Tuesday, September 20, 2016

பிரிவினைக்கு அடிகோலும் அரசியல் யோக்கர்கள்,

தேடிச் சோறுநிதந் தின்று - பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்று நினைத் தாயோ? 



விக்னேஷ்.

கர்நாடகாவுக்கு எதிராக
மட்டுமல்ல
பாக்கிஸ்தனுக்கு
எதிராகக்கூட ஆர்ப்பாட்டம்
போராட்டம்
வேண்டாம் என்று
பிரதமர் சொல்வது சரிதான்
அதுதான் ஒரு
மன்னனுக்குரிய மாண்பு.

அரசியல் ரீதியாக
தரப்படுத்தல் இல்லாத
நேர்மையான
மக்கள் ஆட்சி ஒன்று
நாட்டில்
நடைமுறையில் இருக்குமானால்!
கிளர்ச்சிகள்
தேவையற்றது என்பதும்
உண்மைதான்.

விவசாயிகள்
தற்கொலை செய்துகொள்வது,
தீக்குளித்து
தன்னை தானே
தற்கொடை செய்து கொள்வது
ஏற்புடையதுமல்ல.

ஆட்சியில் இருப்பவன்
சத்தியவானாக இருந்தால்,
அவனுக்கு
உணர்வு இருந்தால்
மனித உரிமை என்பது
என்ன என்று புரிந்தவனாக
அவன் இருந்தால்!
கிளர்ச்சி
செய்பவன்..
உயிரை விடுபவன்
பயித்தியக்காரனாக இருப்பான்.

விவசாயம் பொய்த்து
வயிற்றுக்கில்லாமல்
கடனாளியாகியபோது
வேறு வழியின்றி
விவசாயி
தூக்கு போட்டு சாகிறான்.

உரிமைக்காக தினம் போராடி
ஒன்றுமில்லையென்றபோது
வேறு வழியின்றி
மண்ணின் மைந்தன்
தீக்குளித்து
செத்து மடிகிறான்.

ஓட்டு வாங்கி
அதிகாரத்தை வைத்திருப்பவன்
மழையில் நனைந்த
எருமைமாடுபோல
அசைபோட்டுக்கொண்டு
வியட்னாமின் வளர்ச்சி
மொசாம்பிக்கின் முன்னேற்றம்
ஸ்ரீலங்காவின்
அபிவிருத்திபற்றிய
கவலையில் இருக்கிறான்.

காவிரியின்
அரை நூற்றாண்டு
வரலாற்று சிக்கலை
அவிழ்த்து நேர்ப்படுத்த
முதுகெலும்பற்ற
இந்தியாவால் முடியவில்லை.

நீதிமன்ற தீர்ப்பைகூட
நடைமுறைப்படுத்த முடியாத
படு பச்சோந்தியாக
இந்திய அரசு இருக்கிறது.

கன்னட காவாலிகள்
கட்டவிழ்த்திவிட்ட வெறியாட்ட
கொட்டத்தில்
தமிழனின் பல கோடி சொத்துக்கள்
சாம்பலானது.

தமிழர்கள்
தெருவில் அடி வாங்கி
கூனி குறுகி
அம்மணமாக்கி
அவமானப்படுத்தப்பட்டனர்
பெண்கள் குழந்தைகளை
உயிரோடு தீயிட்டு கொழுத்தவும்

முயற்சியும் நடந்தது.
பிரதமர் என்ற சுடிதார் கோமாளி
இரண்டு மாநில மக்களும்
அமைதிக்கு திரும்புங்கள்
என்று கூறிவிட்டு
புதிய சுடிதார் மாட்டிக்கொண்டு
அடுத்தொரு வெளிநாட்டில்
கொமடி நிகழ்ச்சி நடத்த
மேக்கப் போடுகின்றான்.

இருபத்தாறு வயதில்
இளைஞன் ஒருவன்
நெருப்பு மூட்டி சாகிறான்,
ஏன் செத்தான்
அந்த இளைஞன்?
எங்கு வந்தது
அதற்கான தேவை?
யாரும் அதுபற்றி ஆராயவில்லை.

ஊர் சுற்றி பிரதமர்
உள்நாட்டை
சுற்றிப்பார்த்திருந்தால்
நாட்டு நடப்பு புரிந்திருக்கும்
விவசாயி தற்கொலையும்
விடலையின் தற்கொடையும்
தடுக்கப்பட்டிருக்கும்.

வியட்நாமுக்கும்
மொசாம்பிக் நாட்டுக்கும்
நன்கொடைகளை அறிவிக்கும்
அறிவுகெட்ட மோடி
தமிழ்நாட்டுக்கு கிடைக்கவேண்டிய
நீர் உரிமையை
உறுதிசெய்ய வக்கில்லை.

கிணற்று மீடியா வாசிகள்
மைக்கை நீட்டியபடி
கிளிப்பிள்ளைபோல்
யார்மீதோ பழியை போடுவதிலேயே
குறியாய் இருக்கின்றன

வெளியுலகத்தை
எட்டிக்கூட பார்க்காமல்
கிணற்றுக்குள் இருந்தபடி
கிரந்தம் பேசுகின்றன.

சீஸனுக்கு சீஸன்
கடைவிரித்து
காசு பார்க்கும் தொல்லைகாட்சிகள்
விவாதம் என்ற பெயரில்
புது புது அர்த்தங்களில்
நகைச்சுவையான
குறளிவித்தை நடத்துகின்றன

ஈழப்படுகொலையின்போது
முத்துகுமார் தீக்குளித்தான்
காங்கிரஸும் கருணாநிதியும்
தலை முழுகிவிட்டு
கோவணத்தால் அம்மணத்தை
மறத்துக்கொண்டு
வெட்கம் கெட்டு
வாக்கு கேட்க வந்தனர்.

