Monday, December 23, 2013

கருணாநிதியின் நிழல்க்குடை சினிமா பாடலாசிரியர் வைரமுத்து எழுத திட்டமிட்டிருக்கும் மஹாவம்ஷம் (ll)‏.


வன்னியில் 2008 ,2009 களில் விடுதலைப்போர் உக்கிரமாக நடந்துகொண்டிருந்தபோது,   இந்திய மத்திய அரசில் மிகப்பெரிய ஆதிக்க சக்தியாக பங்கு வகித்தவர் முத்துவேல் கருணாநிதி,   
தமிழ் மக்களுக்கான முதலமைச்ர் என்ற பெயரோடு, தமிழ்நாடு மானிலத்தில்  இருந்துகொண்டு,    ஈழ இனப்படுகொலையை நடத்தி முடித்த இலங்கை,  இந்திய ஆட்சியாளர்களுக்கு சற்றும் குறைவில்லாத இணையாக,   தனது அனைத்து அதிகார தந்திரங்களை திருப்பிவிட்டு தமிழ்நாட்டு மக்களை அடக்கி ஒடுக்கி அனைத்து தமிழக ஊடகங்களையும் தனது அதிகாரத்தினால் கட்டுப்படுத்தி, முள்ளிவாய்க்கால் எரிந்து முடியும்வரை பல்வேறுபட்ட கபடத்தனமான அரசியல் ஒப்புவாயங்களையும்,  நஞ்சுத் தனமான நாடகங்களை நடத்தி ஈழத்தமிழனத்தின்  உயிரோட்டத்தையே அழிப்பதற்கான மூல வேராகி விபரிக்க முடியாத  மிகப்பெரிய துரோகியாக இருந்தவர்  நவீன நரகாசுரன் முன்னை நாள் முதலமைச்சர் மு கருணாநிதி.

கருணாநிதி மற்றும் சோனியா, பிரணாப், சிதம்பரம் கூட்டாளிகளின் கபடமான தமிழ் ஈழ விரோத செயற்பாட்டை பொறுக்கமுடியாத தமிழகத்து கல்லூரி மாணவர்கள், சட்டத்தரணிகள் இன்ன பிற பல அமைப்புக்கள், பொதுமக்கள் என்று ஒட்டு மொத்த  தமிழ்நாடே திரண்டு தெருவுக்கு வந்து முடிந்தவரை போரை நிறுத்துவதற்காக கருணாநிதியின் ஆட்சி நிர்வாகத்தை மண்டியிட்டும் உயிரை விட்டும் பல வடிவங்களில் போராடி தோல்வி கண்டனர். 

அன்றைய எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஜெயலலிதா,  மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, நெடுமாறன் போன்ற தலைவர்கள் உண்ணாவிரதமிருந்து போராட்டத்தை நிறுத்தும்படி மத்திய மானில அரசுகளை கேட்டு தமது எதிர்ப்பை பதிவு செய்தனர். எந்தப்பலனும் கிடைக்க கருணாநிதி விடவில்லை.

இன்னொரு பக்கம் தியாகி முத்துக்குமார் தொடங்கி இருபதுக்கு மேற்ப்பட்ட உணர்வாளர்கள்  தமிழகத்து தெருக்களில் தீக்குளித்து  தினம் தினம் கருகி மாண்டனர்.  

சோனியா அரசு எடுத்துக்கொண்ட முடிவுக்கு மாறாக ஒரு மண்ணைக்கூட அசைய கருணாநிதி அனுமதிக்கவில்லை.

சோனியாவின் கட்டளையை விடவும் இன்னொரு படி மேலே போய் நோய்வாய்ப்பட்டு மருத்துவத்துக்கு வந்த தேசியத்தலைவர் வே பிரபாகரன் அவர்களின் தாயார் பார்வதி அம்மாவை முதியவர் என்றும் பார்க்காமல் வஞ்சகத்தின் உச்சமாக விமான நிலையத்திலிருந்து ஒரு மணி நேரத்தில் திருப்பி அனுப்பினார் கருணாநிதி.

விஞ்ஞானத்துக்கே புலப்படாத கருணாநிதியின் கயமை மனதை எந்த சக்தியாலும் கரைகாண முடியவில்லை.  நவீன நரகாசுரனான கருணாநிதி தனது குடும்ப செல்வச் செழிப்புக்காக ஈழத்தமிழ் மக்களை புழுக்களை விடவும் மலிவாக அன்றைக்கு நடத்தினார்.

தமிழகத்தின் கொந்தளிப்பு அதிகரிக்கும்போது செய்வதையும் செய்துகொண்டு நாரிப்பிடிப்பு என்று பாசாங்கு செய்து லுங்கியை கட்டிக்கொண்டு இராமகிருஷ்ணா மருத்துவமனையில் சென்று பதுங்கினார்,  நிலமை முற்றியபோது  உச்சக்கட்ட கபட நாடகமாக தானும் உண்ணாவிரதமிருப்பதாக வேடங்கட்டி  முள்ளி வாய்க்கால் எரிந்து சாம்பலாகும்வரை தன்னாலான அனைத்து நாடகங்களையும் நடத்தி வெற்றி கொண்டார்  நவீன நரகாசுரன் கருணாநிதி.

ஈழ இனப்படுகொலையின் மூலவேரான கருணாநிதியின் வரலாற்று துரோகத்திற்கு எதிராக பலத்த எதிர்ப்பு  உலக தமிழர்கள் மத்தியில் எழுந்திருந்தது, 

அந்த களங்கத்திலிருந்து தப்பிப்பதற்காக தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை சென்னையில் நடத்தி ஈழத்து கல்விமான்களை மேடையேற்றி  தனது களங்கத்தை திசை திருப்ப கருணாநிதி முயன்றபோது அதற்கு தமிழ் ஆராய்ச்சி அமைப்பு குழுவிடமிருந்து எதிர்ப்பு கிளம்பியது.

தமிழாராய்ச்சி மாநாடு என்ற பதத்தை மாற்றி செம்மொழி மாநாடு என்று புதியதொரு வியாக்கியானத்தோடு விழாவை எடுத்து தனது களங்கம் விட்டுப்போய்விடும் என்று நம்பி ரூபா 311.5 கோடி செலவு செய்து சொம்மொழி மாநாட்டையும் 2010 ல் கோவையில் நடத்தி நரகாசுரன் கருணாநிதி குடும்பத்துடன் குதூகலித்து மகிழ்ந்தார்.

இருந்தும் உலகத் தமிழினத்தின் எதிர்ப்பு கருணாநிதி மீது மையம் கொண்டு பெருத்த விரிசல் உருவாகி வருவதை உணர்ந்த கருணாநிதி அந்த விரிசல் ஒரு நிறுவனப்பட்ட எதிர்ப்பாக திரண்டு விடுவதை தடுப்பதற்காக பல மேடைகளை திறந்து தனது திரை மறைவு தமிழின விரோத செயற்பாடுகள் அனைத்தையும் மூடி மறைத்து தனிமைப்பட்டு போகாமல்  தப்பிப்பதற்கு பல மேடைகளை திறந்து வேடங்கட்டினார்.

கருணாநிதியின் நயவஞ்சகம் அனைத்திற்கும் பக்கபலமாக அன்றும் இன்றும் அரணாக நிற்கும் சில பிரபலங்களில் சினிமா பாடலாசிரியர் வைரமுத்து, பேராசிரியர் சுபவீர பாண்டியன்,  திராவிடர் கழகத்தின் தலைவர் வீரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல் திருமாவளவன். போன்றோர் முன்னிலையில் இருந்து வருகின்றனர்.

முள்ளிவாய்க்காலில் அன்றாடம் ஆயிரம்,  ஐந்தாயிரம்,  பத்தாயிரம்,  நாற்பதாயிரம் என்று மக்கள் கொல்லப்பட்டபோதும்,  தமிழ்நாட்டின் மண்ணின் மைந்தர்கள் இருபதுக்கு மேற்பட்ட பொது மக்கள் தீக்குளித்து மாண்டபோதும்,  குறிப்பிட்ட  வைரமுத்து, சுபவீர பாண்டியன், வீரமணி,  திருமாவளவன் போன்ற அந்த பிரபலங்கள் கருணாநிதியின் செயற்பாட்டை கண்டித்து குரல் கொடுக்காமல்,  கருணாநிதி மக்களை திசை திருப்ப திட்டமிட்டு நடத்திய சினிமா களியாட்ட நிகழ்ச்சிகளில் கூட்டுச் சேர்ந்து பச்சோந்திகள் போல  புத்துணர்வுடன் கலந்து வஞ்சக புகழ்ச்சி செய்து இனத்துரோகியான கருணாநிதியை  எதுகை மோனை வசன நடையில் புகழ்ந்து தள்ளிய வீடியோ பதிவுகள் இன்றும் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இன்றைக்கு கருணாநிதி தனக்கும் ஈழப்படுகொலைகளுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்றும்,  இனப்படுகொலை நடைபெறும்போது  இந்திய அரசியலில் எந்த அதிகாரமும் இல்லாமல் இருந்தவர் போலவும்,  செத்துப்போன சடலம்போல கோமாவில் இருந்தவர்போலவும் மேடைகளில் பேசி கடைந்தெடுத்த அயோக்கியத்தனமான அரசியல் செய்துகொண்டிருக்கிறார்.  

ஒரு புறம் அதிக விகிதாசாரத்திலுள்ள மக்களோ உலகமோ அதை ஏற்றுக்கொள்ளாவிட்டாலும்,   இரண்டும் கெட்டான் மனநிலையில் உள்ளவர்களான விளிம்பு நிலை மனிதர்களும்.  படிப்பறிவில்லாத இளைய சந்ததியும் கோயபல்ஸ் போல கருணாநிதி குழுமத்தால தொடர்ச்சியாக திரித்துக்கூறப்படும்  பொய்களை நம்பி கருணாநிதி சூழ்நிலை குற்றவாளியோ என்று எண்ணும் வண்ணம் பிரச்சாரங்கள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. 

இதனால் காலப்போக்கில் இளைய தலைமுறை  ஒருவித மயக்கமடையும் அபாயம் இருப்பதால் இதுபோன்ற துரோகிகளை தினமும் சமூகத்துக்கு ஞாபகப்படுத்தவேண்டிய பாரிய பொறுப்பு எனக்கு மட்டுமல்ல அனைத்து உணர்வாளர்களுக்கும் ஊடகங்களுக்கும் உண்டு.

உதாரணத்துக்கு புத்த பிக்குக்காளால் திட்டமிட்டு திரித்து எழுதப்பட்ட "மஹாவம்ஷம்"   என்ற கிரந்தம் இலங்கையின் உண்மையான வரலாற்றை சந்தேகிக்கும் வண்ணம் பல பொய்த் தகவல்களை உலக மட்டத்தில் பரப்பியிருக்கிறது.

இன்றைக்கு கருணாநிதி ஓரளவுக்கு தனிமைப்படுத்தப்பட்ட ஒரு அரசியல்வாதி ஆக்கப்பட்டிருக்கிறார்,  இருந்தும் மக்கள் மந்தைக்கூட்டம் போன்றவர்கள் மறக்கும் மனநிலையுடையவர்கள் என்ற நம்பிக்கை அனுபவசாலியான  கருணாநிதியிடம் அதிகமாக இருப்பதை உணர முடிகிறது.

தான் மட்டுமே வரலாற்று உண்மையை திரிவு படுத்தி கொண்டிருந்த கருணாநிதி பொறுத்த கட்டங்களில் கீ வீரமணி, சுபவீர பாண்டியன், பாடலாசிரியர் வைரமுத்து போன்றோரின் பலவீனத்தை சாதகமாக பயன்படுத்தி தன்பாட்டிற்கு  அவர்களை சிலாகித்து புகழ்ந்து தனது  கட்டுப்பாட்டிலிருந்து அவர்கள் வெளியேறவிடாமல்  தனது அரணாக பயன்படுத்தி வருகிறார்.

கருணாநிதியின் கபட வித்தையை  பலப்படுத்தும் வண்ணம் சினிமா பாடலாசிரியரான வைரமுத்து  கருணாநிதியின் ஆட்சிக்காலத்தி கருணாநிதி முன்னின்று நடத்தி முடித்த (2009,மே) இனப்படுகொலையை, வேறு திசைப்பக்கமாக தந்தரமாக  திருப்பும் வேலைத்திட்டம் ஒன்றை தொடங்க இருப்பதாக தெரிகிறது.

அடுத்த ஆண்டு என்ன செய்வதாக உத்தேசம்? என்று ஒரு கேள்வியை ஆனந்தவிகடன் பத்திரிகையில் எழுப்பி.

அடுத்த ஆண்டில், இலங்கையில் நடந்த படுகொலைகள் தொடர்பான ஆக்கங்களை படைக்கப்போவதாக  சினிமா பாடல் ஆசிரியர் வைரமுத்து வெட்கம் கெட்டு கயமையான கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.

கருணாநிதி முதலமைச்சராக இருந்து இனப்படுகொலை நடத்தப்பட்ட 2007, 2008, 2009, களிலும் சரி அதன்பின்னும் சரி ஈழப்படுகொலைகளுக்கு எதிர்ப்பாக நிமிர்ந்து நின்று குரல் கொடுக்க முடியாத பச்சோந்தி வைரமுத்து படுகொலைகளை எதிர்த்து தீக்குளித்த இருபது உயிர்களை நியாயப்படுத்தி ஒரு குரல் கொடுக்காத வைரமுத்து,  கருணாநிதியுடன் நெருக்கமாக இருந்தபோதும்  பாராட்டு விழாக்களில் மூச்சடக்கி வசனம் பேசியபோதும் இனப்படுகொலை பற்றி��்டி புதைக்க திட்டமிட்டு தொடங்கப்படும் வைரமுத்துவின் வஞ்சக ஒப்பாரியை தமிழகத்து உண்மை தமிழர்கள் இனங்காணவேண்டும் என்பதற்காக ஊர்க்குருவி ஆள்க்காட்டியாக இன்று குரல் கொடுக்கிறது.

தமிழகமே தமிழினமே சிந்தித்துப்பார்.

கருணாநிதியின் காலடியில் கிடப்பவன் ஈழத்தமிழினத்துக்கு ஆதரவாக ஏதாவது எழுதுவானா?  அப்படி எழுதப்புறப்பட்டால் அந்த ஆக்கத்தில் என்ன மிதப்பாக இருக்கும்.

கருணாநிதி பராசக்தியில் வசனமெழுதி தமிழ்நாட்டை கைப்பற்றியதுபோல வைரமுத்து ஈழப்படுகொலைக்கு வசனமெழுதி கருணாநிதியை பிணையெடுக்க நிற்கும் சதியை தமிழகமே அம்பலப்படுத்து.

வைரமுத்து தொடர்ந்து திரைப்படத்துக்கு பாட்டெழுதட்டும் ஈழப்படுகொலையை திரிவுபடுத்தி பூங்காவனம் அமைக்க வேண்டாம்.

கருணாநிதியின் உயிர் நண்பன் வைரமுத்துவின் ஈழ அந்தாதி இன்னுமொரு மகாவம்ஷமாக அமைந்துவிடும்.

 

ஊர்க்குருவி.

Monday, November 25, 2013

தேசியத் தலைவர் மேதகு வே பிரபாகரன், அவர்களின் ஐம்பத்தொன்பதாவது சூரிய அகவை.‏
























நேரிய கோட்டினில் நிமிர்ந்த நல் உருவாய்

நின்றொரு தாமதம் கண்டிடா நடையாய்

பாரினில் தமிழன் பிறந்ததன் பலனாய்

பக்குவம் கொண்டதோர் சித்திர வடிவாய்

காலத்தின் கட்டளை பெற்றதோர் மகவாய்

கண்ணென கண்ட என் தமிழனின் முதலே.

 

நீண்டதோர் சன்னதம் கொண்டு நீ துடித்தாய்

நித்திரை துறந் தெங்கள் சந்ததி வளர்த்தாய்

கண்ணென்று தமிழினை காத்தருள் செய்தாய்

காட்டிலும் மேட்டிலும் காவலாய் நின்றாய்

விண்ணள வானதோர் வீரனாய் ஆனாய்

விடுதலைப் புலிகளின் தலைவனே பொருளே.

 

விண்ணது சிறியது வெல்லுவோம் என்றாய்

வீரத்தின் விளை நிலம் நீயென்று ஆனாய்

கண்ணிலும் பெரிதென கடமையை கொண்டாய்

காற்றிலும் புயலிலும் கலந்து நீ வந்தாய்

தண்மையாம் உன் முகம் சந்திரன் என்றால்

சரி நிகர் வெம்மையில் சூரியன் என்பார்.

 

ஆண்டொரு நான்கது எங்கு நீ மறைந்தாய்

அற்புத வீரத்தை என்னிடம் ஈர்ந்தாய்

மீண்டொரு நாள் வந்து மீதியை முடிப்பாய்

மிகச்சரி யானதோர் கட்டளை வகுப்பாய்

வேரிலும் மண்ணிலும் விடுதலை என்றாய்

விழி திறந்துன்வழி காத்திருக் கின்றோம்.

