newsஇலங்கைத்தீவில் காலாகாலமாக வாழ்ந்துவரும் பூர்வீகதேசிய இனமான தமிழர்களுக்கும், வந்தேறுகுடி பௌத்த இனவாதிகளான சிங்கள இனத்திற்கும் மூண்ட இனப்பகை இன்று நேற்றான ஒன்றல்ல.

நீண்ட நெடிய வரலாற்றையும் பல விரும்பத்தகாத நிகழ்வுகளையும் இலங்கையினுள் தோற்றுவித்து ஒரு முக்கிய காலகட்டத்தில் இன்றும் பகையும் போராட்டமும் தொடர்ந்துகொண்டிருக்கிறது.

பகைமைக்கான காரணங்கள் ஒன்றும் உலகமறியாததுமல்ல. சிங்களவனின் வாழ்வாதாரத்தை தமிழினம் தட்டிப்பறித்து வாயில்ப்போட்டுக்கொள்ள வலுச்சண்டையிட்டு சதிசெய்ததுமில்லை. வந்தேறிகளான சிங்களவரை வெளியேற்ற வேண்டுமென்று காழ்ப்புணர்வுகொண்டு சூழ்ச்சியுடன் தமிழன் நடந்துகொண்டதுமில்லை. தமிழனின் தரப்பிலிருந்து இனக்கலவரம் ஆரம்பிக்கப்பட்டதான குற்றச்சாட்டுக்களும் எந்தக்காலத்திலும் பதியப்பட்டதுமில்லை.

தமிழினம் மக்கள்தொகைகுறைந்த வலிமையற்றகாரணத்தால் பிரித்தானிய கொலனித்துவத்திலிருந்து சுதந்திரம் பெற்றபோதும் பெரும்பான்மை இனமான சிங்களவரின் கைகளில் நிர்வாக அலகு கையளிக்கப்பட்டு இன்றுவரை தமிழ்த்தேசிய இனத்தின் தேசியம், சுயநிர்ணய உரிமை, உறுதிப்படுத்தப்படாமல் உதாசீனப்படுத்தப்பட்டு மிகக்கொடூரமான அராஜகம் கட்டவிழ்த்து விடப்பட்டு பகிரங்கமாக மக்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கின்றனர் .என்பது உலகம் அறிந்த வரலாற்றுப்பின்னணி. ஆனாலும் 21,ம் நூற்றாண்டான இந்த நவீனயுகத்தில் உள்ள உலக இயக்கம் இன்றுவரை எந்த அசைவாடலுமில்லாமல் கல்லுப்போல் வேடிக்கை பார்த்து நின்றுகொண்டிருக்கிறது.

இலங்கைத்தீவுக்கு மிகவும் அருகே பல்லினமக்கள் வாழும் இந்தியத்துணைக்கண்டத்தில் தமிழை தாய்மொழியாகக்கொண்ட ஒரு தொகுதிமக்கள் காலாகாலமாக வாழ்ந்தும் வருகின்றனர். இந்தியத்துணைக்கண்டத்தில் வாழும் தமிழர்களுக்கும் ஈழத்தமிழர்களுக்கும் தொப்புள்க்கொடி உறவுகளும் இரத்த உறவுமுறையான பிணைப்புக்களும் உண்டென்றும் வரலாறுகள் கூறுகின்றன. தமிழ்நாட்டில் வாழும் தமிழர்களின் சனத்தொகையை கணக்கிட்டால் இலங்கையின் ஒட்டுமொத்த சனத்தொகையின் அளவில் மூன்று மடங்கு அதிகமான தமிழ்மக்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் என்பதும் உலகம் அறியும். அவர்களுக்கு தமது வாழ்வை, சுயநிர்ணய உரிமையை, பாதுகாத்து கொள்ளக்கூடிய சகல உரிமையும் ஆட்சி அதிகாரமும் உண்டு. உலகில் மிகப்பெரிய ஜனநாயக நாடென்ற பெருமையும் இந்தியாவுக்குண்டு.

1947,ம் ஆண்டு சுதந்திரமடைந்த இந்தியாவில் தென்னிந்திய மானிலங்களான ஆந்திரா, கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு, ஒன்றாக திராவிடநாடு என்ற கூட்டில் இருந்தகாலத்தில் (இன்றைய சென்னை) மதிராஸ் பட்டினம் தலைநகராக (இராசதானி) இருந்தது. அப்போது வணிக நோக்கோடும் உத்தியோகம் வேலைவாய்ப்பு போன்றகாரணங்களுக்காக பல இனத்தவரும் பாகுபாடின்றி மற்றாஸ் நகரத்தில் கலந்து குடியிருந்தனர். காலப்போக்கில் மானிலங்கள் பிரிக்கப்பட்டு தமிழ்நாடு பிரிந்தபின்னும். வந்தேறி வேற்றுமொழிக்காரர் தமிழை படிக்க எழுத பேச கற்றுக்கொண்டு தமிழ்நாட்டின் பல இடங்களுக்கும் பரவிவிட்டனர். அதில் அனேகர் தமது தாய்மொழியை வெளிக்காட்டிக்கொள்ளாமல் தாமும் தமிழர் என்றே காட்டிக்கொள்ள விளைவதையும் காணலாம். அதில் ஒருவர் கருணாநிதி என்றும் சொல்லப்படுகிறது.

தென் இந்தியா, மொழிவாரி மானிலங்களாகப்பிரிந்தபோது. எல்லைக்கிராமங்களிலிருந்த தமிழ்மக்கள் மற்றய மானிலங்களுக்குள்ளும். வேற்று மொழி கன்னட, ஆந்திர, கேரள, மக்கள் கணிசமான அளவு தமிழ்நாட்டுக்குள்ளும். அகப்படும் சூழலும் ஏற்பட்டிருந்தது. ஒன்றுபட்ட இந்தியா என்ற கோசத்தின்கீழ் இவற்றை எந்த அரசியல்வாதிகளும் பிரித்துப்பார்க்கவுமில்லை.

இந்திய சுதந்திரத்தின்பின், ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், பூ. ச. குமாரசுவாமி ராஜா, சி. இராஜகோபாலாச்சாரி (இராஜாஜி), காமராசர், எம் பக்கவத்சலம் ஆகியோர் காங்கிரஸ் கட்சி சார்பாகவும் அதன்பின் திராவிடக்கட்சிகளின் கைகளில் (இன்றய) தமிழ்நாட்டின் ஆட்சி அதிகாரம் இருந்து கொண்டிருக்கின்றது. ஆரம்பத்தில் தெலுங்கரான ஈ வே ராமசாமி பெரியாரின் தலைமையில் பகுத்தறிவு இயக்கமாக உருவான திராவிடர்கழகத்தில் பலமொழிக்காரரும் பாகுபாடின்றி கலந்திருந்தனர், அதிலிருந்து பிரிந்து தமிழரான C N அண்ணாத்துரை திராவிட முன்னேற்றக்கழகத்தை ஆரம்பித்தார். அதன்பின் C N அண்ணாத்துரை அவர்களிடமும், திமுக கட்சியிலுள்ள தமிழை பேச்சுவழக்காகக்கொண்ட வேற்று மொழி, திராவிட இனத்தவர்களின் கைகளிலும் ஆட்சி அதிகாரம் மாறி மாறி சுழல்வதைக்காணலாம்.

தமிழகத்து அரசியல்வாதிகளில் மிகவும் வித்தியாசமான அரசியல்த்தலைவராக, மனிதாபிமானியாக, எம் ஜீ ராமச்சந்திரன், (எம் ஜீ ஆர்) அவர்கள் 1977 ம் ஆண்டு தொடக்கம் 1987 ம் ஆண்டுவரை தொடச்சியாக தமிழக முதல்வராக பதவிவகித்தார். 1987 டிசம்பர் 24ம் நாள் அவர் இறக்கும் வரையில் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவிவகித்த எம்ஜீஆர் அவர்கள். தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் மீதும் ஈழமக்கள்மீதும் அளவற்ற அன்பும் பாசமும் ஈடுபாடும் ஈழவிடுதலைக்கு உந்துசக்தியாகவும் இருந்தார். எம் ஜீ ஆரின் இழப்பின் பின் இந்தியத்துணைக்கண்டத்திலிருந்து தமிழினத்திற்காக உரிமைக்குரல் கொடுப்பதற்கு ஈடுபாட்டுடன் சுயநலனை கடந்து இதயசுத்தியுடன் எவரும் துணியவில்லை, அல்லது விரும்பவில்லை, ஆனாலும் ஈழமக்கள் தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்களது தலைமையில் தன்மானத்துடன் போராடவேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டிருந்தனர்.

newsஎம்.ஜீ.ஆர், அவர்களின் தாய் தந்தையர்களின் பூர்வீகம் மலயாளமாக இருந்தாலும், இலங்கை (மலையகம்) நாவலப்பிட்டியில் பிறந்து தமிழில் மிகுந்த பற்றுடையவராகவும். ஏழை எளியோரை போற்றும் பெரும் பண்பு கொண்டவராகவும், பேராசையற்ற பொதுநலனில் ஈடுபாடு கொண்டவராகவும், வாழ்நாள் முழுவதும் நடந்துகொண்ட ஒரு அபூர்வபிறவியாகவே தமிழ்நாடும் உலகத்தமிழினமும், எம்.ஜீ.ஆர், அவர்களை கடவுளுக்கு சரியாக நோக்குகிறது.

தனக்கு போட்டியாக எம்ஜீஆர், அவர்கள் வளர்வது கண்டு பொறுக்க முடியாத திமுக, தலைவர் கருணாநிதியால் திட்டமிட்டு 1972 எம்ஜீஆர், வெளியேற்றப்பட்டபின். எம்.ஜீ.ஆர் அவர்கள் தலைமையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம். உதயமாகியது. 1977 ல் எம்ஜீஆர் தேர்தலை சந்தித்து ஆட்சியை கைப்பற்றும்வரை, இரண்டுமுறை முதலமைச்சராக இருந்த கருணாநிதி, எம்ஜீஆர், அவர்களின் வருகைக்குப்பின், 1977, ல் இருந்து 1987, வரை மக்களால் ஓரங்கட்டப்பட்டு ஆட்சியை கைப்பற்றமுடியவில்லை.

எம்.ஜீ.ஆர், அவர்களின் மறைவிற்குப்பின் எம்.ஜீ.ஆர், அவர்களால் நிறுவப்பட்ட அ,அ.தி.மு.க. கட்சியின் அதிகாரத்தை கட்சியின் கொள்கைப்பரப்பு செயலாளரான, முன்னணி நடிகையான கன்னடரான ஜெ.ஜெயலலிதா கைப்பற்றினார், அதிமுக வின் மூத்த தமிழ்த்தலைவர்களான நெடுஞ்செழியன், திருநாவுக்கரசு, எம் ஆர் வீரப்பன், போன்ற பெருந்தலைவர்களை மதிக்காமல் ஓரங்கட்டி அடாவடியாக ஜெயலலிதா தலைவரானார். ஆனாலும் அவரது முற்கோபத்தாலும் அடக்கமற்ற அடாவடிக்குணத்தாலும் ஆட்சியை கைப்பற்றமுடியவில்லை. கருணாநிதியின் திமுக வெற்றிபெற்று ஆட்சியை கைப்பற்றியது. தந்திரசாலியான கருணாநிதியின் திமுக ஆட்சி நீண்டகாலம் நிலைக்கவில்லை. ஆட்சி கலைக்கப்பட்டு தமிழ்நாட்டின் பத்தாவது சட்டமன்றத் தேர்தல் 1991 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடை பெற்றது. அத்தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்று, ஜெ.
ஜெயலலிதா, முதல் முறையாக தமிழகத்தின் முதல்வரானார். அன்றுதொடக்கம் ஜெயலலிதா ஈழத்தமிழரின் எதிரியாகவே தன்னை வரித்துக்கொண்டிருப்பதை காணலாம்.

2006 மே 13, நடப்பு ஆட்சிக்காக பதவியேற்ற கருணாநிதியின் ஆட்சிக்காலத்தில்த்தான், ஈழவரலாற்றில் மிகக்கொடுமையான படுகொலை இடப்பெயர்வு குடிநீருக்குக்கூட வழிகிடைக்காத வகையில் சொல்லொண்ணா கொடுந்துயரத்தை ஈழத்தமிழினம் சந்தித்தது, ஆனால் கருணாநிதி தான்கூட்டுச்சேர்ந்திருந்த காங்கிரஸ் கட்சியின் அனுதாபத்தை இழந்து தனது பதவியை இழக்க விரும்பாமல் மிக இழிவாக பொய்யும் கபட நாடகங்களும் அரங்கேற்றி தனது பதவியையும் வாரிசுகளின் பதவிகளையும் தக்கவைத்து அவர் ஆடிய நாடகங்கள் கின்னஸ்ஸில் இடம்பிடிக்கத்தக்கவை.

கருணாநிதியின் தமிழர்மீதான கழுவியமீனில் நழுவியமீன் கொள்கை வேலைக்காகாது என்பதை தேசியத்தலைவர் பிரபாகரன் நன்கு அறிந்தே வைத்திருந்தார். இருந்தும் தமிழ்நட்டுத்தமிழர்களின் ஆதரவை புறந்தள்ளி போராட்டம் எடுத்துச்செல்ல முடியாது என்பதை தலைவர் பிரபாகரன் உளப்பூர்வமாக வெளிப்படையாக தெரிவித்தே வந்துள்ளார், தலைவரின் அடிப்படைக்கருத்துக்கும் கருணாநிதியின் தந்திரப்போக்குக்கும் நிறையவே இடைவெளியும் இருந்தது. இதை தலைவர் பிரபாகரன் என்றைக்கும் பிரித்துக்காட்டியதில்லை. என்றாவது ஒருநாள் யதார்த்தத்தை புரிந்துகொண்டு ஒடுக்குமுறைக்கெதிராக படுகொலைகளுக்கெதிராக தமிழ்த்தாய்மார்களின் அவலங்களை பார்த்தாவது கருணாநிதி தனது மனதை ஈரமாக்குவார் தனது செல்வாக்கை நிச்சியம் பொறுத்த தருணத்தில் பயன்படுத்துவார் என்று தேசியத்தலைவரும், ஈழமக்களும் அரசியல்த்தலைவர்களும் நம்பியிருந்தனர்.

ஆனல் சர்வ உலகத்தால் தடைசெய்யப்பட்ட ஆயுதங்களைப்பயன்படுத்தி போரை நடத்திக்கொண்டிருந்த, சோனியாவின் மத்திய அரசை, பகைத்து தனது பதவியையும் வாரிசுகளின் பதவிகளையும் சுகபோக வாழ்க்கையையும் கருணாநிதி விட்டுக்கொடுக்கத்தயாராக இல்லை, என்பதை அறுதி உறுதியாக முத்துக்குமார் தொடக்கம் தீயில் எரிந்து தற்கொடையாகி கரிக்கட்டையான 18, தமிழகத்தின் மண்ணின் மைந்தர்கள், சுதேசிகள் எரிந்தபோதுதான் தமிழகம் அறிந்தது. ஆனாலும் கருணாநிதி விடாப்பிடியாக தனது நாடகத்தை விட்டுவிலகவில்லை.

ஜெயலலிதாவும் கருணாநிதியை பின்பற்றி தன்பங்குக்கு நடித்த நாடகங்களில் ஒன்றுதான் 2009ம் ஆண்டு ஈழம் எரிக்கப்பட்டபோது, பாராளுமன்றத் தேர்தலில் தனது கட்சி வெல்லவேண்டும் என்பதற்காகவும். வைகோ, ராமதாஸ், த பண்டியன், போன்ற கூட்டிணைவு கட்சிகளை திருப்த்திப்படுத்துவதற்காகவும் ஈழமக்களுக்கு ஆதரவு தருவதுபோல் சுயநலத்தின்பால் ஒருசில மேடைகளில் குரல் கொடுத்து தேர்தல் முடிவடைந்த பின் அதுபற்றி வாய் திறப்பதை தவிர்த்து கருணாநிதியை காய்வதிலேயே கலங்கடத்துகிறார். சிலமேடைகளில் ஜெயலலிதா பேசும்போது இந்திய மத்திய அரசு ஈழமக்களுக்காக என்னசெய்யவேண்டுமென்று ஒப்புக்கு ஏமாற்றி உலக கண்துடைப்புக்கு முன்வைக்கும் கோரிக்கைகளை தானும் சற்று மாற்றி குரல் கொடுப்பதையே காணலாம்.

ஈழமக்களின் அடிப்படையை புரிந்துகொள்ளாது. அவலத்தை தமக்குச்சாதகமாக்கி குளப்பத்தை உண்டுபண்ணும் சுயநல அரசியல் கோசங்கள் தெவையற்றவையாகவே ஈழத்தமிழினத்தின் மீது ஈடுபாடுள்ள அரசியல் ஆய்வாளர்கள் பார்க்கின்றனர். சுருக்கமாக சொல்லப்போனால் உதவி செய்யாவிட்டாலும் உபத்திரவம் பண்ணவேண்டாம் என்பதே தமிழீழ மக்களின் எதிர்பார்ப்புமாகும் கோரிக்கையுமாகும்.

தமிழ்நாட்டில் எம்ஜீஆர் அவர்களின் ஆட்சியின் பின் தமிழ்நாட்டில் அரசியல் செய்யும் எந்தக்கட்சியும் ஈழத்தை நினைவுகூராமல் தேர்தல்களில் வெற்றி பெறமுடியாதென்பதே யதார்த்தமுமாகியிருக்கிறது, இவற்றை தமிழக அரசியல் கட்சி வியாபாரிகள் நன்கு உணர்ந்தும் இருக்கின்றனர். அப்படியானால் தமிழ்நாட்டில் ஈழ ஆதரவு நிறைந்திருக்கின்றதென்பது நிதர்சனமாக இருக்கவேண்டும், கோடி கோடியாக ஊழல்செய்து பணத்தின்மூலம் ஓட்டை விலைகொடுத்து வாங்கும் நிலையிலுள்ள திராவிடக்கட்சிகளான திமுக, அதிமுக, அரைகரைவாசி பணத்தையே நம்பி தேர்தல்களில் நின்று ஜெயித்து விடுகின்றன. நியாயமான சிறியகட்சிகள் ஊழல் செய்வதற்கு களமில்லாததால் பணப்புழக்கமின்றி தோற்றுப்போவதற்கு நிறைய சந்தற்பமிருப்பதால் விபச்சாரிகள் போல் பெரிய ஊழல்க்கட்சிகளுடன் சோரம்போய் அடிமைப்பட்டுக்கிடப்பதும் மறுக்கமுடியாத ஒன்றுதான்.

தேசியக்கட்சியான காங்கிரசும், தமிழ்நாட்டிலுள்ள மானிலக்கட்சிகளான அனைத்துக்கட்சிகளும் வாய்வீச்சில் ஈழத்துக்காக சிலுவை சுமப்பதாக கூறி கிராமமக்களை ஏமாற்றிவிடுகின்றன. ஈழம், ஈழத்தமிழர் நலன் என்ற கோசமே ஓங்கி ஒலித்து அரசியலில் வியாபாரம் நடப்பதை விபரம் அறிந்தவர்கள் புரிந்துகொள்ளலாம். வாய் ஜாலமும் நடிப்பும் தவிர தமிழகத்து கட்சிகள் செயலில் எதையும் செய்யவில்லை என்பதே உண்மை.

ஈழபோராட்டத்தை மட்டுமே சுற்றிப்படர்ந்து உருவான தமிழகத்தின் அரசியல்க்கட்சிகள் பலவுண்டு. அவற்றில் முக்கியமான சில. 1)திமுக விலிருந்து பிரிந்த மறுமலர்ச்சி திமுக, ( 2) மருத்துவர் ராமதாஸ் அவர்களினால் நிறுவப்பட்ட பாட்டாளி மக்கள் கட்சி, (3)திருமாவளவன் அவர்களால் உருவாக்கப்பட்ட விடுதலைச்சிறுத்தைகள் கட்சி, (4) தற்போது உருவாகியிருக்கும் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையிலான நாம் தமிழர் இயக்கம், ஆகியவையாகும், இவற்றில் நாம்தமிழர் இயக்கம் அரசியலுக்காகத்தோன்றாமல் ஈழ அழிப்பை கண்டு சகிக்கமுடியாமல் தானாகத்தோன்றி இன்று அரசியல் அரங்குக்குள் தள்ளப்படுவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறது.

இவற்றில் பாட்டாளிமக்கள் கட்சி,,, நிறுவனர் ராமதாஸ், கருணாநிதியின் தலையையே தின்று தீர்த்துவிடுமளவுக்கு தந்திரசாலியாக தமிழ்நாட்டில் காணப்படுகிறார், பா ம க, என்பது சுயநலனே குறியாகக்கொண்டு நேரம் ஒரு கிளையில் இரைதேடும் கொள்கையற்ற குடும்ப சுயநலக்கட்சியாகும், 2006,ல் கருணாநிதியுடன் கூட்டுவைத்து தேர்தலில் நின்று வெற்றிபெற்று, மத்தியில் மந்திரிப்பதவிகளையும் பெற்ற ராமதாஸ், தனது மகனை சுகாதரத்துறை அமைச்சருமாக்கி பதவியில் இருந்துகொண்டே, ஈழப்பிரச்சினையின் கோரத்தை பயன்படுத்தி ஈழத்தையே முன்னிலைப்படுத்தி பிரச்சாரம் செய்து, 2009 ஆண்டு பாராளுமன்றத்தேர்தலுக்கு தன்னை தயார் செய்திருந்தார். மக்கள் தொலைக்காட்சியின் காட்சிகளை பார்த்த எவரும் ராமதாஸுன் உள்நோக்கத்தை விஞ்ஞானரீதியாகக்கூட கண்டுபிடித்துவிடமுடியாத அளவுக்கு மிகுந்த திட்டமிடலுடன் நெறிப்படுத்தி ஈழப்படுகொலைக்காட்சிகளை மக்கள் முன் கொண்டுசென்றார். இவற்றை புலனாய்வுசெய்த மலை விழுங்கியான கருணாநிதி, மௌனமாக காய் நகர்த்தி ஒரு ஓட்டுக்கு 500 ரூ என்றிருந்த கணக்கை 5,000,ரூ வரை ஏற்றி ராமதாசுக்கும் ஜெயலலிதாவுக்கும் நாமம் வரைந்து திருவோடு கையில் தந்திருந்தார், ஈழத்தின் அனுதாபம் பணத்தால் கழுவப்பட்டுவிட்டது. கருணாநிதியின் வல்லமையை அறிந்துகொண்ட ராமதாஸ் என்கிற அரசியல் வியாபாரி இன்றய திகதியில் திமுகவுடன் வியாபார ஒப்பந்தம் செய்துகொண்டிருப்பதை காணலாம்.

ஈழப்போர் காரணமாக 2009, க்கான பாராளுமன்றத்தேர்தலில் காங்கிரசும் திமுகவும் தோல்வியடையும் என்ற எண்ணத்தில் உள்நோக்கத்தோடு மருத்துவர் ராமதாஸ் மிக மிக மலிவாக ஈழத்தின் அவலத்தை சுயலாபத்திற்காகப்பயன்படுத்தியதையும் ஜெயலலிதாவுடன் கூட்டு வைத்துக்கொண்டதை எவரும் மறக்கமுடியாது. 2009, ஜனவரி தொடங்கி ஏப்பல் மே மாதங்களில் மக்கள் தொலைக்காட்சி மூலம் செய்த பரப்புரை ஈழத்தமிழனுக்கு சாதகமாக இருந்தாலும் ராமதாஸின் உள்நோக்கம் மிக மிக மலிவானதே, ஆனால் அவை எல்லாவற்றையும் கரைத்துக்குடிக்கும் வல்லமை பெற்ற கருணாநிதி தனது நீண்டகால அரசியல் அனுபவத்தின்மூலம் பாவப்பட்ட ஏழை மக்களின் பலவீனத்தை பயன்படுத்தி பணத்தால் ஒரே இரவில் எல்லாக்கட்சிகளையும் தரைமட்டமாக்கி வெற்றிவாகை சூடினார்.

அடுத்தவர் மா,நடிகன்,, கருணாநிதியை வென்ற மகா,நடிகன் திருமாவளவனார் ஆகும். இவரது பெயரை எழுதவே கை கூசுகிறது அவ்வளவு அற்பனாகிய திருமா இன்னும் ஈழத்தமிழரின் சோகக்கதைகளை பாத்திரங்களாக்கி நாடகமேடைகளிலேயே வாழ்ந்துகொண்டிருக்கிறார். தினமும் இவரது செய்தியும் படமும் வராத சர்வதேச தமிழ் இணையத்தளங்கள் 2007/2008/2009 ல் இருக்கவில்லை, இன்றும் ஒருசில இணையத்தளங்கள் இவரது செய்திகளை நகைச்சுவை கருதி வெளியிடுவதுண்டு, சுயநலன்கருதி சோனியா கானை, கடிந்துகொள்ளும் திருமா, சோனியா முன்னிலையில் எண்சாண் உடம்பையும் ஒருசாணாக்கி கூனிக்குறுகுவது பெருத்த சாதனையாக பாற்கப்படுகிறது, கருணாநிதியை கடவுளாக காணும் திருமா, தமிழீழத்தின் மேய்ப்பர் கருணாநிதி என்றும், ஈழத்தமிழர்களுக்கு கருணாநிதியுடன் இணைந்து ஈழத்தை பெற்றுக்கொடுப்பதற்கு உயிருள்ளவரை உழைப்பதாகவும் அழுதுகொண்டிருப்பதைக்காணலாம்.

ஒருகாலத்தில் திருமாவளவனை ஈழத்தமிழினம் சகோதரனாக தொப்புள்க்கொடி உறவாக நம்பிக்கெட்டதும் உண்டு. இறுதி யுத்தத்தின்போது தொடர் செத்தவீடாக ஈழத்தை எரித்துக்கொண்டிருந்த காங்கிரஸையும் கருணாநிதியையும் உலகத்தமிழினம் மண்வாரி திட்டிக்கொண்டிருந்தபோது. ஒன்றாக இணைந்து ஈழ ஆதரவு படங்காட்டிய ராமதாஸ் ஜெயலலிதாவின் புடவைக்குள்ளும், இனப்பிறவியான திருமா, சோனியா கருணா, காலுக்குள்ளும் ஒடுங்கிக்கொண்டனர்! இனி எந்தக்காலத்துக்கும் திருமாவால் ஈழத்தமிழனுக்கு விழுந்த சூடு ஈழ மக்களால் மறக்கப்படப்போவதுமில்லை. அவர்பாட்டுக்கு ஈழத்தமிழரின் பெயரை பாவித்து அரசியல் செய்வதால் அவரது சாதி அருந்ததியர் மக்களும் அருவருத்து திருமாவை அரசியலில் இருந்து நிராகரித்து ஒதுக்கக்கூடும், கருணாநிதியின் நடிப்பில் சற்றும் குறைவில்லாத நாடக மேதையான தந்தரசாலி திருமாவளவனின் பொய், பித்தலாட்டம், புளுகு, இல்லாதவற்றை நடந்ததுபோல் காட்டும் தந்திரம், இவைகளிலிருந்து தப்பிப்பதே ஈழத்தமிழனுக்கு இப்போதைக்கு பெரும் தலையிடியாகவுள்ளது.

மதிமுக தலைவர் திரு வைகோ பற்றியும் சொல்லியாகவேண்டும். வைகோ அவர்கள் தனது அரசியல்வாழ்வில் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக ஈழத்தமிழரின் மீது பிறழ்வற்ற நேர்மையான அனுதாபியாக இருந்து வருவதை தமிழ் உலகம் தீர்க்கமாக அறியும், 1993,ல் கபடத்தனமாக கருணாநிதியால் திமுக விலிருந்து வெளியேற்றப்பட்டு, வைகோ தலைமையில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகம் உருவானது. அடுத்துவந்த ஜெயலலிதாவின் ஆட்சியின்போது மதிமுக தலைவர் வைகோ விடுதலைப்புலிகளுக்கு சார்பாக செயற்படுகிறார் என காரணங்காட்டி "போடா" என்ற தடைச்சட்டத்தை பிரயோகித்து வைகோ அவர்களை வருடக்கணக்கில் வெளியேவரமுடியாத வகையில் சிறையில்த்தள்ளினார் ஜெயலலிதா, அந்த ஆத்திரத்தை தீர்க்கும்பொருட்டு,வைகோ அவர்கள் அதிரடியாக முடிவெடுத்து மீண்டும் கருணாநிதியின் திமுக வுடன் கூட்டு வைத்து அரசியல் செய்ததும், அந்தநேரத்தில் திமுகவில் உரிய மரியாதையின்றி கருணாநிதியால் வஞ்சிக்கப்பட்டு திரும்பவும் சிறைப்படுத்திய ஜெயலலிதாவுடன் கூட்டு வைத்து கருணாநிதியை எதிர்த்து அரசியல் செய்வதும் , இந்தியத்தமிழர்கள் ரசிக்கிரார்களோ என்னவோ ஈழத்தமிழனால் ரசிக்க முடியவில்லை என்பதும் உண்மை, ஆனாலும் வைகோ ஈழத்தமிழரின்பால் நீண்டகாலமாக கொண்டிருக்கும் களங்கமற்ற ஈடுபாடும், தேசியத்தலைவர் மீது வைத்திருக்கும் நடிப்பற்ற உண்மையான அன்பு மரியாதையும் காரணமாக, வைகோ அவர்களின் தனிப்பட்ட அரசியல் கூட்டுப்பற்றி ஈழத்தவர் எவரும் பெரிதுபடுத்தி பேசுவதில்லை. ஆனாலும் வைகோ அவர்கள் எந்தக்கட்சியுடன் கூட்டு வைத்துக்கொண்டாலும் தனது கொள்கையிலிருந்து மாறாமல் ஈழத்தமிழரின் வாழ்வே தனது வாழ்வையும் விட மேலானது என்ற கொள்கையுடையவர், அந்தவகையில் வைகோ தனது கட்சி அழிந்துபோனாலும் ஈழமீட்சியை மறக்கமாட்டார் என்று நம்பலாம்.

ஜனநாயகம் என்னவிலை என்று பணநாயகம் மூலம் அரசியல் செய்யும் இந்திய அரசியல்க்களத்தின் யதார்த்தமும், ஈழமக்களால் புரிந்துகொள்ள முடியாமலும் இருக்கக்கூடும். யதார்த்தம் எப்படியிருப்பினும் வைகோ அவர்களின் மதிமுக ஒன்றுமட்டும் தன்னால் முடிந்தவரை மானசீகமாக ஈழத்துக்காக குரல் கொடுத்து வருவதை உளப்பூர்வமாக ஈழ மக்கள் உணர்ந்துள்ளனர்.

அடுத்து கட்சி அரசியலுக்கப்பாற்பட்டு மானசீகமாக ஈழத்துக்காக அற்பணிப்புடன் இயங்கிவரும் ஐயா நெடுமாறன் அவர்களையும் மரியாதையுடன் ஒவ்வொரு ஈழத்தமிழனும் நெஞ்சில் இருத்திக்கொண்டிருக்கின்றான். அப்பழுக்கற்ற அவரது பணி எந்தப்பிரதியுபகாரமுமில்லாமல் நெடுமாறன் ஐயா அவர்களால் எடுக்கப்படுகின்றது, அவரது நடவடிக்கைகள் ஈழதமிழினத்தை நெகிழவைப்பனவாகும்,

அடுத்து சுப வீரபாண்டியன், பாதிரி ஜெகத் கஸ்பர் ராஜ், ஆகியோரின் கசப்பான பிபுலங்களை விட்டு விடலாம் ஏனெனில் அவர்கள் இருவரும் இப்போ கருணாநிதியின் வீட்டு முற்றத்து மரத்தில் குடியிருக்கும் ஆட்காட்டி பறவைகள்,

2009,ல் ஈழப்போராட்டம் கருணாநிதியின் வரலாற்றுப்பிழையால், இந்திய காங்கிரஸ் அரசின் தலைமையில் பலநாடுகளின் உதவியோடு ஒடுக்கப்பட்டது, தமிழர் தரப்பிலிருந்து கணக்கிடமுடியா விலைகொடுத்தபின், போராட்டம் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது, இருந்தும் போராட்டம் சாத்வீகமுறையில் புலம்பெயர்தேசங்களிலும், வெவ்வேறு பிரிவுகளாகவும் முன்னெடுக்கப்படுகின்றன, ஈழ இனம் அழிந்துபோனாலும் ஏதோ ஒரு வழியில் வலியை திருப்பி செலுத்தவேண்டும் என்பதே எமது இனத்தின் தலையாய குறிக்கோளாகும்,

இந்த நோக்கத்தோடு ஈழத்தமிழினத்துக்காக மிகுந்த நெருக்கடிகளைச்சந்தித்து துணிவுடன் தமிழ்நாட்டிலிருந்து போராடிக்கொண்டிருக்கும் ஒருவர் மறத்தமிழன் செந்தமிழன் சீமான் அவர்கள். ஈழத்தின் சாவுகளை கண்டு தாங்கமுடியாமல் ஒரே இனம் என்ற உணர்வில் தாய் பிள்ளையாக தன்னை இருத்தி, ஈழமக்களுக்காக குரல்கொடுத்த காரணத்தினால், ஒரு குறுகிய காலத்தில் இரண்டுமுறை தேசியப்பாதுகாப்பு சட்டத்திலும் மூன்றுமுறை பொலிஸ் கஸ்டடியிலும் மொத்தம் ஐந்துமுறை சிறை சென்று திரும்பியவர், ஈழ விடுதலைக்காக எந்தச்சக்திக்கும் அடிபணியாமல் போராடப்போவதாக சீமான் கூறியிருக்கிறார், சீமான்மீது ஈழத்தமிழ் மக்கள் பெருமதிப்புக்கொண்டிருக்கின்றனர், காரணங்களும் நிறைய உண்டு, ஈழப்போராட்டம் வலுவாக இருந்தகாலத்தில் போராளிகள் களத்தில் நிறைந்திருந்தபோது பேச்சுவார்த்தைக்கென ஐரோப்பிய அமெரிக்க தூதர்கள் வன்னியை நோக்கி படையெடுத்தபோது தரும் ஆதரவிற்கும், இன்றயநிலையில்த்தரும் ஆதரவிற்கும் நிறையவே வித்தியாசம் உண்டு. அந்த வகையில் சீமான் அவர்கள் களம் இறங்கியிருக்கும் தருணம் மிக மிக வித்தியாசமான காலகட்டமாகும்.

"சீமானின் கருத்துக்களில் சிறு துளி: பிரபாகரன் என் தலைவன். பிரபாகரன்தான் எங்கள் வழிகாட்டி. என் தாய் இனத்தை அழித்தவன் சிங்களவன் அதே தாய் மண்ணில் எங்கள் தாய் மண்ணை மீட்டெடுப்போம். 10 ஆண்டுக்குள் ஈழ விடுதலை நிச்சயம். ஈழ விடுதலைக்கு இந்த மண் என்ன செய்தது. எங்களை அழிக்கத்தான் முன்வந்தது. அதனால்தான் எங்கள் ஈழ விடுதலை தமிழ் தாயகம், தமிழ் ஈழம் எங்கள் தாகமாக உள்ளது. 16 கல் தொலைவில் உள்ளது என் தாய் மண். அதை மீட்டெடுக்க நான் செல்வதில் என்ன தவறு. இதற்கு முன்பு தனி ஈழம் கிடைக்கச் செய்வோம் என்று சொல்லியவர்கள் புறம்தள்ளிவிட்டு ஓடிவிட்டார்கள். ஆனால் நாம் புலிக்கொடி என்ற தேசியக்கொடியை பறக்க விடுவோம். இந்த மண்ணில் பேச்சுக்கு, கருத்துக்கு சுதந்திரம் கிடையாது. என் இனம் காக்க ஒவ்வொரு கட்சி மேடையிலும் ஓடி ஓடி பேசினேன். கடைசியில் வென்று நின்று செத்தவனாகி விட்டேன். அதன்பிறகுதான் என் நாட்டைக் காக்க, என் இனம் காக்க, படை கட்ட திட்டமிட்டு தம்பிகளை ஒன்றிணைத்து படை கட்டியிருக்கிறேன். லட்சக்கணக்கான கண்ணீரில்தான் இந்த படை கட்டப்பட்டு இருக்கிறது. சிங்களவன் என் தாய், தந்தையர்களின் உடல்களை பிளந்தான். இதைப் பார்த்து போராட யாரும் வரவில்லை என்றுதான், நாம் தமிழனை உருவாக்கினேன். மீனவனை அடித்தால் மாணவனை அடிப்பேன் என்று சொன்னதற்கு சிறைப்படுத்தினார்கள்.

இதற்கு நீதிபதி சொன்னார் சீமான் சொன்னதில் என்ன தவறு என்று. என் சொந்தங்களை தட்டி எழுப்பத்தான். நெருப்பில் வெந்து செத்தான் முத்துக்குமார். இவனுக்காக என்ன செய்தார்கள் ஆட்சியாளர்கள். இனம் காக்க போராடியவர்களைத்தான் ஒடுக்கினீர்கள். ஈழ மண்ணில் சுதந்திரத்திற்காக போராடியவர்களை அங்கே செத்து மடிந்தவர்களை வெளியே தெரியாமல் மூடி மறைத்தீர்கள். ஊடகங்களில் வெளிவராமல் தடுத்தீர்கள். இதை பதிவு செய்து வீடு வீடாக கொடுத்த என் தம்பிகளை சிறைப்படுத்தினீர்கள். இதுதான் உங்களால் செய்ய முடிந்தது. முதல்வன் படத்தைப் போல, என்னையும் ஒருநாள் முதல்வராக ஆக்கிப் பாருங்கள். எப்படி மாற்றி காட்டுகிறேன். இந்திய பேரரசே தமிழ் தேசிய இனம் எங்கள் இனம். அனைத்தையும் மாற்றி காட்ட என்னால் முடியும் என்றார்."

சிங்கள அரசுத்தலைவர் ராஜபக்க்ஷ எந்தளவுக்கு தமிழனின் எதிரியோ துரோகியான கருணாநிதி ஈழத்தமிழர்களுக்கு இரண்டு மடங்கு மோசமானவராகும். கருணாநிதியை அரசியல் ரீதியாக எதிர்ப்பதற்கு தமிழ்நாட்டு தமிழர்கள் திரட்டப்படவேண்டும் அதற்கு இளைஞரான, பலராலும் அறியப்பட்ட சீமான் மிகச்சரியானவரே, ஆனால் சீமான் மீதி ஒரு குற்றச்சாட்டும் உண்டு, விரைவில் உணர்ச்சி வசப்படுபவரென்றும் கோபப்படுபவரென்றும் கூறப்படுகின்றது. அதை சகோதரர் சீமான் மறுத்தாலும், உண்மை ஓரளவு இருப்பதாகத்தான் உணரக்கூடியதாகவும் உள்ளது, கருணாநிதி ஜெயலலிதா போன்றவர்களை உணர்ச்சி வசப்பட்டு எதிர்க்காமல் காரியத்தால் எதிர்ப்பதே வெற்றிதரும் என்பதுதானே யதார்த்தமும்.

வரவிருக்கும் சட்டசபை தேர்தலில் கருணாநிதியையும் காங்கிரஸையும் எதிர்ப்பதற்காக சீமான் அவர்கள் தெரிவுசெய்திருக்கும் முறையும் சரிதானா என்பதும் சிலரது சந்தேகம், ஏனெனில் ஜெயலலிதா என்ற சக்தி யதார்த்தத்தை புறந்தள்ளி திடீர் நடவடிக்கைகளில் இறங்கி தலைகீழாக மாறக்கூடிய ஒன்றாகும். ஆனாலும் சீமானின் முயற்சி வெற்றி பெறவேண்டும் என்பதே எல்லோரது அவாவும். வெற்றிபெற்றவர்களை போற்றுவதும் தோத்துப்போனவர்களை பார்த்து சிரிப்பதும் உலக நடைமுறை, சீமான் தனது கருத்துப்பட முயற்சிப்பது அவரது சுதந்திரமும் கூட,

ஆனால் ஈழத்தமிழர்கள் அரசியல் ஆராய்ச்சிப்பொருளாக இனிமேலும் இருக்க தயாரகவில்லை ஏனெனில் அவ்வளவுக்கவ்வளவு அவர்கள் நொந்துபோய்விட்டனர் என்பதை மற்றவர்களும் புரிந்துகொள்ள வேண்டும்.

தேசியத்தலவர் மேதகு பிரபாகரன் அவர்கள் கூறுவதுபோல், திடமாக இருப்போம் காலம்தான் போராட்டத்தை தீர்மானிக்கும்.

ஈழதேசம் இணையத்திற்காக
கனகதரன்,,

நன்றி ஈழதேசம்,