மூவர் விடுதலைக்கு
நீதி வேண்டி தீக்குளித்தாள்
இளங்குருத்து செங்கொடி
சேற்றில் புரண்ட எருமைபோல்
திரும்பி படுத்து
அசைபோட்டுக்கொண்டிருந்தது
அதிகார வர்க்கம்.

காட்டு வேடுவர்களை ஒத்த
காவிகளையும்
நிர்வாண பரதேசிகளையும்
பணம் படைத்த
தேசிய திருட்டு
முதலாளிகளையும்
விபச்சார சினிமா கூட்டத்தையும்
வாழவைப்பதே
இறையாண்மை என்கிறது
இந்தியாவின்
அரசியலமைப்பு சட்டம்.

தேசிய திருடர்களையும்
விபச்சாரம் செய்து பிழைக்கும்
சினிமா கூத்தாடிகளையும்
அரசியல் வியாதிகளையும்
கடவுளுக்கு சமமாக மதித்து
காத்தருளுவதே கடமை என்று
செயற்படுகிறது
கழிப்பறைக்கு நிகரான
சூதக நீதி மன்றங்கள்.

குற்றத்துக்கு
சரியான தண்டனையை
கோர்ட்
உறுதி செய்யும் என்றால்,
எதிர்வினையாற்றுவது
தவறானது
என்பதும் சரிதான்.

இந்தியா போன்ற
காட்டுமிராண்டிகளின் தேசத்தில்
ஜனநாயகம் பேசினால் அது
எருமை மாட்டின்மீது
பெய்த மழைக்கு சரி என்கிறது
ஆயிரம் ஆண்டு சரித்திரம்.

எந்த கட்சிக்காரன்
காவிரி விடயத்தில்
நியாயம் பேசுகிறான்.
வாய் திறக்கும் அனைவரும்
அரசியல் சாக்கடையை மட்டுமே
வாந்தி எடுத்துக்கொண்டிருக்கின்றனர்.

அண்ணன் எப்போ சாவன்
திண்ணை எப்போ
நம்ம கட்டுப்பாட்டுக்கு வரும்
என்பதை முன்னிறுத்திதானே
சூதக நாற்றம் கொண்ட
தேசியகட்சிகள்
காலட்சேபம் செய்கின்றன

நீதிபதிகளாக இருக்கும்
கறுப்பாடுகள்
அரசியல்வாதிகளின் நகர்வுகளை
அப்படியே பிரதிபலித்து
மாய்மால
தீர்ப்பெழுதுகின்றன.

ரஜனி கமல்
அஜித் விஜய்
நான்கு நக்கிகளும்
சினிமாவை தமதாக்கி
வைத்திருப்பதுபோல,
தந்தியும்
புதியதலைமுறையும்
நியூஸ் 7 தொலைக்காட்சிகளும்
குறிப்பிட்ட நான்கு
கட்சி கைத்தடிகளை வைத்து
மீன் சந்தை நடத்துகிறது.

1970 களில்
பாலச்சந்தர் இயக்கி வெளிவந்த
தண்ணீர் தண்ணீர் படத்தின்
கதை இன்றைக்கும்
அச்சொட்டாக பொருந்துகிறது.

ஆடு கழுத்து கயிற்றுடன்
வேலியில் சிக்கிவிட்டது
அதை கண்காணித்து
எசமான்
சிக்கலை எடுத்து விட்டிருந்தால்
ஆடு திமிறி அடித்து
வேலியை துவம்சம் செய்திருக்காது
ஆடும் செத்திருக்காது.

எசமானன்
ஆட்டை கவனிக்காமல்
பக்கத்து வீட்டு பெண்
குண்டி கழுவுவதை
கண்ணும் கருத்துமாக
பார்த்துக்கொண்டிருந்ததால்
ஆடு
வேலியை உடைத்து
தன்னிச்சையாக தப்பிக்க முயன்று
செத்துப்போனது.

ஆட்டுக்கதை
அரசியல் விவாதமாகி
ஆயிரம் வியாக்கிஞானங்களுடன்
ஆண்டாண்டுகளாக
தீர்வு எட்டப்படாமல்
சூடு பறக்க விவாதிக்கப்படுகிறது.

இதுதான் இந்தியாவின் நிலை
கேட்டால்
இந்தியா மிகப்பெரிய
ஜனநாயக நாடு என்கின்றனர்
அரசியல்
ஜோக்கர்கள்.

அமெரிக்காவை
மேற்கோள் காட்டுவதும்
ஐரோப்பாவை விஞ்சியதா
எடுத்து இயம்புவதும்
கண்கொள்ளா காட்சி.

கற்றுணர்ந்த தமிழ்
தேசியவாத இளைஞர்கள்
புதிய சித்தாந்தங்களை
அறிமுகப்படுத்தினால்
பாசிசம்
பிரிவினைவாதம்
இனவெறி
இனவாதம் பேசுவதாக
மார்பில் அடித்து கொள்கின்றனர்.

சோவியத் யூனியன்
உடைந்தது போன்ற உடைவுக்கு
காவிரி
பிள்ளையார் சுழி
போட்டுவிட்டதாகவே
இப்போதைக்கு தெரிகிறது.
-ஊர்க்குருவி-

2 comments:

சேக்காளி said...

சேக்காளி said...

கோபம் கொப்பளிக்கிறது