்சகமாக தற்காலிகமாக தோற்கடிக்கப்பட்டது. இது சம்பந்தன் அவர்களும் அறிந்திருக்க முடியும்.

வரலாறு தெரியாமல் ஈழப்போராட்டம் தொடங்கப்படவுமில்லை, இன்னொருவரின் மண்ணை தமிழினம் வலுக்கட்டாயமாக சுவீகரிக்க பல இலட்சம் உயிர்கள் காவு கொடுத்து கறைபட்டுக்கொள்ளவுமில்லை.

பலதரப்பட்ட அகழ்வாராய்ச்சிகளும் ஆவணங்களும், மேலாக தமிழினம் அல்லாத வெளிநாட்டு வரலாற்று ஆசிரியர்களும் தமிழீழம் தொடர்பாக தக்க சான்றுகளுடன் வரலாற்று உண்மையை நிரூபித்து இருக்கின்றனர்.

அத்துடனல்லாமல் பல நூற்றுக்கணக்கான புத்தகங்கள் தொன்மையான வரலாற்று ஆதாரங்களை காலக்குறிப்புடன் வரைபடங்களாகவும் திரிவுபடாமல் விளக்குகின்றன. பல சிங்கள வரலாற்று ஆய்வாளர்களும் இவற்றையே வழிமொழிகின்றனர்.

ஈழத்தமிழர்களின் தாயக பூமியான, இலங்கையின் வடக்கு கிழக்கு தமிழீழ மண்ணின் சகல உரிமைகளையும் சிங்கள தலையீடு இல்லாமல் தமிழர்களால் நிர்ணயம் செய்யப்படவேண்டும், தமிழர்களின் பூர்வீக தாயகம் சுதந்திர தமிழீழமாக தமிழனால் கையாளப்படவேண்டும். என்பதே தந்தை செல்வநாயகம் முதலாக, தேசியத்தலைவர் வே பிரபாகரன் அவர்கள், வரையிலான தீர்க்கதரிசினமான தலைமைகளின் நீங்கா நினைவு.

தமிழினத்தின் சகல அரசியல் - வாழ்வியல் சார்பான அனைத்து உரிமைகளையும். தீர்மானிக்கும் சக்தியாகவும் ஈழ விடுதலை+ அரசியல் ஆகியவற்றை கையாள உரிமைகொண்ட தகுதியானவர்களாயும். தந்தை செல்வநாயகம் அவர்களும், அதன்பின் தேசியத்தலைவர் வே.பிரபாகரன் அவர்களுமே, நம்பிக்கையானவர்களாக அனைத்து தமிழராலும் இன்றுவரை ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றனர்.

தந்தை செல்லா அவர்களின், பின் தேசியத்தலைவர் அவர்கள் மேற்கொண்ட தீர்மானங்கள்தான், தமிழீழத்திற்கான உறுதியான இறுதி தீர்வை நோக்கி அகில உலகத்தை நகர்த்தியிருக்கிறது.

கலகம் பிறந்தால் அதன்பின் நியாயம் பிறக்கும் என்பதற்கொப்ப, கலகத்தின் பின் இப்போ நியாயத்திற்கான விவாத அரங்கில் தமிழினம் நின்றுகொண்டிருக்கிறது. பூமிப்பந்தில் இலங்கை எங்கிருக்கிறது என்று தெரியாமல் இருந்த காலம் மாறி, தமிழனின் போராட்ட எழுச்சி ஈழதேசம் பற்றி ஒவ்வொரு நாளும் உலகின் ஒவ்வொரு பகுதியிலும் விவாதிக்க வைத்திருக்கிறது.

"முக்கியமானவர்கள்" கலந்துகொள்ள முடியாத விவாத அரங்கில்,, போராட்டத்தில் எந்த பங்களிப்பும் இல்லாதவர்கள் இராசதந்திரிகளாகவும், மந்திரிகளாகவும், பெருமை பெற்றிருக்கின்றனர். காரியம் நடந்தேறவேண்டும் அதுதான் தமிழினத்தின் தற்போதய பொறிநிலை. தாற்பரீகத்தை சரியாக உணர்ந்துகொண்டு எவர்கள் செயற்பட்டாலும் யாரும் இடையில் குறுக்கிட தேவையுமில்லை.

மாறாக போராட்டத்திற்கு இழுக்குவரும்போது, தாய்மண்ணுக்கு அபகீர்த்தி ஒன்று வரும்போது, எவரும் பொறுத்துக்கொள்ள முடியாது, முக்கிய நேரங்களில் முன்நின்று முகம் கொடுத்தவனும், இழப்புக்களை அனுபவித்தவனும், உறவுகளை தொலைத்தவனும், பார்வையாளனாக மட்டும் இருக்க முடியாது, கருத்துச்சொல்ல அவனது உணர்வும் துடிக்கும் என்பதையும் அனைவரும் புரிந்துகொள்ள முடியும்.

