Friday, July 30, 2010

சினிமா உலகத்துக்கான நிராகரிப்பு போர்

சிங்களவனுக்கு ஆராத்தியெடுக்க துடிக்கும் சினிமா உலகத்துக்கான நிராகரிப்பு போர்

சிறந்த கலைஞர்கள். கலைத்தாயின் நேரடியான பார்வையினால் ஆசீர்வதிக்கப்பட்டு பிறப்பெடுப்பவர்கள்.

இயல்பாகவே சுயதிறமையும் கலைத்தாயின் கருணையும் கிடைக்கப்பெற்று. கலையுடன் சமூகநலன்கொண்டு வாழ்பவர்கள் சிறந்த கலைஞர்கள்.

எம்.ஜீ.ஆர். என் எஸ். கிருஸ்ணன். போன்ற சமூகச்சிந்தனையுடன்.பரந்த மனங்கொண்ட நடிகர்கள் எந்தக்காலத்திலும் அழிவில்லாப்புகழுடன் எம்மத்தியில் வாழ்ந்ததுமுண்டு. இவர்கள் மக்கள் மனங்களில் நீங்கா இடம் பிடித்து இன்றும் அன்றும் என்றும் வாழ்வாங்கு வாழ்ந்துகொண்டிருக்கின்றனர்.

கலைத்தாயின் அதீதகருணைகொண்டு. வித்தியாசமான திறமைகளினால் உலகத்தை பிரமிப்புக்குள்ளாக்கியவர்களும் உண்டு.அந்தப்பிரமிப்புக்கள் சாகாவரம் பெற்று வாழ்வதற்கு. அவர்களின் சமுதாயபக்திகாரணமாக காலங்கடந்தும் வாழ்வாங்கு வாழ்ந்துகொண்டிருக்கின்றனர்.

கலை பிறந்தபோதுதான் நாகரீகம் அறியப்பட்டிருக்கிறது. கலையில் வெளிப்பாடுதான் நாகரீகம் என்றேகொள்ளமுடியும். எனவே கலைதான் நாகரீகம் என்ற பெயர்ச்சொல்லுடன் உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறது என்றேகொள்ளலாம்.

கலையை தொழிலாகக்கொண்டு வாழ்பவர்கள் மனித நாகரீகத்தை மதிக்கக்கற்றுக்கொள்ளவேண்டும்.

1452 ல் இத்தாலியில் பிறந்த ஓவியக்கலைஞன் ‘டாவின்ஸியின்’ புகழ் உலகம்முழுவதும் பரவுவதற்கு அவருடைய சமூகப்பற்று முக்கிய காரணமக இருந்தது.

டாவின்ஸி இறந்துபோய் அவரது உருவம் மக்கள் மனங்களில் ஒருவேளை மறந்துபோனாலும். அவரால் தீட்டப்பட்ட பல ஓவியங்களில். ஓவியங்களின் இராணியாக. Queen of the arts. ‘மோனோலிசா’ ஓவியம் பலநூறு வருடங்களாக நிலைத்து நின்றுகொண்டிருக்கிறாது. Leonardo di ser piero da vinci. தவிர்ந்த வேறுபல ஓவியக்கலைஞர்கள் வியக்கத்தகு ஓவியங்களை வரைந்திருந்தாலும். மோனோலிசா ஓவியத்திற்கு கிடைத்த விஞ்சியபுகழ் எவரும் அடைந்ததாக பதிவுகாளில்லை.

டாவின்சி அவர்கள் நல்ல வசதி படைத்தவராக இருந்தும் அவரது பண்புதான் சமூகத்தில் அவரது ஓவியங்கள் வெளிவருவதற்கு உதவியாகவிருந்தன.

கலைகளில் ஓவியம் சிற்பம் மிகநுணுக்கமான கலையும்கூட. மூளை கற்பனை ஞாபகம் போன்றவற்றின் அரிய வெளிப்பாடுகள் அவை. நாடகம் கூத்து போன்றகலையல்ல. ஓவிய சிற்பக்கலைகள். நடிப்புக்கலை பாவனையோடு கூடிய ஒன்று.

இன்று சினிமாவில் நடிப்பு இல்லாத நடவடிக்கைகளைத்தான். நாங்கள் பணங்கொடுத்து நடிப்பு என்று பிரமிப்புடன் பார்த்துக்கொண்டிருக்கிறோம். மாறிவரும் உலகத்தின் தேவையும்
அப்படியேதான் எதிர்பாற்கப்படுகிறது. ரசனை எப்படி இருக்கிறதோ படைப்புக்களும் அப்படியே மாறுபடும். அவ்வளவுதான் நடிப்பும் சினிமாவும்.

இன்றுசினிமா. உலக அளவில் குறுகியகாலத்தில் பெரும்பணம் சம்பாதிக்கும் ஒரு தொழிலாக மாறிவிட்டது. அதிர்ஸ்டம் கிடைக்கப்பெற்ற நடிகர்களுக்கு பள்ளிபடிப்பறிவு. பெருத்தமுதலீடு. இல்லாமல். நல்லவருமானத்தை குறுகியகாலத்தில் ஈட்டிக்கொள்ள சினிமா வழி
கோலிக்கொடுத்திருக்கிறது .

ஆனால் அவ்வளவு பணமும் மிக கீழ்மட்டத்திலிருக்கும் பாமர மக்களிடமிருந்துதான் ஈட்டிக்கொள்ளப்படுகின்றதென்னும் உண்மையை. சினிமாப்பிம்பத்தின் உச்சத்தில் நின்றுகொண்டிருப்பவர்கள் ஒருசிலரைத்தவிர மற்றவர்கள் உணருவதில்லை.

பிறவிக்கலைஞர்களிடம் செல்வம் தங்குவதில்லை. சரஸ்வதியும் இலட்சுமியும் ஒரே இடத்தில் ஒன்றாக வாழமாட்டார்கள்.

தன்னுடைய முழுத்திறமைதான் அவ்வளவு பெரும்பொருள் ஈட்டக்காரணமென புகழின்போதையால் நடிகர் நடிகையர்கள் எண்ணிவிடுவதுண்டு. இப்படித்தலைக்கனம் கொண்டு வீழ்ச்சியடைந்தபலர் எழுந்திருக்க முடியாமல் முடங்கிப்போன வரலாறுகள் சினிமா உலகத்தில் ஒன்றிரண்டல்ல.

ஒருபடத்தின் கதையம்சமும். அந்தப்படம் வெளிவந்த சூழலும். அதிர்ஸ்டமும். ஊடகங்களின் விளம்பரமும் சேர்ந்து. சிலபடங்கள் ஓடிவிட்டால் நடிகர். நடிகைகளின் மன ஓட்டமும் கட்டுப்படுத்த முடியாத வேகத்தில் ஓடிக்கொண்டிருப்பதுண்டு.

சினிமா என்ற சாதனத்தின் மூலம் நடிகர்களின் முகம் வெகுவிரைவில் சமூகத்தில் அறிமுகமாகி விடுவதால். நல்லதோ கெட்டதோ அவர்கள் சொல்லுவது வெகுவிரைவாக சமூக அடுக்குகளுக்கு சென்று சேர்ந்துவிடுகிறது. இந்தமாயையினால் மக்கள்கூட்டம் நடிப்புக்கலைஞர்களை பின்பற்றி
தொடர்வதற்கான வழியும் நிறையவுண்டு.

யதார்த்தத்தில் குறிப்பிட்ட அந்தநடிகர். நடிகை அப்படித்தான் இருப்பார்களென்பது எதிர்பார்க்கமுடியாத ஒன்று. ஆனால் சமூகபொறுப்போடு கூடிய துறையான சினிமாவில் மக்கள் ஆதரவுபெற்று பிரகாசிப்பவர்கள். அந்தச்சமூகத்திற்கு அழிவை ஏற்படுத்தவல்ல. களங்கம் ஏற்படும்படி. ஒருசிக்கல் ஏற்படும்படி. நடந்துகொள்வதை தவிர்த்து நடக்கவேண்டிய எழுதப்படாத சட்டத்தின் கட்டாயத்திலிருக்கின்றனர்.

