Thursday, August 18, 2011

>கூத்தாடி குசும்பன்< அங் 3,



.திமுகவின் தாத்தா, கருணா இப்போ மூணு நாலு மாசமா பாராட்டு விழா சுத்தமா ஒண்ணுமில்லாம வாழ்க்கை வெறுத்துப்போயிட்டாரு.

பொலம்பி ஒப்பாரி வச்சுப்பாத்தாரு கச்சிக்காரன் சினிமாக்காரன் எவினும் கண்டுக்கல்ல, தாத்தா வெறுப்பின் உச்சத்துக்கு போயி அடுத்து என்னதான் செய்யலாம்ன்னு ஓசிச்சு முடிவில சமச்சீர் வெற்றிவிழா, ன்னு ஒரு கூட்டமாச்சும் நடதிடலாம்ன்னு திட்டத்தோட தள்ளுவண்டியில் மயிலை மாங்கொல்லைக்கு பொறப்பட்டிட்டாருங்க.

சமச்சீர் கல்வியில இவிரு தன்னோடா சுயபுராணமும். கனி அக்காவோட சென்னை சங்கமம் விளம்பரங்களும், இன்னும் பல கழுத்தறுப்புக்களும் படிக்கிற புள்ளங்களுக்கே புடிக்கல்ல.

அதுக்காக என்னதான் பண்ணுறது, பாவப்பட்ட ஏழை பாழை குழந்தைய்ங்க. ஏதோ பாடம் படிக்கணுமுன்னா தலைவிதின்னு இந்தக்கண்றாவியயும் சமாளிச்சி போகவேண்டியிருந்திச்சு.

நீதிமன்ற தீர்ப்பில இவிரோட சுயபுராணத்த ஒண்ணுமில்லாம கத்தரிச்சுட்டுதான் சமச்சீர் புத்தகங்கள அமூல்படுத்த சொல்லியிருக்காங்க, நீதிமன்றத்தின் அந்த செருப்படிக்கு பிறகு இவிரு சாவறுதி காலத்துக்கு அதுபற்றி பேசவே தகுதியில்லை.

அதுதான் புதிய முதல்வர் ஜெயலலிதா அவங்களோட விருப்பமும், அதோட தரமான கல்வி தரம் அந்த புத்தகங்களில் போதாது என்பதும் உண்மைதான் அதால அந்த அம்மா கொஞ்சம் கூடுதலா முரண்டுபிடிச்சதும் தப்புத்தான்,

இப்ப இவிரு நல்லவனுக்கு நடிச்சு கல்விக்கடவுளா தன்னய காட்டிக்க சமச்சீர் வெற்றிவிழா நடத்தப்போறாராம். இந்த அழுக்கு மனிசன்.

இவர எந்த விலங்கோட ஒப்பிடறதென்னே டவுட்டா இருக்கு, முதலை. காண்டாமிருகம், நரி, ஓநாய், அழுங்கு, ஆமை இப்படி எத்தனையோ ஒப்பிட்டுட்டாங்க இனி எதத்தான் ஒப்பிடுறதென்னு தெரியல்லை.

கெட்டிக்காரனின் பொய்யும் பொரட்டும் எட்டுநாள் மட்டுந்தான் தாக்கிப்புடிக்கும்ன்னு, கவியரசு கண்ணதாசன் சொல்லியிருந்தாரு அதையே பச்சைப்பொய்யாக்கினவரு நம்ம தாத்தா.

இப்போ தாத்தனுக்கு 90 வயதாகிறது, இந்த அந்திமகாலத்திலயும் புகழ் ஆசை விட்டுவிலகல்லீக்க,, சனம் தன்னை மறந்துபோய்விடக்கூடாது என்கிற தந்திரத்தை மனதில வச்சு தினமும் ஏதாவது ஒரு பொய்யை கேள்வி பதிலா எயுதி பொலம்பிக்கிட்டுருக்காரு.


அடுத்ததா எப்புடியாச்சும் குதிச்சு ஒரு குட்டிக்கரணம் அடிச்சு ஒரு பாராட்டு விழா போட்டுக் காட்டுவோம் என்றால் தமிழ்நாட்டிலை சனம் கூடுவதாயும் காணல்லைங்க.

கோவையில ராசாத்தி ஆச்சியையும் ஒக்கார வச்சு கச்சி கூட்டம்ன்னு, ஒரு கூட்டம் போட்டாரு, அங்கயும் மவனுவ அடிச்சு கொளப்பிட்டு போயிட்டானுவ. அதுக்காக அவிரு விழா எடுக்க அவிரோட பூர்வீக பூமியான ஆந்திராவுக்கு போகமுடியுங்களா.

கடந்த ஐஞ்சு வருசமா கூத்தும் கும்மாளமும்ன்னு, தூங்குறத்துக்கே நேரம் கெடைக்காம பாராட்டு மழையில் பொரண்டு கெடந்தவரு சும்மா கெடக்க முடியுங்களா.

பாசத்தலைவனுக்கு பாராட்டு விழா, திரையுலகின் ஆசான் சிருங்காரவேலன் ஐயாவுக்கு பாராட்டு, தமிழ் வளர்த்த தானை தாத்தாவுக்கு பாராட்டு, வாழும் வள்ளுவன் வித்தமிழ் முத்தலுக்கு பாராட்டு, தொல்காப்பியத்தை திருத்தி எயுதிய பூலோகத்து பூங்காவனத்துக்கு பாராட்டுவிழா, செம்மொழி வளர்த்த சிங்காரவேலனுக்கு பாராட்டுவிழா அப்பிடின்னு அவிரு தானே நடத்தி ஆடின ஆட்டமெல்லாம் கொஞ்ச நஞ்சமா.

கண்ணுக்கு குளிச்சியா நடிகைகளை வளைச்சுவச்சு நடு நாயகமா தாத்தா ஒக்காந்திருந்த அழகே அழகுதாங்க,

நவீன திரொவ்பதை வீர விண்ணி, குஷ்பு கட்சியில் இணையும் விழா, நடத்தினாரு. அனுஸ்காவுக்கும் அசினுக்கும் தமிழ் நாடு அரசின் கலைமாமணி விருது குடுத்து பூரிச்சுப்போனாரு. மானாட மயிலாட நடத்தின நீதவான் நமீதாவை புகழ்ந்து பாராட்டி விழா எடுத்தாரு..

ரஜனி, கமலு, வாலி, வைரமுத்து, குஷ்பு, ன்னு முன்னணியெல்லாம் இப்போ செத்த மாட்டை விட்டு உண்ணி கழண்ட கணக்கா தாத்தாவ பின்னணிக்கு தள்ளிட்டாங்க அவிங்க எவரும் இப்போ கண்டுக்கறதே இல்லை நோவாம என்ன பண்ணுவாரு பாவம் தாத்தா!

அந்த அம்மா ஆட்சிக்கு வந்து மூணு மாசம் முடியப்போவுது அவங்களால ஐயாவாட்டம் ஒரு விழா எடுக்க முடிஞ்சுச்சுங்களா?. திரையுலகம் தானா வந்து பாராட்டு ஒண்ணு நடத்துவோமான்னு கேட்டத்துக்கு நேரமில்லைன்னு மறுத்திட்டாங்க அந்த அம்மா.

தாத்தாவுக்கு நேரம் மொத்தமா படுபட்சியாயிடிச்சு. அவிரு வாய தொறந்தாலே சனியன் தலைவிரிச்சு ஆடி சங்காரத்தில முடியுது. எப்படியாச்சும் ஒரு விசயத்திலயாச்சும் மக்களோட அனுதாபத்த புடிச்சுடணுமென்னு பறந்தடிச்சும் எதுவுமே தேறல்ல.

ஒண்ணே ஒண்ணு சமச்சீர் கல்வி ஒண்ணுதான் அவருக்கு ஆதரவா கெடைச்ச கொம்பு. அதுவும் சொதப்பிடிச்சு. அதையும் முதலமைச்சர் அம்மா நீதிமன்ற தீர்ப்பை மதிச்சு நீதிமன்றம் குறிச்சு சொன்ன தாத்தாவோட சுயபுராணத்தை வெட்டி வீசிட்டு அமுல்படுத்துறதா ஒத்துக்கிட்டாங்க, மேட்டர் ஓவர்,

இவிரு விடுறதாயில்லங்க.

சமச்சீர் கல்வி வெற்றி விழா பொதுக்கூட்டம்ன்னு மயிலை மாங்கொல்லையில் நாளை நடத்தப்போறாராம். இதில தி.மு.க தாத்தா கருணாநிதி சிறப்புரையாற்றுகிறார் என்று பீதியை கெளப்பியிருக்காங்க.

தி.மு.க இளைஞரணி, மாணவர் அணி சார்பில் சமச்சீர் கல்வி வெற்றி விழா பொதுக்கூட்டம் மயிலை மாங்கொல்லையில் நாளை மாலை 6 மணிக்கு நடக்கிறது.

பகுதி செயலாளர் மயிலை த.வேலு தலைமை வகிக்கிறார். தென்சென்னை மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ முன்னிலை வகிக்கிறார். பூவை சி.ஜெரால்டு, வி.எஸ்.ராஜ் ஆகியோர் வரவேற்கின்றனர்.

இதில் தி.மு.க தலைவர் கருணாநிதி பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார். பேராசிரியர் சுப.வீரபாண்டியன் மற்றும் தி.மு.க நிர்வாகிகள் பேசுகிறார்கள்.

கோ.அன்பு கபாலி, ஜி.மணி, சத்தியமூர்த்தி ஆகியோர் நன்றியுரையாற்றுகின்றனர். முன்னதாக இறையன்பன் குத்தூசின் இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது. கூட்டத்துக்கான ஏற்பாடுகளை மயிலை பகுதி கழகத்தினர் செய்துள்ளனர்.

இப்படி ஒரு செய்தி வந்து மிரட்டியிருக்கு. ஒண்ணை பாருங்க விழாவுக்கு வந்து உரையாற்றுவார்கள் என்பவர்கள் ஒரு சிலரை தவிர மற்ற எல்லோரும் புது ஆட்களாயிருக்கிறாங்க. பழைய ஆளுங்க எல்லாம் திஹார், வேலூர், பாளயங்கோட்டை, திருச்சி, புழல். என்று சிறையில் கழி திங்கிறாங்க.

பாவம் கனிமொழி பொண்ணாப்பொறந்து வாழும் வயதில் இந்த நாதாரியின் தப்பான வழிகாட்டலால் திஹாரில் சிறைப்பட்டு கிடக்கிறாங்க. இவரு சரியான மனிசனா இருந்தா, குத்தம் எல்லாம் நடக்குறத்துக்கு நான்தான் பொறுப்பு பேராசையில் அந்தப்பொண்ணு கனிமொழியின் பெயரை தப்பா யூஸ்பண்ணி பினாமியா போட்டு அவவோட வாழ்க்கையை கெடுத்திட்டேன்னு, குத்தத்தை ஒப்புக்கொண்டு கனிமொழியை விட்டுவித்துவிட்டு இவிரு போய் சிறையில் கிடக்கலாம்தானே. இன்னும் ரண்டு, மூணு, ஐஞ்சு, வருசத்தில முடியப்போறாரு பெத்த மகளை விடுவித்தவர் என்று மக்களிடையே செத்த அப்புறனாச்சும் ஒரு அனுதாபம் கிடைக்கும். ஆனா இவிரு செய்யமாட்டாருங்க.

மீண்டும் சந்திப்போம்

No comments: