ஈழத்தின் மூச்சே என்றன்
எண்ணத்தின் கருவே - தங்கம்
கீழிடை பணிந்துபோக
கிளம்பிய புகழே வாழி!
 மானமே மகுடம் என்று
மலையென எம்மில் மீண்டு
காலத்தால் உருவாய் வந்த
கதிரவன் வாழ்க வாழ்க!.

உலகத்தில் உயர்வு நீதான்
உண்மைக்கு உரைகல் நீதான்
கலங்கரை விளக்கம் நீதான்
கடுமையும் நீதான் என்பர்.
விடுதலை வேள்வி மூட்டி
விண்ணதிர் களங்கள் கண்டு
சாவினை மீண்ட தங்க
தலைவனே வாழி வாழி!

ஒப்புக்கும் பயந்ததில்லை -உன்
உருவத்தில் கடுமையில்லை
தப்புடன் ஒருநாள் கூட - நீ
தன்நிலை பகிர்ந்ததில்லை
நிச்சியம் உங்கள் எண்ணம்
நிமிர்ந்திடும் நாளை என்போம்
அத்துணை காட்சி காண்போம்
ஆதவன் நீவிர் வாழ்க!

மூட்டிய பயணம் மீழும்
முடிவது நன்றே சேரும் - நீ
நீட்டிய திசையை நோக்கி
நிமிர்நடை போட்டே வந்தோம்
நாளை உன் வரவுக்காக
நல்வர வோடு நிற்போம்
இன்றைய நல் நாளில்- உன்
நிறை உரை எதிர்பார்க்கின்றோம்

அண்ணை,யுன் ஐம்பத்தெட்டு
அகவையை வாழ்த்துகின்றோம்
பினையும் ஆண்டு நூறு
பேறுடன் வாழ்வாய் என்பபோம்
மண்ணிடை மாண்ட வீரர்
உன்னையே நம்பி மீண்டார்
திண்ணமாய் வருவாய் என்றே
திக்கெட்டும் பார்த்து நிற்போம்.

ஈழத்தின் தலைவா வாழி!
என்றும் எம் நெஞ்சே வாழி!
காலத்தின் கதிரே வாழி!
காவிய புதல்வே வாழி!
வீரத்தை எமக்களித்த
வேங்கையின் மைந்தே வாழி
பார்வதி பெற்ற மைந்தா
பகலவன் (நீ) வாழி வாழி!

ஓர்மத்தை உகந்தளித்த
உண்மையின் பேறே வாழி!
வல்வையின் மகவே வாழி!
வானிடை உயர்ந்தே வாழி!
நேற்றுப்போல் இன்றும் உங்கள்
நிதர்சனம் காண்போம் உண்மை
காற்றென வருவாய் கண்டேன்
கனவில்லை உண்மை என்பேன்.

ஊர்க்குருவி.