மக்களால் உண்டான புகழைவைத்து அந்த சமூகத்தை அழிப்பதற்கு முயற்சிசெய்தால். ஏறிய ஏணியை எட்டியுதைத்த கதை எதிர்காலத்தில் அவர்களது பெயருக்கு கண்டம் வைக்குமென்பதை புகழில் இருக்கும்போது அவர்களால் உணரமுடிவதில்லை.

சினிமாநடிகர் நடிகைகள் ஓரளவு அழகாகவும். உடை ஒப்பனைகள் கவர்ச்சியாக இருப்பதால். விரைவில் அவர்களது நடவடிக்கைகள் பாவனைகள் மக்கள்பின்பற்றிநடக்கும் வாய்ப்புக்களும் அதிகமுண்டு

சமூகம்சார்ந்து அடக்குமுறைகளுக்கு எதிராக. துன்பத்தைக்கண்டு துடித்தெழும் மனிதாபிமானியாக சீர்திருத்தவாதியாக. சினிமாவில் நடிப்பவர். கதாநாயகன் என்றும். எதிர்வினையாக நடிப்பவரை வில்லன்என்றும் விளித்துக்கொள்வதுண்டு. நிஜவாழ்விலும் அந்த நடிகர்கள் அப்படித்தான்
இருப்பார்களென அதிகமான பாமரமக்கள் எண்ணி ஏமாந்துவிடுவதுமுண்டு.

அவர்களது இயல்பு எப்படியிருந்தாலும். நான்கு சுவர்தாண்டி தமது அழுக்குக்களை வெளியில் கொட்டிவிட்டால். சமூகம் காலதாமதமில்லாமல் தூக்கியெறிவதற்கு பின்நிற்பதுமில்லை. இருந்தும் காலத்திற்குகாலம் கசப்பான சமூகக்கெடுதலான நடிக நடிகைகள் வந்துபோய்க்கொண்டிருப்பதும் குறையவில்லை.

அடிமட்ட மக்களிடமிருந்து கிடைக்கப்பெற்றதனது அந்தஸ்த்து எப்படி வந்தது என்பதை மறந்து. தலைக்கனங்கொண்டு. தன் வளர்ச்சிக்கு காரணமான சமூகத்தை மதிக்காதவர்களை. வெறுமென எதிர்ப்புக்காட்டுவதை விடுத்து திருந்துவதற்கான சந்தற்பத்தை ஒருமுறை கொடுத்துப்பாற்கலாம்.

முடியாதபட்சத்தில் குறிப்பிட்டவரையும் அவர் சார்ந்தவர்களையும் விரோதித்து எதிர்ப்பைச்சம்பாதிப்பதிலும் பாற்க. அந்தக்குறிப்பிட்டவர்களை துணிவுடன் நிராகரித்து எமது ஒத்துழைப்பை திருப்பபெற்றுக்கொண்டொமேயாகவிருந்தால். எங்கள்பலம் பலவீனத்தையும் அவர்கள் அறியவாய்ப்புண்டாகும். இந்தநடைமுறையால் குறிப்பிட்டவர் திருந்துவதற்கும் இன்னுமொருவர் அதேபோன்றதவறை செய்யாமல் தடுப்பதற்கான எச்சரிக்கையும் ஏற்படுவதற்கு வாய்ப்பாக அமையும்.

தேசியத்தலைவர் அவர்கள் தீர்க்கமாக நம்பும் ஒருவாசகத்தை இங்கு நினைவுகூருவது பொருத்தமாகவிருக்கும்.
“எங்கள் தரப்பு பிரச்சினைகளை இரக்கமாக ஒருவருக்கு எடுத்திச்சொல்லி இரக்கத்தின் மூலம் குறிப்பிட்ட காரியத்திற்கு தீர்வுபெறலாமென்பது ஒருபரீட்சையேதவிர முடிவாக ஒருபோதும் அமையாது. எங்கள்சக்திக்கு முடிந்த நியாயமான எதிர்விளைவை தோற்றுவிப்போமேயானால் சில
நியாயங்களை நியாயப்படுத்தவும் முடியும். எங்கள்பலத்தை எதிர்த்தரப்பும் இனங்கண்டுகொள்வதற்கு வாய்ப்பாகவும் இருக்கும். நாங்களும் எமது பலத்தை அறிந்தவர்ளாவோம்.”

