Wednesday, September 28, 2011

மக்களின் நம்பிக்கையை இழந்துகொண்டிருக்கும் தமிழக முதலமைச்சர்.

2011, ஏப், தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டசபைத்தேர்தல் இலகுவில் தமிழர்களால் மறந்துவிடமுடியாத ஒரு மாபெரும் அரசியல்ப் புரட்சி என்று கொள்ளலாம்.

திடமான உயிரோட்டத்துடன், துரோகத்திற்கு எதிரான பெரும் களையெடுப்பாக, மிகவும் உணர்ச்சிமயமாக சட்டசபைத் தேர்தல் நடந்து முடிந்தது.

உலகத்தமிழர்கள் அனைவரும் விரும்பி எதிர்பார்த்தவண்ணம் மகிழ்ச்சிகரமாக தேர்தல் முடிவுகள் எந்த குளறுபடிகளும் இல்லாமல் வெளிவந்தன.

சட்டசபைத்தேர்தல் மூலம், தமிழினத்தின் வெறுப்புக்குள்ளான அரசியல் வா(வியா)திகளான, திமுக, மற்றும் காங்கிரஸ், பாமக, விசி. ஆகியவை தமிழக மக்களால் திருப்திகரமாக (தோற்கடிக்கப்பட்டன) விரட்டியடிக்கப்பட்டன.

இக்கட்சிகள் (அரசியல் வியாதிகள்) தோற்கடிக்கப்பட்டமைக்கு இரண்டு முக்கிய காரணங்கள் அலசப்படுகின்றன.

1) ஈழ இன அழிப்பில் ஸ்ரீலங்கா சிங்கள ஆட்சியாளர்களுடன் இணைந்து இந்திய காங்கிரஸ் அரசு பகிரங்கமாக படுகொலைகளில் ஈடுபட்டதென்றும், கொலைக்குற்றவாளியான காங்கிரசுடன் கூட்டு வைத்துக்கொண்ட கருணாநிதியின் தலைமையிலான, திமுக, எந்தவித குற்ற உணர்வுமில்லாமல். தனது வாரிசுக்களின் பதவியை குறியாகக்கொண்டு, வஞ்சகமான நாடகங்களை நடத்தி, ஈழத் தமிழர் கொலைகளை நியாயப்டுத்தி. தமிழகத்து தமிழர்களின் உணர்வுகளை காலடியில் போட்டுமிதித்து, காங்கிரஸுக்கு உதவி தமிழினத்தை ஏமாற்றியது.

இதுகண்டு கொதிப்படைந்த தமிழகமக்கள் தமது எதிர்ப்பை தேர்தலில் மூலம் வெளிப்படுத்தி, துரோக கூட்டங்களுக்கு சரியான பாடம் புகட்டியிருந்தனர் என்பது ஒருகாரணமாகவும்.

2)மேல் சொன்ன காரணங்களுடன், இந்தியாவின் வரலாற்றில் மிக மிகப்பெரிதான 176,000. கோடி. ஸ்பெக்ரம், அலைக்கற்றை, மற்றும் உள்ளூர் ஊழல்கள் அனைத்தும், திமுக தலைமையின் வழிகாட்டலில் திமுக குடும்பமே அதிகளவில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டும் எழுந்திருந்தது.

அத்துடன் கருணாநிதியின் குடும்ப வாரிசுகளின் ஆதிக்கம், ஒட்டுமொத்த திமுக கட்சியையும், நாட்டின் தொழில்த்துறையையும் சூரிய கிரகணமாக கௌவிவிட்டதென்ற குற்றச்சாட்டும் தமிழக மக்களை வெறுப்புக்குள்ளாக்கியதாக ஒரு கருத்தும் உண்டு.

எப்படியிருப்பினும் ஈன இரக்கமில்லாமல் ஈழ இன அழிப்பின்போது அவற்றை மூடிமறைத்து, கருணாநிதி நடத்திய பல்வேறு வஞ்சக நாடகங்களும், அவற்றை பூசிமெழுகுவதற்காக அவர் தொடர்ந்து கடைப்பிடித்துவந்த படு மோசமான பொய்யான வாக்குறுதிகள், முன்னுக்குப்பின் முரணான பேச்சுக்கள் மக்களை மிகுந்த கோபத்துக்கு ஆளாக்கியிருந்தது.

இந்த வெறுப்பின் பிரதிபலிப்பே திமுகவின் படு வீழ்ச்சிக்கு முக்கியகாரணம் என்பதுதான் யதார்த்தமான நிதர்சனம். உதிரியாக கருணாவின் குடும்ப ஆதிக்கமும் ஸ்பெக்ரம் ஊழலும் சேர்ந்து மக்களின் வெறுப்புக்கு இன்னும் அதிக வீரியத்தை கூட்டியிருந்தது என்பதும் மறுப்பதற்கில்லை.

இப்படிப்பட்ட தமிழ் இன எதிரியான திமுகவுடன், கூட்டுவைத்துக்கொண்டு நல்லபிள்ளைபோல் காண்பித்து திமுக குதிரையில் சவாரி செய்த பச்சை சுயநலவாதியான திருமாவும், நின்ற இடம் தெரியாமல் கழுவி சுத்தப்படுத்தி சாக்கடையில் தள்ளப்பட்டிருக்கிறார்.

அதேகதிதான் ஒவ்வொரு தேர்தலிலும் சந்தர்ப்பவாதத்தை கொள்கையாகக் கொண்டு வெவ்வேறு பறவைகளின் கூடுகளில் மாறி மாறி அடைக்கலம் தேடும் குலக்கொளுந்து, வைத்தியர் ராமதாஸின் பாமகவுக்கும் பரிசாக கிடைத்திருக்கிறது.

துரோக திமுகவுக்கும், கொலைக்கட்சி காங்கிரஸுக்கும், எதிராக உருவான மக்களின் உயிரோட்டமான எதிர்ப்பலை, எதிரணியில் போட்டியிட்ட ஜெயலலிதா அவர்களின் தலைமையிலான அதிமுகவுக்கு சாதகமாக அமைந்ததில் வியப்பு எதுவும் இல்லை.

இன்னும் ஒரு அதி கூடுதல்க்காரணமாக விஜயகாந்த் அவர்களின் தலைமையிலான தேமுதிக, அதிமுகவுடன் கூட்டணி அமைந்து கொண்டதையும் குறிப்பிடமுடியும்.

முன்பு நடந்த நாடாளுமன்றத்தேர்தலிலும், அதற்கு முந்திய சட்டசபைத்தேர்தலிலும் விஜயகாந்தின் தேமுதிக, தனித்து நின்று கணிசமான வாக்குகளை பிரித்து திமுகவுக்கு வெற்றிவாய்ப்பை ஈட்டியிருந்ததை கவனிக்க வேண்டும்.

விஜயகாந்தின் அரசியல் வருகைக்குப்பின், தமிழகத்தில் தேமுதிக கட்சிக்கு, கணிசமான ஆதரவு இருந்துகொண்டிருக்கிறது. ஒவ்வொரு தேர்தல்களிலும் கணிசமான வாக்குகளையும் அக்கட்சி பெற்று வந்திருக்கிறது.

தமிழ்நாட்டைப்பொறுத்தவரையில், கட்சிகளின் நிலைபற்றிய கருத்துக்கணிப்புக்கள் அனைத்தும் அரசியல் காழ்ப்புணர்வின் அடிப்படையிலேயே ஊடக வசதி, பண பலம் உள்ளவர்களால் தத்தம் கட்சிக்கு சார்பாகவே நடத்தப்பட்டு வந்திருக்கிறது. மக்கள் மனதில் உளவியல் ரீதியான ஒரு கிலியை உண்டுபண்ணவும் இந்த கருத்துக்கணிப்புக்கள் அரசியல்க் கட்சிகளால் மறைமுகமாகவும் நேரடியாகவும் நடத்தப்படுகின்றன.

இந்தவகையில் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு பெரிய கட்சிக்கும். அடிப்படையில் 10 சதவீத வாக்குக்கும் குறைவாகவே நிரந்தரமாக வாக்கு வங்கி இருக்கமுடியும். மற்றவை அனைத்தும் சூழ்நிலையைப்பொறுத்து மாறி மாறி உயர்வதும் தாழ்வதும் உண்டு.

ஒவ்வொரு தேர்தல்களிலும், 65/70 சதவீத அடித்தட்டு மக்கள் மட்டுமே தேர்தல்களில் ஈடுபாட்டுடன் வாக்களிக்க விரும்புகின்றனர். உயர் குடியினர் அண்ணளவாக பத்துச்சத வீதத்தினர் தேர்தல்களில் வாக்களிக்க விரும்புவதுமில்லை. இன்னும் ஒரு பத்துச்சதவீதத்தினர் சில கட்டாயப்படுத்தல்களால் வேண்டா வெறுப்பாக வாக்களிக்க முன்வருகின்றனர். சிலர் வாக்களிக்க முன்வருவதேயில்லை. பல ஆய்வுகள் மூலம் இத் தரவுகள் வெளியாகியிருக்கின்றன.

முக்கியமான காலகட்டங்களில் மக்களின் மதிப்பு பெற்ற தலைவர்களால் உருவாக்கப்பட்ட கட்சிகள் என்றவகையில், திமுக, மற்றும் அதிமுக கட்சிகள் தமிழ்நாட்டில் நீண்டகாலமாக பெரிய கட்சிகளாக உருவகப்படுத்தப்பட்டிருக்கின்றன, அதற்கு பேரறிஞர் அண்ணாத்துரை அவர்களும். புரட்சித்தலைவர் எம்ஜீஆர், அவர்களின் பெயரும் ஒரு காரணமாகும்.

அந்த பெரியவர்களின் பெயரை வைத்துக்கொண்டு மற்ற கட்சிகளை வளரவிடாமல் அக்கட்சிகளின் இன்றய தலைமைகள் சூழ்ச்சிசெய்வதும். தலையெடுக்கும் வேறு கட்சிகளை உடைத்து தமது கட்சியை பலப்படுத்த பின்பற்ற வைப்பதும் தொடர்ச்சியாக நடந்துவருவதை காணலாம்.

அந்த தந்தரத்தில் திமுக தலைவர் கருணாநிதி, முன்னிலையில் இருந்து வருகிறார்.

உதாரணத்திற்கு திமுகவில் முன்னொரு காலகட்டத்தில், முக்கிய சக்தியாக வைகோ அவர்கள் வளர்ந்து வருவது பொறுக்கமுடியாமல், கருணாநிதி வைகோவை பொய்க்குற்றச்சாட்டு சுமத்தி கட்சியிலிருந்து வெளியேற்றியிருந்தார்.

வைகோ அவர்களும் அவமானப்பட்டு பிரிந்து சென்று, மதிமுகவை தோற்றுவித்து தனியாக தேர்தலை சந்தித்து 18 சதவீத வாக்குக்களை பெற்று தனியான ஓர் இடத்தை பிடித்திருந்தார்.

திமுகவுக்கு போட்டியாக வைகோ சிம்மசொப்பனமாக உருவாகி தமிழக அரசியலில் வளர்வது கண்ட கருணாநிதி. பொறுக்கமுடியாமல். மதிமுகவில் உள்ள முக்கிய நிர்வாகிகளை வஞ்சகத்தின் மூலம் உடைத்து தனது கட்சியில் இணைத்து சில பதவிகளையும் கொடுத்து தன்னுடன் இணைத்து வைக்கோவின் கட்சியை இல்லாமல் செய்யுமளவுக்கு கருணாநிதி சதி செய்தார். ஒருகட்டத்தில் தன்னால் விரட்டப்பட்ட வைகோ அவர்களை தனது கட்சிக்குள் தந்தரமாக உள்வாங்கி தனது சந்தற்பவாதத்தை களங்கமற நிரூபித்தார்.

தொடர்ச்சியாக, தமிழகத்தில் தலையெடுக்க முயற்சிக்கும் வெகுசன ஆதரவுகொண்ட அரசியல்க் கட்சிகளை உடைப்பது, அல்லது அக்கட்சியின் இரணடாம் நிலை தலைவர்களை பிரித்து தம் வசப்படுத்தி தம்முடன் கூட்டு அமைக்க தூண்டிவிடுவது, போன்ற செயற்பாடுகளையே தமிழ் நாட்டில் பெரியகட்சி என காட்டிக்கொள்ளும் திமுக, அதிமுக. இரண்டு கட்சிகளும் தொடர்ந்து செய்து வருகின்றன.

இதனால் மற்றக்கட்சிகள் தலைதூக்க முடியாமல் ஏதோ ஒருகட்சியுடன் சேர்ந்து உதவிக்கட்சி, என்ற நிரந்தரப் பெயருடன். கூட்டணியில் இணைந்து இரண்டில் ஒரு கட்சியை முன்நிறுத்தி ஆட்சி அமைக்க வழிசெய்துவிட்டு, கருவேப்பிலைக் கணக்காக வீசப்படுகின்ற கட்டாயத்தில் தள்ளப்பட்டிருக்கின்றன.

கடைசியாக நடந்த சட்டமன்றத் தேர்தல் சற்று வித்தியாசமான ஒரு சூழ்நிலையில் களம் கண்டது. அப்போது திமுக, மற்றும் காங்கிரஸ்கட்சி படுதோல்வி அடையும் என்றே அதிகமானவர்கள் திடமாக நம்பினர்,(மனதார விரும்பினர் என்றே சொல்லலாம்)

இருந்தும் திமுக தனது வழமையான தந்தர வாய் ஜாலத்தை பிரயோகித்து, தமது கட்சியே வெற்றி பெறும் என்ற மாயையை மக்கள்முன் அவிழ்த்துவிட்டு எவரையும் சிந்திக்கவிடாது திசை திருப்பும் வேலைகளை செய்தது. திருமங்கலம் இடைத்தேர்தலில் திமுக பணத்தை வாரியிறைத்தமுறை, அடியாட்கள் குண்டர்களை ஏவிவிட்டு வன்முறையில் தேர்தலில் வெற்றிபெற்ற முறை, பல சிறிய பெரிய அரசியல்க் கட்சிகளை அச்சப்பட்டு சிந்திக்கவும் வைத்தது. இந்தப்பயம் அதிமுகவையும் வெகுவாக பாதித்து செய்வதறியாது திகைக்க வைத்திருந்தது.

திமுக வென்றுவிடுமோ என்ற அச்சமே, தனித்து நின்று தேர்தலை சந்திப்பதென்றிருந்த, விஜயகாந்த் அவர்களுக்கு கூட்டணி அமைக்கும் சூழ்நிலை எண்ணத்தை உருவாக்கியதென்று சொல்லலாம்.

திமுகவின் அராஜகப்போக்கு தமிழகத்தில் ஒரு பலமான எதிரணியை உருவாக்க வழிகோலியது.

அதிமுகவுடன் இணைந்து, விஜயகாந்த், மற்றும் இடது சாரிகள். இந்திய கம்யூனிஸ்ட், சரத்குமார் அவர்களின் சமத்துவக்கட்சி, கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் கட்சி, ஆகியவை ஒன்று சேர்ந்து ஒரு வலுவான அணியாக களம் கண்டன. மக்களும் இதை வரவேற்றனர்.

தேர்தலை நேரடியாக சந்திக்காவிட்டாலும் வெளியில் நின்று, காங்கிரஸை கருவறுப்பேன் என கர்ச்சித்த "செந்தமிழன் சீமான்". காங்கிரஸுடன் விட்டுவிடாமல் மறைமுகமாக திமுகவையும் அதன் தலைவர் கருணாநிதியையும் தமிழர்களின் சாபக்கெடான துரோகக்கூட்டம் என்று ஒவ்வொரு இளைஞர்களின் மனதிலும் உயிர்ப்பு விதையாக விழுந்து பெரிய மாற்றத்தை கொண்டுவந்தார் .

சீமான் அவர்களின் நாம் தமிழர் இயக்கத்தின் முழக்கம், மிகப் பெரிய மனமாற்றத்தை தமிழ்நாடு மக்களின் மனங்களில் உருவாக்கி புதிய பிரவாகத்துடன் துளிர்க்கச்செய்தது. வெளியில் அவை இன்று அரசியல் வியாதிகளால் அதிகம் பேசப்படாவிட்டாலும் சீமானின் தாக்கம் பெருத்த பூகம்பம்போல் தமிழக கிராமங்கள் அனைத்தையும் உலுக்கியிருந்தது என்பதே உண்மை.

அதிமுகவில் உரிய மரியாதை கிடைக்காமல் அதிமுக தலைமையால் அலைக்கழிக்கப்பட்டு, திட்டமிட்டு ஏமாற்றப்பட்டு வெளியேறிய வைகோ அவர்கள், திமுக, மற்றும் காங்கிரஸ் தோற்கடிக்கப் படவேண்டும் என்கிற மேலான நோக்கத்தோடு, அதிமுக வை பழிவாங்கும் சுயநல எண்ணம் கொண்டு எதிரணியில் சேரவும் இல்லை. தனித்து போட்டியிட்டு வாக்குக்களை பிரிக்க முயற்சிக்கவுமில்லை.

தனதுகட்சி தொண்டர்கள் சோர்வடைந்தாலும் பரவாயில்லை எதிரிகள் அழியவேண்டுமென்கிற உயர்ந்த நோக்கோடு, தேர்தலில் போட்டியிடாமல் விலகி நின்று, திமுக, காங்கிரஸ், வீழ்ச்சிக்கு உறுதுணையாகி தமிழகத்திலும் உலகத்தமிழர்கள் மத்தியிலும் வைகோ அவர்கள் பெரு மதிப்பும் பெற்றார்.

ஈழ தமிழ் ஆதரவு சக்திகளினால் ஏற்கெனவே தமிழ்நாட்டில் புறக்கணிக்கப்பட்டு கிடந்த ஜெயலலிதா அவர்களை, 2009ல் நடைபெற்ற பாராளுமன்றத்தேர்தலின்போது, ஈழ இறுதி யுத்தத்தின் ஒரு உணர்ச்சிமயமான காலகட்டத்தில். ஜெயலலிதா அவர்களை மக்கள் முன் கொண்டுவந்து நிறுத்தி, ஜெயலலிதா ஈழத்தமிழர்களுக்கு எதிரானவர் என்றிருந்த திரையை கிழித்து புதிய தோற்றத்தை மக்களின் முன் கொண்டுவந்து வைத்தபெருமையும் வைகோ அவர்களுக்கே சேரும்.

இவ்வளவுபேர் கூடி வடம்பிடித்து இழுத்து கரைசேர்த்த தேர்தான், ஜெயலலிதா தலைமையில் இன்று ஆட்சியமைத்திருக்கும் அதிமுக அரசு, என்பதை ஜெயலலிதா அம்மையாரை தவிர வேறு எவரும் மறந்துவிடவில்லை.

சட்டசபைத் தேர்தல் ஏப் 2011,நடந்து முடிந்தது. ஐந்து மாதங்கள் கடந்த நிலையில், உள்ளூராட்சி தேர்தல் வந்திருக்கிறது. 2011 சட்டசபை தேர்தலில் போட்டியிடும்போது இருந்த படபடப்பு பதற்றம் பயம், உள்ளூராட்சித் தேர்தலை சந்திக்க இருக்கும் முதலமைச்சரான ஜெயலலிதா அவர்களிடம் இப்போது காணப்படவில்லை. மாறாக மிகுந்த உற்சாகத்துடன் காணப்படுகிறார்.

ஆட்சி அதிகாரம் அம்மா அவர்களின் கைகளில் இருப்பதால் கூடுதல் நம்பிக்கை இருந்தாலும், ஏணியாக இருந்து ஏற்றிவிட்ட கட்சிகளை அவர் சாதாரணமாக உதாசீனப்படுத்தி கைவிட்டிருப்பது ரசிக்கும்படியாகவும் இல்லை.

அம்மா அவர்கள் சில அரசியல்க்கட்சிகளின் தலைமைகளை மட்டும்தான் ஏமாற்றி புறம்தள்ளிவிட்டதாக, தமிழக மக்கள் எடுத்துக்கொள்ள மாட்டார்கள். வரலாறும் தனது பங்கிற்கு சில கறுப்பு தடங்களை உண்டாக்கும் என்பது காலப்போக்கில் தெரியவரும்.

மாற்றுக்கட்சியிலிருந்து அம்மாவுக்கு வாக்களித்த ஒவ்வொரு தொண்டனும் அவமானப்படுத்தப்பட்டதாகவே நொந்துபோவான், என்பதும் அரசியல் நோக்கர்களின் கருத்தாகவும் இருக்கிறது.

ஜெயலலிதா அவர்களின் இந்த போக்கு திருக்குவளை தீயசக்தியான கருணாநிதிக்கு, சற்று நிம்மதியையும் உள்ளூர மகிழ்ச்சியையும் கொடுத்திருக்கும் என்பதில் ஐயமில்லை.

காலப்போக்கில் ஜெயலலிதா அவர்களின் இப்படிப்பட்ட அணுகுமுறை, அதிமுகவுடன் கூட்டணி அமைக்க எந்தக்கட்சிகளும் முன்வராத சூழலையும் நம்பிக்கையீனத்தையும் அக் அட்சிக்கு தோற்றுவிக்கும். அவை பாம்பு ஏணி விளையாட்டின் விதிக்கு இட்டுச்சென்று புறந்தள்ளப்பட்டு கட்டந்தரையாக கிடக்கும் திமுகவுக்கு சற்று பசுமையை உண்டாக்கக்கூடும்.

அதே நேரத்தில் அனைத்து சிறிய அரசியல் கட்சிகளும் ஒன்று திரண்டு, அதிமுக, திமுக, இரண்டுக்கும் எதிராக நிகரான ஒரு மூன்றாம் அணியை உருவாக்க வழிவகுக்கும் என்பது தவிர்க்க முடியாமல்ப்போகலாம்.

அதன் ஆரம்பமாக விஜயகாந்த் அவர்கள் தலைமையில் இடதுசாரிகளின் உள்ளூராட்சி தேர்தலுக்கான கூட்டணி, பிள்ளையார் சுழி போடப்பட்டுவிட்டது. இவர்களுடன் வைகோ அவர்களும் இணைவாரானால் ஒரு பலமான அணி உருவாகுவதை ஜெயலலிதாவாலும் கருணாநிதியாலும் தடுக்கமுடியாமல் போகலாம்.

சற்று தூர நோக்கோடு பார்த்தால், ஜெயலலிதா அவர்கள் சக அரசியல்க்கட்சிகளை மதிக்காத மனப்பாண்மை, வரும்காலங்களில் சந்திக்க இருக்கும் தேர்தல்களில் அவரை தனிமைப்படுத்திவிடும் அபாயம் உண்டு. எந்த ஒரு இக்கட்டான நேரத்திலும் கைகொடுத்து கூட்டணி அமைக்க யாரும் துணியமாட்டார்கள் என்ற செய்தியும் சொல்லப்பட்டிருக்கிறது.

இன்றைய மானில அரசின் ஆயுட்காலம் முடிவடைய இன்னும் நான்கரை வருடங்கள் இருக்கிறது. அதிமுக அரசு அறுதி பெரும்பான்மை கொண்டு ஆட்சி அமைத்திருப்பதால், இந்த நான்கரை வருடமும் ஜெயலலிதா ஆட்சி செய்வதை எவரும் இடையூறு செய்து கலைத்துவிட முடியாது.

கடந்த ஐந்து வருடங்களாக எந்த ஒரு இரட்டைத்தன்மையும் காட்டாமல் கூட்டணியில் நாணயமாக நடந்துகொண்ட வைகோ அவர்களையே சட்டசபை தேர்தலின்போது அவமானப்படுத்தி வெளியேற்றிய ஜெயலலிதா, சட்டசபைத் தேர்தலில் இணைந்து கைகொடுத்த விஜயகாந்த்தையோ, இடதுசாரிகளையோ மற்றய எந்த சிறுகட்சிகளையோ, உள்ளூராட்சி தேர்தல் நடக்கவிருக்கும் இத்தருணத்தில் மதித்து நடந்துகொள்ளவில்லை.

வரும் காலங்களில் அரசியலில் எதுவும் நடக்கலாம் என்ற தத்துவம் இருந்தாலும், ஜெயலலிதாவிடம் நல்ல சூடு வாங்கிய கட்சிகளாகவே மற்றய கட்சிகள் மறக்கமுடியாத பாடம் கற்று இருக்கின்றன, இருந்தும் இது ஒரு அரசியல் மாறுபாட்டுக்கான காலமாற்றம் உருவாக நிகழும், காலத்தின் கட்டளை என்றே கொள்ளமுடியும்.

ஒருகாலத்தில் தமிழகத்தை ஆட்சிசெய்த தேசியக்கட்சியான காங்கிரஸ், இன்று அனாதையாகி தமிழின விரோத கட்சியாக அடையாளப்பட்டிருக்கிறது.

1960 களின் நடுப்பகுதியில் அண்ணாதலைமையில் உருவான தமிழர்களின் நம்பிக்கை கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம், கருணாநிதியின் சுயநலனால் இன்று வெறும் கட்டாந்தரையாக்கப்பட்டிருக்கிறது.

1972 களில் புரட்சித்தலைவர் எம்ஜீஆர் அவர்களால் உருவாக்கப்பட்ட அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம். ஜெயலலிதா அவர்களின் எதேச்சதிகாரத்தில் சிக்கி (செழிப்பாக இருந்தாலும்) தனிமரமாக நிற்கிறது.

இனி வரும் காலங்களில் கல்லில் நார் உரித்தாலும், மணலில் கயிறு திரித்தாலும். கருணாநிதியால் ஆட்சியை பிடித்து முதலமைச்சர் ஆகமுடியாது. அவரது வயதும் நடத்தையும் குடும்பவாரிசுகளின் போட்டியும் இனி அதற்கு இடமளிக்கப்போவதில்லை என்பதே முடிந்த முடிவாகியிருக்கிறது. கருணா அவர்களின் திமுக. இதுவரை இருந்துவந்த முதலாம், இரண்டாம், இடங்களை நிரந்தரமாக இழந்துவிட்டது. அந்நிலை நாளடைவில்த்தான் அவர்களாலேயே உணரப்படும்.

கருணாநிதி அவர்களின் அர்த்தமற்ற புலம்பல்கள் அனைத்தும் சிறையில் இருக்கும் அவரது மகள் கனிமொழி பற்றியதும். நில அபகரிப்பில் சிறையில் கிடக்கும் திருடர்கள் பற்றியதாகவே இருக்கிறது. தவிர வேறு பொதுநோக்கோடு பேசுவதற்கு அவரிடம் எந்த இருப்பும் காணக்கிடைக்கவில்லை.

அம்மா அவர்களிடம் நல்ல மாற்றம் ஏற்பட்டுவிட்டதாக 2011ன் ஆரம்பத்தில் நம்பிய தமிழக மக்கள் மனதில் ஏமாற்றம் மீண்டும் குடிவந்திருக்கிறது. அம்மா அவர்கள், எவராலும் மாற்றமுடியாதவர் என்பது அவரது நடவடிக்கைகள் தினம் தினம் வெளிப்பட்டவண்ணம் இருக்கிறது.

இவை அனைத்தும் சேர்ந்து ஒரு வலுவான இரண்டாவது அணி உருவாக காலம் கட்டளையிட்டுவிட்டதாகவே நகர்வுகள் உணர்த்துகின்றன. அவை தேமுதிக, அல்லது மதிமுக. தாண்டி நான் தமிழர் கட்சியாகவும் இருக்கலாம். அடுத்து வரும் சட்டசபைத் தேர்தல், அந்த பெரும் சக்தியை மக்கள்முன், நிகழ்காலம் அறிமுகப்படுத்தும் என்பதை இன்றய நகர்வுகள் இட்டுச்செல்லுகின்றன.

ஈழதேசம் இணையத்திற்காக,
கனகதரன்

நன்றி ஈழதேசம் இணையம்.

Sunday, September 25, 2011

கூத்தாடி குசும்பன்< அங் 12.

இந்த மாதம் நடுப்பகுதியில் தொடங்கிய ஐநா சபையின் 2011ம் ஆண்டுக்கான. 66 வது பொதுச்சபை கூட்டத்தொடர் நியூயோர்க்கிலும், மற்றும் மனித உரிமை ஆணைக்குழுக்களின் கூட்டத்தொடர் சுவிட்சர்லாந்து ஜெனீவாவிலும் நடைபெற்று வருகிறது.

இந்தக் கூட்டத்தொடர் அனேக நாடுகளுக்கு ஆளுமை வல்லமை பாதுகாப்பு போன்ற பதங்கள் விவாதப்பொருளாக இருக்கின்றன. ஆனால் ஸ்ரீலங்காவுக்கும், ஆளுமை வல்லமை பாதுகாப்பு துளியும் இல்லாத இந்தியவுக்கும், பெரும் சங்கடங்கள் நிறைந்த மனித உரிமை சம்பந்தமான கேள்விகளுக்கு பதிலளிக்கவேண்டிய சிக்கல் நிறைந்த பொறிபந்தலாக அமைந்திருக்கிறது.

ஸ்ரீலங்கா, மனித இனப்படுகொலை செய்த இனவெறி நாடாக இருப்பதால். பயப்பட்டு பதட்டத்தில் புலம்புவதற்கு நியாயம் இருக்கிறது. ஆனால் அதே அளவு பதட்டமும் பறந்தடிப்பும் இந்தியாவுக்கும் இருப்பதை காணமுடிகிறது.

ஜெனீவாவின் மனித உரிமை ஆணைக்குழுவின் கூட்டம் முடிந்தகையோடு, ஜெனீவாவில் அலசப்பட்ட விடயங்களின் தாக்கத்தை நியூயோர்க் பொதுச்சபையில் பிரதிப்லிப்பதற்கான நகர்வுகளை, பலநாட்டு தலைவர்களும் மனதில்க்கொண்டே கூட்டத்தொடரில் பங்குபற்றி உரையாற்றும்போது கருத்துக்களை வெளியிடுவர்.

எழுந்தமானமாக தேனீர் இடைவேளைகளில் கன்ரீன்களில் சந்திப்பின்போதும். தங்குமிட வதிவிடங்களிலும் ஒன்றாக கூடும் சந்தற்பங்களிலும் எந்தக் கருத்தும் பரிமாற நாகரீகமான நாட்டுத்தலைவர்கள் ஒருபோதும் முயற்சிப்பதில்லை.
ஆனால் ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தரப் வதிவிடப் பிரதிநிதி ஹர்தீப் சிங்
"பூரி" அவர்கள் தேனீர் இடைவேளையில் ஐநா அலுவலகத்தின் ஓய்வு மண்டபத்தில்.(கிட்டத்தட்ட நவீன கன்ரீன் போன்ற ஒரு இடத்தில்) பத்திரிகையாளர்களை அழைத்து வில்லங்கக்மாக தனது கருத்தை கூறியிருக்கிறார்.

இது கிட்டத்தட்ட இந்தியாவில் தேர்தல் காலங்களில் டீக்கடைகளில் அரசியல் பேசி தமது தரப்பை நியயப்படுத்தி பிரச்சாரம் செய்வதற்கு ஒப்பானதாகும்.

இலங்கை அதிபர் ராஜபக்சவுக்கு எதிராக ஐ.நா. சபையின் மனித உரிமை ஆணையம் எழுப்பிய குற்றச்சாட்டுகள் பற்றி ஐ.நா. சபையின் பொதுக்குழுவில் விவாதிக்க சாத்தியக்கூறுகள் எதுவும் இல்லை என்றும். ஜெனீவாவில் உள்ள ஐ.நா. சபையின் மனித உரிமை ஆணையம் இலங்கையில் ஈழத் தமிழர்களுக்கு எதிராக மிகவும் மோசமான முறையில் தாக்குதல் நடந்திருப்பதாகவும், கடுமையான மனித உரிமை மீறல் நடந்திருப்பதாகவும் மோசமான தவறான அறிக்கை வெளியிட்டிருந்தது என்றும் பூரி நொந்திருக்கிறார்.

அந்த அறிக்கை அதிபர் ராஜபக்சவை நேரடியாகவே குற்றம்சாட்டியிருந்தது. இதைத் தொடர்ந்து உலக நாடுகள் பல அதிபர் ராஜபக்சவின்மீது வீணாக அவதூறும் கடும் கண்டனமும் தெரிவித்திருக்கின்றன என்றும்.

ஐ.நா. சபையின் பொதுக்குழு என்பது வேறு, ஜெனீவாவில் இருக்கும் ஐ.நா. சபையின் மனித உரிமை ஆணையத்தின் செயல்பாடு வேறு.

ஐ.நா. சபையின் அங்கமாக மனித உரிமை ஆணையம் இருந்தாலும், அந்த ஆணையத்தின் அறிக்கைகளும் முடிவுகளும் ஐ.நா.வின் பொதுக்குழுவில் விவாதிக்கப்பட வேண்டிய கட்டாயம் இல்லை. என்று தனது பாண்டித்தியத்தின் வீரியத்தை தமது இந்திய அரசியல்ப்பாணியில் புட்டுப் புட்டு வைத்திருக்கிறாரு பூரி,

பெருவாரியான உறுப்புரிமை நாடுகள் மனித உரிமை ஆணையத்தின் அறிக்கை பற்றி விவாதிக்க வேண்டுகோள் விடுத்தால் மட்டுமே பொதுக்குழுவில் அந்த விவகாரம் பற்றிய விவாதம் எடுத்துக்கொள்ளப்படும். அதற்கும்கூட முன்னதாகவே அனுமதி பெற்றிருக்க வேண்டும் என்றும் பகர்ந்திருந்தார்.

இலங்கைக்கு அருகாமையில் உள்ள இந்தியா போன்று வேறு எந்த நாடும் இந்தப் பிரச்னையில் நேரடியாக அக்கறை காட்டாத நிலையில்.

இலங்கையில் ஈழத் தமிழர்களுக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட மனித உரிமை மீறல் பற்றியோ அவர்களது மறுவாழ்வு பற்றியோ பிரச்சினை எதுவும் எழுப்ப முடியாது. அதற்கான சாத்தியமும் கிடையாது என்று இந்திய பாராளுமன்றத்தில் அரசியல் வியாதிகள் எடுத்து வைக்கும் விவாதம்போல, இந்தியாவின் தரப்பு நிலைப்பாட்டை முன் நிறுத்தி ஹர்தீப் சிங் பூரி திட்டவட்டமாகத் கருத்து தெரிவித்தார்.

இலங்கையில் 95 சதவிகிதம் தமிழர்கள் சகஜவாழ்வுக்குத் திரும்பிவிட்டதாக அதிபர் ராஜபக்ச அவர்கள் தலையில் அடித்து சத்தியம் செய்திருப்பதால், அவர் சொல்லுவதுதான் உண்மையாக இருக்கமுடியும்.

இந்தியாவும் ஸ்ரீலங்காவின் கருத்தை ஏற்றுக்கொண்டிருப்பதால் , இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல் பற்றி தற்போது நடைபெற்று வரும் ஐ.நா. சபையின் பொதுக்குழு விவாதிக்காது என்று நம்புவதாக தெரிவித்து பூரிச்சுப்போனாராம் பூரி.

இவிரு ஏன்தான் பறந்தடிச்சு கொக்கரிக்கிறார்ன்னு தெரியல்ல,

#கூகு>>>
பூரி'' என்ற பெயர் நாக்குல தண்ணி ஊறும்வண்ணம் இருந்தாலும் அவரது பேச்சு மலம் போல நாத்தம் எடுத்து அருவருக்குதுங்க,

பூரி, அவங்களோட பேச்சும் கருத்தும் அப்படியே துளி மாற்றமில்லாமல், இந்திய அரசியல்வாதிகளின் அதே சாக்கடை மணமாக நியூயோர்க்கின் ஐநா மன்றத்தில் தெறித்து விழுந்திருக்கிறது..

இந்தியாவில் அரசியல்வாதிகள் முற்றுமுழுதாக, சட்டத்தின் நியாயங்களை புறந்தள்ளிவிட்டு, சட்டத்திலுள்ள ஓட்டைகளை மட்டும் பயன்படுத்தி, மக்களையும் நிர்வாக அமைப்புக்களையும் ஏமாற்றி தப்பிப்பதுபோல, ஐநா சபையையும் மாற்றி அமைக்க வேண்டும் என்று தலைப்பா கட்டிய பூரி விரும்புவது அப்பட்டமா தெளிவாகி தெரிஞ்சுதுங்க.

இந்திய அரசியல் முதலைகள், இந்தியாவை கெடுத்தது குட்டிச்சுவராக்கியது போல, பூரி அவிங்க உலகத்தை கெடுக்க முயற்சி செய்கிறாரோ, என்று அமெரிக்காக்காரன் பயந்து நடுங்கிப்போயிட்டதா சொல்லிக்கிறாய்ங்க.

இந்திய அரசியலில் கொள்கை கோட்பாடு எதுவும் இல்லாமல். முரண்பட்ட கொள்கை உள்ளவய்ங்கள் எல்லாம் சந்தற்பவத கூட்டணி அமைத்து ஆட்சி அதிகாரத்தை மட்டும் குறிவைத்து கூட்டணி "தர்மம்: ன்னு பெயரிட்டு சுருட்டிக்கொள்வதுபோல,

ஒருபோதும் ஒத்துப்போகாத முரண்பட்ட கொள்கைகள் கொண்ட வெவ்வேறு துருவங்களான இந்தியாவும், சீனா, பாக்கிஸ்தானும், ராஜபக்க்ஷே விடயத்தில் கூடி கூட்டணி அமைத்து படுகொலைக்குற்றவாளி ராஜபக்க்ஷவை காப்பாற்ற முயற்சிப்பது. உலக அரங்கில் இந்தியாவின் அசிங்கமான உண்மை முகம் ஐநா வளாகத்தில் பூரியின் கருத்து மூலம் தெளிவாக வெளிப்பட்டிருக்கிறது.

அந்த டீலிங்கை இத்தாலி முதலாளியை தன்னகத்தே கொண்ட இந்தியாவைத்தவிர எவரால் முடியும் என நினைக்கும்போது. சுனாமியில குளிச்சு கும்மாளமடிச்ச சுகமா இருக்குதுங்க.

அதேநேரம் ஐநா வளாக சுற்றுவட்டத்தில் வந்து கூடியிருந்த உலக நாடுகளின் மனநிலை எப்படி என்பதை இந்த தலப்பாக்கட்டிகள் அறிய முயற்சி செய்யல்லையேன்னு ஒருபக்கம் வெக்கமாயும் இருக்குதுங்க.

கீழ உள்ள செய்திகள பாத்தா உலக நிலவரம் என்னான்னு தலப்பா கட்டதவனுக்கும் சட்டுன்னு புரியும்.

ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக உலக நாடுகளின் தலைவர்கள் நியூயார்க்கில் குவிந்துள்ளனர். இவர்களில் ராஜபக்சேவும் ஒருவர். ஆனால் திருவிழாவில் காணாமல் போன குழந்தையின் நிலையில் ராஜபக்சே மற்றும் அவரது குழுவினரின் நிலை உள்ளது.

நியூயார்க்கை விட்டு வெளியே போகக்கூடாது என்று ராஜபக்க்ஷ,வுக்குத் அமெரிக்க அதிகாரிகள் தடை போட்டு விட்டனர். இதனால் பொறியில் சிக்கிய
எலி போல மாறிப் போயுள்ளார் ராஜபக்க்ஷே.

இந்த நிலையில் மேலும் ஒரு அவமானம் ராஜபக்க்ஷேவுக்குக் கிடைத்துள்ளது. அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவை சந்திக்க ராஜபக்க்ஷே பம்மிப் பம்மி நேரம் கேட்டிருக்கிறாரு . ஆனால் அதெல்லாம் நேரமில்லை வந்த வேலையை பாத்திட்டு யாராச்சும் புடிச்சு உள்ள போட மின்னாடி கிளம்பப்பாருங்க. என்று அமெரிக்க அதிகாரிகளிடமிருந்து உடனடியாக பதில் வந்து விட்டதாம். இதனால் பெருத்த அதிர்ச்சியாகி விட்டார் மண்மோகன் சிங்கத்தின் நம்பன் இராஜபக்க்ஷே.

அதேபோல மேற்கத்திய நாடுகளின் தலைவர்களும் கூட ராஜபக்க்ஷேவை சந்திக்க மறுத்து விட்டனர். அதெல்லாம் தனியாக சந்திக்க முடியாது என்று கூறி புறக்கணித்து விரட்டி விட்டனராம்.