 

மண்ணினை காத்திட மலையென வந்தாய்

மானத்தை உலகம் அறிந்திட வைத்தாய்

நடத்தையில் நீயொரு இலக்கணம் ஆனாய்

நிமிர்ந்து நாம் நடந்திட பெரு வெளியானாய்

பூமியில்த் தமிழொரு புள்ளியாய்க் கொண்டாய்

புதியதோர் சரித்திரத்  தலைவனே  வாழி.

 

அகவையும் ஐம்பத் தொன்பதென் றாச்சு

அலைகடல் திரும்பியுன் வழி எதிர்பார்ப்பு

நாவிலும் உயிரிலும் உன்  உருவாச்சு

நடை வழி எங்கினும் உன் பெயர் பேச்சு

பூமியில் நீ பிறந் தின்றைய நாளில்

போற்றி நாம் வாழ்த்துவோம் பிறந்த நாளென்று.

 

ஊர்க்குருவி.

Sunday, November 24, 2013

மலேசியாவில் ஈழத்தமிழர்களின் கலை இசை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.

உருவாக்கப்பட்டது: 24 நவம்பர் 2013
http://www.eeladhesam.com/images/eelam/news01.08/01.11/malesiyaeelathamilarkalai%2020.jpg24,11, 2013 ஞாயிறு அன்று மலேசியா, கோலாலம்பூர் மகாராஜாலேலே,  என்ற இடத்தில் அமைந்திருந்த சைனீஸ் அசெம்பிளி மண்டபத்தில் புலம்பெயர் ஈழத் தமிழ் குழந்தைகள்,  மற்றும் இளைஞர்களின் கலை இசை  நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.
இந் நிகழ்வை மலேசியா வாழ் இலங்கை தமிழர் அகதிகள் அமைப்பு (STROM)  நடாத்தியது.  இந் நிகழ்வில் நடனம்,  பாடல்,  ஓவியம் வரைதல்,  போன்ற நிகழ்ச்சிகள் பரீட்சாத்தமாக நடத்தப்பட்டது.  முற்று முழுதாக ஈழத்தமிழ் மக்கள் நிகழ்ச்சிகளில் பங்குபற்றினர்.

ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்து மலேசியாவில் அகதிகளாக வாழ்ந்தாலும், தமிழ் பெற்றோர்கள் தமது குழந்தைகளை  தமிழ் கல்வி மற்றும் கலை போன்றவற்றில் புலனை திருப்புவதே "இலங்கை தமிழர் அகதிகள் அமைப்பு"  (STROM)  ன் நோக்கம் என்று அந்த அமைப்பினர் தெரிவித்தனர்.

நிகழ்வில் முந்நூறுக்கு மேற்பட்ட குழந்தைகள் மற்றும் பெற்றோர் கலந்து கொண்டனர்.  சிறப்பம்ஷமாக மலேசிய இன மக்களும் வந்திருந்து விழாவை சிறப்புற செய்தனர்.http://www.eeladhesam.com/images/eelam/news01.08/01.11/malesiyaeelathamilarkalai%2019.jpghttp://www.eeladhesam.com/images/eelam/news01.08/01.11/malesiyaeelathamilarkalai%2018.jpghttp://www.eeladhesam.com/images/eelam/news01.08/01.11/malesiyaeelathamilarkalai%2017.jpghttp://www.eeladhesam.com/images/eelam/news01.08/01.11/malesiyaeelathamilarkalai%2016.jpghttp://www.eeladhesam.com/images/eelam/news01.08/01.11/malesiyaeelathamilarkalai%2015.jpghttp://www.eeladhesam.com/images/eelam/news01.08/01.11/malesiyaeelathamilarkalai%2014.jpghttp://www.eeladhesam.com/images/eelam/news01.08/01.11/malesiyaeelathamilarkalai%2013.jpghttp://www.eeladhesam.com/images/eelam/news01.08/01.11/malesiyaeelathamilarkalai%2012.jpghttp://www.eeladhesam.com/images/eelam/news01.08/01.11/malesiyaeelathamilarkalai%206.jpghttp://www.eeladhesam.com/images/eelam/news01.08/01.11/malesiyaeelathamilarkalai%2011.jpghttp://www.eeladhesam.com/images/eelam/news01.08/01.11/malesiyaeelathamilarkalai%2010.jpghttp://www.eeladhesam.com/images/eelam/news01.08/01.11/malesiyaeelathamilarkalai%209.jpghttp://www.eeladhesam.com/images/eelam/news01.08/01.11/malesiyaeelathamilarkalai%208.jpghttp://www.eeladhesam.com/images/eelam/news01.08/01.11/malesiyaeelathamilarkalai%207.jpghttp://www.eeladhesam.com/images/eelam/news01.08/01.11/malesiyaeelathamilarkalai%205.jpghttp://www.eeladhesam.com/images/eelam/news01.08/01.11/malesiyaeelathamilarkalai%204.jpghttp://www.eeladhesam.com/images/eelam/news01.08/01.11/malesiyaeelathamilarkalai%203.jpghttp://www.eeladhesam.com/images/eelam/news01.08/01.11/malesiyaeelathamilarkalai%202.jpghttp://www.eeladhesam.com/images/eelam/news01.08/01.11/malesiyaeelathamilarkalai.jpg

Monday, November 18, 2013

கொமன்வெல்த் மாநாட்டில் ராஜபக்‌ஷவை நியாயப்படுத்திய இந்திய வெளியுறவு மந்திரி சல்மான் குர்ஜித்.‏


http://www.eeladhesam.com/images/eelam/news01.08/01.11/salman-khurshid-new-reuters1.jpgபொதுநலவாய அமைப்பு நாடுகளின் தலைவர்களின் கூட்டத்தினை இலங்கையில் தந்தரமாக நடந்தி முடித்து, பங்குபற்றும் தலைவர்களை தலை கழுவி தன்மீதுள்ள இனப்படுகொலைப் பழியை தாண்டிவிட முயன்ற ஶ்ரீலங்காவின் ஜனாதிபதி ராஜபக்‌ஷ மிகப்பெரிய சர்வதேச பொறியில் சிக்கியிருக்கிறார்.
கொமன்வெல்த் சாரலில் நடந்த, நடந்துகொண்டிருக்கும் விமர்சனங்களுக்கு ராஜபக்‌ஷவால் பதிலளிக்க முடியவில்லை. விமர்சனக் கேள்விகள் ஒன்றின்மேல் ஒன்றாகி உள்ளேயும் வெளியேயும் இடியப்பச் சிக்கலை தோற்றுவித்து நிற்கிறது.

இனப்படுகொலை சம்பந்தமாக எழுந்திருக்கும் உயர்மட்ட விமர்சனங்கள் பூசி மெழுகி அமுக்கிவிடக்கூடியதல்ல என்பது மட்டும் அரசியல் தெரியாத என்போன்ற பதர்களுக்கு புரிகிறது, அதே நிலையையில்தான் இனப்படுகொலை சூத்திரதாரியான ராஜபக்‌ஷவும், ராஜபக்‌ஷவின் இடக்கரம் வலக்கரமான இந்தியாவும் இப்போது கொண்டுள்ளன என்பதும் அவரவர் பேச்சுக்களிலிருந்து புரியக்கூடியதாக உள்ளது.

கொமன்வெல்த் மாநாட்டு கூட்டங்களின் முன்னும் பின்னும் இலங்கை மீதும், இலங்கை ஜனாதிபதி ராஜபக்‌ஷ மீதும் சுமத்தப்பட்ட நெருக்கடிகளை பூசி மெழுகி களைவதற்கு  கொமன்வெல்த் அமைப்பின் பொதுச்செயலாளர் கமலேஷ் சர்மா, மற்றும் இந்திய வெளி விவகார அமைச்சர் சல்மான் குர்ஜித்து ஆகியோர் பகீரத பிரயத்தனம் எடுத்துக்கொண்டுள்ளனர்.

15,ம் திகதிக்கு பிந்திய கொமன் வெல்த் கூட்டத்திலும் கூட்டம் இல்லாத தனிச்சந்திப்புக்களிலும் பிரிட்டன் பிரதமர் ராஜபக்‌ஷவுடன் சற்று கடுமையாகவே பேசிக்கொண்டார் என்றும் பேச்சுவார்த்தைகள் சாதாரண பேச்சுவார்த்தைபோலல்லாமல் வாக்குவாதம்போல் நடந்ததாகவும் செய்திகள் சொல்லுகின்றன.

முடிவாக,

1, இலங்கையில் நடைபெற்றுள்ள போர்க்குற்றங்களுக்கு சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதில் தான் உறுதியுடன் இருப்பதாக இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமருன் கடுமைபட கூறியுள்ளார்.  வரும் மார்ச் மாதத்திற்குள் போர்க் குற்றம் குறித்து விசாரிக்க உரிய ஏற்பாடுகளை செய்யவில்லை என்றால், சர்வதேச விசாரணை நிச்சயம் தொடங்கப்படும் என்று இங்கிலாந்து பிரதமர் டேவிட் கெமருன் இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதுடன் போர்க்குற்றங்களை மறைக்க இலங்கை முயற்சி செய்வது உண்மை என்றும் அவர் குற்றம் சாட்டியிருக்கிறார்.

இலங்கை சுயமான விசாரணை பொறிமுறை ஒன்றை அமைத்து, அதன் இராணுவப் படையினர் மீதுள்ள போர்க்குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்களை கையாள்வதாக உலகுக்குக் காட்டவேண்டும் அப்படி காட்டினால், அது அது மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று பிரிட்டனின் வெளியுறவுச் செயலர் வில்லியம் ஹேக் கூறியிருக்கிறார். 

2, பிரித்தானியாவின் கருத்தை கொண்டிருந்த கனடா இலங்கை மண்ணில் மிதிப்பதை பாவமாக உருவகப்படுத்தி கொமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை, ஈழ மண்ணில் நடந்த இனப்படுகொலைகள் சர்வதேச விசாரணைக்குட்படுத்தவேண்டும் என்றும் மனித உரிமை மீறல்கள் விசாரிக்கப்படவேண்டும் என்றும் திடமான முடிவை கனடா தெரிவித்திருக்கிறது.

அத்துடன்,

மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்க இலங்கை உரிய நடவடிக்கை எடுத்துள்ளதாக பொதுநலவாய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் கமலேஷ் சர்மா தெரிவித்திருந்த துறை சாராத தலையீட்டுக்கு கனடா பெரும் அதிருப்தியை வெளியிட்டிருந்தது. சர்மாவின் கருத்து ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல,  மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் போதுமானவையல்ல  வடக்கில் மனித உரிமை மீறல்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாகவும், பொதுநலவாய நாடுகள் அமைப்பு கடமை தவறிச் செயற்பட்டு வருவதாகவும் கனடா தனது மிகப்பெரிய அதிருப்தியை தெரிவித்துள்ளது..

3, ஒக செப் மாதங்களில் இலங்கைக்கு விஜயம் செய்து கள நிலவரங்களை நேரில் பார்வையிட்ட ஐநா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை அவர்கள் இலங்கையில் நடந்த இனப்படுகொலைகளுக்கும் மனித உரிமை மீறல்களுக்கும் சர்வதேச விசாரணை தேவை என்று அழுத்தமாக தெரிவித்திருக்கிறார்.

4, பொது­ந­ல­வாய மாநாட்டு இலச்சி­னையில் “வணக்கம்” என்ற பதத்தை நீக்­கி­விட்டு “ஆயு­போவன்” என்ற சிங்­களப் பதத்தை தமிழில் எழு­தப்­பட்டிருந்தது அது ஏன்? என்று வெளி­நாட்டு ஊட­க­வி­ய­லாளர் ஒருவர் எழுப்­பிய கேள்­விக்கு அந்தக் குழு வில் தான் இல்லை என்று சிறீலங்கா அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா பதி­ல­ளித்தார்.

பொது­ந­ல­வாய மாநாட்டு இலட்­சி­னையில் அழ­கான தமிழில் “வணக்கம்” என்று எழு­தப்­பட்­டி­ருந்­த­தற்கு மேலாக துவேஷ மனப்பாண்மையில் திட்டமிட்டு சிங்கள வாக்கியமான “ஆயு­போவன்” என்ற சிங்­கள வார்த்தையை தமிழில் எழுதி ஒட்­டப்­பட்­டுள்­ளது.

நிலவரங்கள் இப்படி இருக்கும் பட்சத்தில்,

மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பில் இலங்கை மீது முன்வைக்கப்பட்டுள்ள பாரிய குற்றச்சாட்டுக்கள் குறித்து இலங்கை அரசாங்கம் மேற்கெள்ளும் விசாரணைகள் திருப்தியடைவதாக இந்திய வெளிவவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்திருக்கிறார்.

(நகைப்புக்குரியதென்று கருதப்பட்ட) கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க அணைக்குழு நியமித்ததன் ஊடாக இலங்கை அரசாங்கம் சுயாதீன விசாரணையை மேற்கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.!!

இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் தெரிவித்திருந்த கருத்து பற்றிய கேள்விக்கு பதிலளித்த சல்மான் குர்ஷித், பிரச்சினைகளுக்கு உடனடியான தீர்வுகளை வழங்க முடியாது எனவும் வடக்கு, கிழக்கில் இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றும் வேலைத் திட்டங்களை அரசாங்கம் செயற்படுத்தி வருகிறது. இதற்கு இந்திய அரசாங்கம் உதவி வருவதாகவும் கூறினார்.
 
தமிழ் இனமும், சர்வதேசமும் முரண்பாடாக இருக்கும் விடயமான மனித உரிமைகள் விவகாரம், மற்றும் இனப்படுகொலை ஆகியவைகளை தொட்டும் பார்க்காமல் அவைகளை தாண்டி அரசியல் செய்யும் போக்கையே ஶ்ரீலங்கா ஜனாதிபதி முன்னிலைப்படுத்தி வருகிறார், அது சர்வாதிகார போக்கை வெளிப்படுத்துவதாக  சர்வதேச மட்டத்தில் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது, 

உச்ச போர்க்காலத்தில் நடந்து முடிந்த சகல விடயங்களுக்கும் விரிவான சட்ட விசாரணை தேவை என கண்டிப்பான உத்தரவுகள் பிறக்கத்தொடங்கியிருக்கின்றன.

இப்படியான நற் தருணங்களில் இந்தியா தமிழர்களுக்கு எதிரான தனது சதிவேலையை தொடருவது வழமையானது,

ஒரு காலகட்டத்தில் ஶ்ரீலங்காவின் இத்தகைய இன விரோதப் போக்கால் தமிழ் இளைஞர்கள் துப்பாக்கி தூக்கி ஶ்ரீலங்கா அரசாங்கத்துக்கு எதிராக 35 வருடங்களுக்குமேல் போராட தள்ளப்பட்டனர்.

அதே செயற்பாட்டினை இந்தியாவும் முனைப்பு காட்டிவருவதால் தமிழ்நாட்டில் உள்ள இளைஞர்கள் மற்றும் அரசியற் கட்சிகள் கொதி நிலையில் இந்திய மத்திய அரசுக்கு எதிரான போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்திய மத்திய அரசு அடிப்படையை உணராமல் மிலேச்சத்தனமான அரசியலில் ஈடுபட்டு ராஜபக்‌ஷவின் கொள்கையை ஆதரித்து தமிழர்களை அடிமைப்படுத்த தொடர்ந்து நிர்ப்பந்திக்குமானால் இலங்கையில் பிறந்த கலகம் போன்ற துரதிர்ஷ்டம் இந்தியாவையும் மையம் கொள்ளலாம்.

ஈழதேசம் செய்திகளுக்காக.

ஊர்க்குருவி.

Saturday, November 16, 2013

கொமன்வெல்த் மாநாடும் பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமருன், அவர்களின் கண்டனமும்.‏

இங்கிலாந்து பிரதமர் நேற்றய தினம் யாழ்ப்பாணம் சென்று திரும்பிய நிகழ்வானது,   ஆர்வத்தின் நிமித்தம் உள்ளூர் செய்திகளில் சொல்லிக்கொள்வது போல ஈழத் தமிழர்களின் வரலாற்றில் பெரிய திருப்பத்தை உண்டுபண்ணி விடும் என நம்பிவிட முடியவில்லை. போரினால் பாதிக்கப்பட்ட  ஈழத்து தமிழ் மக்களை,  பிரித்தானிய பிரதமர்,  சந்தித்து ஈழ மக்களின் கொலனித்துவ கால மற்றும் வரலாற்று சூழல் அடிப்படையை மனதில் நிறுத்தி  நேர்மையுடன் நீதியான முறையில் பிரித்தானிய அரசாங்கத்தின் ஆதரவை பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்களுக்கு நல்குவார் என்றும்,   போர்க்குற்றம் தொடர்பாக பாரபட்சமில்லாமல் இலங்கை அதிபர் ராஜபக்‌ஷவிடம் முறையான கேள்வி எழுப்பி,  ""இனப்படுகொலை"" (சர்வதேச அரசியல்த் தலைவர்கள் சொல்லிக்கொள்வதுபோல)  யுத்தக்குற்றம் சம்பந்தமாக விசாரணை நடத்தப்படவேண்டும் என்று அழுத்தம் கொடுப்பார் என்று செய்திகள் வந்தாலும்,  இதயபூர்வமாக நம்புமளவுக்கு எந்த நம்பிக்கையும் வெளிப்படவில்லை.

யாழ்ப்பாணம் சென்ற பிரித்தானிய பிரதமர் கெமருன் அவர்கள் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் சுமந்திரனின் வழிகாட்டுதலில் ஒரு சில நலன்புரி நிலையங்களுக்கு சென்றதாகவும்,  குறிப்பாக வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனை சந்தித்து  தமிழர்களின் அரசியல் முன்னேற்றம் சம்பந்தமாகவும் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் தெரிகிறது. http://www.eeladhesam.com/images/eelam/news01.08/01.11/david-cameron-with-tna%201.jpg
அவை தவிர,

இதுபோன்ற சர்வதேச தலையீடுகள் உண்டாகும் தருணங்களில்  மக்களிடையே உண்டாகும் பொதுவான எதிர்பார்ப்பும்,  ஏதாவது மாற்றம் நிகழாதா என்ற மக்களின் அதீத ஆதங்கமும் அவற்றை குலைக்கவேண்டாமே என்ற உள்ளூர் ஊடகங்களின் செய்திகளும் ஒரு மாயமான தோற்ப்பாட்டை உண்டுபண்ணி முடிந்திருக்கிறது என்பதே உணரக்கிடைக்கிறது.

இன்று 16 ,11 2013 சனிக்கிழமை தனது உரையை முடித்துக்கொண்டு பிரித்தானிய பிரதமர் நாடு திரும்பிவிட்டார்.  அவர் நாளைய நிகட்சிகளில் கலந்து கொள்ளாமல் அவசரமாக புறப்பட்டதும் கூட சர்வதேச அரங்கில் இலங்கைக்கு  சொல்லப்பட்ட ஒரு செய்தியாகவே சித்தரிக்கப்படுகிறது.

பிரித்தானியாவின் பிரதமர் டேவிட் கெமருன் யாழ் மண்ணில் இருக்கும்போதே ஶ்ரீலங்கா இராணுவ புலனாய்வு படையினர் பொலிஸ் படை உதவியுடன் பகிரங்கமாக அத்துமீறி தெருவில் திரண்டிருந்த பொதுமக்களை தாக்கி உருக்குலைத்து அலைக்கழித்திருக்கின்றனர். அப்பேர்ப்பட்ட மனநிலையை அந்த அரசாங்கம் பொலிஸாருக்கும் இராணுவ புலனாய்வு படையினருக்கும் கருத்து தெரிவிக்க வல்ல அமைச்சர்களுக்கும் வழங்கியிருக்கிறது.

இருந்தும் அந்த மக்களுக்கு இப்படியான தருணங்களில் தங்கள் மனதிலுள்ள ஆதங்கங்களை வெளிப்படுத்தி போராடுவது தவிர வேறு ஆதாரமும் இல்லை வழியிமில்லை.

முன்னதாக யாழ்ப்பாணம் செல்லவிருந்த சனல் 4, குழுவினரை  யாழ்ப்பாணம் செல்ல விடாமல் சிங்கள காடையர்கள் தடுத்து நிறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கின்றனர். இந்த ஆற்பாட்டங்களில் ஈடுபட்டவர்கள் எல்லாம் தயாரிக்கப்பட்ட ஶ்ரீலங்காவின் அரசு தரப்பின் இராணுவப் புலனாய்வு படையினர் என்பது வெட்ட வெளிச்சமாக தெரிய வந்திருக்கிறது.  அனுரதபுர மாகாணசபை உறுப்பினர்களும் இன்னும் ராஜபக்‌ஷவின் பரிவாரங்களும் அனுரதபுரம்,   வவுனியா ஆகிய இடங்களில் எந்த இடைஞ்சலும் இல்லாமல்  மிகச் சாதாரணமாக ஆற்பாட்டத்தில் ஈடுபட்டு துணிச்சலுடன் இங்கிலாந்தின் சனல்4, குழுவை திருப்பி அனுப்பியிருக்கின்றனர்,

டேவிட் கெமருன் யாழ் விஜயத்தின் பின்,  இரண்டாவது முறையாக முயற்சித்து யாழ் சென்ற சனல்4,  தொலைக்காட்சி,  இலங்கை மிகப் பெரிய மயான பூமி என நேற்றிரவு பிரசாரங்களை ஆரம்பித்துள்ளதாக திவயின தெரிவித்துள்ளது. இந்த மயான பூமியில் விடுமுறையை கழிப்பதை தவிர்த்து கொள்ளுமாறு அந்த தொலைக்காட்சி தனது நாட்டு மக்களுக்கும் சர்வதேச சுற்றுப்பயணிகளுக்கும் கோரிக்கை விடுத்துள்ளது. என்றும் அந்த செய்தி குறிப்பிடுகிறது. http://eeladhesam.com/images/eelam/news01.08/01.11/channel4injaffna%2017.jpg
ஒருநாள் சுற்றுப்பயணத்தை இலங்கையில் சுதந்திரமாக நடத்தமுடியாது என்ற உண்மையை பகிரங்கமாக வெளிப்படுத்திய சனல்4,   தொலைக்காட்சி இயக்குனரை மனதார பாராட்டிக்கொள்ளலாம்.

ஐக்கிய இராய்ச்சியத்தின் பிரதமருக்கும்,  அங்கிருந்து வந்த பிரசித்தி பெற்ற ஊடகங்களான சனல்4,  மற்றும் பிபிசி,  போன்ற பாரம்பரிய   ஊடகங்களுக்கு ஒரு நாளை சுதந்திரமாக இலங்கையில்  காலம் கடத்த முடியவில்லை என்றால்,  ஈழத்தமிழினம் எவ்வளவு அனீதிகளை கொள்வனவு செய்து ஜீரணிக்க முடியாமல் அந்த மண்ணில் வாழ்க்கையை கழித்திருக்கும் என்பதை பிரித்தானிய பிரதமர் கெமருன் அவர்களை நேரடியாக சந்தித்து பேசிய வடக்கு மாகாணசபை முதலமைச்சர் புரிய வைத்திருக்க வேண்டும்.

ஆனால் வடக்கு மாகாண முதலமைச்சர் தனது மேதாவிலாசத்தை பிரதிபலித்து வேறு எவரையும் உள்வாங்காமல் சம்பந்தன் போன்ற குறிப்பிட்ட ஒரு சிலருடன் பிரித்தானிய பிரதமருடன் அழாவழாவியதாகவே தெரிகிறது. http://www.eeladhesam.com/images/eelam/news01.08/01.11/david-cameron-with-tna%201.jpeg

வடக்கு மாகாணசபையின் அதிக விருப்பு வாக்குக்களை பெற்று தெரிவு செய்யப்பட்ட மாகாணசபையின் உறுப்பினரான அனந்தி,  களத்தில் மக்களோடு மக்களாக போராடி தெருவில் நின்று கெமருன் அவர்களுக்கு மகஜர் கையளித்திருக்கிறார்,  மக்கள் போராட்டத்தில் பங்குபற்றிய அனந்தி,  பொலிஸாரின் தாக்குதலுக்கும்  உள்ளாகியிருக்கிறார்,  வடக்கு மாகாணசபையின் உறுப்பினரான அனந்தியின் சிறப்புரிமைக்கு அரச படையினர் எந்த மரியாதையையும் கொடுக்கவில்லை. 

பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமருனைச் சந்திக்க முனைந்த மக்கள் மீது இலங்கை அரச உளவுப்படைகள் வழமைபோல தாக்குதல் நடத்தியுள்ளன. காணாமல் போனவர்களை மீட்டுத்தருமாறு பதாகைகளுடன் நடந்த அமைதியான ஆர்ப்பாட்டத்தின் மீது இலங்கை பாசிச அரசின் உளவுப்படைகள் தாக்குதல் நடத்தின. பின்னதாக டேவிட் கெமருன் பயணம் செய்த வாகனத் தொடரணியை மக்கள் சூழ்ந்துகொண்டு அவலக் குரலில் கண்ணீர்வடித்தனர். இத்தகவலை பிரித்தானியப் பத்திரிகைகள் அனைத்தும் பதிவு செய்துள்ளன.

இவை அனைத்தையும் பார்த்தபின்னர் டேவிட் கமரன், "பயங்கரவாதம் அழிக்கப்பட்டுவிட்டது", சண்டை முடிந்து விட்டது, போர் நிறைவடைந்து விட்டது ஆக நாடு வெற்றிப்பாதையில் செல்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. நாட்டை ஒற்றுமைப்படுத்த இலங்கை அரசு பெருந்தன்மையுடன் செயற்பட வேண்டும்” என்று ராஜபக்‌ஷ குறிப்பிடுவதைப்போலவே குறிப்பிட்டிருக்கிறார்.

பெண்கள் பெரியோர் குழந்தைகள் என்று சாரிசாரியாகப் மனிதர்கள் புதைக்கப்பட்ட மண்ணிலிருந்துகொண்டு,  இலங்கை அரசு பெருந்தன்மையோடு நாட்டை ஒற்றுமைப்படுத்தும் என்றுகூறும் கெமருன் அவர்களின் செய்தி சாதாரண மனித மனதில் பெருத்த பய உணர்வையும் நம்பிக்கையீனத்தையுமே தோற்றுவிக்கிறது.

இனப்படுகொலை களமான இலங்கையில் நடைபெறவிருக்கும் கொமன்வெல்த் மாநாட்டுக்கு பிரித்தானிய பிரதமர் செல்லாமல் புறக்கணிக்க வேண்டும் என்று புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் போராட்டம் நடாத்தி  முன்னர் கோரிக்கை வைத்திருந்தன,  அந்த கோரிக்கைக்கு இசைவாக டேவிட் கெமருன் கொமன்வெல்த் மாநாட்டுக்கு சென்று ராஜபக்‌ஷவிடம் போர்க்குற்றம் தொடர்பாக பல கேள்விகளை எழுப்புவேன் என்றும் அதற்காக தான் கொமன்வெல்த்  மாநாட்டில் பங்குபற்ற வேண்டும் என்றும் வாக்குறுதி அளித்திருந்தார்.

பிரித்தானிய தமிழ் அமைப்புக்களுக்கு அளித்த வாக்குறுதிக்கமைய மாநாட்டு நிகழ்வின்போது இலங்கையில் நடந்த போர் குற்றங்கள் குறி்த்து,  உடனடியாக வெளிப்படையான விசாரணை நடத்த இலங்கை அரசு முன் வர வேண்டும். இதை வரும் மார்ச் மாதம் ஜெனீவாவில் நடக்கவிருக்கும் மனித உரிமை அமர்வுகளுக்கு முன் செய்து முடிக்க வேண்டும். இல்லாவிட்டால், பிரிட்டன் இந்த விஷயத்தில் நேரடியாக தலையிடும். இலங்கை போர்க்குற்றங்கள் குறித்த சர்வதேச விசாரணைக்கு இங்கிலாந்து ஏற்பாடு செய்யும். நியாயமான விசாரணை நடக்க வேண்டும் என பிரிட்டன் எதிர்பார்க்கிறது. இங்கு பத்திரிகை சுதந்திரம் காக்கப்பட வேண்டும் என்றும் உரை நிகழ்த்தியிருந்தார். 
 
அதே கருத்தை உலக  மகா வல்லரசான அமெரிக்காவும் இலங்கை அரசுக்கு எதிராக இரண்டுமுறை ஜெனீவா அரங்கத்தில் தீர்மானமாக கொண்டுவந்திருக்கிறது என்பதும் அதை பிச்சைக்கார நாடான இந்தியா,  லாவகமாக நீர்த்துப்போகச்செய்திருந்தது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கவை.

சோர்ந்துபோனாலும்,  போரின் வடுக்களை மறக்கமுடியாத ஈழத்தமிழர்கள் ஒவ்வொரு சர்வ தேச தலைவர்கள் இலங்கைக்கு செல்லும்போதும் சோர்வில்லாமல்  தமது உரிமைக்கான போராட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அதற்கு பின்புலமாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியும்,  மாகாணசபை உறுப்பினர்களான அனந்தி, மற்றும் சிவாஜி லிங்கம் போன்றவர்களும், புலம்பெயர் தேசங்களில் இருக்கும் சில அமைப்புக்களும்  இருக்கின்றார்கள் என்ற திருப்தி  ஒன்று மட்டுமே ராஜபக்‌ஷவை சர்வதேச தீர்ப்பாயத்தின் முன் நிறுத்த  நிச்சியம் வழி வகுக்கும் என்ற நம்பிக்கையுடன் இழையோடுகிறது.

ஈழதேசம் செய்திகளுக்காக.

கனகதரன்.

Tuesday, November 5, 2013

தங்கை இசைப்பிரியாவை ஏளனப்படுத்தி ஶ்ரீலங்கா இராணுவத்தை நியாயப்படுத்தும் இனத்துரோகி கருணாநிதி.

ஈழம் எரிந்து 2009 ல் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நடந்து முடியும்வரை ராஜபக்‌ஷவுக்கும் சோனியாவுக்கும் மனங்கவர்ந்த ஒற்றனாக எட்டப்பனாக மிக கச்சிதமாக இன அழிப்புக்காக அயராது பணியாற்றியவர் கருணாநிதி, 
இனப்படுகொலை முடிக்கப்பட்டபின் எழும்பவிருந்த விமர்சனங்களை குழி தோண்டி புதைப்பதற்காக சோனியாவின் பரிவாரங்களுடன் தனது மகளை ஶ்ரீலங்கா ஜனாதிபதியின் மாளிகைக்கு விருந்தாக அனுப்பி ராஜபக்‌ஷவை ஆரத்தழுவி அகமகிழ வைத்தவர் கருணாநிதி, 

மானங்கெட்டுச் சென்ற மகள்  சோரம்போய் ராஜபக்‌ஷவை மகிழ்வித்து மடி திறந்து பொருள் வாங்கிவந்த மகளை வரவேற்று, மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக வாழுகிறார்கள் என்று ஊரை உலகத்தை ஏமாற்றியவன் தமிழ் இனத்துரோகி கருணாநிதி,

தமிழ் நாட்டு மக்களால் நிராகரிக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் நாயிற் கேவலமாக நில மட்டத்தில் இருந்தபோதும் போதும் ஈழத்தின்மீதும், ஈழத் தமிழர்கள்மிதும் இருக்கும் வன்மம் குறையாமல்

நானும் என் இனமும் கோவிலாக கும்பிடும் என் தங்கை இசைப்பிரியாவை.

 "இசைப்பிரியா உலகத்தில் பிறந்ததற்கு, செய்த பாவம், விடுதலைப்புலிகளின் ஊடகப்பிரிவில் தன்னை இணைத்துக் கொண்டது தான்."

என்று இராஜபக்‌ஷவின் இராணுவத்தின் செயலை நியாயப்படுத்தி  குரோத வன்ம இரக்கம் செய்து உள்ளூர திருப்திப்பட்டு பத்திரிகையில் செய்தி வெளியிட்டு மகிழ்ந்திருக்கிறான்.

ஶ்ரீலங்கா இராணுவத்துக்கு எதிராக விடுதலைப்புலிகளின் ஊடகப்பிரிவில் இசைப்பிரியா வேலை செய்ததால் ஶ்ரீலங்கா இராணுவம் புலிகளுக்கு எதிரான நடவடிக்கையில்  இசைப்பிரியாவை கொன்றிருக்கிறது என்பது கருணாநிதியின் உள்வன்மம் பொதிந்த கருத்து.

இந்த கொடூரனுக்கான தண்டனையாக அவனை உயிருடன் கழுவில் ஏற்றாவிட்டாலும் தமிழ்நாடு வாழ் மானஸ்தர்கள் கயவன் கருணாநிதிக்கு தகுந்த தண்டனை கொடுத்து தமிழ்நாட்டு அரச நிர்வாக காரியங்களிலிருந்து 20011 மே, வெளியேற்றி விட்டனர்.

இருந்தும் ஒற்றன் கருணாநிதி தனக்கே உரித்தான நரித்தனமான குணத்துடன் மக்களை ஏய்க்கும் மாய்மாலங்களை அள்ளிவிட்டு அப்பாவிபோல் தன்னை வெளிப்படுத்தி ஈழ மக்களையும் இசைப்பிரியாவின் படுகொலையையும் கேவலப்படுத்தி அடுத்த தேர்தலுக்காக அற்பனாக கருத்து சொல்லியிருக்கிறான்..

