Wednesday, December 29, 2010

இதில் எது உண்மை…? எது நாடகம்

[காணொளி&படங்கள்] இங்கே இருபதிவுகளை கீழே இணைத்துள்ளோம். இதில் எது உண்மை எது நாடகம் என்று நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்…







024

சிறீலங்காவுக்கு நீங்க எப்படியோ இந்தியாவுக்கு நான் அப்படி... உங்க கட்சிப்பேருல ஈழம்னு வைச்சி ஈழத்தை அழிச்சீங்க எங்க கட்சிப்பேருல விடுதலைனு வைச்சி விடுதலை இல்லாமல் செய்கிறேன்

பரிசுகளை வாங்கச்சொல்லி கட்டாயப்படுத்துறாங்க ஊருக்கு போனதும் என்ன நாடகம் போடலாம்னு தம்பிங்ககிட்ட கேட்கனும் கண்டிப்பா

வணக்கம் அய்யா உங்களை தமிழ்நாட்டு மேடைகளில் ரொம்ப திட்டி பேசிட்டேன், இனியும் அப்படி பேச வேண்டி இருக்கும். இதையெல்லாம் மனசுல வைச்சுக்காம பொறுத்துக்குங்க

தமிழகத்தமிழர்களை எழுச்சியடையாமல் தடுத்துவிட்டதற்கு அன்பளிப்புங்ககளா இது...?

விளங்காமல் முழிக்கும் ஈழத்தமிழன்

நன்றி மீனகம்,

Saturday, December 25, 2010

நாம் ஒருதாய் பிள்ளைகள். ஒற்றுமையே எமது இனத்தின் விடுதலையை தீர்மானிக்கும்,

http://eeladhesam.com/images/breaking/pooraadam.jpg2009 வரை ஒரே இலக்கில் புள்ளி விலகாமல் தமிழினத்தின் செய்திகளை மிக ஒற்றுமையாக வெளியிட்ட தமிழ் ஊடகங்கள், இணையங்கள், இன்று கட்டுப்பாடற்று, காட்டாறாக கரை புரண்டு காழ்ப்புணர்வு செய்திகளை கக்குகின்றன.

எதை எடுப்பது எதை நிராகரிப்பது என்பது தெரியாமல் ஒவ்வொரு தனிமனிதனும் தனக்குள் ஒருகருத்தை உண்டுபண்ணி தடுமாறுகிறான், இது எங்குபோய் முடியுமோ என்ற ஆதங்கத்தில் பலர் செய்வதறியாது திகைத்துப்போயுள்ளனர்.

எந்த தமிழ் இணயத்தளத்தை திறந்தாலும் மனவருத்தத்தோடு வெளியேறவேண்டிய நிலை, எங்குபார்த்தாலும் போட்டி, நானோ நீயோ என்ற நாய்களை விடக்கேவலமான கடிபாடு, ஒவ்வொருவரும் போராளியென்றும் பொறுப்பாளரென்றும் கட்டுரைகள் எழுதுகின்றனர். ஆனால் அவர்கள் விடுதலைப்புலிகள் இயக்கத்தில்தான் பொறுப்பாளராகவும் போராளியாகவும் இருந்ததாகத்தான் எழுதுகின்றனர் அப்போ ஏனிந்த முரண்பாடென்று தெரியவில்லை, ஒன்றரை வருட இடைவெளியில் இப்படியென்றால் ஒரு ஐந்து வருடங்கள் சென்றால் இந்திய தமிழ்நாட்டின் அரசியலையும் வென்றுவிடும் அளவுக்கு குத்து வெட்டில் வந்து முடியுமோ என்ற அச்சம் தோன்றுகிறது.

ஒருவர் கூறுகிறார் முள்ளிவாய்க்கால் இறுதிப்பொழுதில் வன்னியில் இருந்தவர் எப்படி விமானநிலையம் கடந்து வந்துசேர்ந்தார். அப்படியென்றால் இராணுவ உதவியுடன்தான் வெளியேறியிருக்கவேண்டும். இவர் உளவுபார்க்க வந்திருக்கிறார் என்கிறார், குற்றஞ்சாட்டுபவர் எப்படி வந்துசேர்ந்தார் என்பதை நோக்கினால் அவரும் உளவாளி என்றுதானே இன்னொருவர் சந்தேகப்படுவார். தீர விசாரிக்காமல் ஒருவரை குற்றஞ்சொல்லுவதை முதலில் நிறுத்தவேண்டும். உண்மையில் உளவாளியானால் நிச்சியம் கவனமெடுக்க வேண்டுமென்பது மறுப்பதற்கில்லை.

ஒவ்வொருவரும் தமது தனிப்பட்ட கோபதாபங்களை பொதுவில் இழுத்துவிடுவது தமிழ்ச்சமூகத்தையே குப்பைக்கும்பியாக்கிவிடும். ஒருவரை சந்தேகப்பட்டால் அதில் உறுதியான நியாயம் இருக்கவேண்டும். அல்லது இரகசியமாக அமைப்புரீதியாக புலனாய்வு செய்து உறுதிப்படுத்தியபின் குற்றச்சாட்டை ஆதாரத்துடன் வெளியிடலாம். அனுமானத்தையும் காழ்ப்புணர்வையும் வைத்துக்கொண்டு வசைபாடுவது "வசைபாடுபவரையே சந்தேகிக்க வைக்கும்", விடுதலைப்புலிகள் இயக்கத்தில் போராளியாக இருந்த ஒருவருக்கு இதுபற்றி சொல்லிக்கொடுக்க வேண்டிய தேவை இருக்காதென்றே நம்பலாம்.

தமிழருக்கு எதிராக செயற்பட்டு தமிழினத்தை அழித்து சிதைத்த சிங்களவனைப்பற்றியோ, சிங்களவனை ஊக்குவித்து வழிநடத்திய இந்தியனைப்பற்றியோ, ஒன்றோடு ஒன்றாக இருந்து அழிவின் கொடூரங்களுக்கு பக்கச்சாவியாக செயற்பட்டு தமிழரின் சவக்காட்டுக்கு சுருதி பாடிய தமிழ்த்துரோகிகளை பற்றியோ, கவலையில்லாமல் எல்லாம் மறந்து ஒரே வீட்டுக்குள் அடிபிடி, காட்டிக்கொடுப்புக்கள். வெட்கப்பட வைக்கிறது. வெட்கம் ஒருபுறம் தள்ளி வைத்தாலும் தமிழரின் பலம் சிதைக்கப்படுகிறது என்பதை பொது நோக்கோடு உணரவேண்டும்.

பிரித்தானியாவில் ராஜபக்க்ஷவுக்கு லாடம் கட்டி ஒக்ஸ்போட்டில் கால் வைக்காமல் திருப்பியனுப்பிய புலம்பெயர் தமிழர்களின் ஒற்றுமையையும் உறுதியையும் உலகத்தமிழினமே உள்ளத்தில் பெரும் உவகையோடு கொண்டாடியது, அந்தநிகழ்வு இந்திய அரசையும் தமிழ்நாடு கருணா அரசையும் கடகடக்க வைத்திருந்தது அதை ஏன் வீர ஈழத்தமிழினம் உணரமறுக்கிறது.

நாட்டில் ஈழத்தமிழர்களுக்கான அரசியல் கட்சிகள் தம்பாட்டுக்கு ஏதோ ஒரு ராகத்தில் போய்க்கொண்டிருக்கின்றன. துரோககூட்டங்களான விரோதிகளுடன் அரசியல் அரங்கம் அமைத்து அரசாங்கத்துடன் இணைந்து உரிமையை பெறப்போவதாக நகைப்புக்கிடமாக அறிக்கை விடுகின்றன. அரசாங்கத்துடன் இணைந்து உரிமையை வென்றெடுக்கப்போவதாக அவர்கள் கூறும் உலக அதிசயத்தை அவர்களாவேயே புரிந்துகொள்ள முடியுமோ தெரியவில்லை.

தமிழனுக்கு ஒன்றுமில்லை என்பதுதான் சிங்களவனின் 100 வருடங்களுக்கு மேலான அரசியல் நிலைப்பாடு. அந்த நிலையை எதிர்த்து உருவானதுதான் ஆயுதப்போராட்டம். இப்போ அரசாங்கத்துடன் இணைந்து தமிழரின் உரிமையை வென்றெடுக்கப்போகிறோம் என்கின்றனர் .சில அரசியல் ஆசான்கள் இன்னும் ஒருபடி மேலேபோய் துரோகி கருணா மூலம் தமிழர்களுக்கான உரிமைகளை தட்டிக்கேட்டு பெறமுடியும் என்று தன்னிலை மறந்து கூறியிருக்கின்றனர். இதைவிட ஒரு நகைச்சுவை தமிழ்ச்சினிமாவிலும் இதுவரை எவரும் கண்டுகளித்திருக்கு முடியாது.

தமிழர்களுக்கான நியாயம் இருப்பதை உலகம் உணர்ந்துகொள்ளும் இந்தச்சமயத்தில் எமது ஒற்றுமையை குலைக்கலாமா? உலகமே வியக்கக்கூடிய அளவு வீரத்தையும் விவேகத்தையும் கொண்ட விடுதலைப்புலிகளின் வாரிசுகளான நாம் எமது உள்க்கட்டமைப்பை உடைத்து பலயீனமானவர்களாக எதை சாதித்துவிடப்போகிறோம்? விடுதலைப்புலிகளின் உட்கட்டமைப்பும் வெளிக்கசிவு ஏற்படாத அறுதியான உறுதியும் எம்மாலேயே கேள்விக்குள்ளாகலாமா.

செயல்ப்பாடுதான் எதையும் நிர்ணயிக்கும் தராசாக இருந்துவருவதாக பலசந்தர்ப்பங்கள் தமிழினத்திற்கு இனங்காட்டியிருக்கின்றன, விடுதலைப்புலிகளின் செயற்பாடுகளே உலகுக்கு தமிழரின் இன்னலை எடுத்துச்சென்றது. இன்றய எமது செயற்பாடுகள் நிச்சியம் எமக்கான இடத்தை தீர்மானிக்கும்.

எல்லாவற்றிர்கும் மேலாக விடுதலைப்புலிகள் இயக்கத்தின் உறுதியும், தலைவரின் சுயநலமற்ற தீர்க்கதரிசனமான தொலைநோக்கும்தான் இன்று தமிழர்களை ஒரு ஒழுங்குக்குட்பட்டு நடக்கக்கூடியவர்கள் என உலகநாடுகளுக்கு அறியவைத்திருக்கிறது.

சில கட்டுப்பாடுகளுக்காகவும் சபிரதாயத்திற்காகவும் விடுதலைப்புலிகளின் போராட்டத்தை உலகம் எதிர்த்தாலும், தனிப்பட்ட ரீதியில் தலைவர் பிரபாகரன் அவர்களை உலக அரசியல்த்தலைவர்கள் மிகுந்த மரியாதையோடுதான் நோக்குகின்றனர், அவரது நடத்தையை அவரை எதிர்ப்பவர்கள் கூட விமர்சிப்பதில்லை என்பதை தமிழினம் பெருமையுடன் பார்க்கவேண்டும். இன்று தலைவர் வெளிவரமுடியாத குறுகிய காலத்தில் கண்மூடி ஒருவினாடி தலைவரை நினைத்து அடுத்த அடியை எடுத்து வைக்க கட்டுப்பாட்டுடன் முயற்சிப்போம்,, ஒற்றுமையே எமது இனத்தின் விடுதலையை தீர்மானிக்கும்,.

ஈழதேசம் இணையத்திற்காக ஆரணி.

Tuesday, December 21, 2010

இந்த ஒற்றை மனிதனே.... - ச.ச.முத்து.

இப்போதும் எல்லோரும் ஏதோ ஒரு தத்துவவரிகளுக்குள்ளாகவே அவரது வரலாற்றையும் அவரத பயணத்தையும் நோக்கி, அநுணுகப்பார்த்து தங்களது தராசுகளில் நிறுத்து முடிவுகளை எடுத்து ஏமாறுகிறார்கள்.

ஆனாலும் கோடிக்கணக்கான மனிதர்களால் மிகவும் ஆழமான உணர்வுகளால் எந்தவொரு பிரதியுபகாரமும் நினைக்கப்படாமல் நேசிக்கப்படும் ஒரு அதிமானுடனாக அவர் இன்னும் கருதப்படுவதற்கு பின்னால் அவரின் ஒப்பற்ற ஆளுமையும், தான் நேசித்த எத்தகைய இடர்கள் வரினும் தொடரும் ஓர்மமும் நிறைந்தே காணப்படுகின்றது.

இதோ, அவருடைய ஐம்பத்தி ஆறாவது பிறந்ததினமும் வந்துபோய்விட்டது. மிகவும் இருள் சூழ்ந்த ஒரு குழப்பம் நிறைந்த பொழுதில் அந்த மனிதனின் பிறந்தநாள் வந்து போயுள்ளது. வேறு எப்போதையும்விட இப்போதுதான் வேலுப்பிள்ளை பிரபாகரன் என்ற அந்த மனிதனின் தேவையும், அவரின் வரலாற்று மீளுகையும் முழு தமிழர்களாலும் எதிர்பார்க்கப்படுகின்றது.

எல்லாப்பலங்களையும் இழந்து நாம் நின்றிருக்கும் இந்த பொழுதிலும் அந்த ஒற்றை மனிதன் வந்துவிட்டால் அனைத்தையும் மீளக்கட்டி அமைத்து எம்மை நிமிரச்செய்துவிடுவான் என்ற முழு மக்களின் நம்பிக்கைதான் அந்த மனிதனின் நாற்பது ஆண்டுகால போராட்ட வரலாறு.

ஆறுகோடி தமிழர்கள் இருந்தாலும் அந்த ஒற்றை மனிதனே எம் இனம் முழுவதற்குமான ஒரே முகவரியாகவும், எல்லாத்தளைகளையும் அறுத்தெறிந்து நாம் எழுவதற்கான ஒரே பிடிமானமாகவும் எந்தவொரு பாசாங்கும் இன்றி மிகஇயல்பாகவே எல்லோராலும் நம்பப்படுகின்றான்.

இன்றும் அந்த ஒற்றை மனிதனின் ஒரு சிறு குரல் வந்தாலே போதும் இந்த இனத்துக்கு. இப்போது நடந்துகொண்டிருக்கின்ற அனைத்து அநீதிகளும், அவமானப்படுத்தல்களும் ஒரு கணத்தில் மறைந்துவிடும் என்ற நம்பிக்கையே எமது மக்கள் அனைவரதும் எதிர்பார்ப்பாக இருக்கின்றது. இப்படி நினைப்பது சரியா, பிழையா என்பதற்கு அப்பால் இப்படியான நம்பிக்கையை ஒரு முழுமக்கள் கூட்டமும் ஒருமித்து நினைக்கிறார்கள். அதுவே மிக உண்மை.

ஒரு தேசியஇனம் முழுமையினதும் எதிர்பார்ப்பும் அதுதான். இந்த எதிர்பார்ப்பு என்பது நேர்மையாகவும், முழுத்தூய்மையாகவும் தான் நேசித்த மக்களுக்காகவும், இலட்சியத்துக்காகவும் போராடிய அந்த மனிதனின் வரலாற்றிலிருந்தே பிறப்பிக்கப்படுகின்றது.