இதனால் உயிர் நம்பனான இந்தியப் பிரதமர் மண்மோகன் சிங்கத்தையும், சீன, பாகிஸ்தான் கூட்டாளிகளையும், ஒன்லி பார்த்து பேசி திருப்தியடைய வேண்டிய நிலை ராஜபக்க்ஷேவுக்கு.

அதோட நில்லாம அமெரிக்கா வாழ் தமிழர்கள், இலங்கையின் இனப்படுகொலை குறித்தும், போர்க்குற்றம் குறித்தும் தொடர்ந்து அமெரிக்க அரசை வலியுறுத்தி வருகின்றனர். நியூயார்க் கோர்ட்டில் ராஜபக்சேவைக் கைது செய்யக் கோரி வழக்கும் தொடரப்பட்டுள்ளது.

இன்னும் சில சம்பவங்களும் ஸ்ரீலங்காவை சுத்திப்புடிச்சிருக்குங்க. ஐ.நாவுக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியான சர்வேந்திர சில்வாவுக்கு அமெரிக்க நீதிமன்றம் ஒன்று அதிரடியாக பிடியாணை பிறப்பித்துள்ளதாக நம்பகமான செய்தி ஒண்ணு வெளிவந்துள்ளது.

சற்று முன்னர் அமெரிக்காவில் இருந்து கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் அமெரிக்க சிவில் நீதிமன்றம் ஒண்ணு சர்வேந்திர சில்வாவுக்கு பிடியாணையைப் பிறப்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

உலகத் தமிழர் பேரவை(GTF) உதவியுடனே அமெரிக்க நீதிமன்றில் இந்த வழக்கு தொடரப்பட்டதாக செய்திகள் வந்துள்ளன.

தற்போது சர்வேந்திர சில்வா ஐ.நா வின் கட்டிடத்தில் பாதுகாப்பிற்காக பதுங்கவேண்டிய நிலை தோன்றியுள்ளதாகவும் அறியப்படுகிறது. ஐ.நா வின் பிரதிநிதி என்ற வகையில் அவர் ஐ.நா கட்டிடத்தினுள் பதுங்கியிருகும்வரை அவரை அமெரிக்க பொலிசார் கைதுசெய்ய வேண்டுமானால் நிறைய போர்மாலிட்டிஸ்க்கள் தேவை. இருப்பினும் அவர் அக்கட்டிடத்தை விட்டு வெளியே செல்ல முடியாத நிலை தோன்றியுள்ளது. வெளியேறினால் அபெரிக்க பொலிஸாரல் கைது செய்யப்படும் நிலை இருக்கிறது.

இதன் காரணமாக அவர் அமெரிக்காவை விட்டு நாளை அல்லது இன்றைய தினம் இரவு வெளியேற வேண்டிய சூழ் நிலை தோன்றியுள்ளது. அவர் பெரும்பாலும் ஐ.நாவின் வாகனத்தில் ஏறி அதன் பாதுகாப்புடன் அமெரிக்காவில் இருக்கும் எதாவது ஒரு விமனாநிலையமூடாக வெளியேறலாம் என எதிர்வுகூறப்படுகிறது. இதுக்கும் இந்தியா கைகுடுக்கும் என்று ராஜபக்க்ஷே தரப்பு நம்பியிருக்கிறதாவும் பேசிக்கிறாய்ங்க.

இலங்கை அரசாங்கத்தின் மேல் அடுத்த பேரிடியாக இந்த குற்றச்சாட்டு வீழ்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்க விடையமாகும்.

அமெரிக்காவில் உள்ள வோஷிங்டன் பல்கலைக்கழக சட்ட பீடமே இந்த வழக்கைத் தொடுத்ததாகவும், நீதிமன்றில் வாதாடிய மூத்த வழக்கறிஞர் இலங்கை இறுதிப்போரில் 40,000 பொதுமக்கள் கொல்லப்பட்டதாகச் சுட்டிக்காட்டியும் அப்போது 58 படைப்பிரிவுக்கு தலைமையேற்ற சர்வேந்திர சில்வா இனப்படுகொலை செய்துள்ளதாகவும் வாதாடியுள்ளார்.

(இந்த படுகொலைக்கு தமிழ்நாட்டு கண்ணாடி தாத்தா கருணா அவய்ங்க காங்கிரஸுக்கு உதவும் முகமாக உண்ணா விரத நாடகம் நடத்தி யுத்த நிறுத்தம் உண்டாகியிருக்குன்னு வஞ்சகம் செஞ்சு மக்களை பதுங்கு குழியிலிருந்து வெளியே வரவழைத்து கொண்ணு குவிக்க உடந்தையாக இருந்தார் அவிரயும் கைது செய்யணுமுன்னு பேசிக்கிறாய்ங்க.)

இதனை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி சர்வேந்திர சில்வாவைக் கைதுசெய்து நீதிமன்றில் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டுள்ளார் எனவும் அறியப்படுகிறது.

புலம்பெயர் ஈழத் தமிழர் போராட்டங்களில் இது ஒரு மைல்கல்லாக அமைந்துள்ளதோடு ஒரு வரலாறு படைக்கும் விடையமாகவும் பார்க்கப்படுகிறது.

இதோட முட்டிஞ்சிச்சுன்னு தப்பா கணக்கு போடாதீங்க இன்னுமொரு போர்க்குற்றவாளியான மேஜர் ஜெனரல் .ஜெகத் டயஸ் என்பவர்மீது மீது சுவிற்சர்லாந்தில் போர்க்குற்ற வழக்கு தொடுக்கப்பட்டுள்ளதாகவும், தமது நாட்டு எல்லைக்குள் நுழைந்தால் அவர் மீது குற்றவியல் விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்றும் சுவிற்சர்லாந்தின் சட்டமா அதிபர் அறிவித்துள்ளார்.

சிறிலங்காவில் இடம்பெற்ற போரின் போது பொதுமக்களுக்கு எதிரான மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள், மருத்துவமனைகள், மற்றும் வழிபாட்டு மையங்கள் மீதான தாக்குதல்களுக்கு உத்தரவிட்டவர் என்ற அடிப்படையில் மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் மீது போர்க்குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.(ஜெகத் கஸ்பர் ன்னு தப்பா நெனைச்சிடாதீங்க . அவிரு வேற இவிரு வேற, இவிரு சிங்களவருங்க)

தீங்குகளுக்கு எதிரான சுவிஸ் அமைப்பும், அச்சுறுத்தல்களுக்குள்ளான மக்களின் சமூகம் என்ற அமைப்பும் இணைந்து மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் மீதான போர்க்குற்ற வழக்கை சுவிற்சர்லாந்தின் சட்டமா அதிபரிடம் சமர்ப்பித்திருந்தன.
இதையடுத்தே மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் சுவிற்சர்லாந்துக்குள் நுழைந்தால் அவர் மீது போர்க்குற்ற விசாரணை நடத்தப்படும் என்று சுவிற்சர்லாந்தின் சட்டமாஅதிபர் அறிவித்துள்ளார்.

சுவிற்சர்லாந்து, வத்திக்கான், ஜேர்மனி ஆகிய நாடுகளுக்கான சிறிலங்காவின் பிரதி தூதுவராக பணியாற்றிய மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் கடந்த 18ம் திகதி கொழும்புக்கு ஓடித்தப்பிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உலக நடப்பு நீதி நாயத்தோட இப்புடி போய்க்கொண்டிருக்க இந்தியா மட்டும் முரண்பட்டு நிற்பதிலிருந்து ஈழ யுத்தத்தின் சூத்திரதாரி யார்ன்னு தெரிஞ்சிருப்பீங்க.

இது ஒரு ஆரம்பந்தாங்க. புலம்பெயர் தமிழர் இப்போ கீழ்மட்ட குத்தவாளிகள்மீது வழக்கு போட்டுட்டாய்ங்க. அவய்ங்கள புடிச்சு விசாரிச்சா ராஜபக்க்ஷே எப்புடியும் மாட்டத்தான் போறாரு. ராஜபக்க்ஷே மாட்டிட்டா அவிரு எப்புடியும் தான் தப்பிக்க இந்தியாவ காட்டிக்குடுத்துத்தான் ஆவணும். அப்பொறம் இந்தியாவின் வடக்கிலிருந்து தெற்குவரை யார் யார் கொலைக்கு ஒடந்தைங்கிறது வெளிவரத்தான் போகுதுங்க.

ஐரோப்பிய அமெரிக்க நீதிமன்றங்கள் இந்திய நீதிமன்றங்களப்போல ஆட்சியாளர்களின் சொல்லுக்கேட்டு ஆடுறதில்லீங்களே. இத்தாலி பிரதமர்
சில்விவோ பெர்லுஸ்கோனி. அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டன் ஆகியவங்களையே பொம்ம்பளைக்கேசு வழக்கில கோட்டுல ஏத்தி விசாரணை நடத்தினவய்ங்க. கொலை குத்தச்சாட்டுக்கள வுட்டுடுவாய்ங்கன்னு கனவிலயும் நம்பமுடியாதுங்க.

ராஜபக்க்ஷே ஏதோ நெனைக்க ஏதோ நடக்குதுங்க. அதான் தமிழினத்தை அழிச்சிடுலாமுன்னு கங்கணம் கட்டினாரு. ஆனா பாருங்க செத்துப்போன உறவுகள் ஒவ்வொருத்தரும். தங்களோட உடன்பிறந்த ஒவ்வொருத்தரை வெளிநாடுகளுக்கு அனுப்பி வைச்சிட்டுத்தான் செத்திருக்காங்க. வெளிநாடுகள்ள இருக்கிற உறவுக்காரங்க அவைய்ங்க சும்மா கெடப்பானுங்களா.

சாவறுதிகாலத்துக்கும் தங்களோட சொந்தங்களின் அழிவை மறக்கப் போறதில்லீங்க. அதத்தான் ஜெனீவாவுல நடந்த பொங்கு தமிழ் பேரணியில
பாத்தோமே.

இப்ப என்னன்னா ஈழத்தமிழன் ஒலகம் முழுக்க பெருகி பரவியிட்டான்கள். அவய்ங்களோட குறியே இனி, இப்போதிக்கு ரத்தம்சிந்தாம, ஆறா ஓடி ஈழமண்ணில காய்ஞ்சுபோன உறவுகளின் ரத்தத்துக்கு தகுந்த நியாயம் கிடைக்கணும். அதுவரை ஒருத்தனும் சும்மா கிடக்க மாட்டாய்ங்க. அமைதியா போராடி சட்டப்படி நியாயம் கிடைக்கும் வரை கொலைக்கூட்டத்தை கருவறுக்க சீண்டிக்கிட்டுத்தான் இருப்பாய்ங்க.

ராஜபக்க்ஷே மட்டும்தான் அவிங்களோட டார்க்கெட்ன்னு இல்லீங்க எவன் எவன் எங்கள கொடுமைப்படுத்தினானோ, அம்மா தங்கச்சிய கொன்னானோ அவனை சட்டத்தில புடிச்சுக்குடுத்து தூக்கில மாட்ட வச்சு நீதி வாங்கணும்.

ஈழமண் எங்க போயிடப்போவுது முப்பதுவருஷம் உயிரை குடுத்து போராடியிட்டு விட்டுடுவாய்ங்களா.

மீண்டும் சந்திப்போம்.
வரட்டுங்களா,

Friday, September 23, 2011

தமிழகத்தை இழந்து வருகின்றதா இந்தியா?

இந்திய நடுவண் அரசு மீதான அதிருப்தியும், நம்பிக்கையீனமும் தமிழக மக்களிடம் அதிகரித்து வருகின்றது. இந்த நிலை தொடரும் பட்சத்தில், தமிழக மக்கள் பிரிவினை கோரும் அளவிற்குத் தள்ளப்படுவார்கள் என சமூக ஆய்வாளர்கள் பலரும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

1965 ஆம் வருட காலத்து இந்தி எதிர்ப்புப் போராட்டம் தமிழகம் உட்பட்ட திராவிட மக்களைத் தனி நாடு கோரும் அளவிற்குக் கொண்டு சென்றது. அதுவரை சென்னை மாநிலமாக காங்கிரஸ் கட்சியினால் ஆட்சி செய்யப்பட்டு வந்த தமிழகத்தில் பொங்கிப் பிரவாகம் ஆகிய தமிழின உணர்வு எழுச்சி, 1967 இல் அதிசயிக்கத்தக்க ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியது. இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை முன்நின்று நடாத்திய அறிஞர் அண்ணா தலைமையிலான தி.மு.க. தமிழகத்தின் ஆட்சியைக் கைப்பற்றியதுடன், காங்கிரஸ் கட்சியின் ஆதிக்கத்தையும் தமிழகத்திலிருந்து அகற்றியது.

பேரறிஞர் அண்ணா அவர்களது ‘அடைந்தால் திராவிட நாடு, இல்லையேல் சுடுகாடு’ என்ற பிரிவினைக் கோரிக்கை காரணமாக திராவிட முன்னேற்றக் கழகம் இந்திய நடுவன் ஆட்சியாளர்களால் தடை செய்யப்படும் நிலை உருவான காரணத்தாலும், அன்றைய காலப் பகுதியில் நடைபெற்ற இந்திய – சீன எல்லைப் போர் இந்திய மக்கள் ஒன்றுபட்டு நிற்க வேண்டிய அவசியத்தை உருவாக்கியதன் காரணத்தாலும் கைவிடப்பட்டது. இந்திய நடுவண் அரசின் கொள்கைத் தளர்வாலும், தொடர்ந்து இடம்பெற்ற அயல் நாடுகளுடனான யுத்தங்கள் காரணமாகவும் தமிழகத்தில் உருவான பிரிவினைவாத நெருப்பு உறக்க நிலைக்குச் சென்றது.

அண்ணாவின் மறைவினை அடுத்து, தி.மு.க.வின் தலைமையைத் தனதாக்கிக்கொண்ட கலைஞர் கருணாநிதி, அவர்களது சுயநலமும், பண ஆசையும் தி.மு.க. பிளவு படுவதற்குக் காரணமாக அமைந்தது. தி.மு.க. விலிருந்து வெளியேற்றப்பட்ட எம்.ஜி.ஆர். அவர்கள் 1972 இல் அ.தி.மு.க. வினை உருவாக்கியதைத் தொடர்ந்து தமிழகத்தில் மீண்டும் காங்கிரஸ் துளிர்க்க ஆரம்பித்தது.

பிளவுபட்ட திராவிட இயக்கங்கள் ஒன்றை ஒன்று தோற்கடிப்பதற்கான ஆதரவு சக்தியாக காங்கிரஸ் கட்சி மாற்றம் பெற்றது. சிறிய வாக்கு வங்கி கொண்ட காங்கிரஸ் கட்சியுடன் யார் கூட்டுச் சேர்கிறார்களோ, அவர்களே வெற்றிபெறுவார்கள் என்ற நிலை தமிழகத்தில் உருவானது.

தமிழீழ மக்கள் மீதான சிங்கள அரசின் இன அழிப்பு நடவடிக்கைக்குத் துணைபோன காங்கிரஸ் ஆட்சியாளர்கள், சிங்கள அரசினால் வேட்டையாடப்பட்ட தமிழக மீனவர்களையும் தமிழர்கள் என்ற ஒரே காரணத்தால் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டது.

32 கடல் மைல் தூரத்தில் வாழும் தங்கள் உடன்பிறப்புக்களான ஈழத் தமிழர்கள் இலட்சக் கணக்கில் சிங்கள அரசால் வேட்டையாடப்பட்ட போது, தம்மால் எதுவுமே செய்ய முடியாத கையறு நிலையைத் தமிழக மக்கள் வேதனையுடனும் வெட்கத்துடனும் நினைவு கூருகிறார்கள்.

தமிழக மக்களது மௌன அலறலைத் தகர்த்து, அவர்களைப் போராட்டக் களத்துக்கு நகர்த்துவதற்காக ஈகைப் பேரொளி முத்துக்குமாரன் தன்னையே எரித்துக்கொண்டார்.

இறுதிப் போர்க் காலத்தில் எழுந்த தமிழக மக்களது எழுச்சி, அன்றைய தமிழக முதல்வரால் சகுனித்தனமாக முடக்கப்பட்டது.

எரியும் நெருப்பாகக் கனன்றுகொண்டிருந்த தமிழக மக்கள், தங்களது கோபத்தை அடுத்து வந்த சட்டமன்றத் தேர்தலில் காண்பித்தார்கள். அந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தமிழகத்திலிருந்து துடைத்தெறியப்பட்டது. காங்கிரஸ் நடாத்திய தமிழின அழிப்பு வேள்விக்குத் துணை நின்ற கருணாநிதி தலைமையிலான தி.மு.க. எதிர்க் கட்சியாகக் கூட வர முடியாமல் தடுக்கப்பட்டது.

மீண்டும் காங்கிரஸ் ஆட்சியாளர்கள் தமிழகத்தில் மேற்கொள்ள முயன்ற இன்னொரு தமிழின அழிப்பு முயற்சி தமிழகத்தில் பூகம்பத்தை உருவாக்கியுள்ளது. ராஜீவ் கொலைக் குற்றச்சாட்டில் 20 வருடங்களாக நீதியை எதிர்பார்த்துக் காத்திருந்த சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகிய மூவருக்கும் காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியினால் தூக்குத் தண்டனை உறுதி செய்யப்பட்டு, இந்திய ஜனாதிபதி பிரதிபா பட்டேலினால் அங்கீகரிக்கப்பட்ட கொடூரம் தமிழக மக்களை மீண்டும் ஒரு போராட்டத்தினுள் தள்ளியுள்ளது.

இந்தப் போர்க் களத்தின் உச்ச ஈகமாக, செங்கொடி என்ற ஒரு பெண் தமிழுணர்வாளர் தன்னை எரிதழலாக்கித் தமிழக மக்கள் மனங்களில் புயலைக் கிழப்பியுள்ளார்.

தமிழகம் எங்கும் மூவரது தூக்குத் தண்டனைக்கும் எதிரான போராட்டங்கள் தொடர்கின்றன. தமிழக சட்ட மன்றத்தில் மூவரது தூக்குத் தண்டனையையும் ஆயுள் தண்டனையாகக் குறைக்குமாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனாலும், இந்திய காங்கிரஸ் ஆட்சியாளர்கள் மனதில் எந்த மாற்றமும் உருவானதாகத் தெரியவில்லை.

இதை விடவும் கொடூரமாக இந்த மூவரது தூக்குத் தண்டனையையும் உடனடியாக நிறைவேற்றும்படி தமிழக காங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிரதம் இருந்தது தமிழக மக்கள் மனதில் ஆத்திரத்தை அதிகரிக்க வைத்துள்ளது.

தங்களது மன உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுக்காத காங்கிரஸ் கட்சியினை தமிழகத்திலிருந்து முற்றாகத் துடைத்தெறிய வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளதாகவே தமிழக மக்கள் உணர்கின்றார்கள்.

இனி வரும் காலங்களில் தமிழக மக்களின் தீண்டத் தகாத கட்சியாக காங்கிரஸ் ஒதுக்கப்படும் நிலை உருவாகிவருகின்றது. அத்துடன், எதிர்காலத்தில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டுச் சேரும் எந்தக் கட்சியும் தமிழகத்தில் ஆட்சிக்கு வர முடியாது என்ற செய்தியையும் தமிழக மக்கள் கடந்த தேர்தலின் மூலம் உணர்த்தியுள்ளதால், எதிர் காலத்தில் திராவிடக் கட்சிகள் ஒன்றில் சவாரி செய்யும் வாய்ப்பையும் காங்கிரஸ் கட்சி தவறவிட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் தமிழின விரோதச் செயற்பாடுகள் இவ்வாறே தொடரும் பட்சத்தில், இந்தியா தமிழகத்தை இழக்கும் ஆபத்து உருவாகும் என்பதில் சந்தேகமே இல்லை.

- அகத்தியன்

நன்றி,eu tamil.

Tuesday, September 20, 2011

கூத்தாடி குசும்பன்< அங் 11,


கடந்த பல ஆண்டுகளாக சுதந்திர இந்திய நாட்டின் சட்டம், ஒழுங்கு, நேர்மை, எங்கிற பண்புகள், போற்றி புகழ்ந்து புல்லரிக்கும்வண்ணம் உலக அரங்கில வீறு நடை போட்டுக்கொண்டு இருந்தாலும்,

அவற்றை கண்டுக்காம (அறியாமல்) பலகோடி கடைநிலை மக்கள் தமது கிராம மட்டத்தில், பஞ்சாயத்து/ மற்றும் கிராமத்தலைவர், விதித்த கோட்டுக்குள் கட்டுப்பட்டு வாழ்வாங்கு வாழ்ந்து (?)அனுபவித்து வருகின்றனர்.

ஒவ்வொரு தனிமனிதனுக்கும் தன்னையும் மீறி, தனக்கு தனக்கு என்று பிரச்சினை தலை தூக்கி வரும்போதுதானே அந்தப்பிரச்சினையின் தாக்கம்
அவனால் உணரப்படுவதுண்டு.

அந்தவகையில் இரண்டு சம்பவங்கள் அண்மையில் இந்திய மத்திய அரசான காங்கிரஸின் கட்டுப்பாட்டுக்குள்ளிருந்து புறப்பட்டு, நாட்டையும் மக்களையும் புல்லரிக்க வைத்து உலகின் பார்வையில் இந்திய அரசின் புகழ் உச்சிக்கு கொண்டுபோயிருக்கிறது.

அதன்பின் தான் அதிகப்படியான மக்களால் அவை உணரப்பட்டுள்ளது.

இரண்டு சம்பவங்களும் மிக முக்கியத்துவம் வாய்ந்தவைகளாக இருப்பதால், அந்த இரண்டு சம்பவங்களும் ஒவ்வொரு இந்தியக்குடிமகனையும். லிபியாவின் அதிபர் "கேர்ணல் கடாபியின்", சர்வாதிகார ஆட்சி அதிகாரத்தின் கீழ் குடியிருந்து வாழ்வது போன்ற உணர்வை உண்டாக்கி திகைக்கவைத்திருக்கிறது.

அதில் ஒன்று நாட்டின் பொருளாதாரத்தை குழிதோண்டி புதைத்த 2G ஸ்பெக்ரம் அலைக்கற்றை சம்பந்தப்பட்டது.

இன்னொன்று தமிழ் நாட்டின் மண்ணின் மைந்தன் ஒருவரை பட்டப்பகலில் தெருவில் வைத்து துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கு சம்பந்தப்பட்ட விடயம்களாகும்.

சாதாரணமாக இந்தியாவைப் பொறுத்தவரையில், அந் நாட்டில் உள்ள மானிலங்களில், அம் மானிலத்து அரசு முதலாளிகளும், மத்தியில், மத்திய அரசாங்கத்தை நடத்தும் அரசியல் முதலாளிகளும், தமக்கு சாதகமாக சட்டங்களை வளைத்து, அரசியல்த் தொழில் நடத்தி மன்னர்கள்போல் வாழ்வதுதான் வாடிக்கை.

இவை எழுதப்படாத சட்டமூலமாக, பாரம்பரியமாக பல வருடங்களாக இந்திய அரசியல்வாதிகளால் கட்டி காப்பாற்றப்பட்டு வருகின்றன.

இவைகள் படிப்பாளிகள் மட்டும் புரிந்துகொள்ளக்கூடிய விடயம் என்பதால். நாட்டில் படிப்பறிவு இல்லாத ஏழைகள் ஆக்கப்பட்ட பலகோடி கீழ்மட்ட மக்கள். இவற்றை புரிந்துகொள்ள முடியாமல், மந்தைக்கூட்டமாக அரசியல் கடவுள்களுக்கு காவடி எடுத்து துதிபாடி வழிமொழிந்து வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருக்கின்றனர்.

இந்த நடைமுறை அரசியல் முதலாளிகளுக்கு மிகுந்த அனுசரணையாகி துணைபுரிகிறது, அதனால் நாட்டை அதேநிலையில் இருந்து மேலெழுந்துவிட இந்த முதலாளிகள் ஒருபோதும் விரும்புவதில்லை.

மீறி எவராவது இடக்கு முடக்காக பொது நோக்கோடு ஆட்சியாளர்களை ஜனநாயக ரீதியாக ஏதாவது கேள்வி கேட்டுவிட்டால். அவர்களை அடக்க குண்டர் தடுப்பு சட்டம், அல்லது தேசியபாதுகாப்புச் சட்டம் போன்றவற்றை இயற்றி மக்கள்மீது அடக்குமுறையை பாய்ச்சி தூக்கி சிறையில் போட்டு, அமைதிகாத்து சட்டம் ஒழுங்கு பாதுகாப்பை உறுதிப்படுத்தும் மரபும் நடந்து வருகிறது.

அவற்றையும் மீறி சில பொது அமைப்புக்கள் ஒன்று சேர்ந்து ஆர்ப்பாட்ட முனைந்தால்.

முன்னிலை வகித்துச் செயற்படுபவர் கல்வி அறிவு இல்லாத கைநாட்டாக இருந்தாலும். ஆளும் முதலாளி வர்க்கத்தினர். கிளர்ச்சியில் முன்னிலை வகிப்பவரை தம்வசப்படுத்தி மந்திரிப்பதவி, செயலாளர் போன்ற பதவிகளை, அவர்களுக்கு கொடுத்து சரிக்கட்டி முடிவுக்கு கொண்டுவரும் அருமையான தந்திர அரசியல்ப் போக்கும் பெருந்தன்மையோடு உண்டு,

அதற்கும் கட்டுப்படுத்த முடியமல் பிரச்சினை மக்கள் மயப்பட்டுவிட்டால். காலதாமதம் இல்லாமல் விசாரணை கமிஷன் அமைத்து முடிவுகாணும்
ஆயுதபலமும் இருக்கிறது.

அரச முதலாளிகள் இதயசுத்தியோடு?? பாகுபாடில்லாமல் ஓய்வுபெற்ற ஒரு மூத்த கண்தெரியாத, காது கேட்காத, ஒரு நீதிபதியை நியமித்து "விசாரணை ஆணைக்குழு"!.! அமைத்து அப்பழுக்கற்ற நீதி விசாரணைக்கு உத்தரவிட்டு மனுநீதி காப்பாற்றப்பட்டு வருவதும் மரபாக பேணப்பட்டு வருகிறது.

காழ்ப்புணர்ச்சி காரணமாக எங்காவது ஒரு மானிலத்தில் ஆளும் அரசு எதிர்க்கட்சிக்காரர்களை பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டால். எதிரணியினருக்கு மத்தியில் ஆளும் அரசிடம் செல்வாக்கிருக்குமானால், அந்த மானிலத்தின் பொலீஸில் அல்லது நீதிமன்றத்தில் முறையிடாமல். நேரடியாக ஜனாதிபதி எனப்படும் குடியரசுத்தலைவருக்கு முறையிட்டு தீர்வுகாணும் அபூர்வமான சு'தந்திர முறையும் உண்டு.

இருந்தும் இன்றைய காலகட்டம் இந்திய அரசியலில் நிலைவரம் சற்று வித்தியாசப்படுவதாகவே காணப்படுவதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்,

மக்கள் சற்று விழிப்படந்துவிட்டதாகவே இன்றய நிலை கணிப்பிடக்கூடியதாக உள்ளது.

இவைகளில் முன்னணியில் தமிழ்நாட்டு மக்கள் இருப்பதாக தரவுகள் தெரியப்படுத்துகின்றன,

இதனால் இந்தியாவில் நிலவிவந்த அந்த பழம்பெருமை வாய்ந்த பாரம்பரியமான அரசியல் கலாச்சாரம் திக்குமுக்காடி, மக்கள் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டிய நெருக்கடியில் இன்று ஆட்சியாளர்களை தள்ளியிருக்கிறது.

அந்தவகையில் சமீபத்தில் மத்தியில் ஆளும் காங்கிரஸ் ஆட்சியாளர்கள், தமது தில்லாலங்கடி திருகுதாளங்களை மூடிமறைப்பதற்கு, மேற்கொள்ளப்பட்ட தன்னிச்சையான எழுதப்படாத புதிய சட்டமூலங்களை, நீதிமன்ற விவகாரங்களிலும், சிபிஐ என்கிற இந்தியாவின் உயர்ந்த புலனாய்வு அமைப்புக்குள்ளும் புகுத்தி பரிசோதித்தபோது. மக்கள்மத்தியில் ஒவ்வாமை நிலைகண்டு செய்வதறியாமல் தடுமாறிக்கொண்டிருக்கின்றனர். என்று செய்திகள் தாறுமாறாக கைகொட்டிச் சிரிக்கின்றன.

அவையாவன:>.>

1).......
2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பான வழக்கில் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தை விசாரிக்க யாரும் எங்களை பணிக்க முடியாது என்று கோர்ட்டில் சி.பி.ஐ.,புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.

ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் மத்திய அமைச்சர் பதவியை இழந்த ராஜா மற்றும் கனிமொழி உள்பட 17 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

முறைகேடு நடந்த காலகட்டத்தில் மத்திய நிதி அமைச்சராக இருந்த ப. சிதம்பரத்தை சி.பி.ஐ, விசாரிக்க உத்தரவிட வேண்டும் என ஜனதா கட்சி
தலைவர் சு.சாமி சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு விசாரணையின்போது ஒரு தனி நபரை விசாரியுங்கள் என்று ஒரு
நபர் சொல்ல முடியாது. இது நாங்களே எடுக்க வேண்டிய முடிவு என சி.பி.ஐ., அமைப்பு வக்கீல் மூலம் நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறது.

மேலும் , 2008 ஸ்பெக்ரம் வழக்கு தொடர்பான விசாரணை முடிவடைந்து விட்டது. இந்த விஷயத்தில் தொடர்ந்து விசாரணை செய்துவரும் சிபிஐ கோர்ட்தான் விரும்பினால் மேற்கொண்டு ஏதாவது செய்யவேண்டுமா என்பதை முடிவு செய்ய முடியும். சுப்ரீம் கோர்ட் அல்ல என்றும் சிபிஐ யின் வக்கீல் கூறியிருக்கிறார்.

#கூகு> ஸ்பெக்ரம் வழக்கில் முதலில் கைதுசெய்யப்பட்டவர்களில் மத்திய தொலைத்தொடர்பு மந்திரி ஆராசா அவங்களும் அடக்கம். அவரை கைது செய்யக்காரணமா இருந்தது. அரசியல் கட்சிகளும், அரசின் கணக்கு சம்பந்தமான உள் உப பிரிவுகளும். பத்திரிகை ஊடகங்களும்தானுங்க.

அப்பொறமா தாமதாமா பத்திரிகை ஊடகங்களின் நச்சரிப்பு தாங்காம மானிலங்கள் அவையின் எம் பி கனிமொழி அவங்களும் குத்தவாளின்னு கைது
செய்யப்பட்டாய்ங்க. அவங்க இரண்டுபேரும் காங்கிரஸ் கட்சிக்காரய்ங்க இல்லை என்பதும் ஒரு காரணம்.

அதுக்கப்போறம் ஆ ராசா தனது சாட்சியத்தில அட்சர சுத்தமா சொல்லியிருக்காருங்க, ஸ்பெக்ரம் ஊழல்ல தாத்தா கருணா மட்டுமல்ல, தலப்பா
தாத்தா மண்மோஹன் சிங்கமும், சோடாப்புட்டி கண்ணாடிக்காரர் பசி, அவங்களும் சேந்துதான் கொள்ளை அடிச்சிருக்கோம், ன்னு விலாவாரியா
ஸ்ரேற்மன்ற் தகவல் குடுத்திருக்காரு. (பேப்பரில படிச்சிருப்பீங்க).

அதுமட்டுமில்லாம கண்ணாடி தாத்தாவோட பேரப்பய தயாநிதியும் மூல முக்கிய
பங்குன்னு பாயிண்ட் பை பாயிண்டா சொல்லியிருக்காரு.

ஆனா பாருங்க, அரசியல் மொதலாளி ங்க திடுக்கிட்டு திகைச்சுப்போயிட்டாய்ங்க.

அதெப்படி ஆட்சி நடத்திற மொதலாளிங்க மேல குத்தஞ்சாட்ட முடியுமுன்னும் அடம்புடிக்கிறாய்ங்க. அப்படித்தான் இருந்தாலும் அதெல்லாம் தப்பு கெடையாது. நாங்கதான் நாட்டை ஆட்சி செய்யிறவங்க எங்கமேல எப்புடி குத்தஞ்சுமத்துறது ங்கிறாய்ங்க.

அப்புடின்னா இது லிபிய அதிபர் கேர்ணல் கடாபி அவங்களோட ஆட்சிய ஒத்தது ங்கிறது தப்புங்களா. சரிதானுங்களே, இவனுகளுக்கு ஸ்ரீலங்கா அதிபர் ராஜபக்க்ஷ பரவாயில்லை ன்னே தோணுது.

இப்ப பசி,, அவைங்க மேல புகார் குடுத்தவரு. சு சுனா ங்கிற,, சு சுவாமி, அவிங்களும் ஒரு கச்சியை வச்சி நடத்துற தலிவர் தானுங்களே.

அவிர ஒரு கச்சித்தலிவரா மதிச்சு, மத்திய ஆட்சி மொதலாளிங்க சு சுனாவுக்கு இருவதுக்கு மேற்பட்ட கறுப்பு பூனைப்படை காவக்காரங்களையும் மக்களோட வரிப்பணத்தில நியமிச்சு வைச்சிருக்காய்ங்க. அப்புடின்னா சு சு முக்கியமான ஆளுதானுங்களே. தனிமனுஷன் ன்னு அவிர எப்படிங்க சொல்லமுடியும் கொளப்பமா இல்லீங்களா.


அதோட சிபிஐ காரைய்ங்க சொல்லுறாங்க இது நாங்க மட்டும்தான் யார் குத்தவாளின்னு முடிவெடுக்க முடியும். வேற எவனும் தலையிடக்கூடாதுன்னு அடம்புடிக்கிறாய்ங்க. அப்பிடின்னா ராசா, கனிமொழி, கல்மாடி, காவடி அல்லாத்தையும் அவுத்து வெரட்டியிட்டு, இவனுக தனியா நின்னு குட்டிச் சுவத்தோட விசாரணை நடத்தப்போறாய்ங்களா?

விசாரணை முடிஞ்சு போச்சு எங்கிறாய்ங்க. அதோட சிபிஐயோட கோர்ட்டு தவிர சுப்றீம் கோர்ட் எதுவும் பேசக்கூடாதுங்கிறாய்ங்க. இவனுக குத்தவாளியை புடிக்க விசாரிக்கிறாய்ங்களா இல்ல யாரையோ காப்பாத்த போராடுறாய்ங்களான்னு புரியல்லீங்க.

இந்த வழக்கே, யாரையோ செமத்தியா காப்பாத்துறத்துக்கு திட்டமிட்டு தொடங்கப்பட்டதாத்தான் தெரியுதுங்க.

இவய்ங்க விதண்டாவாதம் பண்றாப்பல இல்லீங்களா. இதே அரசியல் களவாணிங்க எத்தினிபேரு கொலை பண்ணிப்புட்டு மாத்தி மாத்தி அப்பீல்
பண்ணி அபசுரம் வாசிச்சு சுப்பிறீம் கோர்ட்டுக்கே சுப்ரபாதம் படிக்கல்லீங்களா.

அதோட பாருங்க, இதே தலப்பாக்கட்டி தாத்தா சொல்லுறாரு. ஸ்பெக்ரம் விசாரணை சுப்றீம் கோர்டின் கண்காணிப்பில்தான் நடக்குதுன்னு எத்தினிவாட்டி பேட்டி குடுத்திருக்காரு.

சுப்ரீம் கோர்ட்டோட கண்காணிப்பில் விசாரணை நடந்திச்சுன்னா இந்தியாவில் உள்ள எந்த ஒரு குடிமகனும் பொதுநலனோட சுப்றீம் கோர்ட்டை அணுகலாம்ன்னு விதி இருக்குங்களே.

அரசியல்ல இல்லாதவன் அல்லாமே பயித்தியம் ன்னு இவிரு நினைக்கிறாரா. ஸ்பெக்ரம் கேசு திசைமாறி தனக்கு சுடப்போவுது ன்னு தெரிஞ்சப்புறம் சிபிஐ யயும் ஊதுகுழலாக்கிட்டாய்ங்களா.

தகவல் அறியும் உரிமையையும் சட்டம் போட்டு தடுத்திட்டானுக இப்பிடியே போனா இந்தியா விளங்குங்களா?

ஊடகங்கள் எல்லாம் தினம் தினம் பசி, அவிய்ங்களையும் பிரதமரு தாத்தா அவிங்களையும் ,விசாரிச்சாகணுமுன்னும் அதுக்கான காரணங்களையும் விலாவாரியா தொடர்ச்சியா சுட்டிக் காட்டிக்கிட்டெ இருக்குதுங்க,


2ஜி விவகாரம்: ப.சிதம்பரத்தையும் விசாரிக்க சிபிஐயிடம் பாஜக நேரில் வலியுறுத்தல்
ஆனா பசி, ஐயா அவய்ங்கள கோர்ட்டில நிறுத்தி வெசாரிச்சா, அடைபட்டுக் கழி தின்னுக்கிட்டு கடுப்பில கெடக்கிற பலி ஆடு, ஆ.ராசா, கனிமொழி அவங்க சேர்ந்தாப்பல நேரடியா இவைய்ங்கள ஆதாரபூர்வமா போட்டுக் குடுத்துடுவாய்ங்க.

அடுத்ததா கட்டமா ஆட்டமட்டிக்கா பிரதமர் தாத்தாவும் விசாரணை வளையத்துக்குள்ள வந்திடுவார் எங்கிறது அல்லாரும் புரிஞ்சிட்டாய்ங்க.

இப்புடியே யாராச்சும் தொடர்ந்து இவனுகள நெருக்கடி குடுத்தீங்க ன்னு வைச்சுக்கங்க, பேசாம ஒரு ஓய்வு பெற்ற ஊமை, அதாங்க வாய் பேசமுடியாத நீதிமானை நெயமிச்சு காலவரம்பற்ற விசாரணைக்கமிஷன் அமைச்சிட்டு. போய்க்கிட்டே இருப்பானுவ.

இனி சிபிஐ மட்டுமில்லீங்க எவன் விசாரணை நடத்தினாலும் இவனுகளை தண்டிக்க முடியாதுங்க. தேர்தல் ஒண்ணு மட்டும்தான் இவனுகளை தண்டிக்க முடியும் ன்னு தோணுது.



2)...........

அடுத்து,,

சென்னையில் ஏழை அப்பாவி வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்படும் கொலைக் குற்றவாளியான இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்ய முடியாது என்று உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.!!(சிரிங்க)

இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கடந்த ஆண்டு அரசு முறை


பயணமாக அந்த நாட்டு அதிபர் ராஜபக்சேவுடன் இந்தியாவுக்கு வந்தார். அப்போது அவரை உடனடியாக கைது செய்ய உத்தரவிடக்கோரி சிறை கைதிகள் உரிமைகள்அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் புகழேந்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்தார்.


அதில், சென்னை சூளைமேட்டில் திருநாவுக்கரசு என்ற வாலிபர் 1986ல் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தக் கொலை வழக்கில் டக்ளஸ் தேவானந்தா மீது குற்றம் சாட்டப்பட்டது. இதில் கைதான டக்ளஸ் தேவானந்தா ஜாமீனில் வெளியே வந்தார். பின்னர் இலங்கைக்கு தப்பிச் சென்றார். இவர் மீதான வழக்கு சென்னை 6வது கூடுதல் செசன்சு கோர்ட்டில் நிலுவையில் இருந்து வருகிறது.

இந்த வழக்கில் 1994ல் டக்ளசுக்கு எதிராக தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆகவே அவரை உடனடியாக கைது செய்யுமாறு சென்னை போலீசுக்கு உத்தரவிட வேண்டும் என்று புகழேந்தி கூறியிருந்தார்.

இந்த மனுவுக்கு மத்திய அரசின் சார்பில் இலங்கைக்கான வெளியுறவுத்துறை துறை சார்பு செயலாளர் கே.எம்.பி.சர்மா பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில், கைதிகள் பரிமாற்றம் தொடர்பாக இலங்கையுடன் இந்தியா எந்த உடன்படிக்கையும் செய்து கொள்ளவில்லை. இருப்பினும் கைதிகள் பரிமாற்றம் சட்டத்தின்கீழ் இரு நாடுகளுக்கு இடையே 1978ல் கைதிகள் பரிமாற்றம் தொடர்பாக ஒரு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

டக்ளஸ் தேவானந்தா அந்நாட்டு அமைச்சராக உள்ளார். இந்தியாவுக்கு வருகை தந்தபோது அவரை கைது செய்ய முடியாது. அவரை கைது செய்வது என்பது இரு நாடுகளுக்கிடையேயான உறவுக்கு எதிரானதாகும். ஆகவே இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

#கூகு>....
இந்தச்செய்தியிலிருந்து இந்திய மத்திய அரசாங்கம் என்ன சொல்ல விழைகிறது என்பது யாருக்காவது புரியுதுங்களா?

டக்கிளஸ் தேவானந்தா என்பவர் கொலைகாரன் என்று பொலிசாரால் குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டிருக்கிறார் அதன்பின் ஜாமீனில் வெளியே வந்து நீதிமன்றச்சட்டத்தையும் இந்திய நாட்டையும் ஏமாற்றிவிட்டு தப்பி ஓடியிருக்கிறார்.

ஒரு நாட்டையும் நீதித்துறையையும் அவமதித்துவிட்டு எந்த குற்ற உணர்வுமில்லாமல் பயமும் இல்லாமல் திரும்பவும் நாட்டுக்குள் நுழைந்திருக்கிறார்.

1994 டக்கிளஸுக்கு எதிராக நீதிமன்றத்தால் பிடியாணையும் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. என்று கூறப்படுகிறது!

டக்கிளஸ் எங்கிறவரு அரசியல் கச்சி நடத்துறார் என்பதால் கைது செய்யக்கூடாதுன்னு இந்திய உள்த்துறை சொல்லுதுங்க. இதெப்புடி இருக்குதுங்க. எவனாச்சும் படிச்சவன் உள்த்துறையில இருந்தா இப்படி நடக்குங்களா?.

சரி எல்லாம் போகட்டுமுங்க கைது செய்யாவிட்டாலும் கோர்ட்டில் ஆஜாராகி விளக்கத்துக்கு ஒத்துழைக்கும்படியாவது இவய்ங்க கேட்டிருக்கலாம்
இல்லீங்களா.

ஜனநாயகம் ன்னு சொல்லுறாய்ங்களே டக்கிளஸின் நாட்டு தலிவரு


ராஜபக்க்ஷவும் மூச்சுக்கு முன்னூறு வாட்டி ஜனநாயகம் ன்னு கூவிக்கிட்டிருக்காரு. அவிருகிட்டயாச்சும் கட்டளை குடுத்து கொலைகாரனை விசாரணைக்குட்டடுத்த முயற்சி பண்ணினாய்ங்களா. இப்புடியே போனா இந்தியாவ யாராச்சும் மதிப்பனுகளாங்க.

ஏழை பாழைன்னா எவன் வேணா தெரு நாயை சுட்டதுபோல சுட்டுக் கொண்ணுபுட்டு அரசியல்ல சேர்ந்து மந்திரி ஆகிட்டா வுட்டுவாய்ங்களா. குத்தம் இல்லைன்னு ஆயிடுமாங்க இதென்னங்க யாருக்காச்சும் புரியுதுங்காளா?.

சரி ஒரு பேச்சுக்கு கேக்கிறாப்பல, டக்கிளஸ் மந்திரியா இருக்கிறதால அவிரு வந்து வடஇந்தியாவில ஆட்சியில உள்ள பெரிய அரசியல் தலிவரை போட்டுத்தள்ளிட்டார்ன்னு வைச்சுப்போம். வுட்டுடுவீங்களா. இப்படி ஒரு சட்டம் ஒலகத்தில இந்தியாவ விட வேறெங்காச்சும் இருக்கான்னு விசாரிச்சீங்களா. மக்கள் ஒங்கமேல நம்பிக்கை வய்ப்பானுங்களா.

மந்திரியா இருந்தா எவனை வேணா கொலை செய்யலாம் ங்கிறதுதான் இந்தியாவோட கொள்கைங்களா? சட்டங்களா? புல்லரிக்குதுங்க,

கைதிகள் பரிமாற்றம் தொடர்பாக இலங்கையுடன் இந்தியா எந்த உடன்படிக்கையும் செய்து கொள்ளவில்லை. ங்கிறாய்ங்க ராஜீவ் கொலை சம்பந்தமா குற்றவாளிகள்ன்னு தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களையும். விடுதலைப்புலிகள் இயக்கத்தோட புலனாய்வு பிரிவு தலைவர் பொட்டு அம்மான் அவங்களையும் கைது செய்து இந்தியாவுக்கு அனுப்புமாறு கேட்டுக்கொண்டதும் இந்திய அரசுதானுங்களே.

அது எப்படி சாத்தியம்ங்க. சிக்கலா இல்லீங்களா. இந்தநேரம் எனக்கு என்னவோ மறைந்த நகைச்சுவை நடிகர் சந்திரபாபு அவங்களோட "ஒண்ணுமே புரியல்ல ஒலகத்திலே என்னமோ நடக்குது மர்மமாயிருக்குது" என்கிற பாடல்தான் நினைவுக்கு வருதுங்க.

மீண்டும் சந்திப்போம்.
வரட்டுங்களா.

Sunday, September 18, 2011

வரலாற்றில் தமிழரின் பெயரால் மற்றுமொரு கரும்புள்ளி.........

யுத்தம் முடிந்து இரண்டு வருடத்திற்கு மேல் ஆகியும் இலங்கை பொறுப்புக்கூறும் கடப்பாட்டிலிருந்து விலகியிருப்பது குறித்து உடனடியாக தலையிடுமாறு சர்வதேச மன்னிப்புச் சபை ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

யுத்தத்தின் போதும், அதன் பின்னரும் மனித உரிமைகளை இழந்துள்ள மக்களுக்கு நீதியை நிலைநாட்ட தற்போதைய இலங்கை அரசாங்கம் தவறியுள்ளதாகவும்,மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஆராய்வதற்கு இலங்கை அரசாங்கம் நியமித்த குழுக்களின் சுயாதீனத் தன்மையை உறுதிப்படுத்த அரசாங்கம் தவறியிருப்பதாகவும், மன்னிப்புச் சபை கண்டிப்புடன் கூறியுள்ளது.

யுத்தம் நடைபெற்ற காலம் தொடர்பாக, உரிய விசாரணைகள் நடத்தப்பட்டால் மாத்திரமே உண்மையான நிலையை அறிந்துகொள்ள முடியும் எனவும், அதன்மூலம் அநீதி இழைக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்பட்டு நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த முடியும் எனவும் சர்வதேச மன்னிப்புச் சபை சுட்டிக்காட்டியுள்ளது.

சர்வதேச மன்னிப்புச்சபை ஐக்கிய நாடுகள் மனிதஉரிமை ஆணைக்குழுவிடம், ஐநா மனிதஉரிமை ஆணைக்குழு, ஐநா சபை பிரதானிகளிடமும், ஐநாசபைபிரதானிகள், சம்பந்தப்பட்டவர்களிடமும், விளக்கம் கேட்டு ஒரு பொறிமுறையை உருவாக்க முற்படும் இந்தவேளையில் பக்கபலமாக பிரித்தானியா, அமெரிக்கா, போன்ற நாடுகள் தமது வல்லமையின் அடிப்படையில் சில அறிவுறுத்தல்களையும் ஸ்ரீலங்கா அரசுக்கு விடுத்திருக்கின்றன.

இச்சந்தற்பம் போர்க்குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக்கொடுக்க சிறந்த சந்தற்பமாகவே மனிதாபிமானத்தை வேண்டி நிற்கும் அகில உலகம் பார்க்கிறது.

அவற்றில் அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பிரதி இராஜாங்கச் செயலாளர் ரொபேட் பிளேக் தெரிவித்த கருத்து தமிழினத்துக்கு நியாயம் கிடைக்க வழி வகுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக எடுத்துக்கொள்ள முடியும்.

மனித உரிமை மீறல்களுடன் தொடர்புடைய இலங்கை அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டுமெனவும் துணை ஆயுதக் குழுக்களின் ஆயுதங்கள் களையப்படுவதுடன் கிறீஸ் பூதம் போன்ற மர்ம மனிதர்கள் தொடர்பான சம்பவங்களுக்கு முடிவு காணப்பட வேண்டும். வடக்கில் தமிழ் பொலிசார் கடமையில் ஈடுபடுத்தப்பட வேண்டும். எனவும் பிளேக் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கைக்கான பயணத்தை மேற்கொண்டுள்ள பிளேக், தனது பயணம் குறித்து கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.

வடக்கில் தமிழ் பொலிசார் கடமையில் ஈடுபடுத்தப்படுவதால் சிவில் நடவடிக்கைகளில் இராணுவத்தைப் பயன்படுத்தும் தேவை இருக்காது. என்ற யதார்த்தத்தையும் தெரிவித்துள்ள பிளேக், ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கையில் எழுப்பப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவானது கவனம் செலுத்தும் என தாம் நம்புவதாகவும்,சமாதானம், ஜனநாயகம் மற்றும் சுபீட்சத்துடன் கூடிய நாட்டை உறுதி செய்து கொள்வதற்கும் யுத்தத்தினால் ஏற்பட்ட காயங்களை (இழப்பு மற்றும் வேதனை) குணப்படுத்துவதற்கும் இன்னும் பெருமளவு பணிகள் மேற்கொள்ளபட்ட வேண்டியுள்ளதாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை பயணத்தின் பின்னர் அமெரிக்கா திரும்பும் போது, இந்தியா சென்றுள்ள பிளேக் அவர்கள். புதுடில்லியில் ஊடகவியலாளர்களைச் சந்தித்த போது சில முக்கியமான விடயங்களை உடகவியலாளர்கள் முன் தெரிவித்திருந்தார்.

இலங்கையில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண பணிகளை துரிதப்படுத்த இந்திய மத்திய அரசு இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும்.

இலங்கையில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் மனித உரிமை மீறல்களுடன் தொடர்புடைய குற்றவாளிகள் "யாராக இருப்பினும்" அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும என்றும். தழிழர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு இலங்கை அரசாங்கம் முன்வரவேண்டும் எனவும், அதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் இது "அமெரிக்காவின் கருத்தெனவும்" அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதிகாரப் பகிர்வு வழங்கினால் மட்டுமே தமிழ் மக்கள் இலங்கை அரசாங்கத்தை நம்புவார்கள. தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் நிவாரண பணிகளை உடனடியாக தொடருமாறு இலங்கை அரசுக்கும் இந்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும். தொடர்ந்தும் ரொபேட் பிளேக் வலியுறுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக்கருத்தை பிளேக் அவர்கள் இந்திய தலைநகர் புதுடில்லியில் வைத்து ஊடகங்கள் முன் தெரிவித்திருப்பது. நேரடியாக இந்தியாவிற்கு அமெரிக்கா கொடுக்கும் நாகரீகமான அழுத்தத்திற்கான அறிவுறுத்தலாகவே இருக்கும் என்று நம்பலாம்.

அமெரிக்காவின் இவ் அறிவுறுத்தல் அழுத்தமாக மாறுவதற்கு முன், இந்தியா தமிழர் நலன்சார்ந்து ஏதாவது செய்யாவிட்டாலும் ஏதாவது இழுத்தடிப்பு ஒன்றிற்கு காய் நகர்த்தக்கூடும் என்று எதிர்பார்த்த நேரத்தில் தமிழர் தேசியக்கூட்டமைப்பு ராஜபக்க்ஷ தரப்புடன் பேச்சுவார்த்தைக்கு தயாராகிவிட்டதாக செய்திகள் வந்தன.

பொறுத்த நெருக்கடியில் இருந்து இலங்கையை தப்பிக்க வைப்பதற்கான தந்திர நகர்வாக இந்தியாவின் கால்களை சுற்றிவரும் தேசியக் கூட்டமைப்பினரை இந்தியா ஏவிவிட்டிருக்கலாம்.

இருந்தும் கூட்டமைப்பினரின் சொந்தப்புத்தி எங்கு போய்விட்டது என்கிற அதிர்ச்சியில் தமிழர்கள் இருக்கின்றனர்.

சிங்கள அரசுடன் பத்து சுற்று பேச்சுவார்த்தை நடத்தி எந்த ஒரு சமரசத்திற்கும் வரமுடியவில்லை எனவே அரசாங்கம் தமது தரப்பின் நிலைப்பாட்டை எழுத்துமூலம் முன்வைத்தால் அடுத்து பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ள முடியும் என்று கோரிக்கை வத்து வெளியேறிய கூட்டமைப்பு,ஜெனீவாவில் மனித உரிமை ஆணைக்குழுவின் கூட்டத்தொடர் நடைபெறும் இந்த முக்கிய தருணத்தில். திடீரென பேச்சுவார்த்தைக்கு சம்மதம் தெரிவித்திருப்பது தமிழர்கள் மத்தியில் மிகுந்த சந்தேகத்தை கிளப்பியிருக்கிறது.

ஒன்று, இந்தியா இரகசியமாக கூட்டமைப்பினருக்கு கட்டளை பிறப்பித்திருக்கக்கூடும். அதை சிரம்தாழ்த்தி ஏற்று கூட்டமைப்பு காய் நகர்த்தி தமிழினத்தை ஏமாற்ற துணை நிற்கிறது. அல்லது சிலதினங்களுக்கு முன் ராஜபக்க்ஷவின் அழைப்பில் அலரி மாளிகை சென்ற சம்பந்தன் ஐயா அவர்களிடம் அமெரிக்காவின் அழுத்தத்தை எடுத்துக்கூறி தலைசுற்றப்பட்டிருக்கலாம்.

எது எப்பட்டியிருப்பினும் இது ஒரு பேச்சுவார்த்தைக்கான காலமல்ல!

அத்துடன். ஐநா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடர் நடைபெறும் இந்த நெருக்கடியான காலகட்டத்தை சிங்கள அரசு கடந்து தப்பிப்பதற்கு, தமிழர் தேசியக்கூட்டமைப்பு சோரம்போய்விட்டது என்றே எடுத்துக்கொள்ள இருக்கிறது.

தமிழினம் பட்ட பரிதவிப்பு, துயரம், இழப்பு,போராடம், வீரம், அனைத்தையும் காற்றில் பறக்கவிட்டு. சிங்கள அரசுக்கு கைத்தடியாகி தமிழர் தேசியக்கூட்டமைப்பு உதவியிருக்கலாம் என்பதே, பலரின் பரவலான கருத்தாக இருக்கிறது.

இராசதந்திர தந்திரோபாயமாக, சில நகர்வின் அடிப்படையில் பேச்சுவார்த்தையில் பங்குபற்றவேண்டிய தேவை அரசியல் சாணக்கியர்கள் என்ற ரீதியில் தமிழ் தேசியக்கூட்டமைப்பிற்கு இருக்கிறது. அந்த அடிப்படையில் இந்த நேரத்தை பயன்படுத்தி நகர்வுகளை மேற்கொள்ளுகின்றோம். என்று அவர்கள் சொத்திக் காரணம் சொல்லவும் வழிவகைகள் இருக்கின்றன.

ஆனாலும் இந்த நேரம் காலகட்டம் சிங்கள இனப்படுகொலையாளிகளுடன் எப்பேர்ப்பட்ட பேச்சுவார்த்தைக்கும் உகந்த நேரம் அல்ல என்பதே தமிழர்தம் சிறு குழந்தைகளின் எண்ணமும் கூட.

எதிர்த்தரப்புக்கு இப்படி நெருக்கடியான காலகட்டங்கள் உருவாகும்போது மதிநுட்பத்தை சாதகமாகப்பயன்படுத்தி எதிரியை சிக்கவைப்பதே அரசியல் சாணக்கிய தந்திரத்தின் அடிப்படை உபாயம்.

சமீபத்தில் பிரித்தானியாவுக்கு வருகைதந்திருந்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரான சுமந்திரன். எழுந்தமானமாக தெரிவித்த கருத்துக்கள் புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் மிகுந்த வேதனையை உண்டுபண்ணியிருந்தது. தமிழர்கள் மறந்திருக்க முடியாது. அவரது கருத்தின் அடிப்படையில்

1) புலம்பெயர் தமிழர்களது தமிழீழம் நோக்கிய செயற்பாடுகள் மேற்குலகின் ஆதரவைப் பெறவில்லை எனவும், அதில் மாற்றங்கள் தேவை.

2) இலங்கையில் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் போது, அது பெரும்பான்மை சிங்கள, சிங்கள மக்களால் ஏற்கக் கூடிய தீர்வாக அமைய வேண்டும்.

3) சிறிலங்கா அரசு மீதான போர்க் குற்ற விசாரணைக்கான கோரிக்கையைக் கைவிடவேண்டும் என்பது அவரது முழுமூச்சான கருத்தாக அமைந்திருந்தது.

அந்த அடிப்படையில் சிங்கள அரசுடன் இணைந்து தொடர்ச்சியாக ஏதாவது நகர்வுகளை தமிழர் தேசியக்கூட்டமைப்பு மேற்கொள்ளுகிறதோ, என்ற மோசமான ஐயமும் பலரிடம் எழுந்திருக்கிறது.

ஏன் இப்படிச்சிந்திக்க வேண்டியுள்ளது என்றால் அமெரிக்க நாட்டின் இராசதந்திரியான ரொபர்ட் ஓ பிளேக் அவர்கள் துணை ஆயுதக் குழுக்களின் ஆயுதங்கள் களையப்பட வேண்டும் மர்ம மனிதர்கள் தொடர்பான சம்பவங்களுக்கு முடிவு காணப்பட வேண்டும். வடக்கில் தமிழ் பொலிசார் கடமையில் ஈடுபடுத்தப்படவேண்டும். அவ்வாறு ஈடுபடுத்தப்படுவதால் சிவில் நடவடிக்கைகளில் இராணுவத்தைப் பயன்படுத்தும் தேவை இருக்காது. என ஆணித்தரமாக கூறியிருந்தார்.

ரொபேர்ட் பிளேக் அவர்களின் அக்கருத்துக்கு கோத்தபாயவின் திமிரான பதில், யதார்த்த சூழலை தூக்கியெறிந்த துவேஷ மனவெளிப்பாடாக இருந்தது.

தமிழர்களை பொலிஸில் இணைத்துக்கொள்ள அமெரிக்கா தயாரா இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் கடமையிலீடுபடுத்த தமிழ்ப் பொலிஸாரை இணைத்துக் கொள்ளும் தேவை அரசாங்கத்துக்கு இல்லை. அவ்வாறு வலியுறுத்தும் அமெரிக்கா முதலில் அவ்வாறு செய்து காட்டட்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

(தமிழ்ப்பொலிசாரையே தமிழ்ப்பகுதிகளில் பணிக்கமர்த்த விரும்பாத சிங்கள அரசு, ஒரு இரவில் தீர்வுக்கு ஒப்புக்கொண்டுவிட்டதென்று கூட்டமைப்பினர் மூலம் கூறினால் எந்தப்பயித்தியக்காரன் ஒத்துக்கொள்ளுவான்)

அமெரிக்காவில் தேசிய இனங்களாக பெரும்பான்மையாக வாழ்பவர்கள் வெள்ளை இனத்தவரும் கறுப்பர்களுமாகும். அமெரிக்க பொலிஸில் பெரும்பதவி வகிப்பவர்கள் கறுப்பு இனத்தவர்கள்.

இன்றைய அமெரிக்க ஜனாதிபதி பராக் ஓபாமா, அவர்களே கென்ய வழித்தோன்றலான ஒரு கறுப்பு இன தந்தைக்கு பிறந்தவர். முன்னைய ஜோர்ஜ் புஷ் அவர்களின் ஆட்சியின்போது அவரது உலக அரசியல் ஆலோசகராக இருந்தவர் 'ஆப்ரிக்க வழித்தோன்றலான' பெண்மணி கொண்டலிசா றைஸ், அமெரிக்க வெளியுறவுத்துறையில் மிகப்பெரிய பதவியை வகித்தார். ஈராக் யுத்தத்தில் அமெரிக்கபடைத்துறைப் பொறுப்பாளராக இருந்த கொலின் பவல் 'அரை ஆப்ரிக்க வழித்தோன்றல். நிலவரம் இப்படியிருக்கும்போது,வரலாறு எதுவுமே தெரியாமல், வாய் திறந்தாலே வன்மமும் கயமையும் துவேஷமும் கொட்டிக்கொண்டிருக்கும் சிங்கள இனத்துடன். கூட்டுச்சேர்ந்து பேச்சுவார்த்தைக்கு வா என்றவுடன் அழைப்பை ஏற்று தேசியக்கூட்டமைப்பு சென்றிருந்தது.

இது இருபக்கமும் திட்டமிடப்பட்ட ஒரு சதியாகவே வரலாற்றில் பதிவாகும் என்பது நாளை தெரியவரும்.

வருடக்கணக்காக பல நாடுகள் முகம்கொடுத்தும் முடிவுறாத இனப்பிரச்சினை, போர் முடிவுற்றதாக கூறப்பட்டபின் கூட்டமைப்பினர் தொடர்ந்த பேச்சுவார்த்தை. பத்து சுற்றுகளில் எட்டிப்பிடிக்காத விடையம், ஒரு இரவில் முடிவுக்கு வந்துவிட்டதாகவும். பேசித்தீர்க்கலாம் என்பதை எந்தவகையில் இவர்கள் நம்பி, இருதரப்பும் கைச்சாத்திட்டு கூட்டறிக்கை வெளியிட்டிருக்கின்றனர் என்பதும், யார் இவ்விடயத்துள் ஒளிந்திருக்கின்றனர் என்பதும் பெருத்த மாயையாக தெரிகிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஏற்கனவே கையளித்திருந்த தீர்வு யோசனையில் தெரிவிக்கப்பட்டிருந்த 18 அதிகாரங்கள் 13ஆவது திருத்துக்கு அப்பாலானவை, இருந்த போதும் அவை தொடர்பில் பேசித் தீர்த்துக்கொள்ளலாம், என்று அரசு தெரிவித்திருப்பதாகவும். நேற்றுப் பிற்பகல் இரு தரப்பினருக்கும் இடையில் அலரி மாளிகையில் நடைபெற்ற பேச்சில் இந்த இணக்கம் எட்டப்பட்டிருப்பதாகவும். தெரிவிக்கப்படுகிறது.

இத்தனை வருடங்கள் இழுபறியில் இருந்த ஒருவிடையம் முடிவுக்கு வருவது அனைவரும் வரவேற்கும் நற்செய்தியாக இருந்தாலும். "வரும் ஆனால் வராது" என்ற கதையில் முடியுமா என்ற அவநம்பிக்கையே ஒவ்வொரு தமிழனிடமும் இருக்கிறது. அறுபது வருட அனுபவமும் அதைத்தான் விட்டுச்சென்றிருக்கிறது.

வரலாற்றில் இதுவரை சிங்கள ஆட்சியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பட்டுணர்ந்த பாடங்களின் அடிப்படையில். ஒரு முடிவுக்கு வராமல் பேசித்தீர்த்துக்கொள்ளலாம். என்பதை திருப்திகரமான ஒரு முடிவாக ஊடகங்களுக்கு செய்தி கொடுத்ததே தமிழ் தேசியக்கூட்டமைப்பினர்மீது சந்தேகத்தை உண்டுபண்ணுவதாகவே இருக்கிறது. அவை மிக மோசமான ஏமாற்றாகவே முடியும் என்பதில் ஐயமில்லை.

ஜெனீவாவில் இடம்பெறும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மனித உரிமை மாநாடு. தமிழனுடன் எந்தச்சம்பந்தமும் இல்லாத வெள்ளை இனத்தவர்கள் மற்றும் பல்லின நாட்டு தலைமைகள் தொடர்ச்சியாக கூடி, பாதிக்கப்பட்ட தமிழினத்திற்கு நீதி கிடைக்கவேண்டும் என்ற நோக்கோடு போராடி இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க கை கோர்த்திருக்கும் இத்தருணத்தில்.

விடயத்தை நீர்த்துப்போகச்செய்யும் தந்தரமும். காலவிரையத்தை ஏற்படுத்தி மனித உரிமையை காலில் போட்டு மிதித்து, இனப்படுகொலை செய்த துரோக கூட்டம் தப்பிக்க, துணை போவது போன்ற நச்சுத்தனமான செயற்பாடுகள், மன்னிக்க முடியாத இனத்துரோகம் என்பதை மட்டும் வரலாறு தேசியக் கூட்டமைப்பினர்மேல் பதிவு செய்யும் என்பது திண்ணம்.

ஈழதேசம் இணையத்திற்காக.
கனகதரன்,

நன்றி ஈழதேசம் இணையம்.

Thursday, September 15, 2011

கூத்தாடி குசும்பன்< அங் 10,



திமுக வின், முதலாளி கருணா தாத்தா காங்கிரசுக்கு கொள்ளிக் கட்டை இறுக்கி கருமாதி பண்ணிட்டதா அறிவிச்சிருக்காரு.

அதேநேரத்தில் மறைமுகமாக தனது தலையிலும் மண்ணை அள்ளி போட்டிருக்காரு போலத்தான் தெர்யிது.

வரும் உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டணி இல்லை!. தி.மு.க. தனித்துப் போட்டியிடும்! என்று அதிரடியா தாத்தா அறிவிச்சிருக்காரு.

தமிழகம் முழுவதும் உள்ளாட்சி மன்ற தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ளது.

இந்த தேர்தலில், தி.மு.கவின் கூட்டணி நிலைப்பாடு குறித்து திமுக மொதலாளி (அதிபர்) கருணா தாத்தா, வழமையான தனது கரகரப்பான கிரந்த மொழியில் அறிக்கை வெளியிட்டிருக்காரு.

அதன் சாராம்ஷம் "வரும் ஆனா வராது". எங்கிறாப்பல சிதம்பர சக்கரமா ஒண்ணும் புரியல்ல. இருந்தாலும் தாத்தா சொன்னா சரியாத்தானே இருக்கும்,ங்க!

இது குறித்து அவரது அறிக்கை:

நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவதென்பது இந்திய நாட்டில் மதச்சார்பற்ற அரசு அமைய வேண்டும் என்ற அக்கறையின்
அடிப்படையில், தி.மு.க.வும் உறுதுணையாக நின்றோ- ஒத்துழைப்பு நல்கியோ அத்தகைய கூட்டணியின் வெற்றிக்காகப் பாடுபட்டுள்ளது?.

நாடாளுமன்றத் தேர்தல், மத்தியில் ஒரு முற்போக்கு?/? அரசை அமைத்திடவும், சட்டமன்றத்தேர்தல், மாநிலத்தில் ஒரு ஜனநாயக ஆட்சியை அமைக்கவும் பயன்பட வேண்டும் என்ற காரணத்திற்காகவே!!!, நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களில் ஒத்த கருத்துடைய?? கட்சிகளோடு ஒன்றுபட்டு கூட்டணி அமைத்து மத்தியிலும், மாநிலத்திலும், மதச்சார்புடையதும், மனித நேயத்திற்கு விரோதமானதுமான ஆட்சி அதிகாரமையங்கள் அமைந்து விடக்கூடாது என்ற அக்கறையுடன் செயல்படுகின்ற தி.மு.க.,

(இவிரோட திமுக கச்சி தவிர மத்த கச்சி அல்லாமே மனிதநேயத்துக்கு
Doubt Dhanapal விரோதமானதுங்க. இவிரோட அக்கறை புல்லரிக்குதுங்க)

அண்மையில் வரவிருக்கின்ற உள்ளாட்சி மன்றத் தேர்தல்களில் அரசியல் அடிப்படையோ, கொள்கை அடிப்படையோ முன் வைக்கப்படாமல் பொதுமக்களுக்குத் தேவையான சுகாதார வசதி, கல்வி வசதி, சாலை வசதி, மருத்துவ வசதி, குடிநீர் வசதி போன்ற பொதுப் பணிகளை குறிக்கோளாகக் கொண்டு - இயங்க வேண்டும் என்பதே எல்லோராலும் விரும்பப்படுகிற?? - ஏற்கப்படுகின்ற?? நிலை என்பதைக் கருத்திலே கொண்டு!!!!!!!!!! உள்ளாட்சி மன்றத்தேர்தல்களில் அரசியல் நோக்கில் கூட்டணிகளை உருவாக்குவது தேவையில்லை என்பதை ஆழ்ந்த சிந்தனைக்குப்பிறகு(??) தி.மு.க. முடிவாக எடுத்துள்ளது.

இந்த முடிவின் அடிப்படையில் உள்ளாட்சி மன்றத் தேர்தல்களில் எந்த ஒரு அணியும் அமைக்காமல், மாநில அளவிலான சட்டமன்றத் தேர்தல்; தேசிய அளவிலான நாடாளுமன்றத் தேர்தல் ஆகியவற்றில் மட்டுமே - கூட்டணி அமைத்து போட்டியிடுவது என்று தி.மு.க. முடிவெடுக்கின்றது.
இவ்வாறு அந்த கிரந்தத்தின் மூலம் கருணாநிதி கூறி உள்ளார்.

கூ கு> தாத்தாவோட பொலம்பல்ல இருந்து அவரோட ஆதங்கம் அனுமானம் என்னென்னு புரிஞ்சிருப்பீங்க.

கூ கு> கனிமொழி திருட்டுக்கேசுக்கே பொதுக்குழுவை, அண்ணா அறிவாலயத்தில் ஒண்ணுக்கு மூணுவாட்டி கூட்டி முடிவெடுப்பாரு, பாட்டி தயாளுவை காப்பாத்த பொதுக்குளுவை கூட்டுவாரு, பொதுமக்களோட பிரச்சினையான இதுக்கு மட்டும் பொதுக்குழு செயற்குழு எதையுமே கூட்டல்லீங்களே, தொண்டன் அல்லாம் கோச்சுக்க மாட்டாய்ங்களா. இல்லாங்காட்டி ஒத்துக்கிட்டாய்ங்களா. அத சொல்லா மறந்திட்டீய்ங்க தாத்தோவ்.

உள்ளாட்சித் தேர்தலில் பாமக தனித்து போட்டியிடும் என்று அறிவித்ததும், கேலியும், கிண்டலும் செய்றாய்ங்கன்னு ராமதாஸ் மாமாவும் போனவாரம் பொலம்பினாரு.

சட்டசபை தேர்தல்ல ஓறவு வச்சி ஒண்ணா ஒறவாடி நின்ன நீங்க அல்லோரும் இப்போ உள்ளூராட்சி தேர்தல்ல எதிர் எதிரா நிக்கப்போறீங்க.

காங்கிரசு, ராமதாசுகச்சி. திருமாகச்சி. ஒங்கவீட்டுகச்சி அல்லாம் சேர்ந்தே நின்னும் சட்டசபை தேர்தல்ல முடியாமப்போயி மண்ணு தின்னீங்க. இப்போ தனிச்சி நின்னு என்னத்த திங்கப்போறீங்க.

அப்பொறம் சொல்லுறீங்க மத்தியில் காங்கிரஸு கிட்ட ஒறவு தொடருதெங்கிறீங்க. உள்ளூராட்சியில எதிர்ப்போம் ங்கிறீங்க ஒண்ணுமே
புரியல்லீங்களே.

ஒண்ணொண்ணுக்கும் ஒங்கபாட்டுக்கு காரணம் காமிச்சுக்கிட்டே இருக்கீங்க, யாராச்சும் நம்புவானா ன்னு ரோசனை பண்ணினீங்களா, வர வர ஒங்க கிரந்தம் ஒருத்தருக்குமே புரியமாட்டேங்குது ஒங்களுக்காச்சும் ஏதாச்சும் புரியுதுங்களா?

திமுகவுடன் எந்தவித விரிசலோ, மனக்கசபப்போ இல்லை, இன்னும் திமுக கூட்டணியில் தான் உள்ளோம். என்று திருமா அண்ணனும் அப்படியே
Thirumavalavan
ஒங்கபாணியில் கூவிக்கிட்டிருக்காரு. நீங்க கூப்பிட்டனுப்பி ஏதாச்சும் தகவல் சொன்னீங்களாங்கங்க.

தங்கம்பாலு அண்ணனும் ஒங்களோடதான் கூட்டு வைச்சுக்கப்போறதா பிரஸ்மீட் நடத்தினாரு. எதயுமே நீங்க கண்டுக்கல்லீங்களா. சொக்கத்தங்கம் சோனி,க்கு Dinamalar cartoon தகவல் குடுத்தீங்களாங்க, அவிங்க கோவத்துக்கு மட்டும் ஆளாயிடாதீங்க.

ஒங்களுக்கு என்னத்த சொல்றது, நீங்களே பெரிய தில்லாலங்கடியாச்சே, லாபமில்லாமல் நீங்க பல்லுக்கூட வெளக்கமாட்டிங்கன்னு சொல்றாய்ங்க.

அண்மையில் வரவிருக்கின்ற உள்ளாட்சி மன்றத் தேர்தல்களில் அரசியல் அடிப்படையோ, கொள்கை அடிப்படையோ முன் வைக்கப்படாமல்
பொதுமக்களுக்குத் தேவையான சுகாதார வசதி, கல்வி வசதி, சாலை வசதி, மருத்துவ வசதி, குடிநீர் வசதி போன்ற பொதுப் பணிகளை குறிக்கோளாகக் கொண்டு - இயங்க வேண்டும் என்பதே எல்லோராலும் விரும்பப்படுகிற - ஏற்கப்படுகின்ற நிலை என்பதைக் கருத்திலே கொண்டு உள்ளாட்சி மன்றத்தேர்தல்களில் அரசியல் நோக்கில் கூட்டணிகளை உருவாக்குவது தேவையில்லை என்பதை (ஆழ்ந்த) சிந்தனைக்குப்பிறகு தி.மு.க. முடிவாக எடுத்துள்ளது. ங்கிறீங்க,

பச்சப்புள்ளையாட்டம் ஒங்க பரந்த மனச மக்கள் புரிஞ்சுக்காம போயிட்டாய்ங்களோன்னு வேதனை ஒருபக்கம் இருந்தாலும், ஒண்ணுமே புரியல்லீங்க.

இதுவரை 70 ஆண்டுகளா நீங்க கூவிவந்த கொள்கைக்கு இன்னிய ஆழ்ந்த முடிவு எங்கேயோ இடிக்கிறாப்பல இருக்குங்களே.

சந்தற்ப வசமா பேசுறாப்பல இருக்குன்னு சிலபேர் நெனைச்சுக்குவாய்ங்க. ஆனா நீய்ங்க அப்படிப்பட்டா ஆளுங்களா. நீய்ங்க முடிவெடுத்தா ஒரு நாயம் இருக்கும்ங்க, நீதியான பொது நோக்கு நிச்சியம் இருக்கும்.

குடும்ப ஆசாபாசத்துக்கு ஒங்க அகராதியில இடமில்லை என்பது தமிழ்நாட்டில மட்டுமல்லங்க ஒலகத்தில உள்ள அத்தன கொழந்த புள்ளக்கும் புரியுமுங்க.

வரும் உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட திமுக முடிவு செய்திருப்பது வரவேற்கத்தக்கது, இதன்மூலம் காங்கிரஸுக்கு இருந்த தேவையற்ற சுமை குறைந்துவி்ட்டது என்று தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் மன மகிழ்ச்சி தெரிவிச்சிருக்காரு.

உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக திமுக எடுத்துள்ள முடிவு வரவேற்கத்தக்கது. இதனால், காங்கிரஸுக்கு இருந்த தேவையற்ற சுமை குறைந்துள்ளது. திமுகவுடன் தொடர்ந்து கூட்டணி அமைத்துப் போட்டியிடுவதை இளைஞர் காங்கிரஸ் தொண்டர்களோ, காங்கிரஸாரோ விரும்பவில்லை என்பது தெரிந்துதான் திமுக தலைவர் இப்படி ஒரு முடிவு எடுத்திருக்கக்கூடும் என்றும் சொல்லியிருக்காரு.

அல்லாத்தையும் கூட்டி கழிச்சு பெருக்கி பாத்தா, சனீஸ்வரன் ஒங்க கூட்டணி மத்தியில சம்மணம்போட்டு ஒக்காந்திட்டாரு ங்கிறது மட்டும் புரியறது.
அவிருதான் ஒங்க அல்லாரையும் பேசவைக்கிறார் ய்ங்கிறதும் புரியுறது.

ஒங்க கச்சி, ராமதாஸ் கச்சி, சோனியா கச்சி, திருமா கச்சி, அத்தினியயும் தமிழ் நாட்டவிட்டு வெரட்ட சனீஸ்வரன் முடிவெட்டுத்திட்டாப்பல. இதுக்குமேல யாரும் ஒண்ணும் பண்ணுறதுக்கில்லீங்க.

அதுக்காக நீய்ங்க அறிக்கை வுடுறத்தையோ கேள்வி பதில் எயுதுறதையோ சனீஸ்வரன் தடுக்கமாட்டாரு. ஏன்னா அவிரு ஒங்க கூட்டணியில ஒருத்தராயிட்டார்ங்க.

ஒங்கள அவிரு புடிச்சே ரண்டு வருஷமாச்சுங்க, இன்னும் ஐஞ்சரை வருசத்தில வெலகிடுவாரு அப்போறம் நீங்க மெல்ல மெல்ல முன்னேறினாத்தான் உண்டு.

வரட்டுங்களா?
மீண்டும் சந்திப்போம்.

தீபம் தொலைக்காட்சிக்குப் பின்னால் மறைந்திருந்து எழுந்த மங்காத்தா!

ஒரு கருத்து முன்வைக்கப்படும் போது அதனை கருத்தால் எதிர்கொள்ள முடியாத கோழைகள் வன்முறையை ஆயுதமாகக் கையாள்வது சமூகத்தின் ஒவ்வொரு தளத்திலும் வெவ்வேறு வடிவங்களில் நடைபெறுகின்றது. இலங்கையில் கொலைசெய்யப்பட்ட ஒவ்வொரு ஊடகவியலாளரினதும் மரணத்தின் பின்புலத்திலும் கருத்தை எதிர்கொள்ளத் துணிவற்ற மனிதர்களைப் பார்க்கிறோம்.

பெரும்பாலும் அவதூறுகளிலிருந்து ஆரம்பிக்கும் இவ்வாறான வன்முறைகள் மனித அழிவுகள், மரண தண்டனை என்பது வரை நீடிப்பவை. மதங்களின் பெயாரால், இனவாதத்தின் பெயரால், நிறவாதத்தின் பெயரால் அரங்கேற்றப்படும் வன்முறைகளின் பின்னணியில் அதிகார வெறிகொண்ட கோழைகளைக் காண்கிறோம்.
மக்களின் அவலங்களை தமது முதலீடாக்கிக்கொள்கின்ற சமூகக் கூறுகள், பெண்ணியம், தலித்தியம், தன்னார்வ நிறுவனங்கள், தேசியவெறி போன்ற உணர்ச்சிகரமான சுலோகங்களோடு முன்வருகின்ற தனிநபர்களால் தலைமைதாங்கப்படுவது சமூகப் பொதுப்புத்தியாக மாறியுள்ள ஆபத்துமிக்க அரசியல் சூழலில் வாழ்கிறோம்.

இலங்கையில் மகிந்த ராஜபக்ச பாசிச சர்வாதிகாரம் தமிழ்ப் பேசும் மக்கள் வாழ்கின்ற பிரதேசங்களில் பெண்கள் மீது கட்டவிழ்த்துவிட்ட்டுள்ள இத்தாக்குதல்களுக்கு எதிராக “பெண்ணிலைவாதிகள்” குரலெழுப்புவார்கள் என்று எதிர்பார்த்து ஏமார்ந்தவர்கள் பலர். மேட்டுக்குடிப் பெண்ணிலைவாதிகளின் ஒருபகுதி ராஜபக்ச அரசோடு தமது வாழ்க்கையை அமைத்துக்கொண்டு பாசிசத்தின் நிழலில் குடியேறிக்கொண்டது. இன்னொரு பகுதி தன்னார்வ நிறுவனங்களோடு ஐக்கியமாகிக்கொண்டது. போர்க்குணம் மிக்க பெண்கள் கிறீஸ் மனிதர்களின் அடக்குமுறைக்கு எதிராக வாழ்வதற்காகப் போராடுகிறார்கள்.

இந்த வரிசையில் இலங்கை அரசு கட்டவிழ்த்துவிட்டுள்ள கிறீஸ் பூதம் ஒரு அரசியல் பிரச்சனை அல்ல என்றும் சமூகப் பிரச்சனை என்றும் வாதிடும் ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம் என்ற “பெண்ணிலைவாதி” நேற்று (13.09.2011) தீபம் தொலைக்காட்சியின் கலந்துரையாடல் ஒன்றில் கலந்துகொண்டார்.

இலங்கை அரச சார்பாக இவர் முன்வைத்த கருத்துக்களை நாகரீகமாக இவரோடு கலந்துகொண்ட ஏனைய இருவரும் எதிர்கொண்டனர்.
உரையாடலின் சில பகுதிகளைக் கீழே பார்வையிடலாம்:

நேரஞ்சல் உரையாடலின் போதே ஆங்கிலத்தில் “நாகரீக வன்முறை” அதிகாரத்தைக் கையாண்ட ராஜேஸ் பாலா, நிழச்சி நிறைவின் பின்னர் நடந்துகொண்ட முறைமை அருவருப்பானது.

நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பி.ஏ.காதர் அவர்களை நிகழ்ச்சி நிறைவுற்றதும் “வேசைமகனே” என விழித்து அவர் மீது கையில் கிடைத்தவற்றை வீசியெறிந்து தாக்குதல் நடத்தினார். ஆங்கிலத்திலும் தமிழிலும் கீழ்த்தரமான வார்த்தைகளால் திட்டிய ராஜேஸ் பாலா காதர் மீது அங்கு வக்கைப்பட்டிருந்த நீர்க் குவழையிலிருந்த நீரை ஊற்றி அவமானப்படுத்தினார்.

தீபம் தொலைக்காட்சி ஊழியர்கள் உட்பட அனைவரும் அதிர்ச்சியடைந்த நிலையில் ஐந்து நிமிடங்கள் வரை நீடித்த இவரின் வன்முறையிலிருந்து சுதாகரித்துக்கொண்டு அனைவரும் அங்கிருந்து வெளியேறினர்.

முப்பது வருடப் பெண்ணிலைவாதி ராஜேஸ் பாலா பெண்ணியம் என்ற தலையங்கத்தில் திரைக்குப் பின்னால் நிகழ்த்திய கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரான வன்மத்தால் புரையோடிப் போன சமூகத்தின் குறியீடு.










நன்றி இனியொரு.இணையம்,


Tuesday, September 13, 2011

கருணாநிதி பேசுவதும் சாத்தான் வேதம் ஓதுவதும் ஒன்றுதான்-நெடுமாறன்


Pazha Nedumaran

சென்னை: ஜனநாயகம், நேர்மையான தேர்தல், அவசரகால நிலைமை, பழிவாங்கும் போக்கு ஆகியவை குறித்து கருணாநிதி பேசுவதும், சாத்தான் வேதம் ஓதுவதும் ஒன்றுதான் என்று கூறியுள்ளார் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன்.

இதுதொடர்பாக 'தினமணி'யில் பழ. நெடுமாறன் எழுதியுள்ள கட்டுரை:

தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத அவசரநிலை இருப்பதாகவும், சட்டமன்றத்தில் ஜனநாயகம் தேடப்பட்ட பொருளாகிவிட்டதாகவும், அதிமுக அரசு பழிவாங்கும் போக்குடன் நடந்துகொள்வதாகவும் திமுக தலைவர் கருணாநிதி சரமாரியான குற்றச்சாட்டுகளை அடுக்கியிருக்கிறார்.

இந்தக் குற்றச்சாட்டுகளைக் கூறுவதற்கு முன்னால், அவர் தன்னைச் சுயபரிசோதனைக்கு உள்படுத்திக் கொண்டிருக்க வேண்டும். இத்தகைய குற்றச்சாட்டுகளைக் கூறும் தகுதி தனக்கு உண்டா என்பதையும் அவரது மனசாட்சியிடம் கேட்டிருக்க வேண்டும்.

கடந்த திமுக ஆட்சியில், 2009-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகளும், வழக்கறிஞர்களும், பொதுமக்களும் கண்மூடித்தனமாகத் தாக்கப்பட்டனர். சிறப்புப் பயிற்சிபெற்ற காவலர்களின் தாக்குதல் படை முதன்முறையாக இச்சம்பவத்தில் பயன்படுத்தப்பட்டது. கட்டுங்கடங்காத பெரும் கலவரங்களை ஒடுக்குவதற்காக உருவாக்கப்பட்ட இந்தப் படை கற்றறிந்த வழக்கறிஞர்களின் அறவழியான போராட்டத்தை அடக்கி ஒடுக்குவதற்கு முதன்முறையாக ஏவப்பட்டது.

1919-ம் ஆண்டில் பஞ்சாபில் உள்ள அமிர்தசரஸ் நகரில் ஜாலியன் வாலாபாக்கில் திரண்டிருந்த மக்கள் கூட்டத்தின்மீது பிரிட்டிஷ் ராணுவம் கண்மூடித்தனமாகச் சுட்டு 400 பேருக்கு மேல் சுருண்டு விழுந்து செத்தனர். அந்தக் கொடிய ஜாலியன் வாலாபாக் சம்பவத்துக்கு இணையாக நடந்த நிகழ்ச்சி உயர் நீதிமன்ற நிகழ்ச்சியே ஆகும்.

அதே காலகட்டத்தில் மதுரையில் அமைதியாக ஊர்வலமாகச் சென்ற வழக்கறிஞர்களை டி.ஐ.ஜி. கிருஷ்ணமூர்த்தி என்பவர் கைத்துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய படம் அனைத்துப் பத்திரிகைகளிலும் தொலைக்காட்சிகளிலும் வெளியானது.

தலைமை நீதிபதியும், தலைமைப் பதிவாளரும் உயர் நீதிமன்ற வளாகத்துக்குள் காவல் துறையைத் தாங்கள் அழைக்கவில்லை என வெளிப்படையாக அறிவித்தார்கள். உயர் நீதிமன்ற வளாகத்துக்குள் புகுந்து தடியடி நடத்துவதற்கு காவல்துறைக்கு ஆணை பிறப்பித்தது யார் என்ற கேள்வியை உச்ச நீதிமன்றம் எழுப்பியது.

இத்துயர நிகழ்ச்சிகள் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட ஸ்ரீகிருஷ்ணா ஆணையம், காவல்துறையின் வரம்புமீறிய நடவடிக்கைகளையும் எல்லைமீறிய தாக்குதல்களையும் கண்டித்தது. அவர் அளித்த அறிக்கையை ஆய்வு செய்த உச்ச நீதிமன்றம், காவல்துறையினரின் அத்துமீறல்கள் குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி மாநில அரசுக்கு ஆணை பிறப்பித்தது.

29-10-2009 அன்று சென்னை உயர் நீதிமன்றம் அளித்த முக்கிய தீர்ப்பில் உயர் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற வேண்டாத நிகழ்ச்சிகளுக்குப் பொறுப்பானவர்கள் என 4 உயர் அதிகாரிகளைப் பெயர் சுட்டி, அவர்களைத் தாற்காலிகப் பணி நீக்கம் செய்து, துறை ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி தமிழக அரசுக்கு ஆணையிட்டது.

உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் ஆகியவை பிறப்பித்த ஆணைகளின் மீது உரிய நடவடிக்கை எடுக்க அன்றைய முதல்வர் கருணாநிதி இறுதிவரை முன்வரவில்லை.

இந்த நிகழ்ச்சிகளுக்குத் தார்மிக ரீதியில் மட்டுமல்ல, நேரடியாகவும் முதல்வரே பொறுப்பு என்பதால்தான் தவறிழைத்த அதிகாரிகள் மீது கடைசிவரை அவர் நடவடிக்கை எடுக்கவில்லை.

உயர் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற கொடுமைகளைப்போல, கருணாநிதியின் ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற அடக்குமுறைகளும் அநீதிகளும் எண்ணிலடங்காதவையாகும்.

அவசரகால நிலை இருந்தபோதுகூட இதுபோன்ற அட்டூழியங்கள் நடைபெறவில்லை. ஆனால், முழுப்பூசணிக்காயைச் சோற்றில் மறைக்க முயற்சி செய்ததுபோல, தான் செய்த கொடுமைகள் எல்லாவற்றையும் மறைத்துவிட்டு புனிதராகத் தன்னைக் காட்டிக் கொள்வதற்குக் கருணாநிதி முயற்சி செய்கிறார்.

""சட்டமன்றத்தில் ஜனநாயகம் தேடப்பட வேண்டிய பொருளாக ஆகிவிட்டது'' என குற்றம் சாட்டியிருக்கிறார். 1972-ம் ஆண்டு திமுக பிளவுபட்டு எம்.ஜி.ஆர். தலைமையில் அதிமுக தோன்றிய பிறகு சட்டமன்றத்தில் ஜனநாயகத்தின் வேரை அறுக்கும் முயற்சிகள் வெளிப்படையாக நடைபெற்றன. அவற்றுக்குத் தலைமை தாங்கியவர் கருணாநிதியே ஆவார்.

அப்போது பேரவைத் தலைவராக இருந்த கே.ஏ. மதியழகன் எம்.ஜி.ஆரோடு ரகசிய உறவு வைத்திருக்கிறார் என்ற காரணத்தால் அவருக்கு எதிராக பேரவைத் துணைத் தலைவராக இருந்த சீனிவாசனை முதல்வர் கருணாநிதி பயன்படுத்தி, சட்டமன்றத்தில் ஒரே நேரத்தில் இரு பேரவைத் தலைவர்கள் வீற்றிருந்து எதிர்மறையான ஆணைகளைப் பிறப்பித்து சட்டமன்றத்தை மட்டுமல்ல, ஜனநாயகத்தையே மூச்சுத் திணற வைத்தனர். எதிர்க்கட்சித் தலைவராக இருந்த எம்.ஜி.ஆரை அவமானகரமாகப் பேசி சபைக்கே வராமல் விரட்டியடித்தார்.

1990-ம் ஆண்டில் எதிர்க்கட்சித் தலைவியாக இருந்த ஜெயலலிதாவைப் பெண் என்றும் பாராமல் தனது சகாக்களை விட்டுத் தாக்கச் செய்தார். சட்டமன்றத்தில் தனக்கு எதிரான நிலையெடுத்த காங்கிரஸ், கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக், பார்வர்டு பிளாக், பாமக போன்ற பல கட்சிகளையும் இரண்டாக உடைத்து சாதனை படைத்தார். ஜனநாயகத்தைக் குழிதோண்டிப் புதைக்க இவர் ஆற்றிய அருஞ்செயல்களைப் பட்டியலிட்டால் இடம்கொள்ளாது.

லஞ்சம், ஊழல் போன்றவற்றின் மூலம் திரட்டிய வரைமுறையில்லாத செல்வம் போதாது என்று அப்பாவிப் பொதுமக்களின் சொத்துகளையும் தொழிற்சாலைகளையும் நிலங்களையும் மிரட்டியும் சட்டவிரோதமாகவும் பறித்த குற்றச்சாட்டுகளின்பேரில் கருணாநிதியின் ஆட்சியில் அமைச்சர்களாக இருந்த பலரும், சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்தவர்களும், மாவட்ட அளவில் நிர்வாகிகளாகப் பணியாற்றியவர்களும் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்குகள் தொடுக்கப்பட்டிருக்கின்றன.

இந்த வழக்குகளை முறையாக நீதிமன்றத்தில் சந்தித்துக் குற்றமற்றவர்கள் என நிரூபித்து வெளியே வருவதற்குப் பதில், பழிவாங்கும் போக்குடன் இவர்கள் மீது பொய்யான வழக்குகள் தொடுக்கப்பட்டிருக்கின்றன என கருணாநிதி நா கூசாது பேசுகிறார்.

மேலே கண்டவர்கள் செய்த சட்டவிரோதமான செயல்கள் அனைத்தும் இவர் முதல்வராக இருந்தபோது நடைபெற்றவைதான். அப்போது அவற்றைத் தடுத்து நிறுத்தவோ, கண்டிக்கவோ முன்வராத இவர், இப்போது புலம்புவதில் எவ்விதப் பயனும் இல்லை.

சட்டம் தனது கடமையைச் செய்யும் என எத்தனை தடவை இவர் முதல்வராக இருந்தபோது சொல்லியிருக்கிறார். இப்போது சட்டம் தனது கடமையைச் செய்யும்போது அதற்கு எதிராகக் கூப்பாடு போடுவது ஏன்? உள்ளாட்சித் தேர்தலைப் பாரபட்சமற்ற முறையில் நடத்த வேண்டும் என்று மாநிலத் தேர்தல் ஆணையரிடம் திமுக சார்பில் மனு அளிக்கப்பட்டிருக்கிறது. ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் மாவட்டக் கண்காணிப்புக் குழு அமைக்க வேண்டும் என்றும் இந்த மனுவில் கோரிக்கை விடப்பட்டுள்ளது.

தேர்தல்களை நேர்மையாகவும் நியாயமாகவும் நடத்த வேண்டும் என திமுக வற்புறுத்துவது கண்டு மக்கள் நகைக்கிறார்கள். கருணாநிதியின் ஆட்சிக் காலத்தில் திருமங்கலத்தில் தொடங்கி நடைபெற்ற துணைத் தேர்தல்கள் அத்தனையிலும் அராஜகம் கொடிகட்டிப் பறந்தது.

திருமங்கலம் தில்லுமுல்லு என்ற புதிய தேர்தல் தந்திரத்தையே கையாண்டு வெற்றி தேடித் தந்த தனது மகனை உச்சிமுகர்ந்து பாராட்டியவர், இன்று தேர்தல்கள் நியாயமாக நடத்தப்பட வேண்டும் எனப் பேசுவது மனசாட்சியைக் கொன்ற தன்மையாகும்.

திமுகவை வீழ்த்த இந்திரா காந்தியாலே முடியாதபோது வேறு யாரால் முடியப் போகிறது எனப் பெருமை பேசியிருக்கிறார். ஏதோ இவர் இந்திராகாந்தியை எதிர்த்து நெஞ்சை நிமிர்த்தி நின்றதுபோல சவடால் அடிக்கிறார்.

1971-ம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் காமராஜர் - ராஜாஜி கூட்டு கண்டு பயந்து இந்திராவிடம் சரணடைந்ததை மறந்துவிட்டார்.

1975-ம் ஆண்டு அவசரகால நிலைமை இருந்தபோது இவரது ஆட்சியை இந்திரா பதவிநீக்கம் செய்ததையும், இந்திராவைச் சர்வாதிகாரி என இவரும் இவரது சகாக்களும் ஏசியதையும் வசதியாக மறந்துவிட்டு 1980 பொதுத் தேர்தலின்போது, "நேருவின் மகளே வருக, நிலையான ஆட்சி தருக' என அவரிடம் சரண் புகுந்ததையும் மறைத்துப் பேசுகிறார்.

இந்திராவின் தயவால் எம்.ஜி.ஆரின் ஆட்சியைப் பதவிநீக்கம் செய்ய வைத்து மறுதேர்தலைச் சந்தித்தும்கூட எம்.ஜி.ஆரின் வெற்றியை இவரால் தடுத்து நிறுத்த முடியவில்லை.

மக்களிடம் இயற்கையாகக் குடிகொண்டுள்ள மறதியைப் பயன்படுத்திக்கொண்டு பழைய நிகழ்ச்சிகளை மறைத்தும் திரித்தும் பேசுகிற கலை அவருக்கு மட்டுமே உரியதாகும்.

ஐந்துமுறை முதல்வராகப் பதவி வகித்துக் கொடிகட்டிப் பறந்தவர் இன்றைக்குக் குடியரசுத் தலைவர், ஆளுநர், மாநிலத் தேர்தல் அதிகாரி ஆகியோரிடம் மனுப்போட்டு மன்றாடும் நிலைக்கு ஆளாகியிருப்பதும், இனி யாரிடம் முறையிடுவது எனத் தேடித்தேடி அலைவதும் பரிதாபத்துக்குரியதாகும்.

ஜனநாயகம், நேர்மையான தேர்தல், அவசரகால நிலைமை, பழிவாங்கும் போக்கு ஆகியவை குறித்து கருணாநிதி பேசுவதும், சாத்தான் வேதம் ஓதுவதும் ஒன்றுதான்.

நன்றி. thats tamil








NDTV இல் ஈழத் தமிழர்கள் குறித்த ஆவணப்படம்




Monday, September 12, 2011

கருணாநிதியுடன் ஒப்பிடுகையில் ராஜபக்சே பரவாயில்லை என்றார் பிரபாகரன்- சீமான்


Seeman

சென்னை: தமிழர்கள் விவகாரத்தில் திமுக தலைவர் கருணாநிதியுடன் ஒப்பிட்டால், ராஜபக்சே பரவாயில்லை. அவருக்கு உள்ள இன உணர்வு கூட கருணாநிதிக்கு இல்லையே என்று விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் தன்னிடம் வேதனையுடன் கூறியதாக நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் கூறியுள்ளார்.

பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோருக்கான மரண தண்டனையை ரத்துச் செய்யும் தீர்மானத்தை சட்டசபையில் நிறைவேற்றிய தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக் கூட்டத்தில் பேசுகையில் இப்படித் தெரிவித்தார் சீமான்.

இதுகுறித்து அவர் கூறுகையில்,

கடந்த 2008 ஆம் ஆண்டு இறுதிக்கட்ட யுத்தம் ஆரம்பமாவதற்கு சில தினங்களுக்கு முன்னதாக பிரபாகரன் மேற்கண்டவாறு கூறினார். கருணாநிதி ஈழப் படுகொலையைத் தடுத்து நிறுத்தத் தவறியது மட்டுமல்லாமல் ஈழத்தில் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட உச்சக்கட்ட கொடுமைகளை வெளி உலகுக்குக் கொண்டு சேர்க்கவும் தவறிவிட்டார்.

மேலும் பேரறிவாளன், சாந்தன் மற்றும் முருகனை ஏன் இன்னும் தூக்கில் போடவில்லை என்று 7 முறை மத்திய அரசுக்கு நினைவூட்டல் கடிதங்களும் எழுதியிருக்கிறார்.

இலங்கைத் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் இந்திய அளவில் தெரியவந்து, இலங்கையைப் பொறுத்தவரை இந்தியாவின் நிலைப்பாடு என்ன என்கிற விவாதம் எழுந்திருக்கும் வேளையில் ஒட்டு மொத்த ஊடகங்களையும் தமிழர்களையும் திசை திருப்புவதற்காக அவசரவசரமாக கடந்த 9 ஆம் தேதி தூக்குத் தண்டனையை நிறைவேற்ற காலக்கடு விதித்தது ஏன்.?

இந்தியாவின் இறையாண்மை என்பது தமிழர்களுக்கு எதிரானது என்றால் அந்த இந்திய இறையாண்மைக்கு நாம் எதிரிதான். மும்பைக் குண்டு வெடிப்புக்குத் தமிழன் உட்பட கண்டனம் தெரிவிக்கும் நிலையில் தமிழக மீனவர்கள் இலங்கை அரசால் கொல்லப்படும் போது அதனை எல்லை தாண்டிய பயங்கரவாதம் என்று ஏன் மற்றவர்கள் கண்டனம் தெரிவிக்கவில்லை என்றார் அவர்.

நன்றி. oneindia.tamil

Saturday, September 10, 2011

கூத்தாடி குசும்பன்< அங் 9,


சாதாரண குடிமகனுக்கு அநீதி இழைக்கப் படும் போதும், அரசுநிர்வாகம் தவறிழைக்கும் போதும், அந்ததவறை திருத்தி, நீதியை நிலைநாட்டுவதுதான்
நீதிமன்றத்தின் பணி.

ஆனால் இந்திய அரசு இழைக்கும் அநீதியை சரி என்று நீதிமன்றம் சொல்லும் போது, ஜனநாயகத்தின் கடைசிப்பக்கமும் கிழித்தெறியப்படுகிறது.

நேற்றய முந்தினம் சென்னை உயர்நீதிமன்றம் அளித்த ஒரு தீர்ப்பு அப்படி மத்திய அரசுக்கு வக்காலத்து வாங்கி,, சர்வாதிகாரமான ஒரு நிலையை மத்திய அரசு எடுப்பதற்கு துணையாக சென்னை நீதிமன்றம் தீர்ப்பை வழங்கியிருப்பதாக ஊடகங்கள் கவலைப்படுகின்றன,

மத்திய அரசு அறிவிப்பின் படி, சிபிஐ அமைப்பின் விசாரணையில் உள்ள தகவல்கள் பெரும்பாலானவை. இனிமேல் பொதுமக்கள் தகவல் அறியும்
உரிமைச் சட்ட வரம்பில் வராது.

இத்தனை நாட்களாக இச்சட்டத்தின் கீழ் தகவல்களை அளித்துக் கொண்டிருந்த சிபிஐ, க்கு திடீரென்று விதிவிலக்கு அளிக்கப் பட்டது, வெளிப்படையான நிர்வாகம் வேண்டும் என்று நினைக்கும் பலரை ஆச்சரியப் பட வைத்தது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் விஜயலட்சுமி என்ற வழக்கறிஞர், சிபிஐக்கு விலக்கு அளிக்கும் ஆணையை எதிர்த்து பொது நல வழக்கொன்றை தொடுத்தார். இந்த வழக்கில் தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்றம், சிபிஐக்கு விலக்கு அளித்தது "சரியே" என்று தீர்ப்பளித்துள்ளது. என்று செய்தி வந்திருக்கு.



# கூ கு>>: ஜனநாயகத்தை பேணும் ஒருநாட்டில். ஒவ்வொரு மனிதனுக்கும் அடிப்படை மனித உரிமைச் சுதந்திரம் உண்டு. ''எல்லோரும் இந்நாட்டு
மன்னர்கள்'' என்ற சுலோகத்தை தூக்கி வைத்திருக்கும் இந்தியாவில், நாட்டில் நடக்கும் முக்கிய தகவல்களை அறிந்துகொள்வதற்கு அனைவருக்கும் பூரண சுதந்திரம் உண்டு.

அது முடியாதுன்னு மறுப்பது மனித உரிமையை காலில் போட்டு மிதிப்பது போன்ற அராஜகமா தெர்யல்லையாங்க.

அறிந்த தகவல்களை துஷ்பிரையோகம் செய்யாமல் மேன் நோக்கோடு பயன்படுத்தவேண்டும் என்பது, ஒவ்வொரு தனிமனிதனின் கட்டாய கடமை பொறுப்பு, இதில் எவருக்கும் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது. அப்படி இருக்கவும் கூடாது. அதுதானே நாயமுங்க,

அதை விட்டுப்போட்டு, எல்லாவற்றையும் மூடி மறைத்து, பொதுமக்கள் தகவல் அறிந்துகொள்ளும் உரிமையை தடுத்திருப்பது. தப்பல்ல சரிதான் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. இது ஜனநாயகத்தில நாயங்களா?

இது கிட்டத்தட்ட ஒரு கொம்யூனிஸ நாட்டின் சர்வாதிகாரச் சட்டத்திற்கொப்பான செயலாக கருதலாம்ங்க.

அப்படித்தானே படிச்ச ஒருவனோட மனசில இந்த விசயம் பாதிப்பை உண்டுபண்ணும், இல்லீங்களா? ஒரு உயர்ந்த நீதிமன்றத்தின் நீதிமானே
Madras High Court
யோசிக்காம இப்படி நடந்துக்கலாமா ன்னு கவலைப்பட வைக்குதுங்க.

சிபிஐ என்கிற அமைப்பு இதுவரையில் விசாரணை நடத்திய வழக்குகள் எல்லாம் திறம்பட விசாரிக்ப்பட்டு, இல்லாங்காட்டி ஒண்ணு ரண்டு வழக்கிலாச்சும். அரசியல் தலையீடு இல்லாமல். குற்றவாளிகள் தண்டிக்கப்பட்ட சான்று இந்திய வரலாற்றில் ஏதாவது இருந்திச்சுன்னா. இரண்டு கையும் எடுத்து கும்பிட்டு அவங்க நடைமுறையை வரவேற்கலாம்.

அப்படியான பெருமை ஏதாச்சும் இருந்தால், மக்களும் திருப்திகரமா நிர்வாகங்களில் நம்பிக்கைவச்சி, மதிப்புகுடுத்து தகவல் கேட்டு குடைஞ்சுகிட்டும் இருக்க மாட்டாய்ங்க. சனங்களுக்கு அப்பிடியான ஒரு தேவையும் இருக்காது.

யாராயிருந்தாலும் ஒரு விசயத்தில நம்பிக்கையற்று உள்ளூர ஐயுறவு இருந்திச்சு ன்னாத்தானே கேள்வி கேட்பானுவ.

சிபிஐ சுத்தமா சுகாதாரமா, இருக்குதுன்னு இமேச் இருந்திச்சுன்னா. ரபிக் ராமசாமி போல பொது பெட்டீசக்காரய்ங்க கூட கேள்வி கேக்க கூச்சப்படுவானுக.

உதாரணத்துக்கு சிபிஐ தலையிட்டு விசாரிச்சதா சொல்லப்படும் விசாரணைகள்ல., என் கூமுட்டை மண்டைக்கு தெரிஞ்ச மூணு நாலு வழக்கை எடுத்து வைக்கிறேங்க.

நான் பேப்பர் படிக்க துவங்கின காலத்தில, சினிமாதான் நம்பளோட மொதலாவது சொய்ஸ், அததாண்டித்தான் புதினம் படிக்குறதுங்க.

இருந்தும் போபர்ஸ் பீரங்கி ஊழல் விசாரணைன்னு ஒண்ணு அப்போவே ஓடிக்கிட்டிருந்திச்சு. ஸ்வீடன் நாட்டில பீரங்கி வாங்கி கமிஷன் அடிச்சு இந்தியப் பிரதமர் ராஜீவ் சுத்துமாத்து பண்ணியிட்டார்ன்னு, வீட்டில பெரியவங்க பேசிக்கிட்டாய்ங்க.

ஊழல்ன்னா என்னன்னு சரியா புரிஞ்சுக்காத எனக்கு, அப்போ அந்த செய்தி பெரிய விஷயமாயும் பட்டுக்கல்லீங்க.

ஆனா பாருங்க நான் வளர வளர, அந்த பீரங்கி ஊழலும் எந்த விசாரணை செஞ்சும் முடிவில்லாம. வளந்து வந்திட்டே இருந்திச்சு, அப்பொறம்தான் அத படிச்சு அறியணுமுன்னு எனக்கும் கொஞ்சூண்டு ஆர்வம் வந்திச்சு.

இன்னும்தான் அதுக்கு முடிவ எவனும் கண்டுபிடிச்சி தீர்ப்பு எழுதல்லீங்க.

அதே நேரம் இந்தியாவின் 'போபால்', ங்கிற எடத்தில நச்சுவாயு கசிவு ஏற்பட்டதாயும். நிறைய மக்கள் செத்துப்போனதாவும் நிறையப்பேர் உடல்
ஊனமுற்று போய்க்கொண்டிருப்பதாயும், ஆல் இந்தியா றேடியோ, ஆகாசவாணி செய்திகள்ள சொல்லிக்கொண்டிருந்தாய்ங்க,

உயிர் சம்பந்தப்பட்ட விசயமாச்சே அந்தச்செய்தி டக் கினு மனதில பதிஞ்சுபோச்சு.

யூனியன் கார்பைட் கொம்பனி ன்னா எனக்கு தெரிஞ்சு. அந்தக்கொம்பனி "எவரெடி" ங்கிற (eveready) பற்றறி தயாரிக்கிற புகழ் பெற்ற கொம்பனி ங்கிறதுதான் தெரிஞ்ச விசயம். (எவரெடி பற்ரறி, எவெரெடி டார்ச் லைட், நம்ப(கிராமத்தில) நாட்டில நல்ல மவுசா இருந்த காலம். எங்க வீட்லையும் எவறெடி லைட் தான் பாவனையில் இருந்திச்சு. இதில எனக்கு கொஞ்சம் பெருமையும் கூட.)

அப்பொறம்தான் புரிஞ்சிச்சு, இது யப்பானோட கிரோசிமா, நாகசாகி நகரங்கள்ள, அமெரிக்கா போட்டுத்தாக்கின, ரசாயினத்த ஒத்த "மிதைல் ஐஸோ சயனட்" என்ற பயங்கர இரசாயனம் என்றும். போபால்,ல பல ஆயிரம் மக்கள நாசம்பண்ணியிருக்கின்னு. திகைச்சுப்போயிட்டேன்,

அந்தக்கதையும் நீண்டகாலமா மேஹா சீரியலாட்டம், சாண்டில்யனோட தொடர்கதையாட்டம் முடிவில்லாம ஓடிக்கிட்டிருந்திச்சு. அந்த வழக்கும் கால்
நூற்றாண்டுக்கு மேல ஓடியும் குத்தவாளிய தப்பவைச்சிட்டு ஒப்புக்கு வழக்க நடத்தினாய்ங்கன்னு அந்த ஊர் மக்கள் திட்டுறாய்ங்கன்னு கேள்வி,

அத அதிகாரத்தில உள்ள எவனும் காதில வாங்கினாப்போல தெர்யல்ல. கடசியா ஏதோ ஜில்மால் பண்ணி வழக்க முடிச்சிட்டாய்ங்க என்று பேசிக்கிறாய்ங்க,

செத்தவன் செத்ததுதான், உடல் ஊனமுற்றவன் ஊனமுற்றதுதான். ஊனமுற்ற ஒரு அரசு நாட்ட ஆண்டுகிட்டு இருக்கும்வரை நாடும் ஊனமாத்தானே இருக்கும், யாரு இத கேக்கப்போறா ன்னுதான் நினைக்க தோணுது.?

அப்பொறம் வந்திச்சு நம்ப ராஜீவ் கொலை வழக்கு. அதுவும் ஓடி 21 ஆண்டை கடந்து மர்மக்கதையாட்டம் முடிவுக்கு வராம முடிஞ்சிருச்சு.

இடையில ஹர்சத் மேத்தா பங்குச்சந்தை ஊழல். சத்யம் ஊழல் ன்னு ஏகப்பட்ட சமாச்சாரம் ஓடிக்கிட்டிருந்திச்சி..

சினிமா படங்கள்ள ஒரு கட்டத்தில பெருத்த மோசடி அதிகாரிங்களா இருக்கிற வில்லன்கள புடிக்க சிபிஐ அதிகாரிகள் வருவாய்ங்க, அந்தநேரம் ஒடம்பு புல்லரிக்கும், தியேட்டரே கடகடக்கிறாப்போல எபெக்ட் குடுப்பாய்ங்க'

நானும் சினிமா பார்க்கும்போது நிமிர்ந்து முன்னாடி நகர்ந்து ஒக்காந்து திருப்திப்பட்டதுண்டு, சிபிஐ ன்னா இம்மாம் பெரிய சக்தி படைச்சதென்னு நானும் புல்லரிச்சு போனதுண்டுங்க.

அப்பொறமாத்தான் புரிஞ்சுக்கிட்டேன் அல்லாமே மாயை. (சும்மா) ஆளும் வர்க்கத்தின் சுத்து வட்டத்திலதான் சிபிஐ, றோ, எக்ஸ்ரா எக்ஸ்ரா அத்தினியும் அடக்கம் ன்னு புரிஞ்சு வெறுத்துப்போனேனுங்க.

அல்லாத்தையும் தள்ளி வைச்சிட்டு, சிபிஐ தலையிட்டு விசாரிச்சும், இன்னும் மர்மமா இருக்கிற, ராஜீவ் கொலை வழக்க எடுத்தாலே தலை சுத்துதுங்க.

அண்மையில திருச்சி வேலுச்சாமி ஐயா அவங்க. குமுதம் இணையத்தளத்து ஒரு நேர்காணல்ல பகிரங்கமா புட்டு புட்டு வைச்ச ராஜீவ் கொலை பத்திய இம்போட்டன் விசயங்கள், இந்த ஆட்சியாளன்கிட்டயும் சிபிஐ காரங்க கிட்டயும் போய் சேரல்லியோ ன்னு டவுட்டா இருக்கு.

திருச்சி வேலுச்சாமி சொல்லுறாரு. தூக்கில போடவேண்டியவைங்க முருகன், சாந்தன், பேரறிவாளன், இல்லையின்னும். தூக்கில போடப்படவேண்டிய மூணு பேரும். வெளியில சூதானமா சுத்திக்கிட்டு திரியிறாய்ங்கன்னும். பகிரங்கமா குத்தஞ்சாட்டியிருக்காரு.

அவைய்ங்கள்ள ஒண்ணு சுப்பிரமண்யன் சுவாமி. அடுத்தவரு சந்திரா சுவாமி, மத்தவரு சிறப்பு புலனாய்வு தலிவர் கார்த்திகேயன், அப்பிடின்னு அடிச்சு சொன்னாருங்க.

எனக்கு திகைப்பூண்டில மிரிச்ச மாதிரி ஒடம்பு கிறு கிறுத்துப்போச்சு.

அதோட நில்லாம ஆயுள் தண்டனை குடுத்து சாவறுதிகாலம் சிறையில கைதியா இருக்கவேண்டியவரு, நம்மளோட பசி, அதுதான் உள்த்துறை அமிச்சர் சிதம்பரம், அவிங்கதான் ன்னு நிறைய புத்தக ஆதாரங்களோட விலாவாரியா வெளக்கினாருங்க,

இப்போ தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டு சிறையில 21 வருஷமா வாடிக்கிட்டிருக்கிற சாந்தன் ங்கிறவரு மேல சுமத்தப்பட்ட குத்தம் அவரோட பெயர் சாந்தன், ன்னு இருந்தது தவிர வேற ஆதாரமே இல்லன்னு அடிச்சு சொல்லுறாரு.

இதென்ன கொடுமடா சரவணா' எங்கிற காமடிதான் மின்னாடி வந்து நின்னு மின்னுதுங்க.

இன்னிக்கு நேத்திக்கு இல்லீங்க, திருச்சி வேலுச்சாமி அவங்க நீண்டகாலமா இதுபற்றி பேசிக்கிட்டிருந்தாலும். காங்கிரஸுக்காரன்கிட்ட உள் நோக்கம் இருக்கிறதால செவிடன் காதில ஊதின சங்காட்டம் எவனும் கேக்கிறாப்புல இல்லீங்க.

நீதி சாகாதுன்னு நீண்டகாலமா சொல்லுறாய்ங்க பொறுத்துத்தான் பாப்போம்.

வேலுச்சாமி ஐயா அவய்ங்க சொல்லுறது ஒரு பக்கம் இருக்க. "புதிய தலைமுறை" அப்பிடின்னு ஒரு தொலைக்காட்சி. ஒரு முக்கியமான விவாதத்தை நடத்தினாங்க.

அதில சுப வீரபாண்டியனும். சு சுவாமியும் உண்டு இல்லைன்னு பண்ணிட்டாய்ங்க.

சுப வீரபாண்டியன் ன்னாலே கொஞ்சகாலமா நம்பளுக்கு கொஞ்சம் கசப்புத்தான். இருந்தாலும் "புதிய தலைமுறை" தொலைக்காட்சில விடியோ கொண்பரன்ஸ் மூலியமா. சு சுவாமியயும் சுப வீர பாண்டியனும் விவாதிச்சாங்க. என்னதான் நடக்குதுன்னு பாத்துக்கிட்டிருந்தேன்.

சு சுவாமி ஒரு அட்வக்கேட் ன்னு சொல்றாய்ங்க. அதோட அமெரிக்கா கேம்பிறிச் யூனிவசிற்றியில வகுப்பெடுக்கிறதாவும் ஒரு வதந்தி உலாவிச்சு, ஆனா சுவாமியால, சுபவீ அவங்களுக்கு ஒண்ணுமே பதில் சொல்ல முடியல்லங்க, சு சு, அல்லாடிப்போனாரு.

சுப வீரபாண்டியன் அவங்க எடுத்து வச்ச கேள்விய்ங்களுக்கு சு சுவாமியால பதில் சொல்ல முடியல்லீங்க. ஒரு கட்டத்தில சு சு, விதண்டாவாதம் பண்ணியும் பாத்தாரு. சுப வீ அவங்களோட நறுக்கான கேள்விக்கு பதில் சொல்லிக்க முடியாம, சு சு, எந்திரிச்சு ஓடிட்டாரு.

இப்ப பாத்தா சகட்டுமேனிக்கு காங்கிரஸை தமிழ் நாட்டில அல்லாரும் விமர்சிச்சுட்டுத்தான் இருக்காய்ங்க, தாத்தா கருணா அவிங்களும் வேண்டா
வெறுப்பா கூட்டணி தொடரும் ங்கிறாரு.

கனிமொழியோட வழக்கில பிணை கெடைக்கும். ஜாமீனில் வெளிய Dinamalar cartoon வருவாங்கன்னு பேசிக்கிறாய்ங்க, கனிமொழி வெளியில வந்திட்டாய்ங்கன்னா தாத்தாவும் காங்கிரஸை தலை முழுகிடுவாரு போலத்தான் தெரியுது.

ஊழல் வழக்குகளாகட்டும், ராஜீவ் கொலை வழக்காகட்டும், காங்கிரஸின் நடவடிக்கைகள் தப்புன்னு சொல்றவங்க அத்தின பேரும் நன்கு படிச்ச முன்னைநாள் காங்கிரஸுக்காரங்கதான், எங்கிறத கவனிக்கணுமுங்க.

நெடுமாறன் ஐயா அவங்க ஆரம்ப காங்கிரஸுக்காராரு. தமிழருவி மணியன் அவங்களும் காங்கிரஸில நீண்டநாள் இருந்தவரு. திருச்சி வேலுச்சாமி அவங்களும் அப்பழுக்கற்ற காங்கிரஸுக்காரரு, சீமான் அவங்கள எடுத்தாலும் அவங்க அப்பா காங்கிரஸு காரர்ன்னுதான் சீமான் சொல்றாரு.

தங்கம்பாலு அண்ணனையும். எளங்கோவனையும் வச்சி தமிழ்நாட்டில காங்கிரஸை நிமித்திடலாம்ன்னு நெனைச்சா அது வடிவேலுவை வச்சி திமுகவை நிமித்திடலாம்ன்னு கருணா நெனைச்ச மாதிரியான காமடிதானுங்க.

தகவல் அறியும் உரிமையை பறிச்சிட்டா பொதுசனம் கேள்வி கேக்க முடியாது நம்மபாட்டுக்கு நாம நினைச்ச சட்டத்தப்போட்டு ஆட்சி பண்ணிடலம்ன்னு கணக்குப்போட்டா தப்புக்கணக்காயிடுமுங்க.

ஆட்சியில இருக்கிற இவங்களோட ஐஞ்சு வருஷம் முடிஞ்சப்பொறம் தேர்தல்
வரும்போது தீர்மானம் மக்களிடம் போயிடும் என்பத மறந்திடாதீங்க.
Voters


சமீபத்திய தமிழ்நாடு சட்டமன்றத்தேர்தல் ஒங்களுக்கு நிறைய பாடம் கத்து தந்திருக்கு, ஒங்களோட சேர்ந்த தாத்தா, மருத்துவர் ஐயா, தெருமா அண்ணன் அத்தினி பேரும் தெருவில நிக்கிறாய்ங்க, அதுக்கப்பொறமும் நாண்டுக்கிட்டு நின்னீங்கன்னா. நல்லாவா இருக்குமுங்க.

மண்மோகன் சிங்கம் ஐயாவும், பசி மாமாவும், பிரணாப் ஐயாவும், சிவ்சங்கர் மேனும். சோனியா அம்மாவ சுத்தி இருந்து, சோனியா அம்மா அவிங்க என்ன சொல்றாங்களோ அத மக்கள் ஏத்துக்கொள்ள வேணுங்கிறீங்க, நாயமா இருந்தா யார் வாணாங்கிறா.

ரோசனை பண்ணுங்க, தப்ப திருத்துங்க, மக்கள் சந்தோசமா இருந்தா அடுத்தவாட்டியும் ஆட்சிக்கு வரலாமுங்க. இல்லேன்னா தமிழ்நாடு தாத்தாவோட கதிதான். ஆமா!

மீண்டும் சந்திப்போம்.