தமிழர் தலைவனால் ஈழத்தில் முன்னெடுக்கப்பட்ட உயிரிலும் மேலான போராட்டத்தின் தாக்கம், உள்ளூரில் எவரும் அறியப்படாமலிருந்த தேசியக்கூட்டமைப்பினரை இன்றைக்கு உலக அரங்கில் கலந்துரையாடும் அளவுக்கு பெருமைபெற்ற இராசதந்திர அந்தஸ்து வழங்கியிருக்கிறது.

அவை தமிழினத்திற்கு பெருமை சேர்ப்பதாக இருந்தாலும், குறிப்பிட்ட பிரதிநிதிகள் பிரமாண்ட மண்டபங்களில் உள்ள இருக்கைகளில் அமரும் முன், வரலாற்றின் பின்னணியை சிரசில் இருத்தி சிந்தித்து ஒவ்வொரு வார்த்தையையும் பொறுப்புடன் பிரயோகிக்கும் கடப்பாடு உண்டு.

அவை அனைத்தையும் மறந்து பண்டிகைகால குதூகலத்துடன், இரவு வழிப்போக்கர்களான பரதேசிகள், தரிக்கும் இடங்களில் முகம் தெரியாத இருளில் மடம் கட்டிக்கொள்ள பேசிக்கொள்வதுபோல, சம்பந்தன் அவர்கள் கனடா நாட்டில் ஈழ வரலாற்றை திரிவுபடுத்தி வெளியிட்ட கருத்து தமிழர்கள் மத்தியில் கொதிநிலைக்கு வழிதேடியிருக்கிறது. சம்பந்தப்பட்ட வாக்குமூலம் இன்ரர் நெற்மூலம் உலகம் முழுவதும் சென்றடைந்துவிட்டது.

"வட கிழக்கு எமக்கு சொந்தமானது என்று நாங்கள் கூறவில்லை". என்று கனடாவில் நிலைகொண்டிருக்கும் தமிழர் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் அவர்கள் தனது புத்திக்குட்பட புதிய கண்டுபிடிப்பு ஒன்றை வெளியிட்டு ஈழத்தமிழினத்தை திகைக்க வைத்திருக்கிறார்.

எந்த ஆதார அடிப்படையில் சம்பந்தன் இப்படி கூறினார் என்பது வேதனையையும், கூட கோபத்தையும் வெறுப்பையும் தமிழினத்திற்கு உண்டுபண்ணியிருக்கிறது. இது திரும்பப்பெறக்கூடிய ஒரு விடையமும் அல்ல. தாயகத்தில் இக்கருத்து வெளியிடப்பட்டிருந்தால் தமிழர் தேசியக்கூட்டமைப்பின் அரசியலுக்கு முடிவுரை எழுதியதாக அது அமைந்திருக்கும். ஆனால் கனடா மற்றும் மேற்குலகில் வாழும் இளம் சமுதாயத்தினர் மத்தியில் இக்கருத்தானது தாயக வரலாறு பற்றிய சந்தேகத்தை உண்டுபண்ணி ஒரு பிறழ்வை ஏற்படுத்தும் அபாயமும் தோற்றுவிக்கப்பட்டிருப்பது கவலையளிப்பதாகும்.

"தீதும் நன்றும் பிறர்தர வாரா" ஏதோவிதத்தில் நாமே அனைத்திற்கும் காரணியாக இருக்கிறோம்

டக்கிளஸ் தேவானந்தா போன்றோர் கூட இப்படியான கருத்தை வெளிப்படையாக பேசியது கிடையாது.

தமிழர் வரலாறு தெரியாமல்த்தான் சம்பந்தன் பேசினாரா, இல்லை தெரிந்துதான் விசமத்துக்கு பேசினாரா என்பது நிச்சியம் மக்கள் ஆராயாமல் விடப்போவதில்லை, ஈழ வரலாறு தெரிந்திருக்காவிட்டால் யாரிடமாவது விசாரித்து பேசியிருக்கவேண்டிய பொறுப்பு மூத்த அரசியல்வாதியான சம்பந்தனுக்கு உண்டு.

மக்களின் உணர்வுகளுக்கமைய உண்மைநிலையை பிரதிபலிக்கவேண்டிய ஒரு இடத்தில் இருக்கும் மூத்தவரான சம்பந்தன் வரலாறு தெரியாமல் எழுந்தமானத்தில் யாரையோ திருப்திப்படுத்த வெளியிட்டிருக்கும் கருத்து மிகுந்த கவலைக்கும் "கண்டனத்துக்குரியதாகும்"

ஈழதேசம் இணையத்திற்காக,
கனகதரன்,

நன்றி ஈழதேசம் இணையம்.