இந்திய அரசியல் முதலாளிகளின் கபடமான திட்டத்திற்கு அசினும். அடுத்து கருணாசும். பலியாகியிருக்கின்றனர். மேல்மட்டத்தின் திட்ட விஸ்தரிப்புக்கான தயாரிப்புக்களின் பரீட்சார்த்தம்தான் அசின், கருணாசு என்பதை புலம்பெயர் தமிழர்கள் மறந்துவிடக்கூடாது.

பரிட்சார்த்த எதிர்வினையாக குறிப்பிட்ட விரோத நடவடிக்கைகளுக்கு காரணமானவர்களின் படங்களை ஒதுக்கி, நிராகரிப்பு போரை அவர்களுக்கெதிராக நடத்தவேண்டிய கட்டாயம் உடனடித்தேவையாகியிருக்கிறது.

புலம்பெயர் நாடுகளிலிருக்கும் அமைப்புக்களுடன் கலந்து ஆலோசித்து காலம் தாழ்த்தாமல் குறிப்பிட்டவர்களின் படங்களை ஒதுக்கி எமது பலம் என்னஎன்பதை உணரவைக்கவேண்டும்.

இதுதான் “புலம்பெயர் மக்களின் கையில் போராட்டம்”. கொடுக்கப்பட்டிருக்கின்றதன் அர்த்தப்பட்ட பொருளாகும்.

புலத்தில் வேகமாகச்செயற்படுபவர்களை, சீர்திருத்தங்களை விரும்புபவர்களை, ஒருவருக்கு ஒருவரை எதிரிகளாக்கி பிரித்துமுடக்கும் நோக்குடன் பிரிவினையை தூண்டுபவர்கள்தான் ஒருத்தருக்கொருத்தர் கோள்மூட்டி பிரித்தாளும் தந்திரத்தை அரச புலனாய்வுத்துறைக்காக கங்கணம் கட்டி சில ஊடகங்கள்வாயிலாக ஒற்றுமையை உடைத்து பகையை வளர்க்க திட்டமிட்டு செயற்படுகின்றனர்.

நோக்கம் ஒன்றாகஉள்ள புலத்துத்தமிழர்கள் உள்ளுக்குளிருந்து விவாதிப்பது அவர்கள் பிரிந்து போய்விடவில்லையென்பதைத்தான் தொடர்ந்து காட்டி நிற்கிறது. குறைகுற்றங்களை சுட்டிக்கட்டுப்வர்களை எதிராளியாக்கபோடும் திட்டம்தான் இடையிலுள்ள பிரச்சாரங்கள். தயவுசெய்து எல்லாவற்றையும் ஒதுக்கிவிட்டு காரியத்தை ஆக்கமுன் வாருங்கள்.

அமெரிக்காவிலும் கனடாவிலும் உள்ள தமிழ்ச்சங்கங்கள் திரையுலகினரின் போக்குக்குஎதிரான நடவடிக்கைக்கு தயாராக இருப்பதாக அறிக்கைகள்மூலம் அறியமுடிகிறது மற்ற அமைப்புக்களும் வீச்சாக கருமத்தில் இறங்குவர் என நம்புகிறோம்.

தமிழ்நாட்டில் சகோதரன் செந்தமிழன் சீமான் அவர்களின் வேகத்தையும் எமக்காக அவர் சிறைக்குப்போன விசுவாசத்தையும் கொச்சைப்படுத்தாமல் எமது பலத்தை சிங்களவனுக்கு ஆராத்தியெடுக்க துடிக்கும் தமிழ்நாட்டின் சினிமா உலகத்திற்கு காட்டவேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது.

கனகதரன்,

நன்றி நெருடல் இணையம்,

No comments: