Saturday, August 13, 2011

>கூத்தாடி குசும்பன்< அங் 1.

>கூத்தாடி குசும்பன்< அங் 1.




ஆக 13 2011,சென்னை:"நான் பைத்தியக்காரர்களின் உளறலுக்கெல்லாம் பதில் சொல்லி நேரத்தையும், கண்ணியத்தையும் வீணடிக்க விரும்ப வில்லை' என, விஜயகாந்த் பேச்சுக்கு, தி.மு.க., தலைவர் கருணாநிதி பதில் தெரிவித்துள்ளார். தி.மு.க., தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி - பதில் அறிக்கை: அரிசி கடத்தல் பற்றி, பக்கம் பக்கமாக அறிக்கை வெளியிட்ட ஜெயலலிதா, ஆட்சிக்கு வந்த பின்னும், தமிழகத்தில் பல மாவட்டங்களில் இருந்து கடத்தி வரப்பட்ட, 145 டன் அரிசி, புதுவை மாநிலத்தில் பதுக்கியதாக, அவருக்கு ஆதரவான நாளிதழிலேயே செய்தி வந்துள்ளது.

தி.மு.க., ஆட்சியில், இலங்கை தமிழர்களுக்காக, நான் எடுத்த நடவடிக்கைகள், "எல்லாம் கண்துடைப்பு நாடகங்கள்' என சட்டசபையில் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார். நான், 1956ல், சிதம்பரம் தி.மு.க., பொதுக் குழுவில், இலங்கைத் தமிழர்களுக்கான தீர்மானத்தை முன்மொழிந்துள்ளேன். இதுபோன்று, இலங்கை தமிழர்களுக்கு பல நடவடிக்கைகளை ஆதரித்துள்ளேன். இதையெல்லாம் கண் துடைப்பு நாடகம் என்றால்,"ஒரு போர் என்றால், அப்பாவி மக்கள் கொல்லப்படுவார்கள். இதில் எந்த நாடும் விதிவிலக்கல்ல' என்று அறிக்கை விட்டவர் ஜெயலலிதா.

இதன் மூலமே, கண் துடைப்பு நாடகம் யார் ஆடுவது என்பது தெரியும்.இரண்டாவது முறையாக, அப்துல் கலாமை ஜனாதிபதியாக வர விடாமல், நான் தடுத்ததாக விஜயகாந்த் கூறியுள்ளார். பையத்தியக்காரர்களின் உளறலுக்கெல்லாம் பதில் சொல்லி, நேரத்தையும் கண்ணியத்தையும் வீணடிக்க விரும்பவில்லை. தொல்காப்பியப்பூங்கா புத்தகத்திற்கு, தொல்காப்பியர் விருதை எனக்கு வழங்கி, அந்த விழாவில் கலாம் ஆற்றிய உரையை அறியாதவர்கள், இப்படியெல்லாம் சொல்கிற பொய்யை யார் நம்புவார்கள்.இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

"நான் பைத்தியக்காரர்களின் உளறலுக்கெல்லாம் பதில் சொல்லி நேரத்தையும், கண்ணியத்தையும் வீணடிக்க விரும்ப வில்லை' என, விஜயகாந்த் பேச்சுக்கு, தி.மு.க., தலைவர் கருணாநிதி பதில் தெரிவித்துள்ளார்.

> கூத்தாடி குசும்பன்: "நான் பைத்தியக்காரர்களின் உளறலுக்கெல்லாம் பதில் சொல்லி நேரத்தையும், கண்ணியத்தையும் வீணடிக்க விரும்ப வில்லை' எங்கிறீங்க. தினம் தினம் ஒரு பைத்தியக்காரத்தனமாக கேள்வியும் நானே பதிலும் நானே என்று முரசொலியில் புலம்பிக்கொண்டிருப்பது யாருங்க?

> கண்ணியம் என்கிற வார்த்தையை தாத்தா கருணா பாவிக்க ஏதாவது தகுதி வைச்சிருக்கிறாருங்களா? கண்ணியம் எங்கிற ஒண்ணு தாத்தாக்கிட்ட இருந்தாதானுங்களே அதை வீணடிக்க முடியும்.

> சரி விடுங்க அவருக்கிட்டதான் இல்லைன்னாலும் அவரோட குடும்பத்தில யாருகிட்டயாச்சும் கண்ணியம் எங்கிறது மருந்துக்காச்சும் இருக்கிங்களா?

> மக்கள் தனக்கு ஓய்வு தந்திருப்பதாக வாக்குமூலம் குடுத்தாரு, கம்முன்னு கெடக்கவேண்டியதுதானுங்களே, அப்பொறம் ஏன் தினமும் பினாத்தி பொலம்பிக்கிட்டிருக்காரு?


# தி.மு.க., தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி - பதில், அரிசி கடத்தல் பற்றி, பக்கம் பக்கமாக அறிக்கை வெளியிட்ட ஜெயலலிதா, ஆட்சிக்கு வந்த பின்னும், தமிழகத்தில் பல மாவட்டங்களில் இருந்து கடத்தி வரப்பட்ட, 145 டன் அரிசி, புதுவை மாநிலத்தில் பதுக்கியதாக, அவருக்கு ஆதரவான நாளிதழிலேயே செய்தி வந்துள்ளது.

> கூ.கு: வேலையத்த இவிரு சிவனேன்னு சும்மா கெடக்காம, அந்த அம்மாவ சீண்டிவிட்டு நில அபகரிப்பு மோசடியில அவரோட திமுக கட்சிக்காரங்க அத்தினிபேரும் கம்பி எண்ணிக்கிட்டிருக்கானுவ, சும்மா கெடக்கமாட்டாம அரிசிக்கடத்தல் பத்தி சங்கை ஊதி, அவரோட திமுக ஆட்சியில அரிசி கடத்தல்ல ஈடுபட்ட மிச்ச (திமுக) கட்சிக்காரரையும் மாட்டிவிடப்போறாரு.


# தி.மு.க., ஆட்சியில், இலங்கை தமிழர்களுக்காக, நான் எடுத்த நடவடிக்கைகள்,"எல்லாம் கண்துடைப்பு நாடகங்கள்' என சட்டசபையில் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார். நான், 1956ல், சிதம்பரம் தி.மு.க., பொதுக் குழுவில், இலங்கைத் தமிழர்களுக்கான தீர்மானத்தை முன்மொழிந்துள்ளேன். இதுபோன்று, இலங்கை தமிழர்களுக்கு பல நடவடிக்கைகளை ஆதரித்துள்ளேன். இதையெல்லாம் கண் துடைப்பு நாடகம் என்றால்,"ஒரு போர் என்றால், அப்பாவி மக்கள் கொல்லப்படுவார்கள். இதில் எந்த நாடும் விதிவிலக்கல்ல' என்று அறிக்கை விட்டவர் ஜெயலலிதா. இதன் மூலமே, கண் துடைப்பு நாடகம் யார் ஆடுவது என்பது தெரியும்.

> கூ.கு: இவிரு நடத்தின சுத்துமாத்து எல்லாத்தையும் கண்துடைப்பு நாடகமுன்னு சொல்லாம கக்கூஸ் துடைப்புன்னா சொல்லமுடியும்?. ஒண்ணா ரெண்டா தாத்தா ஒங்க ஆக்டிங்கு அளவே இல்லாமபோச்சு. 1956 ல் ஒங்களோட சிதம்பரசக்கரம் யார் கேட்டாங்க, கடைசி போரில் ஈழத்தமிழர்கள் பட்ட அவஸ்த்தையை 2008 ல் இருந்து 2009 ஒங்களோடா 2 மணிநேர கடற்கரை லஞ்ச் நாடகம் வரைக்கும் நாங்க பாத்திட்டுத்தானே இருக்கோம்.

> அதென்ன தீர்மானத்தை முன் மொழிஞ்சீங்களா?. நீங்க முன் மொழிஞ்சுதான் என்ன பின்மொழிஞ்சுதான் என்ன.. நீங்க ஒளிஞ்சு விழையாடினதில எத்தினி அப்பாவி கொழந்தைங்க, தாய்மாருங்க, செத்தாங்க, எத்தினபேர கொன்னீங்க, அந்தக்கணக்கை எடுத்து விடுங்கசாமி,

> அந்தம்மா "ஒரு போர் என்றால், அப்பாவி மக்கள் கொல்லப்படுவார்கள். இதில் எந்த நாடும் விதிவிலக்கல்ல' என்று அறிக்கை விட்டாலும் இன்னிக்கு ராஜபக்க்ஷவை தூக்கிலேத்தி ஈழத்தமிழர்களுக்கு சம உரிமை வாங்கி கொடுக்காம இந்த அரசு ஓயாது என்று நேரடியா இந்திய மத்திய அரசையும் ஸ்ரீலங்காவையும் மிரட்டுறாங்க. பாத்திட்டுத்தானே தள்ளுவண்டியில ஒக்காந்து கேள்வி பதில் எயுதிக்கொண்டிருக்கிறீங்க.

> நீங்கமட்டும் என்னவாம், மழைவிட்டு தூவானம் மாறவில்லைன்னு, 40 ஆயிரம்பேருக்கு முள்ளிவாய்க்காலில் ஒருநாளையில சங்கூதி ஆப்படிச்ச நரி தானுங்களே, முத்துக்குமார் நெருப்பில எரிஞ்சப்ப ராமகிருஷ்ணா மருத்துவமனையில நாரிப்பிடிப்புன்னு ஆளவந்தான் கமலஹாசன் கணக்கா ஒக்காந்து, முத்துக்குமாருக்கு வீட்டில ஏதோ பிரச்சினை அதுதான் தீக்குளிச்சு செத்திட்டான்னு கதை அளந்த வம்பந்தானே நீங்க.

> இலங்கை தமிழர்களுக்கு பல நடவடிக்கைகளை ஆதரித்துள்ளேன். ங்கிறீங்க அதுதான் ஒங்க செல்ல மகள் கனியும், ஒங்க கூட்டாளி தெருமாவும், கொழும்புக்கு போயி டக்கிளஸுக்கு, ஆதரவு தெரிவித்து சால்வை போட்டத சொல்லுறீங்களா. அப்பொறம் ராஜபக்க்ஷ, கோத்தபாய ஆட்களுடன் விருந்து உண்டு பரிசு வாங்கிவந்தத சொல்லுறீங்களா?

#இரண்டாவது முறையாக, அப்துல் கலாமை ஜனாதிபதியாக வர விடாமல், நான் தடுத்ததாக விஜயகாந்த் கூறியுள்ளார். பையத்தியக்காரர்களின் உளறலுக்கெல்லாம் பதில் சொல்லி, நேரத்தையும் கண்ணியத்தையும் வீணடிக்க விரும்பவில்லை.

கூ.கு: விஜயகாந்த் அவங்கதான் இன்னிக்கு தமிழகத்தோட இரண்டாவது பெரிய சக்தி. உலகத்தில் அதிகமான ரசிகர்களையும் தமிழகத்தில் அதிகமான தொண்டர்களையும் அவர் வைத்திருக்கிறார். பைத்தியக்காரத்தனமா அவரை வம்புக்கிழுக்காதீங்க காணாம பொயிடுவீங்க. நீங்க சொல்லுறமாதிரி தமிழ்நாட்டில நீங்க ஒண்ணும் இரண்டாமிடத்திலை கிடையாதுங்க. சட்டசபை தேர்தலில விழுந்த ஓட்டுக்கள் ஒங்களுக்கு விழுந்ததா நெனைச்சிடாதீங்க ஒங்களோட கூட்டு வைச்ச கட்சிங்களுக்கெல்லாத்துக்கும் அதில பங்கிருக்குங்க பிரிச்சு பங்குபோட்டு கணக்கு பண்ணிபாருங்க ஒங்க திமுக கடைசியில வருவீங்க ஆமா.


#தொல்காப்பியப்பூங்கா புத்தகத்திற்கு, தொல்காப்பியர் விருதை எனக்கு வழங்கி, அந்த விழாவில் கலாம் ஆற்றிய உரையை அறியாதவர்கள், இப்படியெல்லாம் சொல்கிற பொய்யை யார் நம்புவார்கள். இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

கூ.கு: நீங்களே ஒரு பச்சை பொய்ப்பிண்டம்தானே. அப்படித்தானே உலகம் சொல்லுது, தொல்காப்பியம் பல ஆண்டுகளுக்கு முன் தொல்காப்பியரால் எழுதப்பட்டது அதிலபோய் நீங்க மூக்க நுழைச்சி 500 பிழைகள் விட்டதாக புலவர், அ.நக்கீரனார், ஆதாரத்துடன் 11,01,2003 ல் குற்றச்சாட்டுக்களுடன் திருத்தஞ்செய்து சுட்டிக்காட்டியிருந்தார். முதலில் சுயமாக எதையாவது பிழையில்லாமல் எயுத முயற்சி செய்யுங்க தாத்தா.
பொய்யை நீங்க எத்தின தடவை உரக்கச் சொன்னாலும் உண்மையாகாது,


> நீங்க பொறந்ததே பெரிய குத்தமா தமிழன் அழுவுறான் தயவு செஞ்சு அடங்குங்க, ஓய்வெடுத்துக்குங்க.

No comments: