தமிழினத்தின் விரோதியாக இனங்காணப்பட்ட, முன்னாள் முதலமைச்சர் மூ கருணாநிதி, அரசிலை,.. அரசியல்,நீதி, சட்டங்களை,.. மக்கள் சக்தியை,.. மனித வாழ்வின் ஏற்ற இறக்கத்தை,..

பாசத்தை,.. புத்திரசோகத்தை,.. காலம் தாழ்ந்து இப்போது நன்கு புரிந்துகொண்டிருக்கிறார். ஜூன் 20 ந் திகதி மூன்றாவது முயற்சியாக டில்லி உச்சநீதிமன்றத்தில் கனிமொழியின் பெயில் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் அதிர்ச்சியடைந்த கருணாநிதி கறுப்பு கண்ணாடியை கழற்றி வைத்துவிட்டு கண்ணீர்விட்டு அழுதார்.

நாஸ்தீகர், பகுத்தறிவுவாதி சுயமரியாதைக்காரர், என்றும் புலுடா விடும் அவர், விதியைப்பற்றியும்,மனித சாபத்தின் வீரியத்தையும்,கடவுளின் கட்டளையையும் மிக நன்றாக இப்போ புரிந்து கொண்டிருப்பார். இனி கருணாநிதிக்கு எக்காலத்திலும் ஏற்றம் என்பது கிடையாது. பாதாளத்தை நோக்கிய படு மோசமான இறங்கு முகம்தான்.

கருணாநிதியை மனிதனாக திருத்துவதற்கு இறைவன் கொடுத்த பல சந்தற்பங்களை தனது தலைக்கனத்தால், மோசமான பேராசையால் கண்டுகொள்ளாமல் கவிழ்த்து உதாசீனப்படுத்திவிட்ட கருணாநிதி, இன்று சகல வீரியங்களும் இழந்து, பாவத்தின் தண்டனைக் கைதியாக பரிதாப நிலையில்,பொது இடத்தில் என்றைக்குமே கழற்றாத கறுப்பு கண்ணாடியை கழற்றி வைத்துவிட்டு கண்ணீர் விட்டு கதறுமளவுக்கு கர்ம விதி தலைகீழாக புரட்டி அவரை தனது அகோரப்பிடிக்குள் கொண்டுவந்து விட்டது.

இனி அவர் திருந்திவிட்டதாக சுயவாக்குமூலம் கொடுத்தாலும் கடவுள்கூட மன்னிக்கப்போவதில்லை. கடவுளால் கருணாநிதிக்கு கொடுக்கப்பட்ட சந்தற்பங்கள் அனைத்தும் காலாவதியாகிவிட்டது. இனி சாபத்தால் சபிக்கப்பட்ட தண்டனை அனைத்தையும் பெறவேண்டிய சாமானியனே கருணாநிதி.

மகள் கனிமொழியை சிறையிலிருந்து மீட்க கருணாநிதி எடுத்த அனைத்து முயற்சிகளும் கடவுளால் நிராகரிக்கப்பட்டுவிட்டது. இதிலிருந்து அவர் தனது கையில் ஒன்றுமில்லை என்பதை நன்கு புரிந்து கண்ணீர் விட்டு அழுகிறார்.

கருணாநிதியின் வஞ்சகத்தால் எவ்வளவு கொடுமைக்கு ஆட்பட்டவர்களாக இருந்தாலும் ஈழத்தமிழனாகிய எனக்கு கனிமொழியின் நிலமையும் கருணாநிதி படும் துயரும் மனதில் இரக்கத்தை உண்டுபண்ணுகிறது.

ஆனால் இதுபோல பல ஆயிரம் மடங்கு எனது இனம் சிறுமைப்பட்டு சித்திரவதைக்குள்ளாகி தவித்தபோதி இந்த மனிதன் கருணாநிதியும் மகள் கனிமொழியும் அவருடைய ஆடுகால்களும் செய்த வஞ்சகம்.. காலம் கடந்து தண்டிக்கும் குணங்கொண்ட கடவுள் சக்திக்குக்கூட பொறுக்கவில்லை மிக வேகமாக கடவுள் தனது தீர்ப்பை எழுதி தண்டனையை நிறைவேற்றியிருக்கிறார்.

கருணாநிதியின் நிலையை கண்டு பாவம் என்று சொல்லியபோது எனது மனைவியும் குழந்தைகழும் என்னை திட்டித்தீர்க்கிறார்கள். அந்த படு பாதகனை "பாவம்" என்று சொன்னாலே அந்த பழி எங்களை ஆயுட் காலம் முழுவதும் ஆட்கொண்டுவிடும் என்று என் மனைவி சொல்லுவதும் நியாயம் என்றே எனக்கு படுகிறது.

ஈழத்தமிழினத்தின் எண்ணிலடங்காத மனித அவலத்தை கருணாநிதி தனது குடும்ப சுகத்துக்காக வழிமொழிந்து அமைதியாக வெவ்வேறு வியாக்கிஞானங்களை விளக்கவுரைகளாக வெளியிட்டு ஏமாற்றியிருக்காவிட்டால் ஈழப்போராட்டம் இன்று எந்தச்சக்தியாலும் அழிக்க முடியாத உயிர்ப்புடன் இருந்திருக்கும். கருணாநிதியையும் வரலாறு மனிதனாக பதிவு செய்திருக்கும்.

கருணாநிதி என்ற காதகன் தமிழ்நாட்டில் இருந்திருக்காவிட்டால் இந்தியாவின் மத்திய ஹிந்தி அரசாங்கத்தால் அத்துமீறிய ஆக்கிரமிப்பை ஒருபோதும் ஈழத்தில் ஈடேற்றியிருக்க முடியாது. எனவே முற்று முழுதான மக்கள் அழிவுக்கும், மிகப்பெரிய சீரிய முயற்சியான ஒரு இனத்தின் விடுதலை போராட்டம் சிதைவுக்கும் கோடாரிக்காம்பு கருணாநிதியே.

இன்றும் எனது மனதில் தமிழ்நாடுதான் ஈழப்போராட்டத்தில் சிதைவுக்கு காரணம் என்ற ஒரு மோசமான நெருடல் வெளியில் சொல்ல முடியாமல் வேதனையாக தொடர்கிறது. ஆதரவுச்சக்திகள் அதிகம் தமிழகத்தின் கீழ்மட்டத்தில் இருந்தாலும், அரசியல் சார்ந்து மேல்மட்டத்தில் இருப்பவை எல்லாம் சுயநலன் சார்ந்த அழிப்பு சக்திகளாகவே மாறி கொள்ளி வைக்கும் கோடாரிக்காம்பாக இருந்திருக்கின்றனர்.

பல்வேறுபட்ட விமர்சனத்திற்கு உட்ப்பட்டிருந்தாலும் ஈழத்தமிழரிடத்தில் ஈழ அரசியலைப்பொறுத்தவரை தீர்மானமாக தீர்மானிக்கப்பட்ட ஒரே ஒரு நம்பிக்கைச் சக்தி தேசியத்தலைவர் வே.பிரபாகரன், அவர்களின் தலைமையிலான விடுதலைப் புலிகள் இயக்கம், ஒன்று மட்டுமே.ஈழ மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரே ஆதரவு சக்தியாக எதிர்கால நம்பிக்கையாக இருந்த, போராட்டத்தில் மண் விழுவதற்கு கருணாநிதியும், அவரது கைத்தடியான திருமாவளவனும், இன்னும் சில சக்திகளும் கங்கணம் கட்டி பெருத்த நாடகங்கள் நடத்தி வென்றாலும், மக்கள்மத்தியில் இன்று வீழ்த்தப்பட்டுவிட்டனர். ஈழத்தின் சாபம் பழிவாங்கி வீழ்த்தியிருக்கிறது என்று சொல்வதை சிலர் நகைச்சுவையாக எடுத்தாலும் என்னைப்பொறுத்த மட்டில் கடவுளின் கருணை என்றே அதைச்சொல்லுவேன்.

வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் ஏற்பட்ட அனுபவங்கள்தான். காலப்போக்கில் சட்டங்களாக எழுதப்பட்டு நீதி நூல்களாக நீதிமன்றங்களில் சமூகத்தை வழிநடத்துகிறது. ஒரு நாட்டின் அரசியல்த்தலைமையின் சிந்தனையும் வழிகாட்டலும்தான் அந்த நாட்டின் செழிப்பு அல்லது வீழ்ச்சிக்கு காரணமாயிருக்கிறது. அந்தவகையில் பார்த்தாலும் விடுதலைப்புலிகள் அமைப்பு சுயநலன் பற்றி சிந்திக்காத மிக நேர்மையான நடத்தையுடன் நேர்கோடாக பயணித்த ஒரு அமைப்பு என்பதே காலத்தால் அழியாத பதிவு.எந்த தொடர்புமில்லாத வெளி நாடுகள் கூட இந்த விடயத்தில் கருத்து முரண்படவில்லை.

தமிழ்மக்கள் தொகையில் மிக அதிகம் கொண்ட தமிழ்நாட்டின் அரசியல்ச்சக்திகள் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் நிழலில் நின்று அரசியல் செய்தால் சீக்கிரம் மக்கள் மனங்களை கவர்ந்து வெற்றி பெற்று விடலாம். என்ற வித்தையை கபடத்தனமாக மலிவாகப்பயன்படுத்தி சில வெற்றியும் சில தோல்வியும் அடைந்திருக்கின்றன. இந்த ராசதந்திரத்தை மூத்தவர் கருணாநிதி அறியாதவரல்ல. எனவே அவர் தனது உள் மனதிலுள்ள புலி எதிப்பை எங்குக் வெளிப்படையாக காட்டிக்கொள்ளவில்லை. நல்லவர்போல் நடித்து புலிகளை இல்லாதொழித்து விடுவதிலேயே அவர் குறியாக இருந்தார். அந்த ராசதந்திரத்தில் ஓரளவு அவர் வெற்றி பெற்றாலும் வேசம் கலைந்தபோது அரசியல் ரீதியாக மக்களால் அவர் தூக்கி வீசப்பட்டார்.

உலகத்தமிழர் தலைவன் என்ற பட்டம் அமரத்துவத்தின்பின் வேறு எவரிடமும் போய்விடக்கூடாது. தனது பெயர் மட்டும் வரலாற்றில் இடம்பெறவேண்டும் என்ற ஈகோ மாயைபேராசையே அவரை ஒரு மோசமான சைக்கோத்தனமான முடிவுகளுக்கு தள்ளிவிட்டது. இன்று ஊழ்வினை கஸ்டடியில் மகள் கனிமொழியின் பெயில் ஜூன்20ல் உச்ச நீதிமன்றத்தால் தள்ளுபடிசெய்யப்பட்டது அறிந்து தள்ளுவண்டியுடன் டில்லி சென்ற கருணாநிதி. புத்திர சோகம் வாட்ட, டில்லியில் அவரது கூட்டாளிகளான காங்கிரஸுக்காரரே ஒதுக்கிவிட்ட நிலையில். கறுப்பு கண்ணாடியை கழற்றி வைத்துவிட்டு கண்ணீர் விட்டு அழுதார்,, முள்ளிவாய்க்காலில் ஒவ்வொரு ஈழத்தமிழினமும் பட்ட வேதனையை கருணாநிதி அனுபவிப்பது காலங்கடந்தாலும் கடவுளின் சரியான தீர்ப்பே.

ஈழதேசம் இணையமூடாக ஊர்க்குருவி.

நன்றி ஈழதேசம்.