Monday, July 26, 2010

அண்ணா சமாதியில் கருணாநிதி,
P m

அன்றாடம் தன் பரிவாரங்களுடன் கோபாலபுரத்தில் இருக்கிற தன் இரண்டாவது மனைவியின் வீட்டில் இருந்தோ அல்லது மூன்றாவது மனைவியின் வீடு இருக்கும் ஆழ்வார்பேட்டையில் இருந்தோ கிளம்பி புதிய தலைமைச் செயலகம் செல்வது தமிழக முதல்வர் கருணாநிதியின் வழக்கம். சட்டமன்றத்திற்குச் செல்லும் கருணாநிதி அங்கிருந்து அரிய பல ஆலோசனைகளில் ஈடுபடுவது வழக்கம். மேல் மாடியில் இருந்து வெளியே எட்டிப்பார்த்து சென்னையில் அழகை ரசிப்பது. சட்டமன்றத்தில் வேறு எங்கெல்லாம் தன் படத்தை மாட்டுவது , யாரை எல்லாம் எந்தெந்த வழக்குகளில் உள்ளே போடலாம், கஞ்சா கேஸ் போடுவதா? அல்லது வழிப்பறி வழக்கே போதுமா? என்பது போன்ற அதி முக்கிய ஆலோசனைகளில் தலைமைச்செயலாளர் சிரிபதியுடன் அலோசனை செய்வார். இநிலையில் நேற்று மாலை வழக்கம் போல சட்டமன்ற வளாகத்திற்குச் சென்ற முதல்வர் திரும்பும்போது அண்ணா சமாதிக்குச் செல்லுமாறு டிரைவரிடம் கூறினார். இதையடுத்து முதல்வரின் கார் அண்ணா சமாதிக்குச் சென்றது.
அங்கு நீண்ட நேரம் சமாதியை முதல்வர் சுற்றிப் பார்த்தார். 8 மணி முதல் 9 மணி வரை அங்கேயே அமர்ந்திருந்தார். பழைய நினைவுகளில் முதல்வர் மூழ்கினார். தன்னுடன் இருந்தவர்களிடம் அண்ணா குறித்த நினைவுகளையும் அவர் பகிர்ந்து கொண்டார். பின்னர் கனத்த இதயத்துடன் அங்கிருந்து அவர் புறப்பட்டுச் சென்றார். திராவிட இயக்கத்தின் சீரழிவு அண்ணாதுரையிடம் இருந்தே துவங்கிறது. அவர்தான் எதுகை மோனையில் பேசி தன் தம்பியின் குடும்ப, சவாதிகார சீரழிவுக்கு தூபம் போட்டவர் என்ற வகையில் அண்ணன் இறுதியாக குடிகொண்ட மெரீனா நினைவகத்தில் தம்பி நினைவலைகளில் ஆழ்ந்திருக்கலாம் என்று தெரிகிற்து. தமிழ்நாட்டிற்கு மிகவும் தேவையான கருணாநிதியின் இந்த நடவடிக்கையால் தமிழகத்தில் புதிய விடிவும் ஒழியும் கிடைக்கும் என்றூ சமூக ஆர்வலர்கள் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.

நன்றி இனியொரு இணையம்,

No comments: