Wednesday, December 3, 2014

குஷ்புவை வைத்து சேறடிக்கும் காங்கிரஸ்.



ஆட்டை கடிச்சு மாட்டை கடிச்சு கடைசியில் சம்பந்தமேயில்லாமல் தமிழர்களின் ஆன்மாவை கடித்துக்குதறி விடுதலைப் புலிகள் பொதுமக்களின் உயிரை எடுக்கும் பயங்கரவாதிகள் என்றும் தீவிரவாதத்தை கடைசி மூச்சு உள்ளவரை எதிர்ப்போம் என்றும் தனது அரசியல் புலமையை வெளியிட்டிடுக்கிறார் கட்சிவிட்டு கட்சிதாவிய “நக்கர்த் கான்”, என்ற இயற் பெயரை கொண்ட சினிமா நடிகை குஷ்பு .
முன்னைய காலங்களின் எழுச்சியை விடவும் இந்த வருடம் தேசிய தலைவர் திரு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் உலகம் முழுவதும் தமிழர்கள் வாழும் நாடுகள் எல்லாவற்றிலும் மிகவும் உணர்வுபூர்வமாக கொண்டாடப்பட்டு தலைவர் பிரபாகரன் அவர்கள் கொண்ட கொள்கைவழி நாங்கள் அனைவரும் பின் நிற்கின்றோம் என்ற செய்தியை தமிழகத்து தமிழர்களும், உலகத்தமிழர்கள் வெளிக்காட்டும் போது காழ்ப்புணர்ச்சி மற்றும் பொறுக்க முடியாமை காரணமாக இந்திய காங்கிரஸும் விடுதலை புலிகள்மீது போட்டி மனப்பாண்மைகொண்ட தமிழகத்து தீய சக்திகளும் திட்டமிட்டு குஷ்புவை வைத்து சேறடித்திருக்கின்றன.
நடிகை குஷ்பு தமிழ் சினிமாவில் தவிர்க்கமுடியாத ஒருவராக நீண்டகாலம் நின்று பிடித்தவர், தமிழக சினிமா ரசிகர்கள் மனங்களில் நின்று நிலைத்த ஒரு நடிககை என்றால் குஷ்பு என்பது மிகையானது அல்ல.
சினிமாவில் சான்ஸ் குறைந்தபின் நடிகை குஷ்பு சேராத கட்சியுமில்லை, அவர் கட்டி சுமந்திழுக்காத சர்ச்சையுமில்லை,
பெண்கள் சம்பந்தமாகவும் தமிழர்களின் கலாச்சாரம் மற்றும் உயிரோட்டமான தமிழர்களின் திருமண பந்தம் பற்றிய குஷ்புவின் இழிதனமான முரண்பாடான கருத்து தமிழ்நாட்டை மிகவும் கொதிநிலைக்கு அப்போ இட்டுச்சென்றிருந்தது. பெண்கள் திருமணம் செய்யாமல் விருப்பப்பட்டபடி வேவ்வேறு ஆண்களுடன் உறவு வைத்துக்கொள்ளுவது தப்பேயில்லை என்று பகிரங்கமாக குஷ்பு கூறியிருந்தார்,
தமிழ்நாட்டிலுள்ள பெண்கள் அமைப்புக்கள், அரசியற் கட்சிகள், பொது அமைப்புக்கள், குஷ்புவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து கொடும்பாவி கட்டி இழுத்து பெரும் போராட்டம் நடத்தின கிட்டத்தட்ட தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் குஷ்புமீது பல வழக்குகள் தொடரப்பட்டன,
இந்தியாவில் சினிமா நடிகர்களும் அரசியல்வாதிகளும் எதை முன்வைக்கின்றனரோ அதையே முன்மொழிந்து பழக்கப்பட்ட நீதிமன்றங்கள் குஷ்பு மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கு மயில் இறகால் அடிப்பதுபோன்ற தண்டனையை தீர்ப்பாக கூறி குஷ்பு ஒரு முக்கியமான பிரமுகர் என்பதை பயபக்தியுடன் சொல்லாமல் சொல்லி அந்த விடயத்திலிருந்து வேறு விடயங்களுக்கு தாவிவிட்டன,
அவ்வப்போது சமூகம் சார்ந்து குஷ்பு வெளியிட்ட கருத்துக்கள் எல்லாம் மக்கள் மத்தியில் எரிச்சலையும் கோபத்தையும் முரண்பாட்டையும் ஊட்டியிருக்கிறதே தவிர கவர்ச்சி நடிகையாக சினிமாவில் குஷ்புவை ஏற்றுக்கொண்டளவுக்கு குஷ்புவின் கருத்தை எவராலும் யதார்த்தமாக எடுத்துக்கொள்ள முடியவில்லை.
அரசியல் என்று ஜெயலலிதாவின் தலைமையிலான அஇ அதிமுகவில் இணைந்திருந்து அக்கட்சியின் தொலைக்காட்சியான ஜெயா ரிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் ஜெயலலிதாவின் அடிமைகளில் ஒருவராகவும் பணியாற்றினார், அடுத்து கருணாநிதியின் திமுக கட்சியில் இணைந்து முன்னிலை பேச்சாளராகவும் கட்சியின் உயர்மட்ட உறுப்பினராகவும் கருணாநிதியின் மனங்கவர்ந்த மந்திரமாகவும் அக் கட்சியில் அறியப்பட்டார்,
அதன்பின் திமுகவிலிருந்து தன்னிச்சையாக வெளியேறி சிலமாதங்கள் மவுனமாக இருந்தார்.
படுகுழியில் விழுந்து கிடந்த கருணாநிதி குஷ்புவை தனது கட்சியில் மிக உச்சத்தில் வைத்து பார்க்கவேண்டும் என்று விரும்பினார். அதன் பின்னணியில் உள் திட்டம் ஏதோ இருந்ததாக ஸ்ராலின் சந்தேகித்ததாக தெரிகிறது, அனைத்தையும் வெல்லும் வண்ணம் கருணாநிதி காய்நகர்தல்களையும் செய்தார், ஆனால் கருணாநிதி குஷ்புவுக்கு கட்சியில் முக்கியத்துவம் கொடுப்பதை கருணாநிதியின் மகன் ஸ்ராலின் மற்றும் கனிமொழி ராசாத்தி ஆகியோர் துண்டற விரும்பவில்லை.
கருணாநிதி குஷ்புமீது வேறுவிதமான அபரிமிதமான ஆசையை வைத்திருந்தார் என்றும் அதனால்தான் கட்சியில் குஷ்புவுக்கு முக்கியஸ்துவம் கொடுக்கிறார் என்று கருணாநிதி குடும்பத்தில் புகைச்சல் கிளம்பியிருந்தது. இந்தச் செய்தியை பல ஊடகங்கள் புலனாய்வு செய்தியாக வெளியிட்டன.
ஒரு கட்டத்தில் குஷ்பு கருணாநிதியிடமிருந்து கவலையுடன் வெளியேறினார்
சில தினங்களுக்குமுன் டில்லி சென்ற குஷ்பு சோனியா ராகுல் ஆகியோரை சந்தித்து காங்கிரஸ் கட்சியில் இணைந்துகொண்டார். திரும்பி சென்ன வந்த குஷ்பு ஒரேநாளில் பண்பட்ட காங்கிரஸ் தலைவர்போல பேசி விடுதலை புலிகள் பயங்கரவாதிகள் எனவும் அதை தான் அனுமதிக்க போவதில்லை என்றும் முழக்கமிட்டு சென்றிருந்தார் இந்த செய்தி தமிழகத்திலும் உலக தமிழர்களிடத்திலும் பெரும் கொந்தளிப்பையும் கொதிநிலையையும் ஏற்படுத்தியிருந்தது, அதுபற்றி ஊடகங்கள் கண்டன செய்திகளையும் சமூக வலைத்தளங்களில் காட்டமான உரையாடல்களையும் விவாதங்களையும் தோற்றுவித்திருந்தது,
மாவீரர் நாள் நிகழ்வுகளும் விடுதலைப்புலிகளின் தலைவர் திரு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் உலகம் முழுவதுமுள்ள தமிழர்களால் மிகவும் உணர்வுபூர்வமாக கொண்டாடப்பட்டு தலைவர் பிரபாகரன் அவர்களின் கொள்கைவழி நாங்கள் அனைவரும் பின் நிற்கின்றோம் என்ற செய்தியை தமிழகத்து தமிழர்களும், உலகத்தமிழர்கள் வெளிக்காட்டும் போது காழ்ப்புணர்ச்சி மற்றும் திசைதிருப்பும் ஒரு வேலைத்திட்டமாகவே குஷ்புவை வைத்து காங்கிரஸும் விடுதலை புலிகள்மீது போட்டி மனப்பாண்மைகொண்ட மற்றும் தீய சக்திகளும் திட்டமிட்டு குஷ்புவை வைத்து சேறடித்திருப்பதாகவே பலரும் நம்புகின்றனர்.
ஊர்க்குருவி.
ஈழதேசம்.

No comments: