Thursday, May 29, 2014

“ஈழத்” தமிழர் பிரச்சினையில் மோடி அரசும் சோனியா அரசும் இரட்டை குழந்தைகள். கனகதரன்.‏


ராஜீவ் ஜெயவர்தன, என்ற இரண்டு சர்வாதிகார அரசியற் தலைமைகளின் ஒப்புதலுக்கமைய வரையப்பட்டு ஈழத் தமிழர்களால் (அப்பொழுதும் அதன்பின் வந்தகாலங்களிலும் தொடர்ந்தும்)  நிராகரிக்கப்பட்டு புறந்தள்ளப்பட்டு கால் நூற்றாண்டு காலத்துக்கு முன்பே சவக்குழிக்குப் போய்விட்ட  13,வது திருத்த சட்டமூலம் ஈழத்தமிழர்களுக்கு அரசியல் மற்றும் பொரளாதார, இனமுரண்பாடு காரணமாக எழுந்த பகை மற்றும் படுகொலைகளுக்கு, ஈடுகட்டிவிடும் நல்லதீர்வாக அமையும் என்று இந்தியாவின் புதிய பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை கொண்டிருப்பதாக அவரது ஆரம்ப பேச்சு ஈழத்தமிழ் மக்கள் மத்தியில் பெருத்த அச்சத்தையும் வெறுப்பையும் எரிச்சலையும், தோற்றுவித்துள்ளது..
ஈழத்தமிழர்களுக்கான ஒரு அரசியற் தீர்வுத் திட்டத்தை கொண்டுவருவதற்கு முன்னர், அங்கு நடைபெற்ற இன அழிப்பு நடவடிக்கை பற்றி ஒரு தெளிவான  முடிவுக்கு அயல் நாடான இந்தியா வரவேண்டும் என்பதே ஈழத்தமிழர்களின் முதற்தரமான வேலைத்திட்டமாக இருந்து வருகிறது. அதே கொள்கையை நீண்டகாலமாக தமிழ்நாட்டு மக்களும் கொண்டிருக்கின்றனர்.
அதற்கான போராட்டங்கள் தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா மூலமாக சட்டசபைக்குள்ளும், நீங்கலாக ஒன்றிரண்டு தவிர்ந்த அனைத்து அரசியற் கட்சிகளும், பல்வேறு பொது அமைப்புக்களும் விலாவாரியான விளக்கங்களுடன் களத்தில் நிற்கின்றன,  இனப்படுகொலை குறித்து போர்க் குற்ற விசாரணை நடத்தப்பட்ட வேண்டும் தமிழர் தாயகப்பகுதியில் சுதந்திரமாக வாழ்வதற்கான பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற குரல்கள் வலுத்து வருகின்றன.

ஈழத்தமிழர்கள்பால் உள்ளூர முழுமையான எதிர்ப்பு நிலையை கொண்டிருந்தாலும் திமுக கட்சியின் தலைவர் கருணாநிதிகூட சில இடங்களில் ஒன்றிப்போவதுபோலவே  தப்பித்தலுக்காகவாவது அரசியல் செய்து வருகிறார்.
எட்டுக்கோடி தமிழர்களை தன்னகத்தே கொண்ட தமிழ்நாடு அரசு, ஶ்ரீலங்கா அரசுத் தலைவர் ராஜபக்‌ஷவுக்கு எதிராக ஒன்றுக்கு பலமுறை அதற்கான தீர்மானங்களையும் நிறைவேற்றியிருக்கிறது.
நிலமைகளை புரிந்துகொண்டு பின் விளைவுகளை சிந்தித்து பேசுவதை விடுத்து புதிய இந்திய பிரதம மந்திரி மோடி, முன்னைய காங்கிரஸ் அரசின் கொள்கைகளை விஞ்சி அதற்கும் மேலான தமிழின எதிர்ப்பு தொனியில் ராஜபக்‌ஷவை அருகிருத்தி 13,வது சட்டமூலத்துக்குட்பட்ட தீர்வை ஶ்ரீலங்காவிலிருந்து  எதிர்பார்ப்பதாக சிலாகித்திருக்கின்றார்,
தேர்தலில் அதிக பெரும்பான்மை கிடைத்த தலைக்கனம் மோடியை அந்த நிலைக்கு தள்ளியிருக்கிறது.
அறுபதுக்கு அதிகமான ஆண்டுகள் அனர்த்தங்களை சந்தித்து சிங்களவனுடன் இணைந்து வாழமுடியாது என்ற முடிவுடன் ஆயுதப்போராட்டம் முப்பத்து ஐந்து ஆண்டுகள் இலங்கையில் தொடர்ந்து நடந்து வந்தது.
ஈழத்தில் தமிழர்கள் வேண்டாம் ஒத்துவராது என்று புறம்தள்ளிய ஒன்றை திணிப்பதற்கு சிங்கள ஏகாதிபத்தியவாதிகளையும்விட வட இந்தியாவே தொடர்ந்து மல்லுக்கட்டி வருகிறது.
ராஜபக்‌ஷ செய்துகொண்டிருக்கும் இன அழிப்பிற்கும், படுகொலை மற்றும் இராணுவ அட்டூழியங்களுக்கும், ஊக்கம் அளிக்கும் செயற்பாட்டை இந்தியா நிறுத்தப்போவதில்லை என்ற மோடியின் கயமையான செய்தியின் வெளிப்பாடே, ராஜபக்‌ஷவை முடிசூட்டுவிழாவுக்கு அழைத்தமை, மற்றும் ராஜபக்‌ஷவின் மிக நெருங்கிய நண்பரான சுஷ்மா சுவராஜ், வெளியுறவுத்துறை அமைச்சர் ஆக்கப்பட்டிருக்கின்றமை என்பது நாளைய நடைமுறையை பார்த்து தீர்மானிக்க வேண்டிய ஒன்று அல்ல..

சர்வதேச மயமாக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகியும் இந்தியாவின் தலையீட்டினால் ஈழத்தமிழர்களுக்கான ஒரு தீர்வை சர்வதேசத்தால் எட்டிவிட முடியவில்லை. சர்வதேசம் ஒவ்வொருமுறையும் ஒவ்வொரு தீர்மானத்தை எட்டி இறுதிசெய்ய முயலும்போது அனைத்திற்கும் இடையூறாக இருந்து தமிழர்களுக்கான ஒரு தீர்வை பெற்றுவிட முடியாமல் இந்தியா சதி செய்தே வந்திருக்கிறது.
ஈழத்தமிழர்களின் இனப்பிரச்சினைக்கு தீர்வு தேடுவது என்ற பாவனையுடன், தமிழர்களுக்கான நியாயத்தை மண்போட்டு மூடி பழைய காங்கிரஸின் கொள்கைவழி தட்டிக்கழித்து ஶ்ரீலங்காவுக்கு அடிபணிந்து உக்கி இறந்து எவரும் கவனத்தில்க்கொள்ள விரும்பாத ஒரு விடயமான “13வது சட்டமூலத்தை பின்பற்றி தீர்வு காணப்படும் என்ற சுலோகம் மோடியால் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.
தொலைநோக்கு பார்வையுடன் கூடிய ஸ்திரமான வெளியுறவு கொள்கையை பின்பற்ற முடியாத இந்தியாவின் இயலாமை, ராஜபக்‌ஷவை சமரசம் செய்வதற்காக செயற்திறனில்லாத 13,வது சட்டமூலத்தை தூக்கி வைத்து உள்ளிருந்து காலம் கடத்தும் கருவியாக்கப்பட்டிருக்கிறது.
சற்று வித்தியாசமாக எதிர்பார்க்கப்பட்ட மோடியின் புதிய அரசாங்கமும் ஈழத் தமிழரின் பிரச்சனைக்கு கௌவைக்கு உதவாது என்று கழித்து புறக்கணிக்கப்பட்ட  13 வது திருத்த சட்டமூலத்தை தீர்வாக முன்வைக்க முனைந்திருப்பது மிகவும் மோசமான அணுகுமுறை என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
நாட்டின் பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்ட நரேந்திர மோடி இலங்கை அதிபர் ராஜபக்ஷவுடன் 26ம் திகதி பிரதமராக பதவியேற்ற பின் சில நிமிடங்கள்  பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.  அந்த பேச்சுவார்த்தைகள் தொடர்பாக கருத்து தெரிவித்த புதிய வெளியுறவுத் துறை செயலர் சுஜாதா சிங், ஒன்றுபட்ட இலங்கைக்குள் 13,வது திருத்த சட்டமுல அறிவுறுத்தலின் பிரகாரம் தமிழர்கள் சம உரிமையுடனும் கண்ணியத்துடனும் வாழ வகை செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இதே வாய்ப்பாட்டைத்தான் காங்கிரஸ் ஆட்சியிலிருந்தபோது  இந்திய கொள்கை வகுப்பாளர்களும் வெளியுறவுத்துறை அதிகாரிகளும் கோரஸ்ஸாக பாடியதை அனைவரும் கேட்டு வெறுத்துப்போனதுண்டு.
அது நடக்க முடியாத ஒன்று என்பது தெரிந்தும் ராஜபக்‌ஷவை சினப்படுத்தாமல் களிப்பூட்டுவதற்காக மோடி சிறுபிள்ளைத்தனமாக பேசியிருப்பதாகவே எடுத்துக்கொள்ள முடியும்.
13,வது திருத்த சட்டப் பிரிவை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று ராஜபக்சேவிடம் மோடி வலியுறுத்தியதாக சுஜாதா சிங் கூறியிருக்கிறார். அதாவது இலங்கையில் வாழும் ஈழத் தமிழரின் பிரச்சனைக்கு அது ஒன்றே ஒற்றை தீர்வாக அமையும் என்று நம்புவதாக கூறியிருக்கிறார்.
ராஜிவ் உயிருடன் இருந்த காலத்தில் இருந்து இத்தனை ஆண்டுகாலமும் அசைவாக்கம் இன்றி அப்படி ஒன்று இருப்பதே புரியப்படாமல்க் கிடந்த இலங்கை இந்திய ஒப்பந்த சரத்தான 13,வது அரசியல் திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது என்ற பல்லவியைத்தான் ஈழப்பிரச்சினையில் தெளிவில்லாத புதிய மோடி அரசும் முன்வைத்திருக்கிறது.

இந்திய புதிய அரசின் இந்த அறிவிப்பானது ஈழத்தமிழர்களின் அனர்த்தத்திலிருந்து இந்தியா விட்டு விலகாது என்றும்,  தரித்திரம் தொடரும் என்றும் மோடியின் புதிய அரசு பதவியேற்பின் அன்றே பிரகடனம் செய்திருக்கிறது.
13,வது அரசியல் சாசன திருத்தத்துக்கு காரணகர்த்தாவாக இருந்த ராஜீவ் உயிரோடு இருந்த போதே அது ஒன்றும் தமிழர் பிரச்சனைக்கு தீர்வாக இருக்காது என்று தமிழீழ விடுதலைப் புலிகளும்,  தமிழ் அரசியல் கட்சிகளும் தெள்ளத் தெளிவாக கூறிவிட்ட பின்னரும் இலங்கையிடம் மேலாதிக்கம் செலுத்துகிறோம் என்ற பொய்யான தோற்றத்தை உருவாக்க இந்திய ஆட்சியாளர்கள் காலந்தோறும் சொல்லி வரும் புரட்டைத்தான் மோடியின் மோட்டுத்தனமான ஆளுமையும் முன்வைக்கத் தொடங்கியிருக்கிறது.
இருபத்து ஏழு ஆண்டுகள், கால் நூற்றாண்டுக்கும் மேலாக இந்திய அரசுகள் ஒவ்வொரு சந்தற்பத்திலும் புலம்பி வரும் 13வது திருத்தம் என்பது இந்திய- இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஏற்படுத்தப்பட்ட ஒன்று. 1987ஆம் ஆண்டு ஜூலை மாதம் 29-ந் தேதி இந்தியப் பிரதமராக இருந்த ராஜிவும் இலங்கை அதிபராக இருந்த ஜெயவர்த்தனவும் தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காண்பதாக கூறிக்கொண்டு தமிழர் தரப்பின் அனுகூலம் இல்லாமல் ஒருதலைப்பட்ஷமாக செய்துகொண்ட ஒப்பந்தம், ராஜீவ் ஜெயவர்த்தன ஒப்பந்தம்  அதைத்தான் வரலாறு இந்திய- இலங்கை ஒப்பந்தம் என்கிறது.
1988ஆம் ஆண்டு இந்திய அமைதிப்படை இலங்கையில் இருந்தபோது வடகிழக்கு மாகாண சபை தேர்தல் நடத்தப்பட்டது. ஈ.பி.ஆர்.எல்.எப்.பின் வரதராஜ பெருமாள் இந்தியாவின் பொம்மை முதலமைச்சராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்,  இவை எதனையும் மக்களும் விரும்பவில்லை விடுதலைப் புலிகள் இயக்கமும் ஏற்கவில்லை.
இந்திய அமைதிப்படை இலங்கையை விட்டு வெளியேறிய போதே வடகிழக்கு மாகாண முதல்வராக இருந்த வரதராஜ பெருமாள் இந்தியா உருவாக்கிய தீர்வுத்திட்டம் சரியான தீர்வு அல்ல என்று கூறி இலங்கையை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்தார். கிட்டத்தட்ட இந்திய- இலங்கை ஒப்பந்தமும் அதனடிப்படையில் உருவாக்கப்பட்ட 13வது அரசியல் சாசன திருத்தமும் அப்போதே சவக்குழிக்குப் போனது வரலாறாகிவிட்டது.  ராஜிவ் சவக்குழிக்குள் போவதற்கு முன்னரே 13,வது திருத்த சட்டமும் புதைகுழிக்குப் போய்விட்டது என்பதுதான் நிதர்சனம்.
1991-ல் ராஜிவ் காந்தி கொல்லப்பட்டபின்.   நரசிம்மராவ் அரசு அமைந்தது. அதன்பின் வெளியுறவுக் கொள்கையை தீர்மானிக்கிற இடத்தை இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் எம்கே நாராயணன், சிவ்சங்கர் மேனன் போன்ற அதிகாரிகள் ராஜிவின் மனைவி சோனியாவின் விருப்பத்திற்கேற்ப  கொள்கை களை வகுத்து தமது இஷ்டத்துக்கு மாற்றியமைத்துக்கொண்டனர்.
இந்த அதிகாரிகளின் குழப்பமான வெளியுறவுக் கொள்கைதான் இலங்கையில் சீனாவும் பாகிஸ்தானும் ஊடுருவி இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக நிலைத்து நிற்க காரணமாக இருந்தது.
ராஜீவ் கொல்லப்படதற்கு புலிகள்தான் காரணம் என்று சுப்பிரமணியன் சுவாமி மற்றும் நாராயணன் போன்றோர் மந்திராலோசனை செய்தனர், சிபிஐயும் அதன் இயக்குனர் கார்த்திகேயனும் இஷ்ட்டத்துக்கு புனைந்து சிலரை குற்றவாளியாக்கி சோடித்து வழக்கை முடித்தனர்,
அதனால் தமிழீழ விடுதலைப் புலிகளை ஒழிப்பது ஒன்றை மட்டுமே இலக்காக கொண்டு அதற்காக மட்டுமே இந்தியா இலங்கையைப் பயன்படுத்திக் கொண்டது. இலங்கை அரசு புலிகளை அழிப்பதை விரும்பினாலும் இந்தியா அகலக் கால் வைத்து  இலங்கைக்குள் நிலைகொள்ளுவதை இலங்கை ஆட்சியாளர்கள்  விரும்பவில்லை, மாற்று ஏற்பாடாக வீரியம் மிக்க வில்லங்கம் இல்லாத சீனாவை இலங்கை தனது ஆயுட்கால நண்பனாக உள்வாங்கிக்கொண்டது, தொடர்ந்து பாகிஸ்தானும் ஶ்ரீலங்காவின் நண்பனானது,
2007/ 2008/ 2009ஆம் ஆண்டுகளில் விடுதலைப்புலிகளை அழிப்பதற்கு சீனா பாகிஸ்தான் போன்ற நாடுகளின் உதவியுடன் ஶ்ரீலங்கா முயன்றபோது இந்தியா அரசியல்ரீதியாக தலையை நுழைத்து முன்னணியில் நின்று ஶ்ரீலங்காவுக்கு முழு உதவியையும் வழங்கியது,  கைச்செலவுக்கு ஆயிரம் கோடி பண உதவியும் செய்தது.
குழந்தைகள் பெண்கள் வயோதிபர்கள் என்று ஒன்றரை லட்சம் தமிழர் படுகொலைக்குள்ளாக்கப்பட்ட போதும் இந்தியாவின் வன்மம் குறையவில்லை.
போர் முடிவுக்கு வந்ததும் போர்க்குற்றங்களிலிருந்து தப்புவதற்காக ஶ்ரீலங்காவின் அனைத்து குற்றச்செயலகளுக்கும் இந்தியா பங்காளியாக இருந்து வந்தது.  காங்கிரஸ் வடக்கத்திய அரசியற் கட்சியாக இருந்தபடியால் சந்தேகத்தை போக்கி இனப்படுகொலைகளை மறைப்பதற்காக கருணாநிதியின் திராவிட முன்னேற்றக் கழகத்தை தன்னுடன் நண்பனாக காங்கிரஸ் அரசு இணைத்து படுகொலைகளை நடத்தி முடித்தது.
2014 ல் நரேந்திர மோடு புதிய பிரதமர் ஆவது உறுதி என்று ஊடகங்கள் தெரிவித்து உறுதிப்படுத்தப்பட்டபோது காங்கிரஸ் செய்த தவறுகளை மோடியின் அரசு செய்யாது என்று அரசியல் அவதானிகள் கருத்து தெரிவித்திருந்தனர்.
இலங்கைத் தமிழர் பிரச்சனையில் நடைமுறை யதார்த்தம், இந்திய வெளியுறவுத் துறை அதிகாரிகளால் மூடி மறைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஈழத்தில் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலை குறித்து போர்க் குற்ற விசாரணை நடத்தப்பட்ட வேண்டும்; தமிழர் தாயகப்பகுதியில் சுதந்திரமாக வாழ்வதற்கான பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றெல்லாம் ஈழத் தமிழர் பிரச்சனை எல்லை கடந்து போய்க் கொண்டிருக்க   13வது திருத்தத்தம் ஈழத்தமிழர்களுக்கு புனர்வாழ்வளிக்கும் என்று மோடி அரசு சொல்லுகிறது.
ஈழத் தமிழர் பிரச்சனையில் மரண அடிவாங்கிய காங்கிரஸ், திமுக இருந்த இடம் தெரியாமல் மாண்டுபோய்விட்டது. மோடிக்கு பிரதமராகும் வாய்ப்பை காங்கிரஸின் தோல்வி உறுதிப்படுத்தியது. மோடி அரசும் அதே காங்கிரஸின் அடிச்சுவட்டை பின்பற்றுமாக இருந்தால் காலம் பதில் சொல்லாமல் விடப்போவதில்லை
ஈழதேசம் செய்திகளுக்காக, 
கனகதரன்.



Thursday, May 22, 2014

பிரித்தானிய தமிழர் பேரவை (BTF) லண்டனில் புலிக்கொடி பாவிப்பதற்கு தடை விதித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.‏

மே 18 என்றால் நினைவுக்குவருவது முள்ளிவாய்க்கால் இராணுவ அட்டூழியம்,  ரசாயின ஆயுதங்களால் கொல்லப்பட்ட போராளிகள் மற்றும் பொது மக்களின் கருகிய உடல்க் குவியல்கள்,  போராளிகள் மற்றும் பொதுமக்கள் இராணுவத்திடம் சரணடைந்த பின் சுட்டுக்கொல்லப்படும் காட்சிகள், இசைப்பிரியா உட்பட பல பெண்களின் கற்பழிப்புடன் நடத்தப்பட்ட சித்திரவதைப் படுகொலைகள்  குழந்தைகளை காவுகொடுத்த தாய்மாரின் ஓலங்கள். பாலச்சந்திரனின் பலி.
படுகொலை காட்சிகள்,  மக்களின் விபரிக்க முடியாத அன்றைய அவலம்.  இன்னும் ஆயிரமாயிரம் பிரச்சினைகள் உள்ளே மண்டிக்கிடந்தாலும் சர்வதேசமோ ஐநா அவையோ நடைபெற்ற அனர்த்தத்தின் நியாய அனியாயங்களை வெளிப்படையாக விசாரித்து தீர்ப்பளிக்கவோ விவரணப்படுத்தவோ விரும்பவில்லை.
அது ஏன் என்ற கேள்வி தொடர்ந்து தமிழர்தரப்பில் எழுப்பப்பட்டே வருகிறது.  அந்த கேள்வியிலிருந்து பிறப்பெடுத்தவைதான்  விடுதலைப்போராட்டத்துக்கான ஈழத்தமிழர் ஆதரவுச் சங்கங்கள்.
சர்வதேசத்தின் சக்திவாய்ந்த ஒரு துரோக அரசியற் சதிவலை ஒன்று மறைந்து இருந்து செயற்பட்டு இடையூறு விளைவிப்பதே சர்வதேச உதாசினத்துக்கான உட் காரணம் என்பது அனைவருக்கும் புரிந்திருந்தாலும்,  புரியாததுபோல பாவனை செய்து, நீண்டகாலம் இழுபறியாக இருந்துவரும் சிக்கல் நிறைந்த ஒரு இனத்தின் விடுதலைப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் திடமான கொள்கை வேலைத்திட்டத்திலிருந்து மாறுபட்டு பரபரப்புக்கான வழிவகைச் செயற்பாடுகளில் தமிழ் அமைப்புக்கள் விழாவெடுத்து அவ்வப்போது ஏதேதோ செய்துவருகின்றன.
அந்த வகையில் விடுதலை போராட்டத்தை நேர்வுபடுத்துகின்றோம் என்று பல வழிகளில் மக்கள் மன்றத்தில் போராடிய  (BTF)  பிரித்தானிய பேரவை என்ற அமைப்பு கடந்த  மே 18 2014 அன்று லண்டனில் புலிக்கொடி பாவிப்பதற்குதடை விதித்து மக்களுடன் முரண் பட்டிருக்கிறது.,
1985ல் தமிழ்நாடு இந்தியாவில் திமுக தலைவர் கருணாநிதியால் மதுரையில் அங்குரார்ப்பணம் செய்து தொடக்கப்பட்ட TESO, என்ற அமைப்பும் ஆரம்பத்தில் தமிழீழத்துக்கான விடுதலை ஆதரவு அமைப்பு, என்று தொடங்கி 2011 தேர்தலின்போது “இலங்கை தமிழர்களுக்கான மருந்து தடவும் அமைப்பு”  என்று மாற்றியமைத்தார் என்பது ஞாபகத்துக்கு வருகிறது..
இயல்பான யதார்த்தத்துடன் சொல்லப்போனால் தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்களையும். விடுதலைப் புலிகள் இயக்கத்தையும், மாவிரர்களையும் புறந்தள்ளிவிட்டு செய்யப்படும் ஈழத்தமிழ் இனத்தின் விடுதலைக்கான சமரசமான செயற்பாடுகள் ஒருபோதும் வெற்றியளிக்கப் போவதில்லை.  ஏனென்றால் அவைதான் நாங்கள் நீண்ட நெடுங் காலங்களாக பட்டறிந்த அனுபவமாக எம் முன் குவியலாக கிடக்கிறது.
ஒருவேளை ஒரு தீர்வை நோக்கி செயற்பாடுகள் நகர்த்தப்பட்டாலும் அது ஈழத்தின்  வரலாற்று அடி நாதத்தை தழுவிய நம்பிக்கையுடன் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்ப்பாக இல்லாமல் ஒரு தற்காலிக பொம்மைத்தனமான தீர்வாகவே இருக்கும்.  ஏனென்றால் நடைமுறைகளும் செயற்பாடுகளும் நெற்றிப்பொட்டில் அறைந்தாற்போல் அப்படியான அபத்தமான செய்திகளையே தினம் தினம் சொல்லுகின்றன.
விடுதலைப்புலிகள் இயக்கம் தடைசெய்யப்பட்ட இயக்கமாக இருந்துவிட்டுப்போகட்டும்.  அதற்காக விடுதலைப்புலிகள் இயக்கத்தின் ஏற்றுக்கொள்ளக்கூடிய  கொள்கைகளை ஏற்றுக்கொள்ளக்கூடாது என்று எவரும் தடைசெய்யவில்லை,  தடை செய்யவும் முடியாது.
ஆயுதம் தரிப்பது,  வன்முறைகளை கையாளுவது முரண்பட்டதாக சர்வதேசம் கூறக்கூடும்.  அந்த நடைமுறை மவுனிக்கப்பட்டிருப்பதாக விடுதலைப்புலிகள் இயக்கமே அறிவித்து ஆண்டுகள் ஐந்து முடிவடைந்துவிட்டன.
அவை விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அதிகாரத்துக்குட்பட்ட அரசியல், அதுவேறு இது வேறு என்பதை சம்பந்தப்பட்டவர்கள் தெளிவுபெற வேண்டும்.
இன்றைக்கு அப்பேற்ப்பட்ட செயற்பாடுகளை முனைப்பு பெறவேண்டுமென்று எவரும் முனைப்புக்கொள்ளவுமில்லை.
மாறாக சனநாயக மரபுகளுக்கு உட்பட்டு தமிழ் ஈழத்துக்கான நீதியான நியாயமான ஒரு தீர்வை சர்வதேசத்தின்முன் வேண்டிநிற்பதற்கான போராட்டங்களே தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