அதற்கு, கருணாநிதி தான் ஐந்துமுறை முதலமைச்சராக இருந்து தமிழக மக்களுக்கும், ஈழத்துக்கும் ஆற்றிய தன்னுடைய சுயநலன் இல்லாத அரசியல் சாதனைகளையும்,  கருணாநிதியின்  குடும்பம் தமிழ்நாட்டுக்கும் ஈழத்துக்கும் செய்த மறக்க முடியாத சேவைகளையும் எடுத்து வைத்து வாக்கு கேட்கவேண்டியதுதானே. 

தமிழ்நாட்டு மக்கள் கயவன் கருணாநிதிக்கு தகுந்த தண்டனை கொடுத்தாகிவிட்டது இருந்தும் திமுக தொண்டர்கள் அனைவரும் தன் பின்னே இருப்பதாக காட்டுவதற்காக கோவிலாகிப்போன தங்கை இசைப்பிரியாவை கேவலப்படுத்தி அறிக்கை விடுப்பதை திமுக கட்சியிலிருக்கும் மானமுள்ள தமிழர்கள் தட்டி கேட்கமாட்டார்களா?

இசைப்பிரியா உலகத்தில் பிறந்ததற்கு செய்த பாவம் விடுதலைப்புலிகளின் ஊடகப்பிரிவில் தன்னை இணைத்துக் கொண்டது தான். என்று நஞ்சை கக்கும் கருணாநிதியை, 

கருணாநிதி இந்தியாவில் பிறந்தது குற்றம், தான் ஒரு தமிழன் என்று கூறுவது குற்றம். கருணாநிதி திமுக கட்சியை தந்தரமாக கைப்பற்றியது குற்றம், கருணாநிதி முதலமைச்சராக தமிழ்நாட்டில் தெரிவு செய்யப்பட்டது பெருங் குற்றம். சோனியாவின் எலும்புத் துண்டுக்காக ஈழத்தை சுடுகாடாக்கியது குற்றம், என்று ஆயிரமாயிரம் குற்றங்கள் குவிந்து கிடக்கின்றன. அந்த குற்றங்களால்த்தான் வஞ்சகன் கருணாநிதி மண்ணோடு மண்ணாக வீழ்த்தப்பட்டிருக்கிறான். இருந்தும் கருணாநிதியின் வன்மம் குறையவில்லை.

பிரணாப் முகர்ஜியை, சிதம்பரததை, சிவ்சங்கர் மேனனை, கொம்பு சீவி ஶ்ரீலங்காவுக்கு அனுப்பியது குற்றம் தப்பிப்பிறந்த மகளை ராஜபக்‌ஷவுக்கு முன் சதிராட அனுப்பியது குற்றம். கருணாநிதி ஈழம் பற்றி பேசுவதே கொடுங் குற்றம்.

செத்து தெய்வமாகிப் போன இசைப்பிரியாவை பற்றி வாய் திறக்க இனத்துரோகி கருணாநிதிக்கு என்ன யோக்கியதை இருக்கிறது.

மானஸ்தர்கள் எவராவது திராவிட முன்னேற்ற கழகம் என்ற கருணாநிதியின் கட்சியில் இருப்பார்களானால் இசைப்பிரியா பற்றி இளக்காரமாக பேசிய இனத் துரோகி கருணாநிதியை நிச்சியம் கண்டிப்பார்கள்.

ஊர்க்குருவி

மன்மோகன் கொமன்வெல்த் மாநாட்டில் பங்குபற்றினால் ராஜபக்‌ஷவுக்கு யோகம் பங்குபற்றவில்லையென்றால் கருணாநிதிக்கு யோகம்.‏

  
ஒப்பீட்டளவில்,  கடந்த நான்கு ஆண்டுகளாக ராஜபக்‌ஷவின் ஶ்ரீலங்கா சிங்கள அரசு இனப்படுகொலை தொடர்பாகவும், மனித உரிமை மீறல் குற்றம் சம்பந்தமாகவும் தொடர்ந்து பல சர்வதேச நெருக்கடிகளை சந்தித்து வருகிறது,
ஒவ்வொரு நெருக்கடிக் காலத்திலும் ராஜபக்‌ஷ சர்வதேச சட்ட நெருக்கடிக்குள் சிக்கிக்கொள்ளும் சந்தற்பம் ஏற்படும்போதெல்லாம் சீனா பாக்கிஸ்தான் ராஜபக்‌ஷவுக்கு உதவுகிறதோ இல்லையோ மன்மோகன் சிங் தலைமையிலான இந்திய அரசு ஆபத்தாந்தவனாக களத்தில் இறங்கி சர்வதேச நெருக்கடியிலிருந்து இனப்படுகொலையாளி ராஜபக்‌ஷவை தோள் கொடுத்து காப்பாற்றி வந்திருக்கிறது.

ஒருமுறை இரண்டு முறையல்ல 2009 ம் ஆண்டிலிருந்து 2013 வரை ஐந்துக்கு மேற்ப்பட்ட சர்வதேச இறுக்கங்களின்போது  இந்தியா தலையிட்டு விதிகளை மாற்றி ராஜபக்‌ஷவுக்கு காப்பரணாக நின்று வந்திருக்கிறது.

அந்த வரிசையில் ஒட்டுமொத்த உலக தமிழினத்தின் எதிர்ப்பையும் கணக்கிலெடுக்காமல் ஶ்ரீலங்காவில் நடைபெறவிருக்கும் கொமன்வெல்த் மாநாட்டிலும் பங்குபற்றி ராஜபக்‌ஷவை காப்பாற்றும் முயற்சியில் மன்மோகன் சிங்கின் அரசு குறியாக நிற்கிறது. அதன் முன்னோட்டமாக தமிழ்நாடு அரசு இந்தியா கொமன்வெல்த் மாநாட்டில் பங்குபற்றக்கூடாது என்று சட்டசபையில் தீர்மானம் கொண்டுவந்தபோதும், தமிழகத்தின் உணர்வை கவனத்திலெடுக்காமல்  டில்லியில் காங்கிரஸ் உயர்மட்டக் குழு சோனியா தலமையில் கூடி மன்மோகன் சிங் கொமன்வெல்த் கூட்டத்தில் கலந்து சிறப்பிக்கவேண்டும் என்று தமிழ்நாட்டின் தீர்மானத்துக்கு போட்டியாக தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது

இந்தியாவின் இந்த கீழ்த்தரமான செயற்பாடுகள் அகற்றப்பட்டிருக்குமாயின் போர் முடிந்த நான்கு வருடத்தின் பின்னான இன்றைய காலகட்டத்திலாவது எஞ்சிய தமிழர்களின் அரசியல்ப் பிரச்சினையாவது மிக இலகுவாக சர்வதேச சட்ட அனுமானங்கள் மூலம்  தீர்க்கப்பட்டிருக்கும். அதற்கான mechanism மூலோபாயங்கள் சர்வதேச சட்டதிட்டங்களுக்கமைய, கொமன்வெல்த் அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளின் பொதுவான நீதி நிர்வாக அமைப்புகிளிடையே நிறையவே இருக்கின்றன. இந்தியாவின் குறுக்கிடு இல்லாவிட்டால் சர்வதேச தீர்ப்பாயத்துக்கு செல்லுவதற்கான வழியும் இலகுவாக்கப்பட்டிருக்கும்.

இந்தியாவின் வன்மத்துடன் கூடிய தேவையற்ற தலையீடு ஒரு இனத்தை வேரோடு அழிக்கும் வெலைத்திட்டமாகவே தொடர்கிறது,  இதற்கான மாற்று வழியை தேடாதவரை அந்த இழுக்கு தொடரவே செய்யும்.

இந்திய ஆட்சியாளர்கள் தமது இயலாமையை சரிக்கட்டி பதவிக்கான ஆட்சியை தக்க வைத்துக்கொள்ளுவதற்காக, ஆட்சி அதிகாரமற்ற வல்லமை குறைந்த தரப்பான ஈழத்தமிழர்களின் வாழ்க்கையில் தொடர்ச்சியான வினையாகி நேர்மையற்ற முறையில் தலையீடு செய்து இல்லாத பல காரணங்களை நியாயப்படுத்தி தமிழர்களுக்கான தேசிய உரிமையை கிடைக்காமல் செய்யும் வகையில் தன்னிச்சையாக குறுக்கே நின்று அராஜகம் செய்து வருகிறனர்.

போர் முடிந்து நான்கு வருடங்களானபோதும், இந்தியா பின்னணியில் இருந்து இலங்கை அரசுக்கு தேவையற்ற விதமாக முட்டுக் கொடுத்துக்கொண்டிருப்பதால் ஶ்ரீலங்கா அரசு தமிழ் மக்களுக்கான ஆகக்குறைந்த அடிப்படை தனிமனித பாதுகாப்பு தேவைகளைக்கூட உறுதிப்படுத்த முயற்சிக்கவில்லை.  உதாசீனப்படுத்தப்பட்டே வருகிறது. சர்வதேசம் அந்த பிரச்சினைகளில் தலையிடும்போதெல்லாம் இந்தியா தனது பிராந்திய மேலாண்மை என்ற மாயையை காரணங்காட்டி தலையீடு செய்து வருவதால் சர்வதேசத்தின் தலையீடு தவிர்க்கப்பட்டு வாக்குறுதிகளும் வாய்தாக்களுமே தமிழர்களின் அரசியலாக மாற்றங் கண்டிருக்கிறது.

அந்த இழிநிலைக்கு ஒரு வழியில் 2009 க்குப் பின் சம்பந்தன் தலைமையினாலான தமிழ் தேசியக் கூட்டமைப்பும் தம்மால் இயன்றவரை உதவி வருகின்றதென்பதும் எவரும் மறுப்பதற்கில்லை.

தமிழர் பிரச்சினைகளில் ஈடுபாட்டுடன் சர்வதேசம் தலையிடும்போதெல்லாம் இந்தியாவின் அறிவுறுத்தலுக்கொப்ப நிறைவேற்றுவதில்லை என்ற நிலையிலும் ஜனநாயகம் என்ற புலுடாவை கவசமாக்கி தந்தரமாக பொய் வாக்குறுதிகளை ஐநா அரங்கிலும் சர்வதேசத்தின் முன்னிலையிலும் ஒப்புக்கொடுத்து உணர்வுமயப்பட்டது போன்ற மிகப்பெரிய பொய் உரைகளை நிகழ்த்தி கால அவகாசத்தை கச்சிதமாகப் பெற்று அடுத்த நிலைக்கு சென்று ஶ்ரீலங்கா தப்பித்து வருகிறது

எதிர்வரும் 2014 மார்ச் ஜெனீவா மனித உரிமை அமர்வுகளின்போது  சர்வதேச அரங்கில் ஏற்கெனவே  ஒப்புக்கொண்டு வாக்குறுதியளிக்கப்பட்ட பல வேலைத்திட்டங்களுக்கான பெறுபேறுகளை ஒப்படைக்கவேண்டிய தவணைக்காலம். ஆனால் மாறாக ஈழத்தமிழர்கள் வாழ்ந்த பூர்வீக மண்ணில் குடியிருப்புக்கள் உடைத்து தரைமட்டமாக்குதலும் சிங்கள குடியேற்ற நிறுவல்களும் புத்தர் சிலைகளும் அதற்காக சில தெருக்கள் செப்பனிடப்பட்ட வேலைத்திட்டங்கள் தவிர தமிழ் மக்களுக்கான அடிப்படை எதுவும் ராஜபக்ஷ அரசால் அங்கு நிறுவப்பட்டிருக்கவில்லை. தினச்செய்திகளில் அவை அப்பட்டமாக வெளிவந்தவண்ணம் இருக்கின்றன. 

சர்வதேசத்தின் முன் பெருத்த ஒரு எடுத்துக்காட்டாக வடக்கு மாகாணசபை தேர்தல் நடத்திய பெறுபேற்றை காட்டி முதலமைச்சர் விக்கினேஸ்வரனை கொமன்வெல்த் கூட்டத்தில் பேச வைப்பதன் மூலம் 2014 மார்ச் ஜெனீவா மனித உரிமை ஆணைக்குழுவின் அமர்வில் தமிழர்களுக்கான ஆட்சி அதிகாரம் வழங்கப்பட்டுவிட்டது அனைத்தும் மாகாணசபையிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டது தமிழர்களுக்கான வேலைத்திட்டங்கள் அனைத்தும்  படிப்படியாக நடைபெறும் எல்லோரும் மகிழ்ச்சியுடன் பொறுத்தருளவேண்டும் என்று கூறி தப்பித்துவிடலாம் என்பது இந்திய+ராஜபக்‌ஷ=சம்பந்த திட்டமாக இருந்தது.

முதலமைச்சர் விக்னேஸ்வரனை கொமன்வெல்த் கூட்டத்தில் பேச வைப்பதன் மூலம் தமிழர்களின் பிரச்சினை எல்லாம் தீர்க்கப்பட்டுவிட்டதாக காட்டிக்கொள்ளும் திட்டத்தின் முதல் வேலைத்திட்டம்தான் வடக்கு மாகாணத்துக்கான தேர்தல். இந்த தேர்தலை நடத்தி முடித்த சக்திகள் 1, இந்தியா, 2, ஶ்ரீலங்கா ஜனாதிபதி ராஜபக்‌ஷ, 3, தமிழர் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சப்பந்தன், ஆனால் துரதிர்ஷ்ட வசமாக கூட்டமைப்பினுள் எழுந்த கூட்டுக்கட்சிகளின் பிரிவினை விக்கினேஸ்வரன் கொமன்வெல்த் கூட்டத்தில் உரையாற்ற தடைவிதிக்குமளவுக்கு போய் ராஜபக்‌ஷவை திகைப்பிலாழ்த்தியிருக்கிறது.

கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனின் எதேச்சதிகாரத்தால் கூட்டமைப்புக்குள் விரிசல் தோற்றுவிக்கப்பட்டது. அந்த விரிசல் விக்கினேஸ்வரனை  மாநாட்டில் சமூகமளிக்க தடை உத்தரவாகி சிங்கள அரசுக்கு எதிர்பாராத பின்னடைவை தோற்றுவித்தது. அது ஒன்று மட்டும் இன்றைக்கு தமிழர்களுக்கு ஓரளவு திருப்தியளிக்கும் ஒரே ஒரு அனுகூலமாக காணலாம்.

2014 மார்ச் நடக்கவிருக்கும் மனித உரிமை அமர்வில் எழவிருக்கும் நெருக்கடிகளை மந்தமாக்கும் பொருட்டு,  இந்திய ஆலோசனையின் பேரில் ஒரு சில அபிவிருத்திக்கான ஒப்பீடுகளை முன்னோட்டமாக  பொதுநலவாய மாநாட்டில் வேலைத் திட்டமாக முன் மொழிந்து விக்னேஸ்வரனையும் விருந்தினராக்கி பல நாட்டுத்தலைவர்களை கவர்ந்து திருப்திப்படுத்தி  2014 நடக்கவிருக்கும் ஜெனீவா மனித உரிமை பேரவயின் கடுமையை குறைத்துக்கொள்ள ராஜபக்ஷ  மன்மோகன் கூட்டாளிகள்  மிகப்பெரிய இராசதந்திர களமாக பயன்படுத்த திட்டமிடப்பட்டிருந்த இடம் கொமன்வெல்த் மாநாடு அரங்கம்

இந்த மாநாட்டில் ஶ்ரீலங்காவின் கூட்டாளி இந்தியா கலந்து கொள்ளவில்லையென்றால் ராஜபக்‌ஷ சர்வதேச பொறிக்குள் இழுக்கப்படுவதன் ஆரம்பம் உறுதிப்படுத்தப்பட்டதாகிவிடும். அதாவது கொமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்துகொண்டு ராஜபக்‌ஷவுக்கு முண்டுகொடுக்கவில்லையென்றால் அதன் எதிர்த் தாக்கம் மார்ச் 2014 ஜெனீவா மனித உரிமை ஆணையத்தின் கூட்டத்தொடர் ஶ்ரீலங்காவுக்கு எதிரான கடுமையான கட்டளைகளை பதிவுசெய்யும் என்பது தவிர்க்கமுடியாமலிருக்கும்.

அந்தநிலை ஏற்படக்கூடாது என்பதே இன்றைக்கு காங்கிரஸ் தலைவி சோனியா, மன்மோகன் சிங் மற்றும் இந்திய கொள்கை வகுப்பாளர்களின் கவுரவக் கவலை. 

இந்திய அரசியலில் இன்றைக்கு பாராளுமன்ற தேர்தலுக்கான முன்னேற்பாட்டுக்காலம் என்பதால் தமிழ்நாட்டு அரசியல்வாதிகள்,  கட்சிகள் அவரவர் தமது தேர்தல் வியூகத்தின் அடிப்படையில் கொமன்வெல்த் மாநாட்டை கவசமாக்கி  கருத்துக்களை விதைத்துக்கொண்டிருக்கின்றனர். தேர்தல் காலம் இல்லாமல் இருக்குமானால் மன்மோகனுக்கு இவ்வளவு சிக்கல் இருந்திருக்க வாய்ப்பில்லை.

தமிழ்நாட்டிலிருந்து ஈழ இனப்படுகொலைக்கு  முழு முதற் பொருளான திமுக தலைவர் கருணாநிதி,, கருணாநிதியின் அடிவருடி திருமாவளவன்,  அதே கொள்கை கொண்ட மருத்துவர் இராமதாஸ், ஆரம்பத்தில் தமிழ் ஈழம் கண்டுதான் பிறந்தநாள் கொண்டாடுவேன் என்று கதை விட்டு அரசியலுக்கு வந்து பேசாமடந்தையாக இருந்த விஜயகாந்த்,  அவர்களுடன் தமிழக காங்கிரசின் ஒரு பிரிவான வாசன் ஆகியோர் தமது அரசியல் இருப்பை உறுதிப்படுத்தவேண்டும் என்பதற்காகவும், தமிழக மக்களின் வக்கு வேட்டையை கணக்கில்க் கொண்டும்,  தமக்கான தேர்தல் ஆதாயத்தின் பிரகாரம் கொமன்வெல்த் மாநாட்டுக்கு மன்மோகன் சிங் செல்லக்கூடாது என்று அரசியல் ஆதாயத்திற்காக பிடிவாதமாக எதிராக நிற்கின்றனர்.  

காங்கிரஸும் வீழ்ச்சியின் விளிம்பில் இருப்பதால் திடமாக இவற்றை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறுகிறது.  இதை ஒரு தேர்தல் காலத்துக்கான அரசியல் அலை என்று கொள்வது தவிர ஈடுபாட்டுடன் தமிழக அரசியல்வாதிகள் எதிர்க்கின்றனர் என்று எடுத்துக்கொள்ள முடியாது.

இங்கு ஒருவிடயத்தை அரசியல்வாதிகள் தவிர்ந்த தமிழகத் தமிழர்கள், மற்றும் ஈழத்தமிழர்கள் புரிந்து கொள்ள கடமைப்பட்டுள்ளனர்,. தமிழக மக்கள் சார்ந்த வாழ்வாதார  பிரச்சினையானாலும்சரி ஈழத் தமிழர்களின் தேசிய பிரச்சினையானாலும்சரி,  தமிழகத்தின் சக்திவாய்ந்த அரசியற் கட்சிகளின் உள்ளுடன்களை நிதானமாக ஆழ நீளம் பார்க்காமல் இந்தியாவை ஆட்சிசெய்யும் எந்த ஒரு மத்திய அரசும் ஒரு முடிவுக்கு வந்துவிடுவதில்லை., தமிழகத்தின் சாதக பாதகங்களை தமக்கு சாதகமான கட்சிகளுடன் பேசி உடன்பாட்டை ஏற்படுத்திய பின்,  அவற்றை ஒருபுறம் வைத்துக்கொண்டு  அவற்றையும் தாண்டி உளவுத்துறை  மற்றும் கொள்கைவகுப்பாளர்கள் மூலம் பகுப்பாய்ந்து பிரச்சினையின் சாதக பாதகங்களை கணக்கிட்டு அதன்பின்னரே ஒரு முடிவான கொள்கைக்கு வருவார்கள் என்பது மிக சாதாரணமான விடயம்.

இந்திய மத்திய அரசு ஈழத்தமிழர்களின் அரசியலில் தீர்வுக்கான வேலைத்திட்டம் சம்பந்தமாக தலையிடுவதென்று ஒரு முடிவுக்கு வந்து களத்தில் இறங்கி நிற்கிறது என்றால்,  ஒன்று தமிழ்நாட்டின் பெரிய அரசியற் கட்சிகளான திமுக அல்லது அதிமுக இரண்டில் ஒரு கட்சி மத்திய அரசுக்கு ஒத்திசைவாக இருக்கிறதென்றே அர்த்தப்படும். 2009ல் கருணாநிதியின் திமுக அப்படி ஒரு ஒப்பந்த அடிப்படையில் இருந்ததால்த்தான் தமிழகத்தின் எழுச்சியை மிகக்கவனமாக கட்டுக்குள் வைத்துக்கொண்டு மிகப்பெரிய இனப்படுகொலையை மூன்று நான்கு மாதங்களுக்குள் நடத்தி முடிக்கப்பட்டது.  

அந்த நேரங்களில் மக்கள் எழுச்சியை கட்டுப்படுத்துவதற்காக கருணாநிதி பறந்தடிப்பதுபோல் வெளியே காட்டிக்கொண்டாலும் மத்திய அரசுக்கு எதிராக ஒரு அசைவாக்கத்தையும்  பகிரங்கமாக வெளியிட்டு தனது எதிர்ப்பை காட்டிக்கொள்ளவில்லை,   காலதாமதத்தை உண்டாக்கக்கூடிய கதாப்பிரசங்கங்களையே அவர் 2009 மே மாதம் முடிந்த பிறகும் தொடர்ந்தார். போர் நிறுத்தப்பட்டு விட்டது தூவானம் நிற்க சில தினங்கள் எடுக்கும் என்றும் அவர் கூறிய வாசகங்கள் காலத்தால் மறக்க முடியாதவை.

ஜெனீவாவில் அமெரிக்க தீர்மானத்தின்போதும்  மாணவர்களின் போராட்ட வீச்சை எதிர்கொள்ள முடியாத கருணாநிதி காங்கிரஸின்  ஒப்புதலுடன் இரகசிய உடன்பாட்டுடனேயே கூட்டணியிலிருந்து வெளியேறியதாக அறிவித்தார் என்பதையும் அவர் வெளியேறியபின் மத்திய அரசு சம்பந்தமாக வெளிவந்த அவரது கபடத்தனமான அறிக்கைகள் பறைசாற்றி நின்றன.

இன்றைக்கு  தமிழகத்தில் தீண்டுவார் அற்ற கட்சிகள் என்ற நிலை காங்கிரஸுக்கும் திமுகவுக்கும்  ஏற்பட்டு விட்டதால் கருணாநிதி காங்கிரஸை கழற்றி விட வழி தேடுகிறார். அதேபோல  காங்கிரஸ் தன்னை புதிய ஒரு அணியுடன் இணைத்து பலப்படுத்திக்கொள்ள

கருணாநிதியை கழற்றிவிட்டு விஜயகாந்தை இணைத்துக்கொள்ள சோனியாவின் மைந்தன் ராகுல் ஆர்வம் காட்டி வருகிறார் என்பதும் பகிரங்கமாக பத்திரிகை ஊடகங்கள் அறிவிக்கின்றன.

ஈழத்தில் நடத்தப்பட்ட இனப்படுகொலையால்  திமுகவும் காங்கிரஸும் தமிழகத்தில் தனிமைப்பட்டிருப்பது  ஓரளவு உறுதியாகியிருக்கிறது.   இருந்தும் காங்கிரஸை குற்றவாளியாக்கிவிட்டு தப்பிப்பதற்கே கருணாநிதி மிக பிரயத்தனப்படுகிறார்.  அதன் வெளிப்பாடுகள்தான் டெசோ, தமிழீழம் கொமன்வெல்த் எதிர்ப்பு கோசம் இருந்தும் கருணாநிதி மக்கள் மன்றத்தில் தப்பிப்பது அவ்வளவு சுலபமான விடயமுமல்ல என்பது காங்கிரஸுக்கும் தெரியாததுமல்ல.

எனவே கருணாநிதியின் சலசலப்பு தமிழ் நாட்டில் ஒருவேளை எடுபடலாம் டில்லியில் சோனியா மட்டத்தில் எடுபடாது.  அனேகமாக மன்மோகன் சிங் கொமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்கக்கூடும்  அப்படி பங்கேற்றால் அது கருணாநிதியின் பிற்போக்கான சந்தற்பவாத அரசியலினால் ஏற்பட்ட விளைவு என்பதை உலக தமிழினம் புரிந்துகொள்ளும்.

ஈழதேசம் செய்திகளுக்காக.

கனகதரன்.

Sunday, October 27, 2013

காங்கிரஸ் சுதர்சன நாச்சியப்பனின் கயமையான குதர்க்கம்.‏

இலங்கையில் உள்ள தமிழர்களின் பொருளாதாரம் மேம்பட அங்கு பொதுநலவாய மாநாடு நடைபெற வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் இந்திய மத்திய தொழில்துறை இணையமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் அரிய கண்டுபிடிப்பு ஒன்றை சமீபத்தில் வெளிப்படுத்தியிருக்கிறார்.
தொழில்துறை கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்டு செய்தியாளர்களை சந்தித்த நாச்சியப்பன். ஈழத் தமிழர்களின்  வாழ்வியலின் அடிப்படை யதார்த்தநிலையை கடுகளவுகூட கருத்தில் கொள்ளாமலும், தமிழகமக்கள், மற்றும் தமிழக அரசியற் கட்சிகளின் ஒன்று திரண்டு பொதுநலவாய மாநாடு இலங்கையில் நடத்தக்கூடாது என்று எதிர்த்துவருகின்றனர் என்பதை புரிந்துகொள்ளாதவர்போல, ஆளும் காங்கிரசின் தலைமைக்கு வக்காளத்து வாங்கும் விதமாகவும் இலங்கையின் இனப்படுகொலை சர்வாதிகாரி ராஜபக்‌ஷவுக்கு தனது ஆதரவை தெரிவிக்கும் முகமாகவும் குதர்க்கமாக குளப்பத்தை உண்டாக்கும் நஞ்சுத்தனமான கருத்தை தெரிவித்து திருப்திப்பட்டிருக்கிறார்.

இலங்கையில் கண்டிப்பாக பொதுநலவாய மாநாடு நடைபெற வேண்டும் என்று விரும்புகிறேன். இலங்கையில் ஏராளமான தமிழர்கள் வேலைவாய்ப்புகள் இல்லாமல் தவிக்கின்றனர். இந்தநிலையில் இந்த மாநாடு அங்கு நடைபெற்றால், அவர்களின் பொருளாதார நிலை உயரும் என்று (தனிப்பட்ட முறையில்) அவர் கருதுவதாக அவர் வெளிப்படுத்திய செய்தி சொல்லுகிறது.

துடிக்கத் துடிக்க இனப்படுகொலை நடத்திய ஒரு சர்வாதிகாரியின் தலைமையில் இலங்கையில் பொதுநலவாய நாடுகளின் கூட்டு மாநாடு இரண்டு நாட்கள் நடத்தப்படுவதால்  எந்த வகையில் அங்கு அடிமைகளாக உரிமைகள் அனைத்தும் பறிக்கப்பட்டு ஒடுக்கப்பட்டு வாழும் மக்களுக்கு விமோசனம் கிடைக்கும். என்று நாச்சியப்பன் சொல்லுவது எவருக்கும் புரியாத புதிராகவுள்ளது. 

சர்வதேசத்தினால் இன அழிப்பு குற்றவாளி என்று சுட்டிக்காட்டப்படும் ஒரு மிருகத்தனமான ஆட்சியாளரிடமிருந்து அந்த மக்களுக்கான விடுதலை சுதந்திரத்தைப்பற்றி சிந்திக்கவேண்டிய  தமிழ்நாட்டில் பிறந்து தமிழ் பேசும் நாச்சியப்பன் போன்ற அரசியல் வியாதிகள் தமிழர் விரோத காங்கிரஸை நியாயப்படுத்துவதற்காகவும் சொற்ப பதவி சுகத்துக்காக கூட்டிக்கொடுக்கும் செயலில் ஈடுபடுவது அனைவராலும் கண்டிக்கப்படவேண்டிய ஒன்று. 

அடிப்படையில் உயிருக்கு உத்தரவாதம் இல்லாமல் அன்றாடம் அவதியுறும் மக்களுக்கு நாச்சியப்பன் சொல்லுவதுபோல பொதுநலவாய மாநாட்டின் மூலம் வேலைவாய்ப்பு பொருளாதார சுபீட்ஷம் எப்படி ஏற்படும் என்பது தெரியவில்லை.

இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதிகள் பின்னடைந்திருக்கிறது.  அதை முன்னுக்குகொண்டுவர வேண்டிய பொறுப்பு அரசியல்வாதிகளுக்கு இருக்கிறது. அரசியல்வாதிகளுக்கு நீண்ட பார்வை வேண்டும்.  அதனால் பொதுநலவாய மாநாடு நடத்தப்படவேண்டுமென்ற நாச்சியப்பனின் குதர்க்கம் ஒரு பேச்சுக்கு  நியாயம் என்று கொண்டாலும்,

அடிப்படையை குழி தோண்டி புதைக்கும் விதமான குதற்கமாக கருத்து பகிர்ந்திருக்கும் நாச்சியப்பன் ஏன் மாநாடு நடத்தப்படக்கூடாது என்று உலக மட்டத்தில் ஒரு தரப்பு போராடுகிறது என்பதற்கான விவரணத்தையும்  இனியாவது யாரிடமாவது கேட்டு அறிந்துகொள்ள வேண்டும்.

நாச்சியப்பன் அங்கம் வகிக்கும் ஊழல் காங்கிரஸ் ஆட்சிபுரியும் இந்தியாவில் சுமார் 21 கோடி மக்கள் பசி பட்டினியால் வாடி வருவதாக சமீபத்திய நவ்தான்யா டிரஸ்ட்  என்ற அமைப்பு நடத்திய ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.  இது உலகம் முழுவதும் பசியால் வாடும் மனித இனத்தில் 4 ல் ஒரு பங்கு ஆகும். 

இந்தியாவில் தினமும் சுமார் 20 கோடி பேர் பட்டினி கிடப்பது  இந்தஆய்வில் தெரிய வந்துள்ளது.   தற்போதைய நிலவரப்படி இந்தியாவில் 4 பேரில் ஒருவர் பட்டினியால் தவிக்கிறார். பட்டினிக்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன.

நிச்சியமாக இவற்றை நாச்சி இன்னும் அறிந்துகொள்ளவில்லை!.

கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் பட்டினி கிடப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளது. இதன் காரணமாக இந்தியாவில் 5 கோடியே 70 லட்சம் குழந்தைகள் போதுமான உடல் எடை இல்லாமல் உள்ளனர்.

உலகில் வேறு எந்த நாட்டிலும் இந்த அளவுக்கு எடை குறைவான குழந்தைகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அரசு ஏழை எளியவர்கள் நலனுக்காக பட்ஜெட்டில் 32 ஆயிரத்து 600 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்ததாக அறிவிக்கப்பட்டாலும் அரசியல்வாதிகளின் ஊழல் மற்றும் அதிகாரிகளின் முறைகேடுகளினால் ஏழைகள் பலனடையவில்லை.

1991 ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி ஒரு இந்தியனின் உணவு அளவு ஆண்டுக்கு தலா 186 கிலோவாக இருந்தது. 2001,  ம் ஆண்டு இந்த உணவு அளவு 152 கிலோவாக  குறைந்து போனது.

தற்போது உணவுப்பொருட்கள் விலை பல மடங்கு உயர்ந்து விட்டதால் ஏழைகள் சாப்பிடும் உணவு அளவு மேலும் குறைந்துள்ளது. 

இந்தியாவில் மட்டும் சுமார் 21 கோடி மக்கள் பசியால் வாடி வருவதாக சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. இது உலகம் முழுவதும் பசியால் வாடுபவர்களில் 4 ல் ஒரு பங்கு ஆகும். 

பலகோடி மக்களுக்கான வறுமை ஒழிக்கும் அபிவிருத்திக்கு பத்து இலக்கம் கொண்ட தொகையை ஒதுக்கீடு செய்யும் மத்திய அரசின் ஊழல்கள் மட்டும் ஒவ்வொன்றும் 17,60,00,00,00,000 கோடி என்ற கணக்கில்  பதின்மூன்று பதின்நான்கு இலகம் கொண்டவையாக இருந்து வருகிறது.

ஈழ மக்களின் பசி பட்டிணி வறுமை ஒளிப்பதற்கு அவர் முயலுவாராக இருப்பின் நாச்சியப்பன் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் ஆட்சிசெய்யும் இந்தியாவின் நிலவரத்தை அறிந்து  தனது நாட்டுக்குள் பசி பட்டிணி, வேலை வாய்ப்பு இல்லாமல் வாடும் மக்களுக்கான தீர்வை தனது ஆட்சி தலைவர்களுக்கு தெரிவித்து சீர்செய்து தனது மலத்தை கழுவு சுத்தம் செய்பின் ஈழப்பிரச்சினை போன்ற அவருக்கு புரியாத விடயங்கள் பற்றி உபதேசம் செய்வதே சிறப்பாக இருக்கும்.

நாசியப்பன் போன்ற குதற்கமாக பேசும் அரசியல் வியாதிகளை மக்கள் புறக்கணிக்காதவரை தமிழினத்துக்கே சாபக்கேடுதான்.

 ஊர்க்குருவி.

Tuesday, October 22, 2013

தமிழர்களுக்கான அரசியல் வெற்றிடம் விரைவில் நிரப்பவேண்டும். கைக்கூலிகள் வெளியேற்றப்படவேண்டும்.‏

மூன்று தலைமுறை அரசியல்வாதிகளின் பட்டுணர்ந்த அரசியல் அனுபவம், 65 வருடகால நிமிர்த்திக்கொள்ள முடியாத பௌத்த சிங்கள இனக் குரோதம், மூன்று நான்கு இலட்சத்துக்கு மேலான சட்டத்துக்குட்படாத மனித இனப்படுகொலை, பதினைந்து இருபது இலட்சத்துக்கு மேலான மக்களின் நாடுகடந்த அகதிநிலை, மூன்று இலட்சத்துக்கு மேலான உள்ளூர் அகதிகள்,
கணக்கற்ற காணாமல் போதல், பல பத்தாயிரம் விசாரணையற்ற சிறைவாசம், குறைந்த பட்சம் வெளிச்சத்துக்கு கொண்டுவரப்பட்ட தொண்ணூறு ஆயிரம் விதவைகள், சொந்தக் காணியில் கட்டிய வீட்டில் குடியிருக்க முடியாத அவலநிலை, முப்பது ஆண்டுகளுக்கு மேலான ஆயுத போராட்டம், நாற்பதினாயிரத்துக்கு மேலான விடுதலைக்காக உயிர் நீத்த (ஆண், பெண் பிள்ளைகள்) மாவீரர்கள்.

பல பத்து உள்ளூர் அரசியல் ஏமாற்று ஒப்பந்தங்கள் , சர்வதேச நாடுகளின் மத்தியஸ்த பேச்சு வார்த்தைகள், ஐநா, அமெரிக்க, ஐரோப்பிய, இந்திய, யப்பான் வரையிலான தலையீடுகள்.  இன்னும் விடுபட்ட புலுடாக்கள் போக அனைத்தும் நடந்து முடிந்து விட்டன.

கண்தெரியாத சம்பந்தரும், காதுகேளாத விக்னேஸ்வரனும் எதையாவது மீட்டுத்தருவார்கள் என்றால் முதலில் முறிகண்டி பிள்ளையார் கோவிலை மீட்டுத்தரட்டும் என்று கிளிநொச்சியில் சந்தித்த சிலர் கூறக்கேட்டோம்.

அரசியல்வாதி என்பதை தவிர்த்து மேற் குறிப்பிட்ட ஏதாவது ஒன்றில் சம்பந்தமில்லாதவர்கள்தான் இந்த இராசவரோதயம் சம்பந்தன் (திருகோணமலை) அண்ணாநகர் சென்னை தமிழ்நாடு, மதியாபரணம் ஆபிரகாம் சுமந்திரன், 3/1 தயா வீதி, கொழும்பு, கனகசபாபதி விசுவலிங்கம் விக்னேஸ்வரன், புதுக்கடை, கொழும்பு,

அவ்வளவு பட்டுணர்வின் அனுபவத்தில் உயிர் தியாக அற்பணிப்பிலும்,  மாற்றுக்கருத்துக்கு இடமில்லாமல் தீர்மானிக்கப்பட்டு,  வரலாற்று சான்றுகளுடன் தனித் தமிழ் ஈழம் என்று ஒருசேர அறிதியிட்டு விட்டுக்கொடுப்புக்கு எந்த முகாந்திரமும் இல்லையென்ற கொள்கை கொண்ட ஈழ மக்களின் விடுதலைக்கான உண்மைக் குரலை, சர்வதேச மட்டத்தில் ஜனநாயக ரீதியில் ஒலிப்பதற்காக இராசதந்திர தொலைநோக்கு பார்வையுடன், தமிழீழ தேசியத்தலைவர் மேதகு பிரபாகரன்,அவர்களால் தமிழர்களின் மிகப்பெரிய அரசியல் வெளியாக எதிர்பார்ப்புடன் 2001ல் உருவாக்கப்பட்டது "தமிழ் தேசியக் கூட்டமைப்பு" என்ற ( இரா சம்பந்தருக்கான அல்ல) ஈழத் தமிழருக்கான அரசியற்கட்சி.

ஆரம்பகாலத்தில் தமிழினத்தின் எதிர்பார்ப்புக்கமைய தமிழ் தேசியக் கூட்டமைப்பு தேசிய கட்டுப்பாடுகளுடன் நகர்த்தப்பட்டாலும் 2009 க்கு பின்னாக காலங்களில்  ஒரு சிலரின் தன்னிச்சையான நடவடிக்கையால் உணர்வுள்ளவர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டபின் அனைத்து கட்டுப்பாட்டையும் இழந்து, கொண்ட இலக்குத்தவறி  நிர்ணயிக்கப்பட்ட தமிழர் தாயகத்துக்கான இராசதந்திர அரசியற் செயற்பாட்டிலிருந்து வழுவியிருந்தபோதும், ஒரு இக்கட்டான அரசியல் தருணத்தில் தமிழர்கள் தமது ஒற்றுமையை வெளிப்படுத்தி 2013 செப், வடக்கு மாகாணசபை தேர்தல் மூலம் கடமைக்கு ஒரு முதலமைச்சரை பிரசவித்துவிட்டு அடுத்த நகர்வுகள் பற்றி சிந்திக்கும் முன்னே  கட்சி பல துண்டுகளாக பிளவுபட்டு கம்பீரத்தை இழந்து கிடக்கிறது.

இங்கு இன்னும் ஒரு விடயத்தையும் சுட்டிக்காட்டவேண்டிய தேவை தவிர்க்கமுடியாதவை.  தமிழினத்திற்கும் தமிழர் தேசியத்திற்கும் எதிராக செயற்படும் இராணுவம் ஒரு படியென்றால் இராணுவத்தை  விடவும் ஆபத்தானவர்கள் எதிரிக்கு துணையாக செயற்டும் துரோக குழுக்கள். அப்படித்தான் புளொட், ஈபிடி,பி கருணா குழுக்கள் இலங்கை வரலாற்றில் ஈழத் தமிழ் மக்களின் வாழ்க்கையில் அழியாத களங்கமாக செயற்பட்டு மீண்டிருக்கின்றன.

ஈழப் போராட்டம் பலம்பெறத் தொடங்கிய காலத்திலிருந்து 2009 மே இனப்படுகொலை நடத்தி முடிக்கப்படும்வரை தமிழ் ஈழத்துக்கும் தமிழ் மக்களுக்கும் எதிராக இரவு பகலாக களத்தில் நின்று சிங்களவனின் கூலிப்படையாக ஈனத்தனமாக இராணுவத்துடன் கைகோர்த்து மும்முரமாக செயற்பட்ட  துரோகக்குழுக்கள் என்றால் 1 சித்தாத்தன் தலைமையிலான புளொட், 2, டக்கிளஸ் தலைமையிலானான ஈபீடிபி, 3 வதாக பின்னர் இணைந்துகொண்டது கருணா பிள்ளையான் குழு.

முள்ளிவாய்க்கால் வரை இராஜபக்‌ஷவின் இராணுவம் இனப்படுகொலை நடத்தி முடிக்கப்பட்ட பின்னும், கொலை வன்மம் தீராத புளொட் அமைப்பும் ஈபிடிபி, மற்றும் கருணா குழுவும் சரணடைந்த போராளிகளையும் அவலப்பட்ட மக்களையும் இராணுவத்துக்கு காட்டிக்கொடுத்து வஞ்சம் தீர்க்க தவறவில்லை. சரணடைந்த பெண் போராளிகள் கற்பழிக்கப்பட்டதிலும் இவர்களுக்கு முக்கிய பங்குண்டு. 1980 கள் தொடங்கி இந்திய இராணுவத்துடனும், ஶ்ரீலங்கா ஆட்சியாளர்களுடனும் இணைந்து நின்று முடிந்தவரை ஈழ விடுதலைக்கும், தமிழினத்துக்கும் தமிழ்த் தேசியத்திற்கும் துரோகமிழைத்து  தமிழீழ மக்களுக்கு முடிந்தவரை பின்னடைவுகளை ஏற்படுத்தி மக்களின் அன்றாட வாழ்வை சீரழித்து கப்பம் கடத்தல் படுகொலை ஆகியவைகளையே குறிக்கோளாக கொண்டு வாழ்ந்த புளொட் அமைப்பு இன்று தமிழினத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கும் விதமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பினுள் தலைவர் சம்பந்தனால் உள்வாங்கப்பட்டு தர்மலிங்கம் சித்தாத்தன் மாகாணசபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்.. இதன் மூலம் தமிழ்த் தேசியம் நகைப்புக்குள்ளாகியிருக்கிறது.

இதை ஒரு அரசியல் பரிமாண வளர்ச்சி என்று அரசியல் விற்பன்னர்கள் எவராவது நியாயப்படுத்தினால் அவை ஏற்புடையதில்லை கண்டனத்துக்குரியது என்பதே விடுதலை போராட்டத்தையும், மாவீரர்களையும், உயிரினும் மேலான ஈழ தேசியத்தை மதிக்கும் ஒவ்வொரு தமிழனின் கருத்தாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

அரசியல் ஒற்றுமை என்பது வேறு வங்குரோத்தை சமன்செய்ய அழுக்குக்களை நியாயப்படுத்த, குப்பை கூழங்களை (துரோகிகளை) உள்வாங்குவதென்பது வேறு. தமிழ்நாடு கருணாநிதியின் அரசியல் அகராதிக்கு அவை சரிப்பட்டு வரலாம். எமக்கு அவை பண்டாரவன்னியனுக்கு கிடைத்த காக்கை வன்னியன், வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு கிடைத்த எட்டப்பன் எனக்கொள்ள முடியும். அதற்கான விவரணங்கள் நிறைய எடுத்துக்காட்ட முடியுமென்றாலும் இந்த விடயத்தில் அவை தேவையற்றது.

தமிழ்த் தேசியத்துக்காக ஈடுபாட்டுடன் உயிர் அச்சுறுத்தல் மத்தியிலும் தொடர்ச்சியாக பாடுபட்ட பத்மினி சிதம்பரநாதன், மற்றும் செல்வராஜா கஜேந்திரன் சிவாஜிலிங்கம் ஆகியோர் ஈழமக்களின் உணர்வுகளை கொள்கையாக விட்டுக்கொடுப்பின்றி பிரதிபலித்தபோது அவற்றை பொறுத்துக்கொள்ள முடியாமல் இந்தியாவையும் இலங்கை அரசையும் திருப்திப்படுத்தும் வகையில் உணர்ச்சியுள்ள அவர்களை கட்சியிலிருந்து நீக்கிய சம்பந்தன் தமிழ்த் தேசியத்துக்கு முழு எதிராக செயற்பட்ட ஒட்டுக்குழுவின் தலைவரான சித்தாத்தனை இராச மரியாதையுடன் கட்சிக்குள் உள் வாங்கி மாகாணசபையில் மந்திரி பதவி பெறுமளவுக்கு ஆதிக்கம் செலுத்தும் செல்வாக்குள்ளவராக ஆக்கப்பட்டிருக்கிறார்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரன், சிவாஜிலிங்கம் ஆகியோர் கட்சி வெளியேற்றத்தின் பின்னும் கொள்கைரீதியாக உறுதியாக நின்றதால் இராணுவ புலனாய்வு பிரிவினர் விசாரணைக்கு பலமுறை முகங் கொடுத்துள்ளனர். பத்மினி சிதம்பரநாதன் அவர்களின் வீடு அலுவலகம் வாகனம் ஆகியவை இராணுவ ஒட்டுக்குழுக்களின் கொலைவெறி தாக்குதலுக்குள்ளானது.  சித்தாத்தன் மாகாணசபை மந்திரியாகவிருக்கிறார்.

ஒரு இனத்தின் அரசியல் வழிக் கொள்கைகளை தீர்மானிப்பவைகளாக அந்த இன மக்களின் அன்றாட வாழ்வில் ஏற்படும் அரசியற் தாக்கங்களும் உட்புற சூழல்களும் பெருங் காரணிகளாக இருந்து வருகின்றன அவற்றை மிகச்சரியாக புரிந்து கொண்டு வழிநடத்தும் பொறுப்பு மட்டும் "தெரிவு செய்யப்பட்ட" தலைவர்களுக்கு வழங்கப்படுகிறது, தலைவர்கள் சோரம்போகுமிடத்தில் அல்லது அகலக்கால் வைத்து தாந்தோன்றி தனமாக நடக்குமிடத்து தெரிவு செய்யப்பட்ட தலைவர்கள் எப்போ வேண்டுமானாலும் தூக்கி வீசப்படலாம் "ஆனந்தசங்கரிக்கு நடந்ததுபோல"

வடக்கு மாகாணசபை வெற்றியின் பின் ஒவ்வொரு கட்சிக்காரர்களும் தத்தமது விருப்பத்துக்கேற்ப மறுக்கமுடியாத நியாயங்களை கற்பிதம் செய்துவிட்டு வெவ்வேறு இடங்களில் மாகாணசபை உறுப்பினருக்கான  பதவிப்பிரமாணத்தை செய்து கொண்டிருக்கின்றனர். அவர்களது நியாயப்படுத்தலை புறந்தள்ளுவதற்கு  சம்பந்தன் அணியினரால் முடியவில்லை, வாக்களித்த மக்களாலும் குறைசொல்ல முடியாது என்பதும் தெளிவாக தெரிகிறது. கட்சி தலைமையோ வடக்கு மாகாணத்துக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட  முதலமைச்சரோ எவரையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்து கருமமாற்ற முடியவில்லை.

ஈற்றில் சமரச நிலைப்பாட்டை தரிசித்து நிற்பதாக படங்காட்டி உரிமைகளை பெறுவோம் உலகத்தரத்துக்கு ஈழப்பிரச்சினையை கொண்டு செல்வோம் என்று வீராப்பு அறிக்கைகள் மட்டும் சம்பந்தனிடமிருந்தும் விக்னேஸ்வரனிடமிருந்தும் பூசி மெழுகி தினமும் வெளிவருகின்றன, (இந்த இடத்தில் உள்ளூர் பழமொழி ஒன்று நினைவுக்கு வருகிறது)  இருந்தும் அவர்கள் கொண்ட கொள்கையில் எந்த மாற்றத்தையும் தோற்றப்படுத்துவதாகத் தெரியவில்லை.நாளை நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்குள் உட்கார்ந்துகொண்டு மாகாணசபை வேறு மத்திய அரசியல் வேறு என்று சம்பந்தர் அறிக்கவிடுவதை எவரும் ஆச்சரியத்தோடு பார்க்கத் தேவையில்லை.

வெளியிலிருந்து எவரும் இப்படியான இக்கட்டை ஏற்படுத்தி விடவில்லை. என்பது மட்டும் தெள்ளத் தெளிவாக தெரிகிறது.வெளிப்படையாக சொல்வதானால் சம்பந்தர் என்ற ஒற்றை மனிதனின் எதேச்சதிகார நடவடிக்கையால் தமிழர்களின் மிகப்பெரிய ஜனநாயக அரசியல் வெளியான தமிழ் தேசியக் கூட்டமைப்பு, என்ற கட்சி மட்டுமல்லாது மக்களுக்கான வீரியம் மிக்க சர்வதேசத்துக்கான அரசியலும் துரதிர்ஷ்ட வசமாக ஒரு பின்னடைவை சந்தித்துவிட்டது என்பதை மட்டும் அழிக்க முடியாமல் கறுப்பு பக்கத்தில் வரலாறு பதிவு செய்துவிட்டது.

துரோக கூட்டங்களின் கலப்பில்லாத மாற்று அரசியல் சக்தியொன்று மக்களுக்கான வழிநடத்தலையும் அரசியல் தலைமைத்துவத்தையும் காலதாமதமின்றி ஏற்றுக்கொள்ளவேண்டும்.  அப்படி ஏற்றுக்கொள்ளாதவரை சம்பந்தன், சுமந்திரன், விக்னேஸ்வரன் போன்ற தகுதியற்றவர்களை பிரித்து இனங்காட்ட முடியாது என்பதை தமிழினம் காலம் கடந்து நிச்சியம் புரிந்துகொள்ளும்.

மாகாண சபைக்கான உறுப்புரிமை பெற்ற அனைத்து தரப்பினரும் சுயக் கௌரவம், சம்பிரதாயத்துக்கான குறைந்தபட்ச சமூக நல்லிணக்கம் மற்றும் பதவி பகட்டு போன்றவற்றை மனதில்க்கொண்டு பிரிவினையின் வீரியத்தை வெளியில் காட்டிக்கொள்ளாமல் உள்ளுக்குள் மறைப்பதற்கு முனைந்தாலும் இனி இவர்கள் இணைந்து செயற்படுவது சாத்தியப்படாது என்றே தெரிகிறது. மாகாண சபையின் அமர்வுகள் தொடங்கப்பட்டு இரண்டு மூன்று அமர்வுகளின் பின் ஒட்டுக்குழுக்களின் கூட்டான தமிழரசுக் கட்சி ஒரு பிரிவாகவும் மற்றய கட்சிகள் இன்னொரு பிரிவாகவும் செயற்படப்போவதை நிச்சியம் மாகாணசபை பதிவுசெய்யும் என்பதை பின்னர் நாம் நிச்சியம் காண முடியும்.

இன்றைய நிகழ்வுகள் நிச்சியமாக சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பை பின்தள்ளி தமிழ் தேசியத்தை நேசிக்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியை முற்று முழுதாக  வலுப்படுத்த உதவும். முள்ளிவாய்க்கால் களத்தில் உணர்வுபூர்வமாக சத்தியப்பிரமாணம் எடுத்து மிகத் துடிப்புடன் செயளாற்றிவரும் சிவாஜிலிங்கம் அவர்களும் இதை புரிந்து செயற்படுவார் என்று நம்பலாம். அந்த வேலைத்திட்டம்தான் தேசியக் கூட்டமைப்பில் இன்னும் இருந்துவரும் தேசியவாதிகளை திருத்தி நல்ல நிலைக்கு கொண்டுவர உதவும் மாற்று அணியாக அமையும் அல்லது கூட்டமைப்பை நிராகரிப்பதற்கான சரியான தெரிவாக இருக்கும் என்பதிலும் ஐயப்படத்தேவையில்லை.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உள் விரிசலை சம்பந்தன் கூட்டாளிகள் தாமதமாக எதிர்பார்த்திருந்தாலும் உணர்வுள்ள ஈழத்தமிழர்கள் அனைவரும் 2009 க்குப்பின் படிப்படியாக எதிர்பார்த்த ஒரு நிலைமைதான் அது.

ஶ்ரீலங்கா ஜனாதிபதி ராஜபக்‌ஷவின் பாராளுமன்ற அமர்வுகளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற ஒரே கட்டுக்கோப்புடன் வேற்றுமையை வெளிக்காட்டாமல் இதுவரை உட்கார்ந்தவர்கள் வடக்கு மாகாணசபை மூலம் உருவான பிரிவினையை அடுத்து இனி வரும் பாராளுமன்ற அமர்வுகளில் எப்படியான சிதறலையும் உண்டுபண்ணலாம். தலைவர் சம்பந்தனின் சர்வாதிகார போக்கினால் ஒருசிலர் கூட்டமைப்பிலிருந்து விலகி அரசாங்கத்துடன் இணைந்து தமிழர்களுக்கான தேசிய சேவை செய்யப்போகிறேன் என்று சொன்னாலும் வியப்பதற்கில்லை.  மாறாக இதுவரை மறைமுகமாக ராஜபக்‌ஷவுக்கு  அடிமை சேவகம் புரிந்த சம்பந்தன் இனி வருங்காலங்களில் வெளிப்படையாக ராஜபக்‌ஷ அரசோடு இணைந்து அமைச்சரவையின் பேச்சாளராக வந்தாலும் புதினப்படுவதற்கில்லை.

தமிழ் தேசியக்கூட்டமைப்புக்குள் இவ்வளவு பிச்சல் பிடுங்கல் உண்டாகி மாகாணசபையின் முதலாவது சபை அமர்வுக்கு முன்னரே இப்படியொரு நிலை தோன்றியதையிட்டு அதிர்ச்சியடையாமல் மகிழ்ச்சியடையலாம்.

ஏனென்றால் 2009 க்குப்பின்னர் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அவர்கள் சிந்தனையற்று மிகவும் சின்னத்தனமாக  சிங்கள கைக்கூலியாகி தன்னிச்சையான செயற்பாடுகள், நடத்தைகள் பற்றிய விமர்சனங்கள் ஒன்று இரண்டல்ல. பல தரப்பிலிருந்தும் கணக்கற்ற விமர்சனங்கள் தினமும் உள்நாடு வெளிநாடு என்று பலதரப்பிலிருந்தும் வந்துகொண்டிருந்தன. இருந்தும் சம்பந்தன் அவர்கள் எதுபற்றியும் கவலைப்படவில்லை. ஏதோ ஒரு கணக்கை தன்னுள் வைத்துக்கொண்டு எதற்கும் கவலைப்படாமல் இந்திய+ மகிந்த தாளத்துக்குள் வீழ்ந்து கிடந்தார்.

1970 களின் யாழ் மேயர் அரல்பிரட் துரையப்பாவின் அரசியல் வழிக்குள் சம்பந்தன் இறங்கியிருக்கிறார் என்றே நிலவரங்கள் அச்சப்பட வைக்கின்றன.

ஒன்றில் மட்டும் சம்பந்தன் உறுதியாக இருந்தார், இருக்கிறார். போராட்டத்தோடு சம்பந்தப்பட்ட எவரையும் கட்சிக்குள் முன்னணியில் வைத்திருக்க அவர் விரும்பவில்லை. போராட்டத்தோடு சம்பந்தப்பட்டவர்களாக இருப்பின் அவர்கள் வடக்கு கிழக்கு மாகாணத்தை சேர்ந்தவர்களாக இருக்கவேண்டும், எனவே வடக்கு கிழக்கு மாகாண அங்கத்துவத்தை கட்சிக்குள் இருந்து அகற்றி, அல்லது முக்கியத்துவத்தை குறைத்து கொழும்பை வாழ்விடமாகக் கொண்ட சுமந்திரனை தனது வலதுகரமாக்கிக் கொண்டார், விடுதலைப்போராட்டத்துடன் சம்பந்தமுள்ளவர்களை வெளிநாட்டு பயணங்களின்போதும் அரசாங்க தரப்பு விவதங்களின்போதும் சம்பந்தன் அருகில் வைத்துக்கொள்ளவில்லை. அதன் தொடர்ச்சியாக முதலமைச்சருக்கான வேட்பாளர் தெரிவும் போராட்டத்துடன் சம்பந்தமில்லாத சிங்கள சம்பந்தியான விக்கினேஸ்வரன் தெரிவு செய்யப்பட்டார்.

தமிழரசு கட்சியின் மூத்தவரான மாவை சேனாதிராசா இவையனைத்தையும் எப்படி எடுத்துக்கொண்டார் என்பதும் இன்னும் பகிரங்கமாகவில்லை ஆனால் மாவை அவர்களின் மௌனம் மக்களிடையே மிகப்பெரிய சந்தேகத்தை கிளப்பியிருக்கிறது. போராட்டத்துடன் நிறைய சம்பந்தப்பட்டவரான ஶ்ரீதரனும் சம்பந்தரின் வித்தைக்குள் கட்டுப்பட்டு நடப்பவராகவே பார்க்கப்படுகிறது.

இன்று மாகாணசபையின் கல்வி கலாச்சார அமைச்சராக தெரிவு செய்யப்பட்டிருப்பவர் தம்பிராஜா குருகுலராஜா, அவர் கிளிநொச்சி மாவட்டத்தை பிறப்பிடமாக கொண்டவர், முரசுமோட்டை கிராமத்திலுள்ள நவஜீவனம் என்ற கிறிஸ்துவ மடத்தின் வாரிசு. போராட்டத்தை அணுவணுவாக முற்று முழுதாக உணர்ந்தவர் கிளிநொச்சி மாவட்ட பாஊ ஶ்ரீதரனின் தெரிவாகவே த குருகுலராஜா அவர்கள் மாகாணசபைக்கு உள்வாங்கப்பட்டிருக்கலாம். அடுத்து அனந்தி,  அனந்தி அவர்களும் முற்று முழுதாக போராட்டப்பின்னணியிலிருந்து மாகாணசபைக்கு உள்வாங்கப்பட்டவர். இவர்களுக்கு நாம் போராட்டம் பற்றி பாடம் புகட்டவேண்டும் என்பதில்லை என்பதே இந்தப் பதிவின் முழு நம்பிக்கை.

இருந்தும் அவர்களின் நிறம் என்ன என்பதை அனைவரும் ஆவலுடன் எதிர்பார்ப்பது தவிர்க்க முடியாதது.

இனப்படுகொலையாளி (ராஜபக்‌ஷ) முன்னிலையில் விக்னேஸ்வரன் வட மாகாண முதலமைச்சராக பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டபோது அதிகமான உறுப்பினர்கள் பங்குபற்றவில்லை,

ராஜபக்‌ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் எடுத்துக்கொள்ளும்போது உணர்ச்சியுள்ள மாகாணசபை உறுப்பினர்கள் பெரும்பாலானவர்கள் சமூகமளிக்க மறுப்பார்கள் என்று தெரிந்துகொண்டு எவரையும் முதலமைச்சரின் சத்தியப்பிரமாணத்துக்கு வரவேண்டாம் நீங்கள் பகிஸ்கரிப்பதுபோல் பகிஸ்கரியுங்கள் நாங்கள் ஒரு சம்பிரதாயத்துக்கு கொழும்புக்கு போய் சத்தியப்பிரமாணத்தை பெற்றுக்கொள்ளுகின்றோம் இதன்மூலம் எங்கள் எதிர்ப்பை அரசாங்கத்துக்கு காட்டுவோம் என்று பாம்புக்கு தலையையும் மீனுக்கு வாலையும் காட்டிஒரு கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கப்போன சம்பந்தர் அன்ட் கோ தோலுரிக்கப்பட்டுவிட்டது என்பது உண்மை.

தேர்தல் விஞ்ஞாபனத்தில் வாக்கு வேட்டைக்காக மக்கள் முன் வலியுறுத்தப்பட்ட தேசம், சுயநிர்ணயம், இறைமை என்ற கோசங்கள் அலரி மாளிகையில் சத்தியப்பிரமாணம் செய்யும்போதே அடிபட்டுப்போயிருந்தது, வடக்கு மாகாண சபைக்கான உறுப்பினருக்கான பதவிக்காக கடமைகளையும் வழிவகைகளையும் ஶ்ரீலங்கா ஜனநாயக சோசலிச குடியரசின் அரசியல் அமைப்புக்கும் சட்டத்துக்கும் இணங்க இலங்கை குடியரசுக்கு விசுவாசமுள்ளவனாக இருப்பேன் என்றும்,  எனது திறமைக்கு இயன்றவரை இலங்கை ஜனநாயக குடியரசின் அரசியலமைப்பை உறுதியாக போற்றி காப்பேன் என்றும் பயபக்தியுடன் வெளிப்படுத்தி உறுதி செய்கிறேன். என்று விக்னேஸ்வரன் சத்தியப்பிரமாணம் எடுத்துக்கொண்டார். பின்னர் இரண்டுநாள் கழித்து தனது முதலமைச்சருக்கான பொறுப்புக்களை உத்தியோக பூர்வமாக விக்னேஸ்வரன் பொறுப்பேற்றுக்கொண்டதாகவும் நிகழ்வுகள் நடைபெற்று முடிந்துவிட்டன.

மாகாணசபைக்கான வேலைத்திட்டங்கள் என்ன என்பது இன்னும் எவருக்கும் தெரியாமலே இருந்து வருகிறது.மாகாணசபைக்கான அதிகாரங்கள் என்னென்ன என்பது பற்றி முதலமைச்சர் முதற்க்கொண்டு எவருக்கும் இன்னும் தெளிவாக்கப்படவில்லை.

இருந்தும் சம்பந்தன் விக்னேஸ்வரன் ஆகியோர் கூறுவதுபோல இந்தியா ஶ்ரீலங்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தி எதையாவது பெற்றுக்கொடுத்தால்த்தான் உண்டு. என்ற நிலைதான் மாகாணசபையின் வேலைத்திட்டமாக இருக்கும். மற்றப்படி வழமையாக அரசாங்க அதிபர் மூலம் வடக்குக்கு கிடைக்கப்பெறும் சலுகைகளில் குறிப்பிட்ட அளவை அரசாங்கம் மாகாணசபைக்கு வழங்கும் அவற்றை மாகாணசபை பரிபாலனம் செய்யலாம். என்பது தவிர வேறு புதினம் இப்போதைக்கு இல்லை என்பதே யதார்த்தம்.

ஆனால் ஶ்ரீலங்கா ஜனாதிபதி ராஜபக்‌ஷ சர்வதேச முரண்பாட்டு நெருக்கடியிலிருந்து ஒரு படியை தந்தரமாக தாண்டிவிட்டது என்பது சம்பந்தருக்கும் மகிந்தருக்கும் இந்தியாவுக்கும் நன்கு புரியும்.

ஈழதேசம் செய்திகளுக்காக.

கனகதரன்.

Wednesday, October 9, 2013

Genocide (குற்றப்பரம்பரையின்) தலைமையில் கொமன்வெல்த்! ? (மூன்றாவது கோணல்)"‏ஈழதேசம் செய்தி ஆய்வு"


மாயமானான, 13 வது திருத்த சட்டத்தில் உள்ளடக்கப்பட்டிருந்த வடக்கு கிழக்கு இணைப்பு இலங்கையில் நீதிமன்றம் ஒன்றின்மூலம் செல்லாது என்று அறிவிக்கப்பட்டுவிட்டது, 
அடுத்து  காணி அதிகாரங்கள் ஶ்ரீலங்காவின் மத்திய ஆட்சியாளர்கள் மட்டுமே பரிபாலனம் செய்யும் உரித்துடையது என்றும் இலங்கையின் சுப்றீம் கோர்ட் தீர்ப்பு வழங்கிவிட்டது.  இலங்கையின் தேசிய பாதுகாப்பை கருத்தில்க்கொண்டு பொலிஸ் அதிகாரம் எக்காரணம் கொண்டும் மாகாணசபைகளுக்கு வழங்க முடியாது என்று இலங்கை அரசு திட்டவட்டமாக அறிவித்துவிட்டது.  இராணுவம் வடக்கு கிழக்கிலிருந்து திரும்ப பெறமுடியாது என்பதை ஐநா அமைப்பை தனது அடி மடிக்குள் வைத்திருக்கும் அமெரிக்காவுக்கும் இலங்கை அரசாங்கம் அழுத்தம் திருத்தமாக கூறிவிட்டது.

இந்த நிலையில் அடுத்த மாதம் கொழும்பில் கொமன்வெல்த் அமைப்பின் மாநாடு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

கொமன்வெல்த் தலைவர்களின் கூட்டம் இனப்படுகொலைகளை நடத்திய Genocide  ஒருவர் ஆட்சி செய்யும் ஒரு நாட்டில் நடத்தப்படக்கூட்டாது என்று சர்வதேசத்தில் வல்லமை உள்ள நாடான கனடா,  உட்பட பல சர்வதேச முதன்மை தொண்டரமைப்புக்கள் கடும் எதிர்ப்பு காட்டி வருகின்றன.

இந்தியா மட்டும் எப்பாடு பட்டாவது கொமன்வெல்த் மாநாட்டை Genocide  ராஜபக்‌ஷ தலைமையில் நடத்திவிடவேண்டுமென்று ஒற்றைக்காலில் நிற்கிறது. (அதற்கான உட் காரணங்கள் உண்டு)

பொதுநலவாய தலைவர்களின் மாநாடு ஒரு குற்றப்பரம்பரையின் கீழ் நடத்தப்படக்கூடாது என்பதை உணர்ந்த பொதுநலவாய அமைப்பின் கௌரவ தலைவியான எலிஷபெத் மகாராணி அம்மையார்,  அரசியல் விமர்சனங்களுக்குள் மாட்டிக்கொள்ளாமல் மநாட்டில் பங்குபற்றுவதிலிருந்து  நாகரீகமாக விலகியிருக்கிறார்.

இருந்தும் மனிதக்கழிவுகளுக்குள் பிறப்பெடுத்ததுபோன்ற அரசியல்வாதிகளை தலைவர்களாகக்கொண்ட  இந்தியா எதையும் சட்டை செய்யவில்லை.  

இருந்தும் இந்திய துணைக்கண்டத்தினுள் தமிழ்நாட்டு மக்கள் பொதுநலவாய மாநாடு இலங்கையில் நடத்தப்படக்கூடாது என்று எதிர்த்து குரல் கொடுத்துவருகின்றனர்,  மக்களின் எழுச்சியை எதிர்கொள்ள முடியாது என்று தெரிந்த திமுக கருணாநிதி,.  திருமாவளவன் போன்ற சந்தற்பவாத அரசியல்வாதிகள்கூட இலங்கையில் கொமன்வெல்த் மாநாடு நடத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்குமளவுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

தமிழர் தேசிய விடுதலை இயக்கத்தின் தலைவர் தோழர் தியாகு அவர்கள் இலங்கையில் கொமன்வெல்த் மாநாடு நடத்தப்படக்கூடாது என்றும் அப்படி நடத்தப்பட்டாலும் இந்தியா அந்த மாநாட்டில் பங்குபற்றக்கூடாது என்றும் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

அந்த உண்ணாவிரதம் சம்பந்தமாக இந்திய சர்க்கார் எந்த எதிர்வினை கருத்தையும் வெளிவிடாதபோதும் உண்ணாவிரதம் நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது இலங்கைக்கு சுற்றுலா சென்ற இந்தியாவின் வெளிநாட்டு மந்திரி சல்மான் குர்திஷ் தன்னிச்சையாக கொமன்வெல்த் கூட்டத்தில் தான் பங்குபற்றப்போவதாக அறிவித்துருக்கிறார். (இதிலிருந்து இந்தியா முடிவாக என்ன முடிவில் இருக்கிறது என்பதை எவருக்கும் விளக்கி சொல்லத்தேவையில்லை.)

மறுபுறம்  வட மாகாண சபைக்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் உட்பட 13வது திருத்தச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள.  சகல அதிகாரங்களையும் அப்படியே வழங்க வேண்டும் என இந்தியா, இலங்கை அரசாங்கத்திற்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது என்றும்.   மாகாண சபைக்கான இந்த அதிகாரங்களை பெறுவதற்கான யோசனை ஒன்றை இந்திய அரசின் உதவியுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடைபெற இருக்கும் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை களமாக பயன்படுத்தி முன்வைக்க திட்டமிட்டுள்ளதாகவும்  அதற்காக  இந்தியாவின் உதவியுடன் கொமன்வெல்த் மாநாட்டை பயன்படுத்தி வெளிநாடுகளுக்கு தெளிவுப்படுத்தும் வேலைத்திட்டம் ஒன்றையும் கூட்டமைப்பு முன்னெடுக்க உள்ளதாகவும் அதற்காக இந்தியா கட்டாயம் இலங்கையில் நடைபெற இருக்கும் கொமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளவேண்டும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் கனகசபாபதி விஸ்வலிங்கம் விக்கினேஸ்வரன்.  திருவாய் மலர்ந்தருளியிருக்கிறார்.

கூட்டிக்கழித்து பெருக்கிப் பிரித்துப் பார்த்தால் கொமன்வெல்த் மாநாட்டு நிகழ்ச்சி நிரல் அனைத்தும் ஏற்கெனவே திரை மறைவில் இந்திய இலங்கை ஆட்சியாளர்களால் திட்டமிடப்பட்டு விட்டதும் , எதிர்ப்புக்களை முறியடிக்கும் தந்திரமாக,, ஏன் இந்தியா மாநாட்டில் பங்குபற்ற வேண்டும் என்கிற விளக்கத்துக்கான சூத்திர சுருக்கு கயிற்றை தமிழரசு தளபதி சிங்கக்கொடி சம்பந்தன் மூலம் விக்கினேஸ்வரனிடம் கொடுத்துவிட்டு  இந்தியா மறைவுஸ்தானத்தில்  நின்றுகொண்டிருப்பது துல்லியமாக தெரிகிறது.  விக்னேஸ்வரன் அவர்கள் முதலமைச்சருக்கான  மாணிக்க மகுடம் என்று நினைத்து இந்தியாவிடம் வாங்கி சூடியிருப்பது முள்ளு மகுடம் என்பது விரைவில் அனைவரும் அறிவர். இது மாகாண சபையின் பயணத்தில் மூன்றாவது கோணல். 

ஊர்க்குருவி.

Monday, October 7, 2013

விக்கினேஸ்வரன் வடக்கு மாகாணசபை உறுப்பினருக்கான பதவிக்கு சத்தியப்பிரமாணம் எடுத்துக்கொண்டார். (இரண்டாவது கோணல்)‏



இன்று,  07/10/2013 திங்கள் காலை 09 மணிக்கு ஶ்ரீலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ முன்னிலையில் ஒரு வளர்ப்பு பிராணியின் பௌவியத்துடன் வடக்கு மாகாண (முதலமைச்சராக)  உறுப்பினராக  திரு விக்னேஸ்வரன் வாக்கிய பஞ்சாங்கப்படி காலை 08 மணியிலிருந்து 09 1/2 வரையிலான எமகண்டத்தில் பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டார்.  பதவி ஏற்பின்போது தமிழ் தரப்பாக ஒட்டுக்குழு தளபதிகள் டக்ளஸ் தேவானந்தா, புளொட் சித்தார்த்தன், முன்னிலை வகித்தனர்.  பின் வரிசையில் சிங்கக்கொடி சம்பந்தன், தமிழ் காங்கிரஸுலிருந்து தனிமைப்படுத்தப்பட்ட அப்பாத்துரை வினாயகமூர்த்தி ஆகியோரும் சமூகமளித்திருந்தனர்.
 
விக்கினேஸ்வரனின்  குடும்ப உறவினர்களான வாசுதேவ நாணயக்கார மைத்திரிபால சிறிசேன,   ஆகியோர் கைலாகு கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்

 சத்தியப்பிரமாணத்தின்போது வடக்கு மாகாணத்து முதலமைச்சருக்கான சத்தியப்பிரமாணமாக விக்னேஸ்வரன் எந்த இடத்திலும் கடுகளவும் காட்டிக்கொள்ளவில்லை.

மாறாக ஶ்ரீலங்கா ஜனாதிபதியை திருப்திப்படுத்தும் வகையில்  ஜனநாயக சோசலிச குடியரசின் அரசியல் அமைப்புக்கும் சட்டத்துக்கும் இணங்க இலங்கை குடியரசுக்கு விசுவாசமுள்ளவனாக இருப்பேன் என்றும்,  எனது திறமைக்கு இயன்றவரை இலங்கை ஜனநாயக குடியரசின் அரசியலமைப்பை உறுதியாக போற்றி காப்பேன் என்றும்,  பயபக்தியுடன் வெளிப்படுத்தி உறுதி செய்கிறேன் என்று தனதும்,  தனது தலைவர் சம்பந்தனாரின்  உள்ளுணர்வின் உண்மையை வெளிப்படுத்தி  ராஜபக்‌ஷவுக்கு உண்மையாக இருப்பேன் என்பதை மட்டும் முன்னிறுத்தி சத்தியப்பிரமாணம் செய்திருந்தார்.

வடக்கு மாகாண சபைக்கு விசுவாசமுள்ளவனாக இருப்பேன் என்றோ,  தமிழ் மக்களின் வாழ்வை வளம்படுத்த பாடுபடுவேன் என்றோ, குறைந்த பட்ஷம்  தமிழ் மக்களுக்கான சேவையை  வடக்கு மாகாண சபை மூலம் முதலமைச்சராக இருந்து இயன்றவரை பணியாற்றுவேன் என்றோ வடக்கு மாகாண சபையின் முதலமைச்சராக பொறுப்பேற்கின்றேன் என்றோ விக்னேஸ்வரன் உச்சரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  

வடக்கு மாகாண சபைக்கான உறுப்பினருக்கான பதவிக்கான கடமைகளையும் வழிகளையும் ஶ்ரீலங்கா ஜனநாயக சோசலிச குடியரசின் அரசியல் அமைப்புக்கும் சட்டத்துக்கும் இணங்க இலங்கை குடியரசுக்கு விசுவாசமுள்ளவனாக இருப்பேன் என்றும்,  எனது திறமைக்கு இயன்றவரை இலங்கை ஜனநாயக குடியரசின் அரசியலமைப்பை உறுதியாக போற்றி காப்பேன் என்றும் பயபக்தியுடன் வெளிப்படுத்தி உறுதி செய்கிறேன் என்று சத்தியப்பிரமாணம் செய்யப்பட்டிருந்தது.

வடக்கு மாகாணத்துக்கான தேர்தலில் வாக்கு கேட்டபோது மாவிரர்களையும்,  போராட்டத்தையும் சுய நிர்ணய உரிமை பற்றி பேசிய விக்னேஸ்வரன்.  இன்று துரோக கூட்டங்களான டக்ளஸ், சித்தாத்தன் ஆகியோர் முன்னிலையில் வடக்கு மாகாண உறுப்பினருக்கான பதவிக்காக என்று பம்மியது இரண்டாவது கோணலாக வரலாற்றில் பதிவு செய்யப்படுகிறது.

ராஜபக்‌ஷவுக்கு தமது எதிர்வினையை துணிவுடன் தேர்தலில் காட்டிய மக்கள் விக்கி சம்பந்தனாரின் திருகுதாளங்களுக்கு அடுத்து வரும்காலங்களில் சரியான பதிலடியை கொடுப்பார்கள் என்பதில் எவரும் ஐயப்படத்தேவையில்லை.


ஊர்க்குருவி.

Saturday, September 28, 2013


 

ஈழத்தமிழர்கள்மீது இலங்கை அரசு நடத்தி முடித்த மோசமான மனித உரிமை மீறல்,  கற்பழிப்பு,  இனப்படுகொலை,  உள்ளிட்ட  அனர்த்தத்துக்கான நீதி மற்றும் அரசியல் தீர்வு சம்பந்தமான விவகாரங்களை  ஶ்ரீலங்காவின் உள்நாட்டு சட்டத்துக்கமைய ஶ்ரீலங்காவுக்குள்ளேயே தீர்வுகாணவேண்டுமென்று இந்தியாவின் ஆலோசனைக்கேற்ப ஐநா, 
உட்பட பல உலகநாடுகள் இலங்கைக்கு சார்பாக ஒருதலைப்பட்ஷமாக பிரச்சாரம் செய்து வருகின்றன.  ஜெனீவா மனித உரிமை அமர்வுகளின்போது வரையப்பட்ட அமெரிக்காவின் தீர்மானமும் அதை ஓரளவு வலியுறுத்தியிருக்கிறது. அது சரியான அணுகுமுறைதானா,  அல்லது பிழையான முன்னுதாரணமா எனற தெளிவு தமிழ் அரசியல்வாதிகள் உட்பட இன்னும் பலருக்கு புரியப்படவில்லை.

ஐநா,வையும் அமெரிக்காவையும் இராசதந்திர ரீதியாக எதிர்கொள்ளக்கூடிய தலைமத்துவம் இல்லாத பலவீனம் உள்ளதால், ஶ்ரீலங்காவுடன் முரண்பட்டு நிற்பவர்கள் தமது கொள்கை சார்ந்த கருத்தை சர்வதேச மட்டத்தில் வலிமையானதாக்க முடியாதவர்களாக இந்தியா மற்றும் உலகநாடுகளின் தவறான வழிகாட்டுதலில் தொங்கி பயணப்பட்டுக்கொண்டு இருக்கின்றனர். இருந்தும் சர்வதேச மனித உரிமை ஆணையம் மட்டும் சற்று வித்தியாசமான பார்வையுடன் நியாயமான கருத்துக்களை தெரிவித்து வருகிறது.

இந்தியா உட்பட பல உலகநாடுகளின் பிழையான வழிகாட்டுதல் ஶ்ரீலங்கா ஆட்சியாளர்களை மிக மோசமான சர்வாதிகார போக்கை நோக்கிப்  பயணப்பட வைத்திருக்கிறது. நடத்தி முடிக்கப்பட்ட அனைத்து அநீதிக்கும் குறைந்தபட்ஷ நீதி சார்ந்து முகங்கொடுக்காவிட்டாலும்,  வருங்காலங்களில் தமிழர்களுக்கான அடிப்படை உரிமைகளை சீர்செய்து மக்கள் மனங்களையும் உலக நாடுகளையும்  திருப்திப்படுத்தும் தன்மைகொண்ட இராசதந்திரத்தை பிரயோகிக்காமல் மீண்டும் மீண்டும் இனப்பகையை நீடிக்கும்வகையிலான தப்பின்மேல் தப்பை செய்து சர்வதேச சட்டத்தின் பொறியில் வீழக்கூடிய செயற்பாடுகளையே கூர்மையடையக்கூடிய செயற்பாடுகளை ஶ்ரீலங்கா கண்மூடித்தனமாக முன்னெடுத்து வருகிறது.

1987 ல் இந்தியாவால் ஒருதலைப்பட்சமாக திணிக்கப்பட்ட இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் தமிழர் நல்வாழ்வுக்கு ஒன்றும் இல்லையென்றாலும்,  இந்திய ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்பட்ட 13, வது திருத்த சட்டமூலம் ஏதோ ஒன்றை பெற்றுத்தரும் என்று சிலரால் நம்பப்படுமளவுக்கு பேசப்பட்டு வந்தது. 13, வது திருத்த சட்டத்தில் குறிப்பிட்ட சரத்துக்களில் வடக்கு கிழக்கு மாகாண ஒன்றிணைப்பு, காணி அதிகாரம் மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் குறிப்பிட்டு சொல்லக்கூடியவைகளாக இருந்தன, அவை தவிர கல்வி நிர்வாகம்,  நீதி பரிபாலனங்களும் 13, வது திருத்த சட்டத்தினுள் உள்ளடக்கப்பட்டிருப்பதாக முன்னர்  கூறப்பட்டது.  இருந்தும் தமிழர் தரப்பு அரசியல்வாதிகள் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு முக்கியம் வாய்ந்ததாக கூறி மக்கள் மன்றத்தில் அரசியல் செய்துவந்தபோது

வடக்கு-கிழக்கு மாகாண இணைப்பானது சட்டவிரோதமான ஒன்றென  ராஜபக்‌ஷவின் கட்டுப்பாட்டிலுள்ள சிங்கள நீதிமன்றத்தின் மூலம் தமிழர்கழுக்கு எதிராக சர்வாதிகார தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. வடக்கு-கிழக்கு மாகாணங்களை தனித்தனியாக பிரிக்குமாறு கோரி ஜே.வி.பி கட்சியினரால் சிங்கள அரசின் பின்னணியில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு மீதான விசாரணையின் பின்னரே 16 October 2006.  வடக்கு கிழக்கு இணைப்பு சட்ட விரோதமானது என்ற தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இலங்கை- இந்திய  (சர்வதேச) ஒப்பந்தத்தின் அடிப்படையில் 13வது திருத்தச்சட்டத்தின் மூலம் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் 1987,ம் ஆண்டு ஒன்றாக இணைக்கப்பட்டிருந்தன.

2006,ம் ஆண்டு சிங்கள நீதிமன்றத்தின் மூலம் வடக்கு கிழக்கு பிரிக்கப்பட்டபின் தமிழர் தரப்பு அரசியல்வாதிகள் ஒப்பந்தத்தில் மீதமுள்ள காணி பொலீஸ் அதிகாரங்களை முன் வைத்து பிரச்சாரம் செய்து வந்தனர். அந்த பிரச்சாரத்துக்கும் மரண அடி கொடுப்பதுபோன்ற தீர்ப்பொன்றை ராஜபக்‌ஷ தனது நீதிமன்றம் மூலம் 26, செப்டம்பர் 2013,  வியாழக்கிழமை,  தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது,  காணி அதிகாரங்கள் மத்திய அரசாங்கத்திற்கு மாத்திரமே உரித்தானது என சிங்கள உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இலங்கை அரசியலமைப்பின்படி  இந்தியா கொண்டுவந்த 13, ஆம் திருத்தச் சட்டத்தின் கூற்றுக்கமைய மாகாண சபைகளுக்கு காணி அதிகாரங்கள் வழங்க முடியாது என, சிங்கள நீதிமன்றம் அதிரடியாக தெரிவித்துள்ளது.

இந்திய ஒப்பந்தப் பிரகாரம் மீதம் இருக்கும் பொலீஸ் அதிகாரத்தைப்பற்றி இனிமேல் தமிழ் அரசியல்வாதிகள் பேசுவார்களாக இருந்தால் அடுத்த தீர்ப்பாக பொலிஸ் அதிகாரத்துக்கு அடி விழும் என்பது தமிழ் அரசியல் விற்பன்னர்களுக்கு சொல்லாமல் சொல்லப்பட்டிருக்கிறது.

இறுதியாக தமிழர் தரப்பு வாய் திறக்க முடியாதவாறு செய்யும் விதமாக தேர்தல் விஞ்ஞாபனம் சம்பந்தமாக தேச விரோத குற்றம் சாட்டி   தமிழ் தேசியக்கூட்டமைப்பு செயலாளர் மாவை சேனாதிராசா அவர்களுக்கு 02,ஒக்ரோபர் 2013 அன்று கோர்ட்டில் சமூகமளிக்கும்படி  சிங்கள உயர் நீதிமன்றம் கட்டளை அனுப்பியிருக்கிற்து.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்டிருந்த வடக்கு மாகணசபை தேர்தல் விஞ்ஞாபனம் மூலம் இலங்கைக்குள் தனிநாட்டை உருவாக்க முயற்சிக்கப்பட்டுள்ளது என்றும்  தமிழ் மக்களுக்கு சுய தீர்மானங்களை எடுக்கும் மாகாண அரசு அவசியம் எனவும் "சுயநிர்ணய உரிமை தமிழ் மக்களுக்கு இருப்பதாகவும்"  கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது   இதன் மூலம் தமிழ் தேசிய கூட்டமைப்பு  தேசவிரோத முரண்பாடாக இலங்கைக்குள் தனிநாட்டை உருவாக்க முயற்சித்தது என  நீதிமன்றத்தில் சிங்கள அரசின் பின்னணியில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இவை மட்டுமல்லாது இனி வரும் காலங்களில் ராஜபக்‌ஷ தவிர வேறு எவரும் இலங்கைக்குள் அரசியல் பேசாதிருக்க வேண்டுமென்று நீதிமன்றம் தீர்ப்பெழுதினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

ஆனால் இந்த சர்வாதிகாரப்போக்கே சர்வதேச பொறிக்குள் ராஜபக்‌ஷ அரசை கொண்டு சென்று சேர்க்கும் எழுவாயாக அமையும் வல்லமை கொண்டதாக எண்ணத்தொன்றுகிறது.
 

ஊர்க்குருவி.
ஈழதேசம் இணையம்