ஏறத்தாழ நாற்பது வருடங்களாகிறது தேசியதலைவர் விடுதலைப் போராட்டத்துக்காக புறப்பட்டு. இந்த நாற்பது வருடங்களாக அவரை தொட்டும், உரசியும், சுற்றிவளைத்தும் மரணம் பின்தொடர்ந்தபடியே இருக்க அவர் போராட்டத்தை முன்னகர்த்தியபடியே இருந்தார். மரணத்தை அவர் ஒரு பொருட்டாக நினைத்ததும் இல்லை.

போராட்ட வாழ்வுக்கும் மரணத்துக்குமான இடைவெளி மிகமிக மெல்லிய நூலிழை போன்றது என்பதை அவர் மிகத்துல்லியமாய புரிந்திருந்தார். ஒரு போராளிக்கு ஆக்கிரமிப்பாளனிடம் இருந்து ஒரு துப்பாக்கிச்சன்னமோ, ஒரு குண்டின் வெடித்த சிதறலோ எப்போதும் உயிர்குடிக்க காத்திருக்கும் என்பதும் அவருக்கு தெரியும்.

78ம் ஆண்டின் பெப்ரவரிமாதம் 5ம் திகதி திருநெல்வேலியில் இருந்த சிறீலங்காவின் மக்கள் வங்கிக்குள் பகலில் உள்நுழைந்து போராட்டத் தேவைக்கான பணத்தை பறித்தெடுக்கும் முயற்சிக்கு செல்வதற்கு முன்னர் தனது தோழனும் தன்னுடன் முதலில் இணைந்தவருமான கலாபதியிடம் ‘இந்த தாக்குதலில் தனக்கு ஏதும் நடந்தால்க்கூட, சோர்வின்றி போராட்டத்தை தொடரவேண்டும்’ என்று நிதானமாக கூறிச்செல்லக் கூடியஅளவுக்கு அவருக்கு போராட்ட வாழ்வின் நிலையாமை தெளிவாகப் புரிந்திருந்தது. இதையே அவர் தினமும் தன்னோடு இருப்பவர்களுக்கு சொல்லியும் புரியவைத்தும் இருந்தார்.

1983 யூலை 23ம் திகதி திருநெல்வேலி தபால்பெட்டிச் சந்திக்கு அருகில் ராணுவ தொடர் அணிமீதான் தாக்குதலின்போதுகூட அவர் தன் தோழர்களுக்கு ‘தான்’ மரணித்தாலும் தொடரவேண்டிய பணிகள்பற்றி மிகத்ததெளிவாக கூறியபின்னரே தானும் அந்த தாக்குதலின் மிகமுக்கிய இடத்தில் நிலைகொண்டு எதிரியை எதிர்பார்த்திருந்தார்.

இரண்டாவதாக அவர் போராட்டத்தின் இயல்பு விதியை எந்தவொரு கடினமான சொற்களுக்குள்ளாகவோ, அந்நிய மேற்கோள்களுக்குள்ளாகவோ எடுத்துக் கொள்ளாமல் மிகவும் இயல்பான புரிதலுக்குள்ளாகவே விளங்கிக்கொண்டிருந்தார். தனி ஒருவனாக அவர் போராட புறப்பட்டபோது அவருக்கு முன்பாக பெரும் பாதை ஒன்று நீண்டு நின்றது. எந்தவொரு திசைகாட்டலும் இல்லாத அந்த பாதையில் தனியனாக அவர் இறங்கினார். சிறுகச்சிறுக கூட்டினார். பெருமக்கள் எழவேண்டுமானால் முதலில் அவர்களுக்கு விடுதலையின் போரிலும், போராட்டத்தின் மீதும் நம்பிக்கை வரவேண்டும் என்பதை தெரிந்துகொண்டார்.

அடக்கப்பட்ட மக்கள் நம்பிக்கை கொண்டு எழுவதும், ஆளும் ஆக்கிமிப்பாளர்கள் அந்த மக்களின் நம்பிக்கையை நசுக்குவதுமான இரண்டு எதிர் எதிர் வினைகள்தான் விடுதலைப் போராட்டம் என்பது. தேசியத்தலைவர் இந்த கோட்பாட்டை ஆழமாகப்புரிந்து கொண்டார். அதிலும் தனக்குள் மிக ஆழமான நம்பிக்கையை அவர் வளர்த்திருந்தார். இந்த நம்பிக்கையானது விடுதலைப்புலிகளின் முதலாவது தாக்குதலான துரையப்பா அழிப்பின்போதே அவரில் தொடங்கிவிட்டிருந்தது.

1975ல் அந்த தாக்குதலுக்காக அவர் ஒரு வெள்ளை வேட்டியுடனும், வெள்ளை சேர்ட்டுடனும் வல்வெட்டித்துறையிலிருந்து தனது நண்பனையும் அழைத்துக்கொண்டு சென்றபோது அவருக்கு பொன்னாலை வரதராஜப்பெருமாள்கோவில் அதற்கு முன்னர் ஒருபோதும் தெரிந்திராத இடமாகவே இருந்தது. அதற்கு முன்னரே அந்த இடத்தை தெரிந்துகொண்ட வேறு இரு நண்பர்களின் தகவலினதும், குறிப்புகளினதும் அடிப்படையிலேயே அந்த இடத்துக்கு ஏதோ ஒரு நம்பிக்கையுடன் சென்றார்

அந்த நம்பிக்கைதான் அவரது ஆன்மம்.தனக்குள் வளர்த்துக்கொண்ட உறுதியான நம்பிக்கையை தனது தோழர்களிடமும், அவர்களில் இருந்து திரளான மக்களிடமும் பெரும் தீயாக எழுப்பலாம் என உண்மையாக நம்பினார். விளைவுகளை ஏற்படுத்துவதும்,விளைவுகளில் இருந்து எழுச்சியையும்,எதிரிக்கு வீழ்ச்சியை ஏற்படுத்துவதுமே அவரின் போரியல்.75ம்ஆண்டு பொன்னாலையில் துரையப்பாவை வீழ்த்தியதிலிருந்து விடுதலைப்புலிகள் அமைப்பின் விமானப் படைவரை எல்லாமே எமது மக்களின் விடுதலையின் மீதான நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கான பொறிமுறைகளாகவே அவரால் நகர்த்தப்பட்டது.

இந்த நம்பிக்கையை ஏற்படுத்துவதற்காகவே ஒவ்வொரு தாக்குதல்களும் நிகழ்த்தப்பட்டன. அதற்காகவே போரியல்கட்டுமானங்கள் எழுப்பப்பட்டன. அரசியல்பிரிவுகள் அமைக்கப்பட்டன. தமிழீழம் என்ற கருத்தை எமது மக்களுள் பற்ற வைத்து அதனை ஒரு சக்தியாக எழுப்புவதில் அவர் ஓயாது செயற்பட்டார். ஒரு இனம் பலநூற்றாண்டு பரிணாமத்தில் அடையும் விழிப்புணர்வையும் விடுதலையின் மீதான நம்பிக்கையையும் அவர் வெறும் நாற்பது ஆண்டுகால போராட்;டத்தில் தனது ஓய்வற்ற போராட்டத்தினூடாக ஏற்படுத்திவிட்டார்.

இனி,முழுவிடுதலையை தமிழினம் அடையும்வரைக்கும் அவரின் பயணம் என்றும் தொடரும்.இந்தப் பயணத்தின் முன்னால் செல்லும் பாதை காட்டியாகவே அவர்
இன்னும் தொடர்ந்துகொண்டு இருக்கிறார்.அவர் சோர்வும்,விரக்தியும் அடைந்து
ஓய்ந்திருந்தபொழுதுகள் அவரின் போராட்ட வரலாற்றில் இருந்ததில்லை.
அவருக்குள் இருக்கும் ஆன்மஉறுதியும்,மாவீரர்களின் இலட்சியநெருப்பும் அவரை
முன் நடத்தியபடியே இருக்கும்.அவரின் வழிகாட்டலில் எழுவது மட்டுமே அந்த
ஓய்வற்ற தலைவனுக்கு எங்களின் பிறந்ததின செய்தியாக இருக்கும்.

நன்றி தமிழ்க்கதிர்,

Saturday, December 18, 2010

தொடர்ந்து கொலைவெறியில் நடைவண்டி கருணாநிதியும் இந்திய ஆதிக்கமும்,

இந்திய துணைக்கண்டத்தில் தமிழ்நாட்டின் அரசியல் தவிர்க்க முடியாமல் ஈழத்தமிழர்களுடன் பிணைந்த ஒன்றாகவே நீண்டகாலமாக இருந்து வருகிறது. ஈழத்தமிழர்களுக்கு எந்த லாபமில்லாவிட்டாலும் தமிழகத்து அரசியல் கட்சிகள் ஈழத்துப்பிரச்சினையை தேர்தல்களை சந்திக்கும் காலங்களில் தமது தோளில் தூக்கி வைத்துக்கொள்ளுவதுண்டு.



எப்பொழுதும் தமது உள்நாட்டுப்பிரச்சினை மற்றும் ஊழல்களை மூடிமறைப்பதற்கான வடிகாலாக ஈழத்தமிழர் பிரச்சினை அவர்களுக்கு பேருதவியாக இருந்துவருகிறது. சுயநலத்திற்காக ஈழப்பிரச்சினையை கையிலெடுத்து தாம் தான் ஈழத்தமிழர்களின் மேய்ப்பர்களென்று ஆளாளுக்கு பேரணி உண்ணாவிரதம் போன்றவற்றை போட்டிபோட்டு தம்பாட்டுக்கு நடத்தி தம்பட்டமடிப்பது தமிழகத்து அரசியலில் வாடிக்கையான வேடிக்கை ஒன்று.

ஆனால் இன்றுவரை தமிழக அரசியல்வாதிகளால் ஏற்பட்ட நன்மைகளைவிட ஈழமக்களுக்கு அழிவுகளும் அவலங்களும் உபத்திரவங்களுமே அதிகம். வாழ வழியத்து கடல்வழியாக சென்று அகதியாக தஞ்சமடைந்த ஈழத்தமிழர்கள் கூட, தமிழ்த் தலைவன் தான் என கூறிக்கொள்ளும் கருணாநிதி ஆட்சிசெய்யும் தமிழ்நாட்டில் கைதிகள் போலவும், எஞ்சியவர்கள் தற்கொலை செய்து கொள்ளுபவர்களாகவும், தீக்குளித்து உயிரைப் போக்கிக்கொள்ளுபவர்களாகவும், பெண்கள் தமிழக பொலிஸாரால் கற்பழிக்கப்படுபவர்களாகவும், மாணவர்கள் உயர்கல்வி கற்பதற்கு அனுமதியற்றவர்களாகவும், சொந்தமாக ஒரு பொருளும் வாங்கி அனுபவிக்க அருகதையற்றவர்களாகவும் நாயிற்கடையராக அலைந்துதிரிகின்றனர்.

2009 ம் ஆண்டு தமிழ்நாட்டின் தலைவன் கருணாநிதியின் முழு உடன்பாட்டுடன் வஞ்சகமாக ஈழத்தில் இன அழிப்புசெய்யப்பட்டு ஒன்றரை வருடங்கள் முடிந்துவிட்டன, அங்கு யுத்தம் தொடருவதற்கான எந்த ஒரு அடையாளமும் இதுவரை காணப்படவில்லை. இந்த இடைப்பட்ட காலத்தில் பலமுறை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரும், அமைச்சின் செயலரும் மற்றும் கருணாநிதியின் அரசியல்க்கட்சி பிரதிநிதிகளும், சினிமா நடிக நடிகைகளும், இலங்கைக்கு சென்று விருந்துண்டு மகிழ்ச்சியாக கொண்டாட்டங்கள் நடத்தி சொந்தமாக சொத்துக்கள் வாங்கி, தொழில் தொடங்கிவிட்டு திரும்பியிருக்கின்றனர்.

மறுபக்கம் இலங்கையின் ஜனாதிபதி மற்றும் ஸ்ரீலங்காவின் தமிழ் சிங்கள கட்சியினரும் பரசுபரம் பயணங்கள் தொடருகின்றன. தமிழர்களின் மறுவாழ்வுக்கான ஒப்பந்தங்களும் ஏதேதோ செய்வதாக கூறப்படுகிறது. செயல்முறையில் மீள் குடியேற்ற்வாசிகளுக்கு வீடு கட்டுவதற்கான அடிக்கல் ஒன்று நாட்டியது தவிர எதையும் காணமுடியவில்லை.

இந்தநிலையில் புதிய புரளி ஒன்று இந்தியாவால் கிளப்பப்பட்டிருக்கிறது. நகைப்புக்கிடமான இந்தப்புரளி சுயநலன் சார்ந்து இந்தியாவால் புலிகளின் மீது வலிந்து சுமத்தப்படுவது புலிகள் இயக்கமும் ஈழத்தமிழரும் கணக்கில் கொள்ளாவிட்டாலும், சில வேண்டத்தகாத நிகழ்வுகளை இந்தப்பிரச்சாரம் தோற்றுவிக்கக்கூடும் என்ற கவலையும் தமிழ்மக்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. இந்தியாவும் அந்நாட்டு அரசியல்வாதிகளும் தமது அரசியலின் குறை நிவர்த்தி செய்வதற்காகவும், மாபெரும் ஊழல்க்குற்றச்சாட்டுக்களை கழுவுவதற்காகவும் தேவையற்ற ஒரு பொய்யை மீண்டும் அழிக்கப்பட்ட ஈழத்தமிழர் மீதும் புலிகள் இயக்கத்தின் மீதும் வலிந்து சுமத்தியிருக்கின்றனர்.

இன்னும் ஒருசிலவருடங்களில் இயற்கையெய்திவிடக்கூடிய வயதிலிருக்கும், கடும் முதியவர்களான பிரதமர் மன்மோகன்சிங், ,மற்றும் எழுந்து நிற்கமுடியாத சக்கர நாற்காலி உதவியுடன் நடமாடும் கருணாநிதி, உட்பட முக்கிய தலைவர்களைப் படுகொலை செய்யும் திட்டமொன்று விடுதலைப் புலிகளால் வகுக்கப்பட்டுள்ளதாக ரைம்ஸ் ஒப் இந்தியா பத்திரிகை மூலம் வெளியிடப்பட்டிருக்கிறது.

இலங்கையில் விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப்பட்ட பின், புலிகளில் பலர் இந்தியாவுக்குள் ஊடுருவியுள்ளனர். அவர்கள் மூலமே இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உட்பட்ட முக்கிய தலைவர்களைப் படுகொலை செய்யும் திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக, இந்தியப் புலனாய்வுத்துறை புதிய கண்டுபிடிப்பொன்றை கண்டுபிடித்துள்ளதாக அந்தச்செய்தி தெரிவிக்கிறது. குறிப்பாக இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா, இந்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம், தமிழ்நாடு முதலமைச்சர் மு.கருணாநிதி, ஆகியோரை இலக்கு வைத்துத் தாக்குதல்களை மேற்கொள்வது அவர்களின் நோக்கமாக இருப்பதாக ரைம்ஸ் ஒப் இந்தியா பத்திரிகை தெரிவிக்கின்றது.

"ஈழத்தமிழர்களின் உச்ச வெறுப்புக்குள்ளானவர்கள் இந்த நான்குபேரும் என்பது ஈழத்தமிழ்த்தாயின் வயிற்றில் பிறந்த பால்குடிக்கும் குழந்தைக்கும் தெரியும்". ஆனால் இன்று போராட்டம் தற்காலிகமாக ஈழத்தில்வாழும் தமிழ் மகனின்கையில் இல்லை .புலம்பெயர் தேசங்களில்த்தான் சட்டத்துக்குட்பட்ட வகையில் நீதிகேட்டு இனப்படுகொலைக் குற்றவாளிகளை இனங்காட்டும் போராட்டம் நடந்துகொண்டிருக்கிறது. அத்துடன் எவரையும் கொலைசெய்யும் தேவை புலிகளுக்கிருப்பதாகவும் நம்பமுடியாது.

இந்தியா என்ற நாடு அறிந்திருக்காத மனுதர்மத்துடன் ஜனநாயக வழியில் சர்வதேச அரங்குக்கு போராட்டத்தை கொண்டுசென்று புலம்பெயர் தமிழர்கள் நியாயம் கேட்டு போராடிக்கொண்டிருக்கின்றனர். இந்த எழுச்சி இந்தியாவை கலக்கத்தில் ஆழ்த்தியிருக்கலாம். இந்த நேரத்தில், பிரதமர் மன்மோகன்சிங், சோனியா காந்தி, கருணாநிதி, உள்துறை மந்திரி ப.சிதம்பரம் உள்பட நாட்டின் முக்கிய தலைவர்களுக்கு விடுதலைப்புலிகளால் ஆபத்து இருப்பதாகவும், தமிழகத்தில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தும் படியும் மத்திய உளவுத்துறை எச்சரித்துள்ளதாக தமிழக பொலிஸ் டி.ஜி.பி லத்திகா சரண் பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார்.

லத்திகா சரண் சர்ச்சைக்குரிய ஒரு பொலிஸ் அதிகாரி. அவர் டிஜிபி யாக பதவி வகிக்க தகுதியில்லாதவரென உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி தகுதியானவர் பதவியில் அமரும்வரை லத்திகாவை தற்காலிகமாக தொடரும்படி பணித்திருக்கிறது. கருணாநிதி தனது வசதிக்காக லத்திகாவை விட சிரேஸ்ட்ட அதிகாரியை இருட்டடிப்புச்செய்து தனது சுயலாபம் கருதி லத்திகாவை பணியில் அமர்த்தியிருக்கிறார். நன்றிக்கடனைத்தீர்க்க லத்திகா எதுவேண்டுமானாலும் செய்யவேண்டிய கட்டத்தில் இருக்கிறார்.

2011 ஆண்டு மே தமிழ் நாட்டுக்கான சட்டசபைத்தேர்தல் வரவிருக்கிறது. இந்தநேரத்தில் தொலைதொடர்புத்துறை 2G ஸ்பெக்ட்ரம் அலை வரிசை ஒதுக்கீட்டு ஊழல் பூதாகரமாக 176,000,00,00,000, லட்சம் கோடி குற்றச்சாட்டு திமுக மீதும். கூட்டாளி காங்கிரஸின் மீதும் வீழ்ந்திருக்கிறது. இச்செய்தி உலகப்பிரசித்தி பெற்றதென்பதால் அதுபற்றி விபரிக்கத்தேவையில்லை. ஆனாலும் முதல்க்குற்றவாளிகள் (திருடர்கள்) 1, ஆண்டிமுத்து ராசா.திமுக மத்திய மந்திரி தொலைத்தொடர்புத்துறை, 2, கருணாநிதியின் மூன்றாம் தாரத்து மனைவி ராசாத்தியம்மாளின் மகள் கனிமொழி. 3, திமுக ஆதரவு புலனாய்வுப்பத்திரிகை நக்கீரனின் இணை ஆசிரியர் அ. காமராஜ். 4, சென்னையில் கனிமொழியுடன் இணைந்து தொண்டு அமைப்பு என்கிறபேரில் தமிழ் மையம், என்கிற அமைப்பை நடத்திவரும் முன்னாள் பிலிப்பைன்ஸ் வெரித்தாஸ் வானொலியில் பணியாற்றி புலிகள் இயக்கத்தையும் தேசியத்தலைவரையும் ஏமாற்றிய போலிப்பாதிரி ஜெகத் கஸ்பர்ராஜ், இன்னும் நிறைய கருணாநிதியின் பினாமிகள் மாட்டியிருக்கின்றனர். இவைகளிலிருந்து மீளவேண்டுமானால் ஏதாவது பலமான திசைதிருப்பல் திமுக, காங்கிரஸுக்கு உடனடித்தேவை.

அதற்கு பலியிட்டிருக்கும் ஒரு வீண் பழிதான், மேற்சொன்ன முக்கிய தலைவர்களைப் படுகொலை செய்ய விடுதலைப் புலிகளால் திட்டமொன்று வகுக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் கட்டுக்கதை. இந்தக் கட்டுக்கதையை உலகமும் இந்தியாவிலுள்ள மக்களும் நம்புகிறார்களோ இல்லையோ அரசியல் மட்டத்தில் சில காய்நகர்த்தல்களை மேற்கொண்டு ஸ்பெக்ரம் பிரச்சினையை திசைதிருப்பி காலதாமதப்படுத்தி வரப்போகும் தேர்தலுக்கு பங்கமில்லாமல் தப்பிக்கவேண்டும் என்பது கருணாநிதி மற்றும் காங்கிரசின் நோக்கமாகும்.

ஸ்பெக்ரம் ஊழலின்பின் காங்கிரஸுக்கு திமுக மீது அதிக கோபமும் வெறுப்பும் உண்டாகியிருக்கிறது. ஆனால் அவற்றை வெளிக்காட்டமுடியாத சங்கடமும் காங்கிரஸுக்கு உண்டு. பிரதமரின் மந்தமான நடைமுறைதான் ஊழலுக்கு வித்திட்டதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றஞ்சாட்டுகின்றன. ஊழலில் அதிக இலாபம் பெற்றவர்கள் திமுகவினர் என்பதும் உண்மை. ஆனால் அவைகளை முன்னிறுத்தி ஊழலை ஒப்புக்கொண்டுவிட முடியாத சிக்கல் காங்கிரசுக்கு உண்டு, ஊழல் உறுதிப்படுத்தப்பட்டுவிட்டால் ஆட்சி கலைக்கப்பட்டுவிடும் அபாயம் காங்கிரஸுக்கும் திமுகவுக்கும் பீதியை ஏற்படுத்தியிருக்கிறது. இதிலிருந்து மீள்வதற்கு ஏற்படுத்தப்பட்ட பூச்சாண்டிதான் மேற்சொன்ன படுகொலை என்கிற கட்டுக்கதைத்திட்டம்.

இரண்டாவது:, ஈழத்தின் போர்க்குற்றங்களை பிரித்தானிய சனல் 4, கொல்லப்பட்டவர்களை இனங்கண்டு ஒளிப்படங்களாகவும் வீடியோவாகவும் சர்வதேச அரங்கத்திற்கும் அம்பலப்படுத்திவிட்டது. ராஜபக்க்ஷ உடனடியாக நீதியின் முன் நிறுத்தப்படுகிறாரோ இல்லையோ சில இராணுவ அதிகாரிகள் குற்றவாளிகளாக அறியப்பட்டுவிட்டனர். போர்க்குற்றம் உறுதிப்படுத்தப்பட்டு அவர்களை விசாரணைக்குட்படுத்தும் பட்சத்தில் ஈழப்படுகொலையில் இந்தியா எந்த அளவுக்கு ஈடுபட்டது என்ற உண்மை வெளிவருவதற்கு நிறைய சந்தற்பங்களுண்டு.

பிற ஆதாரங்களாக விக்கிலீக்ஸ்ஸின் ஆவணங்கள், தமிழ் நாட்டிலிருந்து வெளியாகும் சவுக்கு இணையத்தளம் மற்றும் அமெரிக்க தூதுவர் பற்றீசியா புட்டெனிஸ், அவர்கள் வெளியிட்டதாகக்கூறப்படும் சந்தேகம். மலேசிய பினாங்க் துணை முதல்வர் பி ராமசாமி அவர்கள் இந்தியாவுக்கு எதிராக அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவுக்கும் ஐநாவுக்கும் அனுப்பிய போர்க்குற்றச்சாட்டு. இவை அனைத்தும் சேர்ந்து இந்திய அரசுக்கும் தமிழக முதல்வர் கருணாநிதிக்கும் எதிராக பல சங்கடங்களை தோற்றுவிக்கும்,

இதை அறிந்த இந்தியத்தரப்பு, புலிகள் தமக்கு எப்போதும் எதிரான நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபடுகின்றனர், இப்போதும் இந்தியத் தலைவர்களை குறி வைத்து கொலைசெய்யும் சதியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றனர் அதனால்த்தான் இறுதி யுத்தத்தின் போதும் நாங்கள் சிங்கள அரசுடன் இணைந்து எம்மை காப்பதற்காக புலிகளை கட்டுப்படுத்த ஸ்ரீலங்கா அரசுக்கு உதவினோம், என்று தப்பிப்பதற்கான முற்கூட்டிய தயாரிப்புத்தான் புதிதாக கிளப்பி விடப்பட்டிருக்கும் புலிகளின் படுகொலை திட்டம் என்கிற கதை. இதனுடன் 1991ம் ஆண்டு தமிழ்நாட்டின் ஸ்ரீ பெரும்புதூரில் வைத்து முன்னை நாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியைப் படுகொலை செய்ததும் புலிகள் அமைப்பினர் தான் என்பதால், புலிகள் பற்றிய புலனாய்வில் தாம் தொடர் கண்காணிப்பில் இருப்பதால் தற்போதய இரகசியம் தமக்கு உடனடியாக கிடைக்கப்பெற்றதாக பரப்புகின்றனர்.

சமீபத்தில் இந்திய அரசின் சார்பில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை இரண்டு ஆண்டுகள் நீ‌ட்டித்து உள்துறை அமைச்சகம் செய்தி வெளியிட்டிருந்தது. மத்திய அரசு பிறப்பித்த அந்த உத்தரவை உறுதி செய்வதற்காக, சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட நீதிபதி விக்ரம்ஜித் சென் தலைமையிலான தீர்ப்பாயத்தில் நடந்த விசாரணையின் போது, இலங்கையில் இருந்து தப்பிவரும் விடுதலைப் புலிகள் தமிழ்நாட்டில் ஒன்றிணைய முயன்று வருகிறார்கள். அது இந்தியாவின் பாதுகாப்பிற்கும், இறையாண்மைக்கும் அச்சுறுத்தலாகும்” என்று அரசின் சார்பாக கூறப்பட்டது.

அங்கு கூறப்பட்ட நியாயம் நீதிபதியை திருப்திப்படுத்தவில்லை. அதற்கான ஆதாரங்கள் ஏதேனும் உள்ளதா என்று அவர் கேள்வியெழுப்பினார். இது உளவுத் தகவல் என்று அரசு அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டது. அதற்கு நீதிபதி, இப்படி யார் வேண்டுமானாலும் கூறலாம், என்று தனது சந்தேகத்தை எழுப்பினார். அதற்கான காரணங்களை உறுதிப்படுத்துவதற்காக இப்படியொரு கட்டுக்கதை புனையப்பட்டிருக்கிறது என்றே நம்பலாம்.

தொடர்ச்சியாக தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை எதிர்த்து வைகோ அவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார், அது விசாரணைக்கு ஏற்றுக்கொண்டதை குழப்புவதற்கான சூழ்ச்சியாகவும் இந்த திட்டம் அரசு உதவியுடன் புலனாய்வுத்துறையினரால் தயாரிக்கப்பட்டிருக்கிறது.

ராஜீவ் காந்தி படுகொலைக்குப் பிறகு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை முதலில் பயங்கரவாத இயக்கம் என்றது இந்திய அரசு. ஆனால் அதனை உச்ச நீதிமன்றம் ஏற்க மறுத்த பிறகு, சட்டத்திற்குப் புறம்பான இயக்கம் என்று கூறியே தொடர்ந்து தடையை நீ‌டித்து வருகிறது. அதற்கான காரணம் எதுவும் கிடைக்காத நிலையில்தான், இப்படி ‘தமிழ்நாட்டில் ஒன்றிணைகிறார்கள்’, ‘இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்’, ‘தலைவர்களின் உயிருக்கு ஆபத்து’ என்றெல்லாம் தொடர்ந்து கதைகட்டுகின்றனர். இது இன்னுமொருவகையில் சிங்கள ராஜபக்க்ஷவை தூக்கிவிட்டு தமிழர்களை இல்லாமல் அழிக்கும் திட்டத்தின் ஆரம்பமாகவும் இருக்கலாம். இந்தியா தொடர்ந்து இப்படியான கீழ்த்தரமான செயலில் ஈடுபடுவதற்கு கருணாநிதியின் கொள்கைவகுப்பே காரணமாகித் தொடர்கின்றது.

எவ்வளவு தமிழர்களை கடலில் வைத்து சிங்கள இராணுவம் சுட்டுக்கொன்றாலும் காங்கிரஸை எதிர்த்து பதவியை பறிகொடுக்க விரும்பாத கருணாநிதி புலிகளை காரணங்காட்டி ராஜபக்க்ஷவை நியாயப்படுத்தும் எச்செயலையும் செய்யத்தயங்கமாட்டார் என்பது பல இடங்களில் உறுதியாகியிருக்கிறது.

கருணாநிதியை எதிர்க்கும் பெரும் சக்தியாக தமிழக மீனவர்களுக்கும் ஒடுக்கப்பட்டவர்களுக்கும், செந்தமிழன் சீமான் தலைமையிலான நாம் தமிழர் அமைப்பு உரக்க குரல்கொடுத்து வளர்ந்துவருவதும் கருணாநிதிக்கு வயிற்றை கலக்கும் செயல்ப்பாடாகியிருக்கிறது. புலிகளுக்கு இந்தியாவில் தடை நீக்கப்பட்டுவிட்டால் சீமானின் புலிகளின் ஆதரவு கொள்கை மக்கள் மத்தியில் வலுப்பெற்றுவிடும், என்பதால் கருணாநிதி சாகும்வரை புலி உருவத்திலான பொம்மைக்குக்கூட இந்தியாவில் தடைநீக்கம் செய்யக்கூடாது என்பதற்காக புலிப்பூச்சாண்டி கருணாநிதியைப் பொறுத்தவரை தொடர்ந்து உயிர் வாழ்ந்துகொண்டேயிருக்கும்.

ஆரம்பத்தில் சீமானின் பிரவேசம் இவ்வளவு பூதாகரமாக தன்னை எதிர்க்குமென கருணாநிதி நம்பவில்லை சீமானின் ஈழ ஆதரவுக்கொள்கை கருணாநிதிக்கு பயத்தை அதிகரித்து அடுத்தடுத்து சீமானை தேசியப்பாதுகாப்பு சட்டத்திலும் தூக்கி உள்ளேபோட்டார். ஆனால் உயர்நீதிமன்றமே அது செல்லாது என்றுகூறி சீமானை விடுவித்திருக்கிறது. கருணாநிதியின் இப்பேற்பட்ட கீழ்த்தரமான அடக்குமுறைகள் மக்களை இன்னும் சீமான் தலைமையில் அணிதிரள வைத்திருப்பதும் கருணாநிதிக்கு விடுதலைப்புலிகளை தொடர்ந்து தடைசெய்யவேண்டிய கட்டாயத்தையும் உண்டுபண்ணிக்கொண்டிருக்கிறது. விடுதலைப்புலிகளின் தடை நீக்கப்பட்டால் வைகோ நெடுமாறன் போன்றோருடன் பெரும் சக்தியாக உருவாகிக்கொண்டிருக்கும் சீமான் தலைமையில் தமிழ்நாட்டை பறிகொடுக்கவேண்டுமென்ற பயம் அவரை ஒரு நடைவண்டி ஹிட்லராக மாற்றியிருக்கிறது.

ஈழதேசம் இணையத்திற்காக,,
கனகதரன்,

நன்றி ஈழதேசம்,

Wednesday, December 15, 2010

கவிதை: செத்த தாய் முலை கொடுத்தாள்


விண்முட்ட விஞ்ஞானம்
வினைத்திறனாய் ஆராய்ச்சி
கண் மாற்ற கால் மாற்ற
கலர் மாற்ற- தலை
மயிர்மாற்ற
கணக்கில்லா பெரு சிகிச்சை.

புல்லுக்கு வயதென்ன
பூண்டுக்கும் உயிர் உண்டோ
நத்தைக்கும் எறும்புக்கும்
சித்தங்கலங்காமல்
மெத்தப்படித்த பலர்
சுற்றி நின்று நடைப்பயிற்சி,
நில்லாமல் நெடு வழியும்
நீண்ட நேய மனம்.
நல்லோர் புதிய யுகம்
நாம் காண்போம் என்று குரல்.

நல்லாய்த்தான் இருந்தாலும்
நாங்கள் இதில் சேர்ப்பில்லை,

ஓசோனில் ஓட்டை
உலகெங்கும் மாநாடு
தென் துருவ பனி கரைய
திகைப்புடனே ஆய்ந்தறிவு
பல நூறு ஆண்டு -முன்
செத்த படு குழிக்கு
மெத்த நூதனமாய்
அகழ்வாய்வு ஒரு பக்கம்.

நல்லாய்த்தான் இருந்தாலும்
நாங்கள் இதில் சேர்ப்பில்லை,

பூவுக்கும் வேருக்கும்
நோகாமல் பிடுங்கி எழ
நூறுக்கும் மேலான
நிபுணர் குழு கூட்டம்.
காடழிக்கக்கூடாது.
கடலழியக்கூடாது.
காட்டு விலங்குகளும்
கவலை கொள்ளக்கூடாது.,

நல்லாய்த்தான் இருந்தாலும்
நாங்கள் இதில் சேர்ப்பில்லை,

போர் செய்யக்கூடாது
புகை கூட ஆகாது
மாடிக்குடியிருப்பில்
அமைதி கெடக்கூடாது.
கூவி குழந்தைகளை
குலைய வைக்க கூடாது
தாயும் குழந்தைகழும்
சங்கடம் கொள்ளாகாது,
ஐநா அறிக்கையது
அரசுகளின் கொள்கையது

நல்லாய்த்தான் இருந்தாலும்
நாங்கள் அதில் சேர்ப்பில்லை.

கொத்துக்குண்டுகளும்
கோர ரசாயனமும்
நித்தம் மனுவுடலை
நின்றழிக்கும் நஞ்சுகளும்
சித்தம் கலங்கிவிடும்
செயல் கொண்ட
அணு குண்டும்
எத்திக்கும் தடை செய்வோம்
எதிற்பவரை அழித்திடுவோம்,
வாய் பேச்சும் வரைவுகளும்

நல்லாய்த்தான் இருந்தாலும்
நாங்கள் இதில் சேர்ப்பில்லை,

வெட்டி வீழ்த்திய என்
விடலை மகன் தலை மீது-தேர்
சில் ஏற்றி சிதைத்த
சண்டாள சங்காரம்,

குட்டி பெற இருந்த
குஞ்சம்மா குடல் கிழிந்து
கக்கி கரு நசிந்து
ரத்தச்சகதியிலே தெருவோரம்
விட்டு விடை பெற்ற பெருந்துயரம்,

செத்த தாய் முலையில்
சிதறிய தலையுடனே -பசி
மெத்த எடுத்த பிஞ்சு
பால் குடித்த பரிதாபம்,

செத்து பலர் நாட்கள்
பதுங்கி இரு குழியில்
ரத்தம் மலம் சகதி -மொத்தம்
இருந்த நீர் குடித்து
பசி தீர்த்த அநியாயம்,

கொத்துக்கொத்தாக
குஞ்சு தாய் தகப்பன்
மொத்த பரம்பரையும்
செத்து கருகிய துயர வரலாறு,

எல்லாம் எம் தலையில்
எவரும் சேர்ப்பில்லை,

கவிதை, 2009 மே 19, ஒரு வருட வக்கிரத்தின் குமுறல்,
கனகாம்பிகை கதிர்காமன்







நன்றி நெருடல்,

ஈழத்தின் வீழ்ச்சி கருணாநிதியின் இதயத்தை சுட்டிருந்தால்...! - திருப்பி அடிப்பேன்! - சீமான் சிறையில் எழுதிய அதிரடி தொடர் - பாகம் 01


'எங்கள் மீனவனை இனியும் அடித்தால், சிங்கள மாணவர்களை நாங்கள் அடிப்போம்! என கூட்டத்தில் உரையாற்றியிருந்த நாம் தமிழர் கட்சியின் தலைவர் செந்தமிழன் சீமான் அவர்கள் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கடந்த ஐந்து மாதங்களாக வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்து அண்மையில் விடுதலையானார். அவர் சிறையிலிருந்தபோது எழுதிய அதிரடி அனல் கனல் தொடர்.

தொடரின் முதலாவது பாகம்:

''ஏனடா எரிக்கிறாய் என்றோ,

ஏனடா அடிக்கிறாய் என்றோ
எவனடா கேட்டீர் அவனை?
அடியென அவனுக்குச்
சாட்டை கொடுத்தவனும்
சுடுவென தோட்டா கொடுத்தவனும்
தடையென எமக்குத்தானே விதிக்கின்றனர்.
என்ன கொடுமையடா இது!''

- புலிகளின் கவிஞர் புதுவை இரத்தினதுரை எழுதிய வரிகள் என் நித்திரையைக் கிழிக்கின்றன. புரண்டு புரண்டு படுக்கிறேன். கொசுக்கடி இல்லை. குளிர் இல்லை. அட்டைப்பூச்சியோ... அரிப்புத் தொல்லையோ இல்லை. ஆனாலும், நித்திரை வரவில்லை. 'தேசியப் பாதுகாப்பு சட்டத்தைப் பாய்ச்சுகிற அளவுக்கு அப்படி என்ன செய்தோம்?’ என்கிற கேள்வி மனதுக்குள் குறுகுறுக்கிறது. என் மீனவனின் தொண்டையில் விழுந்த தூண்டிலின் வலியைச் சொன்னது தவறா? அதற்கா தேசியப் பாதுகாப்புக்கு பங்கம் வந்துவிட்டதாகப் பாய்ச்சல் காட்டினார்கள்?

என்னை ஒருவன் அடித்தான். 'ஐயோ வலிக்கிறது’ என்றேன். மீண்டும் அடித்தான். 'ஐயோ வலிக்கிறது’ எனத் துடித்தேன். மறுபடியும் சக்தி திரட்டி அடித்தான். 'ஐயோ வலிக்கிறது’ என அலறினேன். அடுத்தும் அடித்தான். இனிமேல் அடித்தால், ஓங்கித் திருப்பி அடிப்பேன். 'ஐயோ வலிக்கிறது’ என அலறுவான். 'வலிக்கிறதா அய்யா, அப்படித்தான் எனக்கும் வலித்தது அய்யா, இனிமேல் என்னை அடிக்காதே!’ என்பேன்.

இதைத் தவிர உலக மகா குற்றத்தை ஏதும் இந்த சீமான் செய்துவிடவில்லை. 60 ஆண்டுகளாக ஈழத்திலும், 20 ஆண்டுகளாக இங்கேயும் தமிழக மீனவர்களைத் துரத்தித் துரத்தி அடிக்கிறான் சிங்களவன். 'இனியும் அடித்தால்...’ என வலி பொறுக்காமல் அலறியது, இந்த அரசாங்கத்தை ஆத்திரப் படுத்திவிட்டதாம். வலையோடு போனவர்கள் ரணமாகவும் பிணமாகவும் ஒதுங்கியபோது, தமிழினத் தலைவராக இருக்கும் மனிதருக்கு வராத கோபம்... 'எம் இனத்தை ஏனடா அடிக்கிறாய்?’ எனக் கேட்டபோது கிளர்ந்துவிட்டதாம்!

சிங்கள மாணவனை அடிப்பேன் என எப்படிச் சொல்லலாம்? இரு இனங்களுக்கு இடையே பிரிவினையைத் தூண்டும் வாதம் அல்லவா இது?'' - ஆத்திரத்தில் அலறியது அரசுத் தரப்பு. எங்களவனை அடிக்கும்போது பாயாத சட்டம், சிங்களவனை அடிப்பேன் எனச் சொல்லும்போதே பாய்கிறது.

சட்டம் - ஒழுங்கு குலைந்துவிட்டதாக, பேருந்துகள் கொளுத்தப்பட்டதாக, போக்குவரத்து ஸ்தம்பித்துவிட்டதாக, ரயில்கள் தடம் புரளவைக்கப்பட்டதாக எங்கெங்கு இருந்து தகவல் வந்ததோ... 'இனியும் சீமானை வெளியேவிட்டு வைத் திருந்தால், தமிழகமே சுடுகாடாகிவிடும்!’ எனப் பதறி, தேசியப் பாதுகாப்பு சட்டத்தைப் பாய்ச்சினார்கள்!

அதன் பிறகுதான் தமிழகம் அமைதியானதாம். சட்டம் - ஒழுங்கு சீரானதாம். பொது மக்கள் எவ்வித அச்சமும் இல்லாமல் அமைதியாக நடமாடினார்களாம். இந்த தனிப்பட்ட சீமானால் தமிழ்நாட்டின் சட்டம் - ஒழுங்கைக் கெடுக்க முடியுமானால், இந்த நாட்டைவிட பலம் வாய்ந்தவனா நான்? சிரிப்பாகத்தான் இருக்கிறது!

ஓர் அறையைவிட்டு வெளியே வருவதைப்போலத்தான், சிறையைவிட்டு வெளியே வந்திருக்கிறேன். கம்பிக்குள் தள்ளிக் களி தின்னவைத்தால், 'தம்பி’க்காகப் பேசும் பேச்சைத் தடுத்துவிடலாம் என எண்ணினார்களோ என்னவோ... வேலூர் சிறையில் அடைத்தார்கள். என் குரல்வளையை உடைக்கிற சக்தி அந்தக் கொட்டடிக்கு இருக்கும் என்பது அவர்களின் நம்பிக்கை. நஞ்சுக் குப்பி கடிக்கவும் தயங்காதவன், அட்டைப் பூச்சிக் கடிக்கு அரண்டுவிடுவான் என நினைத்ததே கேவலம். அவர்கள் பெரியாரின் கொள்கை வழி வந்தார்களோ இல்லையோ... நான் அந்தப் பழுத்த தாத்தாவின் பழுக்கக் காய்ச்சிய தத்துவங்களின் தடம் வந்தவன். 'சோம்பலும் ஓய்வும் தற்கொலைக்குச் சமம்!’ என 90 வயதில் சொன்ன அந்தப் போராளியின் பேரனை ஒரு அறைக்குள் அடைத்துவைத்து அடக்கி விட முடியுமா?

ஐந்து தடவை சிறைவாசம்... அதில் இரண்டு முறை தேசியப் பாதுகாப்பு சட்டம். சரமாரியாக வழக்குகள்... ஏன் இவை எல்லாம்? அரசாங்கத்தையும் அதன் அதிகாரத்தையும் கையில் வைத்துக்கொண்டு, இந்தத் தேசத்தின் வளத்தை சுரண்டித் தின்றேனா... உறவுக் கூட்டத்தை ஊரெல்லாம் வளர்த்து, அகப்பட்ட இடம் எல்லாம் அள்ளி, உலகம் எங்கும் ஓடி ஓடிப் போய்ப் பதுக்கும் அளவு சொத்து குவித்தேனா? எத்தனை சுழியன் என எண்ண முடியாத அளவுக்கு லட்சம் கோடிகளைப் பதுக்கிவிட்டேனா?

ஈசல் இறந்தால்கூட இழவு கொண்டாடும் இனத்தில் பிறந்துவிட்டு, இனமே இறந்து கிடக்கையில் கை கட்டி, வாய் மூடி, கதறல் அடக்க இந்த மூர்க்கக்காரனால் முடியவில்லை. ஒப்பாரி வைத்ததைத் தவிர, ஒரு தவறும் செய்யாதவனை பயங்கரவாதியாகப் பார்க்கிறீர்களே... இந்த சீமான் சென்னைக்கு எதற்காக வந்தான் என்பது உங்களுக்குத் தெரியுமா?

150 ரூபாய்க்கு மிளகாய் மூட்டையைப் போட்டு விட்டு சென்னைக்கு என்னை பேருந்து ஏற்றி அனுப்பினான் என் அப்பன். வறுமையை ஜெயிக்கவும் - வாழ்ந்து காட்டவும் சென்னைக்கு வந்து, மாதத்துக்கு ஒரு முறை 100 ரூபாயைக்கூட அப்பனுக்கு அனுப்ப முடியாமல், எத்தனையோ வருடங்களை இயலாமையிலேயே கழித்தவன். இன்றைக்கும் சொந்த ஊரில் ஒரு வீடு கட்ட முடியவில்லையே என்கிற ஏக்கம் நீங்காதவன். என்னையா பயங்கரவாதி எனச் சொல்லி பயம் காட்டுகிறீர்கள்?

அறிவாற்றலும், வீரமும் செறிந்துகிடக்கும் இந்த இனத்துக்கு அரசியல் வலிமை சேர்க்கும் பற்றாளர்கள் பற்றாக்குறையாகி விட்டதுதானே எங்கள் பதற்றத்துக்குக் காரணம். கண் முன்னே சொந்த இனம் கருவறுக்கப்பட்டபோது, பட்டம் பதவிகளைத் தூக்கி எறிந்துவிட்டுத் துடிக்கிற தலைவன் எங்களுக்கு இல்லாமல் போய்விட்டானே... இனத்துக்காகக் குடும்பத்தையே வாரிக் கொடுத்த தலைவன் பிரபாகரன் அங்கே களமாடி நிற்க... குடும்பத்துக்காக இனத்தையே காவு கொடுத்து வேடிக்கை பார்த்த கருணாநிதியை எப்படி எங்களின் தலைவனாய் ஏற்க முடியும்?

ஈழத்தின் வீழ்ச்சி கருணாநிதியின் இதயத்தைச் சுட்டிருந்தால்... வல்லூறுகளின் கொடூரங்கள் அவருடைய வாயைத் திறந்திருந்தால்... நாங்கள் ஏனய்யா நரம்பு முறுக்கி சிறைக்குக் கிளம்பப்போகிறோம்? இனத்தைக் காக்க நீங்கள் இருப்பதாக எண்ணி சினத்தை அடக்கி இருப்போமே... 'இனப் பாசம் கிலோ என்ன விலை?’ எனக் கேட்கிற ஆளாக, மொத்தக் கொடூரத்தையும் சத்தமின்றிப் பார்த்துக்கொண்டு இருந்தீர்களே... இப்படிப்பட்ட இதயத்தோடு வாழும் உங்கள் ஊரில் ஒப்பாரிவைப்பதும் உலக மகாக் குற்றம்தான்! கேள்வி கேட்பதும், கேவி அழுவதும் தேசியப் பாதுகாப்பு மீறல்தான்!

கொடூரப் போரில் ஈழமே எரிந்து காடாகிக் கிடந்த வேளையில், எங்களின் கோபம் தமிழகத்தில் வசிக்கும் ஒரு சிங்களவனையாவது சீண்டியதா? ஒரு புத்த துறவியாவது எங்களால் துரத்தப்பட்டாரா? சிங்கள இராணுவத்தின் வெறித் தாண்டவத்துக்கு டெல்லி ஆயுதம் கொடுக்க... அதை சென்னை கை கட்டி வேடிக்கைப் பார்க்க... துடித்துப்போன நாங்கள் எங்கள் உயிர்களைத் தானே தீக்குச்சிக்குத் தின்னக் கொடுத்தோம். எங்களின் இயலாமையும் கோபமும் ஒரு சிங்களவனின் மீதாவது திரும்பியதா? அப்போதும் சிங்கள மாணவர்கள் இங்கே படித்துக்கொண்டு தானே இருந்தார்கள்? சிங்கள வியாபாரிகள் எங்கள் தெருக்களில் திரிந்துகொண்டுதானே இருந்தார்கள்? மாற்று இனத்துக்கு மதிப்புக் கொடுக்கும் எங்களின் மாண்பு அப்போது புரிய வில்லையா இந்த அரசாங்கத்துக்கு? என் இனமே எரிந்து சாய்ந்தபோது... எதிர்த்துக் கேட்கத் திராணியற்றவர்கள், சிங்கள மாணவனை அடிப்பேன் என்றதும் சீறுகிறார்களே... இது எந்த ஊர் நியாயமய்யா?

சிறையில் தள்ளி என் குரல்வளையைச் சிதைத்து விடலாம் எனத் திட்டமிட்ட கருணாநிதிக்குச் சொல்கிறேன்... எத்தனை முறை வேண்டுமானாலும் உங்களின் பயங்கர சட்டங்களைப் பாய்ச்சுங்கள். உங்களைப்போல், 'ஐயோ... கொலை பண்றாங்கப்பா... காப்பாத்துங்கப்பா...’ என அலறித் துடிக்கும் ஆள் நான் இல்லை! என் நாடி நரம்பின் கடைசித் துடிப்பையும் நீங்கள் துண்டித்துப் போட்டாலும், உங்களிடம் மண்டியிட நான் தயார் இல்லை.

எந்த வார்த்தைகளுக்காக என்னை வளைத்தீர்களோ... அதே வார்த்தைகளை கொஞ்சமும் பயமின்றி உரக்கச் சொல்கிறேன்...

''எங்கள் மீனவனை இனியும் அடித்தால், சிங்கள மாணவர்களை நாங்கள் அடிப்போம்!''

ஓயாது அலை..........

நன்றி: ஜூனியர் விகடன்

Friday, December 10, 2010

பொன்சேகாவின் மண்டையில் சுரந்த இரசாயனம் சிறையில் தள்ளியது ,,நவீன சர்வாதிகாரி ராஜபக்க்ஷ வின் மண்டையில் சுரந்த இரசாயனம்??,,

இனப்படுகொலை ஸ்ரீலங்காவின் நவீன சர்வாதிகாரி ராஜபக்க்ஷ 2,12,2010 வியாழன் புகழ்பெற்ற இலண்டன் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக அரங்கை தனது அரசியல் மேடையாக்கி சர்வதேசத்தை ஏமாற்ற இருந்த நிகழ்வு புலம்பெயர் தமிழர்களால் தடைசெய்யப்பட்டது.

ஸ்ரீலங்காவின் சிங்கள அரசு தமிழர்களை தொடர்ந்து அடிமைப்படுத்தி கொன்றொழித்து வருவதை மூடி மறைப்பதற்கான திருகுதாள வஞ்சக திட்டத்தை ஒக்ஸ்போர்ட் மேடைஉரை மூலம் தந்திரமாக சர்வதேசத்தின் முன் கற்பித்து, பயங்கரவாதம் என்ற பூச்சாண்டியை முன்னிலைப்படுத்தி படுகொலைகளை மறைத்து ஏமாற்ற முயற்சித்த நாடகமேடை பிரித்தானிய "தமிழர் பேரவையுடன்" உணர்வுள்ள புலம்பெயர் தமிழர்களால் அதிரடியாக பறிக்கப்பட்டது.

அத்துடனல்லாமல் இன அழிப்பு சர்வாதிகாரி ராஜபக்க்ஷ ஒளிந்து ஓடித்தப்பிக்கவேண்டிய பரிதாபகரமான நிலையும் ஏற்பட்டு, சர்வதேசமட்டத்தில் சிரிப்புக்கும் சிந்தனைக்கும் ராஜபக்க்ஷவின் அரசும் அரசியலும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது.

தமிழரின் அபசகுனிக்கு இலண்டனில் ஏற்படுத்தப்பட்டிருந்த இராசதந்திர வீழ்ச்சி , தமிழினத்தின் நீண்ட போராட்ட வரலாற்றில் ஒரு குறுகிய ஆயத்தமாக இருந்தாலும் தமிழர்களின் பற்றுறுதியான உணர்வின் காரணமாக போராட்டம் நம்பிக்கையுடன் அரங்கப்பட்டிருந்தது. இந்நிகழ்வின் மூலம் சர்வதேச அரங்கில் ஸ்ரீலங்கா ஆட்சியாளரின் முகத்திரை கிழிக்கப்பட்டு தமிழர்களின் போராட்டத்தில் ஏராளமான நியாயம் இருப்பதை உலகம் ஏற்றுக்கொள்ள இணங்கியிருப்பது பின்வந்த நாட்களில் உலகநாடுகளின் நடவடிக்கைகள் உணர்த்துகின்றன.

சனல் 4 தொலைக்காட்சி ஈழத்தின் பல படுகொலைக்காட்சிகளை பன்முகப்படுத்தப்பட்ட பகுப்பாய்வுகள் மூலம் தமிழர் தரப்பு சாட்சிகளுடன் பகிரங்கமாக ஆய்வுக்குட்படுத்தியுள்ளது.இலங்கையின் யுத்தக் குற்றங்கள் தொடர்பில் தாம் அனுப்பியுள்ள ஆதாரங்கள் குறித்து பரிசீலித்து, சர்வதேச விசாரணயை மேற்கொள்வது குறித்து ஆலோசிப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தம்மிடம் தெரிவித்துள்ளதாக, சனல் 4 சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

தர்மம் செத்துப்போய்விடுவதில்லை என்பதை கடைசித்தமிழனுக்கும் நம்பிக்கையை ஊட்டும்வகையில் இலண்டன் போராட்டம் உறுதியை மேலும் பெருக்கி ஆறுதல் தரும் ஒரு ஆதாரமாக தமிழினத்திற்கு உலகம் முழுவதும் ஒரு உத்வேகம் பிறந்திருக்கிறது.news

ஆனாலும் லண்டனிலிருந்து அவமானத்துடன் தப்பியோடி ஸ்ரீலங்காவை சென்றடைந்த சிங்கள ராஜபக்க்ஷ, வேதாளம் முருங்கை மரம் ஏறிய கதையாக தனது இனத்திற்குண்டான அரக்கக்குணத்தை மாற்றிக்கொண்டதாகத்தெரியவில்லை.பல துறை சார்ந்த நூற்றுக்கு மேற்பட்ட அரசியல் ஆலோசகர்களை ஜனாதிபதி ராஜபக்க்ஷ வைத்திருப்பதாக அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகின்றது, ஆனால் ஆலோசனைகளை உரிய நேரத்தில் சமயோசிதமாக வழங்கிட, ஆலோசகர்கள் எவருமே யதார்த்தமான ஆலோசனைகளை வழங்குபவர்களாக இல்லை.எல்லோருமே ராஜபக்க்ஷவின் பிறவிக்குணத்தை சார்ந்து கூர் தீட்டி அவரை திருப்திப்படுத்தி சந்தோசப்படுத்துவதிலும் துவேச மூர்க்கத்தை வழிமொழிந்து உக்குவிப்பவர்களாகவும் இருக்கின்றனரே தவிர மனிதாபிமான யதார்த்தத்தை புரியவைத்து நாட்டில் அமைதியை தோற்றுவிப்பவர்களாக இருக்கவில்லை.

ராஜபக்க்ஷ தூளி என்று கூறினால், மேர்வின் டி சில்வா, விமல் வீரவங்ச போன்ற துவேச சுயநல பச்சோந்திகள் நிறைதூளி என்று எடுத்துக்கொடுத்து கெடுதிக்கு வழிவகுத்து கெடுப்பவர்களாகவே இருந்து வருகின்றனர்.ஜனாதிபதியுடன் கூட்டுச்சேர்ந்த தமிழ் அரசியல் கட்சி வியாபாரிகளான டக்ளஸ், கருணா, பிள்ளையான், கடைசியாகச் சேர்ந்த தென்பகுதி கட்சியினரான பிரபா கணேசன், திகாம்பரம், ஆறுமுகன் தொண்டைமான், ஆகியோரும் அதைத்தான் செய்து பிழைப்பு நடத்திக்கொண்டிருக்கின்றனர்.அதைத்தான் ராஜபக்க்ஷவும் சரி அவரது சகோதரர்களான கோத்தபாய, பசில், சமல் போன்றவர்கள் விரும்பி வரவேற்கின்றனர்.

சமீபத்தில் பாராளுமன்ற கூட்டமொன்றில் மக்கள் தொடர்பாடல் அமைச்சர் மேர்வின் டி சில்வா பேசும்போது தமிழ் தேசிய கூட்டமைப்பு கூறுகின்றது கடந்த யுத்த காலத்தில் பல தமிழ்ப்பெண்களின் கணவன்மாரும் அவர்களின் குழந்தைகளும் கொல்லப்பட்டும் காணாமல் போயுள்ளதாகவும், அப்படியானால் அந்த பெண்களுக்கு கணவன்மாரையும் குழந்தைகளையும் கொடுப்பதற்காக நாங்கள் தயாராக இருக்கிறோம். என்று நையாண்டி செய்திருந்தார்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்கள் இன்னும் 25 வருடங்கள் ஜனாதிபதியாக இருப்பார் மேலும் அவரைத் தொடர்ந்து அவரின் சகோதரர்களான கோத்தபாய ராஜபக்க்ஷ, பசில் ராஜபக்க்ஷ, மற்றும் மகனான நாமல் ராஜபக்க்ஷ, அவர்கள் நாட்டை ஆள்வார்கள். எனவே தொடர்ந்து ராஜபக்ச குடும்பம் சிறப்பான முறையில் மக்களை வழிநடத்தும் என்று தெரிவித்தார். இவர் இவ்வாறு தமிழ் மக்களை இழிவுபடுத்தி உரையாற்றும்போது பிரதி அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா மற்றும், வினாயகமூர்த்தி முரளிதரன், ஆகியோர் அருகில் இருந்தார்கள் என்பது வெட்கப்படவேண்டியதாகும் .

இருந்தாலும் பாராளுமன்ற அங்கத்துவமில்லாவிட்டாலும் துணிச்சலுடன் குரல்கொடுக்கவல்ல உறுதியான தமிழ் அரசியல்வாதிகளான சிவாஜிலிங்கம் மனோ கணேசன் போன்றோர் இருப்பதால்த் தான் ராஜபக்க்ஷவின் பொய்ப்பித்தலாட்டம் சிறிதளவேனும் பத்திரிகைகளில் வெளிச்சமாகிக்கொண்டிருக்கிறது

ராஜபக்க்ஷவுக்கு இங்கிலாந்தில் ஏற்பட்ட பின்னடைவு பற்றி ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் திரு மனோ கணேசன் அவர்கள் கூறும்போது, இலண்டனில் நடைபெற்றுள்ள ஆர்ப்பாட்டங்களின் பின்னணியை ஆராயாமல், அவற்றை தாறுமாறாக விமர்சனம் செய்வதன் மூலம் ஜனாதிபதியை சந்தோஷப்படுத்துவதற்கு புதிதாக அரச தரப்பிற்கு சென்றுள்ள சில தமிழ் அரசியல்வாதிகள் முயற்சிக்கின்றார்கள், என்று அரசாங்கத்துக்கு ஆதரவளிக்கும் தனது தம்பியாரான பிரபா கணேசனை மறைமுகமாக தாக்கிய மனோ கணேசன் புலம்பெயர்ந்த தமிழர்களின் ஆர்ப்பாட்டங்கள் இங்கு வாழும் தமிழர்களுக்கு எதிராக சிங்கள மக்களை திருப்பிவிடும் என்று எச்சரிக்கும் இவர்களது கருத்துக்கள் சிங்கள ஊடகங்களில் பெரிதுபடுத்தப்பட்டுள்ளன. உண்மையில் தமிழ் அரசியல்வாதிகளின் வாய்மூலமாக இத்தகைய கருத்துக்கள் வெளியாவதுதான் சிங்கள மக்கள் மத்தியில் பாரதூரமான தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளன.

இலண்டனில் நடைபெற்றுள்ள சம்பவங்கள் தொடர்பில் எந்தவிதமான அடிப்படை தெளிவும் இல்லாமல், தங்களது அரசியல் தேவைகளுக்காக இத்தகைய பொறுப்பற்ற கருத்துக்களை தெரிவிப்பதை இந்நபர்கள் உடனடியாக நிறுத்தவேண்டும் புலம் பெயர்ந்த மக்களை முட்டாள்கள் என்று சொல்வதற்கு முன்னர் இந்த அரசியல்வாதிகள் இவற்றைப்பற்றிய அடிப்படையை புரிந்துகொள்ள வேண்டும் என மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இலண்டனில் வாழும் இலங்கையர்களில் பெரும்பாலானவர்கள் தமிழர்களாகும். இலங்கையில் நடைபெறும் நிகழ்வுகள் தொடர்பிலே அக்கறை காட்டுவதற்கும், ஆர்ப்பாட்டங்கள் செய்வதற்கும் புலம்பெயர்ந்துவாழும் இலங்கை மக்களுக்கு முழுமையான உரிமைகள் இருக்கின்றன. இலண்டன் ஆர்ப்பாட்டத்தில் ஒரு பிரிவு சிங்களவர்களும் கலந்துகொண்டதாக வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார் என்றும் மனோ கணேசன் கூறினார்

அரசன் அன்றறுப்பான் தெய்வம் நின்றறுக்கும் என்பர். ஆனால் கலியுகமான இந்தக்காலத்தில் சற்று வேகமாக அவை நடைபெறுவதை காணுகின்றோம். அவலத்துக்குள்ளான இனம் என்பதாலும், துன்பமே வாழ்க்கையாகிப்போனதாலும், கடவுளின் கண் திறக்கப்பட்டு கருணை கிடைக்கப்பெற்றதன் காரணமாக, கண்முன்னே சில சம்பவங்களை கண்ணுற்றுக்கொண்டிருக்கிறோம்.

இவற்றில் ஒன்று இன அழிப்பை முன்நின்று நடத்தியவரும் தமிழின அழிப்பிற்கு உபாயங்களை வகுத்தவரும் படுகொளைகளுக்கு முழுமுதற் காரணமாகவிருந்தவர் இராணுவத் தளபதி சரத்பொன்சேகாவாகும்.அடுத்து குரூரமாக மிருகத்தனமாக கை கோர்த்துச் செயற்பட்டவர்கள் ஜனாதிபதி ராஜபக்க்ஷ மற்றும் பாதுகாப்பு செயலர் கோத்தபாய ஆகியோராகும். முள்ளிவாய்க்கால் சங்காரம் முடிந்து ஒரு மாதங்கள் கூட இராணுவத்தளபதியான சரத்பொன்சேகாவால் படுகொலை வெற்றியை கொண்டாடி நிம்மதியாக குடும்பத்துடன் இருக்க விதி விட்டுவைக்கவில்லை.

தமிழினத்தை கொன்றுகுவித்த வீரன் தான் என்ற மமதை பொன்சேகாவின் புத்தியில் புகுந்து, ஹிட்லரின் தலையில் இரண்டாம் உலக யுத்தத்தை தோற்றுவிக்க உற்பத்தியான சர்வாதிகார ரசாயனம் பொன்சேகாவின் மண்டையில் சுரந்து ராஜபக்க்ஷ குடும்பத்துடன் முரண்படுத்தி படுகுழியில் வீழ்த்தியிருக்கிறது. தமிழருக்கு ஈர்த்த அநீதியின் பரிசு பொன்சேகாவை வேறு ஒரு வடிவத்தில் தண்டனைக்குட்படுத்தி நரபலி நாயகன் சரத் பொன்சேகாவை கடூழியச்சிறையில் வாட வைத்திறுக்கிறது ,பொன்சேகாவின் சொத்துக்கள் பறிக்கப்பட்டு மனைவி பிள்ளைகள் பிரிக்கப்பட்டு நிம்மதியிழந்து தெருநீளம் திரிகின்றனர்.(பொன்சேகாவின் மனைவி கரு
நிறப்புடவையுடன் தமிழ்க்கோவில்களில் மண்டியிட்டு கதறி அழும் காட்சிகள் தமிழர்களையே மனம் கனக்க வைக்கிறது)

சோதிட சாஸ்திரங்களில் 100% சதவீத நம்பிக்கையுடைய ராஜபக்க்ஷ ஒரு சமூகத்தை கொப்பு குலையாக வெட்டிச்சரித்த பழி தன்னை அழித்துவிடுமென்ற பயம் உள்ளூர ஆட்டிப்படைத்தாலும் மந்திர தந்திரங்களாலும் சாந்தி பரிகாரங்களாலும் நிவர்த்தி செய்துவிடலாம் என்ற குருட்டு நாம்பிக்கையில் தங்கத்தினாலான தனது உயரத்தில் ஆளுருவச்சிலை,,, இந்தியாவில் பரிகார நிவர்த்தி போன்றவற்றை உறவினர்கள் மூலம் நடத்திக்கொண்டு பயத்தை மூடி மறைத்து தப்பிப்பதற்கு சட்டத்தையும் உலகத்தையும் ஏமாற்றுவதற்கான தந்திரோபாயங்களை உறங்காமல் செய்துகொண்டிருக்கிறார். இருந்தும் கொலைப்பழி விதிமூலம் அவரைத்துரத்திக்கொண்டிருப்பதை அவரும் அவரைச்சுற்றியிருப்பவர்களும் நன்குணர்ந்து விட்டனர்.

தான் இலண்டனில் கைது செய்யப்பட்டுவிடுவோமோ என்ற பயம், இலண்டன் பயணத்தை ஆரம்பத்தில் தள்ளி வைக்க அவரை தூண்டியது, ஆனால் விதி விட்டு வைக்கவில்லை யாரோ ஒரு மூன்றாமவரின்(சோதிடர்) ஆலோசனைக்கு அடிபணிந்து வெளிப்பகட்டுக்கு தான் ஒரு துட்டகாமினியி வாரிசான துணிச்சலானவன் எனக்காட்டுவதற்காக புறப்பட்ட இலண்டன் பயணம்,, அம்போவாகி,, இப்போ ஈழத்தமிழர்கள் வாழும் இன்னும் பல வெளிநாடுகளுக்குள் அவர் நுழைய முடியாத எழுவாயை தோற்றுவித்துள்ளது.

இரண்டாம் உலகப்போரின்போது ஹிட்லரின் ஜெர்மனிய படைகள் பிரான்ஸை கைப்பற்றியபின் இங்கிலாந்துக்குள் நீர்மூழ்கிக்கப்பல் மூலமும் ஆகாயவிமானங்கள் மூலமும் தமது முளு ஆளுமையை காட்டி கிட்டத்தட்ட இங்கிலாந்து அடிபணியும் நிலைக்கு கொண்டு வந்திருந்தன. ஆனால் விதிவசமாக ஹிட்லரின் மூளையில் பேராசையின் மூலம் சுரந்த இரசாயனம் ஜெர்மன் படைகளை ரஷ்யாவின் பக்கம் திருப்பியது 1941ம் ஆண்டு ரஷ்யாவுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட போர் 1943 ம் ஆண்டுவரை நீண்டு ஹிட்லரின் அராஜகத்துக்கு
ரஷ்யாவில் முடிவுகட்டப்பட்டது,ஆனால் ஹிட்லரின் படைகள் ரஷ்யாமீது படையெடுக்காமல் லண்டனில் குறியாக இருந்திருந்தால் இன்று சர்வதேச மொழியாக டொச், மொழி இருந்திருக்கும் அதேபோல ராஜபக்க்ஷவும் இலண்டன் பயணத்தை சிலகாலம் தவிர்த்திருந்தால் பல ஐரோப்பிய அமெரிக்க நாடுகளுக்கு ஒருவேளை சிரமமின்றி பயணப்பட்டிருக்க முடியும்.ஆனாலும் விதியது வலியது பொன்சேகாவை தன்வசப்படுதிய பின் ராஜபக்க்ஷவை நோக்கி தனது கரங்களை நீட்டத்தொடங்கியிருக்கிறது.

இன்று மனிததர்மத்தை மதிக்கும் மேற்கு நாடுகளுக்குள் ராஜபக்க்ஷ எளிதில் கால் வைக்கமுடியாத நிலையை இசைப்பிரியாவின் மரணசாசனம் தொடங்கி கணக்கற்ற மாவீரர்களினதும் பொதுமக்களினதும் படுகொலை குற்றச்சாட்டுக்கள் தடையினை ஏற்படுத்தி முட்டுக்கட்டையாகியிருக்கின்றன.இவற்றை பிரித்தானியாவின் செனல்4 தொலைக்காட்சி தொடங்கி உலகப்பிரசித்தி பெற்ற இணையத்தளமான விக்கிலீக்ஸ் மற்றும் தமிழ் இணையங்கள்வரை படுகொலை தடையங்களை தினம் தினம் வெளியிட்டு மிரட்டிக்கொண்டிருக்கின்றன.

ராஜபக்க்ஷவின் அடுத்த தலையிடியாக உருவெடுக்கப்போகும் பிரச்சினை முக்கியமான உலகநாடுகளின் தூதரகங்களுக்கு அவர் ஆணவத்துடன் தெரிவுசெய்த தூதுவர்கள் அனைவரும் படுகொலைகளில் நேரடியாக ஈடுபட்டிருந்த இராணுவ யுத்த போர்க்குற்றவாளிகளே.

இறுதியாக கடற்படையின் முன்னாள் தளபதி வசந்த கரன்னாகொடவை அரசாங்கத்தின் உயர் மட்ட விருப்பின் பேரில் இங்கிலாந்துக்கான இலங்கைத் தூதராக ராஜபக்க்ஷ தரப்பு நியமித்த போதும், அதனை பிரிட்டன் ஏற்க மறுத்துள்ளதது. இலங்கையில் புலிகளுடனான அரசாங்கத்தின் இறுதிக்கட்டப் போரில் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் நிகழ்ந்திருப்பதாக பரவலாக ஆதாரபூர்வமான குற்றச்சாட்டுகள் வெளிவந்து கொண்டிருக்கும் காலகட்டத்தில் இந்த விடயம் இலங்கை அரசாங்கத்துக்கு இன்னுமோர் பாரிய அடியாக விழுந்துள்ளது.பிரிட்டனிலுள்ள இலங்கைத் தமிழர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் இராணுவத்தின் முக்கிய அதிகாரிகளின் போர்க்குற்ற விடயம் தொடர்பாக கிளர்ந்து எழுந்துள்ள நிலையில் அவற்றுடன் சம்பந்தப்பட்ட ஒருவரை தூதுவராக ஏற்றுக் கொள்வது வேண்டாத தலைவலியை உருவாக்கி விடும் என்று பிரித்தானிய அரசாங்கம் கருதுவதாக தெரிகின்றது. வசந்த கரன்னாகொடவின் நியமனத்தை பிரிட்டன் நிராகரித்துள்ள செயலால் இலங்கை அரசாங்கம் பிரிட்டன் மீது கடும் ஆத்திரத்தில் இருப்பதாக தெரியவந்துள்ளது.

மற்றும் ஒரு யுத்தக் குற்றவாளிகளில் ஒருவரென சந்தேகிக்கப்படும் இராணுவ உயர் அதிகாரி ஒருவர் ஐ.நாவுக்கான இலங்கைப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ளார் என்கிற தலைப்பில் அமெரிக்காவில் இருந்து வெளிவரும் வொசிங்ரன் ரைம்ஸ் பத்திரிகை கட்டுரை ஒன்றை பிரசுரித்து உள்ளது

ஸ்ரீலங்கா இராணுவத்தின் 58 ஆவது படைப் பிரிவின் கட்டளைத் தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் சவேந்திர டீ சில்வா, வன்னிப் ina alipuபிராந்திய தளபதியாக இருந்தபோது இறுதிக்கட்ட யுத்தத்தின்போது வன்னியில் பாரிய யுத்தக் குற்றங்கள் இடம்பெற்றன என்று கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக ஐ.நா செயலாளர் நாயகத்துக்கு ஆலோசனை கூறவென நிபுணர் குழு ஒன்று செயற்பட்டு வரும் நிலையில் சவேந்திர டீ சில்வா ஐ.நாவுக்கான இலங்கைப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ளார் என்று அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இவரது பொறுப்பில் இருந்த படையினர் சரண் அடைய வந்திருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க போராளிகளையும், பொதுமக்களையும் படுகொலை செய்து விட்டனர் என்று சந்தேகிக்கப்படுகின்றது என்றும் இலங்கையின் சண்டே லீடர் பத்திரிகைக்கு முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா வழங்கி இருந்த பேட்டி ஒன்றில் பாதுகாப்பமைச்சுச் செயலாளர் கோத்தபாய ராஜபக்க்ஷவின் உத்தரவுக்கு அமைய சவேந்திர டீ சிலவா தலைமையிலான படைப் பிரிவினரால் சரணடைந்த போராளிகளும் பொதுமக்கள் பலரும் கொல்லப்பட்டனர் என்று கோடிகாட்டி இருந்தார் என்றும் வொசிங்ரன் ரைம்ஸில் கூறப்பட்டுள்ளது.

வைத்தியசாலைகள் உட்பட பொது இடங்கள் மீது இவர்கள் எறிகணை வீச்சுக்களை நடத்தினர் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் சர்வதேச நெருக்கடிகள் குழு என்கிற அரச சார்பற்ற சர்வதேச அமைப்பின் இலங்கை விவகாரங்களுக்கான பணிப்பாளர் Alan Keenan ஐ.நாவுக்கான பிரதிநிதியாக சில்வா நியமிக்கப்பட்டிருக்கின்றமை இலங்கைக்கு எதிராக யுத்தக் குற்ற விசாரணைகளுக்கு ஒரு இடையூறாகவே இருக்கும் என்று கூறி உள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதி யுத்தத்தின் போது இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்க்ஷவும், அவரது அரசாங்கமும் பாரிய யுத்தக் குற்றங்களை மேற்கொண்டமை தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் நிர்வாகம் நன்கு அறிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் இரகசிய தகவல் பரிமாற்றில் இந்த விடயம் தெரியவந்துள்ளதாக விக்கிலீக்ஸை மேற்கோள் காட்டி, அந்த சஞ்சிகை தகவல் வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்க்ஷவினால் கடந்த 2006ம் ஆண்டு ஜுலை மாதம் மீளவும் ஆரம்பிக்கப்பட்ட விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தம், 2009ம் ஆண்டு மே மாதம் நிறைவடைந்தது. இந்த காலப்பகுதியில் ஆயிரக்கணக்கான பொது மக்கள் மகிந்தவின் அரசாங்கத்தினால் கொலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் விசாரணை நடத்த அமெரிக்கா பலமுறை வலியுறுத்திய போதும், இலங்கை அவற்றை முழுமையாக நிராகரித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறீலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் இடம்பெற்றுவரும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இரட்டைக் குடியுரிமையைக் கொண்ட சிறீலங்கா அதிகாரிகள் மீது அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தின் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளமுடியும் என அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தின் அதிகாரி லுயிஸ் மொறினோ ஒகம்போ அவர்களும் தமிழர்களுக்கான சில சட்ட வழிமுறைகளை தெரிவித்துள்ளார்.

சிறீலங்காவில் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள் மற்றும் போர்க்குற்றங்களில் தொடர்புள்ள பலர் இரட்டைக் குடியுரிமையை கொண்டவர்கள் எனவே அவர்கள் மீது நடவடிக்கையை மேற்கொள்ளமுடியும். சிறீலங்காவில் மேற்கொள்ளப்பட்ட போர்க் குற்றங்களில் அரச தலைவர் மகிந்தா ராஜபக்சாவும், முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் பொன்சேகாவும் பிரதம குற்றவாளிகள் என அமெரிக்க தூதுவர் பற்றீசியா தெரிவித்துள்ளார். இதனிடையே, சிறீலங்காவில் இடம்பெற்ற படுகொலைகள் தொடர்பில் நடவடிக்கைகளை எடுக்கமுடியுமா என, அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தின் கூட்டத்தொடரில் பங்குபற்றிய வொசிங்டனை தளமாகக் கொண்ட மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் பிரதிநதி றிச்சாட் டிக்கரிடம் இன்னர்சிற்றி கேள்வி எழுப்பியிருந்தது. சீனாவில் இருந்து அவுஸ்திரேலியா வரையிலுமான விவகாரங்களை தான் கையாள்வதாகவும், ஆனால் சிறீலங்காவில் போர்க்குற்றங்களை மேற்கொண்டவர்கள் அமெரிக்காவில் இருக்குமிடத்தில் அவர்களை கைதுசெய்ய முடியும் என அவர் தெரிவித்துள்ளதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போர்க்குற்றங்களில் இராணுவத்தால் கொல்லப்பட்டதாக ஊடகங்களில் முன்னிலைப்படுத்தப்பட்டு காண்பிக்கப்படும் காணொளிகள் அதிகமானவை சரணடைந்த போராளிகளினுடையவைகளே இருந்தாலும் அதிகமான பொதுமக்களும் கொல்லப்பட்டிருப்பதாகவும் ஆயிரக்கணக்கான இளம் பெண்கள் கற்பழித்து பின்னர் கொல்லப்பட்டதாகவும் சிலர் உயிர்தப்பி இருப்பதாகவும் அவர்களில் சிலர் அச்சுறுத்தல் காரணமாகவும் இன்னும் பலர் அவமானம் காரணமாகவும் மௌனம் சாதிப்பதாகவும் நம்பப்படுகிறது.பல மனித உரிமை மீறல் சித்திரவதைக்குட்பட்டு உயிருடனிருப்பவர்களை தவிர்த்தாலும் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களின் ஆதாரங்களையும் ஊடகங்கள் பொதுப்படையாக படுகொலை என்ற அளவிலிருந்து சற்று வெளியேறி அடையாளப்படுத்தி வெளியிடவேண்டுமென பொதுமக்கள் பலர் விரும்புகின்றனர்.

பொது மக்களின் படுகொலை மற்றும் பாலியல் வன்புணர்ச்சிக்கான ஆதாரங்களை இன்று சர்வதேச கவனத்தை பெற்றிருக்கும் செனல் 4 தொலைக்காட்சி மூலம் ஒருமுறையேனும் பகிரங்கப்படுத்திவிட்டால் இலகுவாக யுத்த குற்ற ஆவணங்களுடன் அவை இலகுவாக இணைந்துவிடும் என்பதே பல கடைசி மட்ட தமிழர்களின் ஆதங்கமாக இருக்கிறது.

லண்டனில் மிகவும் சமயோசிதமாக பிரித்தானிய அரசை நெருக்கடிக்குள் தள்ளிவிடாமல் ராஜபக்க்ஷவின் வருகைக்கு எதிர்த்து போராட்டத்தை முன்னின்று நடத்தி வெற்றிகண்ட பிரித்தானிய தமிழர் பேரவை பல ஆயிரம் பொதுமக்களின் படுகொலை ஆதாரங்களையும் பாலியல் வன்கொடுமைக்குள்ளான தாய் சகோதரிகளின் கொடூரங்களையும் யுத்தக்குற்றத்துடன் இணைத்து நியாயம் கிடைக்க வழிதேடுவார்கள் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

தமிழரின் போராட்ட வரலாற்றில் ஒரு கதவு மூடப்பட்டுவிட்டாலும் ஒரு கதவு இன்று எம்மை நோக்கி தானாக திறக்கப்பட்டுள்ளது. அதை சமயோசிதமாக கொண்டு சேர்க்கவேண்டியது எங்கள் எல்லோரது பாரிய பொறுப்பாகும்,

ஈழதேசம் இணையத்திற்காக,
கனகதரன்,

நன்றி ஈழதேசம்,

Monday, December 6, 2010

ஒலியாகி.. ஒளியாகி.. இசையாகி.. அவள் காற்றாகினாள்!

துக்கங்கள் பெருகும் வாழ்க்கையும் அச்சம் தீராத நிலையுந்தான் எனக்கு விதிக்கப்பட்டிருக்கிறதோ!

அடுத்தடுத்துத் துயரம். தொடர்ந்தும் துக்கந்தரும் சேதிகள்…

பழகியவர்கள்…. அன்பாக இருந்தவர்கள்….. தமக்கப்பாலும் அன்பு செலுத்தத் தெரிந்தவர்கள்…. பிறரில் கரிசனை கொண்டவர்கள்….

எல்லோரும் சிலுவையிலறையப்படுவதைக் காண நேரும் விதி…

பிணக்காட்சிகளை மறப்பதற்கு முயன்றாலும் பிணமாக்கப்படும் காட்சிகள் மீள மீள வருகின்றன.

பிணமாக்கப்படும் காலத்திலிருந்து மீண்டாலும் பிணமாக்கப்பட்ட காலம் சிறைப்பிடிக்கிறது.

நினைவுகளைக் கலைக்க முடியவில்லை.

வலை வலையாக அவை என்னைச் சூழ்கின்றன.

மூச்சடைக்க வைக்கிறது இருள்.

கொல்வது கொடுமை. கொலைப்படுவதும் கொடுமை. கொல்லாமற் சிதைக்கப்படுவது அதினிலும் கொடுமை. சிதைத்துக் கொல்லப்படுவது அதினிலும் அதனிலும் கொடுமை. சிதைக்கப்பட்டவரையும் கொல்லப்பட்டவரையும் வைத்துச் செய்யும் சடங்குகள் அதனிலும் கொடுமை.

அழுது தீராது. இது கண்ணீரில் கரைந்து விடாத துக்கம். உள்ளுக்குள்ளே குமுறிக் குமைந்து…. வெந்து சாகும் வேக்காட்டுத் துக்கம்…

அந்தப் பெண்…. அவளைப் போலப் பல பெண்கள்….

அந்த மனிதர்…. அவரைப் போல பல மனிதர்கள்….

சரணடைவுக்குப் பின்னர் கொல்லப்பட்டனர். சிதைத்துக் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டுச் சிதைக்கப்பட்டனர்.

அந்த வெட்டை வெளியில்…

மரணம் மட்டுமே விளைந்து நாடகமாடிய அந்த வெளியில்….

இறுதிப் பொழுதுகள் என்று விதி அமைந்த அந்த வெளியில்….

அவர்கள் கைதிகளாகியிருந்தனர். மண்டியிடவே விரும்பாதவரெல்லாம் முழந்தாளிட்டனர்.

அப்படியொரு விதி எப்படி விளைந்தது?

வெற்றியைப் பற்றியே சிந்தித்தோரின் முன்னே தோல்வி தூக்குக் கயிற்றோடு நின்றது.

அவலக்குரலெழுப்புவதற்கு அந்த நீர்க்கரையில் ஒரு ஆட்காட்டி கூட இல்லை.

எதிரிகள் மட்டும் சூழ்ந்திருந்த அந்த நீர்க்கரையில் சரணடைந்தவர்கள் அனைவரும் நிறுத்தப்பட்டிருந்தனர்.

போர் முடிந்திருந்தது. அது முடியாத போர். ஆனால்….

முப்பதாண்டுகால நெருப்பு அன்றுதான் அணைந்திருந்தது. அது அணையாத நெருப்பு….

உள்ளுக்குள்ளே அது கொதித்துக் கொண்டிருந்தது. தணலாய்ப் பூத்திருந்தது.

ஆனாலும் முழாசி எரிய முடியாத நிலை.

உள்ளுக்குள்ளே எரிந்து தணலாகும் நிலை.

ஒருவன் எதிர்த்தான். ஒருவன் அழுதான். இன்னொருவன் கதறினான். வேறொருவன் குமுறினான். மற்றொருவன் கொந்தளித்தான்.

எதிராளிகள் அதட்டினர்.

இதைப்போல –

ஒருத்தி எதிர்த்தாள். இன்னொருத்தி அழுது புலம்பினாள். வேறொருத்தி மயங்கிச் சரிந்தாள்.

எதிராளிகள் அடக்கினர்.

காலம் மாறி வேடிக்கை பார்க்கிறது. கடவுளே…!

ஆனாலும் என்ன செய்ய முடியும்?

சரணடைவுக்குப் பின்னே எந்த உணர்ச்சிக்கும் இடமிருப்பதில்லை.

அப்போது அதிகாரம் எதிராளிடம். தீர்மானமும் எதிராளிடமே.

ஆகவே எதுவும் செய்ய முடியாது.

மண்டியிடுவதையும் விடச் சாவது மேல். அல்லது கொல்லப்படுவது மேல் எனக் கருதினர் அவர்கள்.

ஆனாலும் அப்போது எதுவும் செய்ய முடியாது.

அதிகாரம் எதிராளிடமல்லவா!

அது காலம் கடந்த நிலை. அல்லது கையறு நிலை.

எந்த நம்பிக்கையில் இப்படிச் சரணடைந்தோம் என்று எண்ணித் துக்கத்தில் சரிந்தனர்.

கைகள் பின்புறமாகக் கட்டப்பட்டுள்ளன. கண்கள் மறைக்கப்பட்டுள்ளன.

முப்பதாண்டுகளின் முன்னே –

தமிழ் நிலமெங்கும் இப்படித்தான் ஒரு நிலை இருந்தது.

கண்டவரெல்லாம் சுடப்பட்டனர். அல்லது பிடித்துச் செல்லப்பட்டனர். அல்லது கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர் கண்கள் மறைக்கப்பட்டன. கால்கள் பிணைக்கப்பட்டன. மலவாசலில் குழாய்கள் இறுக்கப்பட்டன.

சித்திரவதை அப்போது ஒரு இனிய சங்கதி – எதிரிகளுக்கு.

தமிழ்க்குரல் ஓலக்குரலாகவே இருந்தது அப்போது.

அந்த ஓலக்குரலைக் கேட்கப் பொறுக்காதவர் எல்லாம் காடேகினர். கடலேறினர். நெஞ்சிலே தீ கொண்டு நெருப்பாகினர்.

ஒரு யுகப் பிரளயம் நிகழும் என்ற கனவை விதைத்தனர்.

காலம் ஒன்று கனியும் என்ற நம்பிக்கையை விதைத்தனர். அந்த விதை முளைத்துச் செழித்து வருகையிலே….

இப்போது-

இப்படி-

அவர்கள் விரும்பாத நிலையில் அவர்கள் நிறுத்தப்பட்டனர். அவர்கள் ஏறத் தயாரில்லாத கழுமரத்தில் அவர்கள் ஏற்றப்பட்டனர்.

முதற்கணம்வரையில் வீறாப்போடிருந்தோர்…

வெற்றிகள் ஆயிரம் படைத்தோர்….

எதிராளிகளைக் கலங்கடித்தோர்…

வீரத்தால் சாகசங்கள் நிகழ்த்தியோர்…

புயலாக இருந்தோர்…. பூகம்பமாகி நின்றோர் எல்லாம் எதிர்பார்க்காத தருணத்தில் சிறைப்பட்டிருக்கின்றனர்.

அவர்களுடைய நிலத்திலே அவர்களுக்கு நேர்ந்த கதி அது.

அவர்கள் விரும்பாமலே அவர்களோடு மாறி விளையாடிய விதி அது.

ஆமாம், வரலாற்றின் விதி திசை மாறி விளையாடியது.

சிலுவைகளின் முன்னே நிறுத்தப்பட்டனர் அனைவரும்.

அது மரணத்தின் கணம்.

பேரவலம் – பெருமரமாக விரிந்தாடியது.

கண்களும் கைகளும் கட்டப்பட்டு….. கொலைக்கான நாடகத்தின் முன்னே நிறுத்தப்பட்டிருந்தனர் எல்லோரும்.

நடக்கப்போவது கொலை என்று தெரிந்தது. உயிர் மீளும் நம்பிக்கைகள் துளிர்ப்பது சாத்தியமேயில்லை.

சிலர் கல்லாய்ச் சமைந்தனர். சிலர் கடலாய்ப் பெருகினர். சிலர் மெழுகாய் உருகினர். சிலர் தம்மைத் தாமே நொந்து கொண்டனர்.

எதிரியை நம்புவது முட்டாள்தனமானது என்று தெரிந்தது அப்போது.

ஆனாலும் மாற்றுத் திசையுமில்லை – வேற்று வழியுமில்லை என்பதால் அந்த நிலையில் அவர்கள் அவ்வாறு சிறைப்பட்டனர்.

ஆனாலும் அவர்களைச் சிலுவையிலேற்றத் துடித்தனர் எதிரிகள்.

ஆகையால் எந்த மன்றாட்டமும் எதிரிகளின் செவியேறவில்லை.

சிலுவைகளோடு நின்றவர்கள் ஆணியறையத் துடித்தனர்.

காலமெல்லாம் வீரர்களாகவும் வீராங்கனைகளாகவும் இருந்தோர் அப்போது சிலுவையின் முன்னே மண்டியிட வைக்கப்பட்டனர்.

அவர்கள் ஒரு காலம் பேருடையோர். புகழுடையோர். ஆற்றலுடையோர்.

காற்றைப் போல வலியராகவும் வானத்தைப்போல ஒளியுடையோராயும் இருந்தவர்கள்…

இப்போது….

தனித்து விடப்பட்ட இந்த நீர்க்கரையில்…

நிர்க்கதியாகியிருக்கின்றனர். அடுத்து நடக்கவிருப்பது?

கொலைவெறியரின் முன்னே எதையும் தீர்மானிக்க முடியாது.

பழிதீர்க்கும் வன்மம் மட்டும் எதிராளிகளின் குரலில் தெரிகிறது.

வஞ்சம் தீர்க்கும் ஆவேசத்தில் எதிராளிகள்….

சரணடைந்தவர்….. நிராயுதபாணிகள்….

துப்பாக்கியின் முன்னே நிறுத்தப்பட்டனர்;.

சரணடைவுக்குப் பின்னர் கொல்லப்பட்டனர். சிதைத்துக் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டுச் சிதைக்கப்பட்டனர்.

அந்த வெட்டை வெளியில்…

மரணம் மட்டுமே விளைந்து நாடகமாடிய அந்த வெளியில்….

இறுதிப்பொழுதுகள் என்று விதி அமைந்த அந்த வெளியில்….

சிலுவை… துப்பாக்கி… கொலைவெறி… மரணம்.

வெற்றியைப் பற்றியே சிந்தித்தோரின் முன்னே

விடுதலையைப் பற்றிக் கனவு கண்டோரின் முன்னே

தோல்வி தூக்குக் கயிற்றோடு நின்றது.

அவலக்குரலெழுப்புவதற்கு – அந்த நீர்க்கரையில் ஒரு ஆட்காட்டி கூட இல்லை.

00

அவள்….

ஒலியாகி….

ஒளியாகி….

இசையாகி….

காற்றிலே ஊர்வலம் வந்தவள்…

கனலும் நெருப்பிலே தன்னை வளர்த்தவள்…

நீரிலே விளையாடிய வீரனைத் தன்னோடிணைத்தவள்….

நினைவெல்லாம் அவளாகும் நிதர்சனமாய் நின்றவள்…

மாத்தளனிலே தன் பிள்ளை மூச்சிழக்கத் துயரடைந்தவள்….

பிறகு, முடிவேயில்லாத பெருஞ்சமரிலே தன்னிணையை இழந்தவள்…

ஈற்றிலே எதிராளிகளின் கையிலே சிக்கிக்…..

00

எனது ஊரில் துவக்கைக் காணாத நாட்கள் இனிமேல் இருக்குமா?

00

நன்றி: பொங்குதமிழ்,

Thursday, December 2, 2010

உயிர்ப்பாகி, உலகை மண்டியிடவைத்த மாவீரர்களின் மரணசாசனங்கள், ஆப்பிழுத்த குரங்கான ராஜபக்க்ஷ

சிங்கள அரசுத்தலைவர் மகிந்த ராஜபக்க்ஷவின் இரண்டாவது பதவிக்கால ஆரம்பம் அவருக்கு உள்நாட்டிலும் இந்திய, சீன, மட்டத்திலும் அளவுக்குமீறிய அதிகாரங்களையும் அகங்காரத்தையும் தோற்றுவித்திருக்கிறது, அவற்றை உலகுக்கும் காட்டிக்கொள்ளும் விதமாக அசாத்திய துணிச்சலுடனும் அகங்காரத்துடன் மகிந்தவின் இலண்டன் பயணம் சென்றமாதம் திட்டமிடப்பட்டிருந்தது,



கொலைக்குற்றவாளியாக உலகத்தால் குற்றஞ்சாட்டப்பட்ட பின்பு இடம்பெற்ற அமெரிக்கப்பயணம், ஐநா மன்றத்தில் உரைநிகழ்த்திய துணிச்சல், போர்குற்றவாளிகளை விசாரணைக்குட்படுத்தி விசாரிக்க வேண்டுமென்ற ஆர்வமில்லாத சர்வதேசநாடுகளின் அரசியல் கலந்த சுயநலக் காய்நகர்த்தல் போன்ற உதாசீனப்போக்கு, கொலைக்குற்றவாளியான ராஜபக்க்ஷவிற்கு கடந்தகால உலக சரித்திரத்தை, விடுதலை போரில் வித்தான தியாகங்களின் பின்விளைவுகளின் யதார்த்தத்தை சிந்திப்பதற்கு இடங்கொடுத்திருக்கவில்லை.

இலண்டன் பயணத்தில் ஏதாவது அசம்பாவிதம் நடந்துவிடலாம் என்கிற பயம் உள்ளூர ராஜபக்க்ஷவிற்கு ஏற்கெனவே உண்டு. அவற்றை வெளிக்காட்டிக்கொள்ளாவிட்டாலும் பயம் காரணமக சென்றவாரம் திட்டமிடப்பட்டிருந்த பயணத்தை ஏதேதோ காரணங்கள் காட்டி அப்போ இலண்டன் பயணம் தள்ளிப்போடப்பட்டது.

ஆனாலும் பத்திரிகை ஊடகங்கள் கொலைக்குற்றவாளியான மகிந்த இலண்டனுக்குள் கால்வைத்தால்
கைதுசெய்யப்படலாம் என செய்திகள் வெளியிட்டு பயமுறுத்தின, இதன் பின்னணியில் தமிழர் அமைப்புக்கள் திரண்டு ராஜபக்க்ஷ படுகொலைச்சூத்திரதாரி என்பதற்கான ஆதாரங்களை பிரித்தானிய அரசிற்கும் ஐநா அமைப்பிற்கும் தெரியப்படுத்திக்கொண்டு களத்திலிருந்தன.

ஆனால் ராஜபக்க்ஷவும் பிரித்தானியாவுக்கான ஸ்ரீலங்கா தூதரகமும், இன்னும் பல வெளிநாடுகளுக்கான ஸ்ரீலங்கா தூதரகங்கள் விடுதலைப்புலிகள் அமைப்பு இலங்கையில் வேரறுக்கப்பட்டுவிட்டது, ஆனால் புலம் பெயர்தேசங்களில் அவர்கள் மிக வலுவாக இருந்து அங்குள்ள மக்களை தூண்டிவிடுகின்றனர் என்ற குற்றச்சாட்டை இடைவெளியில்லாமல் பிரச்சாரம் செய்தவண்ணம் சர்வதேசத்தை ஏமாற்றிக்கொண்டிருந்தன.

இப்பேர்ப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தனக்கும் இறைமையுள்ள ஸ்ரீலங்கா அரசுக்கும் அபகீர்த்தி ஏற்படுத்தும் என்றும் பொய்க்குற்றச்சாட்டுக்களை தமிழர் தரப்பு ஆதாரப்படுத்துவதாகவும் திட்டமிட்டபடி லண்டன் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் உறையாற்றாமல்ப்போனால் உள்நாட்டில் சிங்கள மக்களை அமைதிப்படுத்த முடியாது என பிரித்தானியாவின் உயர்மட்டத்திடம் சத்தியக்கடதாசி பெற்று இலண்டன் வந்திருந்தார்.

newsஆனால் பிள்ளையார் பிடிக்க குரங்கான கதையாகி, ராஜபக்க்ஷ வரலாறு காணாத அவதிக்குள்ளாக்கப்பட்டிருக்கிறார், தமிழ் மக்களின் முற்றுகை ஒருபுறம் ராஜபக்க்ஷவை விடாமல் பின்தொடர, போதாக்குறைக்கு சனல்-4 அப்பட்டமாக புதிது புதிதாக விடுதலைப் போராளிகளின் படுகொலைக்காட்சிகளை அம்பலப்படுத்தி ராஜபக்க்ஷவையும் பிரித்தானிய அரசையும் உலகையும் ஆட்டங்காண வைத்துவிட்டது.(4 சனெல் தொலைக்காட்சி வெளியிட்ட அதிர்ச்சியூட்டும் காணொளியை பார்ப்பதற்கு இங்கு சொடுக்கவும்)

அத்துடன் நின்றுவிடாமல் அடி மேல் அடி வாங்கிக் கொண்டு அழுத்தங்களை எதிர்கொண்டிருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஐ.நா.வின் விசேட பிரதிநிதியொருவரும் தன் பங்குக்கு அதிர்ச்சி வைத்தியம்
கொடுத்துள்ளார். இலங்கை இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் தமிழ்ப் பெண்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகம் உட்பட ஏனைய யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பாக பிரிட்டனின் சனல் - 4 தொலைக்காட்சி புதிதாக வெளியிட்டுள்ள ஆதாரங்கள் குறித்து விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என
சட்டவிரோத கொலைகள் தொடர்பாக விசாரணை நடத்தும் ஐக்கிய நாடுகள் சபையின் விசேட பிரதிநிதி பேராசிரியர் கிறிஸ்டொப் ஹேன்ஸ் கேட்டுள்ளார்.


இதனிடையே சர்வதேச மன்னிப்புச் சபையும் தன் பங்குக்கு பிரிட்டனின் சர்வதேச சட்டங்களின் கீழ் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ மற்றும் இலங்கை அதிகாரிகள் மீதும் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது.

தமிழர்களின் ஒற்றுமையே மகிந்தவின் முதல் தோல்வி. போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் என பிரித்தானியத் தமிழர் பேரவை அறிவித்துள்ளது. இது தொடர்பில் பிரித்தானியத் தமிழர் பேரவையால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், சிறீலங்கா அரச அதிபர் மகிந்த ராஜபக்ச, ஒக்ஸ்போட் சங்கத்தில் நாளை வியாழன் ஆற்ற இருந்த உரை இரத்து செய்யப்பட்டுள்ளதாக, ஒக்ஸ்போட் சங்கமும், மகிந்த ராஜபக்சவின் செயலரும் அறிவித்துள்ளனர். அத்துடன், குறிக்கப்பட்ட நாளுக்கு முன்னரே பிரித்தானியாவைவிட்டு மகிந்த வெளியேற இருப்பதாகவும் அறிகின்றோம் என்று தெரிவித்துள்ளது.

தமிழ் மக்களை இனப்படுகொலை புரிந்த, போர்க் குற்ற நபரான சிறீலங்கா அரச அதிபர் மகிந்த ராஜபக்சவிற்கு பிரித்தானியாவில் ஏற்பட்டுள்ள முதல் தோல்வியானது, திட்டமிட்ட ஒருங்கிணைப்பாலும், தமிழ் மக்களின் ஒற்றுமையாலும், விரைந்த முயற்சியாலும் ஏற்பட்ட வெற்றியின் முதற்படி என பிரித்தானிய தமிழர் பேரவை தெரிவித்திருக்கிறது.

newsமகிந்த ஒக்ஸ்போட் சங்கத்தில் உரையாற்ற பிரித்தானியாவிற்கு வருகின்றார் என்று தெரிந்தவுடனேயே, பிரித்தானிய தமிழர் பேரவை விடுத்த அழைப்பிற்கு இணங்க, மக்கள் தன்னெழுச்சியாகவும் இணைந்ததன் மூலம் இது சாத்தியமாகியது. தமிழ் மக்களின் இணைந்த முயற்சிக்கு அப்பால் சில சிங்கள தோழர்கள் உரிய நேரத்தில் முக்கிய போர்க்குற்ற சாட்சியங்களை எமக்கு தந்து உதவியதற்கும், அவற்றை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பவும், பத்திரிகைகளில் வெளியிடவும் குறுகிய காலத்தில் மேற்குலக ஊடகங்கள் இணங்கியதற்கும் நன்றி தெரிவித்திருக்கின்றனர்.

தமிழ் மக்களின் ஒற்றுமையால் ஏற்பட்ட இந்த முடிவை, எமது வெற்றிக்கான முதற்படியாகக் கொண்டு, தமிழ் மக்கள் மேலும் உற்சாகத்துடனும், நம்பிக்கையுடனும், ஒற்றுமையுடனும் எமது செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என பிரித்தானிய தமிழர் பேரவை உரிமையுடன் கேட்டிருக்கிறது.

இவை எல்லாவற்றிற்கும் ஆதார சுருதியாக தலைவரின் ஒப்பற்ற ஆளுமையின் ஒளிவட்டத்தால் கவரப்பட்ட மக்கள் சக்தியும். வித்தாகிப்போன மாவீரர்களின் தியாகமும் மறைந்திருந்து இந்த மாபெரும் எழுச்சியை உலக அரங்கத்தில் உருவாக்கியிருக்கிறது,

மறைந்துபோன மாவீரர்களின் படுகொலை சாட்சியங்கள்தான் ஒளிப்படங்கள் மூலம் உலகத்தை மௌனமாக நியாயத்தின் முன் மண்டியிட வைத்து கொலைகாரனை உலகுக்கு இனங்காட்டி தமிழனை தலைநிமிர வைத்திருக்கிறது.

மாவீரர்களின் மறக்கமுடியாத தியாகமரணங்கள் தமது வீரியத்தை தமது மரண சாசனங்கள் மூலம் சிங்கள ஏகாதிபத்துயத்தின் ஐந்தாவது சூத்திரதாரி ராஜபக்க்ஷவை இக்கட்டில் மாட்டிவிட்டிருப்பதை கண்கூடாக கண்டிருக்கிறோம் மாவீரர்கள் மறைந்துபோகவில்லை விதைக்கப்படுகின்றனர் என்பது தலைவரின் அசையாத நம்பிக்கை அந்த நம்பிக்கை 2010 மாவீரர் காலத்தில் நிதர்சனமாக நிகழ்ந்திருக்கிறது,

வித்தாகி உயிர்ப்புடன் துயில்கொள்ளும் மீதி மாவீரர்களின் தியாகங்களும் படிப்படியாக திரண்டு தலைவரின் மீழ்வருகையுடன் ஈழவிடியலுக்கான பிரகாசமான ஒளியுடன் எதிரியை எரிக்கும் என்பது இலண்டனில் இன்று மெய்ப்பிக்கப்பட்டிருக்கிறது,

ஈழதேசத்திற்காக ,கனகதரன்

நன்றி ஈழதேசம் இணையம்,

Tuesday, November 30, 2010




குருபெயர்ச்சி பலன்கள், 21,11,2010/ 07,05,2011,,


Monday, November 29, 2010

மஹிந்தவின் வருகையை எதிர்த்து லண்டன் விமானநிலையத்தில் தமிழர்கள் நடாத்திய போராட்டம்: "போர்க்குற்றவாளி மஹிந்தவே திரும்பிப் போ" என கோசம்








மஹிந்தவின் வருகையை எதிர்த்து லண்டன் விமானநிலையத்தில் தமிழர்கள் நடாத்திய போராட்டம்: "போர்க்குற்றவாளி மஹிந்தவே திரும்பிப் போ" என கோசம்
[ செவ்வாய்க்கிழமை, 30 நவம்பர் 2010, 01:40.51 AM GMT +05:30 ]
போர்க்குற்றவாளியும், தமிழின அழிப்பின் சூத்திரதாரியுமான மஹிந்த ராஜபக்ஷவின் பிரித்தானிய வருகையை எதிர்த்து லண்டன் கீத்றூ விமானநிலையத்தில் நேற்று இரவு ஆயிரத்துக்கும் அதிகமான தமிழர்கள் கூடி எதிர்ப்பை தெரிவிக்கும் முகமாக ஆர்ப்பாட்டம் நடாத்தியுள்ளனர்.

நேற்று (29-11-2010) இரவு 8:00 மணிமுதல் லண்டன் கீத்றூ விமானநிலையத்துக்குள் வர ஆரம்பித்த தமிழ் மக்கள் 10:00 மணியளவில் உரத்த குரலில் தமது எதிர்ப்பை தெரிவித்து போராட்டம் நடாத்தினர். ஆயிரத்துக்கும் அதிகமாக அங்கு கூடிய தமிழ்மக்களில் பலர் "ஸ்ரொப் ஜெனசைட்" என குறிக்கப்பட்ட மேலங்கிகளை அணிந்தவாறும் படுகொலை செய்யப்பட்ட மக்களின் படங்களை கைகளில் ஏந்தியவாறும் உரத்த குரலில் தமது எதிர்ப்பை தெரிவித்தனர்.

தமிழர்களின் இந்த திடீர்போராட்டத்தால் அங்கு கூடிய அதிகளவான காவல்துறையினருக்கு மத்தியிலும் அதிகளவானோர் தமது கரங்களில் தமிழீழ தேசியக் கொடியினை ஏந்தியவாறு

"போர்க்குற்றவாளி மஹிந்தவே திரும்பிப் போ"

"சிறீலங்கா ஜனாதிபதி பயங்கரவாதி"

"இனப்படுகொலை செய்த அரக்கனே திரும்பிப் போ"

"சிறீலங்கா ஜனாதிபதி போர்க்குற்றவாளி"

போன்ற கோசங்களை உரத்த குரலில் எழுப்பி விமானநிலையமே அதிரும் வண்ணம் தமது எதிர்ப்பை தெரிவித்தனர்.

அனுமதியற்ற போராட்டமாக இருந்த போதும், அங்கு தேசியக்கொடிகள் பிடிக்கப்பட்டு உரத்தகுரலில் எதிர்ப்புப் போராட்டம் நடைபெற்றபோதும் அங்கு கூடிய பிரித்தானிய காவல்துறையினர் எந்தவித இடையூறும் கொடுக்காததும், அதேபோல் போராட்டம் முடிவடையும் போது தமிழர்கள் பலர் காவல்துறையினருக்கு நன்றி தெரிவித்துச் சென்றதோடு அங்கு எதுவித அசம்பாவிதங்களோ, அன்றி கைதுகளோ நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்பாடு செய்யப்படாத இந்த திடீர் போராட்டத்தில் தமிழ் இளையோர் அமைப்பு, பிரித்தானிய தமிழர் பேரவை உறுப்பினர்கள், நாடுகடந்த தமிழீழ அரசாங்க பிரதிநிதிகள், மற்றும் பொதுமக்கள் என அனைவரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழர்கள் அங்குகூடி போராட்டம் நடாத்தியதால் மகிந்த ராஜபக்ஷ மட்டுமன்றி அந்த விமானத்தில் வந்த அதிகளவான சிங்களவர்களையும் காவல்துறையினர் வேறு வழிகளினூடாக வெளியேற்றியிருந்தனர்.

அச்சமடைந்த மகிந்தவை விமானம் தரை இறங்கியதும் விமானத்திற்கு அருகில் சென்ற நான்கு காவல்துறையினரின் வாகனங்கள் பாதுகாப்பு கொடுக்க ஒரு வாகனம் அவரை ஏற்றிக்கொண்டு வேறுவழியால் சென்று ஹட்ரன் குறஸ் நிலக்கீழ் தொடரூந்து நிலைய வழியாக ஏ312 வீதியூடாக சென்றல் லண்டனை நோக்கி விரந்து சென்றுள்ளது. வேறுவழிகளால் செல்லும் வாய்ப்பே அதிகமாக இருக்கும் என எதிர்பார்த்து கண்காணிப்பில் பல இடங்களிலும் நின்ற தமிழர்களால் இச்செய்தி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இது மட்டுமன்றி எதிர்வரும் 2-ஆம் திகதி ஒக்ஸ்பேட் பல்கலைக் கழகத்திலும் மகிந்த உரையாற்றவுள்ளதால் இதை விட அதிகளவான தமிழர்கள் அங்கு கூடி தமது எதிர்ப்பை தெரிவிப்பார்கள் என எதிர்வுகூறப்பட்டுள்ளதும் இங்கு சுட்டிக்காட்டதக்கது.

உடனடியாக செய்யவேண்டிய வேலையாக கீழுள்ள லிங்கை அழுத்தி அதனூடாக உங்கள் முறைப்பாட்டை 300 சொற்களுக்கு அதிகமாக இல்லாமல் இலகுவாக பிரித்தானிய வெளிவிவகார அமைச்சிற்கு அனுப்புங்கள்.

http://www.fco.gov.uk/en/feedback

நன்றி தமிழ்வின்,