Tuesday, April 5, 2016

தமிழ்நாடு சட்டமன்றத்துக்கான தேர்தல் திகதி 2016,மே மாதத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கான முன்னோட்ட நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் பரபரப்பாக அனைத்து அரசியற்கட்சிகளும் தொடங்கிவிட்டன.

நடப்பில் ஆட்சியில் இருக்கும் ஜெயலலிதா தலைமையிலான அ இ அதிமுக விடமிருந்து ஆட்சியை கைப்பற்றும் நோக்கில் அனைத்து கட்சிகளும் கொள்கை கோட்பாடுகள் ஏதும் அற்ற சுயநல தந்திரபாயங்களை கையிலெடுத்து விபச்சாரியின் நியாயப்படுத்தல்களை ஒத்த விவாத பரிவர்த்தனையில் தேர்தல் களம் அனல் பறக்கும் பேரம்பேசல்களும் பிரச்சாரங்களும் எந்த ஒரு வரைமுறைக்கும் உட்படாமல் காட்டாற்று வெள்ளம்போல் பாய்ந்தோடிக்கொண்டிருக்கிறது.

 2011 சட்டசபை தேர்தலிலும், அடுத்து வந்த நாடாளுமன்ற தேர்தல்களிலும் மண்ணை கவ்வி படுதோல்வியடைந்த ஈழ இனப்படுகொலை சூத்திரதாரியான கருணாநிதி கள நிலவரம் எப்படி இருக்கும் என்று தெரிந்தும் யாரை கூட்டுச் சேர்த்தாவது இம்முறை ஆட்சியை கைப்பற்றிவிடமாட்டோமா என்ற ஆதங்கத்தில் தனக்கே உரித்தான் அத்தனை வஞ்சக தந்திரங்களையும் அஸ்திரமாக்கி உறக்கமில்லாமல் காய்நகர்த்தி வருகிறார்.

கருணாநிதிக்கு தற்போது வயது 94, சராசரி மனித வாழ்வின் கணக்கீட்டின்படி கருணாநிதி இன்னும் ஒரு ஐந்து வருடங்கள் மட்டுமே வாழக்கூடிய தகுதியில் இருந்தாலும் இன்னும் ஒருமுறை ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி முதலமைச்சராகிவிடவேண்டும் என்ற வெறியுடன், தனது ஆயுட்காலத்தில் ஆட்சி அதிகாரத்தை தனது சந்ததியிடம் கையளித்துவிடவேண்டும் என்ற பேராசை அவரை நிம்மதியாக உறங்கக்கூட விட்டு வைக்கவில்லை.

இதுவரை நடைபெற்ற தேர்தல்களை விடவும் இம்முறை மக்களிடத்தே விழிப்புணர்வு பெருமளவு மாறுபட்டிருக்கிறது. ஐம்பது ஆண்டுகளாக ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி மக்களை ஏமாற்றி நாட்டை குட்டிச்சுவராக மாற்றிய திராவிட கட்சிகளின் ஊழலுக்கு எதிரான பெருத்த சமூக மாற்றம் ஒன்று பரவலாக கருக்கட்டி தமிழக அரசியலில் பலமுனை போட்டியை உருவாக்கியிருக்கிறது.

 இந்த மாற்றத்தின் எதிரொலி நான்கு கட்சிகளை ஒன்றிணைத்து மக்கள்நல கூட்டணியை பிரசிவித்தது, பலத்த பேரம்பேசல்களுக்குப்பின் விஜயகாந்தின் தேமுதிக மக்கள் நலக்கூட்டணியுடன் கூட்டுச்சேர்ந்தது காவாலி கட்டுமரம் கருணாநிதியை திகைப்புடன் பெருத்த ஏமாற்றத்துடன் ஆட்டம் காண வைத்திருக்கிறது.

 இந்த இடத்தில் ஒருவிடயத்தை தெளிவுபடுத்தவேண்டியிருக்கிறது தேமுதிக மநகூ வெற்றிபெற்று ஆட்சியை பிடிக்கிறதோ இல்லையோ அந்த கூட்டணியின் ஒன்றிணைவு கருணாநிதியின் திமுகவை மிகவும் பின்னுக்கு தள்ளும் தன்மையை உண்டுபணணும் என்பது பொதுமக்கள் உட்பட அரசியல் விமர்சகர்களின் வெள்ளிடை மலையான கருத்தாகும்.

கருணாநிதி தனது சரிவை சரிக்கட்ட தேமுதிகவை தன்னுடன் இணைப்பதன் மூலம் சரிசெய்து ஈடுகட்டிவிடலாம் என்ற கனவில் தன்னால் முடிந்தளவு தனக்கே உரித்தான வாய் ஜால கபட தந்திரங்களை கையாண்டு இறுதியில் தோற்றுபோய் இருக்கிறார்.

கருணாநிதிக்கு குறுக்கே நிற்கும் இன்னும் ஒரு பெருத்த மலைபோன்ற முட்டுக்கட்டை பெருவாரியான இளைஞர்களை தன்னகத்தே கொண்டு விசுவரூபம் எடுத்திருக்கும் சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சியின் கொள்கை முழக்கமும் பேரெழுச்சியும் கருணாநிதியின் கனவில் மண் விழுந்திருக்கிறது.

நாம் தமிழர் கட்சியினர் தாம் இந்த தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியை கைப்பற்றுவோம் என்று சூழுரைத்து மிகுந்த எழுச்சி மிக்க எனர்ஜியுடன் தேர்தல் களத்தை சந்தித்தாலும் இந்தியாவில் புரையோடிப்போய் இருக்கும் பாரம்பரியமாக மதம்போல மூளை சலவை செய்து வளர்க்கப்பட்டிருக்கும் கட்சிகளின் சார்பு மனப்பாண்மையிலிருந்து பழமைவாத கிராமத்து வயதான மக்களை உடனடியாக ஒட்டுமொத்தமாக திருப்பிவிட முடியாது என்ற கசப்பான யதார்த்தமும் இந்த தேர்தல் முடிவுகளை நிர்ணயம் செய்யும் குறியீடாக இருக்கும் என்பதை புறந்தள்ள முடியாது.

 இருந்தும் நாம்தமிழத் கட்சி மிக அதிகமான வாக்குக்களை பெற்று முன்னர் மாற்று என்ற முழக்கத்துடன் பிரிந்து சென்று களம்கண்ட வைகோ, அவர்களின் மதிமுக, விஜயகாந்தின் தேமு திக கட்சிகளை விட விகிதாசாரத்தில் பெரும்பான்மை வாக்குக்களை பெற்று தன்னை நிலை நிறுத்திக்கொள்ளும் என்பது எவராலும் தடுக்க முடியாது.

நாம்தமிழர் கட்சிக்கு 2021 ம் ஆண்டுதான் மிக பிரகாசமான களமாக அமையும் என்பதும், நடக்கவிருக்கும் இத்தேர்தலில் கணிசமான வெற்றியுடன் கருணாநிதியின் குடும்ப அரசியலை நாம்தமிழர் கட்சி முடிவுக்கு கொண்டுவரும் என்பதை அடிக்கோடிட்டு குறிப்பிடலாம்.

அவைதான் பொதுவான தேர்தல் கள நிலையாக இருந்தாலும் இந்த தேர்தலில் படுமோசமான அடியை வாங்கப்போவது கருணாநிதியின் திராவிட முன்னேற்றக்கழகம் என்பதுதான் வரலாற்று பதிவாக அமைய இருக்கிறது.

கருணாநிதிக்கோ கருணாநிதியின் கட்சி தொண்டர்களுக்கோ இந்த யதார்த்தம் புரியாமலில்லை. திமுகவின் சாதாரண தொண்டர்களுக்கும் கள நடைமுறைகளில் ஏற்படும் இந்த புரிதல் நாளடைவில் தொண்டர்களை வேறு வீரியமான கட்சிகளை நோக்கி நகர்த்தும் உளவியலும் உள்ளூர இயல்பாகவே உருவாகும் அபாயம் இருக்கிறது.

இந்த எதிர்வினைகளை பற்றி கருணாநிதி ஆரம்பந்தொட்டு அவதானமாக இருந்தே வந்தாலும் 2009 ம் ஆண்டிலிருந்து எதிர்வினையின் தாக்கத்தை நன்கு புரிந்துகொண்டு அதற்கான ஆயுத்த வேலைகளையும் கட்டமைத்து செய்துவருகிறார். அதன் சில புள்ளிகள் தான் 1/2 நாள் உண்ணாவிரதம் டெசோ கட்டமைப்பு எனலாம்.

அந்த வகையில் சாதிக்கட்சிகளை கவர்வதற்காக சாதி தலைமைகளை தன்னகத்தே தோளமை போல் வைத்திருத்தல், மூத்த சினிமா நடிகர்களை கௌரவிப்பதுபோல பாசாங்கு செய்தல். அவர்களுக்குள்ளேயே மோதலை உண்டுபண்ணி தனது தயவைப்பெறவைத்தல் அதிகாரிகள் மடத்தில் மூட்டிவிடுதல் பத்திரிகைகளை மோதிவிடுதல், இன்னபிற தந்திரங்கள் கண்கூடு.

சென்ற தேர்தலின்போது விஜயகாந்துடன்கூட தான் நேரடியாக மோதாமல் படிப்பறிவில்லாத அரசியலின் ஆழம் தெரியாத வடிவேலுவை வைத்து நாறடித்து வடிவேலுவின் தொழிலுக்கே சமாதி கட்டிவிட்டவர் கருணாநிதி.

தனது குடும்பத்துள்ளேயும் தனக்கு கட்டுப்படாத அழகிரியைக்கூட அவர் இராச தந்திர ரீதியில் குடும்பத்துடன் இரண்டற கலக்காமல் பிரித்தே கண்காணிப்புடன் நகர்த்தியே வைத்திருக்கிறார்.

இப்போ கடைசியாக கூட்டணிக்குள் இழுப்பதற்கு அனைத்து கட்சிகளையும் முயன்று பார்த்து ஏமாந்துபோன கருணாநிதி முன்னூறுக்கு மேற்பட்ட பொது அமைப்புக்கள் திமுகவுக்கி ஆதரவாக இருப்பதாக விளம்பரப்படுத்தி சில அமைப்புகளுக்கு ஒன்று பாதி என்கிற அளவில் தேர்தலில் போட்டியிட சீற்றும் வழங்கி சமூக மட்டத்தில் ஒரு திசை திருப்பலை செய்திருக்கிறார்.

இரண்டு நாட்களுக்கு முன் கருணாநிதியின் கோவாலபுரம் வீட்டுக்கு அழைக்கப்பட்ட முன்னாள் ஐ ஏ எஸ் சிவகாமி என்ற தலித் சமுதாய பெண்ணுக்கு தேர்தலில் போட்டியிட ஒரு தொகுதி வழங்கப்பட்டிருக்கிறது.

சிவகாமிக்கு உதய சூரியன் சின்னத்தில் ஒரு தொகுதி வழங்கப்பட்டதை கேள்வியுற்ற வெவ்வேறு அமைப்புக்களை சேர்ந்த சிறு குழுக்கள் தமது ஊர் செல்வாக்கை திரட்டி வந்து போட்டியிட முன்வரும் பட்ஷத்தில் நிறைய சாதி கட்சிகளின் ஆதரவை பெற்று தோல்வியிலிருந்து தப்பிக்கலாம் என்பது கருணாநிதியின் ஒரு கபடமான தந்தரமாக இருந்தாலும், இந்த சிவகாமி ஐ ஏ எஸ், செப் 2013 அன்று புதிய தலைமுறை தொலைக்காட்சியில் நடைபெற்ற நேர்பட பேசு விவாதத்தில் விடுதலைப்புலிகள் இயக்கம் பாலியல் போராளிகளை வைத்திருந்தது என்றும் போராடும் வீரர்களின் பாலியல் இச்சையை தீர்ப்பதற்கு பல இளம் பெண்கள் பயன்படுத்தப்பட்டனர் என்று ஒரு அபாண்டமான குற்றச்சாட்டை பல பேச்சாளர்களின் எதிர்ப்பையும் புறந்தள்ளி பதிவு செய்திருந்தார்.

சிங்கள இனப்படுகொலையாளியான மகிந்த ராஜபக்‌ஷ கூட தலைவர் பிரபாகரன் அவர்களின் ஒழுக்கம், மற்றும் விடுதலை புலி போராளிகளின் ஒழுக்கம் நன்நெறி பற்றி தான் பலதடவை பிரமித்துள்ளதாக பல இடங்களில் பதிவு செய்திருக்கிறார்.

அவை தவிர விடுதலைப்புலிகள் பலரை படுகொலைகள் செய்ததாகவும் பயங்கரவாதிகளாக செயற்படுவதாகவும் பல இடங்களில் முறைப்பாடு செய்யப்ட்டிருக்கிறதே தவிர ஒரு சிங்கள பெண்ணையோ தமிழ்ப்பெண்ணையோ பாலியல் ரீதியாக துர்ப்பிரயோகம் செய்யப்பட்டதாக ஒரு தகவலும் இதுவரை எவராலும் பதியப்படவில்லை.

இந்த தகவல் பல ஊடகங்கள் அமைப்புக்கள் கண்டித்து எதிர் போராட்டங்கள் நடத்தி இருக்கின்றன எனவே அதுபற்றி இங்கு அதிகம் விபரிக்க தேவையில்லை.

அப்படி இருக்கும்போது தமிழ் இனத்தின்மீதும் விடுதலை போராளிகள்மீதும் திட்டமிட்டு காழ்ப்புணர்ச்சி காரணமாக மானாவாரியாக சேற்றை வாரி இறைத்த ஒரே காரணத்துக்காக சிவகாமியை கருணாநிதி தனது கோபாலபுரம் வீட்டுக்கு அழைத்து ஆரத்தழுவி பொன்னாடை போர்த்தி தேர்தல் செலவு நிதியும் ஒரு தொகுதியும் வழங்கி இருக்கிறார்.

இந்த நிகழ்வு தற்செயலாக நிகழ்ந்ததில்லை விடுதலைபுலிகளால் தனக்கு ஏர்ப்பட்ட வீழ்ச்சியினை வைத்து வஞ்சம் தீர்ப்பதற்காக சிவகாமிக்கு சீற் கொடுக்கப்பட்டதாகவும் மாறாக சினிமா நடிகை குஷ்பு தன்னை விட்டு போய் காங்கிரஸில் இணைந்து கொண்டதால் குஷ்புவின் பிரிவு நீண்ட நாட்களாக கருணாநிதியை வருத்தியதாகவும் அந்த இடைவெளியை ஈடுகட்ட குஷ்புவின் வயதை ஒத்த நிறம் மாறினாலும் முக ஜாடையில் குஷ்ப்புவைநினைவு கொள்ளக்கூடிய சிவகாமியை கருணாநிதி உள் வாங்கியிருக்கிறார் என்று உறுதிப்படுத்தப்படாத செய்திகள் கூறுகின்றன.

 கருணாநிதி ஒரு வயது முதிர்ந்த ஒரு பழுத்த அனுபவசாலியாக இருந்தும் அவரது மனது என்னவோ மிகவும் கீழ்த்தரமாக இருப்பது அருவருக்க வைக்கிறது.

குறிப்பிட்ட இருவருக்கும் பொருந்தும்வண்ணம் இந்த பாடலை அவர்களது சிந்தனைக்காக இங்கே பதிவு செய்கிறேன்.

“வேதாளம் சேருமே
வெள் எருக்குப் பூக்குமே
பாதாள மூலி படருமே – மூதேவி
சென்றிருந்து வாழ்வளே
சேடன் குடிபுகுமே
மன்றோரம் சொன்னார் மனை.”

ஈழதேசம் செய்திகளுக்காக

கனகதரன.