Saturday, November 26, 2011

தேசியத்தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களுக்கு. உலக தமிழர் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.


ஈழத்தமிழர் இதயத்தின்
முழு முதலான
வீரமகன் வாழியவே!
தமிழன் வீரத்தில் வரலாறு
எழுதிய
வெற்றியின் நாயகன் வாழியவே!

கண் தூங்கா விண்ணுயர்
காவலனாம்
கலங்கரை விளக்கம் வாழியவே!

போராட்ட பரிமாணத்தின்
கூர் தீட்டி
புதுமைகண்ட விஞ்ஞானி வாழியவே!

நவீன சிந்தனையில்
வரி தொகுத்த
நாலடி விருத்தம் வாழியவே!

தீமையின் கண்களுக்கு
தீயான
சிம்ம சொப்பனம் வாழியவே!

அரசியல் செய்யாமல்
அகிலம் வென்ற
ஆளுமையின் சிகரம் வாழியவே!

தன்நலன் கொள்ளா
புதுமை கொண்ட
தனித்தலைவன் வாழியவே!

அளவில்லா ஆற்றல் கொண்ட
நடமாடும்
ஆதவன் நீ வாழியவே!

சோவென்று மழைபோன்ற
செருக்களத்தின்
செயல் வீரன் வாழியவே!

தந்தவனின் கடன் தீர
என்றைக்கும் மறவாத
சங்கரன் நீ வாழியவே!

எல்லாளன் நிழல் பிறந்த
வல்லாளன்
எரிமலை நீ வாழியவே!

பார்வதி பெற்றெடுத்த
பைந்தமிழ்
பரம்பொருள் நீ வாழியவே!

சீருடையில் சிறப்பென்று
பார்போற்றும்
நேரான சூரியன் நீ வாழியவே!

சாவினை வென்று வந்த
சரித்திரமே
சத்தியமே வாழியவே!

மூலம் அறியாத முழுமுதலே
காலம் ஈர்ந்தளித்த
கற்பகம் நீ வாழியவே!

ஊர்க்குருவி.
நன்றி ஈழதேசம் இணையம்.

No comments: