Tuesday, September 20, 2016

பிரிவினைக்கு அடிகோலும் அரசியல் யோக்கர்கள்,

தேடிச் சோறுநிதந் தின்று - பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்று நினைத் தாயோ? 



விக்னேஷ்.

கர்நாடகாவுக்கு எதிராக
மட்டுமல்ல
பாக்கிஸ்தனுக்கு
எதிராகக்கூட ஆர்ப்பாட்டம்
போராட்டம்
வேண்டாம் என்று
பிரதமர் சொல்வது சரிதான்
அதுதான் ஒரு
மன்னனுக்குரிய மாண்பு.

அரசியல் ரீதியாக
தரப்படுத்தல் இல்லாத
நேர்மையான
மக்கள் ஆட்சி ஒன்று
நாட்டில்
நடைமுறையில் இருக்குமானால்!
கிளர்ச்சிகள்
தேவையற்றது என்பதும்
உண்மைதான்.

விவசாயிகள்
தற்கொலை செய்துகொள்வது,
தீக்குளித்து
தன்னை தானே
தற்கொடை செய்து கொள்வது
ஏற்புடையதுமல்ல.

ஆட்சியில் இருப்பவன்
சத்தியவானாக இருந்தால்,
அவனுக்கு
உணர்வு இருந்தால்
மனித உரிமை என்பது
என்ன என்று புரிந்தவனாக
அவன் இருந்தால்!
கிளர்ச்சி
செய்பவன்..
உயிரை விடுபவன்
பயித்தியக்காரனாக இருப்பான்.

விவசாயம் பொய்த்து
வயிற்றுக்கில்லாமல்
கடனாளியாகியபோது
வேறு வழியின்றி
விவசாயி
தூக்கு போட்டு சாகிறான்.

உரிமைக்காக தினம் போராடி
ஒன்றுமில்லையென்றபோது
வேறு வழியின்றி
மண்ணின் மைந்தன்
தீக்குளித்து
செத்து மடிகிறான்.

ஓட்டு வாங்கி
அதிகாரத்தை வைத்திருப்பவன்
மழையில் நனைந்த
எருமைமாடுபோல
அசைபோட்டுக்கொண்டு
வியட்னாமின் வளர்ச்சி
மொசாம்பிக்கின் முன்னேற்றம்
ஸ்ரீலங்காவின்
அபிவிருத்திபற்றிய
கவலையில் இருக்கிறான்.

காவிரியின்
அரை நூற்றாண்டு
வரலாற்று சிக்கலை
அவிழ்த்து நேர்ப்படுத்த
முதுகெலும்பற்ற
இந்தியாவால் முடியவில்லை.

நீதிமன்ற தீர்ப்பைகூட
நடைமுறைப்படுத்த முடியாத
படு பச்சோந்தியாக
இந்திய அரசு இருக்கிறது.

கன்னட காவாலிகள்
கட்டவிழ்த்திவிட்ட வெறியாட்ட
கொட்டத்தில்
தமிழனின் பல கோடி சொத்துக்கள்
சாம்பலானது.

தமிழர்கள்
தெருவில் அடி வாங்கி
கூனி குறுகி
அம்மணமாக்கி
அவமானப்படுத்தப்பட்டனர்
பெண்கள் குழந்தைகளை
உயிரோடு தீயிட்டு கொழுத்தவும்

முயற்சியும் நடந்தது.
பிரதமர் என்ற சுடிதார் கோமாளி
இரண்டு மாநில மக்களும்
அமைதிக்கு திரும்புங்கள்
என்று கூறிவிட்டு
புதிய சுடிதார் மாட்டிக்கொண்டு
அடுத்தொரு வெளிநாட்டில்
கொமடி நிகழ்ச்சி நடத்த
மேக்கப் போடுகின்றான்.

இருபத்தாறு வயதில்
இளைஞன் ஒருவன்
நெருப்பு மூட்டி சாகிறான்,
ஏன் செத்தான்
அந்த இளைஞன்?
எங்கு வந்தது
அதற்கான தேவை?
யாரும் அதுபற்றி ஆராயவில்லை.

ஊர் சுற்றி பிரதமர்
உள்நாட்டை
சுற்றிப்பார்த்திருந்தால்
நாட்டு நடப்பு புரிந்திருக்கும்
விவசாயி தற்கொலையும்
விடலையின் தற்கொடையும்
தடுக்கப்பட்டிருக்கும்.

வியட்நாமுக்கும்
மொசாம்பிக் நாட்டுக்கும்
நன்கொடைகளை அறிவிக்கும்
அறிவுகெட்ட மோடி
தமிழ்நாட்டுக்கு கிடைக்கவேண்டிய
நீர் உரிமையை
உறுதிசெய்ய வக்கில்லை.

கிணற்று மீடியா வாசிகள்
மைக்கை நீட்டியபடி
கிளிப்பிள்ளைபோல்
யார்மீதோ பழியை போடுவதிலேயே
குறியாய் இருக்கின்றன

வெளியுலகத்தை
எட்டிக்கூட பார்க்காமல்
கிணற்றுக்குள் இருந்தபடி
கிரந்தம் பேசுகின்றன.

சீஸனுக்கு சீஸன்
கடைவிரித்து
காசு பார்க்கும் தொல்லைகாட்சிகள்
விவாதம் என்ற பெயரில்
புது புது அர்த்தங்களில்
நகைச்சுவையான
குறளிவித்தை நடத்துகின்றன

ஈழப்படுகொலையின்போது
முத்துகுமார் தீக்குளித்தான்
காங்கிரஸும் கருணாநிதியும்
தலை முழுகிவிட்டு
கோவணத்தால் அம்மணத்தை
மறத்துக்கொண்டு
வெட்கம் கெட்டு
வாக்கு கேட்க வந்தனர்.

மூவர் விடுதலைக்கு
நீதி வேண்டி தீக்குளித்தாள்
இளங்குருத்து செங்கொடி
சேற்றில் புரண்ட எருமைபோல்
திரும்பி படுத்து
அசைபோட்டுக்கொண்டிருந்தது
அதிகார வர்க்கம்.

காட்டு வேடுவர்களை ஒத்த
காவிகளையும்
நிர்வாண பரதேசிகளையும்
பணம் படைத்த
தேசிய திருட்டு
முதலாளிகளையும்
விபச்சார சினிமா கூட்டத்தையும்
வாழவைப்பதே
இறையாண்மை என்கிறது
இந்தியாவின்
அரசியலமைப்பு சட்டம்.

தேசிய திருடர்களையும்
விபச்சாரம் செய்து பிழைக்கும்
சினிமா கூத்தாடிகளையும்
அரசியல் வியாதிகளையும்
கடவுளுக்கு சமமாக மதித்து
காத்தருளுவதே கடமை என்று
செயற்படுகிறது
கழிப்பறைக்கு நிகரான
சூதக நீதி மன்றங்கள்.

குற்றத்துக்கு
சரியான தண்டனையை
கோர்ட்
உறுதி செய்யும் என்றால்,
எதிர்வினையாற்றுவது
தவறானது
என்பதும் சரிதான்.

இந்தியா போன்ற
காட்டுமிராண்டிகளின் தேசத்தில்
ஜனநாயகம் பேசினால் அது
எருமை மாட்டின்மீது
பெய்த மழைக்கு சரி என்கிறது
ஆயிரம் ஆண்டு சரித்திரம்.

எந்த கட்சிக்காரன்
காவிரி விடயத்தில்
நியாயம் பேசுகிறான்.
வாய் திறக்கும் அனைவரும்
அரசியல் சாக்கடையை மட்டுமே
வாந்தி எடுத்துக்கொண்டிருக்கின்றனர்.

அண்ணன் எப்போ சாவன்
திண்ணை எப்போ
நம்ம கட்டுப்பாட்டுக்கு வரும்
என்பதை முன்னிறுத்திதானே
சூதக நாற்றம் கொண்ட
தேசியகட்சிகள்
காலட்சேபம் செய்கின்றன

நீதிபதிகளாக இருக்கும்
கறுப்பாடுகள்
அரசியல்வாதிகளின் நகர்வுகளை
அப்படியே பிரதிபலித்து
மாய்மால
தீர்ப்பெழுதுகின்றன.

ரஜனி கமல்
அஜித் விஜய்
நான்கு நக்கிகளும்
சினிமாவை தமதாக்கி
வைத்திருப்பதுபோல,
தந்தியும்
புதியதலைமுறையும்
நியூஸ் 7 தொலைக்காட்சிகளும்
குறிப்பிட்ட நான்கு
கட்சி கைத்தடிகளை வைத்து
மீன் சந்தை நடத்துகிறது.

1970 களில்
பாலச்சந்தர் இயக்கி வெளிவந்த
தண்ணீர் தண்ணீர் படத்தின்
கதை இன்றைக்கும்
அச்சொட்டாக பொருந்துகிறது.

ஆடு கழுத்து கயிற்றுடன்
வேலியில் சிக்கிவிட்டது
அதை கண்காணித்து
எசமான்
சிக்கலை எடுத்து விட்டிருந்தால்
ஆடு திமிறி அடித்து
வேலியை துவம்சம் செய்திருக்காது
ஆடும் செத்திருக்காது.

எசமானன்
ஆட்டை கவனிக்காமல்
பக்கத்து வீட்டு பெண்
குண்டி கழுவுவதை
கண்ணும் கருத்துமாக
பார்த்துக்கொண்டிருந்ததால்
ஆடு
வேலியை உடைத்து
தன்னிச்சையாக தப்பிக்க முயன்று
செத்துப்போனது.

ஆட்டுக்கதை
அரசியல் விவாதமாகி
ஆயிரம் வியாக்கிஞானங்களுடன்
ஆண்டாண்டுகளாக
தீர்வு எட்டப்படாமல்
சூடு பறக்க விவாதிக்கப்படுகிறது.

இதுதான் இந்தியாவின் நிலை
கேட்டால்
இந்தியா மிகப்பெரிய
ஜனநாயக நாடு என்கின்றனர்
அரசியல்
ஜோக்கர்கள்.

அமெரிக்காவை
மேற்கோள் காட்டுவதும்
ஐரோப்பாவை விஞ்சியதா
எடுத்து இயம்புவதும்
கண்கொள்ளா காட்சி.

கற்றுணர்ந்த தமிழ்
தேசியவாத இளைஞர்கள்
புதிய சித்தாந்தங்களை
அறிமுகப்படுத்தினால்
பாசிசம்
பிரிவினைவாதம்
இனவெறி
இனவாதம் பேசுவதாக
மார்பில் அடித்து கொள்கின்றனர்.

சோவியத் யூனியன்
உடைந்தது போன்ற உடைவுக்கு
காவிரி
பிள்ளையார் சுழி
போட்டுவிட்டதாகவே
இப்போதைக்கு தெரிகிறது.
-ஊர்க்குருவி-

Thursday, August 11, 2016

சாதி சங்கங்கள். ------------------------ கண்ணீர் விட்டுன்று - நீ கதறி அழுதாலும் மண்ணில் புரண்டொருகால் மலையை சுமந்தாலும் கல்மேல் தலை மோதி கட்டையிலே போனாலும் பொல்லாத சாதி "சங்கம்" புனையும் கதை அனைத்துயும் மெய்யென்று நீ நம்பி ஐயா உருகுவதேன் அடி வயிறு எரிவதுமேன் மெய் ஒன்று சொல்லுகிறேன் முடிந்தால் அறந் தொழுகு. சங்கங்கள் உனக்கொன்றும் தோள்கொடுக்க பிறந்ததில்லை பொங்கி கிடக்கும் உந்தன் நிந்தனையை தீர்ப்பதில்லை நஞ்சாய்பரவி விட்ட சாதிக்கு மருந்துமில்லை சங்கத்தின் மந்திரத்தால் - மாங்காய் விழுந்திடவும் போவதில்லை மெல்ல நிமிர்ந் தெழுந்து முப்பரவும் கல்வி கற்று பொல்லா உலகை நீ வெல்லப் பொருள் தேடு எல்லாம் அகன்றுவிடும் சாதி (சங்கங்கள்) தொலைந்துவிடும். கூனி குறுகி நீ கும்பிட்டு நின்றிடும் கால் சாதிப் பிணி பரவும் சங்கங்கள் அரசாளும் நாயிற் கடையாய் நீ நடுத்தெருவில் நிற்க வரும் நொண்டி தலைமைகளும் நுரை கொண்ட அரசியலும் கல்லில் நார் உரிப்பார் காற்றில் படம் எழுதி - பரி மேற்கில் உதிக்கும் என்பார் மண்ணாகும் உன் வாழ்வு மலிவாகும் மனித குலம். அரசியலில் பதவி சுகம் அடுக்கு மொழி மாய்மாலம் விடுகதையாய் வரலாறு வெட்டி வசன மழை உல்லாச வாழ் வவர்கு உன்பாடு மாற்றமில்லை மிஞ்சி மிஞ்சி போனால் - நீ கஞ்சிக்கும் வழியின்றி கட்டையிலே போகும்வரை சங்கம் தழைத்தோங்கும் - நீ செத்து தொலைந்தாலும் உன்னை சுட்டெரிக்ககூட சுடுகாட்டில் தொல்லை வரும். வீர தலைவனென்றும் விண் உயர்ந்த சாமியென்றும் ஆசைக்கு வேண்டுமென்றால் அன்பாய் அழைத்திடுகாண் அடை மொழியும் சேர்த்திடலாம் சங்கம் பெரிதென்று - நீ சன்னதம் ஆடுங்கால் நிம்மதியாய் சாகவிடா நிலையில்லா அமைதி கெடும் பொல்லா வினையெல்லாம் புது விதமாய் வந்திணையும் செல்லா காசாகி சீரழிவுதான் மிஞ்சும் கல்லால் அடித்து கொல்லாத குறையாக கணக்கின்றி பெண்களெல்லாம் கற்பழித்து கொலை நிகழும். கொள்ளியில் எண்ணெய் ஊற்றி குறியெல்லாம் சுயநலமாய் வல்லானாய் தலைவன் வாழ வாடினாய் உருக்குலைந்து கோவிலில் கலகம் கண்டாய் குடும்பமாய் வெளியே நின்றாய் சுடுகாடு உனக்கு இல்லை சொம்பிலே தண்ணி இல்லை கடையிலும் தேனீர் இல்லை காலுக்கு செருப்புமில்லை கடை நிலை வாழ்வுனக்கு கல்வியை கற்று ஓங்கு கலைகளை பயின்று மேவு வல்லமை எல்லாம் கூடும் வாழ்க்கையே சொர்க்கமாகும். மடை நீரில் நுரையாயானாய் மாம்பழத்து வண்டாய் வாழ்ந்தாய் காலத்தின் தடத்தில் வீணே கறுப்பாக பதிவு கொண்டாய் சாவது ஒரு நாள் கண்டோம் சரித்திரம் உண்மை என்பேன் நாயிலும் கடையாய் மண்ணில் வாழ்ந்திட வேண்டாம் என்றேன் மடியினில் பொருள் இருந்தால் மன்னனே நீதான் என்பேன் அறிவுறு கல்வி கற்றால் அரசனும் நீதான் என்பேன் சங்கத்தை தூக்கி வீசு சகலமும் நீயாய் மாறு. ரோகித் வெமூலா மாண்டான் குஜராத்தின் கொடுமை கேட்டோம் கலைச்செல்வி கோலம் கண்டோம் சுவாதியின் கொலையில் கூட சங்கங்கள் தலையீடாச்சு இவை ஒரு தர்மம்தானோ கண்மூடி தூங்கலாமோ இனி வரும் எதிர்காலத்தில் என்னதான் நடக்காதென்பாய் பிரிவினை கருவூலங்கள் - சாதி சங்கமாய் உதிக்குதென்பேன் வறுமையை உரமாய் கொண்டு வளர்திடும் சூழ்ச்சி என்பேன். முடி வெட்டும் வழியில் வந்த முத்துவேல் கருணா இன்று உலகத்து முதல்வனாக உன் முன்னே வாழ கண்டோம் கடை நிலை வகுப்பில் வந்த நடிகனாம் ரஜனி இன்று கும்பிடும் தெய்வம்போல கோவிலாய் மின்ன கண்டோம் இசை வழி உயர்வு கண்டார் இசைஞானி இளையராஜா சாதிக்கு சங்கம் வேண்டாம் சாத்தியம் உழைப்பே என்பேன். கல்லும் கடல் வானும் புல்லும் மர நிழலும் புதிய விஞ்ஞானிகளும் மெல்ல மெல்ல புதுயுகமாய் எல்லாமே மாறகண்டோம் இல்லானாய் எளியவனாய் இப்புவியில் நீ பிறந்ததனால் பசுதோலே எமனாய் மாறி பாவி நாம் அழியக்கண்டோம் இல்லாத ஊருக்கு இரும்புப் பாலம் தேவையில்லை நல்ல கல்வி நீ பயின்று நாலுபேர்போல் பொருள் கறந்து வல்லானை வெல்ல வழி நூறு தெரிகிறது. முற்சந்திக் ஒரு சங்கம் மூன்று பேருக்கொரு கட்சி கொள்கையற்ற பெருங்கோசம் குறியில்லா வழிகாட்டல் சப்பாணி தலைவரிடம் சமரசம் கொண்டொரு பொழுது குட்டி விரட்டிவிட்டால் கரம் கூப்பி மறு வாசல் காட்டான் போல் விலங்குகள்போல் கன மழையில் குமிழிகள்போல் நோக்கமற்ற இழி வாழ்வு நிதர்சனமோ கனவுகளாய். நேர்மையற்ற வெறும் பேச்சு நெறியில்லா கொள்கை வெறி கேழ்விக்கும் பதிலுக்கும் கிட்டாத விஷ ஞானம் சாதிக்கொரு கொள்ளை சாவிலும் குளிர் காய்தல் அக்காளும் தங்கைகளும் வெட்டி படுகொலைகள் பின்னணியில் யாரென்றால் சங்கங்கள் தலைமறைவு பொல்லாத பூமியிலே புரையோடும் அரசியல்காண். கண்மூடி வாய் பொத்தி கபடம்செய் அரசியலை சன்னியாசி தாடிக்குள் விளைந்த காளான் போல் விஞ்ஞான காலத்தில் வீணான சாதிவெறி மூங்கில் போல் தலை விரித்து மெல்ல படர்ந் தறுகாய் மேவி அடம்பிடிக்கும் கல்லுக்குள் நீர்போல காற்றிடையே அணுப்போல உன்னிடையே ஊடுருவி - உனை உறங்க விடப்போவதில்லை. சாதியை உரமாய்க்கொண்டு சங்கங்கள் பிறக்கக் காண்பாய் சாகச வார்த்தை எல்லாம் சரளமாய் தருவார் கேட்பாய் இல்லாத சாதி எல்லாம் இருப்பதாய் எடுத்துரைப்பர் சங்கங்கள் உன்மேல் ஏற தந்தரம் செய்வார் காண்பாய் உயிருக்கு உயிர் தாமென்பர் உணர்ச்சியாய் முறுக்கி நிற்பர் கடைசியில் நீ செத்தாலும் கலகத்தை கூட்டி போவர். தலித்துக்கு உரிமம் என்பர் சாதிக்கு மீட்சி என்பர் - நீ வாழ்ந்திடும் நாளில் சங்கம் வீழ்ந்திடா விருட்சம் என்பர் உணவில் சாதி என்பர் அணுவிலும் சாதி என்பர் அகம் புறம் அனைத்தும் தீர அற்புதம் சங்கம் என்பர் அப்பாவி மனிதா நீயும் அம்பாகி அழிந்தாய் கண்டோம் துச்சமாய் தூக்கி வீசு சுகமான வழியை தேடு. நிலவினில் கால் பதித்தான் நீடுலகை அளந்துவிட்டான் உள்ளங்கை நேர்கோட்டில் உலகையே சுருக்கிவிட்டான் அலைபேசி அகமாய் கண்டான் அனைத்துமே சித்தமென்றான் மனிதா நீ சாதிக்குள் மண்ணாகி போவதுமேன் அதர்மம் தலைக் குவந்து அன்றொருவன் செய்த வினை சீழாய் மலக்கழிவாய் சிறுமையுடன் வாழாதே. கருவில் உருவாகி கட்டைவரை பின்தொடரும் கோவில் திருவிழாவில் குடிநீர் பகிர்வுகளில் சாலை பள்ளிகளில் சனம் கூடும் நிகழ்வுகளில் காவலன் போல் நின்று காவு கொள்ள காத்திருக்கும். சாதிக்கு சமாதி கட்ட சங்கத்தை வெறுத்தால் உண்டு. நேருக்கு நேர் எதிராய் நிற வெறியை மிஞ்சி நிற்கும் சாதி தரித்திரத்தை சங்காரம் செய்திடுவாய் தூக்கி அதை நீ சுமந்தால் துன்பமே இல்லை வேறு தருணத்தில் குழி பறிக்கும் சாவுக்கும் நாள் குறிக்கும், பூவிலே உள்ள வாசம் புலையாக மாறக்காண்பாய் நேசமும் பகையாய் மாறும் நிலை தடுமாறிப்போகும் ஆணவக்கொலைகள் கூட ஆணொடு பெண்ணும் சாவாள் வீடுகள் எரிந்து சாம்பல் விண்முட்ட ஓலம் கேட்கும் நாடு விட்டு வெளியே போனால் நாய்ச் சாதி வருவதில்லை தெருவோடு தங்கி நிற்கும் திண்ணையில் படுத்துறங்கும் திரும்பி நீ வந்தபோது குறும்போடு உன்னை சேரும் வாழ்க்கையின் பாதி நாளை வலியோடு வருந்த வைக்கும் சாதியை நீ மதித்தால் தரை மட்டமாகும் வாழ்வு யாருமே மதிக்கமாட்டார் நாயியிலும் கடையனாவாய் நேர்கொண்டு நிமிராவிட்டால் நிச்சியம் மண்தான் நீயும் பூமியில் பிறப்போர் எல்லாம் பொதுவாக மனிதர்தானே. கடையினில் குவளை ரண்டு குடித்திடும் தேனீர் ஒன்று மதுக்கடை சென்றாய் என்றால் ஒத்தையி குடிக்க கண்டோம் கிணத்தினில் தண்ணீர் கொண்டால் குற்றமாய் காணும் சாதி - நெல் வயலினில் சிறுநீர் விட்டு வாய்க்காலி குளித்தபோது உழைப்பினை உறிஞ்சும் நோக்கில் ஊமையாய் நிற்கும் சாதி. சங்கங்கள் அமைத்து சாதி சமத்துவம் செய்வோமென்று அங்கங்கே கட்சியாகி அரசியல் செய்யக்கண்டோம் சங்கத்தின் தலைவர் எல்லாம் சுந்தரமாக மாறி - உனை துன்பத்தின் குறியீடாக்கி சுகமாக வாழக் கண்டாய். சாவீட்டில் சாதி என்றார் சமாதியில் பிழையும் கண்டார் பள்ளியில் பிரிவு என்றார் - நடை பாதையில் வகுப்பு என்றார் கோவிலில் திருவிழாவில் கொடும்பகை மூட்டி வைத்தார் காதலில் திருமணத்தில் காவலாய் நிற்போம் என்றார் தேர்தலின் போது சங்கம் திசை மாறி போகக்கண்டாய். - ஊர்க்குருவி-

Tuesday, July 26, 2016

VIP. --------------------------------------------------------------------------- சுபாஸ் சந்திரபோஸ். ................... இந்திய சுதந்திரத்துக்கு உணர்வு பூர்வமாக போராடிய மாவீரன் ஆங்கிலேயருக்கு எதிராக பெருத்த இராணுவத்தை கட்டி எழுப்பி ஆயுத போராட்டத்தை நிறுவியவர் ஜெர்மனி, ரஷ்யா, ஜப்பான், சீனா போன்ற நாடுகளுக்கு பயணம் செய்து இராசதந்திர நட்பில் இருந்தவர் முக்கியமான ஒரு தருணத்தில் காணாமல் போனவர் இருந்தும் மக்கள் மனங்களில் மலைபோல் உயர்ந்து நிற்கிறார். ---------------------------------- மோகன்லால் கரம்சந்த் காந்தி. .................... லண்டனில் சட்டம் படித்தவர் ஆங்கிலேயர் தனது நட்பு வட்டம் என்று போற்றியவர் பிடிவாதக்காரர். அகிம்சைவாதி என்று உள்ளூரில் முழங்கிக்கொண்டு இரண்டாம் உலகப்போருக்கு ஆபிரிக்காவில் வெள்ளையருக்கு ஆள் திரட்டி கொடுத்தவர் எழுபது வயதினிலும் பதின்ம வயது பெண்களை நிர்வாணமாக்கி தன்னோடு படுக்க வைத்தவர் நேதாஜியை இருட்டடிப்பு செய்வதற்காக இங்கிலாந்து மூலம் முதன்மை படுத்தப்பட்டு தேசபிதா ஆனவர்...,.. ---------------------------------------- வ உ சிதம்பரம்பிள்ளை. ....................... வசதியான குடும்பத்தில் பிறந்தவர் பச்சை தண்ணீர் போன்ற குணம் படைத்தவர். வெள்ளையரின் ஏஜண்டான பார்ப்பன சதியை உணராமல் மூர்க்கமாக முழு நாளும் சுதந்திரத்துக்கு போராடியவர். சொத்துக்களை விற்று கப்பல் கட்டி வரலாறு படைத்தவர் வஞ்சகத்தின் வக்கிரத்தால் அந்தமானில் சிறை பறவையானார் செக்கிழுத்தார் சிதிலமாகி செத்து மடிந்தார்.......... ------------------------ எம் ஜீ ஆர். தமிழகத்தின் புரட்சி தலைவன் தமிழ் சினிமாவின் ஒற்றை சூரியன் சிறின்ப சிருங்காரன் மலருக்கு மலர் தாவி மன்மதன்போல் வாழ்ந்தாலும் மறுபக்கம் கொடை வள்ளல். இன்றைக்கும் இவர்தான் சினிமாவின் சுப்பஸ்ரார். மக்கள் திலகமாக மனங்கவர் தலைவனாக தீய சக்தி கருணாவின் -முக திரை கிழித்த பேராசான். என்றைக்கும் இறவாத ஒப்பற்ற ஒளிக்கீற்று...... ------------------------- கவியரசு கண்ணதாசன். பிறந்தார் வறுமையுடன் பெற்றோரால் விலைபோனார். பெருங்கவியாய் புகழடைந்தார் மழைபோல் படைப் பியன்றார் மனம்போல் உணவெடுத்தார் மங்கை மது சங்கமமித்து சுந்தரமாய் களிப்படைந்தார். கவியரசாய் கவிப்பேரரசாய் காலத்தால் அழியாத காவியமாய் இன்றும் கல்வெட்டாய் வாழுகின்றார்........ ------------------------- காமராசர். அப்பழுக்கில்லாத ஆழ்கடலின் முத்து இவர், கறுப்பு வைரம் அவர் காமராசர் எனக்கண்டோம். படிக்காத மேதை பள்ளி சாலைகளை படைத்துவிட்ட விடிவெள்ளி. கருணா குழுமத்தின் திராவிட சதி மோத இதயம் உடைந்துருகி அவர் இறந்த வரலாறு, மக்கள் மனங்களில் தீ சுட்ட புண்னாக தீய்ந்து கிடக்கிறது. நேற்றல்ல இன்றும் நாளை மறுநாளும் நீக்கமற நெஞ்சில் வாழுகின்ற சுத்த தமிழ் வித்து கர்ம வீரன் காமராஜர். ----------------------------- பாரதிதாசன். தமிழை அமிழ்தென்றார் தமிழே உயிரென்றார், தலை போய் தொலைந்தாலும் தான் மறவேன் தமிழ் என்றார். முறை தவறி தமிழ் வளர்த்தால் முகத்தினில் அறை என்றார். பாரதியின் தாக்கத்தில் பக்தியுடன் கவி புனைந்தார் கனக சுப்பு பெயர் மாறி பாரதிதாசன் என பண் தமிழில் நாம் கண்டோம். ----------------------------- கருணாநிதி. திருட்டு ரயிலேறி திராவிடத்தில் இடம் பிடித்தார். அண்ணாவும் பெரியாரும் அகராதி என்றவுழ்த்து விட்டார். மூன்று மணம் புரிந்தார் முப்பது பேரை வைத்திருந்தார். காகம்போல் கரகரத்தார் கடைசிவரை பொய்யுரைத்தார். ஊழல் பொய் வாழ்வாகி உலை மூடி போல் வாழ்ந்தார் நாச படுகொலைக்கு நடு நாயகமாய் அடுப்பெரித்தார். சாகும் வயதினிலும் சகுனிபோல் தான் வாழ்ந்தார். தட்சணாமூர்த்தி என்றும் கருணா நிதியென்றும் வடமொழியில் பெயரமைத்து தமிழன் தீராத சிறுமைபட திக்கெட்டும் பழியானார். ----------------------------- அட்டை கத்தி ரஜனிகாந்த். ------------------------------ மராட்டியில் கருவாகி, கன்னட மானிலத்தில் அவதரித்தார் முறுக்கு தெறித்தாற்போல் முப்பொருளில் வசனமிட்டார் வறுமை தமிழினத்தின் உழைப்பு அனைத்தையுமே தன் பொருளாய் காவுகொண்டார். படத்துக்கு படம் பஞ்சு டயலாக்கு பறக்கவிட்டார் கவுத்து மடி நிறைத்தார் காரியத்தில் குறியானார். பச்சோந்தி என்ற பெயர் மொத்த பொருந்தி நின்றார். மொட்டை தலையாகி முகமெல்லாம் புலையாகி நிச்சியமில்லாத நடு இரவு சாமத்தில் செல்லா காசு இவரை கல்லாக நட்டு கபாலி என்று பெயருமிட்டு இல்லாத ஊருக்கு வழிகாட்டும் ஊடகங்கள். நெருப்பென்றார் பருப்பென்றார் கபாலி ஓய்ந்தவுடன் காணாமல் போய்விடுவார். -ஊர்க்குருவி-

Friday, July 22, 2016

தமிழக அரசியலுக்கு நாம் தமிழர் கட்சியின் வரவு காலத்தின் கட்டாயமே.

2016, புத்தாண்டு இனிதே பிறந்துவிட்டது. அனைவரும் புத்தாண்டை இனிதே கொண்டாடும் அதே நேரத்தில், இந்தியாவின் தமிழ்நாட்டில் 2016, மே மாதமாளவில் தமிழ்நாடு அரசு சட்டசபைக்கான தேர்தல் திருவிழா நடக்கவிருக்கிறது. தேர்தல் திருவிழாவுக்கான அனைத்து ஆரம்ப வேலைகளையும் அனைத்து கட்சியினரும் சிரம் தழ்த்தி தத்தமது இடங்களை தக்க வைப்பதற்காக கொள்கை கோட்பாடுகளை ஒருபுறம் தள்ளி வைத்துவிட்டு தேர்தல் விழாவுக்கான நடவடிக்கைகளை பொறுப்பேற்றுக்கொண்டுவிட்டனர். முன்னைய செயற்பாடுகளால் மக்களால் புறக்கணிக்கப்பட்டவர்களும், செயற்பாடு இன்றி கிடந்தவர்களுக்கும் பேருதவி செய்யும் விதமாக பெருத்த வெள்ளப்பெருக்கை இயற்கை தமிழநாட்டில் ஏற்படுத்தி கொடுத்து காணாமல்ப்போன கட்சியினரையும் மக்கள் மன்றத்தில் கலக்க வைத்து உதவியிருக்கிறது. போதாக்குறைக்கு நடப்பில் ஆட்சியிலிருக்கும் ஜெயலலிதா அரசின் ஊழல் மற்றும் மக்களை கண்டுகொள்ளாத ஆண்டான் அடிமை போன்ற மோசமான நடவடிக்கைக்கள் எதிர்த்தரப்பினருக்கு வாக்கு வங்கியை அதிகரிப்பதற்கான அனைத்து செயற்பாட்டையும் செய்து கொடுத்திருக்கிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரை இரு பெரும் திராவிட கட்சிகளான அதிமுக, மற்றும் திமுக ஆகிய இரண்டுகட்சிகளும் மக்களை ஏமாற்றி இரு பெரு மதங்கள்போல செழித்து வழர்ந்து நிற்கின்றன. இவை இரண்டில் ஒருகட்சிதான் ஆட்சியை பிடிக்கவேண்டும் என்பது பணக்கார கட்சிகளான அக்கட்சிகள் மற்றும் அக்கட்சிகளின் பின்னணியில் இருந்து செயற்பட்டுவரும் ஊடகங்களின் விருப்பம். ஊடகங்கள் எதை நோக்கி கை காட்டுகின்றனவோ அவற்றை உண்மையென்று நம்பி பின்பற்றுவதுதான் தமிழ்நாட்டு மக்களின் தலைவிதியாக இருந்துவருகிறது. ஊடகங்கள் தமது விருப்பத்திற்கேற்ப இரண்டு கட்சிகளுக்கும் போட்டி போட்டு தமது ஆதரவு வர்ணனையை தொடர்ச்சியாக செய்துகொண்டிருக்கின்றன. இருந்தும் குடும்பநல அரசியல் கட்டப்பஞ்சாயத்து, நிலமோசடி ஒழுக்கமின்மை போன்றவற்றால் செல்வாக்கு சரிந்திருந்து கூட்டணிகள் மூலம் சரிக்கட்டி ஆட்சியை பிடித்து சுபபோகமாக வாழ்ந்துவந்த கருணாநிதியின் திமுக, 2009ல், நடைபெற்ற ஈழ இனப்படுகொலை அதோடு ஒட்டி வந்த 2 ஜீ ஸ்பெக்ரம் மேஹா ஊழல் காரணமாக படு பாதாளத்தில் வீழ்ந்துவிட்டது. கருணாநிதியின் கட்சியின் வீழ்ச்சி ஜெயலலிதாவின் அகம்பாவத்தை அதிகரித்ததுடன் மக்களை மதியாமை எதேச்சதிகாரம் ஆகிய ஜெயலலிதாவின் இயல்பான குணநலங்களை இன்னும் அதிகரிக்க செய்திருக்கிறது. எவர் எப்படி எதை பதிவு செய்தாலும் கருணாநிதியின் படு வீழ்ச்சியின் மூழுமூலம், ஈழ தமிழர்களின் இனப்படுகொலைக்கு கருணாநிதி நேரடியாகவும் மறைமுகமாகவும் உதவினார் என்பதே, இதை கருணாநிதியின் மனச்சாட்சியும் மறுக்க முடியாது ஜெயலலிதாவாலும் மறுக்கமுடியாது, வரலாறும் மறுக்கப்போவதில்லை. இங்குதான் தமிழகத்து அரசியல் அதிகாரத்தின் வெற்றி தோல்வி எதை வைத்து எதனால் தீர்மானிக்கப்படுகின்ற என்பதை புரிந்துகொள்ள முடியும். ஈழதேச தமிழர்களின் அரசியலின் அசைவாக்க உந்துதல் இன்றி தமிழ்நாட்டில் எந்த ஒரு பிரிவினரும் அரசியல் செய்ய முடியாது. இதுதான் யதார்த்தம், கடந்தகால வரலாற்றை புரட்டிப்பார்த்தால் இந்த உண்மை யாவரும் புரிந்து கொள்ள முடியும். இதுதான் தமிழகத்தின் விதி. இதிலிருந்து தெரிந்துகொள்ளுவது என்னவெனில் தமிழ்நாட்டிலுள்ள தொண்ணூறு சதவிகித மக்கள் தமிழீழ விடுதலையை வேண்டி வரவேற்பவர்களாகவே இருந்துவருகின்றனர். தமிழீழ விடுதலைப்புலிகளையும் விடுதலைப்போராட்டத்தையும் மறைமுகமாக கொள்கை ரீதியாக எதிர்த்து அரசியல் செய்துவரும் கருணாநிதி, மற்றும் ஜெயலலிதா இவர்களை தாண்டி தேசிய கட்சிகளான காங்கிரஸ், பாஜக போன்ற கட்சிகள் கூட ஈழ விடுதலைப்போராட்டத்தை வெளிப்படையாக எதிர்ப்பதற்கு அஞ்சுகின்றனர். காரணம் மக்கள் ஆதரவு தமக்கு இல்லாமல் போய்விடும் என்பதை அவர்கள் நன்கே உணர்ந்திருக்கின்றனர். இலங்கையில் 1975 ம் ஆண்டளவில் தொடங்கப்பட்டு இன்றுவரை கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக தனி தமிழ் ஈழத்துக்கான ஆயுதப் போராட்டம் நடந்தது, கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகள் தேசியத்தலைவர் வே பிரபாகரன் அவர்களது தலைமையில் தமிழர்களுக்கான ஆட்சியும் அங்கு நடந்தேறியது. 2009 மே நடந்த இறுதிப்போரில் விடுதலைப்புலிகளின் ஆயுதப்போராட்டம் இந்திய அரசாங்கத்தின் சூழ்ச்சியால் தோற்கடிக்கப்பட்டது. ( விடுதலைப்போராட்டம் தோற்கடிக்கப்பட்ட விதம். இறுதி போரில் விடுதலைப்புலிகள் சந்தித்த மிக நெருக்கடியான சவால்கள் அனைத்தும் உலக தமிழர்கள் அறிந்த ஒன்றுதான்) இருந்தும் ஈழ விடுதலைக்கான தமிழர்களின் போராட்டத்தை கொள்கை ரீதியாக எவராலும் தோற்கடிக்க முடியவில்லை. அந்த உண்மையை இந்தியா மட்டுமல்லாது உலகநாடுகள் அனைத்தும் அறிந்து கொண்டே இருக்கின்றன. இப்படி இருக்கும்போது தமிழகத்தின் தமிழ் அரசியற் கட்சிகள் அவறறை புரிந்துகொள்ளாமல் இருக்க முடியாது. ஈழ போராட்டத்துக்கான தேவை எது என்பதை எந்த ஒரு தமிழனும் உலக அரங்கில் எந்த ஒரு இடத்திலும் உரக்க கூவி கேள்வி எழுப்பக்கூடிய வெளியை ஈழப்போராட்டத்தின் தார்மீக நியாயம் இன்றுவரை எந்த சக்தியாலும் தடுக்க முடியாத வகையில் நியாயப்படுத்தி விட்டிருக்கிறது. சாதாரணமாக சொல்லுவதாக இருந்தால் போராட்டத்தின் முக்கிய தரப்பான விடுதலைப்புலிகள் இயக்கத்தை தடை செய்த நாடுகளே தடையை விலக்கிக்கொள்ள தொடங்கிவிட்டன. இந்தியாவின் அழுத்தம் காரணமாக ஒருசில தரப்புக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பின் தடையை மீளப்பெற தயங்கினாலும் சம்பிரதாய தடைபோலல்லாமல் பெருத்த தடை உத்தரவுகளை பேண எவராலும் முடியவில்லை. இன்று தனது செயற்பாடுகள் மூலமாக ஜெயலலிதா அரசு மக்கள் மன்றத்தில் மிகுந்த அதிருப்தியை பெற்று கணிசமாக செல்வாக்கு இழந்திருக்கிறது. இந்த இடைவெளியை பயன்படுத்தி எவரை கூட்டு சேர்த்தாவது ஆட்சியை கைப்பற்ற கருணாநிதியின் திமுக பகீரத பிரயத்தனத்தை மேற்கொண்டு வருகிறது. 2011 நடைபெற்ற தேர்தலின்போது விஜயகாந்தை மிக மலிவாக வடிவேலுவை வைத்து விமர்சித்த கருணாநிதி இன்றைய தப்பித்தலுக்காக விஜயகாந்தின் காலடியிலும் விழுவதற்கும் மறுப்பின்றி தயாராகி வருகிறார். இருந்தும் கருணாநிதியுடன் கூட்டு சேர எவரும் தயாராக இல்லை என்பதுதான் இன்றுவரையுள்ள கள நிலவரம். இனப்படுகொலையாளி என்று எல்லோராலும் தூற்றப்பட்ட ஒருவனுடன் கூட்டு வைத்துக்கொண்டு எப்படி மக்களிடையே வாக்கு கேட்பது என்ற அச்சம் கூச்சம் காரணமாக எவரும் கருணாநிதியை நெருங்க அஞ்சுகின்றனர். அதன் எதிரொலியாகத்தான் கருணாநிதியை புறந்தள்ளிவிட்டு இன்று மக்கள்நல கூட்டணி என்ற பெயரில் வைகோ, திருமா, மற்றும் கம்யூனிஸ்டுக்கள் ஒன்றுசேர காரணமாகியிருக்கிறது. இவர்களுடன் இறுதியில் விஜயகாந்தின் தேமுதிக வும் இணையக்கூடும் இல்லாமல் விஜயகாந்தின் கட்சி பாஜகவுடனும் பயணப்படலாம் வேறு எப்படி வேண்டுமானாலும் நடக்கலாம். இந்த தேர்தலுக்கான அரசியற் கட்சிகளின் கள வெள்ள ஓட்டத்தில் புதிதாக இணைந்திருப்பவர்கள் சீமானின் தலைமையிலான “நாம் தமிழர்” கட்சியினர். சீமான் எவ்வளவுதான் பிரபாகரனின் தம்பி என்று தன்னை முன்னிறுத்தினாலும் மிக மிக உணர்ச்சிகரமாக ஈழம் சார்ந்த பேருரைகளை நிகழ்த்தினாலும், “கத்தி” பட பஞ்சாயத்து, புலிப்பார்வை பட வெளியீடுகளின்போது அவர் எடுத்துக்கொண்ட நழுவல்ப்போக்கு ஈழ மக்களிடம் சீமான் முன்பிருந்த நெருக்கத்தை தொடர்ந்து பேணிக்கொள்ள முடியுமா என்ற கேள்வி பல தளங்களில் எழுந்து அடங்கியிருக்கிறது. ஆனாலும் இப்போதைக்கு கருணாநிதி போன்று ஈழத்தமிழர்களுக்கு சீமான் பெருத்த ஆபத்தானவர் இல்லை என்பது மேலோட்டமான கருத்து. இன்னும் ஒரு கோணத்தில் பார்த்தால் தமிழ்நாட்டில் அவ்வளவு உறுதியாக நின்று இலகுவில் அரசியலில் கரை சேர்ந்துவிட முடியாது என்ற பொதுவான குணநலனும் புறந்தள்ள முடியாதது. காலம் ஓட்டத்தில் மக்களிடமிருந்து மறக்கப்பட்டுவிடுவோம் என்ற பயம், .விபச்சார கூட்டங்கள்போல சுயநலவாத அரசியல் வியாபாரிகள் அனைவரும் ஒன்றிணைந்து தமது கட்சியை காணாமல் செய்துவிடுவார்களோ என்ற அச்சம், காலம் ஓடுவதால் தொண்டர்களை தக்கவைத்துக்கொள்ள முடியாமல் கட்சி கரைந்துவிடுமோ என்ற உள் உதறல் இவைகளை வைத்துதான் தமிழ்நாடு போன்ற களங்களில் அராசியலில் கரையேற வேண்டிய கட்டாயம் சீமானை தளம்பல்நிலைக்கு இட்டுச்சென்றிருக்கலாம். என்றும் ஒரு சாரார் கருதுகின்றனர். என்ன இருந்தாலும் சீமானின் அரசியல் வரவு என்பது கருணாநிதிக்கு பெருத்த சவால் என்பது மறுப்பதற்கில்லை. தமிழகத்தில் மன்னர்கள் போன்று கோலோச்சும் திராவிட கட்சிகளின் அஸ்தமனமும் அதன் பின் ஒன்றுதிரழும் தேசிய நோக்கம் கொண்ட தமிழகத்து இளைஞர்களின் அரசியல் இயக்க உருவாக்கம் ஒன்றுதான் இலங்கையில் சிங்கள ஆட்சியாளர்களிடையே ஒரு மாற்றத்தை உருவாக்க ஏதுவாக இருக்கும் பதவிக்காக அரசியல் செய்து பதவிக்காக மத்திய அரசாங்கத்துடன் இணைந்து கூத்தாடக்கூடிய அரசியற்கட்சிகள் வீழ்ச்சி பெறாதவரை இந்திய மத்திய அரசு சிங்களவனின் நண்பனாகவே தொடரும் அபாயம் தவிர்க்கமுடியாத ஒன்றாகவே இருக்கும். விதிவசமாக இலங்கை இந்தியாவுக்கு பக்கத்தில் அமைந்துவிட்டது. ஆயுதப்போராட்டத்தின்போது அடங்கி கிடந்த சக்திகள் எல்லாம் இப்போ வன்மம் தீர்க்கவும் எழுச்சியை மழுங்கடிக்கவும் முனைப்பு கட்டுவரே தவிர உளப்பூர்வமான செயற்பாடுகளை எதிர்பார்க்க முடியாது. ஜெயலலிதா தமிழீழத்துக்கு எதிராக செயற்பட்டவர். ஆனால் கருணாநிதி உன்னோடு உன்னோடு என்று சொல்லி கழுத்தறுத்து துரோகம் செய்தவர் இந்த இடத்தில் காலத்தின் கட்டாயத்திற்கமைய சீமானை வலிந்து தமிழகத்து அரசியல் உள்வாங்கியிருக்கிறது பழையன கழிதலும் புதியன புகுதலும் இயற்கையானது அந்தவகையில் சீமானின் வரவு தமிழீழத்திற்கு நன்மை பயற்கிறதோ இல்லையோ தமிழ்நாடுக்கு மிக மிக தேவையான ஒன்றே. வயசு. வாய்ஜாலம் இவைகளை புறந்தள்ளி புதிய கொள்கைரீதியான சிந்தனை துடிப்பு ஆகியவற்றை கருத்தில்க்கொண்டு சீமானின் நாம் தமிழர் கட்சியை ஊடகங்கள் அங்கீகரிக்கவேண்டும். ஈழதேசம். செய்திக்காக கனகதரன்.

மாற்றம் ஒன்றே மாறாதது.



2016 மே 14 தமிழ்நாடு சட்டமன்றத்துக்கான தேர்தல் முடிந்து மே, 19 ம் திகதி வாக்கு எண்ணிக்கயுடன் இரண்டு மாதங்களாக களைகட்டியிருந்த தேர்தல் திருவிழா முடிவுக்கு வந்து ஜெயலலிதா தலைமையில் மீண்டும் ஐந்தாண்டுகளுக்கான ஆட்சி அதிகாரம் கையளிக்கப்பட்டிருக்கிறது.  

ஜெயலலிதா அம்மையாரும் மகிழ்ச்சி மேலோங்க தனது பிறவிக்குணத்துக்கு மாறாக ஆரம்ப அடிச்சுவட்டை சற்று தளர்த்தி வைத்து மக்களை குளிர்விக்கும் விதமாக விவசாய கடன் தள்ளுபடி, மதுக்கடைகள் நேரக்குறைப்பு என்று தனது பணியை தொடங்கியிருக்கிறார் இருந்தும் மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தை நோக்கி போகாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

முன்னைய சட்டசபை போலல்லாமல் பலம் பொருந்திய எதிர்க்கட்சியாக திமுக இருப்பதால் வருங்காலத்தில் சட்டசபையில் இன்னும் சுவாரஷ்யம் எதிர்பார்க்கலாம். அடுத்த சட்டமன்ற தேர்தல் 2021 மே மாதம் நடைபெறும், அந்த தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான அஇஅதிமுக நிச்சியம் வெற்று ஆட்சி அமைக்கப்போவதில்லை என்பதை இங்கு அடிக்கோடிட்டு அழுத்தமாக பதிவு செய்தகொள்ள முடியும்.

அப்படி நடப்பதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளூர இருந்தாலும் அதிமுக அடுத்த தேர்தலில் தோல்வியடையும் என்று சொல்லும் ஒரே சொல்லு போதுமானது. 2021, அன்றைக்கு ஆட்சி அமைக்கப்போவது யார்?

தமிழினத்தின்மீது அழுத்தமாக படர்ந்திருக்கும் மிகப்பெரிய தீயசக்தியான திமுகவை 2021 லும் புதைகுழியிலிருந்து மீண்டுவராமல் செய்யும் வல்லமை தமிழகத்து தமிழக்கு உண்டா என்ற எதிர்மறை வினாவுடன் இன்றைய கால நிகழ்வுக்கு வரலாம்.

 விஜயகாந்த், வைகோ, திருமா, கொம்யூனிஸ்டுக்கள், வாசன் ஆகிய கட்சி தலைவர்களின் கூட்டமைப்பு ஒன்றியமான மக்கள் நல கூட்டணி, அது தவிர்த்து தனித்து போட்டியிட்ட நாம்தமிழர் கட்சி, பாமக, ஆகிய மூன்று பிரிவினரும் முதலமைச்சர் கோசத்துடன் போட்டியிட்டிருந்தாலும் அத்தனை பிரிவினரின் எண்ணக்கருவும் எக்காரணம் கொண்டும் கருணாநிதி குழுமம் மீண்டும் தலையெடுத்துவிடக்கூடாது என்ற கருதுகோள் உந்துதல் அவர்களின் உள்ளுணர்வில் அடிநாதமாக இருந்ததாகவே பரப்புரைகளும் நகர்வுகளும் உணர்த்தி நின்றன.

அப்படி நின்றதன் பின்னணியில் இரு பெரும் திராவிடக்கட்சிகளையும் வேரறுப்பதற்கான தந்திர உபாயம் அனைத்து கட்சிகளிடமும் ஒரு தொலைநோக்கு குறிக்கோளுடன் தனித்தனியாக இருந்ததும் மறுப்பதற்கில்லை.

அதை நன்கு புரிந்துகொண்ட திமுக அதிமுகவின் வாக்குக்களில் கணிசமானவற்றை தன்பக்கம் திருப்பி வெற்றி பெற்றுவிடவேண்டும் என்ற வெறியில் பறந்தடித்து பரப்புரை செய்து வந்தது.

ஏறுக்கு மாறாக பேசப்போய் மற்றக்கட்சிகளின் எதிர்வீச்சு தன்னை அதிகம் பாதிக்காமல் இருப்பதற்காக அதிமுக தவிர்ந்த எந்த கட்சியையும் தனக்கு எதிரான வீரியமான கட்சியாக காட்டி பரப்புரை செய்ய திமுக விரும்பவில்லை,

தனது பொது எதிரி அதிமுக என்பதுபோலவும் அதிமுகவுக்கு ஆதரவாக மக்கள் நலக்கூட்டணி இருப்பதுபோலவும் ஒரு மாயத்தோற்றத்தை உண்டாக்கி மக்கள் ஆதரவை தனது பக்கம் திருப்பும் விதமாக மக்கள் நலக்கூட்டணி அதிமுகவின் பி ரீம் என்று பரப்புரை செய்து மக்கள் அனுதாபத்தை பெற பகீரத பிரயத்தனம் செய்தது.

பாமகவையோ நாம்தமிழர் கட்சியையோ திமுக வம்புக்கு இழுக்க விரும்பவில்லை. அதேபாணியை பின்பற்றிய அதிமுகவும் தனக்கு போட்டியே இல்லை என்பதுபோலவும் பொதுவான எதிரி திமுக மட்டுமே என்பதுபோலவும் களமாடியது.

புதிய அரசை தெரிவுசெய்யும் தகுதி படைத்த வாக்காள பெருமக்கள் அனைவரிடமும் மாற்று சக்தி ஒன்றை நோக்கிய சிந்தனை மும்முரமாக தலையெடுத்திருந்தாலும் ஐந்து முனைப்போட்டியில் யாரை தேரிவு செய்வது என்பதில் அறுதி நிலைப்பாடு எடுக்கமுடியாத ஒருவித மயக்கநிலை ஒவ்வொரு வாக்காளர்களிடமும் தொடர்ந்தவண்ணம் இருந்தது,

இருந்தும் திமுக என்ற சமூக விரோத கொடிய சக்தி எப்படியும் தோற்கடிக்கப் படவேண்டும் என்ற ஆதங்கம் போட்டியாளர்கள் முதலாக மக்கள் மத்தியிலும் பரவலாக இருந்தது என்பதாகவே கள நிலமைகள் பல்வேறு கட்டங்களில் துல்லியமாக வெளிப்படுத்தியிருந்தன.

 எதிர்காலத்தில் உண்டாகக்கூடிய சுய பாதுகாப்பு சம்பந்தமான பக்கவிளைவுகளின் எதிர்வினைகளை கருத்தில்க்கொண்டு அரசியலில் களத்தில் நின்ற போட்டியாளர்கள் முதற்கொண்டு வாக்களிக்கவல்ல ஒவ்வொரு தனி மனிதன்வரை எவரும் இவற்றை வெளிப்படையாக சொல்லமுடியாது என்ற யதார்த்தத்தை எவரும் புறக்கணிக்கவும் முடியாது.

இருந்தும் நீண்ட நெடுங்காலமாக மக்கள் பின்பற்றி வந்த பாரம்பரிய கட்சி சார்பு மனவோட்டம், மக்களின் அறியாமை, திமுகவின் பணபலம், ஊடகபலம், கருணாநிதியின் அனுபவம் வாய்ந்த கபடத்தனமான பிரித்தாளும் தந்திரோபாயங்கள், பிரச்சார தந்திரம் ஆகியவற்றுடன் ஜெயலலிதா அரசின் எதேச்சதிகார போக்கு அனைத்தும் ஒன்று திரண்டு திமுகவுக்கு கணிசமான வெற்றியை தந்திருப்பதும் மறுப்பதற்கில்லை.

 தமிழகத்தின் திராவிட அரசியற் கலாச்சார சூழலில், கருணாநிதி+ ஜெயலலிதா ஆகிய இருபெரும் சக்திகள்தான் தொடர்ச்சியான தமிழகத்தின் ஆட்சிக்குரிய மன்னர்கள் போன்ற மாயையை திட்டமிட்டு தோற்றுவித்து ஆட்சியாளர்களாக இருந்துவரும் இவ் இரு பெரும் தீயசக்திகளை ஒருசேர வீழ்த்துவது என்பதும் ஆழமாக சிந்திக்க முடியாமல் புரையோடிக்கிடக்கும் தடுமாற்றம் நிறைந்த இந்திய கட்சி அரசியல் கலாச்சாரத்தில் சிரமமான ஒன்று என்பதும் யதார்த்தமே.

மொத்த மக்கள் தொகையில் படிப்பறிவு குறைவான கிராமங்கள் நிறைந்த தமிழகத்தின் வறியவர்களின் பலவீனத்தை சாதகமாக பயன்படுத்தி ஹிந்தி எதிர்ப்பு தமிழ் வளர்ப்பு போன்ற வாய்ஜால ஆசை முழக்கங்கள் மூலம் மூளைச்சலவை செய்யப்பட்டு இலவசங்களை மட்டுமே சமூக மேம்பாடாக முன் வைத்து மக்களை மந்தைக்கூட்டம் போன்ற கட்டுக்கோப்புக்குள் சிக்கவைத்தது மட்டுமல்லாது தம்மை பெரு மதம் போன்று மக்கள் மனங்களில் திராவிட கட்சிகள் திட்டமிட்டு பதியம் போட்டு வைத்திருக்கின்றன.

போதாக்குறைக்கு நாடு தழுவியவாறு பெருக்கெடுத்தோடும் மது, மற்றும் சமூகத்தை சீரழிவில் மூழ்கடித்து நிற்கும் சினிமா மோகம் இவ்விரண்டும் மக்களை சோம்பேறிகளாகவும் சிந்தனையற்றவர்களாகவும் செயற்கையாக மந்தமாக்கி வைத்திருக்கிறது. திராவிட கட்சிகளான திமுக,, அதிமுக ஆகிய கட்சிகளை தலை முழுகிவிட்டு நல்ல ஒரு மாற்று சக்தியை தெரிவுசெய்யவேண்டும் என்ற சிந்தனை தமிழகத்து இளைய சமுதாயத்திடம் இல்லாமல் இல்லை.

இருந்தும் மூத்த குடும்பத்தலைவர்கள் பாரம்பரியமாக பின்பற்றி வந்த திராவிட கட்சிகளை விட்டு வெளியேறமுடியாத ஒருவித பழமைவாத சம்பிரதாய சித்தாந்த சிக்கல்கள், கட்சிகள் மாவட்டங்கள் தோறும் கொடுக்கும் அற்ப பதவிகள் அவைகளைவைத்து நடத்தும் பஞ்சாயத்து, கட்சிகளின் பெயரால் கிடைக்கும் காண்ராக்ட் கமிஷன், இன்னபிற காரணிகளால் பின்னப்பட்டு புரையோடிப்போயிருக்கும் சமுதாயத்தில் ஒரே இரவில் மாற்றம் ஒன்றை கொண்டுவருவது என்பது இலேசான விடயமும் அல்ல.

 அரசியல், சினிமா இவ்விரண்டும் மட்டுமே பெயர், புகழ், பணம் பண்ணுவதற்கான தொழிலாக இந்திய மட்டத்தில் வரையறுக்கப்பட்டிருக்கிறது. திராவிடத்திலிருந்து பிரிந்துபோன மதிமுக, அதிமுகவிலிருந்து பிரிந்துபோன திருநாவுக்கரசரின் கட்சி, ரீ ராஜேந்தரின் இலட்சிய திமுக, பாக்கியராஜின் கட்சி, கண்ணப்பனின் கட்சி, எம் ஆர் வீரப்பனின் கட்சி போன்ற பல உடைவுண்ட திராவிடத்துண்டுகள் எதுவும் இன்றுவரை தலையெடுத்திருகவில்லை என்பது இங்கு குறிப்பிட்டு கூறக்கூடிய ஒன்றாக பதிவுசெய்ய முடியும்.

கடைசியாக பிறந்த தேமுதிக கூட உடைவு கண்டு சந்திரகுமார் தலைமையில் மக்கள் தேமுதிக ஆக உருவம் பெற்று திமுகவுடன் கூட்டுச்சேர்ந்து தேர்தலில் போட்டியிட்டு காணாமல்போன நகைச்சுவையையும் நாம் கண்டு களித்தோம்.

எத்தனை கட்சி பிறந்திருந்தாலும் பிரிந்து சென்று கட்சி கண்ட யாரிடமும் சித்தாந்த ரீதியாகவோ கொள்கை ரீதியாகவோ எந்த மாற்றமும் உணரமுடியவில்லை, நானா நீயா என்ற தாழ்வு மனப்பாண்மையின் உச்ச வேறுபாடு மட்டுமே மேற்குறித்த கட்சிகள் பிறப்பதற்கு காரணியாக இருந்ததாக வரலாற்று வழித்தடம் சொல்கிறது.

 ஈற்றில் பிரிந்து சென்ற வாசலுக்கு திரும்பச்சென்று பாராட்டு பத்திரம் வாசித்து மண்டியிட்டு யாசகம் கேட்டு கூட்டணி வைத்துக்கொண்ட சிறுமைகள் தெருக்கூட சிரிக்கும்வண்ணம் நடந்தேறியது. தனித்தன்மையுடன் கட்சி தொடங்கவேண்டுமாயின் அடிப்படையில் சமூகத்தை சீராக கட்டியமைக்கவல்ல கூர்மையான சிந்தனையுடன் நாட்டு வளங்களின் அடிப்படையில் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய உறுதிமிக்க கொள்கை தேவை,

 இந்த ஐம்பது ஆண்டுகளில் நாம் தமிழர் இயக்கம் தவிர வேறு எவரும் அப்படி ஒரு சிந்தனையுடன் தமிழக அரசியல் அரங்கில் புறப்பட்ட வழித்தடமும் இல்லை.சீமானின் சீரான தலைமைத்துவம் இல்லாமல் சரியான அரசியற் புரிதல் அற்றுப்போய் இந்திய போலி ஜனநாயக மாயைக்குள் கிடக்கும் மக்களின் உணர்ச்சிகளை தூண்டி வப்படுத்தி அரசியல்செய்வதற்கு ஏற்ற இலகுவான தந்திர உபாயமாக சாதிவாரியான பிரிவினைகள் மட்டுமே திராவிட மேலாண்மை சாக்காட்டின் பின்னர் பலகட்சிகளாக பிறப்பெடுத்திருக்கின்றன,

இந்த சாதி ஆதிக்ககட்சிகள் ஒருபோதும் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றவோ சமூகநீதியை பெற்றுத்தரவல்ல அரசியல் வெளியை நிர்ணயிக்கவோ ஒருபோதும் முடியாது.

ஒரு எம் எல் ஏ தொகுதி கிடைக்காத கடுப்பில் வெளியேறி கட்சி கண்ட இவர்கள் தேர்தல் காலங்களில் திராவிட கட்சிகளிடம் பேரம் பேசுவதற்காகவும் அரசியல் வியாபாரத்தில் நல்ல இலாபம் கிடைக்கும் என்ற ஒரே நோக்கத்துக்காக புற்றீசல்போல ஒவ்வொரு வட்டாரத்திலும் சாதி சங்கங்கள் கட்சிகளாக மாறி மக்களை சிறு சிறு குழுக்களாக சமூகத்தை துண்டுபோட்டு சீர்குலைத்தது மட்டுமல்லாது அக் கட்சிகளின் பின்னணியில் சாதி கலவரம், ஆணவக்கொலை போன்ற அவலங்கள் பெருகும் அளவுக்கு அவலம் மிக்க அங்கீகாரம் கிடைக்க வழி செய்திருக்கிறது.

எவ்வளவு சாதிசங்கங்கள் கட்சிகளாக களம் கண்டாலும் கடைசியில் இலாபம் முழுவதும் திராவிட கட்சிகளுக்கே, தேர்தல் காலங்களில் சாதி கட்சிகளை இணைத்துக்கொண்டு மிக இலகுவாக தமது இலக்குகளை தீர்மானித்து களம் காணலாம் என்பதும், சாதி கட்சிகளுக்கு ஒருசில இடங்களை கொடுப்பதன் மூலம் களத்தில் முட்டிமோதிக்கொள்ளாமல் பெரும்பான்மை பலத்தை எளிதாக பெற்று கோலோச்ச முடியும் என்பதும் கருணாநிதிக்கும் ஜெயலலிதாவுக்கும் நன்கு தெரியும்.

. ஜெயலலிதாவை விடவும் தேர்தலில் பெரும்பான்மையை ஒருபோதும் தனித்து பெறமுடியாத நிலையில் இருக்கும் கருணாநிதியே சாதிக்கட்சிகளை தோற்றுவிப்பதிலும் வளர்ப்பதிலும் தலைசிறந்த விஞ்ஞானி என்பதே உண்மை.

இருந்தும் இந்த சிறு சாதிகட்சிகள் திராவிட கட்சிகளின் புணர்ச்சிக்கு இடங்கொடுக்கும் விபச்சாரிகள்போல பயன்படுத்தப்பட்டு ஒரு அர்த்தமற்ற நகைப்புக்குரிய சந்தற்பவாத கூட்டணியை நிறுவி தேர்தல் காலங்களில் ஒன்றுகூடி ஓரிரு இடங்களுக்காக விபச்சார அரசியல் செய்து வருகின்றன.

திராவிட கட்சிகளின் கணக்கிலடங்கா பணபலம், மக்களின் வறுமை, அறியாமை ஆகியவற்றை சரியாக பயன்படுத்தி தம்மை கடவுளுக்கு நிகரானவர்களாக காட்டிக்கொள்ளும் மிகப்பெரிய தலை கழுவும் பிரச்சார யுக்தி, கட்சிகளின் கட்டிப்பாட்டில் உள்ள ஊடக பலம், மக்களை சிந்திக்க இடமளிக்காமல் தினம் தினம் ஒவ்வொரு சார்பு தொலைக்காட்சிகள் மூலமும் நேர்படபேசு, ஆயுத எழுத்து, திண்ணை, கேள்வி நேரம், விவாத அரங்கம் என குறிப்பிட்ட சில விதண்டாவாதிகளை மட்டுமே வைத்து நடத்தப்படும் பட்டிமன்றம், அரட்டை அரங்கம் போன்ற ஆளுமையற்ற நகைப்புக்குரிய நிகழ்ச்சிகள் அனைத்தும் இல்லாத இடத்தை நோக்கி வாக்காளர்களை வழிகாட்ட முனையும் திசை திருப்பும் தந்திரங்கள் என கொள்ளமுடியும்.

உலகத்தில் எங்குமில்லாத இப்படியான குளப்பமான மாயச்சூழலிருந்து தப்பித்து மக்களால் தனித்து முடிவெடுக்கமுடியாத திரிசங்குநிலை தொடர்ந்து திட்டமிட்டு பேணப்பட்டுவருவதே உறுதியான மாற்று சக்தி ஒன்று தலையெடுக்க முடியாமைக்கான பிரதான காரணி என்பதை நடுநிலையான அரசியல் ஆய்வாளர்கள் எவரும் கருத்தில் மாறுபட முடியாது.

 தவிர மாற்றுச்சக்திகளென்ற முழக்கத்துடன் புறப்பட்டு வந்து உப்புப்போல திராவிட கட்சிகளுக்கு உவப்பாக சுவையூட்டி கரைந்து கடைசி துகளாக ஊசலாடிக்கொண்டிருக்கும் பாட்டாளி மக்கள் கட்சி, திமுகவிலிருந்து பிரிந்து வந்த வைகோவின் மதிமுக, அடுத்து களத்துக்கு வந்த விஜயகாந்தின் தேமுதிக, போன்ற கட்சி தலைமைகளின் உறுதியில்லா இயலாமை, மாற்றம் என்று கூறிக்கொண்டே புறப்பட்ட இடத்திற்கு திரும்பிச்சென்று ஒருசில ஆசனங்களுக்காக மண்டியிட்டு யாசகம் கேட்டு கூட்டணி அமைத்து கொண்ட நியாயப்படுத்த முடியாத செயற்பாடுகள் போன்றவை மக்களால் ஜீரணித்து கொள்ளவும் முடியவில்லை,

 இத்தகைய விரும்பத்தகாத அனுபவங்களால் நாம்தமிழர் கட்சி போன்ற புதிய வரவுகள் இனியொரு பொழுது பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று ஆட்சியமைப்பார்களா? என்ற நம்பிக்கையீனமும் கூட மக்களிடையே ஒரு பெருத்த ஆழமான மறைமுக அரசியலாக உருவெடுத்து தமிழகத்தில் ஆளுமை பெற்றிருக்கிறது.

இந்த அனுமான அடிப்படையில் ஜெயலலிதாவின் அதிமுகவின் 2016 வெற்றி என்பது தேர்தலில் போட்டியிட்ட போட்டியாளர்கள் உட்பட வாக்காளர்கள் என அனைவரும் வெளிக்காட்டிக் கொள்ளாவிட்டாலும் ஏற்கனவே எதிர்பார்த்த ஒன்றுதான். இத்தனை கலாச்சார சூழலில் முதலமைச்சர் போட்டியில் களத்தில் நின்ற போட்டியாளர்கள் எவராவது தாம் வெற்றி பெற்று முதலமைச்சர் ஆவோம் என்று நினைத்திருந்தால்கூட அது தமிழகத்தின் அரசியல் தற்ப வெப்பநிலையை அறிந்துகொள்ள முடியாத அளவுக்கு ஆளுமை இல்லாத அனுமானம் கொண்ட பெருத்த அறியாமை கொண்ட வர்கள் என்றும் கணிப்பிட முடியும்.

 திமுக மிகப்பெரிய சுயநலவாத குடும்பநல ஊழல் கட்சி என்பதையும் தாண்டி, ஈழ அரசியலின் அப்பட்டமான கள்ளத்தனம், கயமை, மற்றும் ஈழ இனப்படுகொலை, 2ஜீ உலக மகா ஊழல் ஆகியவற்றினால் உண்டான பெரும் கறையை மிகப்பெரிய தந்திரவாதியான கருணாநிதி தனது வாய்ஜால மற்றும் கபட தந்திரங்கள் மூலம் வழமைபோல மக்களின் மண்டை கழுவி மறக்கடித்துவிடலாம் என்று நம்பிய நம்பிக்கை கெடுபேறு காரணமாக நாம்தமிழர் இயக்கத்தின் உறுதி மிக்க எதிர்வீச்சினால் 2009 களுக்குப்பின் தலைதூக்கமுடியாமல் மரணக்குழி நோக்கி தள்ளப்பட்டுவிட்டது.//

சீமானின் வரவுக்குப்பின் திமுக, விதிவசமாக மரண அடிவாங்கி குற்றுயிராக நாம்தமிழர் இயக்கத்தால் தேருவில் வீசப்பட்ட கட்சி என்பதை வெளியே காட்டிக்கொள்ளாவிட்டாலும் பாதிப்பின் தாக்கத்தை கருணாநிதி உள்ளூர நன்கே உணர்ந்திருந்தார், தமிழ்நாடு முழுவதும் அதே மனநிலையில்த்தான் இருந்தது என்பதை எவரும் மறுக்கவும் முடியாது.

இருந்தும் மறக்கும் மனநிலைகொண்ட தமிழகத்தில் தனது வழமையான தந்திர உபாயத்தை ஆயுதமாக்கி தொடர் கபட நாடகங்களை அரங்கேற்றி மீண்டும் வென்றுவிடலாம் என்ற கருணாநிதியின் அதீத தன்னம்பிக்கை இம்முறை எடுபடவில்லை.

கருணாநிதி காங்கிரஸ் கூட்டத்தினரால் ஈழத்தில் நடந்த இனப்படுகொலை நிகழ்வுகளை அப்படியே திரும்பத்திரும்ப மக்கள்முன் உணர்வுபூர்வமாக எடுத்து வைத்த நாம்தமிழர் கட்சியின் பரப்புரை மூலம் திமுக காங்கிரஸ் கட்சிகள்மீது மக்கள் மத்தியில் மிகப்பெரிய பாதிப்பு உண்டாவதை கண்ட சிறு கட்சிகள்கூட திமுகவுடன் கூட்டணி வைக்க விரும்பவில்லை.

 கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்களுடன் வெளிப்படையான பேச்சுவார்த்தை நடத்துவதைக்கூட காங்கிரஸ் தவிர்ந்த ஏனைய அரசியல் கட்சிகள் அஞ்சி ஒதுங்கிக்கொண்டன. திமுகவின் ஈழ எதிர்ப்பு அனீதியின் எதிரொலியாக பிறந்த நாம்தமிழர் இயக்கத்தின் பிறப்புடன் திமுகவின் சகாப்தம் முடிவுக்கு வந்துவிட்டதாகவே கொள்ளலாம்.

இனி நாம்தமிழர் இயக்கம் செத்துப்போனால் ஒளிய திமுக எழுந்திருக்க முடியாது என்றே இறுதியிட்டு கருத முடிகிறது. உண்மைத்தன்மை, மாற்றம் நோக்கிய வித்தியாசமான சமூக மேம்பாட்டுக்கான கொள்கை நெறி, இளமைத்துடிப்பான ஆற்றல் அனைத்தும் நாம்தமிழர் கட்சியிடம் இருப்பதாக தமிழகம் மிக நன்றாகவே உணர்ந்திருக்கிறது.

இத்தேர்தலில் நாம்தமிழர் இயக்கம் வாக்கு அதிகம் பெறாததற்கு அக்கட்சி மக்களை ஈர்க்கவில்லை என்பதை விட திராவிட இயக்கங்களின் அசுரத்தனமான ஊடக பரப்புரை, பிரமாண்ட தெருக்கூட்ட பரப்புரை அமைப்புக்கள், பல்லாயிரக்கணக்கான வாகன அணிவகுப்புக்கள், கடல்நீர்போன்று அள்ளிவிடப்பட்ட பணம். இவைகள் மத்தியில் “இவர்கள் ஆட்சியை கைப்பற்றுவார்களா” என்ற ஐயப்பாடும் நாம்தமிழர் இயக்கத்துக்கு எதிராக பயணித்தது.

கருணாநிதி அல்லது ஜெயலலிதா இருவர்கள் மட்டுமே முடிக்குரியவர்கள் நாட்டை ஆள்வதற்கும் வாக்குறுதிகளை செயல்ப்படுத்தும் வல்லமையும் அவர்களுக்கு மட்டுமே உண்டு மற்றவர்கள் எப்படி செயல்ப்படுத்த முடியும் என்ற பாமரத்தனமான அறியாமையும் பல இலட்சம் கிராமத்து ஏழைகளிடம் வினாவாக இருந்தது.

வள்ளுவருக்கு பெங்களூருல் சிலை வைத்தல், கண்ணகி சிலைக்கு வழக்காடுதல், அண்ணாபெயரில் தெருவுக்கு பெயர் வைத்தல், அண்ணா வளைவுக்கு பெயிண்ட் அடித்தல், செம்மொழி சீராய்வுக்கு விழாவெடுத்தல், தொல்காப்பியத்துக்கு பொழிப்புரை எழுதுதல், சினிமா நட்சத்திரங்களை ஒன்றுகூட்டி மாநாடுகள் நடத்துதல், வாக்கு வங்கியாக பரவிக்கிடக்கும் கிராமத்து சினிமா ரசிகன் விரும்பும் நடிக நடிகைகளுக்கு மாமணி பட்டங்களை கொடுப்பது போன்ற மக்களை ஏமாற்றும் திராவிட பூச்சாண்டி வித்தைக்கு நேரெதிராக, வளர்ந்த நாடுகளை பின்பற்றி இயற்கை வளங்கள், மற்றும் புவியியல் சார்ந்த பொருளாதார கொள்கையுடன் தொலைநோக்கு பார்வையுடன் ஆக்கபூர்வமாக அடிப்படையயே மாற்றியமைக்கவல்ல நாம்தமிழர் கட்சியின் அரசியல் பொருளாதார வரைவுகூட தமிழகத்தில் சாத்தியமானதுதானா என்பது திராவிட பாரம்பரியத்தில் ஊறிப்போய் கிடக்கும் கிராமத்து மக்கள் பலருக்கு புரிந்திருக்க அதிக வாய்ப்பில்லை.

அண்ணாவையும் பெரியாரையும் மட்டுமே சமூக மேம்பாட்டு கொள்கையாக சிலாகித்து ஒருவரது ஊழலை இன்னொருவர் புட்டுக்காட்டி தேர்தல் கால இலவசங்களை மட்டுமே மக்களின் அடிப்படை உரிமையாக நேர்நிறுத்தி அரசியல் செய்துவரும் திராவிட கட்சிகளுக்கும்கூட நாம்தமிழரின் அரசியற் பொருளாதார வரைவு கண்ணை கட்டி காட்டில் விட்டது போன்ற தன்மையை தந்திருக்கும் என்பதிலும் வியப்பதற்கு இல்லை.

இருந்தும் நாம்தமிழர் கட்சியின் வரைவுகளில் காணப்பட்ட திட்டமூலங்கள் கணிசமானவற்றை பல கட்சிகளும் மானாவாரியாக திருடி தமது தேர்தல் அறிக்கையை அலங்கரித்திருந்தமையும் நடந்தேறியது. எம்ஜீஆர் அவர்களின் காலம் தவிர்ந்து ஒவ்வொரு ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை ஆட்சி மாற்றம் ஒன்று நிகழ்ச்சி நிரலாக தொடரும் என்ற போலி சம்பிரதாயத்தை, காலதேவனால் வரையறுத்து வகுக்கப்பட்ட விதி போலவே காட்டி பரப்புரை செய்து மக்கள் செல்வாக்கை தனதுபக்கம் திருப்பிவிட திமுக பகீரத பிரயத்தனம் மேற்கொண்டது.

ஐந்தாண்டுக்கு ஒருமுறை ஆட்சி மாற்றம் என்ற எதிர்பார்ப்பு திமுகவுக்கு சிறு ஆறுதலாக இருந்திருந்தாலும் நாம்தமிழர் கட்சியின் மூர்க்கமான எதிர் முழக்கம் கருணாநிதியின் அத்தனை கனவையும் குழிதோண்டி புதைத்துவிட்டது. 2016ல் ஜெயலலிதா வெற்றி பெற்றதற்கு மூல காரணம் நாம்தமிழர் கட்சிதான் என்றால்க்கூட நான் வெட்கப்படப்போவதில்லை.

 தேமுதிக, மதிமுக, விசி, பாமக இவைகள் ஒட்டுமொத்தமாகவோ, அல்லாமல் ஒருசில கட்சிகளாவது திமுகவுடன் இணைந்திருந்தால் ஒருவேளை முதலமைச்சராக ஆறாவது முறையாக கலைஞர் கருணாநிதி சிம்மாசனம் ஏறியிருப்பார்.

 அப்படி நடந்திருந்தால் பதவியேற்புக்கு மறுதினம் வைரமுத்து, ரஜனிகாந்த், கமலகாசன் போன்றோருடன் இன்னும் சில வடநாட்டு சினிமா நடிகைகளை சூழ அருகிருத்தி கருணாநிதி நடுநாயகனாக குடும்ப சமோதரராக வீற்றிருக்க மக்கள் பணத்தில் பாராட்டுவிழாக்கள் பட்டொளிவீசி பறந்திருக்கும்.

கருணாநிதியின் மக்கள் விரோத, குடும்பநல கொள்கை, மிக மோசமான சுயநலம் ஊழல் கலாச்சாரம், முக்கியமாக ஈழ இனப்படுகொலை அனைத்தும் ஒன்றுசேர்ந்து தீண்டத்தகாத ஒரு புறம்போக்காக கருணாநிதியின் திமுகவை மக்கள் மட்டுமல்லாது சிறு கட்சிகளும் ஒருசேர புறக்கணிக்கப்பட்டு அன்னியப்படுத்தியிருக்கிறது.

 இருந்தும் ஜெயலலிதாவின் அராஜக அகம்பாவ மனப்பாங்கு வேறு வழியின்றி கணிசமான வாக்குக்களை இம்முறையும் திமுக பக்கம் செலுத்தி திமுகவுக்கு இன்னும் மக்கள் ஆதரவு இருப்பதுபோன்ற மாயை நிலை ஒன்றை உருவாக்கி திமுகவுக்கு தொடர்ந்து அரசியல் செய்வதற்கு இடமளித்திருக்கிறது.

ஈழ இனப்படுகொலை அவப்பெயரினை தொடர்ந்து காங்கிரஸ் கட்சிசியை கைகழுவி வெளியேறியவர்கள் 2011 ஆண்டு சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸை புறக்கணித்து காங்கிரசை படுதோல்வியடைய செய்தனர். பின்னர் காங்கிரஸிலிருந்து பிரிந்துபோன மூப்பனாரின் வாரிசு வாசன் அணியில் தம்மை இணைத்துக்கொண்ட சில பாரம்பரிய காங்கிரஸ் வாதிகள், தற்போதய தேர்தலில் வாசன் முடிவெடுக்க முடியாமல் அல்லல்ப்பட்டதுடன் அவர் அரசியலுக்கு சரிப்பட்டுவராத ஒரு உருப்படி என்பதை புரிந்துகொண்டு செய்வதறியாது மீண்டும் தமது வாக்குக்களை திமுக காங்கிரஸுக்கு கூட்டணிக்கு செலுத்திக்கொண்டதன் காரணமாக காங்கிரஸ்காரர்களும் இனி வரும் ஊடக பட்டிமன்றங்களில் தமிழகத்தில் அரசியல் பேச காலம் இடம் கொடுத்திருக்கிறது.

சரியான கல்வி, மற்று பகுத்தறியும் தன்மை, பொது அறிவு இவைகளை மக்களுக்கு ஊட்டப்படாதவரை இப்படிப்பட்ட சீர்கேடு சரிசெய்வது என்பது நெருப்பாற்றில் நீந்துவதற்கு சரி நிகரானதாகவே படுகிறது.

பாரம்பரியத்தையும் சாதி பிடிப்பினைகளையும் விட்டு விலகாதவண்ணம் திராவிட அரசியல் மக்களை மந்தையாக்கி வைத்திருக்கிறது என்பதே கசப்பான உண்மை. இன்றைய ஜெயலலிதாவின் வெற்றி கருணாநிதி மீண்டும் வந்துவிடக்கூடாது என்ற வெறுப்பின் வெளிப்பாடாக நிகழ்ந்த ஒன்று என்றே வரையறுக்க முடியும்.

என்ன இருந்தாலும் கருணாநிதிக்கு இப்பொழுது வயது 0094 ஆகிறது, மனித வாழ்வியலின் சராசரி தத்துவத்தின்படி அடுத்து வரவிருக்கும் தேர்தலுக்கு அவர் உயிருடன் இருப்பார் என்பது கடவுள் அல்லது விஞ்ஞானம் இரண்டில் ஒன்று மட்டுமே விடையளிக்க முடியும், ஆண்டவன் கிருபையால் அவர் இன்னும் பல ஆண்டு வாழ்ந்தாலும் அவரால் அரசியலில் ஆரோக்கியமாக செயற்படக்கூடிய நிலையில் இல்லை என்பதை அவரே திருவார்ரூர் தேர்தல் பரப்புரையின்போது தனக்கு ஓய்வு தேவை என்று வேண்டுகோள் வைத்திருப்பதையும் கவனத்தில் கொள்ளுவோமானால் 2021 நிச்சியமாக திமுகவுக்கு இன்னொருவர் தலமை வகிப்பார் என்பது சாதாரணமாக அனைவராலும் புரிந்துகொள்ள முடியும்.

 அது கனிமொழியாக இருக்கலாம், அழகிரியாக இருக்கலாம் மாறாக தளபதி ஸ்ராலினாகக்கூட இருக்கலாம். ஆனால் இந்த மூன்று எதிர்பார்ப்பாளர்களும் ஒன்று சேர்ந்து திராவிட முன்னேற்ற கழகம் என்ற கட்சியை கருத்தொருமித்து வழி நடத்தி கொண்டு செல்வார்கள் என்பதை கடவுளால்கூட வரையறுத்து தீர்கானிக்க முடியாது.

அப்படியானால் 2021 திராவிட முன்னேற்ற கழகம் குறைந்தது மூன்று துண்டாக ஆகாவிட்டாலும் நிச்சியம் இரண்டு துண்டாக நிலைபெறும் என்பது எவராலும் தடுத்து நிறுத்த முடியாது. அந்த உடைவு பாரம்பரியமாக இருந்து வரும் திமுக விசுவாசிகளில் பெருத்த ஊழல் செய்த முதலைகள் தவிர பாமர தொண்டனாக இருக்கும் அனைவரையும் வெற்றிபெறும் என கணிக்கப்படும் மாற்று சக்திகளை நோக்கி தள்ளுவது தவிர்க்கமுடியாமல் போகும். 2011/ 2016 ஐந்து ஆண்டுகள் ஆட்சியை முடித்து அடுத்த 2016/ 2021,ஐந்தாண்டுகள் ஆட்சி நடத்தும் ஜெயலலிதா அவர்கள் 2021க்கு இடையில் பெருத்த மக்கள் வெறுப்பை சந்திப்பார். ஜெயலலிதா ஒன்றும் மக்கள் மனம் கவர்ந்த காமராஜரோ, எம்ஜீஆரோ அல்ல, மாறாக கொண்ட கொள்கையிலிருந்து வழுவாத பிரபாகரனும் அல்ல.

 எந்த அலைக்கழிவும் இல்லாமல் எம்ஜீஆரின் பிம்பத்தில் கட்டியெழுப்பட்ட அதிமுக என்ற அமைப்பை தன்வசப்படுத்தி வைத்துக்கொண்டிருக்கும் ஜெயலலிதா நான் என்ற அகம்பாவமும் ஆணவப்போக்கும் கொண்ட மனநிலையுடன் மாமன்னர் மனப்பாங்கில் மந்திரிகள் எம் எல் ஏ க்களை காலில் விழவைத்து சர்வாதிகாரியாக இருந்து வருகிறார்

 கருணாநிதியைப்போல பாராட்டு விழாக்கள் நடத்தாத ஒரு குறைதவிர கொள்கையில் கருணாநிதிக்கும் ஜெயலலிதாவுக்கும் எந்த வேறுபாடும் இல்லை.

 கடுமை தவிர சமயோசிதமான நிர்வாகம் செய்யும் ஆற்றல் ஜெயலலிதாவிடம் துண்டற இல்லை. எம்ஜீஆரால் தொடங்கப்பட்ட கட்சி அதிமுக என்ற பின்னணி தவிர தனிப்பட்ட வரலாற்று சிறப்பு அம்ஷம் எதுவும் ஜெயலலிதாவுக்கு கிடையாது. 2016 ஆட்சி பல்லாயிரம் கோடி கடன் சுமையிலிருக்கும் தமிழக அரசுக்கு தொடர்ந்து ஆட்சியை நகர்த்திச்செல்ல ஜெயலலிதாவுக்கு நிதி மேலாண்மையில் மிக நெருக்கடி நிறைந்த காலமாக அமையும்.

 படிப்படியாக குறைக்கப்படும் என்ற மது விலக்கு வாக்குறுதி அரசால் சுலபமாக நிறைவேற்றமுடியாத நிலை எதிர்க்கட்சிகளால் மிகுந்த நெருக்கடிக்குள்ளாகும். மின் உற்பத்தி, நீர் மேலாண்மை என்பவை பூதாகரமாக தாக்குதலை கொண்டுவரும்.

சொத்துக்குவிப்பு வழக்கும் ஜெயலலிதாவுக்கு பெரும் கண்டமாக எதிர்கொள்ளும். இதுவரை வெளியே வராவிட்டாலும் 2011/ 2016 ஜெயலலிதாவின் ஆட்சி காலப்பகுதியில் மோசமான ஊழல்கள் நடந்து முடிந்திருக்கின்றன.

மின் கொள்வனவில் பல ஆயிரம் கோடிகள் நத்தம் விசுவநாதன், ஓ பன்னீர்ச்செல்வம் ஆகியோர் ஊழல் செய்ததாக தேர்தல் காலத்தில் செய்திகள் கசிந்திருந்தன. இனி வரும் காலங்களில் எதிர்க்கட்சியாக இருக்கும் திமுக சட்டசபைக்குள் ஒருபக்கமும், சட்ட சபைக்கு தெரிவு செய்யப்படாத கட்சிகளான பாமக, தேமுதிக, மந கூட்டணியில் உள்ள கட்சிகள் மற்றும் நாம்தமிழர் போன்ற கட்சிகள் வெளி அரங்கிலும் மிகுந்த நெருக்கடியை கொடுத்து நெருக்குவாரம் செய்யும் அபாயம் இருக்கிறது.

 ஒருவேளை ஜெயலலிதாவின் அரசு இன்னும் இரண்டு வருடங்களில் டிஸ்மிஸ் செய்யப்படும் ஆபத்துக்கூட ஏற்படலாம், அப்படியல்லாமல் மொத்தமாக பத்துவருடங்கள் என்னதான் நல்லாட்சி வழங்கினாலும் மக்கள் மத்தியில் பெருத்த சலிப்பு ஏற்பட்டு மாற்றம் நோக்கிய பார்வையே நிச்சியம் உருவாகும். இந்த இடத்தில் நாம்தமிழர் கட்சி ஒன்று மட்டுமே மக்களின் வாழ்க்கைக்கு ஏற்ற தத்துவார்த்த மாற்று இலக்குக்களை வழி மொழிந்து வைத்திருக்கிறது

திராவிடக்கட்சிகள் இரண்டைத்தவிர மற்றக்கட்சிகளும் நாம்தமிழர் கொள்கையை பின்பற்றி முழக்கமிடக்கூடும் இருந்தும் மாறி மாறி திராவிடக்கட்சிகளுடன் கூட்டணி அமைத்து மக்கள் மத்தியில் நீர்த்துப்போன தேமுதிக, பாமக, மதிமுக மக்கள் மத்தியில் இலகுவாக காலூன்ற முடியாது,

நாம்தமிழர் கட்சி ஒன்றுக்கு மட்டுமே கறைபடியாத களமாடும் தகுதி இருக்கிறது. தீதும் நன்றும் பிறர் தர வருவதில்லை என்பதை கருத்தில்க்கொண்டு களமாடினால் வெற்றிக்கனி தூரத்தில் இல்லை.

அடுத்து வரவிருக்கும் உள்ளூராட்சி தேர்தல், தொடர்ந்து வரவிருக்கும் நாடாளுமன்றத்தேர்தல்கள் நாம் தமிழர் கட்சிக்கு பெருத்த சவாலாக இருந்தாலும் நீந்தி கடக்கவேண்டிய கட்டாயம் நாம்தமிழர் கட்சிக்கு இருக்கிறது.

2021 தன்னிச்சையாக ஜெயலலிதா தோல்வியடையும் காரணிகள் நூறு மடங்கு இருப்பதால், திமுக எப்படியும் அந்த இடத்தை கைப்பற்ற கடைசி துளி சக்தியையும் பிரயோகிக்கும் 2021 லும் புதையுண்டிருக்கும் திமுக மீண்டும் எழுந்து நிற்க இடமளிக்காமல் நாம்தமிழர் கட்சி செய்யப்போகும் கடுமையான வேலைத்திட்டம் 2021 ல் நாம்தமிழர் கட்சி தமிழ்நாட்டின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றமுடியும்.

 மாற்றம் ஒன்றுதான் மாறாதது. நாம்தமிழர் 2021ல் நிச்சியம் வெற்றிபெறும், வெற்றி பெற்றாகவேண்டும்.

ஈழதேசம் செய்திகளுக்காக. கனகதரன்.

Tuesday, April 5, 2016

தமிழ்நாடு சட்டமன்றத்துக்கான தேர்தல் திகதி 2016,மே மாதத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கான முன்னோட்ட நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் பரபரப்பாக அனைத்து அரசியற்கட்சிகளும் தொடங்கிவிட்டன.

நடப்பில் ஆட்சியில் இருக்கும் ஜெயலலிதா தலைமையிலான அ இ அதிமுக விடமிருந்து ஆட்சியை கைப்பற்றும் நோக்கில் அனைத்து கட்சிகளும் கொள்கை கோட்பாடுகள் ஏதும் அற்ற சுயநல தந்திரபாயங்களை கையிலெடுத்து விபச்சாரியின் நியாயப்படுத்தல்களை ஒத்த விவாத பரிவர்த்தனையில் தேர்தல் களம் அனல் பறக்கும் பேரம்பேசல்களும் பிரச்சாரங்களும் எந்த ஒரு வரைமுறைக்கும் உட்படாமல் காட்டாற்று வெள்ளம்போல் பாய்ந்தோடிக்கொண்டிருக்கிறது.

 2011 சட்டசபை தேர்தலிலும், அடுத்து வந்த நாடாளுமன்ற தேர்தல்களிலும் மண்ணை கவ்வி படுதோல்வியடைந்த ஈழ இனப்படுகொலை சூத்திரதாரியான கருணாநிதி கள நிலவரம் எப்படி இருக்கும் என்று தெரிந்தும் யாரை கூட்டுச் சேர்த்தாவது இம்முறை ஆட்சியை கைப்பற்றிவிடமாட்டோமா என்ற ஆதங்கத்தில் தனக்கே உரித்தான் அத்தனை வஞ்சக தந்திரங்களையும் அஸ்திரமாக்கி உறக்கமில்லாமல் காய்நகர்த்தி வருகிறார்.

கருணாநிதிக்கு தற்போது வயது 94, சராசரி மனித வாழ்வின் கணக்கீட்டின்படி கருணாநிதி இன்னும் ஒரு ஐந்து வருடங்கள் மட்டுமே வாழக்கூடிய தகுதியில் இருந்தாலும் இன்னும் ஒருமுறை ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி முதலமைச்சராகிவிடவேண்டும் என்ற வெறியுடன், தனது ஆயுட்காலத்தில் ஆட்சி அதிகாரத்தை தனது சந்ததியிடம் கையளித்துவிடவேண்டும் என்ற பேராசை அவரை நிம்மதியாக உறங்கக்கூட விட்டு வைக்கவில்லை.

இதுவரை நடைபெற்ற தேர்தல்களை விடவும் இம்முறை மக்களிடத்தே விழிப்புணர்வு பெருமளவு மாறுபட்டிருக்கிறது. ஐம்பது ஆண்டுகளாக ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி மக்களை ஏமாற்றி நாட்டை குட்டிச்சுவராக மாற்றிய திராவிட கட்சிகளின் ஊழலுக்கு எதிரான பெருத்த சமூக மாற்றம் ஒன்று பரவலாக கருக்கட்டி தமிழக அரசியலில் பலமுனை போட்டியை உருவாக்கியிருக்கிறது.

 இந்த மாற்றத்தின் எதிரொலி நான்கு கட்சிகளை ஒன்றிணைத்து மக்கள்நல கூட்டணியை பிரசிவித்தது, பலத்த பேரம்பேசல்களுக்குப்பின் விஜயகாந்தின் தேமுதிக மக்கள் நலக்கூட்டணியுடன் கூட்டுச்சேர்ந்தது காவாலி கட்டுமரம் கருணாநிதியை திகைப்புடன் பெருத்த ஏமாற்றத்துடன் ஆட்டம் காண வைத்திருக்கிறது.

 இந்த இடத்தில் ஒருவிடயத்தை தெளிவுபடுத்தவேண்டியிருக்கிறது தேமுதிக மநகூ வெற்றிபெற்று ஆட்சியை பிடிக்கிறதோ இல்லையோ அந்த கூட்டணியின் ஒன்றிணைவு கருணாநிதியின் திமுகவை மிகவும் பின்னுக்கு தள்ளும் தன்மையை உண்டுபணணும் என்பது பொதுமக்கள் உட்பட அரசியல் விமர்சகர்களின் வெள்ளிடை மலையான கருத்தாகும்.

கருணாநிதி தனது சரிவை சரிக்கட்ட தேமுதிகவை தன்னுடன் இணைப்பதன் மூலம் சரிசெய்து ஈடுகட்டிவிடலாம் என்ற கனவில் தன்னால் முடிந்தளவு தனக்கே உரித்தான வாய் ஜால கபட தந்திரங்களை கையாண்டு இறுதியில் தோற்றுபோய் இருக்கிறார்.

கருணாநிதிக்கு குறுக்கே நிற்கும் இன்னும் ஒரு பெருத்த மலைபோன்ற முட்டுக்கட்டை பெருவாரியான இளைஞர்களை தன்னகத்தே கொண்டு விசுவரூபம் எடுத்திருக்கும் சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சியின் கொள்கை முழக்கமும் பேரெழுச்சியும் கருணாநிதியின் கனவில் மண் விழுந்திருக்கிறது.

நாம் தமிழர் கட்சியினர் தாம் இந்த தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியை கைப்பற்றுவோம் என்று சூழுரைத்து மிகுந்த எழுச்சி மிக்க எனர்ஜியுடன் தேர்தல் களத்தை சந்தித்தாலும் இந்தியாவில் புரையோடிப்போய் இருக்கும் பாரம்பரியமாக மதம்போல மூளை சலவை செய்து வளர்க்கப்பட்டிருக்கும் கட்சிகளின் சார்பு மனப்பாண்மையிலிருந்து பழமைவாத கிராமத்து வயதான மக்களை உடனடியாக ஒட்டுமொத்தமாக திருப்பிவிட முடியாது என்ற கசப்பான யதார்த்தமும் இந்த தேர்தல் முடிவுகளை நிர்ணயம் செய்யும் குறியீடாக இருக்கும் என்பதை புறந்தள்ள முடியாது.

 இருந்தும் நாம்தமிழத் கட்சி மிக அதிகமான வாக்குக்களை பெற்று முன்னர் மாற்று என்ற முழக்கத்துடன் பிரிந்து சென்று களம்கண்ட வைகோ, அவர்களின் மதிமுக, விஜயகாந்தின் தேமு திக கட்சிகளை விட விகிதாசாரத்தில் பெரும்பான்மை வாக்குக்களை பெற்று தன்னை நிலை நிறுத்திக்கொள்ளும் என்பது எவராலும் தடுக்க முடியாது.

நாம்தமிழர் கட்சிக்கு 2021 ம் ஆண்டுதான் மிக பிரகாசமான களமாக அமையும் என்பதும், நடக்கவிருக்கும் இத்தேர்தலில் கணிசமான வெற்றியுடன் கருணாநிதியின் குடும்ப அரசியலை நாம்தமிழர் கட்சி முடிவுக்கு கொண்டுவரும் என்பதை அடிக்கோடிட்டு குறிப்பிடலாம்.

அவைதான் பொதுவான தேர்தல் கள நிலையாக இருந்தாலும் இந்த தேர்தலில் படுமோசமான அடியை வாங்கப்போவது கருணாநிதியின் திராவிட முன்னேற்றக்கழகம் என்பதுதான் வரலாற்று பதிவாக அமைய இருக்கிறது.

கருணாநிதிக்கோ கருணாநிதியின் கட்சி தொண்டர்களுக்கோ இந்த யதார்த்தம் புரியாமலில்லை. திமுகவின் சாதாரண தொண்டர்களுக்கும் கள நடைமுறைகளில் ஏற்படும் இந்த புரிதல் நாளடைவில் தொண்டர்களை வேறு வீரியமான கட்சிகளை நோக்கி நகர்த்தும் உளவியலும் உள்ளூர இயல்பாகவே உருவாகும் அபாயம் இருக்கிறது.

இந்த எதிர்வினைகளை பற்றி கருணாநிதி ஆரம்பந்தொட்டு அவதானமாக இருந்தே வந்தாலும் 2009 ம் ஆண்டிலிருந்து எதிர்வினையின் தாக்கத்தை நன்கு புரிந்துகொண்டு அதற்கான ஆயுத்த வேலைகளையும் கட்டமைத்து செய்துவருகிறார். அதன் சில புள்ளிகள் தான் 1/2 நாள் உண்ணாவிரதம் டெசோ கட்டமைப்பு எனலாம்.

அந்த வகையில் சாதிக்கட்சிகளை கவர்வதற்காக சாதி தலைமைகளை தன்னகத்தே தோளமை போல் வைத்திருத்தல், மூத்த சினிமா நடிகர்களை கௌரவிப்பதுபோல பாசாங்கு செய்தல். அவர்களுக்குள்ளேயே மோதலை உண்டுபண்ணி தனது தயவைப்பெறவைத்தல் அதிகாரிகள் மடத்தில் மூட்டிவிடுதல் பத்திரிகைகளை மோதிவிடுதல், இன்னபிற தந்திரங்கள் கண்கூடு.

சென்ற தேர்தலின்போது விஜயகாந்துடன்கூட தான் நேரடியாக மோதாமல் படிப்பறிவில்லாத அரசியலின் ஆழம் தெரியாத வடிவேலுவை வைத்து நாறடித்து வடிவேலுவின் தொழிலுக்கே சமாதி கட்டிவிட்டவர் கருணாநிதி.

தனது குடும்பத்துள்ளேயும் தனக்கு கட்டுப்படாத அழகிரியைக்கூட அவர் இராச தந்திர ரீதியில் குடும்பத்துடன் இரண்டற கலக்காமல் பிரித்தே கண்காணிப்புடன் நகர்த்தியே வைத்திருக்கிறார்.

இப்போ கடைசியாக கூட்டணிக்குள் இழுப்பதற்கு அனைத்து கட்சிகளையும் முயன்று பார்த்து ஏமாந்துபோன கருணாநிதி முன்னூறுக்கு மேற்பட்ட பொது அமைப்புக்கள் திமுகவுக்கி ஆதரவாக இருப்பதாக விளம்பரப்படுத்தி சில அமைப்புகளுக்கு ஒன்று பாதி என்கிற அளவில் தேர்தலில் போட்டியிட சீற்றும் வழங்கி சமூக மட்டத்தில் ஒரு திசை திருப்பலை செய்திருக்கிறார்.

இரண்டு நாட்களுக்கு முன் கருணாநிதியின் கோவாலபுரம் வீட்டுக்கு அழைக்கப்பட்ட முன்னாள் ஐ ஏ எஸ் சிவகாமி என்ற தலித் சமுதாய பெண்ணுக்கு தேர்தலில் போட்டியிட ஒரு தொகுதி வழங்கப்பட்டிருக்கிறது.

சிவகாமிக்கு உதய சூரியன் சின்னத்தில் ஒரு தொகுதி வழங்கப்பட்டதை கேள்வியுற்ற வெவ்வேறு அமைப்புக்களை சேர்ந்த சிறு குழுக்கள் தமது ஊர் செல்வாக்கை திரட்டி வந்து போட்டியிட முன்வரும் பட்ஷத்தில் நிறைய சாதி கட்சிகளின் ஆதரவை பெற்று தோல்வியிலிருந்து தப்பிக்கலாம் என்பது கருணாநிதியின் ஒரு கபடமான தந்தரமாக இருந்தாலும், இந்த சிவகாமி ஐ ஏ எஸ், செப் 2013 அன்று புதிய தலைமுறை தொலைக்காட்சியில் நடைபெற்ற நேர்பட பேசு விவாதத்தில் விடுதலைப்புலிகள் இயக்கம் பாலியல் போராளிகளை வைத்திருந்தது என்றும் போராடும் வீரர்களின் பாலியல் இச்சையை தீர்ப்பதற்கு பல இளம் பெண்கள் பயன்படுத்தப்பட்டனர் என்று ஒரு அபாண்டமான குற்றச்சாட்டை பல பேச்சாளர்களின் எதிர்ப்பையும் புறந்தள்ளி பதிவு செய்திருந்தார்.

சிங்கள இனப்படுகொலையாளியான மகிந்த ராஜபக்‌ஷ கூட தலைவர் பிரபாகரன் அவர்களின் ஒழுக்கம், மற்றும் விடுதலை புலி போராளிகளின் ஒழுக்கம் நன்நெறி பற்றி தான் பலதடவை பிரமித்துள்ளதாக பல இடங்களில் பதிவு செய்திருக்கிறார்.

அவை தவிர விடுதலைப்புலிகள் பலரை படுகொலைகள் செய்ததாகவும் பயங்கரவாதிகளாக செயற்படுவதாகவும் பல இடங்களில் முறைப்பாடு செய்யப்ட்டிருக்கிறதே தவிர ஒரு சிங்கள பெண்ணையோ தமிழ்ப்பெண்ணையோ பாலியல் ரீதியாக துர்ப்பிரயோகம் செய்யப்பட்டதாக ஒரு தகவலும் இதுவரை எவராலும் பதியப்படவில்லை.

இந்த தகவல் பல ஊடகங்கள் அமைப்புக்கள் கண்டித்து எதிர் போராட்டங்கள் நடத்தி இருக்கின்றன எனவே அதுபற்றி இங்கு அதிகம் விபரிக்க தேவையில்லை.

அப்படி இருக்கும்போது தமிழ் இனத்தின்மீதும் விடுதலை போராளிகள்மீதும் திட்டமிட்டு காழ்ப்புணர்ச்சி காரணமாக மானாவாரியாக சேற்றை வாரி இறைத்த ஒரே காரணத்துக்காக சிவகாமியை கருணாநிதி தனது கோபாலபுரம் வீட்டுக்கு அழைத்து ஆரத்தழுவி பொன்னாடை போர்த்தி தேர்தல் செலவு நிதியும் ஒரு தொகுதியும் வழங்கி இருக்கிறார்.

இந்த நிகழ்வு தற்செயலாக நிகழ்ந்ததில்லை விடுதலைபுலிகளால் தனக்கு ஏர்ப்பட்ட வீழ்ச்சியினை வைத்து வஞ்சம் தீர்ப்பதற்காக சிவகாமிக்கு சீற் கொடுக்கப்பட்டதாகவும் மாறாக சினிமா நடிகை குஷ்பு தன்னை விட்டு போய் காங்கிரஸில் இணைந்து கொண்டதால் குஷ்புவின் பிரிவு நீண்ட நாட்களாக கருணாநிதியை வருத்தியதாகவும் அந்த இடைவெளியை ஈடுகட்ட குஷ்புவின் வயதை ஒத்த நிறம் மாறினாலும் முக ஜாடையில் குஷ்ப்புவைநினைவு கொள்ளக்கூடிய சிவகாமியை கருணாநிதி உள் வாங்கியிருக்கிறார் என்று உறுதிப்படுத்தப்படாத செய்திகள் கூறுகின்றன.

 கருணாநிதி ஒரு வயது முதிர்ந்த ஒரு பழுத்த அனுபவசாலியாக இருந்தும் அவரது மனது என்னவோ மிகவும் கீழ்த்தரமாக இருப்பது அருவருக்க வைக்கிறது.

குறிப்பிட்ட இருவருக்கும் பொருந்தும்வண்ணம் இந்த பாடலை அவர்களது சிந்தனைக்காக இங்கே பதிவு செய்கிறேன்.

“வேதாளம் சேருமே
வெள் எருக்குப் பூக்குமே
பாதாள மூலி படருமே – மூதேவி
சென்றிருந்து வாழ்வளே
சேடன் குடிபுகுமே
மன்றோரம் சொன்னார் மனை.”

ஈழதேசம் செய்திகளுக்காக

கனகதரன.

Saturday, February 13, 2016

ஒரு நாள் பயணமாக யாழ்ப்பாணம் முள்ளிவாய்க்கால் போன வைரமுத்தர் ஈழ காவியம் எழுதுவாராம்?



ஒருநாள் பயணமாக முள்ளிவாய்க்கால் போன பாட்டுக்கார வைரமுத்து ஈழ காவியம் எழுதுவாராம்?

 

படப் பாட்டுக்காரர் வைரமுத்து அவர்களுக்கு அதிகம் படிக்காத ஊர்க்குருவி மிகுந்த கவலையுடன் கொதிநிலையில் எழுதும் ஒரு உறைப்பான மடல்.

நான் எதையும் இட்டுக்கட்டி உங்கள்மீது போறாமை கொண்டு சேற்றை வாரி இறைப்பதற்காக இம்மடலை எழுத முன்வரவில்லை. அதற்கு எனக்கு நேரமும் இல்லை அப்படியான இயல்பும் எனக்கில்லை.

நீங்கள் இலக்கணத்திற்கு உட்படாமல் பத்து வரியில் ஒரு படத்துக்கு ஒரு பக்கம் பாட்டெழுதினால் பல இலட்சங்கள் கிடைக்கும், ஆனால் நான் பத்து இருபது பக்கங்கள் பரணி பாடினாலும் விற்பனைக்கு எழுதுபவனல்ல.

சமீபத்தில் நீங்கள் எழுதி படரவிட்ட ஒப்பாரி கவிதை ஒன்று ஆனந்த விகடன் இதழில் வெளிவந்ததாக குறிக்கப்பட்டு சமூக வலைத்தளங்களில் உலவ விடப்பட்டிருந்தது.

ஆறு ஆண்டுகள் காலங்கடந்து நீங்கள் எழுதி வெளியிட்ட அந்த ஒப்பாரியை படிப்பவர்கள் ஈழப்போரையும் அன்று ஈழப்போராட்டத்தை நசுக்கி அழிப்பதற்காக சூழ்ந்திருந்த பின்னணியையும் புரியாதவர்களாக இருக்கவேண்டும் அல்லது உங்களை தெரியாதவர்காளாக இருக்க வேண்டும்.

ஈழப்போர் உச்சத்தில் இருந்தபோது பதின்நான்கு பதினைந்து வயதாக வைரமுத்துவைப் பற்றி அறியாமல் இருந்தவர்கள்தான் இன்றைக்கு இருபது வயதாகி உங்கள் பின்னணி தெரியாமல் உங்களை வரவேற்பவர்களாக இருந்திருக்கின்றனர். நானும் எனது வயதை ஒத்தவர்களும் எனது மூத்தோரும்தானே உங்களையும் உங்கள் உள்ளுடன் அறிந்தவர்களாக இருக்கின்றோம். துரதிஷ்ட வசமாக நாங்கள் நாட்டில் வாழ முடியாமல் அகதியாக வெளியேறியது நீங்கள் முள்ளிவாய்க்கால்வரை சென்று செல்பி எடுத்து முகாரி ராகத்தில் ஒப்பாரிபாடி கொண்டாட முடிந்திருக்கிறது.

தமிழனாக ஒரு படைப்பாளி என்று கூறிக்கொள்ளும் நீங்கள் இனப்படுகொலை நடந்தபோது சார்ந்து பதுங்கியிருந்த இடம் எப்பேர்ப்பட்டது என்பதை அறியாதவர்கள் அந்த ஒப்பாரி வரிகளை உட்கார்ந்து உணர்ச்சி வசப்பட்டு கொதிநிலை அடையாமல் உண்மையான உங்கள் உள்ளக்கிடக்கைதான் அதுவென்று நினைத்து அப்பாவித்தனமாக சிலாகித்து படிக்க முடியும்.

எனக்கெல்லாம் இனப்படுகொலை என்ற வார்த்தையை யாராவது சொல்ல கேட்கும்போது 2009 போரின் கடைசி நாட்களை நினைக்கும்போது எங்கள் தோல்வியை நினைத்து நெஞ்சு கொதிக்கும்போதெல்லாம் ராஜ பக்‌ஷவோ சிங்களவனோ நினைவுக்கு வருவதில்லை மாறாக கருணாநிதியும் அவரது பரிவாரங்களான உங்களையும்தான் நான் மறக்காமல் நினைவு கூருகின்றேன.

உங்களைப்போன்ற வெகுஜன மதிப்பு பெற்ற காத்திரமான ஊன்றுகோல்களின் உதவி இல்லாமல் கருணாநிதியால் அன்றைக்கு ஈழத்தமிழினத்துக்கு எதிராக அவ்வளவு பெரிய மோசமான நிலையை எடுத்திருக்க முடியாது.

நீங்கள் மட்டுமல்ல சுப வீரபாண்டியன், வீரமணி, ரஜனிகாந்த், வாலி, இப்படி வெகுஜன கவர்ச்சி கொண்ட ஒரு பெரும் கூட்டம் கருணாநிதிக்கு அரணாக நின்றதன் விளைவு கருணாநிதியால் ஈழப்போராட்டத்தை அழித்து பெரும் இனப்படுகொலையை நிறுவ முடிந்தது,

அவரால் பல நாடகங்களை நியாயப்படுத்த முடிந்தது.

உங்கள் கவிதையை சமூக வலைத்தளங்களில் படித்தவர்களில் அனேகமானோர் படு மோசமாக தாறுமாறாக உங்களையும் உங்கள் கவிதையையும் விமர்சித்திருந்தனர். நீங்கள் அந்த விமர்சனங்களை கவனிக்காமல் இருந்திருக்க முடியாது.

வெளியே காட்டிக்கொள்ளாவிட்டாலும் ஏன் அந்தளவுக்கு நீங்கள் விமர்சிக்கப்பட்டீர்கள் என்பது உங்களுக்கு புரியாமல் இருப்பதற்கு நீங்கள் அவ்வளவு மக்கு கிடையாது.

உங்கள் புரிதலுக்காக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அடிக்கடி கூறும் ஒரு ஒப்புவமையை எடுத்துக்காட்டலாம் என்று நினைக்கின்றேன்.

இலங்கையில் ராஜபக்‌ஷவுடன் கூட்டாக சேர்ந்து நின்று போரை நடத்தி பல இலட்சம் மக்களை இனப்படுகொலை செய்தது இந்திய முன்னாள் மத்தியில் அதிகாரம் வகித்த சோனியா மன்மோகன்சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு, அந்த அனீதியை தட்டிக்கேட்காமல் கண்மூடி மௌனமாக இருந்தது அப்போ எதிர்க்கட்சியாக இருந்த பாரதிய ஜனதா கட்சி ( பாஜக)

2007/ 2008/ 2009 களில் கடுமையான போரின்போது காங்கிரஸ் சர்க்காருக்கு சகல விதத்திலும் ஒத்துழைத்து குடும்பத்துக்கு பதவி சுகங்களை பெற்றுக்கொண்டு ஒரு பட்ட மரத்தின் இயல்போடு காங்கிரஸுக்கு பேருதவி புரிந்தவர் திமுக தலைவர் கருணாநிதியும் அவரது தலைமையிலான திமுக அரசும்.

சம காலங்களிலும் பின்னரும் கடலில் மீன்பிடிக்க சென்ற தமிழகத்து மீனவர்கள் பல நூற்றுக்கணக்கானோரை சுட்டுக்கொன்றது ஸ்ரீலங்கா இராணுவம், கடலில் எல்லை மீறினால் சுட்டுக்கொல்லுவோம் என்று இலங்கையின் ஆட்சியாளர்கள் மகிந்த ராஜபக்‌ஷ ,மற்றும் இந்நாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் பகிரங்கமாக பிரகடனம் செய்தனர் ஆனால் ஸ்ரீலங்கா இராணுவத்தை இராணுவ எதிர்வினைச் செயற்பாட்டு மூலமோ அல்லது அரசியல் ரீதியாகவோ காங்கிரஸ் அரசோ பாரதிய ஜனதா அரசோ ,மாறாக தமார்களின் தாய்மாமன் என்று சொல்லி ஆட்சி புரிந்துவந்த மாநில திமுக அரசோ எதிர்க்கவில்லை,

இந்த விடயங்களை பல அமைப்புக்கள் அரசியற் கட்சிகள் தட்டிக்கேட்டு தெருத்தெருவாக ஜனநாயக ரீதியில் பல போராட்டங்கள் நடத்தின அப்படியான வெகுசன போராட்டங்களை இந்திய ஆட்சியாளர்கள் எவரும் கண்டுகொள்ளவில்லை, நிலமை தீவிரமாகும் தருணங்களில் அப்போ ஆட்சியில் இருந்த மன்மோகன்சிங்காக இருக்கட்டும் இப்போ ஆட்சியிலுள்ள நரேந்திர மோடி ஆக இருக்கட்டும் கூறிக்கொண்ட நியாயம் ஸ்ரீலங்கா இந்தியாவின் உற்ற நண்பன் அவர்களுடன் முரண்பாடாக நடக்க முடியாது என்பதாகவே இருந்து வருகிறது.

இந்த இடத்தில் சீமான் வைக்கும் கேள்வி என்னவென்றால் ஸ்ரீலங்காவிலிருக்கும் சிங்களவன் என் இனத்தை சுட்டு கொல்லுகின்றான் அவன் இந்தியாவின் மத்திய சர்க்காரில் இருக்கும் உனக்கு நண்பனாக இருந்தால் ஒரு இந்திய குடிமகனாக இந்தியாவில் பிறந்து வளர்ந்து கடலில் தினம் தினம் கேட்பார் இல்லாமல் கொல்லப்படும் நாங்கள் யார்?

அப்படியானால் நீ எப்படி இந்த மண்ணில் பிறந்த எனக்கு பாதுகாவலனாக முடியும்? நீ எப்படி என்னை காத்தருளும் ஒப்பற்ற ஆட்சியாளனாக இருக்க முடியும்.

என்று சீமான் பல மேடைகளில் கேள்வி எழுப்பிவருகிறார். அது நியாயம் சத்தியம் என்றே மக்களும் சீமானை பின்தொடர்ந்து அணி திரளுகின்றனர்.

அதே கேள்வியைத்தான் நான் உங்களை நோக்கி வைக்கின்றேன், மத்திய ஹிந்தி சர்க்காருடன் இணைந்து எம்மை அழிக்க நாளொரு நாடகம் ஆடி அனைத்து சதிகளையும் அரங்கேற்றிய மேடைகளில் கருணாநிதியை தூக்கி நிறுத்தி பின்பாட்டு பாடிய நீங்கள் இன்று இரங்கல் கவி பாடியதன் பின்னணி நடக்கவிருக்கும் தேர்தலில் வீழ்ச்சியிலிருக்கும் கருணாநிதியை தூக்கி நிறுத்துவதற்கான அரசியலா அல்லது புதியவர்களின் வரவால் சினிமாவில் பாட்டெழுத சந்தற்பம் குறைந்துபோய் வறட்சியுற்றிருக்கும் சங்கடத்தை நிறைவு செய்வதற்காக பொற்கிழி வாங்கிப்போக வந்த கீழ்நிலையா?

உங்கள் கூட்டு சதியால் கொல்லப்பட்ட எனது உடன்பிறப்புக்களின் இடுகாட்டில் நின்று இன்றைக்கு நீலிக்கண்ணீர் வடித்து முகாரி பாடி பணமுடிச்சு பெற்று போகும்போது உங்களுக்கு கூச்சமாக இருக்கவில்லையா.

எனக்கு புரியவேயில்லை தமிழ்நாட்டின் பாமர மக்களால்த்தான் எங்களுக்கு பலமும் தமிழ்நாட்டின் அரசியல் சினிமா வியாபாரிகளால்த்தான் எங்கள் துயரமும் இரண்டறக்கலந்து இருக்கிறது. இது உங்களால் எப்படி வைரமுத்து முடிகிறது.

உங்களை நான் ஒரு காலத்தில் மறைந்த கவியரசு கண்ணதாசனின் இடத்தை நிரப்பவந்த ஒரு ஆளுமையாக கற்பனை பண்ணியதுண்டு, பின் ஒரு காலத்தில் பறவை முனியம்மாவின் பாடலின் தரத்தில் உங்கள் பாடல்களை கண்டு ஏதோ நடக்கட்டும் என்ற மனநிலையுடன் பார்த்ததுமுண்டு. இப்போ நீங்கள் முள்ளிவாய்க்கால் செல்வதற்கு பணம் பெற்றுக்கொண்டதாக அறிந்தபோது உங்கள் வறுமைநிலை உங்களை தரை மட்டத்துக்கு இறக்கிவிட்டதை எண்ணி வருந்தியதுமுண்டு.

அடுத்து நீங்கள் ஈழ காவியம் எழுதப்போவதாக ஒரு வதந்தி உலவுகிறது. அது உண்மையாக இருக்க முடியாது என்றுதான் நான் நினைக்கிறேன் ஏனெனில் அங்கு பிறந்து வளர்ந்த என்போன்றவர்களுக்கே ஈழ வரலாறு முழுவதும் புரியாதபோது ஒருநாள் பயணமாக யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு சென்று வந்த உங்களால் ஈழம் பற்றி ஒரு கற்பனை காவியத்தை த்தான் படைக்க முடியும்.

வந்தேறியான சிங்களவன் மகாவம்ஷம் என்ற பெயரில் ஒரு வரலாற்று திரிவு ஒன்றை எழுதி அதை வரலாறாக்கியதுபோல உங்கள் காவியமும் ஈழ மக்களுக்கு சிக்கலாகிவிடக்கூடாது என்பது எனது கருத்து.

ஊர்க்குருவி.