சர்வதேசத்தின் பலபாகங்களிலும் ஜெனீவா முன்றலிலும் தேசியத்தலைவரின் உருவப்படங்களும் புலிக்கொடிகளும் பேரணிகளின்போதும் பொதுக்கூட்டங்களின்போதும் பயன்படுத்தப்பட்டே வருகிறது.
2009ன் பின் ஈழமண்ணின் மீட்சிக்கும்,  ஈழத்தமிழ் இனத்தின் விடுதலைக்காகவும் குரல் கொடுப்பதற்காக என்று சத்தியம்செய்து கூறிக்கொண்டு பலநூறு அமைப்புக்கள் புற்றீசல்போல் புறப்பட்டு வந்துகொண்டிருக்கின்றன, ஆனால் அந்த அமைப்புக்களின் செயற்பாடுகள் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் கொள்கை சாராததாக இருந்தால் எவரும் திரும்பிப்பார்க்கத் தயாராக இல்லை என்பதே யதார்த்தம்,
லண்டனில்(மே 18)   முள்ளிவாய்க்கால் நினைவு தினம் நடைபெற்றபோது BTF பிரித்தானிய தமிழர் பேரவை அமைப்பினர் புலிக் கொடி ஏற்ற முடியாது என்றும், அது பிரித்தானிய அரசியல்வாதிகள் மத்தியில் அதிருப்த்தியை ஏற்படுத்தும் என்று  கூறி புலிக்கொடி ஏற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
அந்த நடைமுறை பெருத்த அதிர்ச்சியையும் பிரித்தானிய பேரவையின்மீது பெருத்த நம்பிக்கையீனத்தையும் ஒருபுறம் அச்சப்படும்படியான சந்தேகங்களையும் கிளப்பிவிட்டிருக்கிறது.
பண்டைய காலத்திலிருந்தே தமிழினத்தின் அடையாளம் புலிக்கொடி என கொண்டாடப்பட்டு வருகிறது,
தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் பாவனையில் வைத்திருந்த புலிக்கொடிக்கும் சனநாயக போராட்டங்களின்போது பயன்படுத்தப்படும் புலிக்கொடியின் “இலச்சினை”க்கும் நிறைய வேறுபாடு உண்டு என்பதை அமைப்பில் அங்கம் வகிக்கும் கற்றுணர்ந்தவர்கள் முதலில் கவனத்தில் கொள்ளவேண்டும்.
ஒரு இனத்தின் கலாச்சாரம் அவ்வினத்தின் கொள்கை சார்ந்த அக நிறம்,  பண்பு,  வெவ்வெறு அடையாளங்கள் இருட்டடிப்பு செய்ய முற்பட்டால் அவ்வினத்தை அழிப்பதற்கான வேலைத்திட்டமாகவே அதை கருத முடியும்.
இன்று நீண்டு நெடிந்த ஒரு போராட்டத்தின் ஒரு திருப்பத்தில் ஈழத்தமிழ் இனம் பயணித்துக்கொண்டிருக்கிறது.  ஈழத்தமிழ் இனத்தின் விடுதலையை வென்றெடுத்துவிட வேண்டுமென்ற இராசதந்திரம் அவசியமான ஒறுதான்,  அதற்காக மூலவேரை கறையான் அரிக்க விட்டுவிட்டு இலைக்கு மருந்துபோடுதல் விவேகமற்றதாகவே பார்க்கப்படுகின்றது.
பிரித்தானியாவில் புலிக்கொடி பாவிப்பதற்க்கு சட்டப்படி அங்கீகாரம் நீதி மன்றத்தால் வழங்கப்பட்டிருக்கிறது.
ஒருசில அரசியல்வாதிகளை திருப்த்திப்படுத்துவதற்காகவும் வேறு காரணங்களுக்காகவும்  BTF பிரித்தானிய தமிழர் பேரவை ஈழத்தமிழர்களின் உயிரோட்டமான புலிக்கொடிக்கு தடைவித்தித்ததானது கடும் கண்டனத்துக்குரியது என்பதை பணிவுடன் இந்தப் பதிவு தெரிவித்துக்கொள்ளுகின்றது.
இந்த விடயத்தை இத்துடன் விட்டுவிட முடியாது,  இப்படியான குளறுபடியான செயற்பாடுகள் தொடரும்பட்ஷத்தில் புலம்பெயர் தேசங்களில் முனைப்பு பெற்று நிற்கும் அரசியல் எழுச்சி மந்தப்படுத்தப்படும் அபாயம் தடுக்கமுடியாமல் போய்விடும்.  மக்கள் சோர்வடைந்து முடங்கிவிடும் அபாயத்தில் இப்பேர்ப்பட்ட செயற்பாடுகளே முன்னிலை வகிக்கின்றன.
விடுதலைக்கான போராட்டத்தில் மக்களின் பங்களிப்பு குறைந்தபின் அமைப்புக்கள் ஒன்றும் செய்துவிடமுடியாது.  அப்பேர்ப்பட்ட சீரழிவை தோற்றுவிக்கும் அபாயம் இருப்பதால் பிரித்தானிய பேரவை புலிக்கொடி பாவிக்க வேண்டாம் என்று தடுத்ததற்கான நியாயமான விளக்கத்தை தாமதமின்றி பகிரங்கமாக வெளியிடவேண்டும். அல்லது மக்களின் மன எழுச்சியை மதித்து விலகி வழிவிடுதல் கூட நாகரீகமானதாக கருதப்படுகிறது.
இனிவரும்காலங்களில்  இப்படி தாந்தோன்றித்தனமான மக்களின் மனவெழுச்சியை உடைக்கும் செயற்பாடுகளை சிந்தித்து மக்களின் கலந்துரையாடல்களின் பின் நடைமுறைக்கு கொண்டுவருவதே உகந்ததாகும்.
தேசியத்தலைவரையும்,  விடுதலைப்புலிகளையும்,  விடுதலை போராட்டத்தையும்,  மாவிரர்களையும்,  மடிந்த மக்களின் சவக்குவியலையும்,  காட்டி அமைப்புக்களை உருவாக்கிவிட்டு அமைப்பு நடத்துவதற்கான தற்காலிக அங்கீகாரம் அவ்வவ் நாடுகளில் கிடைத்தபின் முன் சொல்லப்பட்ட அனைத்தையும் இருட்டடிப்பு செய்து மக்கள் மனவோட்டத்துக்கு எதிராக அரசியல் செய்வதென்றால் அந்த அரசியலுக்கும் ராஜபக்‌ஷவின் அரசியலுக்கும் வேறுபாடு இருக்க முடியாது.
ஈழதேசம் செய்திகளுக்காக.
கனகதரன்.

Sunday, May 18, 2014

இனப்படுகொலை சூத்திரதாரி இந்தியா என்பதை என்றைக்கும் மறக்க முடியாது.( ஈழ இனப்படுகொலை, ஐந்தாம் ஆண்டு நினைவு நாள் கவிதை)

மே பதினெட்டு.

ஐந்து ஆண்டுகள் கடந்தும்
நெஞ்சை விட்டு அகலாமல்
அடி மனதில்
ஆற்றமுடியாத ரணமாக
கனன்ற வெப்ப சுருதி
உள்ளத்தில் பெரு வடுவாக
ஒரு சுனாமியின் தயார் நிலையில்
உறைந்து கிடக்கிறது,

2009 மே மாத(மு)ம்
முள்ளிவாய்க்கால் பரப்பில்
நிகழ்த்தப்பட்ட
நவீன நரபலியான இனப் படுகொலை,
விசாரணை வளயத்துள்
கொண்டு வர தடைகள் பல இருந்தாலும்
உலகம் முழுவதும் வாழும்
பள்ளிக் குழந்தைகளுக்கு
சரித்திர பாடமாக
ஈழத்து இனப்படுகொலை
ஆவணப்படுத்தப்பட்டு விட்டது.

ஈழ இனப்படுகொலையின் சூத்திரதாரி
இந்தியா.
இதுதான் பள்ளிக் குழந்தைகளுக்கான
பாலபோதினியின்
முதலாவது பாடம்.

ஈழத் தமிழ் இனத்தின் ஒரு பகுதி
சவக் காடாக
இரத்தச் சகதிக்குள்
இரண்டறக் கலந்திருந்த காட்சிகளும்,
இந்தியாவின் தலையீட்டினால்
சிங்களவன் அகலக் கால் வைத்து
முள்ளிவாய்க்கால் செருக்களமானதும்
நாதியற்று ஈனசுரத்தில்
கூவி குளறிய ஓலங்களும்
நிழற் படமாக அல்லாமல்
நிதர்சனமாக
கண்முன் நிழலாடுகின்றன,

மந்தம் தலைக்கேறி
மறந்து போனவர்களுக்கான
மறு வாசிப்பே இந்த பதிவு.

அடி மனதில்
ஆத்திரம் கொப்பளித்தாலும்
அரசியல் ஆத்மாக்களின்
காட்டிக் கொடுப்புக்களாலும்
கள்ளத் தொடர்புகளாலும்
ஆற்றாமையும்
தேற்றமுடியாத வெறுமையும் மட்டுமே
தொடர்ந்து பயணித்துக்கொண்டிருக்கிறது.

கண்ணுக்கு முன்னே
வெடித்து கருகிப்போன சந்ததியை,
தாயை,  தகப்பனை,
கழுத்தறுக்கப்பட்ட தம்பியை
கற்பழித்து கொல்லப்பட்ட தங்கையை
குடல் பிதுங்கி கண்மூடிய
குழந்தையை மட்டுமல்லாமல்
நர மாமிஷ மிருகங்களின்
நிந்தனைகளையும்
எவராலும் மறக்க முடியவில்லை.

சிங்களவன் பொது எதிரி
அவன் சண்டைக்கு வந்தது வியப்பல்ல,
அவனுடன் தலைவன் சமர் புரிந்ததும்
அதிசயமல்ல.

நேபாளத்தில் அவதரித்த புத்தனின்
பெயரை சொல்லிக் கொண்டு
மேற்கு வங்காளம் ஒரிசாவிலிருந்து
நாடு கடத்தப்பட்ட  ஒரு கூட்டம்
ஈழத்தை மேச்சல்க் காடாக்கி
மிடறு முறித்து
இன்னும் அசைபோட்டுக் கொண்டிருக்கிறது.

புத்தன், காந்தி பிறந்த மண்ணென்று
போலி பெருமை கூறிக்கொண்டாலும்,
நரகாசுரனும் தாடகையும் சகுனியும்
எட்டப்பனும்
பிறப்பெடுத்த வழித்தடத்தில்
வந்தவர்கள் என்பதால்
கருணாநிதி,  சிதம்பரம்,  பிரணாப்
சிவ்சங்கர் மேனன், மன்மோகன்
ஆகிய புல்லுருவிகள்
இனப்படுகொலையின் பின்
காட்டுமிராண்டிப் பட்டியலின்
கடைசி பதிவில் இடம்பிடித்துக்கொண்டனர்.

காட்டெருமை கரடி கருங்குரங்கு
நூட்டிமையில் நிறம் மாறும் பச்சோந்தி
மூஞ்சூறு
ஆற்று முதலை,  அண்டங்காகம்
அவை காட்டு மிராண்டிகளை விடவும்
மேலான பண்பு கொண்டவை.

இந்திய அரசியல் சாக்கடைக்கு வெளியே
ஐந்தறிவு, நான்கறிவு விலங்குகள்
உயர்ந்து நிற்கின்றன.

அமெரிக்காவையும் ஐநாவையும்
வளைத்துப்போடக்கூடிய  சூனியம்
இந்திய அரசியலுக்கு தெரிந்திருக்கிறது.
பரம வைரிகளாக இருந்தாலும்
பாகிஸ்தானையும் சீனாவையும்
ஈழத்து இனப்படுகொலைக்குள்
இழுத்து போடக்கூடிய சூட்சுமம்
சிவ்சங்கர் மேனனுக்கும்
சிதம்பரம் கருணாநிதிக்கு புரிந்திருக்கிறது.

வறுமையையும் ஊழலையும்
மூலதனமாக வைத்துக்கொண்டு
மின்சாரம்,  தண்ணீர் இல்லாமல்
அரசியல் வித்தை செய்து
வல்லரசு என்று வயிறு வளர்க்கும்
இந்தியாவை “வேட்டைவாளி”
என்று சொல்வதில்
யாருக்கும் எந்த தயக்கமும் இருக்காது.

இந்தியாவின் வழிபாட்டு அரசியலும்
ஈழத்து சுதந்திர வேட்கையும்
தொடர்வுபடுத்த முடியாதவைதான்
ஏணி வைத்தாலும் எட்டாதது.

ஒன்றுக்கும் ஒன்பதுக்கும் உள்ள இடைவெளி
இந்தியாவுக்கும் ஈழத்துக்கும் உண்டு
இந்தியனுக்கு தேவை
ஈழத்தின் பெயரால்
இழவெடுத்த அரசியல்.
இனப்படுகொலை செய்த பின்னும் கூட
இன்றுவரை இந்திய அரசியல்
நாற்றத்தை விட்டு
நாகரீக உலகத்துக்கு வரவில்லை.

ஈழத்திலும் பச்சோந்திகள் உண்டு
அவைக்கு ஆயுட்காலம் அதிகமில்லை
அந்த பச்சோந்திகள்
அதிக பட்ஷம் இந்தியாவை தொங்கலாம்
அல்லது
ராஜபக்‌ஷவை துதிபாடலாம்.

ஈழ கோட்பாட்டின் இலக்கை
தமிழீழ தாகத்தை
குப்பிக்குள் அடைத்து வைத்து
குடை பிடித்து காவல் காக்க முடியாது.
ஈழத்து மக்களின் சுதந்திர தாகம்
முள்ளிவாய்க்காலுடன் முடிந்துவிடும் என்றால்
இன்றைக்கு ஈழத்து முற்றத்தில்
இராணுவத்துக்கு வேலை இருந்திருக்காது.

சுதந்திரமும் விடுதலைக்கான பயணமும்
ஈழத்தமிழனுக்கு
செத்துப்போவதில்த்தான் முடியுமென்றால்
அது விதியாக இருக்கலாம்.

இன்று
இனப்படுகொலை நிகழ்வின்
ஐந்தாம் ஆண்டு கறுப்பு நாள்
நடந்து முடிந்த ஈழப்போராட்டத்தின்
எச்சங்கள்
நடமாட தொடங்கிய
வழித்தடத்தின் ஒரு சந்திப்பு.
ஊர்க்குருவி-

Saturday, May 17, 2014

நடந்து முடிந்த தேர்தல் மூலம் ஈழத்தை பிடித்திருந்த பீடைகள் காவுகொள்ளப்பட்டிருக்கின்றன.

இந்திய பாராளுமன்றத்துக்கான பொதுத்தேர்தல் முடிவுகள் கிட்டத்தட்ட வெளியாகிவிட்டன. நாடு முழுவதும் 543 லோக்சபா தொகுதிகளில் இன்று 16ம் திகதி வாக்குகள் எண்ணப்பட்டன.  பாரதிய ஜனதா கட்சி தனியாக 283, இடங்களைக் கைப்பற்றியுள்ளது.  கூட்டு கட்சிகளுடன் சேர்ந்து 340 ஆசனங்களை பாரதிய ஜனதா கட்சி பெற்று வரலாறு காணாத வெற்றியை பெற்றிருக்கிறது.
படுதோல்வியை தழுவிய காங்கிரஸ் கூட்டணிக்கு 58 ஆசனங்கள் கிடைத்திருக்கிறன. இப்போதைக்கு காங்கிரஸ் எதிர்க்கட்சிக்கான தகுது உடையதுபோல் காணப்பட்டாலும் இரத கட்சிகளின் ஒன்றிணைவால் மாற்றங்கள் நிகழ்வதற்கான சூழல்களும் இருக்கின்றன.
ஆட்சி அமைக்க தேவையான 272 இடங்களைவிட மிக அதிகமாக எண்ணிக்கையில் பாஜக வென்றுள்ளதால் அக்கட்சி தனிப் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்க முடியும்.
இந்தியாவை பீடித்திருந்த பீடைகள் (காங்கிரஸ் திமுக)  மக்கள் மன்றத்தில் இனங்காணப்பட்டு விரட்டப்பட்டுள்ளதாக அரசியல் விமர்சனங்கள் கூறுகின்றன. தமிழர்கள் மத்தியில் காங்கிரஸ் திமுக கட்சிகளின் படு தோல்வி ஒரு விழாக்கால மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படுகிறது.
60 ஆண்டுகள் ஆதிக்கம் செலுத்திய காங்கிரஸ் புதைகுழியில் புதையும் நிலையில் உள்ளது.
தமிழகத்தை பொறுத்தளவில் நல்ல தீர்ப்பு வழங்கப்பட்டு ஆளும் கட்சியான ஜெயலலிதா தலைமையிலான அஇஅதிமுக வுக்கு 37 ஆசனங்கள் கிடைத்திருக்கின்றன. கருணாநிதியின் திமுக வுக்கும் காங்கிரஸுக்கும் எதிர்பார்த்ததை விடவும் பலமான மரண அடியை வாக்காளர்கள் மிகத்தெளிவாக வழங்கி இரு கட்சிகளுக்கும் தலா ஒவ்வொரு முட்டை பரிசாக கொடுத்திருக்கின்றனர்.
தேர்தல் கள நிலவரங்களை வெளியிட்ட ஊடகங்கள் திமுகவுக்கு முட்டை கிடைத்திருக்கிறது என்று சிலாகித்து எழுதி மகிழ்ந்திருக்கின்றன.
2011 சட்டசபை தேர்தலில் படுதோல்வியை சந்தித்து எதிர்க்கட்சி அந்தஸ்த்தையும் இழந்த திமுக,  நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் ஒரு தொகுதியில்க்கூட கரைசேர முடியவில்லை.
விஜயகாந்த தலைமையிலான தேமுதிக என்றொரு கட்சி இருந்ததற்கான அடையாளம் தெரியவில்லை.
21ம் திகதி பாரதிய ஜனதா கட்சியில் பிரதம மந்திரிக்கான வேட்பாளர் நரேந்திர மோடி பிரதமராக பதவி ஏற்க இருக்கிறார்.

பத்தாண்டுகால காங்கிரஸ் ஆட்சியின் படிப்பினையை கருத்தில்க்கொண்டு கடந்தகால வெளியுறவு கொள்கையிலிருந்து சற்று மாறுபாடான நடைமுறையை பாஜக எடுக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது.
காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைக்கு தீர்வு காண பாரதிய ஜனதாவின் ஆட்சியாளர்கள் முயற்சி செய்தால் வரலாற்றில் அக்கட்சிக்கு ஒரு இடம் கிடைக்கும்.
இருந்தும் மோடி என்ற அரசனும், மகிந்த என்ற அரசனும் சமரசம் செய்ய முயற்சித்தால் பழைய கதை மீண்டும் தொடர்ந்து செல்ல வாய்ப்பிருக்கிறது. அதிகார ரீதியாக தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய இடத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா இருப்பதால் கிடைத்திருக்கும் பெரும்பான்மை பலத்தை பாவித்து    ஈழத்தமிழர்கள் சார்பாக பாராளுமன்றத்தில் நிச்சியம் ஈழத்து விவகாரம் மறு பரிசீலனை செய்யப்படும் என்று நம்பலாம்.
நாடக மணி கருணாநிதியின் திமுகவிலிருந்து டில்லிக்கு எவரும் செல்லாததையீட்டியும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் கை ஓங்கி பலப்பட்டிருப்பதையீட்டியும் சற்று ஆறுதல் கொள்ள முடியும்.
மற்றும்படி ஆர்வக்கோளாறு காரணமாக இப்போதைக்கு எதையும் சொல்லிவிட முடியாது, பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
காங்கிரஸையும் திமுகவையும் கை கழுவுவதற்காவது இந்த தேர்தல் உதவியிருக்கிறது என்பது பெரு மகிழ்வே.
ஈழதேசம் செய்திக்காக
ஊர்க்குருவி.